மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

8.10.12

Astrology எப்போதுடா என் கஷ்டம் தீரும்?



Astrology எப்போதுடா என் கஷ்டம் தீரும்?

அலசல் பாடம்

எனது கஷ்டங்கள் எப்பொது தீரும்? என்னும் தலைப்பில் முன் பாடங்களில் சூரியன், மற்றும் சந்திரனை வைத்துப் பலன்களை அலசுவதைப் பற்றி எழுதியிருந்தேன். இன்று குருவை வைத்து எப்படி அலசுவது என்று பார்ப்போம்!

குருதான் தனகாரகன்.Authority for finance (குழந்தை பாக்கியத்திற்குக் காரகனும் கூட)

இன்று பல பிரச்சினைகளுக்குக் காரணம் பணமின்மை அல்லது பணப் பற்றாக்குறை!

இன்றைய வாழ்க்கைச் சூழ்நிலையில், தேவைகளும் அதிகமாகிவிட்டன. செலவுகளும் அதிகமாகிவிட்டன. விலவாசிகளும் கட்டுப்படுத்த யாரும் இல்லாமல் தன்னிச்சையாக ஏறிக்கொண்டிருக்கிறது!

பணப்பற்றாக்குறை இல்லாதவரே இல்லை என்று சொல்லலாம்.

சம்பளக்காரனுக்கும் பணத்தேவை உள்ளது. செல்வந்தனுக்கும் பணத்தேவை உள்ளது. சைபர்களின் எண்ணிக்கை தான் வித்தியாசம். பத்தாயிரம் தேவை உள்ளவனும் இருக்கிறான். பத்து லட்சம் தேவை உள்ளவனும் இருக்கிறான்.

ஆசைப்படாதே. இருப்பதை வைத்துக்கொண்டு சந்தோஷமாக இரு என்று வயதானவர்களுக்கு வேண்டுமென்றால் சமாதானம் சொல்லலாம். அதே சமாதானம் இளைஞர்களிடமும், நடுத்தர வயதுக்காரர்களிடமும் எடுபடாது!
_________________________________________________________________________
பணமின்மையில் இரண்டு விதம் உள்ளது.

ஒன்று ஏழ்மை அல்லது வறுமை! இன்னொன்று தற்காலிகப் பணமின்மை.

ஜாதகப்படி, இரண்டாம் வீடும், பதினொன்றம் வீடும் அடிபட்டுப் போயிருந்தால் அல்லது கெட்டுப்போய் இருந்தால்,  வாழ்க்கை முழுவதும் பணக்கஷ்டம் இருக்கும். submissive level என்பார்களே -

அதாவது கைக்கும் வாய்க்குமான நிலைமை என்பார்களே அந்த நிலையில் வாழ்க்கை நடத்த வேண்டியதிருக்கும். அதற்கு ஜாதகத்தை அலசி எப்போது பணம் வரும் என்று பார்க்கத் தேவையில்லை.

எப்போதுமே submissive level தான்!

தற்காலிக நிலைமையை இப்பொது அலசுவோம்!

1. ஜாதகத்தில் மாந்தி அமர்ந்திருக்கும் வீட்டின் அதிபதியினுடைய தசா அல்லது புத்தி நடந்தால் பணக் கஷ்டம் உண்டாகும். கொடுத்த பணம் வராது. தொழிலில் அல்லது வியாபாரத்தில் சிக்கல்கள் உண்டாகி, பணம் எங்காவது முடங்கிப்போய்விடும்.

2. ஆறாம் அதிபதியின் திசை நடந்தாலும் அதே நிலைமைதான். குறிப்பாக வைத்தியச் செலவு, நம்பிக்கைத் துரோகம் போன்ற செயல்களால், நமது பணம் முடங்கிவிடும் அபாயம் உண்டாகும்

3. பன்னிரெண்டாம் அதிபதியின் திசை நடந்தால், எதிர்பாராத செலவுகள் உண்டாகி பணப் பற்றாக்குறை ஏற்படும். பங்குச் சந்தைபோன்ற இடங்களில் பணத்தை இழக்க நேரிடும். பொதுவாக விரையத்தால் பணத்தை இழக்க நேரிடும்.

4. எட்டாம் அதிபதியின் திசை நடந்தாலும் அதே நிலைமைதான்.

5. நடப்பு தசா அல்லது புத்தி நாதன் 6, 8 அல்லது 12ஆம் வீடுகளில் இருந்தாலும் தற்காலிகப் பணக் கஷ்டங்கள் உண்டாகும். அந்தக் குறிபிட்ட திசை முடிந்தவுடன் அது நிவர்த்தியாகும்.

6. அதே போல தீய கிரகங்களான, சனி, ராகு அல்லது கேது ஆகியவற்றின் திசை அல்லது புத்திகளிலும் பணக் கஷ்டங்கள் உண்டாகும். (அக்கிரகங்கள், உச்சம், கேந்திர, திரிகோணங்களில் இருந்தால், விதிவிலக்காகும்)
------------------------------------------------------------------------------------------------------------
சரி எப்போது பணம் அதுவாக வரும்? (That is free flow of money)

1. 2ஆம் அதிபதியின் திசை, பதினொன்றாம் அதிபதியின் திசை, பாக்கிய அதிபதியின் திசைகளில் பணம் அபரிதமாக வரும் (ஜாதகத்தில் அவர்கள், உச்சம், கேந்திர திரிகோணங்களில் இருக்க வேண்டும்)

2.. கோச்சாரக்குரு, இரண்டு, ஐந்து, ஏழு, பதினொன்றாம் வீடுகளில் சஞ்சரிக்கும் காலங்களில் பணம் வரும்

3. கோச்சார சனி, 30 பரல்களுக்கு மேல் உள்ள வீடுகளில் சஞ்சரிக்கும் காலங்களில் பணம் வரும்
------------------------------------------------------------------------------------------------------------
பணம் எப்போதும் ஒரே மாதிரியாக வந்து கோண்டிருக்காது. புத்திசாலித்தனமாக அது வரும் காலத்தில் அதைப் பிடித்துப் பத்திரப் படுத்திவைத்துக் கொள்ள வேண்டும்.

மழைகாலத்தில் குளத்தை நிரப்பி வைத்தால்தான் வெய்யில் காலத்தில் குடிக்கத் தண்ணீர்கிடைக்கும். அதுபோலத் தான் இதுவும்.

இது மேல்நிலைப் பாடங்களில் ஒன்று. அனைவருக்கும் (மற்றவர்களுக்கும்) பயன்படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டு உள்ளேன்

வாத்தியார் வெளியூர்ப் பயணம். அதனால் வகுப்பறைக்கு 9.10.2012 செவ்வாயன்று விடுமுறை. அடுத்த வகுப்பு புதன் கிழமை ( 10.10.2012) யன்று நடைபெறும். கிடைக்கும் நேரத்தில் பழைய பாடங்களைத் திரும்பப் படியுங்கள்.

அன்புடன்
வாத்தியார் 


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++==

5.10.12

சிங்காரவேலனே தேவா - அருள் சீராடும் மார்போடு வாவா!




சிங்காரவேலனே தேவா - அருள் சீராடும் மார்போடு வாவா!

பக்தி மலர்
-----------------------------------------
50 ஆண்டுகளுக்கு முன்பு ’கொஞ்சும் சலங்கை’ என்னும் திரைப் படத்தில், திருமதி ஜானகி அவர்கள் த்ன் கொஞ்சும் குரலால சிங்கார வேலனை அழைத்துப் பாடி நம்மைப் பரவசப்படுத்தினார். அதே பாடலைச் சின்னஞ் சிறு சிட்டு ஒன்று தன் இனிய குரலால் பாடுவதை இன்று வலை ஏற்றியுள்ளேன். அனைவரும் கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------
பாடல்
சிங்காரவேலனே தேவா
படம்
கொஞ்சும் சலங்கை (1962)  
பாடியவர்
S.ஜானகி  
இசையமைப்பாளர்
S.M.சுப்பையா நாயுடு  
பாடலை இயற்றியவர்
கு.மா. பாலசுப்ரமணியம்
---------------------------------------

சிங்கார வேலனே தேவா - அருள்
சீராடும் மார்போடு வாவா - திருச்
செந்தூரில் நின்றாடும் தேவா - முல்லைச்
சிரிப்போடும் முகத்தோடும் வாவா!

செந்தமிழ்த் தேவனே சீலா - விண்ணோர்
சிறைமீட்டுக் குறை தீர்த்த வேலா
சிங்கார வேலனே தேவா - அருள்
சீராடும் மார்போடு வாவா! 
++++++++++++++++++++++++++++++++++
பாடலின் கானொளி
our sincere thanks to the person who uploaded the video clipping in the net




+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


பெட்டியில் செல்வத்தை மறைத்து வைத்ததில்லை!!

விளையாட்டுப் பிள்ளையும் பறிக்கப் பலாமரம்
      வேரிற் பழுத்த தேபோல்
        விரும்பினாற் சமைக்கின்ற விதத்திதிலே கோழிகள்
      வீட்டினில் வளர்வ தேபோல்
வளையலார் கைக்கென்று வாரத்தில் முழுதாக
      வளர்கின்ற கீரை யேபோல்
        வருவார்கள் உண்ணவே உணவுடன் என்னையும்
      வைத்த தல்லாமல் உலகில்
வளங் கொண்ட செல்வத்தைப் பெட்டியில் மறைவாக
      வைத்ததே என்று மிலையே!
         மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்
      மதுரைமீ னாட்சி உமையே!
                   - கவியரசர் கண்ணதாசன்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=========

4.10.12

Astrology எதை முதலில் பார்க்க வேண்டும்?



Astrology எதை முதலில் பார்க்க வேண்டும்?

முற்காலத்தில் ஒருஅரசன் இருந்தான்!

எந்த நாட்டில்?

நாடெல்லாம் முக்கியமில்லை.

கதையை மட்டும் படியுங்கள்
-------------------------------------
தன் பேரரசிற்கு ஒரு முதன் மந்திரியை நியமிக்க விரும்பினான் அவன்.
கவிராயர்கள், குருமார்கள், கல்விமான்கள், விகடகவிகள் என்று தன் அரசபையில் இருக்கும் பலரில கல்வித்தகுதி மற்றும் வயதில் சமமாக இருக்கும் 4 பேர்களை முதலில் அவனாகவே தெரிவு செய்தான். பிறகு தன் அரச சபையில் தன் தெரிவுகளை அறிவித்ததோடு, அவர்கள் நால்வருக்கும் ஒரு பரிட்சை வைக்கப்போவதாகவும், அதில் யார் முதல் நிலையில் தேர்வு
பெறுகிறாரோ, அவரே முதன் மந்திரியாகும் வாய்ப்பைப் பெறுவார் என்றும் அறிவித்தான்.

மற்றவர்கள் எப்படியோ, ஆனால் அந்த நால்வரும் பரபரப்பிற்கு உள்ளாகிவிட்டார்கள்.

ஒரு வாரம் சென்றது. ஒரு நாள் அவர்கள் நால்வரையும் அழைத்த மன்னன் சொன்னான்.

“நான் ஒரு பூட்டைத் தயார் செய்து வைத்துள்ளேன். கணித அடைப்படையில் விஞ்ஞான பூர்வமாக செய்யப்பெற்ற பூட்டு அது. நாளை காலை உங்கள் நால்வருக்கும் அந்தப் பூட்டைத் திறக்கும் வாய்ப்பு வழங்கப்பெறும். யார் ஒருவர் குறுகிய நேரத்திற்குள் சாமர்த்தியமாக அந்தப் பூட்டைத் திறக்கிறீர்களோ அவரே வெற்றி பெற்றவராவார். முதன் மந்திரி பதவியும் அவருக்குத்தான்”

அவ்வாறு மன்னன் சொன்னதைக் கேட்ட அவர்கள் நால்வரும், அரசசபையில் இருந்து தத்தம் வீட்டிற்குச் சென்று பலத்த சிந்தனைக்கு ஆளானார்கள். எப்படியாவது வெற்றி பெற்றுப் பதவியைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆர்வம் அவர்கள் நால்வருக்கும் இருந்தது.

பூட்டுக்களின் செய்முறையை பற்றிய பழைய நூல்களையும், கணிதக் குறிப்புக்களில் பூட்டுக்களுக்கான செய்திகளையும் படித்து குறிப்பு எடுத்துவைத்துக்கொண்டார்கள்.

அவர்களில் மூவர் இரவு முழுவதும் தூங்காமல் பல நூல்களையும், ஏடுகளையும் படித்து மனதில் தக்க வைத்துக்கொண்டார்கள். ஒருவர் மட்டும் சில ஏடுகளைப் புரட்டிப் பார்த்ததோடு நிறுத்திக்கொண்டு, சீக்கிரமே நித்திரைக்கு ஆளாகி, நன்றாக உறங்கிவிட்டார்.

அடுத்த நாள் காலை!

அரசசபையில் பூட்டு கொண்டு வரப்பெற்று அவர்கள் முன்பாக வைக்கப்பெற்றது. அதன் அருகே மன்னனும் இருந்தார்.

பூட்டு அளவிலும் சரி, தொழில் நுட்பத்திலும் சரி அனைவரையும் ஆச்சரியப் படுத்தும் விதமாக பெரிதாக இருந்தது.

பூட்டின் படம் கீழே உள்ளது. நீங்களும் பாருங்கள்



ஒருவருக்குப் பின் ஒருவராக பூட்டின் அருகே சென்று பார்ப்பதற்கு அவர்கள் நால்வருக்கும் அனுமதியளிக்கப்பெற்றது. தாங்கள் எடுத்து மனதில் தேக்கி ந்வைத்திருந்த  குறிப்புக்களின் படி, தங்களுக்குத் தெரிந்த விதத்தில் அல்லது தங்களுக்கு யோசனை தோன்றிய விதத்தில் அந்தப் பூட்டை அவர்கள் திற்க்க முயன்றார்கள்.

இரவு தன்னுடைய தூக்கத்தைக் கெடுத்துக்கொள்ளாமல் சீக்கிரமாகப் படுத்து உறங்கினானே, அவன் தான் அந்த நால்வரில் இறுதியாகப் பூட்டின் அருகே வந்தான். பூட்டை நன்றாகப் பரிசோத்தித்துப் பார்த்தான். அவனுடைய வியப்பைப் பல மடங்கு அதிசயப்படுத்தும் விதமான் ஒன்றை அப்போதுதான் அவன் கவனித்தான். அந்தப் பூட்டு பூட்டப்படாமலேயே இருந்தது.

சாவியைப் பயன் படுத்தாமல், பூட்டின் மேற்பகுதியில் இருந்த இணைப்புக் கம்பியை விலக்கிவிட்டு (by removing the hook) பூட்டை எளிதாக அவன் திறந்து விட்டான்.

சொல்லவும் வேண்டுமா?

அவனுக்குத்தான் முதன் மந்திரிப் பதவியும் கிடைத்தது.

உண்மை என்னவென்றால், அந்தப் பூட்டு பூட்டப் படவில்லை.(The fact was, the lock was not locked.)

மற்ற மூவரும் பரபரப்பினாலும், வெற்றிபெற வேண்டுமே என்ற ஆதங்கத்தினாலும் அதைக் கவனிக்கவில்லை.

அதாவது முதலில் எதைச் செய்திருக்க வேண்டுமோ அதை அவர்கள் செய்யவில்லை
------------------------------------------------------------------------------------
”வாத்தி (யார்) இந்தக் கதை எதற்காக?”

”ஜோதிடப் பாடம் படிக்கும் பலரும் இதைததான் செய்கிறீர்கள். பூட்டைத்தான் பார்க்கிறீர்கள். பாடத்தைத்தான் பார்க்கிறீர்கள். பூட்டு பூட்டப் பட்டுள்ளதா என்பதை முதலில் பார்க்காததைப்போல, விதிவிலக்குகளைப் பார்ப்பதில்லை. ஆகவே  விதிவிலக்குகள் உள்ளதா என்று முதலில் பாருங்கள்”

To solve a problem, one must first understand the problem.To understand the problem, the mind should be calm, without tension or agitation. This will facilitate seeing things objectively.

நமது வகுப்பறை நண்பர் திரு.பிரகாஷ் அவர்கள் தான் படித்ததாகக் கூறி மின்னஞ்சலில் அனுப்பிய கதை.  கதை ஆங்கிலத்தில் இருந்தது. மொழியாக்கம் மற்றும் அடியேனுடைய கைவண்ணம். அவருக்கு நம் நன்றிகள் உரித்தாகுக!

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!