மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

7.3.07

ESP என்றால் என்ன? ஜோதிடம்-பகுதி 9


ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 9
By SP.VR.Subbiah

Extra-Sensory-Perception

தொடர்ந்து மூன்று பதிவுகள் வெறும் பாடமாக நடத்தி
விட்டேன். வகுப்பு மாணவர்களுக்கு வெறும் பாடமாக
நடத்தினால் உற்சாகம் குறைந்துவிடும்.

ஆகவே இன்று மாறுதலுக்காக அரட்டைக் கச்சேரி!
(அதுவும் ஜோதிடத்தைப் பற்றித்தான்!)

எங்கள் ஊரிலிருந்து (தேவகோட்டை) 20 கிலோ மீட்டர்
தூரத்தில் ‘ஜனவழி' என்று ஒரு கிராமம் இருந்தது. அது
திருவாடானை தாலுக்காவைச் சேர்ந்தது. அங்கிருந்து
12 கிலோமீட்டர் தொலைவில் தொண்டி கடற்கரை
உள்ளது. ரம்மியமான சூழலில் உள்ள கிராமம் அது

அங்கே சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குறி
சொல்பவர் (ஜோதிடர்) இருந்தார். இளைஞர்.
26 அல்லது 28 வயதுதான் இருக்கும்
ஜாதகக் குறிப்பு, கைரேகை எதுவும் வேண்டாம்.

எதிரில் வந்து உட்காரும் நபரை அசத்துகிற மாதிரி,
அவராகவே வந்தவருடைய பெயர், ஊர், வந்ததின்
நோக்கம், அவர் கேட்க வந்த கேள்வி, அதற்குரிய
பதில் என்று ஒர் நிமிடத்திற்குள் அனைத்தையும்
சொல்லி முடித்து விடுவார். வந்தவர் கிறுகிறுத்துப்
போய் விடுவார்.

இத்தனைக்கும் அந்த ஜோதிடர் ஏழ்மையான குடும்பத்தைச்
சேர்ந்தவர். ஒரு சிறிய தோட்டத்திற்குள் இருக்கும் ஓட்டு
வீடு. பக்கத்திலேயே வந்தவர்களுடன் அமர்ந்து பேசுவதற்காக
10 x 15 அடிக்கு கூரை வேய்ந்த கொட்டகைக் கூடம்.
அவ்வளவுதான்.

காலை 9 மணி முதல் 12 மணி வரைதான் (குறி) சொல்வார்
குறுகிய காலத்திலேயே பிரபலமாகி, நாளுக்கு நாள் கூட்டம்
அதிகமாகிக் கொண்டே போனது.

காசு வாங்கமாட்டார். தட்சணையாக ரூ.1.25 மட்டுமே,
வெற்றிலை பாக்கோடு அவர் அருகில் இருக்கும்
தாமபாளத்தில் வைத்துவிட்டு வந்து விடவேண்டும்.
காசையும், வெற்றிலை பாக்கையும் கடைசியில்
வந்து அவருடைய தாயார் எடுத்துக் கொண்டு போவார்
அவருடைய குருநாதரின் கட்டளையாம், அதற்கு
மேல் காசு வாங்க மாட்டார்.
வருகிற ஜனங்களே, வீட்டு வாயிலிருந்து வரிசையாக
நின்று அவரைப் பார்த்துவிட்டுப் போவார்கள்.
12 மணியானவுடன் எழுந்து விடுவார். அதற்குப் பிறகு
நிற்பவர்கள் தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு
அடுத்த நாள் மறுபடியும் வருவார்கள்

வருகிறவர்களுடன் அவருடைய உரையாடல்
எப்படியிருக்கும் என்பதற்கு இரண்டு நிகழ்வுகளைக்
கொடுத்துள்ளேன்.
-------------------------------------------------
ஒரு பெரியவரும், அவருடைய மகனும் வந்து
அவர் எதிரே அமர்கிறார்கள். இருவரும் மீனவர்
குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்

"உங்களுடைய பெயர் மாரிமுத்து. கூடவந்திருப்பவர்
உங்களுடைய மகன் சுடலைமுத்து. இருவரும்
தொண்டியிலிருந்து வருகிறீர்கள் - இல்லையா?"

"ஆமாம், தம்பி"

" உங்களுடைய படகைக் காணவில்லை. காணாமல்
போய் இரண்டு நாட்களாகி விட்டது இல்லையா?

"ஆமாம், தம்பி"

"அது கிடைக்குமா? அல்லது போனது போனதுதானா?
என்று தெரிந்து கொள்வதற்காக வந்திருக்கிறீர்கள்
இல்லையா?

"ஆமாம், தம்பி"

" அது இப்போது பட்டுக்கோட்டை அருகேயுள்ள
முத்துப்பட்டிணம் கடற்கரையில் உள்ளது. அதைத்
திருடிக்கொண்டு போனவர்கள் இப்போது அதை
ஒளித்து வைத்திருக்கிறார்கள். மூன்று நாட்கள்
கழித்துப் போங்கள். போகும்போது, உங்கள் குப்பம்
ஆட்கள் சிலரை உதவிக்குக் கூட்டிக்கொண்டுபோங்கள்.
படகை எடுத்தவர்கள் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள்.
வாங்கிக் கொண்டு வந்து விடுங்கள். அவ்வளவுதான்
சிரமம் ஒன்றும் இருக்காது. இப்போது நீங்கள் போகலாம்”
-----------------------------------------------
கதர் சட்டை, கதர் வேஷ்டி அணிந்து ஒரு பெரியவர்
தன் மனைவியுடன் வந்து அவர் எதிரில் அமர்கிறார்.

"உங்கள் பெயர் பீம ராஜா. ராஜபாளையத்திலிருந்து
வருகிறீர்கள்"

"ஆமாம்!"

" உங்கள் இரண்டாவது பெண்னிற்குத் திருமணம்
கூடிவராமல் தள்ளிக் கொண்டே போவதால்
கவலையோடு இருக்கிறீர்கள்"

"ஆமாம்!"

" இன்னும் ஒரு வருடம் கழித்து, அடுத்த சித்திரையில்
திருமணம் நடக்கும். உங்கள் பெரிய பெண்ணைக்
கொடுத்துள்ள சம்பந்தி வீட்டாரே வந்து தங்களுடைய
அடுத்த பையனுக்கு உங்களுடைய இரண்டாவது
பெண்ணைக் கேட்பார்கள். அந்தப் பையன்தான்
மாப்பிள்ளை. கேட்டவுடன் சரி என்று சொல்லி
விடுங்கள். அதுவரை இதுபற்றி யாரிடமும் சொல்லாமல்
மெளனமாக இருங்கள்.இப்போது நீங்கள் போகலாம்"
---------------------------------------------------------------------
இதில் ஆச்சரியம் என்னவென்றால், இரண்டுமே
100% சரியாக நடந்தது. இதுபோல அவர் சொன்ன
தெல்லாம் நடந்தது!

அந்தக் குறி சொல்பவருக்கு இது எப்படி சாத்திய
மாயிற்று?

அதற்குப் ESP (Extra Sensory Perception) என்று பெயர்
அந்த 'அசாத்திய எதையும் அனுமானிக்கும் சக்தி’
யைப் பற்றி, இது போன்ற இன்னும் நான்கு பேர்களைப்
பற்றிச் சொல்ல வேண்டியது உள்ளதால் - சொன்ன
வுடன், விரிவான விளக்கம் தருகிறேன்
-------------------------------------------------------
அந்த ஜனவழி ஆசாமியின் முகவரியைக் கொடுக்க
முடியமா? என்று கேட்பவர்களுக்கு:

அந்த மனிதர் இரண்டு வருடம் வரைதான் அங்கே
இருந்தார் அதற்குப் பிறகு, பல பெரிய தலைகள்
நுழைந்து, பணத்தைக் கொட்டிப் பலன்களைப் பார்க்க
ஆரம்பித்ததும், அந்த மனிதர் தன் குருவின் கட்டளை
யை மீறிப் பணத்தின் மேல் பற்று வைக்க
ஆரம்பித்ததும், அந்த சக்தி (ESP Power)அவரைவிட்டு
நீங்கிவிட்டதாகவும், அவர் ஊரையே காலி செய்து
கொண்டு கையில் கிடைத்த பணத்துடன் எங்கோ
போய்விட்டதாகவும் தகவல்
---------------------------------------------------------------------
பதிவின் நீளம் கருதி, இன்று இத்துடன் முடித்துக்
கொள்கிறேன்

ஜெனரல் ஜியா - உல் - ஹக்'கின் மரணத்தை இதே
மாதிரி தன்னுடைய ESP சக்தி மூலம் முன்பே சொன்ன
பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்த அபூர்வ மனிதரைப் பற்றிய
செய்தி, அவருடைய படத்துடன் அடுத்த பதிவில் வரும்!

(தொடரும்)
--------------------------------------------
What is ESP?
ESP is the meaning of the supernatural phenomenon or the extra
sensory perception ability. The abbreviation of Extra-Sensory-
Perception is ESP in the world of common language. ESP
(super willpower)…………..!
The power can be controlled by your thought and directed to
anywhere you to go. The thought speed is faster than the
velocity of light, which means that it can see through into
the 10 year future indirectly. It also has infinite knowledge.
That's why the power can tell you about anything that's
happening or going to happen in your life.
ESP யின் அடிப்படை விவரங்களுக்குச் சுட்டி இங்கே உள்ளது:

How ESP works? என்ற விவரங்களை முழுதும் அறிய
Scince - How stuff works - என்ற தளத்திற்கான சுட்டி இங்கே உள்ளது!

5.3.07

ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 8

ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 8
By SP.VR.Subbiah




சூரிய உதயம் ஜோதிடத்தில் முக்கியமானதாகும்
எல்லாச் சுபகாரியங்களும் சூரிய உதயத்திற்குப்
பிறகுதான் செய்யப்படும்

அதுவும் சூரிய உதயம் காலை 6.00 மணிக்கு என்றால்
அந்த நேரம் துவங்கி மதியம் 12 மணிக்குள் வளர் சூரியனில்
முடித்துக் கொண்டு விடுவார்கள். அந்த 6 முதல் 12 மணிக்குள்
உள்ள 6 மணி நேர காலத்தில் கூட ராகுகாலம் அல்லது
எமகண்டம் (கேதுவிற்குரியது) இல்லாத நேரத்தில்தான்
செய்வார்கள். இது காலங்காலமாக உள்ளது

பகல் நேரத்திற்குக் கொடுக்கும் முன்னுரிமையை, சூரிய
அஸ்தமணத்திற்குப் பிறகு வரும் 12 மணி நேரத்திற்கு
யாரும் கொடுப்பதில்லை!

அதுபோல வார நாட்களில், செவ்வாய்கிழமையையும்,
சனிக்கிழமையையும் தவிர்த்து விடுவார்கள்.

நீங்கள் எங்காவது அந்த இரு கிழமைகளில் திருமணம்
முகூர்த்தம் இருந்ததாகவோ, அல்லது யாரும் தங்கள்
வீடுகளில் திருமண வைபவங்களை நடத்தியதாகவோ
கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இருக்காது!

நமது நடைமுறை வழக்கங்களில் சூரியனுக்கு அவ்வளவு
முன்னுரிமை உள்ளது.

எல்லாக் கோள்களிலும் பிரதானக் கோள் சூரியன்தான்!
(It is the prime planet in the space)

ஜாதக நிர்ணயத்தில் சூரியன் தந்தைக்கு உரிய கிரகம்
(He is the Pithurkaraka - Authority for Father of the native)
ஒரு குழந்தையின் ஜாதகத்தில் சூரியன் வலுவாக
இருந்தால்தான் அந்தக் குழந்தைக்குத் தன் தந்தையின்
அரவணைப்பும், ஆதரவும் கிடைக்கும்.

தந்தையால் குழந்தை பெருமை பெரும்!
குழந்தையின் ஜாதகத்தில், சூரியன் 6, 8, 12 ஆகிய
இடங்களில் மறைந்து விட்டால்
(If the Sun is placed in 6th Or 8th or 12th
houses in a chart - all these houses are inimical houses)
அல்லது நீசமடைந்திருந்தால் (debilitated) அந்தக்
குழந்தைக்குத் தந்தை இறந்திருப்பார் அல்லது
இருந்தாலும் அந்தக் குழந்தையை நன்றாக
வளர்கக்கூடிய நிலையில் இல்லாமல் இருப்பார்

(இது பற்றிய முழு விவரம் பின் பதிவுகளில் வரும்)

அதுபோல சூரியனுக்கு இன்னொரு ஆதிபத்யமும் உண்டு
(Fortfolio) சூரியன் உடல் (Body) காரகன். ஒருவன் நல்ல
உடல்வாகோடு இருக்க வேண்டுமென்றாலும், ஜாதகத்தில்
சூரியன் வலுவாக இருக்க வேண்டும்!

அதுபோல சந்திரன் தாய்க்கு உரிய கிரகம். சந்திரனை
வைத்துத்தான் ஒரு குழந்தையின் தாயைப்பற்றிச் சொல்வார்கள்
சந்திரன் மனதிற்கும் (Mind) உரிய கிரகம். சந்திரன் ஜாதகத்தில்
வலுவாக இருந்தால்தான் மனம் தெளிவாக இருக்கும்
சந்திரன் வேறு தீய கிரகங்களோடு சேர்ந்திருந்தாலும் அல்லது
ஜாதகத்தில் மறைந்திருந்தாலும், குழப்பமான மனநிலை
உள்ளவராக இருப்பார்.

(இது பற்றிய முழு விவரம் பின் பதிவுகளில் வரும்)
------------------------------------------------------
சூரிய உதயம்

சூரிய உதயம் வருடம் 365.25 நாட்களும் ஒரே மாதிரியாக
இருக்காது. பலர் நினைத்துக்கொண்டிருப்பதுபோல தினமும்
காலை 6.00 மணிக்கு சூரிய உதயம் இருக்காது

இன்று (மாசி மாதம் 28ம் தேதி) சூரிய உதயம் காலை
6.29 மணிக்கு. ஆனால் வெய்யில் காலமான வைகாசி
மாதத்தில் சூரியன் காலை 5.53 க்குகே உதயமாகிவிடும்
இந்த வித்தியாசம், சூரியனின் சுழற்சியையும்,அதனால்
பூமியில் ஏற்படும் பருவ மாற்றங்களையும் வைத்து
வேறுபடுகிறது. குளிர்காலம், கோடைகாலம், இலை
யுதிர்காலம், வசந்தகாலம் (Winter, Summer, Autumn, Spring)
என்று பருவங்களில் மாற்றங்களைக் கொடுப்பதும் சூரியனின்
சுழற்சிதான், அதேபோல சூரிய உதயகால மாற்றமும்
அந்த சுழற்சியால்தான்

The Sun does not revolve around the Earth--it's the other
way around. Nonetheless, the Sun does not rise at the same
time each morning, either. For the most part, this is because
the Sun's path through the sky is higher in spring and summer,
and lower in autumn and winter. As a result, in spring and
summer, the Sun is above the horizon for a longer portion
of the 24-hour day, and it rises earlier than on average.
During autumn and winter, it's the opposite: the Sun
is above the horizon for a shorter portion of the 24-hour
day, and it rises later than on average.

இதற்கான சுட்டி இங்கே உள்ளது

--------------------------------------------------

வெவ்வேறு மாதங்களில் சூரிய உதய நேரத்தை

அட்டவனையாக்கிக் கீழே கொடுத்துள்ளேன்.

உங்கள் கவனத்திற்கு அது வரவேண்டும்

என்பதற்காகக் கொடுத்துள்ளேன். இதைக்
குறித்து வைத்துக்கொள்ளுங்கள். பின்னால்

பயன்படும் மனனம் செய்ய வேண்டியதில்லை!

================================
ஜாதகம் கணிப்பதற்கு இந்த சூரிய உதயநேரம் மிக
முக்கியமானதாகும்.

நமக்கு ஒரு நாள் என்பது இன்று காலை சூரிய உதயம்
தொடங்கி அடுத்த நாள் காலை சூரிய உதயத்திற்கு ஒரு நொடி
முன்புவரை ஒருநாள். ஆனால் ஆங்கில நாட்காட்டியின் படி
இரவு 12,01ற்கே அடுத்த நாள் துவங்கிவிடும்.

இன்று காலை சரியாக 6.00 மணிக்கு ஒரு குழந்தை
பிறக்கிறது என்று வைத்துக் கொண்டால் அந்தக் குழந்தையின்
பிறந்த நாளை - இன்று சூரிய உதயம் 6.29 என்பதால் - அந்தக்
குழந்தை 4/5,மார்ச், 2007 என்றுதான் குறிப்பார்கள்

விய வருடம் வைகாசி மாதம் 27ம் தேதி 58.45 நாழிகை
என்றுதான் குறிப்பிடுவார்கள் ( 28ம் தேதி என்றல்ல -
இதை நன்றாக மனதில் உள்வாங்கிக்கொள்ளுங்கள்)

அதாவது 4ம் தேதி முடியுமுன்பாக 5ம் தேதி அதிகாலை
பிறந்த குழந்தை என்று அறிந்து கொள்ள அது உதவும்

ஜாதகம் கணிக்கும்போது இந்த சூரிய உதயத்தைக் குறிப்பிட்டு
ஜாதகம் எழுதினால்தான், கணித்தால்தான் அது உண்மையான
கிரக நிலைப்பாடுகளைக் கொண்ட ஜாதகமாக இருக்கும்!
இல்லையென்றால் தவறான ஜாதகமாகிவிடும்

(தொடரும்)

1.3.07

இரண்டு பிரபலங்களின் ஜாதகங்கள்

ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 7
By SP.VR.SUBBIAH

முன் பதிவில் கோள்களின் பெயர்களையும், 12 ராசிகளின்
பெயர்களையும், அந்தப் பன்னிரெண்டு ராசிகளின் வழியே
கோள்கள் ஒருமுறை சுற்றி வருவதற்கு எடுத்துக்
கொள்ளும் காலத்தின் அளவையும் கொடுத்திருந்தேன்.

இன்றையப் பதிவில் அந்தக் கோள்களுக்கு ராசிகளுடன்
உள்ள தொடர்பையும், அவைகளுக்கு ராசிகளில் உள்ள
உரிமைகளைப் பற்றியும் தெரிந்துகொள்வோம்.
-------------------------------------------------------------------------------------------
ஜோதிடத்தில் முழு ஞானம் உள்ள ஒருவரிடம் ஒரு
மிகவும் பிரபலமான தலைவர் ஒருவரின் ஜாதகத்தைக்
( பெயரைச் சொல்லாமல்) காட்டி, இந்த ஜாதகம் எப்படி
யுள்ளது? என்று கேட்டால், அவர் அதைப் பரிசோதித்துப்
பார்த்து விட்டு இது ராஜ யோகம் உள்ள ஜாதகம்
இந்த ஜாதகர் நாட்டின் தலைமைப் பதவிவரைக்கும்
வரக்கூடியவர் என்று சொல்வார்!

அவர் எப்படிச் சொல்வார் என்றால், ஜாதகத்தில் அது
தெரியும்!

மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள்
ஜாதகத்தில் உச்சம் பெற்றும், மற்றும் இரண்டு அல்லது
மூன்று கிரகங்கள் ஆட்சி பலத்துடனும் இருந்தால் அது
அந்த யோகத்தைக் கொடுக்கும்..

உதாரணத்திற்கு இரண்டு ஜாதகங்களைக் கொடுத்துள்ளேன்
ஒன்று தமிழக முதல்வர் கலைஞர் திரு.மு.கருணாநிதி
அவர்களுடையது. மற்றொன்று இந்தியாவிலேயே அதிகம்
பார்வையிடப் பெற்ற முன்னாள் பிரதமர் திருமதி. இந்திரா
காந்தி அவர்களுடையது.

கலைஞர் அவர்களுடைய ஜாதகத்தில் ஆறு கிரகங்கள்
வலுவாக உள்ளன. திருமதி காந்தி அவர்களுடைய
ஜாதகத்தில் 6 கிரகங்கள் பரிவர்த்தனை யோகத்தில்
உள்ளன. (Exchange of house with each other)

------------------------------------------------------------------------------------------------
பார்த்தவுடன் அந்த ஜோதிடருக்கு எப்படித் தெரிந்தது?
அவருக்கு மட்டுமல்ல ஜோதிட விதிகளைத் தெரிந்து
வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் அது புலப்படும்

இன்றைய பாடத்தில், கோள்களுக்கு உரிய வீடுகளைப்
பற்றியும் (Houses of Planets) மற்ற வீடுகளில் இருக்கும்
போது அவைகளுக்கு உள்ள சக்தியைப் (Power) பற்றியும்
உங்களுக்கு அட்டவணையாக்கித் தந்துள்ளேன்

நான் படிக்கும்போது, இப்படிக் கணினி, அட்டவணை தயாரிக்க
MS office software எல்லாம் கிடையாது.

எழுத்துவடிவில் ஓட்டமாக இருக்கும். படிப்பவர்கள்தான்
தங்கள் புரிந்து கொள்ளும் தன்மைக்கேற்ப பிரித்துப் படித்துக்
கொள்ள வேண்டும்!

--------------------------------------------------------------






----------------------------------------------------------
இன்றைக்கு இவ்வளவு போதும்!
தொடர்ந்து ஏழு பதிவுகள் பதிந்து விட்டேன்.
நான்கு தினங்கள் வகுப்பிற்கு விடுமுறை.

நடத்தியுள்ள பாடங்களையெல்லாம் முடிந்தவரை (?)
மனனம் செய்துவையுங்கள்

மீண்டும் 5.3.2007 திங்கட்கிழமையன்று சந்திப்போம்

(தொடரும்)
--------------------------------------------------------

எனக்கு இன்னொரு வலைப்பதிவு இருக்கிறது
கண்மணிகளா! அதில் கவியரசரைப் பற்றிய
தொடர் எழுதிக் கொண்டிருக்கிறேன். அந்த
வகுப்பையும் கவனிக்க வேண்டாமா?
அந்த வகுப்பிற்கு தொடர்பு கொள்ள இங்கே சொடுக்கவும்!