மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.12.10

Astrology: யாரடி நீ மோகினி? பகுதி இரண்டு!

------------------------------------------------------------------------------------
Astrology: யாரடி நீ மோகினி? பகுதி இரண்டு!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டிருக்கும் தொழில் நுட்பம், மனிதனின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டுவிட்டது.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னால், தொலைபேசி, அலைபேசியாக மாறி பையில் வந்து அமர்ந்து கொள்ளும் என்று யாரும் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை.

கணினி, முதல் காதலியாக வந்து நம்மைக் கட்டி அனைத்துக் கொள்வாள் என்று யாருக்கும் தெரியாமல் இருந்தது.

இணையம் என்ற மாயப்பிசாசு, இந்த உலகத்தை ஒரு குடையின் கீழ் சுருக்கப் போகிறது, அல்லது அமுக்கப் போகிறது என்பதும் யாருக்கும் எட்டாமல் இருந்தது.

வெளியூர் காசோலைகளை வங்கியில் கட்டினால், அது ஊர் சுற்றிவிட்டு வந்து அது நம் கணக்கில் இறங்குவதற்கு 15 நாட்கள் ஆகும் என்ற நிலைமை மாறி, உலகின் எந்தப் பகுதியில் பணம் கட்டினாலும் உங்கள் வங்கிக் கணக்கில் அடுத்த 10 நிமிடங்களிலே (அதிகபட்சம்) வரவாகிவிடும் அதிசயத்தை இன்று நாம் கண்டு கொண்டிருக்கிறோம்.

பேருந்து, இரயில், விமான பயணச் சீட்டுக்களை வீட்டில் இருந்தவாறே முன் பதிவு செய்யும் வசதி வந்து விட்டது.

திரைக்கு  வந்து சில மாதங்களே ஆன புதுப்படங்கள் அனைத்தையும், வீட்டின் வரவேற்பறையில் இருந்து பார்க்கும் வசதி வந்து விட்டது.

தொழில் நுட்பம் அனைத்தையும் சாதித்துக் காட்டிவிட்டது. மேலும் பல வசதிகளை நம் வீட்டிற்குக் கொண்டு வர இருக்கிறது.

எல்லா விளைவுகளுக்கும் சமமான எதிர்விளைவு இருக்கும் என்று நியூட்டன் சொல்லிவிட்டுப் போனதைப்போல, இந்த தொழில் நுட்ப வளர்ச்சியால் பல எதிர் விளைவுகளும் உண்டாகியிருக்கின்றன. அவற்றை உங்கள் சிந்தனைக்கு விட்டு விடுகிறேன். சிந்தித்துப் பாருங்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++
இன்று மனிதனுக்கு மூன்று முக்கியமான பிரச்சினைகள்.

1. தேவைகள் அதிகமாகிவிட்டன. பணம் பற்றாக்குறை.

அனைவரும் பணத் தேடலில் ஈடுபட்டுள்ளார்கள். இல்லாதவனும் தேடிக்கொண்டிருக்கிறான். இருப்பவனும் தேடிக்கொண்டிருக்கிறான். இருப்பவன், வாழ்க்கை இன்னும் வளமாக இருக்க வேண்டும் என்று தேடிக் கொண்டிருக்கிறான்.

வாழ்க்கை எப்போது வளமாகும்?

அதற்கு அளவில்லை. நங்கநல்லூரில் வீடு இருப்பவன். தி. நகரில் வீடு வாங்குவதற்காகத் தேடிக்கொண்டிருக்கிறான்.

வீடு இல்லாதவன், குடும்பத்தை இங்கே தவிக்க விட்டு விட்டு, அரபு நாடுகளுக்குச் சென்று பணத்தைத் தேடிக் கொண்டிருக்கிறான்.
அல்லது வெளி மாநிலத்திற்குச் சென்று தேடிக்கொண்டிருக்கிறான்.

நகரப் பேருந்துகளில் நசிங்கிப் போனவன், ஒரு இரு சக்கர வாகனம் கிடைக்காதா என்று தேடிக் கொண்டிருக் கிறான். யமாஹா  மோட்டர்
சைக்கிள் வைத்திருப்பவன், மாருதி ஆல்ட்டோ கார் வாங்கும்
கனவில் தேடிக் கொண்டிருக்கிறான்.

நான்கு ஏக்கர் நிலம் வைத்து உழுது கொண்டிருக்கும் விவசாயி அதைப் பத்து ஏக்கராக மாற்றுவதற்கு ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருக்கிறான்.

பெட்டிக்கடை வைத்து, வில்ஸ் சிகரெட்டையும், மாணிக்சந்த்தையும் விற்று வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப் பவன், ஒரு சின்ன மளிகைக் கடை வைக்கும் கனவில் மிதந்து கொண்டிருக்கிறான்.

தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவன், பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்காதா என்னும் ஏக்கத்தில் இருக்கிறான்.

இவற்றைத் தவிர வேறு தேடல்களும் இருக்கின்றன. திருமணத்திற்குத் தயாராக இருக்கும் இளைஞன் கிடைக்கும் கிராமத்துக் குயிலை மணந்து கொள்ளாமல், நகரத்து மயில்களுக்காக தவித்துக் கொண்டிருக்கிறான். கட்டிங் சரக்கில் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருப்பவன், இறங்காமல், நிரந்தமாக இருக்கக் கூடிய போதையைத் தேடிக்கொண்டிருக்கிறான். தொலைக் காட்சி சீரியல்களின் மயக்கத்தில் இருக்கும் குடும்பப் பெண்கள், வீட்டு வேலைகள் இல்லாத வாழ்க்கையைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

இது தவிர வக்கிர மனம் படைத்த பலர் இருக்கிறார்கள். அவர்களின் தேடலைப் பட்டியல் இடமுடியாது. பதிவிலும் எழுத முடியாது.

2. அடுத்த பிரச்சினை நேரமின்மை: யாருக்கும் எதற்கும் இன்று நேரமில்லை. வாரம் ஒரு நாள் கூட ஒரு மணி நேரம் ஒதுக்கிக் கோவிலுக்குச் சென்று வர முடியாதவர்கள் இருக்கிறார்கள். இறைவன் வீட்டிற்கே வந்து தங்களை ஆசீர்வதிக்க மாட்டானா? என்னும் நிலைமையில் பலர் இருக்கிறார்கள்.

அம்பத்தூரில் இருந்து, தினமும் பேருந்தில் தாமபரத்தில் உள்ள அலுவலகத்திற்கு வேலைக்குச் செல்ல வேண்டும். அல்லது தொழிலுக்குச் செல்ல வேண்டும். அரக்கோணத்தில் ரயிலில் ஏறித் தினமும் சென்னைக்கு வந்து வேலை செய்துவிட்டுத் திரும்ப வேண்டும் என்பது போன்ற நிலையில் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏது நேரம்? போரூரில் வீடு. தியாகராய நகரில் துணிக்கடை. காரில் வந்துவிட்டுப்போனாலே தினமும் காலையிலும், முன்னிரவிலும் சேர்த்து 3 மணி நேரம் பயணிப்பதில் காணாமல் போகும்.

3. அதற்கு அடுத்த பிரச்சினை, நோய் நொடிகள்: உரம், பூச்சி மருந்து போன்ற ரசாயணக் கலவையில் வளர்ந்த காய்கறிகள், பழங்கள், கலப்படம் மற்றும் பதுக்கலில் முங்கி எழுந்த மளிகைச் சாமான்கள், தெருவோரப் பலகாரக் கடைகள், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள் என்று சக மனிதர்களின் வாழ்க்கை அவலமாகி, இன்று நோய்கள் பலவிதமாக, பூதாகரமாகப் பெருகிக் கொண்டி ருக்கின்றன. முப்பது வயதிலேயே மனிதன் ரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி, நீரழிவு என்று பல விதமான நோய்களுக்கு ஆளாகிவிடும் அபாயம் உள்ளது. பெருகி வரும் மருத்துவ மனைகளும், அங்கே அலை மோதும் கூட்டமும் அதற்குச் சான்று.

இதற்கெல்லாம் என்ன காரணம்?

ஆசைதான் காரணம். இருப்பதை வைத்து மகிழ்வோடு இருப்போம் என்ற மனம் இல்லாததுதான் காரணம்

வருகிறபோது வரட்டும். காத்திருப்போம் என்ற எண்ணம் இல்லாததுதான் காரணம்.

மொத்தத்தில் ஞானம் இல்லாத்துதான் காரணம்.

வாரியார் சுவாமிகள் சொல்லுவார்: “உருவத்தால் உயர்ந்த மரங்களே ஆயினும், பருவத்தால் அன்றி பழுக்காது”

அவர் என்ன ஓரறிவு படைத்த மரங்களுக்கா அதைச் சொன்னார்?

உங்களுக்கும் எனக்கும்தான் அதைச் சொன்னார்!

அதைக் கேட்போமா? மாட்டோம்.

நல்லதைக் கேட்டால்தான் எந்தப் பிரச்சினையும் இல்லையே!

கேட்க மாட்டோம்.

என் தந்தையார் அடிக்கடி இப்படிச் சொல்வார்: “கட்டிக் கொடுத்த சோறும், சொல்லிக் கொடுத்த சொல்லும் எத்தனை நாளைக்கு வரும்? அகவே நீயே தெரிந்து கொள்ளடா”

நாமே எப்போது தெறிந்து கொள்வோம்? அதுதான் பட்டறிவு. அடிபட்டு அறியும் அறிவு. உங்கள் மொழியில் சொன்னால் அனுபவம்.

சரி, அனுபவம் எப்போது கிடைக்கும்?

அதைக் கவியரசர் கண்ணதாசன் அழகாக சொல்லிவைத்து விட்டு போயுள்ளார்: “அனுபவம் என்பது சீப்பு.  பலருக்கும் அது தலை வழுக்கையான பிறகே கிடைக்கும்”

என்ன ஒரு அற்புதமான வரி பாருங்கள்!

என்னதான் வழி?

காந்தி வழியில் நடந்து செல்லுங்கள்.

எந்த காந்தி, ராகுல் காந்தியா?

இல்லை. மகாத்மா காந்தி?

சுதந்திரம்தான் வாங்கி விட்டோமே? இன்னும் எதற்காக அவர் வழி?

மனதிற்குச் சுதந்திரம் வேண்டாமா?

“சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு?
தென்றலே உனக்கெது சொந்தவீடு?”


என்று கவியரசர் பாடிவிட்டுப் போனாரே. அந்த சுதந்திரம். பறவையைப் போன்ற சுதந்திரம்.

எந்தப் பறவையாவது கவலைப் பட்டுக் கண்ணீர் விடுகிறதா? ரேசன் கார்டை அல்லது அடையாள அட்டையைத் தூக்கிக் கொண்டு அலைகிறதா?

பாதி கடித்த பழத்தை, அடுத்த வேளைக்கு ஆகும் என்று கொண்டுபோய் கூட்டில் பதுக்கி வைக்கிறதா? வெய்யில் காலத்தில், கிடைக்கும் தானியங்களை அள்ளிக்கொண்டு போய் மழைகாலத்திற்கு ஆகும் என்று சேமித்து வைக்கிறதா?

குயில், புறாவின் அழகில் மயங்கி, அதைக் காதலித்து, அதன் பின்னால் அலைகிறதா? தெருவில் அடிபட்டு அழுகிக் கிடக்கும் நாயின் மாமிசத்தை உண்ணும் காக்கை அல்லது கழுகைப் பார்த்து, ஒரு சிட்டுக் குருவியோ அல்லது கிளியோ தானும் அங்கே சென்று அதை உண்கிறதா?

இல்லை. இல்லவே இல்லை!

கடவுள் படைத்தவற்றில், மனிதனைத் தவிர, மற்றவையெல்லாம், படைத்தவன் படைத்தபடியே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. மனிதன் மட்டும் மாறிவிட்டான். இறைவனை மறந்து தன்னிச்சையாக நடந்து கொண்டிருக் கிறான். எல்லாத் துன்பங்களுக்கும் அதுதான் காரணம்.

இறைவன் இருக்கின்றான், நம்மைத் தண்டிப்பான் என்னும் உணர்வு உள்ள மனிதன் எவனும் தவறு செய்ய மாட்டான். தர்மத்தை மீற மாட்டான். நியாயம் தவறிய, பேராசை மிக்க தேடலில் ஈடு பட மாட்டான்.

என்னதான் தீர்வு?

எளிமையாக இருங்கள். வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்!

எப்படி எளிமையாக இருப்பது?

நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையைப் பாருங்கள்.

அந்தக் கருமமெல்லாம் எப்படித் தெரியும்? நீங்களே சொல்லுங்கள்.

சரி சொல்கிறேன். ஆதிகாலத்தில் எப்படிப் படித்தார்கள் தெரியுமா? ஏட்டுப் பள்ளிக்கூடங்கள் என்று இருந்தன. திண்ணைப் பள்ளிக்கூடங்கள் என்று இருந்தன. குருகுலங்கள் என்று இருந்தன. அவற்றில்தான் படித்தார்கள்.

(தொடரும்)
---------------------------------------------
நேற்றையப் பதிவில் படம் ஒன்றைப் போட்டு, அதில் உள்ளது என்ன என்று கேட்டிருந்தேன். ஒருவரைத் தவிர யாரும் சரியான பதிலைச் சொல்லவில்லை. சொன்னவரும் பாதிதான் சொன்னார். முழுமையான பதிலைச் சொல்லவில்லை.

இப்போது நான் சொல்கிறேன். அதுதான் ஆதிகாலத்து எழுதுகோல். உங்கள் மொழியில் சொன்னால் நம் முன்னோர்கள் உபயோகித்த பேனா.

மை இல்லாத பேனா. பாதியில் அடைத்துக் கொண்டு எழுத முடக்கடி செய்யாத பேனா.

அதன் பெயர் எழுத்தாணி.

பனை ஓலைகளில் எழுதுவதற்கு அதைப் பயன் படுத்துவார்கள். எழுதுவதற்கு உரிய கூறான பகுதியும் ஓலைகளைச் சீராக்கி ஒரே அளவில் நறுக்கி எடுப்பதற்கான கத்தியும் சேர்ந்து இருக்கும். பிடித்து எழுதுவதற்கு வசதியாக கைப்பிடியும் இருக்கும்.

எங்கள் பகுதிகளில் உள்ள வீடுகளில் பெரும்பாலும் அது இருக்கும். பாதுகாத்து வைத்திருப்பார்கள்.

எழுத்தாணிகளின் கைப் பிடிகள். இரும்பில் இருக்கும், மரத்தில் இருக்கும். ஐவரியில் இருக்கும். படத்தில் உள்ளது ஐவரியில் செய்யப்பெற்றதாகும். 150 ஆண்டுகள் பழமையானது. என் பாட்டனார் எனக்குக் கொடுத்தது. அதன் அருமை தெரிந்து அதைப் போற்றி வைத்திருக்கிறேன்.

ஐவரி என்றால் என்ன வென்று தெரியுமல்லவா?

தெரியாதவர்களுக்கு அடுத்துக்கொடுத்துள்ளேன்:

The hard, white, opaque, fine-grained substance constituting the tusks of the elephant. It is a variety of dentin, characterized by the minuteness and close arrangement of the tubes, as also by their double flexure. It is used in manufacturing articles of ornament or utility.

அதாவது யானைத் தந்தங்களில் செய்யப்பெற்றது. மிகவும் விலை உயர்ந்தது. இப்போது கிடைக்காது. யாரும் செய்யவும் முடியாது. யானைத் தந்தங்களை உபயோகிப்பது. அனைத்து நாடுகளிலும் தடை செய்யப்பெற்றுள்ளது.
அவற்றில் இது பொன்ற அரிய பொருட்களை உருவாக்கும் கலைஞர்களும் இன்று இல்லை!

அந்தக் காலத்தில், இலங்கையில் நிறைய கிடைக்கும். என் பாட்டனாருக்கு, கதிர்காமத்தில் தோட்டங்கள் இருந்தன. அடிக்கடி, சென்றுவருவார். அங்கே செல்பவர்கள் எங்கள் ஊரின் அருகில் தொண்டி என்னும் படகுத்துறை முகத்தில் இருந்து படகில் செல்வார்கள். எங்கள் ஊரில் இருந்து தொண்டி 32 கிலோ மீட்டர்கள் தூரம். மாட்டு வண்டிப் பயணம். அங்கிருந்து கொழும்பில் உள்ள தலைமன்னார் என்னும் படகுத்துறை 40 கடல் கிலோ மீட்டர்கள். சாதா படகுகளில் பயணம் பாஸ்போர்ட், விசா என்று எந்த கெடுபிடியும் இல்லாத காலம். ஆங்கில அரசின் ஆதிக்கத்தில் இலங்கையும் இருந்த காலம் அது.

சென்று, திரும்பி வரும்போது, இது போன்ற கலைப் பொருட்களையும் வாங்கி வந்திருக்கிறார். அவரைப் பற்றி பல சுவாரசியமான செய்திகள் உள்ளன. அவற்றைப் பிறகு ஒரு நாள் நேரம் கிடைக்கும்போது, எழுதுகிறேன்

அந்தக் காலத்தில் அத்தனை இலக்கியங்களும், எழுத்துக்களும் ஓலைச் சுவடிகளில்தான் இருந்தன. ஜோதிட நூல்களும், ஜாதகங்களும் ஓலைச் சுவடிகளில்தான் இருந்தன.

வீட்டில் உறவினர்களின் முகவரிகள், குழந்தைகளின் ஜாதகங்கள், சொத்து விவரங்கள் என்று அனைத்தையும் ஓலைகளில்தான் எழுதி வைப்பார்கள்.

பேப்பர், பேனாவெல்லாம் அப்போது கிடையாது. எழுதி வைக்கப்பெற்றவைகள் எல்லாம் காலம் காலமாக் அழியாமல், கரையான்கள் அரித்து விடாமல் பாதுகாத்து வைத்திருந்தார்கள்.

அச்சுத் தொழில் வந்த பிறகுதான் நிலைமை தலை கீழாக மாறியது.

இன்றையத் தலைமுறையினர் யாருக்கும் ஓலையில் எழுதும் முறை தெரியாது. தெரிந்து கொள்ளவும் விரும்ப மாட்டார்கள்.

இன்னும் ஒரு ஐம்பது ஆண்டுகள் கழிந்தால், பேப்பர், பேனா, பென்சில் எல்லாம் இருக்காது. நூல்களும் இருக்காது. சர்வமும் கணினி மயம் ஆகிவிடும். அப்போது இருக்கும் தலை முறையினர், Paper, Pencils, Pens, Books ஆகியவற்றை மியூசியங்களில்தான் பார்க்க நேரிடும்.

பார்த்துவிட்டு இப்படிச் சொன்னாலும் சொல்லலாம்: ”Poor People, there was no right technology in those days!”

அன்புடன்,
வாத்தியார்







---------------------------------------------------------------------------------------


வாழ்க வளமுடன்!

28 comments:

  1. எழுத்தாணி பற்றி மிகவும் ஆச்சர்யமான தகவல்கள்! இப்பொழுது "எழுத்தாணி" மாதிரி பொருட்கள் பள்ளிக்கூட பயன் பாட்டில் இருந்தால் ஆசிரியர்கள் உயிருக்கு கேரண்டி கிடையாது. அந்தக்கால மாணவர்கள் மிகவும் நல்லவர்கள்!
    - ஜாவா

    ReplyDelete
  2. இது வரை அரியாத தகவல்,
    நன்றி ஐயா.

    ReplyDelete
  3. அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    //////இறைவன் இருக்கின்றான், நம்மைத் தண்டிப்பான் என்னும் உணர்வு உள்ள மனிதன் எவனும் தவறு செய்ய மாட்டான். தர்மத்தை மீற மாட்டான். நியாயம் தவறிய, பேராசை மிக்க தேடலில் ஈடு பட மாட்டான்.///////
    பொன்னெழுத்துக்களால் போரிக்கவேண்டிய வரிகள்.
    நன்றி!
    தங்களன்புள்ள
    வ.தட்சணாமூர்த்தி
    2010-12-09

    ReplyDelete
  4. //இறைவன் இருக்கின்றான், நம்மைத் தண்டிப்பான் என்னும் உணர்வு உள்ள மனிதன் எவனும் தவறு செய்ய மாட்டான். தர்மத்தை மீற மாட்டான். நியாயம் தவறிய, பேராசை மிக்க தேடலில் ஈடு பட மாட்டான்.//

    அருமையான கருத்து..மற்றும்..

    எழுத்தாணி பற்றி அரிய தகவல்..

    நீண்ட நாட்களாகிறது உங்கள் எழுத்தில் இறை நடை கண்டு..

    வாத்தியாருக்கு வணக்கம்..மற்றும் நன்றிகள் .

    ReplyDelete
  5. Dear Sir

    Arumayana Manavazha katturai...
    Asaiyin Vegam than Thunbathin Varaverpu...

    Thanks Sir..

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  6. எழுத்தாணி பற்றி முன்பே அறிந்திருந்தாலும் படம் இன்றுதான் பார்க்கிறேன்.

    எழுதிய அனைத்துமே நிதர்சனமான உண்மை.

    ReplyDelete
  7. தொலைக் காட்சி சீரியல்களின் மயக்கத்தில் இருக்கும் குடும்பப் பெண்கள், வீட்டு வேலைகள் இல்லாத வாழ்க்கையைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.//

    ஹா ஹா

    ReplyDelete
  8. ஆசிரியருக்கு வணக்கம்.
    அய்யா,
    வாத்தியாரையாவை ஜோதிடக்களஞ்ஜியம் என்றுதான் எண்ணீயிருந்தோம்.
    தாங்கள் தகவல் களஞ்ஜியமாகவும் கலைப்பொக்கிஷங்களின் இருப்பிடமாகவும்
    திகழ்வது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.
    அன்புடன், அரசு.

    ReplyDelete
  9. “உருவத்தால் உயர்ந்த மரங்களே ஆயினும், பருவத்தால் அன்றி பழுக்காது”


    “உருவத்தால் உயர்ந்த மரங்களே ஆயினும், பருவத்தால் அன்றி பழுக்காது”


    “அனுபவம் என்பது சீப்பு. பலருக்கும் அது தலை வழுக்கையான பிறகே கிடைக்கும்”

    இது எல்லாமே நன்றாகவும் உள்ளது சிந்திக்கவும் வைக்கிறது ,

    நல்ல பதிவு சார் .

    ReplyDelete
  10. சார் நீங்கள் 3 வது படம் கொடுத்திருந்தால் கண்டுபுடிக்க எளிதாக இருந்து இருக்கும். முதல் படத்தை கொடுத்து confuse பண்ணிடீக.

    ReplyDelete
  11. //////Jawahar said...
    எழுத்தாணி பற்றி மிகவும் ஆச்சர்யமான தகவல்கள்! இப்பொழுது "எழுத்தாணி" மாதிரி பொருட்கள் பள்ளிக்கூட பயன் பாட்டில் இருந்தால் ஆசிரியர்கள் உயிருக்கு கேரண்டி கிடையாது. அந்தக்கால மாணவர்கள் மிகவும் நல்லவர்கள்!
    - ஜாவா/////

    மாணவர்கள் மட்டுமல்ல. அந்தக்காலத்து ஆசிரியர்களும், தொழில் தர்மத்துடன் உழைத்தார்கள். ஒருவித தியாக உணர்வுடன் பாடங்களை அருமையாகப் போதித்தார்கள்.

    ReplyDelete
  12. /////Vinoth said...
    இது வரை அறியாத தகவல்,
    நன்றி ஐயா./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. /////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
    //////இறைவன் இருக்கின்றான், நம்மைத் தண்டிப்பான் என்னும் உணர்வு உள்ள மனிதன் எவனும் தவறு செய்ய மாட்டான். தர்மத்தை மீற மாட்டான். நியாயம் தவறிய, பேராசை மிக்க தேடலில் ஈடு பட மாட்டான்.///////
    பொன்னெழுத்துக்களால் போரிக்கவேண்டிய வரிகள்.
    நன்றி!
    தங்களன்புள்ள
    வ.தட்சணாமூர்த்தி/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி தட்சணாமூர்த்தி!

    ReplyDelete
  14. /////Govindasamy said...
    //இறைவன் இருக்கின்றான், நம்மைத் தண்டிப்பான் என்னும் உணர்வு உள்ள மனிதன் எவனும் தவறு செய்ய மாட்டான். தர்மத்தை மீற மாட்டான். நியாயம் தவறிய, பேராசை மிக்க தேடலில் ஈடு பட மாட்டான்.//
    அருமையான கருத்து..மற்றும்..
    எழுத்தாணி பற்றி அரிய தகவல்..
    நீண்ட நாட்களாகிறது உங்கள் எழுத்தில் இறை நடை கண்டு..
    வாத்தியாருக்கு வணக்கம்..மற்றும் நன்றிகள்/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. /////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Arumayana Manavazha katturai...
    Asaiyin Vegam than Thunbathin Varaverpu.
    Thanks Sir..
    Loving Student
    Arulkumar Rajaraman////

    நல்லது. நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  16. /////Uma said...
    எழுத்தாணி பற்றி முன்பே அறிந்திருந்தாலும் படம் இன்றுதான் பார்க்கிறேன்.
    எழுதிய அனைத்துமே நிதர்சனமான உண்மை./////

    நேற்றுவந்த பின்னூட்டங்களை வைத்துத் தெரிகிறது. 90% பேர்கள், அதை இன்றுதான் பார்ப்பார்கள்

    ReplyDelete
  17. /////Uma said...
    தொலைக் காட்சி சீரியல்களின் மயக்கத்தில் இருக்கும் குடும்பப் பெண்கள், வீட்டு வேலைகள் இல்லாத வாழ்க்கையைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.//
    ஹா ஹா/////

    உங்கள் ஹா ஹாக் களுக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  18. ///ARASU said...
    ஆசிரியருக்கு வணக்கம்.
    அய்யா,
    வாத்தியாரையாவை ஜோதிடக்களஞ்ஜியம் என்றுதான் எண்ணீயிருந்தோம்.
    தாங்கள் தகவல் களஞ்சியமாகவும் கலைப்பொக்கிஷங்களின் இருப்பிடமாகவும்
    திகழ்வது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.
    அன்புடன், அரசு.////

    உங்களின் பாரட்டிற்கு நன்றி நண்பரே! இது போன்ற பாராட்டுக்கள்தான் எழுதுபவர்களுக்கு ஊக்க மருந்து!

    ReplyDelete
  19. ////Soundarraju said...
    “உருவத்தால் உயர்ந்த மரங்களே ஆயினும், பருவத்தால் அன்றி பழுக்காது”
    “அனுபவம் என்பது சீப்பு. பலருக்கும் அது தலை வழுக்கையான பிறகே கிடைக்கும்”
    இது எல்லாமே நன்றாகவும் உள்ளது சிந்திக்கவும் வைக்கிறது ,
    நல்ல பதிவு சார்//////

    எல்லாம் உங்களைப் போன்ற மாணவர்களுக்காகத்தான் சுந்தரராஜூ!

    ReplyDelete
  20. /////ilayaraja said...
    சார் நீங்கள் 3 வது படம் கொடுத்திருந்தால் கண்டுபிடிக்க எளிதாக இருந்து இருக்கும். முதல் படத்தை கொடுத்து confuse பண்ணிடீக.////

    எல்லாவற்றையுமே எளிதாக்கிவிட்டால் சுவை இருக்காது!புதிர்களை அப்படித்தான் கொடுக்க வேண்டும்!

    ReplyDelete
  21. சோம்பல், ஆதலால் தமிழில் எழுத‌வில்லை.

    உண்மை சொல்வதற்கு மண்ணிக்க‌வும்.

    இனி முதல் தமிழில் எழுதுவேன் அய்யா.

    இன்றைய தலைப்பு நன்றாக இருந்தது.

    நன்றி.

    ReplyDelete
  22. உள்ளேன் ஐயா!

    ஐயா தாங்கள் கூறுவது அனைத்தும் உண்மைதான் ஆனால் இன்றைய உலகில் போதும் என்ற மனதுடன் வாழ்வது என்பது சாத்விக படுமா ?

    தாங்கள் கூறுவது மாதிரியாக உள்ளதை கொண்டு மன நிறையோடு வாழ்வோம் அல்லது எனக்கு ஒன்றுமே வேண்டாம் என நான் வாழ்தாலும் சுற்றி உள்ளவர்கள் (உறவினர்கள் ) நம்மை எங்கு ஐயா வாழவிடுகின்றனர்.

    தாங்கள் கூறுவது அனைத்தும் துறவறத்தில் உள்ளவருக்குதான் சால பொருந்தும் ஒழிய எம்மை
    போன்றோருக்கு அல்ல.

    ஒங்களுக்கு ஒன்றை கூற விருப்புகின்றேன் திருமண வயதை ஒட்டியும் அல்லது தாண்டியும் தான் கற்புடன் உள்ளேன் என்று ஒரு பெண் அல்ல ஆண் கூறினால் அவனுக்கு பெயர் ஒன்றுக்கும் ஆளாகதவன் .

    இன்னைய நிலைமை இப்படி போகும்பொழுது தாங்கள் கூறுவது எப்படி ஐயா ?

    ReplyDelete
  23. //இறைவன் இருக்கின்றான், நம்மைத் தண்டிப்பான் என்னும் உணர்வு உள்ள மனிதன் எவனும் தவறு செய்ய மாட்டான். தர்மத்தை மீற மாட்டான். நியாயம் தவறிய, பேராசை மிக்க தேடலில் ஈடு பட மாட்டான்.//

    100% உண்மை அய்யா இது கலிகாலம் என்ன செய்வது?

    ReplyDelete
  24. இதானா அது..இன்றுதான் இதையே பார்க்கின்றேன்..ஃபோட்டோவிற்கு நன்றி ஐயா.

    --செங்கோவி

    ReplyDelete
  25. நனறீ முதல் முதாலாக பார்கிறேன்.யானை தந்ததில் எழுத்தாணீ ,மனிதன் ஆசை பெரியது.

    ReplyDelete
  26. Dear Sir,
    I have seen ivory god idols, and small toys in ivory, Eluthani i am happy to see this in ivory , new information for me

    ReplyDelete
  27. Respected Sir,

    Your writtings are so interesting. Thanks a lot. One more thing that
    I was expected eagerly about the answer of perivious article.When we believe god,Why should we have faith on horoscope?

    Please kindly answer. I am awaiting eagerly.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com