Humour நகைச்சுவை: ஜானிவாக்கர் சிங்கிளும், டபுளும்!எல்லாம் நகைச்சுவைக்காக எழுதப்பெற்றவை. சிடுமூஞ்சிகள் வெளியேறி விடவும்!
+++++++++++++++++++++++++++++++++++
1
கணவன் மனைவியிடம்:
"என்கூட நீ ஒரு விஷயத்தில கூட ஒத்துப்போக மாட்டேங்கிறியேடி?
உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த ஆறு வருஷத்தில, என்ன
சுகத்தைக் கண்டேன்?"
மனைவி: "தப்பாச்சொல்றே! நமக்குக் கல்யாணமாகி ஏழு வருடமாகிறது!
==================================
2
பஸ்ஸில இருந்த மத்தவனெல்லாம் கத்திக்கிட்டே செத்தானுங்கடா ;
எங்க தாத்தா மட்டும் தூக்கத்திலேயே செத்துப்போனார்டா!"
"எப்படீடா?"
"பஸ்ஸை ஓட்டிக்கிட்டுப்போனதே அவருதான்டா!"
========================
3
நம்ம தேனிக்கார அரசியல்வாதி ஒருவர் முதன் முதலிலாக ஃபைவ் ஸ்டார்
ஹோட்டலில் உள்ள பார் ஒன்றிற்குப் போனார்.
வலது பக்க மேஜையில் இருந்தவன் பார்டெண்டரிடம் சொன்னான்:
"ஜானிவாக்கர் சிங்கிள்"
இடது பக்க மேஜையில் இருந்தவன் பார்டெண்டரிடம் சொன்னான்:
"பீட்டர் ஸ்காட் சிங்கிள்"
நம்ம ஆள் பார்டெண்டரிடம் சொன்னார்:
தமிழரசன் மேரீட் (Married)!
=========================
4
விவாகரத்துக் கோரி வந்திருந்த தம்பதிகளைப் பார்த்து நீதிபதி கேட்டார்:
"உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறதே? என்ன செய்யப்போகிறீர்கள்"
கணவன் சொன்னான்,"சொத்துக்களைப்போலவே, பிள்ளைகளையும் பங்கு
அய்யா?"
"மூன்று குழந்தைகளை எப்படிப் பங்கு வைப்பது?"
"சரி, அடுத்த வருடம் வந்து மனுக் கொடுக்கிறோம்!"
+++++++++++++++++++++++++++++++++
நான்கில் எது நன்றாக உள்ளது?
இது மீள் பதிவு. என்னுடைய பல்சுவை வலைப் பூவில் 28.10.2008 அன்று வெளியானது. உங்களுக்கு (வகுப்பறைக் கண்மணிகளுக்கு) அதை இன்று அறியத் தந்திருக்கிறேன்
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++