மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

13.3.07

ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 12

ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 12
By SP.VR.SUBBIAH

நாஸ்டர்டாமஸின் தீர்க்கதரிசனங்கள் (தொடர்ச்சி)

ஒரு நாள் ப்ளோரன்ஸ் டி வில்லி எனும் செல்வந்தர்

வீட்டிற்கு விஷேச அழைப்பின் பெயரில் நாஸ்ட்ர
டாமஸ் விருந்திற்குச் சென்றிருந்தார்.

அன்றைய தினம் மாலையில் அந்த செல்வந்தர் வீட்டுத்
தோட்டத்தில் இருவரும் உலாவிக் கொண்டிருந்தனர்.

அங்கே அப்போது இரண்டு பன்றிக் குட்டிகள் விளையாடிக்
கொண்டிருந்தன.

அவற்றைச் சுட்டிக் காட்டிய , செல்வந்தர் நாஸ்ட்ரடாமஸிடம்
கேட்டார்.

"இந்தப் பன்றிக்குட்டிகளின் எதிர்காலத்தைப் பற்றி உங்களால்
ஏதாவது கூற முடியுமா?"

உடனே நாஸ்ட்ரடாமஸ் தயக்கமின்றிக் கூறினார்
" வெள்ளைப் பன்றிக்குட்டியை ஒரு நரி தின்றுவிடும். கருப்புப்
பன்றிக்குட்டியை இன்றிரவு நாம் தின்னப் போகிறோம்"

அதைப் பொய்யாக்க விரும்பிய செல்வந்தர், தன்னுடைய
வேலைக்காரர்களை ரகசியமாக அழைத்து, வெள்ளைப்
ப்ன்றிக்குட்டியைக் கொன்று இரவு உணவாக அதைச்
சமைக்கும்படி உத்தரவிட்டார்.

அன்று இரவு இருவரும் மேஜையில் அமர்ந்து உணவு
சாப்பிடும்பொழுது," நாஸ்ட்ரடாமஸ், இப்போது சொல்லுங்கள்
நாம், சாப்பிட்டுக்கொண்டிருப்பது,கருப்புப் பன்றியின்

இறைச்சியா அல்லது வெள்ளைப் பன்றியின்
இறைச்சியா?"

அதற்கு நாஸ்ட்ரடாமஸ் புன்னகையுடன் பதில் சொன்னார்,
“எனது வார்த்தைகள் தவறாது. மறுத்துச் சொல்வதும்
கிடையாது. நீங்கள் உங்கள் சமையல்காரரை அழைத்துத்
தெரிந்து கொள்ளுங்கள் - கருப்பா அல்லது வெள்ளையா என்று!"

உடனே அந்த வீட்டின் சமையல்காரர் அங்கே அழைத்து
வரப்பட்டார்ர். வந்தவர் சொன்னார்.

"என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் சொன்னபடியே
வெள்ளைப் பன்றியைத்தான் முதலில் வெட்டிச் சிறு சிறு
துண்டுகளாக்கி மேஜை மேல் வைத்துவிட்டு உள்ளே சென்று
சமையலுக்கு வேண்டிய சேர்மானப் பொருட்களை எடுத்துக்
கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் உங்கள் மகன்
வேட்டையாடிப் பிடித்துக் கொண்டு வந்திருந்த நரி ஒன்று
இந்தப் பன்றிக் கறியின் வாசனையை மோப்பம் பிடித்துத்
கொண்டு உள்ளே வந்து அவற்றைக் குதறித்தின்ன

ஆரம்பித்து விட்டது. நரி வாய்வைத்துக் குதறியதை
உங்களுக்குச் சமைக்க வேண்டாம் என்று அதை
அப்படியே நரிக்குப் போட்டு விட்டுப் பிறகு, கருப்புப்
பன்றியைக் கொன்று துண்டுகளாக்கி உங்கள்
இருவருக்கும் உணவாகச் செய்தேன்"

அசந்துபோன செல்வந்தர் நாஸ்ட்ரடாமஸிடம், அவரைச்
சோதனைகுட்படுத்தியதற்காக மன்னிப்புக் கேட்டதுடன்,
பெரும் வெகுமதிகளையும் கொடுத்து அவரை அனுப்பினார்
-------------------------------------------------------
நாஸ்டர்டாமஸ் இரவில்தான் எதிர்காலத்தில் நடக்க
விருப்பவைகளைக் கணித்து எழுதினார். ஆனால் மதத்
தலைவர்களுக்குப் போக்குக் காட்டவும், சிறை தண்டனை
யிலிருந்து தப்பவும் எகிப்திய நூல் ஒன்றின் ஆதாரத்தைக்
கொண்டு எழுதுவதாகச் சொல்லி வந்தார்.

பிரான்ஸில் ஒரு சிற்பி செய்த கன்னிமேரியின் சிலையைப்
பார்த்து, நாஸ்டர்டாமஸ் அது கன்னி மேரியின் சிலை

இல்லை. பேயின் சிலை என்றார். அது சிற்ப சாஸ்திரப்படி
இல்லையென்பதற்காகவே அப்படிச் சொன்னார்.

அரசாங்கம் அவரை நாத்திகன் என்று சொல்லிக் கைது
செய்ய உத்தரவிட்டது. அவர் அதிலிருந்து தப்பி

ஊரைவிட்டே ஓடினார். ஆறு ஆண்டுகாலம் நாடோடி
யாகப் பல ஊர்களில் சுற்றித் திரிந்துவிட்டுப் பின்
மறுபடியும் பிரான்ஸிற்கு வந்தார்.

1555 ஆம் ஆண்டுதான் தன்னுடைய முதல் நூலை எழுதி
முடித்தார்.நாஸ்டர்டாமஸின் நூல்கள் லத்தீன் பேச்சு

மொழியில் கவிதை நடையில் அமைந்திருந்தன.
பாட்டிற்கு எட்டு வரிகள் வீதம் தலா நூறு
பாடல்களைக் கொண்ட பத்து தொகுதிகளாக
அவைகள் அமைந்திருந்தன.

அந்தக் காலத்தில் இப்படியெல்லாம் யாராவது ஆரூடம்
சொன்னால் அவரை சூன்ய மந்திரவாதி என்று பட்டம் சூட்டி
உயிரோடு எரிக்கவே கிளம்பி விடுவார்கள். அதோடு அரசால்
மோசடி ஆசாமி என்று கைது செய்யப்படும் சூழ்நிலையும்
நிலவியது. அதனால்தான் அவர் பல எதிர்கால நிகழ்வுகளை
கணிப்புக்களை ச்ங்கேதக் குறிப்பாக எழுதிவைத்தார்.

அது விமானப் போக்குவரத்து தோன்றாத காலம். ஆனால்
நாஸ்டர்டாமஸ், வரப்போகும் விமானப் போக்குவரத்து,
இரண்டாவது உலகப்போர், ஹிட்லர், கென்னடியின் மரணம்
அதயதுல்லா கோமெனியின் அரசியல் எழுச்சி என்று பல
விந்தையான கணிப்புக்களைத் த்னது தீர்க்க தரிசனத்தால்
460 ஆண்டுகளுக்கு முன்பே எழுதிவைத்துவிட்டுப்போனார்
அது நிதர்சனமான உண்மை என்பதை அவருடைய நூல்கள்
சொல்லிக்கொண்டிருக்கின்றன.

அவருடைய கையெழுத்துப் பிரதி இன்றும் பிரஞ்சு அருங்
காட்சியகத்தில் உள்ளது.

நம்து தமிழ்மணப் பதிவர்கள் சிலர் பாரீஸில் இருக்கிறார்கள்
அவர்கள் பிரஞ்சு அருங்காட்சியகத்திற்குச் சென்று அதைப்
பார்த்துவிட்டு வந்து நமக்கு அதைப் பற்றிய செய்திகளைச்
சொன்னால் நாம் அவர்களுக்கு, நம இருகரம் கூப்பி ந்மது
ந்ன்றியைத் தெரிவித்துக் கொள்வோம்!
---------------------------------------
Nostradamus பற்றிய முழு விவரங்களுக்கான
இணைய தளம்:
----------------------------------
நாஸ்டர்டாமஸின் மொத்த புத்தகத்தின் வரிகளையும்
பார்ப்பதற்கான இணைய தளம் இங்கே உள்ளது:
-------------------------------------------------
பாடல் எண் 74 - இந்திரா காந்தியைக் குறிப்பது!
பாடல் எண் 75 - ராஜிவ் காந்தியைக் குறிப்பது!
இவற்றைக்காண்பதற்கான சுட்டி:
-----------------------------------------------






-------------------------------------------

படிப்பதற்கான புத்தகங்கள்:



-----------------------------------------
(தொடரும்)

12.3.07

நாஸ்ட்ரடாமஸின் தீர்க்கதரிசனம்

ஜோதிடம் ஒரு பார்வை - ப்குதி 11

நாஸ்டர் டாமஸ்ஸின் தீர்க்க தரிசனம்!

1503ம் ஆண்டு - அதாவது இன்றைக்கு 500 ஆண்டுகளுக்கு
முன்பு பிரஞ்சு நாட்டில் செயிந்த் ரெமி என்னும் ஊரில்
பிறந்தவர் மைக்கேல் நாஸ்ட்ரடாமஸ் என்னும் தீர்க்க
தரிசனம் பெற்ற மனிதர்.

யூத குடும்பத்தினரான அவருடைய பெற்றோர்கள்
கிறிஸ்துவ மதத்தைத் தழுவினர்.

நாஸ்ட்ரடாமஸ் மறைநூல்களும், மருத்துவமும்
கற்றார் மான்ட்பெல்லி பல்கலைக்கழகத்தில்
மருத்துவப் பட்டம் பெற்று, திருமணமும் செய்து
கொண்டு தன் வாழக்கையை இனிது
தொடங்கினார். சில ஆண்டுகளுக்குப் பிறகு
பிரஞ்சு நாட்டில் பரவிய பிளேக் நோய்க்குத்
தன் மனைவியைப் பறிகொடுத்தார்

அதற்குப் பிற்கு அந்தத் தாக்கத்தில் ஏறக்குறையப்
பத்து ஆண்டுகள் மெளனமாகவே இருந்தார்.
அந்தக் காலகட்டதத்தில் அவருக்கு
அதியசமான அந்த ESP சக்தி ஏற்பட்டது.
அவர் யாரை உற்று நோக்கினாலும் அவருடைய
எதிர்காலம் அவர் மனத்திரையில் ஓடியது.
பல நாடுகளின் வருங்கால நிகழ்ச்சிகள் அவர்
மனத் திரையில் தோன்றின. அவற்றையெல்லாம்
விவரித்து எழுதி ஒரு புத்தகமாக வெளியிட்டார்.

அவைகள் பெரும்பாலும் பிரஞ்சு நாட்டின் அரசியல்
மாற்றங்களை விவரித்து எழுதப்பெற்ற நூலாகும்.

பிரஞ்சு நாட்டு மன்னன் ஒரு விளையாட்டு விபத்தில்
இறந்து விடுவார் என்று அவர் குறிப்பிட்டு எழுதியி
ருந்தது உண்மையிலேயே நடந்துவிட பிரஞ்சு மக்கள்
அவருடைய கணிப்புக்களில் ஆர்வம் காட்டத் துவங்கினர்.

1550 ஆம் ஆண்டு முதல் 1555 ஆம் ஆண்டுவரை
வருங்காலத்தில் பல நாடுகளில் நடக்கவிருக்கும்
சம்பவங்களை எல்லாம் எழுதி
10 பாகங்கள் கொண்ட நூல்களாக வெளியிட்டார்.

1566 ஆம் ஆண்டு அவருடைய மறைவிற்குப்
பின்னரே அவருடைய நூலகள் பல மொழிகளிலும்
மொழிபெயர்க்கப்பெறறு வெளியாகி
ஐரோப்பா முழுவதும் அவர் பிரபலமானார்

பிரஞ்சுப் புரட்சியில் 14ம் லூயி மன்னனுக்கு
ஏற்பட்ட முடிவை அது நடப்பதற்கு 200 ஆண்டு
களுக்கு முன்பே நாஸ்ட்ரடாமஸ்
துல்லியமாக எழுதிவைத்திருந்ததைப் பல
ஆராய்ச்சியாளர்களும் வியந்து பாராட்டியுள்ளனர்.

அதுபோல நெப்போலியனின் திடீர் எழுச்சியையும்,
அவருடைய பல்வேறு படையெடுப்புக்களையும்,
ரஷ்யாவுடனான போரில் குளிரைத் தாக்குப்பிடிக்க
முடியாமல் தோல்வியுறுவதுவரை
ஒன்றையும் விடாமல் முன்பே விவரித்து எழுதி
வைத்திருந்ததும் விந்தையானதாகும்

ஹிட்லரின் பிறப்பு, வளர்ப்பு, ஜெர்மனியில் அவர்
அமைத்த ராணுவ அரசு, பிறகு உலகம் முழுவதையும்
பிடிப்பதற்காக 1939 ஆம் ஆண்டில் அவர் துவக்கிய
இரண்டாவது உலகமகாயுத்தம் ஆகியவற்றையும்
எழுதிவைத்திருந்தார். அவை அனைத்தும்
சரியாக நடந்தன.

ஹிட்லரின் பிரச்சார மந்திரியான கோயபல்ஸின்
மனைவி ஃப்ரைன் 1939ம் ஆண்டு அந்த நூலைப்
படித்துவிட்டு, ஹிட்லரின் சாகசங்கள்
அந்த நூலில் விவரிக்கப்பட்டு இருப்பதைக்
ஹிட்லரிடம் காண்பிக்க, ஹிட்லர் அந்தப் பக்கங்
களைப் பிரதி எடுத்து ஐரோப்பா முழுவதும்
தூவ விட்டார்.

அச்செய்தி இங்கிலாந்து மக்களைக் கவலையில்
ஆழ்த்த, அப்போது அங்கே பிரதமராக இருந்த
வின்ஸ்டன் சர்ச்சில், நாஸ்டர்டாமஸின்
நூலை வாங்கிப் படித்து, அதில் ஹிட்லரின்
வீழ்ச்சியைப் பற்றி நாஸ்டர்டாமஸ் எழுதியிருந்ததை
துண்டுப் பிரசுரமாக்கித் தன் தேசம் முழுவதும்
வெளியிட்டு அவநம்பிக்கையிலிருந்து தன்
தேசமக்களை மீட்டார்.

இதெல்லாம் வரலாறு!

அதுபோல் அமெரிக்காவின் விடுதலைப்போரைப்
பற்றியும், அமெரிக்க ஜனாதிபதிகள் அபிரகாம்
லிங்கன், கென்னடி போன்றவர்கள் சுட்டுக்
கொல்லப்படுவார்கள் என்பதையும் நாஸ்டர்டாமஸ்
தன் நூலில் குறிப்பிட்டுள்ளது மிகவும் ஆச்சரியமான
விஷயங்கள். ஏனென்றால் அந்தநாடு நாஸ்டர்டாமஸ்
காலத்தில் உருவாகக்கூட இல்லை என்பது
வியக்கத்தக்க உண்மை!

இந்தியாவைப் பற்றி ஏதாவது எழுதியிருக்கிறாரா?

ஏன் எழுதாமல் - பல விஷயங்க்ளை எழுதியுள்ளார்
அவற்றில் முக்கியமானது. 21 ஆம் நூற்றாண்டில்
உலகில் இந்தியா மட்டும்தான் வல்லரசு நாடாகத்
திகழும்!

(நாஸ்டர்டாமஸ் பற்றிய செய்திகள் நாளையும் வரும்!)

8.3.07

ஜியா-உல்-ஹக்'கின் மரணம்

















ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 10

ESP என்றால் என்ன?
(தொடர்ச்சி)
முன் பதிவைப் படிக்காதவர்கள், அதைப் படித்துவிட்டு
இதற்கு வரவும்

20.12.1971 முதல் 5.7.1977 வரை பாகிஸ்தானின்
சர்வ வல்லமை படைத்த மனிதராக இருந்த
திரு. ஜுல்ஃபிகர் அலி புட்டோ' வைத் தெரியாதவர்களே
இருக்க மாட்டார்கள்

1977 ம் வருடத்தின் துவக்கத்தில் பங்ளாதேஷ்
நாட்டிற்கு அரசியல் சுற்றுப் பயணமாகச் சென்றிருந்த
திரு.புட்டோ அவர்கள் அங்கே மிகவும் பிரபலமாக
இருந்த கிஸ்டி' என்னும் ESP சக்தியுள்ள மனிதரைச்
சந்திக்க விரும்பினார்.

ஏற்பாடு செய்யப்பெற்றது.

தனது பாதுகாவலர்கள் வெளியே நிற்க அவர் மட்டும்
தனியாக உள்ளே சென்று கிஸ்டியின் முன் அமர்ந்தார்.

எதிரில் அமர்ந்திருப்பது சர்வ வல்லமை படைத்த ஒரு
பிரதமர் என்றெல்லாம் கவலைப்படாமல் கிஸ்டி த்ன்னுடைய
பேச்சை சாதாரணமாகத் துவக்கினார்

"மிஸடர், புட்டோ!"

புட்டோ உற்சாகமாகச் சொன்னார் "யெஸ்!"

அடுத்து கிஸ்டியின் வாயிலிருந்து வந்த வார்த்தை
புட்டோவின் உற்சாகத்தையெல்லாம் கடாசுவதைப் போல
இருந்தது

"ஜாக்கிரதை ! (Be careful!)"

" என்ன சொல்கிறீர்கள்?" இது புட்டோ

" உங்களுக்குத் தூக்கு காத்திருக்கிறது!"
(You are going to be hanged)

புட்டோ அதிர்ச்சியடைந்தாலும், கணத்தில் அதை
மறைத்துக் கொண்டு, தொடர்ந்து சொன்னார்
" என்னைக் காப்பாற்றிக் கொள்ள எனக்குத்
தெரியும்: எனக்கு மூளை இருக்கிறது!
(I can safe guard myself: I have brain)"

கிஸ்டி விடமல் சொன்னார்

"தூக்கில் தொங்கும் போது உங்கள் மூளையும்
சேர்ந்துதான் தொங்கப் போகிறது"

அதற்குப் பிறகு சற்று நேரம் மரியாதை நிமித்தமாக
சில நிமிடங்கள் பேசி விட்டு புட்டோ திரும்பி விட்டார்

கிஸ்டி சொன்னது அப்படியே இரண்டு வருடங்களுக்குள்
பலித்தது (நடந்தது)

4.4.1977ம் தேதியன்று புட்டோ பரிதாபமாகத் தூக்கில்
தொங்க விடப்பட்டார்.

அப்போது லண்டனில் படித்துக் கொண்டிருந்த புட்டோவின்
மகள் பெனாசிர் பூட்டோ இதைக் கேள்வியுற்று, தன்
தந்தையின் மரணத்திற்குப் பிறகு கிஸ்டியைச் சென்று
சந்தித்து அழுதார்.

அப்போது கிஸ்டி அவருக்கு ஆறுதல் சொல்லியதோடு
தன்னுடைய ESP சக்தியால் நடக்கப்போகின்ற
இரண்டு விஷயங்களைச் சொன்னார்.

அதாவது அப்போது பதவியில் இருந்த ஜெனரல்
ஜியா- உல்- ஹக் வெடி விபத்தில் இறப்பார் என்பதையும்,
அவர் இறந்தவுடன் பெனாசிர் பாகிஸ்தானின் பிரத்மர்
ஆவார் என்பதையும் சொன்னார்.

"பழங்கள் வெடித்துச் சிதறும்போது - நீங்கள் பிரதம
ராவீர்கள் என்றார். அதேபோல ஜியா சென்ற
விமானத்தில் பழக்கூடையில் வைக்கப் பட்டிருந்த
வெடிகுண்டு வெடித்ததாலதான் விமானம்
விபத்துக்குள்ளாகி, ஜியா அகால மரணமடைந்த
தோடு, பெனாசிரும் பிரதமரானார்

இவை அனைத்துமே துல்லியமாக அவைகள் நடக்கும்
முன்பே கிஸ்டிக்கு எப்படித் தெரிந்தது?

அதுதான் இந்த ESP யின் சக்தி!

பெனாசிர், பங்ளாதேஷின் பிரதமர் எர்ஷாத் ஆகியோருடன்
கிஸ்டி அவர்களும் சேர்ந்திருக்கும் படத்தைக் கீழே கொடுத்துள்ளேன்
-------------------------------------------



முன்பு ஒரு தமிழ் வார இதழில் வந்த செய்தி இது!

ESP கட்டுரை இரண்டு நாள் இடைவெளிக்குப் பிறகு
ESP சக்தி படைத்திருந்த வேறு ஒரு மனிதரைப் பற்றிய
செய்தியுடன் வரும்!

(தொடரும்)
---------------------------------------------------


Clipping from Wikipedia:
General Zia-ul-Haq died in a plane crash on August 17, 1988. After witnessing a tank inspection in Bahawalpur, Zia had left the small town in Punjab province by C-130 Hercules aircraft. Shortly after a smooth take-off, the control tower lost contact with the aircraft. Witnesses who saw the plane in the air afterwards claim it was flying erratically. Directly afterwards, the aircraft nosedived before exploding in mid-air, killing General Zia and several other senior army generals, as well as American Ambassador to Pakistan Arnold Raphel. A common suspicion within Pakistan, although with no proof, is that the crash was a political assassination carried out by the American CIA or Russian KGB
--------------------------------------------