Devotional விநாயகப்பெருமான் ஆறுபடை வீடுகள்
முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடுகள் இருப்பதுபோல, விநாயகப்பெருமானுக்கும் ஆறுபடை வீடுகள் அமைந்திருக்கின்றன.
திருநாரையூர் கோவிலில் வீற்றிருக்கும் ‘பொல்லாப் பிள்ளையார்’,
திருமுதுகுன்றம் எனப்படும் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள ‘ஆழத்து விநாயகர்’,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வீற்றிருக்கும் ‘சித்தி விநாயகர்’,
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்குள் இருக்கும் ‘கள்ளவாரண பிள்ளையார்’,
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள ‘அல்லல் தீர்த்த விநாயகர்’,
காசி எனப்படும் வாரணாசியில் உள்ள ‘துண்டிராஜகணபதி’.
இந்த 6 ஆலயங்களும்தான், விநாயகப்பெருமானுக்குரிய ஆறுபடை வீடுகளாகும்.
படித்தேன்’ பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
ReplyDeleteகபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.
ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
வாத்தியார் அவர்களுக்கு வணக்கம்.
ReplyDeleteநீண்ட நாட்கள் கழிந்து கருத்தை பதிவு செய்வதில் மகிழ்ச்சி. பிள்ளையாருக்கும் ஆறு படை வீடுகள் உண்டு என்று முதன் முறையாக அறிந்தேன். நன்றிகள் பல. அந்த படை வீடுகளில் இதைப் பற்றி விவரங்களை மக்கள் அறியும்படி விளம்பரப் படுத்தலாம். இணையத்தில் கிடைத்த மேலதிகத் தகவல்கள் இதோ!
காசிக்குச் சென்று துண்டி பிள்ளையாரை வணங்க முடியாதவர்கள் பிள்ளையார்பட்டி கணபதியை வணங்கி அதே அருளைப்பெறலாம் என்று ஆன்றோர்கள் சொல்கிறார்கள்.
திருநாரையூரில் உள்ள விநாயகரின் பெயர் பொல்லாப் பிள்ளையாரில்லை.
உளி கொண்டு செதுக்கப்படாதவர் என்பதால், பொள்ளா பிள்ளையார் என்று போற்றி வணங்கப் பெறுகிறார்.
நன்றி!
இரா.வெங்கடேசன்.