மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 391 - 400. Show all posts
Showing posts with label Lessons 391 - 400. Show all posts

7.10.10

கேட்பதில் உங்களுக்குத் தெரிந்த டெக்னிக் எனக்குத் தெரியாதா?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கேட்பதில் உங்களுக்குத் தெரிந்த டெக்னிக் எனக்குத் தெரியாதா?

ஜோதிடம் பெரிய கடல். அதை முழுமையாக அறிந்தவர்கள் யாருமில்லை. சரவளி, காலப்பிரகாசிகா, பலதீபிகா, கேரள மணி கண்ட ஜோதிடம், குமாரசுவாமீயம், புலிப்பாணி ஜோதிடம் என்று எண்ணற்ற ஜோதிட நூல்கள் உள்ளன.

அத்தனை நூல்களையும் தேடிப்பிடித்துப் படித்துத் தெளிவது அல்லது தேறுவது என்பது சிரமமான செயல். அப்படியே தேடிப்பிடித்துப் படித்தாலும், படித்த அனைத்துமே மனதில் முழுமையாகத் தங்குமா என்பது கேள்விக்குரிய விஷயம்.

திரும்பத் திரும்ப படித்து முடித்து மனதில் வைப்பதற்குள் காலம் முடிந்துவிடும். சனீஷ்வரன் கால் நோட்டிஸ் அனுப்பிவிடுவான். அவனிடம் வாய்தா வாங்க முடியாது. லஞ்சம் கொடுத்து அவனைச் சரிகட்டவும் முடியாது!

மருத்துவர்களில், பல் மருத்துவர், கண் மருத்துவர், நரம்பியல் மருத்துவர், இதயநோய் மருத்துவர், சிறுநீரக மருத்துவர், புற்று நோய் மருத்துவர், மகப்பேறு மருத்துவர், குழந்தைகளுக்கான மருத்துவர், அறுவை சிகிச்சை மருத்துவர் என்று பல துறைகளில் சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

சளி, காய்ச்சல், வயிற்றுவலி, மூட்டு வலி போன்ற சில்லரை உபாதைகளுக்கென்று பொது மருத்துவர்களும் உள்ளார்கள்.(General Physician)

அதுபோல ஜோதிடத்தில், படித்ததுடன், தங்கள் அனுபவத்தால், சில பிரிவுகளில் சிறப்பாகப் பணியாற்றும்  ஜோதிடர்கள் பலர் உள்ளார்கள்.

தனிமனிதக் கஷ்டங்களை ஆராய்ந்து, என்ன காரணம்? எப்போது அது நிவர்த்தியாகும் என்பதைச் சொல்வதற்குத் தனித் திறமை வேண்டும். திருமணம், குழந்தைப்பேறு, நோய்களுக்கான தீர்வுகள் என்பது போன்ற விஷயங்களில் தனித் திறமை காட்டுபவர்கள் இருக்கிறார்கள். ஆயுளைக் கணித்து, இந்தத் தேதிவரைதான் ஜாதகன் உயிருடன் இருப்பான் என்பதைச் சொல்லக்கூடியவர்கள் இருக்கிறார்கள்.

மனநோய்கள், மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகளின் ஜாதகத்தைப் பார்த்துப் பலன் சொல்வதற்கு அசாத்தியத் திறமை வேண்டும்.

முற்காலத்தில் அத்தனை சிகிச்சைகளையும் மேற்கொண்ட ஒரு அதிசய மருத்துவர் இருந்தார். அவர் ஒருவரே அனைத்துவிதமான சிகிச்சைகளிலும் கரைகண்டவர். மாமேதை. தன்னுடைய 52 வயதில் அவர் இறந்துவிட்டார்

அவர் இறந்தது அன்றைய மருத்து உலகிற்கு பேரிடியாக இருந்தது அவருடைய காலம் 1882 முதல் 1934 வரை தஞ்சையில் பிறந்தவர். லண்டனில் மருத்துவம் கற்றவர். இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றியவர். மருத்துவமனையின் நுழைவாயிலில், அவருடைய சிலை உள்ளது. அடுத்தமுறை சென்னை சென்றால் சிலையைப் பார்த்துவிட்டு வாருங்கள். அவர் ஒரு அபூர்வப் பிறவி. அவரைப் பற்றி நெஞ்சை நெகிழவைக்கும் உண்மைக் கதை ஒன்று உள்ளது. அதைப் பின்னால் எழுதுகிறேன்

அவருடைய பெயர் டாக்டர் எஸ்.ரங்காச்சாரி!

அவரைப்பற்றிய மேலதிகத்தகவல்களுக்கு இங்கே சென்று பாருங்கள். அதற்கான இணையதள முகவரி இது!
http://www.indianetzone.com/24/dr_s_rangachari_physician_madras_presidency.htm

அவரைப்போல ஜோதிட மேதைகளிலும் சில அபூர்வப் பிறவிகள் இருந்தார்கள். அவர்களைப் பற்றியும் பின்னால் எழுதுகிறேன்.

இப்போது சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன். நீங்கள் ஜோதிடரிடம் சென்றால் உங்கள் பிர்ச்சினைகளைச் சொல்லி அதற்குத் தீர்வு கேட்க வேண்டுமே தவிர, எனக்கு என்ன பிரச்சினை? சொல்லுங்கள் பார்க்கலாம் என்றோ - அல்லது என்னுடைய கடந்த காலத்தைக் கூற முடியுமா? எதிர் காலத்தைக் கூற முடியுமா? என்றோ கேட்காதீர்கள். அது முட்டாள்தனமானது. ஏனென்றால் இன்றுள்ள ஜோதிடர்களில் பலர் General Physician மட்டுமே! உங்கள் பிரச்சினைகளைச் சொன்னால், அதை ஆராய்ந்து சொல்லும் வல்லமை இருந்தால் சொல்லுவார். இல்லையென்றால் உங்களை அனுப்பிவிடுவார். அதை மனதில் கொள்ளூங்கள்

ஜோதிடத்தின் முதல் விதி என்ன தெரியுமா? என்ன நடக்கலாம் என்பதைச் ஜோதிடர் சுட்டிக் காட்டலாம். அறுதியிட்டு அதாவது அடித்துச் சொல்லக்கூடாது. அதைச் சொல்வதற்கு அல்லது நடத்திக் காட்டுவதற்கு ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் இறைவன்!

An astrologer only can indicate what is going to take place and he can not certainly say what is going to happen  இந்த வசனத்திற்கு அர்த்தம் புரிகிறதா கண்மணிகளே?
_____________________________________________________________________
”வாத்தி (யார்) எதற்காக இது?”

“நம் வகுப்பறைக் கண்மணிகளில் ஒருவர், வழக்கமாக மற்றவர்கள் கேட்பதைப் போல கேட்காமல், புது டெக்னிக்கில் கேள்வியைக் கேட்டிருந்தார். அதற்காகக்தான் இந்தப் பதிவு!"

"என்ன கேட்டிருந்தார் என்று சொல்லுங்கள்!”

“எனக்கு எப்போது திருமணம் ஆகும்? நான் ஒரு பெண்ணைக் காதலிக்கிறேன். எங்கள் காதல் நிறைவேறுமா? என் திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது, எப்போது எனக்குத் திருமணமாகும்? என்றுதான் எல்லோரும் கேட்பார்கள். அவர் ஒரு பிறப்பு விவரத்தைக் கொடுத்து (That is birth details),  “இந்த ஜாதகருக்கு எப்போது திருமணமாகும் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்” என்று புது டெக்னிக்கில் கேட்டிருந்தார். அதாவது அதைச் சாலஞ்சாக எடுத்துக்கொண்டு, அடித்துப் பிடித்து நான் பதில் சொல்வேன் என்று நினைத்தார் போலும். சவால்களை எல்லாம் எதிர்கொள்ள எனக்கு நேரம் இல்லை. எதிர்கொண்டு பெருமை சேர்க்க வேண்டும் என்ற எண்ணமும் எனக்கில்லை. அவற்றை எல்லாம் என் நண்பன் பழநிஅப்பனிடம் விட்டுவிடுவேன். அவன் பார்த்துக் கொள்வான்”
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உதாரணத்திற்கு ஒரு ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன்!

இது ஒரு பெண்ணின் ஜாதகம்!


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கேள்வி இதுதான்:
1. இந்தப் பெண்ணிற்குக் காதல் திருமணமா? அல்லது பெற்றோர் நிச்சயித்தபடி திருமணமா?
2. திருமண வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்குமா? அல்லது பிரச்சினைகள் நிறைந்ததாக இருக்குமா?

400 பாடங்களை நடத்தியுள்ளேன். அனைத்தையும் படித்துள்ளவர்கள், யோசித்துப் பார்த்துப் பதிலை ஊகித்துக்  கொண்டு, தங்கள் ஊகம் சரிதானா? என்பதை ஸ்க்ரோல் டவுன் செய்து பார்க்கலாம்.

பதில் கீழே உள்ளது!
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V

காதல் திருமணம். பிறகு அது பிணக்கத்தில் முடிந்து இறுதியில் விவாகம் ரத்தாகிவிட்டது. (Love marriage which ended in separation and then in divorce)

1. ஏழாம் அதிபதி குரு நீசம். அத்துடன் எட்டாம் இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டுவிட்டார்.
2. ஆறாம் அதிபதி (number one villain in a horoscope) ஏழில் உட்கார்ந்திருக்கிறார். உடன் ராகுவின் கூட்டணி வேறு!
3. அயன, சயன, போகபாக்கியஸ்தானத்தில் சனி. அத்துடன் அவர் எட்டாம் அதிபதி. சயனம் என்றால் நித்திரை. போக பாக்கியம் என்றால் படுக்கை சுகம். பெண் ஆணுக்குப் படுக்கையில் தரும் சுகம். ஆணால் பெண்ணிற்குப் படுக்கையில் கிடைக்கும் சுகம்
4. திருமணம்  ஆறாம் அதிபதியின் திசையில் நடந்தது. திருமணம் ஊற்றிக்கொண்டதுடன், விவாகம் ரத்தானது வரை அனைத்தும் அதே செவ்வாய் திசையில்தான்.

அம்ம்ணி பரணி நட்சத்திரம். பரணி தரணி ஆளும் என்பார்கள். தரணி
ஆண்டார். ஆனால் திருமண் வாழ்க்கை அவுட்டாகுவிட்டது. இரண்டாம் அதிபதி  அதாவது குடும்ப வாழ்க்கை அதிபதி  அந்த வீட்டிற்குப் பத்தில் இருந்தாலும் குடும்ப வாழ்க்கை இல்லாமல் போய்விட்டது. ஜாதக விநோதங்களில் இதுவும் ஒன்று!

ஒரு கிரகம் நீசமானால் பிரச்சினைதான். அதுபோல ஆறாம் வீட்டுக்காரன் எங்கே வந்து உட்கார்ந்தாலும், அந்த வீட்டில் (House) பிரச்சினைதான்.

காதல் திருமணம் என்பதால் அந்தப் பெண் பொருத்தம் பார்த்திருக்க வாய்ப்பில்லை. பார்த்திருந்தாலும் ஜோதிடர், திருமணம் நடக்கும் காலத்தைத்தான் சொல்லியிருப்பார். பிரச்சினை என்று சொன்ன பிறகுதான் மற்றவற்றை அலசி, அது நீடிக்கும் வாய்ப்பில்லை, ஊற்றிக் கொண்டுவிடும் என்று சொல்லியிருப்பார். இரண்டையும் முதலியே சொல்லியிருந்தால், அந்தப் பெண் அவனை மணந்து கொண்டு அவதிப்பட்டிருக்க மாட்டாள் இல்லையா?

அவதிப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கும்போது யாரைப்போய் சாலஞ்ச் செய்ய முடியும்? விதியையா? விதியைச் சாலஞ் செய்ய எந்தக் கொம்பனாலும் முடியாது.  விதி அடித்துப் படுக்க வைத்துவிடும். எழுந்திருக்கவே முடியாது

“ஊழிற் பெருவலி யாவுள” என்று அய்யன் வள்ளுவர் சொன்னதையும், அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஜி.யு.போப் சொன்ன, Nothing is stronger than Destiny என்பதையும், மறக்காமல் எப்போதும் நினைவில் வையுங்கள்.

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

4.10.10

மனைவியின் தயவில் குளிர்காய முடியுமா?


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மனைவியின் தயவில் குளிர்காய முடியுமா?

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி.24
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.82
சுந்தர்.K
மலேசியா

Dear sir, 
Greetings from Malaysia!

1) Doubts 8th House
சனியும், செவ்வாயும் (ராசியில் அல்லது நவாம்சத்தில்) பரிவர்த்தனை பெற்றிருப்பது நல்லதல்ல! அதைப்பற்றி விரிவாக எழுதுவது எனக்கு நல்லதல்ல! அதைப்பற்றி, எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம் நடத்தும்
போது விரிவாக எழுதுகிறேன். அதுவரை பொறுத்திருங்கள். You did not cover the above in the 8th house lessons, please advise, and in my நவாம்சத்தில்  சனியும், செவ்வாயும் பரிவர்த்தனை,  attached my chart please advise?

உங்கள் சொந்த ஜாதகம் என்று சொல்லிவிட்டீர்கள். அதற்குக் கேள்வி
பதில் பகுதியில் இடமில்லை. கேள்வி ஆயுளைப் பற்றியது. ஆகவே
நிச்சயமாக இடமில்லை. உங்களுக்கு என்ன வயதாகிறது? அதற்குள்
ஆயுளைப் பற்றி என்ன கவலை? நீங்கள் கவலைப் படுவதால்,
ஆயுள் கூடப் போகிறதா? அல்லது குறையப்போகிறதா? திருமணமாகிவிட்டதா? முதலில் திருமணம் செய்துகொள்ளுங்கள். இதையெல்லாம் மறந்துவிட்டு இல்லற இன்பத்தில் நீந்திக் குளியுங்கள்!

2) Viparitha rajayogam
6th lord in the 8th house and 8th lord in the 12th house is it viparith rajayogam?

ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன் அமர்ந்திருந்தால் அந்த யோகம் உண்டாகும். நீங்கள் சொல்லும் அமைப்பில் கிரகங்கள் தனித்தனியாக மட்டையுடன் நின்று
கொண்டிருக்கிறார்கள். ஆகவே அந்த யோகம் இல்லை! நீங்கள் வாழ்த்துச் சொல்லிக் கேள்வியைத்  துவக்கியுள்ளீர்கள். நானும் வாழ்த்துச் சொல்லிப் பதிலை நிறைவு செய்கிறேன்!
++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.83
சு. மணிகண்டன்
நெய்வேலி
   
வணக்கம் திரு. சுப்பையா வாத்தியார் அவர்களுக்கு,
எனது ஐயங்களைக் கொடுத்துள்ளேன். தயைகூர்ந்து விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.

1. விம்சோத்திரி தசா காலங்கள் மாதத்திற்கு 30 நாள்கள், வருடம் 
360 நாட்கள் என்று தான் சுக்கிர திசை 20 வருடங்கள், சனிதிசை 
19 வருடங்கள் என கூறப்பட்டுள்ளது.  அதனை நாம் நமது பிறந்த 
நாளான ஆங்கிலத் தேதியுடன் கூட்டி நடப்பு திசா புத்திகளை கணக்கிடுகிறோம்.இதனால் வருடத்திற்கு ஐந்தரைநாளட்கள் 
அதிகமாக கூட்டி விடுகிறோம். உதா. சுக்கிரதிசை 20 வருடத்திற்கு 
ஐந்தரை நாட்கள் வீதம் 20 வருடத்திற்கு 3 மாதம் 15  நாட்களை 
அதிகமாக கூட்டி விடுகிறோம்.  இதனால் புத்திக்காலங்கள் மாறிவிட 
வாய்ப்பு உள்ளது. நாம் சூரிய  திசை சுயபுத்தி பலன்களை கூறும் போது ஜாதகருக்கு சுக்கிர திசையில் கேது புத்தி பலன்கள் நடக்கும் நமது
பலன்கள் தவற வாய்ப்பு உள்ளது எனவே வருடத்திற்கு ஐந்தரை 
நாட்களை கழித்து கணக்கிட சரியாக வரும் என்பது எனது கருத்து.  
இது சரியா என விளக்கவும்.

பிறப்பில் இருந்து, இன்று நடக்கும் தசா புத்தியை அறிந்து கொள்ள, பிறந்த தேதி + கர்ப்பச்செல் இருப்பு +  நடுவில் கடந்த திசைகளுக்கெல்லாம், மொத்தமாக வருடத்தின் எண்ணிக்கையைத் தான் கூட்டுவோம். நீங்கள்  சொல்கிறபடி, திசைகளின் காலத்திற்கு உரிய வருடங்களுக்கு 365.25 நாட்களால் பெருக்கி, நாட்களை யாரும்  கூட்டுவதில்லை. அதனால் நீங்கள் சுட்டிக்காட்டும் வித்தியாசம் வராது!

உதாரணம் கொடுத்துள்ளேன். இப்படித்தான் கூட்டுவோம்:
சந்திர திசை இருப்பு:  3 வருடம் - 6 மாதங்கள் - நான்கு நாட்கள்
செவ்வாய் திசை    :     7 வருடம்
ராகு திசை        :           18 வருடம்
குரு தசை         :           16 வருடம்
நடப்பு சனி திசையில்
சுயபுத்தி:          :               3 வருடம் - 0 மாதங்கள் - 3 நாட்கள்
----------------------------------------------------------------------------
ஆக மொத்தம்:            47 வருடம் - 6 மாதம் - 7 நாட்கள்
----------------------------------------------------------------------------

2. ஒரு திசையில் சுயபுத்தி எவ்விதம் பலனளிக்கும். ஜோதிட விதிகளில் தசாநாதன் தனது சுயபுத்திகளில் சிறப்பான பலன்களை தராது என கூறப்பட்டுள்ளது. அனுபவத்திற்கு ஒத்து வரவில்லை.  சுயபுத்தி 
பலன்களை  எவ்விதம் கூறுவது ஐயா விளக்கவும். அது பொதுவிதி. 
பொது விதி எப்போதுமே சொந்த அனுபவத்திற்கு ஒத்துவராது.

பேருந்து நிலையத்தில், கூட்டத்தில், அடித்து மோதி ஏறி ஒரு சீட்டைப்
பிடித்து அமர்ந்தவுடன், அப்பாடா  என்றிருக்கும். ஓட்டுனர் வந்து
பஸ்சைக் கிளப்புவதற்கு, அதாவது புறப்படுவதற்கு, அரை மணி
நேரம் ஆகிறது என்றால், பஸ்ஸிற்குள் வியர்த்துக் கொட்டும்.
எப்போதடா, வண்டியைக் கிளப்புவான், வண்டி கிளம்பினால்
பரவாயில்லை, காற்று வந்து, சற்று சுகத்தைக் கொடுக்குமே
என்றிருக்கும். ஓட்டுனர் வந்து வண்டி கிளம்பினாலும்,
நகர எல்லையைத் தாண்டும் வரை மெதுவாகவே ஓட்டுவார்.
அப்போது நமக்கு வண்டி வேகமாகப் போனால்  பரவாயில்லையே என்றிருக்கும். வண்டி நகர எல்லையைத் தாண்டி வேகம் பிடித்த
பின்புதான், அப்பாடா என்று நிமமதியாக இருக்கும். முதல் ஒரு
மணி நேர அவஸ்தை நம்மைவிட்டுச் சென்றிருக்கும். அதுபோலத்
தான்  சுயபுத்திக்காலமும். சுயபுத்தி முடிந்து, அதேகிரகத்தின்
மகாதிசையில், அடுத்த கிரகத்தின் புத்தி வந்தால், வண்டி  வேகம்
பிடிக்கும். பலன்களும் நமக்குக் கிடைக்கத் துவங்கும்.
++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.84
சிவராமச்சந்திர ஐயர்,
   
Anbulla Ayyah avarkalukku,
Oru grahathukku irandu veedugal anal  ettam idutthil irukkum athey graham nanmai cheyyathu enbathu  unmaiya.udaranam:vrushabha lagnam.1 @6 lords sukran lagnathipathy 6kku ettil irukkar.appadiyanal dhanur lagnam  guru ettil ucham.guru nallathaiye cheyvvar enru koorukireerkal.vilakkam thevai. nanri
s.r.iyer/////

இரண்டு வீடுகள் உள்ள கிரகங்கள் ஐந்து.
மேஷ லக்கினத்திற்கு, விருச்சிக லக்கினத்திற்கு அதிபதி செவ்வாய்.
ரிஷப, துலா லக்கினங்களுக்கு அதிபதி சுக்கிரன்.
மிதுன, கன்னி லக்கினங்களுக்கு அதிபதி புதன்
மீன, தனுசு லக்கினங்களுக்கு அதிபதி குரு
மகர, கும்ப லக்கினங்களுக்கு அதிபதி சனி
கடக லக்கினத்திற்கு அதிபதி சந்திரன்
சிம்ம லக்கினத்திற்கு அதிபதி சூரியன்

சிலருக்கு மட்டுமே 6, 8, 12ஆம் இடங்கள் எப்படி சொந்த வீடாக அமையும். உதாரணத்திற்கு மேஷ லக்கின  செவ்வாய், விருச்சிகத்தில் இருந்தால்
(8ஆம் இடம்) அது அவருக்கு சொந்த வீடு. துலா லக்கினச் சுக்கிரன்,
ரிஷபத்தில் இருந்தால் அது அவருக்கு சொந்த வீடு. அதுபோல
இருவருக்கும் 6ஆம் இடமும் சொந்த இடமே!.

மிதுன புதனுக்கு 4ஆம் வீடும், கன்னி புதனுக்கு 10ஆம் வீடும் சொந்த
வீடுகள். மற்றபடி வேறு எந்த இடமும்   சொந்த இடமாகாது. குரு
பகவானுக்கு மீனத்தில் இருந்து 10ஆம் வீடும், தனுசுவில் இருந்து
4ஆம் வீடும் சொந்த   வீடு. வேறு இடங்கள் சொந்த வீடாகாது.

கும்ப சனிக்கு அதன் 12ஆம் வீடான மகரம், மட்டுமே சொந்த வீடு

கடகச் சந்திரனுக்கும், சிம்மச் சூரியனுக்கும் தங்கள் லக்கினத்தைத்
தவிர வேறு சொந்த இடம் எதுவும் இல்லை.

6, 8 & 12ஆம் இடங்கள் தீய இடங்கள். (inimical places) அங்கே அமரும் லக்கினாதிபதிகள் ஜாதகனுக்கு உரிய   நன்மையைச் செய்ய
மாட்டார்கள். சொந்த வீடாக இருந்தாலும் செய்ய மாட்டார்கள்.
உரிய எனும்  சொல்லைக் கவனிக்கவும். ஜாதகன் அத்தனைக்கும்
எதிர் நீச்சல் போட வேண்டியதாக இருக்கும்.

ஆட்சி வீடுகள் = சொந்த வீடுகள். இங்கே அமரும் கிரகங்கள்
அதிகாரத்துடன் இருக்கும். உச்ச வீடுகள்:  மாமியார் வீடுகள்
எனலாம். இங்கே சர்வ அதிகாரத்துடன் இருக்கும்.நட்பு வீடுகள்: விருந்தினராகத் தங்கும் வீடு. அதற்குரிய செல்வாக்கு மட்டும்
இருக்கும் 6, 8 & 12 பகை வீடுகள் பாம்புகள் அதிகமாக இருக்கும்
வனம்.  இங்கே அமரும் கிரகங்கள் ஜாதகனுக்கு உரிய பலனைத்
தரமுடியாமல் இருக்க நேரிடும். நீச வீடுகள்: நீரில்லா
பாலைவனம். அங்கே கிரகங்கள் எப்படி இருக்க நேரிடும் என்பதை
உங்கள் கற்பனைக்கே  விட்டு விடுகிறேன்!  (ஒரு உதாரணத்திற்காக இவற்றைச் சொல்லியிருக்கிறேன்)
++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.85
S. மணிகண்டன்.
நெய்வேலி
   
திரு. சுப்பையா ஆசிரியர் அவர்களுக்கு,
எனக்கு ஒரு ஐயம் எனது மனைவி பெயரில், தொழில் செய்யும் போது யாருடைய ஜாதகப்படி இலாபம் வரும்  என விளக்கவும். எனது ஜாதப்படி தொழில் தெரிந்து மனைவி ஜாதப்படி லாபம் வரும் எனில் அப்படி
செய்லாமா நடைமுறையில் பலனளிக்குமா என தெரியப்படுத்தவும். ஒரு குடும்பத்தில் மனைவி ஜாதகம் நன்றாக  இருந்து கணவர் ஜாதகம் நன்றாக இல்லாவிட்டால் யாருடைய ஜாதகப்படி பலன்கள் அதிகம் நடைபெறும்?

திருமணப் பொருத்தம் பார்க்கும்போது, பெண்ணின் நட்சத்திரத்தில்
இருந்து, அவளுக்குப் பார்க்கும் வரனின்  நட்சத்திரம், அவளுடைய நட்சத்திரத்தில் இருந்து ஏழு நட்சத்திரங்கள் தள்ளி இருக்க வேண்டும், என்பதுதான் முதல் விதி. அது எதற்காக என்றால், இருவருக்கும் ஒரே நேரத்தில் ஏழரைச் சனி, அஷ்டார்த்த சனி,  அஷ்டமச்சனி என்று
சனீஷ்வரனின் கோள்ச்சார உபத்திரவங்கள் எல்லாம் ஒரே நேரத்தில் இருவருக்கும் வந்து  படுத்தி  எடுக்கக்கூடாது என்பதற்காக. ஒருவருக்கு முடிந்து அடுத்தவருக்கு வந்தால், இருவரில் ஒருவர்  அடுத்தவருக்கு உதவியாக இருப்பார் என்பதற்காக!

வீட்டில் இருவருக்கும் ஒரே நேரத்தில் டைபாய்டு காய்ச்சல் வந்து
படுத்தால் எப்படி இருக்கும். யாருக்கு யார்  மருந்து கொடுப்பார்கள்,
கஞ்சி காய்ச்சிக்கொடுப்பார்கள்? கற்பனை செய்து பாருங்கள்.

இருவரில் ஒருவரின் ஜாதகம் ரயிலாக இருக்கும், அடுத்தவருடையது தண்டவாளமாக இருக்கும். இரண்டும்  ரயிலாக இருந்தால் என்ன ஆகும்? வண்டி எப்படி ஓடும்?

சில வீடுகளில் கணவன் ரயிலாக இருப்பான். சில வீடுகளில் மனைவி ரயிலாக இருப்பான். ஒருவரை வைத்து,  அடுததவருடைய வாழ்க்கை ஓடும். இறைவன் இரண்டு ரயில்களை எப்போதுமே ஜோடி சேர்ப்பதில்லை. அதை  மனதில் வையுங்கள்.

மனைவியின் ஜாதகம் அதிர்ஷ்டமுடையதாக இருந்து, நீங்கள் அவர் பெயரில் வியாபாரம் செய்தால், நிச்சயம்  அவருடைய ஜாதகத்திற்காக லாபம் வரும். மனைவியின் தயவில் நீங்கள் குளிர்காயலாம்!!!

விளக்கம் போதுமா?
++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.86
BR. நாகராஜன்

Ayya,
general question -

In some sites, it is mentioned that Raghu is exalted in Rishaba...In some other Raghu is exalted in other place [exactly i don't know the place].... why is this contradiction?  but for all other planets Ucchha or Neecha is  defined in all sites only one place properly..////////

குழப்பம் உங்களிடம்தான். நீங்கள் பாடங்களை ஒழுங்காகப் படிக்கவில்லை என்று தெரிகிறது. Ucchha or Neecha  is defined in all sites only one place properly..என்று நீங்களே குறிப்பிட்டு உள்ளீர்கள். பிறகு அதற்கு
முந்தைய வரியில் வரும் why is this contradiction? எப்படி வந்தது.
அதைத் தெளிவு படுத்துங்கள்.

ராகு & கேது இருவருக்கும் சொந்த வீடு இல்லை. இருக்கும் வீட்டைச் சொந்த வீடாக ஆக்கிக் கொள்வார்கள்.  இருவருக்கும் உச்ச வீடு விருச்சிகம். நீச வீடு ரிஷபம். இதை மனதில் பெவிகால் போட்டு ஒட்டுங்கள்.

பழைய பாடங்களை எல்லாம் ஒழுங்காகப் படியுங்கள். பிறகு கேள்விகளைக் கேளுங்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

28.9.10

சீதைக்கு ராமன் சித்தப்பன்!

...................................................................................................................
சீதைக்கு ராமன் சித்தப்பன்!

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி.23
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.78
மோகன்ராஜ்!
     
Dear  Mr SP.VR. SUBBAIYA,
       I am Mohan. I am a follower of your blog ( not continuously).I have a some doubts.
Doubt No:1
There are 12 rasis as per hindu mythology. As per that on average Indian population 0f 120 crore people in our country. Just average is around 10 crore people having a one of the rasis.My doubt is that. Will 10 crore of the people will have the same type of life or not.
Doubt No:2 
Assume if two people of same sex is born at the same place (or hospital) on the same day Will they have a similar rasi, natchatram, and jathakam - is this right? if right will  these two people will have all of their happenings in their life in common. I don't think it will happen like that Then what is the use of jathakam. Pls let me know .
Mohan.

அறுபது ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம். அந்தக் காலத்தில், கிராமங்களில் இரவு நேரத்தில், கூத்து அல்லது கதாகாலட்சேபம் துவங்கி, விடிய விடிய நடக்கும். அதாவது இரவு ஒன்பது மணிக்குத் துவங்கி, அதிகாலை ஐந்து மணிவரை நடக்கும்.

அப்படி, ஒரு கிராமத்தில் ராமாயண காலட்சேபம் விடிய விடிய நடந்தது. அப்பா அம்மாவின் கட்டாயத்திற்காக, அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்குச் சென்ற ஒரு இளைஞன், கோவில் மண்டபத்தில் நடந்த காலட்சேபத்தை உட்கார்ந்து கேட்காமல், கோவிலின் எதிரில் இருந்த ஊருணிக்கரையில் படுத்து ஆனந்தமாகத் தூங்கிவிட்டான். காலையில் கூட்டம் கலைந்து ஊர்மக்களெல்லாம், பலத்த பேச்சுச் சத்தத்துடன் தத்தம் வீடுகளுக்குத் திரும்பியபோது, சத்தத்தில் எழுந்த அவனும், வீட்டிற்குத் திரும்பி விட்டான்.

வீட்டிற்கு வந்தவுடன், அவன் முகத்தில் இருந்த தெளிர்ச்சியைப் பார்த்த, அவனுடைய தந்தை, என்ன நடந்திருக்கும் என்பதை ஊகித்துக் கொண்டு, மெல்லப் பேச்சுக் கொடுத்தார்.

“ஏன்டா, சொற்பொழிவைக் கேட்டாயா?”

பதில் வந்தது.  “ஆகா, கேட்டேன்”

“சீதைக்கு, ராமர் என்ன உறவு?” அவர் மீண்டும் கேட்க, இவன் சொன்னான் “அது தெரியாதா என்ன? சீதைக்கு ராமர் சித்தப்பா” என்றான்.

அதுபோலத்தான் இருக்கிறது உங்கள் கேள்விகள் இரண்டும். சுமார் 400 பாடங்கள் நடத்தியுள்ளேன். நீங்கள் அவற்றையெல்லாம் படித்திருந்தால், இப்படிக் கேட்பீர்களா? முதலில் பழைய பாடங்கள் அனைத்தையும் படியுங்கள்.
--------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.79
வேத நாராயணன்
பெங்களூர்
   
ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்
பாலரிஷ்டம் பற்றி விரிவாக தெரிவிக்கவும்
நன்றிகளுடன்

13.7.2010 அன்று பாலரிஷ்ட தோஷத்தைப் பற்றி விவரமாக எழுதியுள்ளேன். Link URL   http://classroom2007.blogspot.com/2010/07/blog-post_13.html  பாடங்களை ஒழுங்காகப் படிக்காமல், பழைய பாடங்களிளேயே - நடத்திய பாடங்களிலேயே  சந்தேகங்களைக் கேட்டுக்கொண்டிருந்தால் என்ன செய்வது?

பழைய பாடத்தில் உள்ளது என்று சொன்னால், உடனே அதன் சுட்டியைத் தாருங்கள் என்ற கேள்வி வரும். சுட்டியைக் கொடுத்தாலும், லிங்க் யு.ஆர்.எல் வேலை செய்யவில்லை. நீங்கள் எனக்கு அதை, அப்படியே தர முடியுமா என்று கேட்டு அடுத்த மின்னஞ்சல் வரும். புதிதாக வருபவர்களில் பலர் பழைய பாடங்களை என்ன காரணத்தினாலோ படித்து அறிந்துகொள்வதில்லை.

அதனால், அதுபோன்ற உங்களுடைய அடுத்தடுத்த கேள்வியைத் தவிர்ப்பதற்காக, அந்தப் பாடத்தையே மீண்டும் ஒருமுறை (கீழே) கொடுத்துள்ளேன். இப்போதாவது படித்துத் தெளிவு பெறுங்கள்!
--------------------------------------------
முதலில் குழந்தைப் பருவத்தில் தவறிப்போகும் ஜாதகர்களைப் பற்றிப் பார்ப்போம்:

அதற்கு பாலரிஷ்ட தோஷம் என்று பெயர்:

பிறந்த நாளில் இருந்து எட்டு வயதிற்குள் இறந்துவிடும் அமைப்பு அது! பாலரிஷ்ட தோஷம்!

ஜாதகத்தில் 6, 8 அல்லது 12ஆம் வீடுகளில் சந்திரன் இருந்து, அதன் மேல் தீயகிரகங்களின் (malefic planets) பார்வை விழுந்தால், அது இந்த தோஷத்தை உண்டாக்கும். அதே நேரத்தில் இந்தக் குறிப்பிட்டுள்ள மூன்று  வீடுகளில் உள்ள சந்திரனின் மேல் சுபக்கிரகங்களின் பார்வை விழுந்தால், பாலரிஷ்ட தோஷம்
நிவர்த்தியாகிவிடும். உங்கள் மொழியில் சொன்னால் காணாமல் போய்விடும்.

ரிஷப லக்கினக் குழந்தைக்கு ஆறாம் வீட்டில் சந்திரன் இருந்தால் அது பாலரிஷ்டம் போன்று தோற்றமளிக்கும். ஆனால் சந்திரன் இருக்கும் அந்த வீடு, சுபக்கிரகமான சுக்கிரன் வீடு, லக்கினாதிபதியும் அவரே! அதனால்
குழந்தை தப்பித்துவிடும். பாலரிஷ்டம் ஒன்றும் செய்யாது.

சிம்ம லக்கினத்தில் பிறந்த குழந்தைக்கு, ஆறாம் வீட்டில் சந்திரன் இருந்தால், அது பாபக் கிரகமான சனியின் வீடு. அந்த வீட்டின் மேல் சுபக்கிரகங்களின் பார்வை எதுவும் இல்லை என்றால், பாலரிஷ்ட தோஷம் தன் வேலையைக் காட்டிவிடும்.
---------------------------------------------------------------------------
குழந்தைகள், நீரில் தவறி விழுந்து அதாவது ஆறு, குளம் அல்லது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் தவறி விழுந்து, இறந்து விடுவதுதான் இந்த வயதுச் சாவுகளில் அதிகமான சாவுகளாக இருக்கும். அல்லது கடுமையான
நோய் ஏற்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிடும் குழந்தைகளும் இருக்கும்.

எது எப்படியானும், அது விதிக்கப்பட்டது. பெற்றோர்களால் ஒன்றும் செய்ய முடியாது - பரிதவிப்பதைத் தவிர.

அதற்கான நிலைப்பாடுகள் (அனைத்தும் பொது விதிகள்):

கண்டம் எனும் சொல் அடிக்கடி பயன்படுத்தப்படும். உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பது அதற்குப் பொருள்:

1. சந்திரன் 8ஆம் வீடு, அல்லது 12ஆம் வீடு, அல்லது 6ஆம் வீடுகளில் இருந்து ராகுவின் பார்வையைப்  பெற்றிருந்தால், சின்ன வயதில் கண்டம்.

2. லக்கினத்தில் தேய்பிறைச் சந்திரன் இருக்க, கேந்திரங்களில் அல்லது எட்டாம் வீட்டில் தீய கிரகங்கள் இருந்தால், குழந்தைக்குக் கண்டம்.

3. 6ஆம் வீட்டில் அல்லது 8ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய், மற்றும் சனி கூட்டாக இருக்க, சுபக்கிரகங்களின்  பார்வை அல்லது சேர்க்கை இல்லை என்றால் குழந்தைக்குக் கண்டம்.

4. சூரியன், செவ்வாய், மற்றும் சனி ஆகிய கிரகங்கள் 5ஆம் வீட்டில் கூட்டாக இருந்தால்,குழந்தைக்குக் கண்டம்

5. லக்கினத்தில் சந்திரன் இருக்க, அதன் இருபுறமும், தீய கிரகங்கள் இருக்க (பாபகர்த்தாரி யோக அமைப்பு) சுபகிரகங்களின் பார்வை எதுவும் லக்கினத்தின் மேல் இல்லை என்றால் குழந்தைக்குக் கண்டம்

6. ஜாதகத்தில் 6, 8, 12ஆம் வீடுகளில் தீய கிரகங்கள் இருந்து, ஜாதகத்தில் எங்கேனும் ஒரு இடத்தில்  சுபக்கிரகங்களான குரு  அல்லது  சுக்கிரன் பாபகர்த்தாரி  யோகத்தில்  மாட்டிக் கொண்டிருந்தால்  குழந்தைக்குக் கண்டம்

7. லக்கினத்தில் சந்திரனும், சனியும் இருக்க, எட்டில் செவ்வாய் இருந்தால், குழந்தைக்குக் கண்டம்

8. லக்கினம் மற்றும் லக்கினத்தில் இருந்து 6, 7 , 8 ஆகிய நான்கு வீடுகளிலும் தீய கிரகங்கள் இருந்தால் குழந்தைக்குக் கண்டம்.

9. ஜாதகத்தில் சந்திரனும், சனியும் கைகோர்த்துக்கொண்டு ஒன்றாக இருக்க, 12ல் சூரியனும், 4ல் செவ்வாயும் இருந்தால் குழந்தைக்குக் கண்டம்

10. ஏழாம் வீட்டில் சனியும், செவ்வாயும் சேர்ந்திருந்து, சுபக்கிரகங்களின் பார்வையை அவர்கள் பெறவில்லை  என்றால், குழந்தைக்குக் கண்டம்
--------------------------------------------------------------------
முக்கியமானவற்றை மட்டுமே கூறியுள்ளேன். இன்னும் நூறுக்கும் மேற்பட்ட அமைப்புக்கள் ஜோதிட நூல்களில்  சொல்லப்பட்டுள்ளன. அத்தனையையும் எடுத்து எழுதினால் ஓவர் டோசாகிவிடும். ஒரு தூக்க மாத்திரைக்குப் பதிலாக  ஐம்பது  தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டால் என்ன ஆகுமோ அது ஆகிவிடும். ஆகவே பாலரிஷ்ட  தோஷத்திற்கான அமைப்பை இத்துடன் நிறைவு செய்கிறேன்.

நானும் ஜோதிடர் வேலைக்குச் செல்லப் போவதில்லை. இதைப் படிக்கும் நீங்களும் ஜோதிடர் வேலைக்குச்  செல்லப்போவதில்லை. ஆகவே இது போதும்.

இல்லை நாங்கள் முழு விதிகளையும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறோம் என்பவர்கள், பலதீபிகை, பிருஹத் ஜாதகம் போன்ற புராண ஜோதிட நூல்களை வாங்கிப் படிக்கலாம்.
------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.80
நந்தினி நடராஜன்
கோயம்புத்தூர்
   
வணக்கம் ஐயா,
ஆண் ஜாதகம் தான் வலிமையானது புத்திர பேறுக்கு என்று சில ஜோதிடர்கள்  கூறுகிறார்கள் இது உண்மையா அய்யா?

உதாரணத்திற்கு ஒரு ஆணின் ஜாதகத்தில் இரண்டு குழந்தையும்  பெண் என்று உள்ளது .ஆனால்  அவனுடய மனைவின் ஜாதகத்தில் ஆண் ஒன்று பெண் ஒன்று என்று உள்ளது. ஒரு ஜோதிடர் கூறிஉள்ளார்  இரண்டும் பெண் தான் பிறக்கும் என்று ஏன் என்றால் ஆண் ஜாதகம் தான் வலிமையானது என்று சொன்னார். இதில் எனக்கு உடன்பாடு  இல்லை அய்யா. தாங்கள் ஜாதகத்திற்கு பெண் ஆண் என்று பேதமில்லை என்று கூறி உள்ளீர்கள் .
குழந்தை பிறப்பு என்பது கூட்டு முயற்சி என்று கூறி உள்ளீர்கள் . பிறகு எப்படி ஆண் ஜாதகம் தான்  வலிமையானது என்று சொல்ல முடியும் ?

அப்படி வைத்து கொண்டாலும் எதை வைத்து ஆண் ஜாதகம் வலிமையானது புத்திர பேறுக்கு என்று சொல்ல முடியும் ? உதாரணத்திற்கு 10 ஆண்களுடைய ஜாதகத்தில் பெண் குழந்தை என்று உள்ளது என்றால் அவர்களுக்கு ஆண் குழந்தை  பிறக்காது என்று சொல்ல  முடியுமா? அப்போது பெண்ணின் ஜாதகமே தேவை இல்லை  என்று ஆகிவிடும் இல்லையா ?நான்  ஜோதிடதைக் கேலி செய்வதாக நினைக்க வேண்டம் அய்யா ...    எனக்கு இந்த 5  வீட்டை பற்றி  நிறைய சந்தேகம் உள்ளது. தயவு செய்து சொல்லுங்கள் ...எழுத்துப் பிழை இருந்தால் மன்னிக்கவும் ..
நந்தினி நடராஜன்
கோயம்புத்தூர்

சில ஜோதிடர்கள் கூறுவதற்கு நான் எப்படி விளக்கம் சொல்ல முடியும்? சொன்னவர்களையே நீங்கள் கேட்பதுதான் முறை!. ஐந்தாம் வீட்டைப் பற்றியும், குழந்தைப் பேறுக்கான அமைப்பைப் பற்றியும் நான் நிறைய எழுதியுள்ளேன். அவற்றை எல்லாம் படிக்க வேண்டுகிறேன்  
--------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.81
விசு ஐயர்

வணக்கம் அய்யா . .
3 கிரகங்கள் ஒரு வீட்டில் இருந்தால் . .அது கிரக யுத்தம். அதுவும் 12ம் இடத்தில் என்றால்  பலன் கிட்டாது என பதில் கண்டேன்  அப்படியானால் சூரியன் சுக்கிரன் புதன் என எல்லோரும் கூட்டணி அமைத்துக் கொண்டு பன்னிரண்டாம் இடத்தில் அமர்ந்து இருந்தால்  அது அப்படித்தான் இருக்குமா?

 “அது அப்படித்தான் இருக்குமா?” என்று நீங்கள் கேட்க, வடிவேல் பாணியில் “அது அப்படித்தான் இருக்குமா?” என்று நானும் திருப்பிக் கேட்க வேண்டியதுதான்.

லக்கினம் என்ன என்பது முக்கியமில்லையா? என்ன லக்கினம் என்பதை நீங்கள் ஏன் சொல்லவில்லை? கேள்வியை
கேள்வியாகக் கேட்க வேண்டாமா?

அது அப்படித்தான் இருக்குமா? என்றால் என்னத்தைச் சொல்வது? பலன் கிட்டாது என்று நீங்களே குறிப்பை எழுதியுள்ளதால், அது அப்படித்தான் இருக்கும் என்று நானும் பதில் சொல்லி விடலாமா?
++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

27.9.10

வகுப்பறையில் விளையாட்டிற்கு இடமில்லை!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வகுப்பறையில்  விளையாட்டிற்கு  இடமில்லை!

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி.22
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.75
ஜோதிடர்.S.அரிச்சந்திரன்
நாகர்கோவில்
   
அன்பு ஐயா அவர்களுக்கு,
உங்கள் வகுப்பறை பதிவுகளை படித்தேன் மிகவும் நன்று,,,,,உங்கள் உதாரண விளக்கம் அருமை. உங்களிடம் ஓரு  கேள்வி மட்டும்.லக்கணம் என்பதன் விளக்கம் மட்டும் என்ன வென்று சொல்லுங்கள் ஐயா. குணமோ, பலனோ, தேவையில்லை.லக்கணம் என்பதன் பொருள் மட்டும் போதும். நன்றி ஐயா

லக்கினம் என்பதன் பொருள்தானே? சொன்னால் போயிற்று. கீழே கொடுத்துள்ளேன்.

அதற்கு முன் உங்களிடம் ஒரு கேள்வி. நீங்களே உங்களை ஒரு ஜோதிட ஆராய்ச்சியாளர் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள். லக்கினத்தின் பொருள் உங்களுக்குத் தெரியாதா? எதற்கு இந்த விளையாட்டு? விளையாடுவதற்கு
நீங்கள் மைதானத்திற்குப் போவது நல்லது. இங்கே வகுப்பறைக்கு வந்து என்னைப் பிறாண்ட வேண்டாம்.

அதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை.

I am a businessman, writing in blogs out of mere interest to share my knowledge and thoughts with the next generation  சம்ஜே க்யா? அர்த்தமாயிந்தாண்டி? மனசிலாயோ?

லக்(கி)னம் என்பது பெயர்ச் சொல். சூரிய உதயத்தைப் பொறுத்து ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்து நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் ராசி. Zodiacal sign influencing events at any given time of the day with reference to the time of  sun rise

சொல்லகராதியில் இருந்து அப்படியே கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது கறந்த பால் சுவாமி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.76
வேதநாராயனன்,
பெங்களூர்
   
குருவுக்கு எனது பணிவான வணக்கங்கள்
கிரகண காலத்தில் குழந்தை பிறக்கக்கூடாதா? அப்படிப் பிறந்த குழந்தையின் வாழ்க்கை குறையுடைய சந்திரன்  மற்றும் சூரியன் போல குறையாகவே இருக்குமா தயவு செய்து தெளிவாக விளக்கவும். சாதரணமாக கிரகண
காலத்தில் குழந்தை பிறக்க இருந்தால் அறுவை சிகிச்சை செய்து முன்னதாகவே பிரசவம் செய்கின்றனர்  மேலும் அவ்வாறு பிறக்கும் குழந்தைகளுக்கு எதாவது சக்தி இருக்குமா? தயவு செய்து தெளிவாக விளக்கவும்
வேத நாராயணன்
பெங்களூர்   
       
பிறக்கக்கூடாது என்று யார் சொல்ல முடியும்? எப்படிச் சொல்ல முடியும்?

பிறந்தால் ஏழு விதமான தோஷங்கள் ஏற்படும் என்று புராதன ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. அவைகள்  முறையே Ghora, Dhwanshi, Mahodari, Manda, Mandakini, Mishra and Rakshashi என்று சொல்லப்படும்.  பார்ப்பதற்கு இந்தச் சொற்கள் ஏதோ ஆயுர்வேத மருந்துகள்போல உள்ளன.

சூரிய கிரகணத்தால் ஏற்படுவது: The eclipse happens Sun is in conjunction with one of the lunar nodes (Rahu or  Ketu) on a new moon or full moon day. சூரியன் உடலுக்குக் காரகன் என்பதாலும், அத்துடன் தந்தைக்குக்  காரகன் என்பதாலும், ஜாதகன் வறுமையான சூழலில் பிறக்க நேரிடலாம். அத்துடன் உடற் குறைபாடுகளும்
ஏற்படலாம் ( என்னகுறைபாடு என்று அடுத்த கேள்வியை அனுப்பி என்னைப் பிறாண்ட வேண்டாம்) ஜாதகத்தில்  மற்ற கிரகங்களைவைத்து அது ஆளுக்கு ஆள் வேறுபடலாம். அதை எல்லாம் துவைத்துப் பார்க்க வேண்டும்.
துவைப்பதற்கெல்லாம் என்னிடம் வாஷிங்மிஷின் (நேரம்) இல்லை. சந்திர கிரகணத்தில் பிறந்தாலும் இதே  நிலைப்பாடுதான்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.77   
கண்ணன் சீதாராமன்
பிரந்த ஊர்: வாசுதேவநல்லூர்
வசிக்கும் ஊர்: Doha Qatar.

1.தாய், தந்தை, குரு இவர்களுக்கு பின்னர் தான் இறைவன், இது தான் உலகம் முழுவது உள்ள மற்றவர்களால்  இந்து என பெயர் இடப்பட்ட இந்துகளின் அடிப்படை முதல் மற்றும்   அனைத்து மந்திரம் ஆகும். இம்மந்திரத்தை  எல்லோரும் அறிந்து இருந்தும் நடைமுறை படுத்தாமல் அல்லது முடியாமல் போகக் காரணம்  என்ன?

 “மதா, பிதா, குரு தெய்வம்” எனும் மந்திரத்தைத்தானே சொல்கிறீர்கள்? அன்னையையும், தந்தையையும், குருவையும் மதித்து நட, தெய்வம் தானாக வரும் என்பார்கள். அதனால்தான் தெய்வத்திற்கு 4வது இடம்  கொடுக்கப் பட்டது. ஆனால் இன்று பலருக்கும் காசுதான் தெய்வமாகிவிட்டது. பணத் தேடலில் மற்றதை ஓரங்கட்டி விட்டார்கள். டாஸ்மாக் சரக்குதான் தீர்த்தமாகிவிட்டது. தெருவோரக்கடை புரோட்டாதான் பிரசாதமாகி விட்டது. பாட்டியாலா சுடிதார் போட்டுக்கொண்டு செல்லும் பெண்தான் அம்பாளாகத் தெரிகிறாள். என்ன செய்வது? காலக்  கோளாறு!
“காசேதான் கடவுளடா - அந்தக்
கடவுளுக்கும் அது தெரியுமடா
கைக்குக்கை மாறும் பணமே - உன்னைக்
கைப்பற்ற நினைக்குது மனமே”


என்று ஒரு கவிஞர் 40 ஆண்டுகளுக்கு முன்பே - அதாவது நீங்கள் பிறக்கும் முன்பாகவே எழுதிவைத்துவிட்டுப்  போயிருக்கிறார். அந்தப் பாடலைத் தினமும் 108 முறைகள் பாராயணம் செய்யுங்கள். உங்கள் மனதில் இந்த
மாதிரிக் கேள்விகள் எழாது!

2. பழனியில் போகர் @ புலிபாணி சித்தர், மதுரையில் சித்தர், சங்கரன்கோவிலில் பாம்பாட்டி சித்தர், திருப்பதியில்  கொங்கணர் சிதம்பரம், இராமேஸ்வரம் ,  வாரணாசி (காசி), மும்பை  சித்திவிநாயகர் மந்திர், மகாலட்சுமி ,   என்பன  போன்ற  ஆலயங்கள் அங்குள்ள " தவ யோகிகளின்"  தவ வலிமையால் தான் சிறந்து விளங்குகின்றது  என்று கேட்டது உண்டு உண்மையா?  {பூனாவில் அருகில் உள்ள ஷிர்டி  சாய்பாபா! . மந்திராலயம்
எடுத்துகாட்டு }

நீங்களும், நானும் இதை ஒப்புக்கொண்டு, மனம் மகிழலாம். மூன்றாம் மனிதன் ஒப்புக்கொள்ள மாட்டான். மும்பை, தில்லி, கொல்கத்தா, சிங்கப்பூர், கோலாலம்பூர் போன்ற ஊர்களின் மேன்மைக்கு எந்த சித்தர் காரணம்
என்று கேட்பான். என்ன பதில் சொல்வது?

3. எத்தனையோ தவ புருஷர்கள், யோகிகள் என இன்றுவரை  கொண்ட நமது நாட்டில்,  அன்னியர்களின் படை  எடுப்பை முன்னரே அறிதந்த புருஷர்கள் { காலத்தால் உண்டாக்க முடியாத அழிந்து போன ஆலயம்,  கலாச்சாரம்,  கலைகள் ) எதனால் படையடுப்பைத் தடுக்க முடியவில்லை. ஒருவேளை தடுத்து இருந்தும் வெற்றி  பெறாமல் போகக் காரணம் என்ன?

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் - ஆனால் தர்மமே வெல்லும் என்பது பகவத்கீதையின் சாரம். அதை அறிந்ததினால் அவர்கள் வாளாதிருந் திருக்கலாம். தவபுருஷர்கள் காலத்தில்  ஏ.கே.47 எல்லாம் இல்லை.
அதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்!:-))))

4. சிறு தெய்வ வழிபாடு,  புத்தம், ஜைனம்,என தொடங்கி எண்ணிக்கையில்லாத மதங்கள்  உள்ள   உலகில்   அத்தகைய மதங்களை தோற்று வித்தவர்களின் உண்மையான குறிக்கோள் " மனிதனை பிறப்பு என்னும் கடலில்
இருந்து கரை சேர்ப்பது தானே".  "மோட்சம்" என்னும் வீட்டிற்கு வழி காட்டுகின்றேன் என்று கூறிகொண்டவர்கள்.  தனக்கு என்று கொள்கை , கட்டுப்பாடு, முதல தலைவன் என நாளைக்கு நடக்க போறதை கூட சரியாக
சொல்லும் அளவிற்குத்  தவவலிமை பெற்றவர்களால் அவர்கள் தோற்றுவித்தஅமைப்பிற்குள்ளே ஆயிரம் ஆயிரம் பிறவிகள் தோன்றி சீரழிவதை அறியாமல் போனது எப்படி 1  அன்பை போதித்தவர்களே! அநியாயமாக  அதர்மத்திற்கும் துணை போனது எப்படியோ? 2. அனைத்தும்  அறிந்தவர்கள் கூட, இறை  தூதர்கள் கூட தனது  கொள்கை தான் விளங்க வேண்டும் என இறைவனை வேண்டி உள்ளனர், இதுவும்  சுயநலம் தானே, உண்மையை  ஒத்து கொள்ள முடியாத சுயநலம்தானே?

அவர்கள் அறியாமல் போனதாக யார் சொன்னது? அவர்கள் அறியாமல் இருந்தார்கள் என்று சொன்னால்,  நீங்கள் சுட்டிக்காட்டும் அவர்களுடைய தவவலிமை பொய்யாக அல்லவா போய்விடும்?

கலியுகம். இப்படித்தான் நடக்கும். பகவான் மீண்டும் அவதாரம் எடுத்து எல்லாவற்றையும் சீராக்குவார் என்ற  நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. அவர்களுக்கு மட்டுமல்ல, ஆண்டவனை வணங்கும் அத்தனை நல்ல
உள்ளங்களுக்கும் இன்று இருக்கிறது. அன்றும் உண்டு. இன்றும் உண்டு. தவவலிமை பெற்ற மகான்களுக்கும்  இருந்திருக்கிறது. இன்று பொது விநியோகக் கடையில் (அதான் ரேசன் கடை) க்யூவில் நிற்பவனுக்கும் இருக்கிறது.

சீக்கிரம் திருமணம் செய்துகொள்ளுங்கள். ஜடையில் தொங்கும் நான்கு முள மல்லிகைப்பூவில் கிறங்கிப்போய்  எல்லாவற்றையும் (இந்தக் கருமத்தை எல்லாம்) மறந்து விடுவீர்கள்!:-))))

“கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா”


என்று கேட்டு அடுத்தவரை நச்சுப்பண்ண ஆரம்பித்துவிடுவீர்கள். ஆன்மிக்கத்தைக் கொண்டு போய் ஆற்றில்  போட்டுவிடுவீர்கள்!

இதழ் சிந்தும் சுவை என்றல் என்னவென்று தெரியுமல்லவா?:-))))

5. எம்குல தெய்வம் " திருசெந்தில் ஆண்டவரின்"  சேனைப் படைத் தலைவரான " வீரபாகு" வின்   பரம்பரைதான் எமது பரம்பரை என்பதனால் வீரபாகுவையே  மூலமாக (தெய்வமாக) வணங்கி வந்தால் மிக்க  சேமம் அடையலாம்  என்று கேட்டது உண்டு. இதனை விளக்க முடியுமா?

என்ன குழப்புகிறீர்கள்? "வீரபாகு"வின் பரம்பரைதான் உமது பரம்பரை என்றால் வாரிசு சான்றிதழ் வாங்கி வைத்திருக்கிறீர்களா? வீரபாகுவின் பரம்பரை என்றால், உங்கள் பகுதி தாசில்தார் அதை ஒப்புக்கொள்வாரா?

இன்னும் கற்பனைக் குதிரையையே ஓட்டிக் கொண்டிருக்காமல், அரசு போக்குவரத்துப் பேருந்தில் பயணிக்கும் காலத்திற்கு வந்து சேருங்கள்.

“ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதோ?
அரசன் இல்லாமல் ஜனங்கள் ஆளும் காலமும் வாராதோ?
என்றொரு காலம் ஏங்கியதுண்டு
இன்று கிடைதது பதில் ஒன்று
இன்று எவனும் பேதம் சொன்னால்
இரண்டு வருடம் ஜெயில் உண்டு.” 


என்று கவியரசர் கண்ணதாசன் அசத்தலாக எழுதி வைத்து விட்டுப் போயிருக்கிறார். ஆகவே பழைய  பெருமைகளை எல்லாம் கடாசி விட்டு, யதார்த்தமாக இருங்கள். வாரம் ஒரு மலையாளப் படத்தைப் பாருங்கள்.
பிரியாமணியின் படத்தை சட்டை பையில் வைத்துக்கொண்டு அவ்வப்போது எடுத்துப்பாருங்கள் இந்தப் பரம்பரை  நினைப்பு எல்லாம் வராது!

சேமம் என்று எதைச் சொல்கிறீர்கள்? சேமத்திற்கு எல்லாம் சரியான விளக்கம் கிடையாது. அளவுகோல்  கிடையாது.

கோவில் மடப்பள்ளியின் புளியோதரை சாதத்தை கட்டளைதாரர்கள் அள்ளிக் கொடுக்க வயிறுமுட்டச்  சாப்பிட்டுவிட்டு, ஊருணிக்கரையில் ஆனந்தமாகப் படுத்துக்கிடப்பவன், தான் சேமமாக இருப்பதாகச் சொல்வான்.

பென்ஸ் காரில் இரண்டு இளம் அம்மணிகளுடன் பயணிப்பவன் தான்தான் சேமமாக இருப்பதாகக் கூறுவான்.

எதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள்?
+++++++++++++++++++++++++++++++++++++
தொடரும்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

21.9.10

மலர்மாலைக்கும் மலர்வளையத்திற்கும் என்ன வித்தியாசம்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மலர்மாலைக்கும் மலர்வளையத்திற்கும் என்ன  வித்தியாசம்?

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி.21
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
++++++++++++++++++++++++++++++++++++++===========
மின்னஞ்சல் எண்.71
லோகபாண்டியன்
பஹ்ரெய்ன், சவூதி அரேபியா
   
Dear Sir,

1. Most my friends are in the age to get marry (26 and above) they are asking about their partners or marriage life (for example in one of my friend horoscope in seventh place Sani and Chandran) which i find very difficult to reveal. How to come out from this issue Sir, I am under bid stress

நீங்களே ’எல்’ போர்டு. நீங்கள் எதற்காக இன்னொருவருக்கு டிரைவிங் சொல்லித்தருகிறீர்கள்? ஜோதிடம் பெரிய கடல். ஆழம் தெரியாமலும், அலையின் வேகம் தெரியாமலும், நீசசல் தெரியாமலும் கடலுக்குள் இறங்கினால் என்ன ஆகும் தெரியுமா? யோசித்து ஒரு முடிவிற்கு வாருங்கள்

2. For Viruchiga Lagna in 12th Place Sani and Sevvai, I know it is Vibareetha rajayogam however in 12th Place Sani and Sevvai is Sayana Dosham. My question is Yogam supersedes Dosham or Dosham supersedes Yogam. Please advise if both Yogam and Dosham exists, what kind of effect and favor. (Whilst keeping in mind Lagnathipathi in 12th Place)

மோட்டார் பந்தயமா நடக்கிறது? யோகம் & தோஷம் இரண்டும் ஒன்றை ஒன்று முந்திக்கொண்டுபோய் கோப்பையைத் தட்டிக்கொண்டு வருவதற்கு? இரண்டிற்கான பலன்களும் இருக்கும். சம்பளம் தினாரில் கை நிறையக் கிடைக்கும். அதே நேரத்தில் சூடு பறக்கின்ற பாலைவனத்தில் வேலை பார்க்க வேண்டியதாகவும் இருக்கும். மனைவி அழகாகவும் இருப்பாள். தினமும் ஒரு மணி நேரம் கால்களைப் பிடித்துவிடவும் சொல்வாள்.

யோகத்தினால் கையில் காசு புரளும். சயன தோஷத்தினால் மனைவி கையில் புரள மாட்டாள். அவளை விட்டுப் பிரிந்து தூர தேசங்களில் வேலை பார்க்க நேரிடும். இப்படிப் பலன்கள் கலவையாக இருக்கும். இட்லி மாவையும், அடை மாவையும் சேர்த்ததுபோல இருக்கும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.72
நித்தியானந்தம்
வயது. 49
கரையாம்பாளையம்
பல்லடம்

குருவிற்கு வணக்கம்.

1.குரு சந்திரன் செவ்வாய் மூன்று கிரகங்களும் பன்னிரெண்டாம் வீட்டில் இருந்தால் குருச்சந்திர யோகம்  சந்திரமங்கள யோகம் குருமங்கள யோகம் ஆகியவை வருமா?

உங்களுக்கு இருக்கிறதா? உங்களுக்கு இருக்கும் அமைப்பை வைத்தே வாரம் 3 கேள்விகள் கேட்டு உங்கள் ஜாதகத்தை அலசிக்கொண்டிருக்கிறீர்கள். நடத்துங்கள் நாடகத்தை!

மூன்று கிரகங்கள் ஒரு இடத்தில் இருந்தால், அது கிரக யுத்தக் கணக்கில் வரும். இரண்டு கிரகங்களுக்கு இடையே இடைவெளி 5 பாகைகள் இருக்க வேண்டும். இருக்கிறதா பாருங்கள்.

யோகங்கள் எல்லாம் பன்னிரெண்டாம் வீட்டில் இருந்தால் முழுப்பலன் கிடைக்காது. பலன்கள் விரையமாகிவிடும். இருபதுவயதுப் பெண் கிடைத்தாலும், அறுபது வயதில் திருமணம் செய்துகொள்வதற்குச் சமம் அது. மாலை ஆறு மணிக்கு, தலையில் 4 முளம் மல்லிகைப்பூவை வைத்துக்கொண்டு, கணவனுடன் வெளியே போவதற்கு அவள் தயாராகிவிடுவாள். சம்பந்தப்பட்ட ஆசாமி, மூட்டு வலி என்று படுத்துக்கிடப்பான். தாமபத்யம் எப்படி இனிக்கும்?

2. இந்த மூன்றும் பன்னிரெண்டில் மிதுனத்தில் கடகலக்கினமாக இருந்து லக்கினத்தில் சுக்கிரன் மாந்தி இரண்டாமிடம் சிம்மத்தில் சூரியன் சனி புதன் மூன்றில் ராகு பத்தில் கேது இருக்க இந்த அமைப்பு மாலையோகம் என்று சொல்லி இருக்கிறீகள் இந்த கிரகங்களின் நிலைப்பாடு குறித்து விளக்கிச்  சொல்ல முடியுமா?

அடுத்தடுத்த கட்டத்தில் கிரகங்கள் வரிசையாக இருப்பதுதான்
மாலை யோகம். நீங்கள் சொல்வது போல கொத்துக் கொத்தாக
இருந்தால், அது மலர்வளையமாகிவிடும். மலர் வளையம் எதற்குப்
பயன்படும் தெரியுமா? பல்லடத்துக்காரருக்குத் தெரியாமல் இருக்குமா என்ன?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.73
Bottle mani
பாட்டில் மணி
   
ஐயா, வணக்கம்,
சூரியன், ராசியிலும் நவாம்சத்திலும்  கும்பத்தில் இருந்தால் (ராசியில் பத்தாம் வீட்டிலும்,நவாம்சத்தில் ஒன்பதாம் வீட்டிலும்) வர்கோத்தம பலன்கள் நன்மை  தரக்கூடியதா?அல்லது தீமை செய்யக்கூடியதா?
நன்றி

கும்பம் சூரியனுக்குப் பகை வீடு. அங்கே சூரியன் வர்கோத்தமம், பெற்றால், முழுப்பலன் கிடைக்காது! ஐயா என்று நீங்கள் அன்பொழுக அழைத்தாலும், உங்கள் பெயரோடு பாட்டில் இருப்பதைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. ஆகவே விளக்கத்தை வழக்கம்போல நீட்டிக்காமல் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்:-)))))
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.74
இரா.புரட்சிமணி    

ஐயா எனக்கு கேள்வி கேட்க மேலும் ஒரு வாய்ப்பு தந்தமைக்கு நன்றி.

1. ஒருவனின் நல்ல ஒழுக்க நிலைக்கு குருவைப்போல், சனிக்கும் சம்பந்தம் உள்ளதா? ஒரு வீட்டிற்கு  மூன்று துறைகள், மொத்தம் முப்பத்து ஆறு துறைகள். பரல்களைப்பார்த்து ஒரு வீட்டின் வலிமையை சுலபமாக அறிவது போல். ஒவ்வொரு துறையின் வலிமையை எப்படி அறிவது? ஒரு வீட்டில் குறைவான பரல்கள் இருப்பதால் அந்த மூன்று துறைகளுமே கெட்டுவிடும் என்று சொல்ல முடியாது அல்லவா?

ஒவ்வொருதுறைக்கும் காரகர்கள் இருக்கிறார்களே சுவாமி. அவர்கள் எதற்கு இருக்கிறார்கள் என்று பழைய பாடங்களைப் படித்துப்பாருங்கள்.

2. நண்பர்களைப்போல்தான் வாழ்க்கைத் துணையும் அமையுமா?

நண்பர்களை எதற்கு வாழ்க்கைத் துணையோடு ஒப்பிடுகிறீர்கள். நண்பர்களோடு சேர்ந்து தண்ணி அடிக்கலாம். தம் அடிக்கலாம். வாழ்க்கைத்துணையோடு சேர்ந்து அதைச் செய்ய முடியுமா? நண்பர்களோடு கருத்து வேறுபாடு என்றால் கழற்றி விட்டு விடலாம். வாழ்க்கைத் துணையைக் கழற்றிவிட முடியுமா?

3. வள்ளலார், பாபாஜி அல்லது ஓளி உடம்பு பெற்ற மற்றவர்களின் சாதகம் ஏதேனும் தங்களிடம் உள்ளதா?

ஒளி உடம்பா? குழப்புகிறீர்களே சாமி! குழப்புவதில் மட்டும் நன்றாகப் புரட்சி செய்கிறீர்கள்.

4. நீங்கள் ஏன் ஜோதிடம் எனும் ஒளியியலில் ஆராய்ச்சி செய்யக் கூடாது?இலட்ச கணக்கான மாணவர்கள் தங்களுக்கு துணை இருப்பார்கள்.
என்றும் அன்புடன்
இரா. புரட்சிமணி 

ஆகா புரட்சி, லட்சக்கணக்கானவர்கள் கொடிப்பிடிப்பீர்கள். தலைவர் சொந்தத் தொழிலை விட்டுவிட்டு ஆராய்ச்சியில் இறங்கினால், புவாவிற்கு என்ன செய்வார்? அரசியல் கட்சிகளைப் போல உண்டியல் குலுக்க முடியுமா? அல்லது செல்வந்தர்களைத் தட்டிக்கொடுத்து வசூல் பண்ண முடியுமா? அதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராது. ஆயிரம், லட்சம் என்று
சொல்லிச் சூடு ஏற்றாதீர்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

20.9.10

எது உங்களுக்கும் நல்லது? எனக்கும் நல்லது?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எது உங்களுக்கும் நல்லது? எனக்கும் நல்லது?

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி.20
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
++++++++++++++++++++++++++++++++++++++===========
மின்னஞ்சல் எண்.67
ஸ்ரீஸ்கந்தவரோதயன்
SRISKANTHAVAROTHAYAN
   
Dear Sir,
meenam 8 am kaddathil rakuvum viyalanum irunthal palan nanmija / theemija?
மீன லக்கினம். எட்டாம் இடத்தில் ராகுவும், குருவும் இருந்தால் பலன் நன்மையா? அல்லது தீமையா? இதுதானே உங்கள் கேள்வி!

சூர்யாவின் தம்பி கார்த்திக்கையும், தமன்னாவையும் வைத்துப் படம் எடுத்தால் படம் ஓடுமா? அல்லது ஓடாதா? என்று கேட்டால் என்ன பதில் சொல்வது? படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்குனர், பாடலாசிரியர் இசையமைப்பாளர், குத்துப்பாட்டு, அயிட்டம் சாங்,  போன்ற மற்ற விஷயங்கள் எல்லாம் முக்கியமில்லையா? அவற்றை வைத்துத்தானே படம் ஓடுமா? அல்லது ஓடாதா? என்று சொல்லமுடியும்

லக்கினாதிபதி எட்டில்போய் அமர்ந்தாலும், லக்கினத்தில் எத்தனை பரல்கள், லக்கினத்தில் வேறு யார் உள்ளார்கள், லக்கினத்தின் மேல் விழும் பார்வைகள். மீன லக்கினத்திற்குப் பாக்கியநாதன் செவ்வாய் (9th lord) எங்கே இருக்கிறார் என்பதுபோன்ற மற்ற விஷயங்கள் எல்லாம் வேண்டாமா?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.68
கார்த்திக் கண்ணன்
   
Hello Sir, 
What is meant by moolathirikonam...? and its house numbers also what is meant by kendiram and what are its house numbers
Karthik kannan

இடைவேளைக்குப் பிறகு திரையரங்கிற்குள் நுழைந்து, ஓடிக்
கொண்டிருக்கும் படத்தின் முன்கதையைக் கேட்டுப் பக்கத்து
இருக்கையில் அமர்ந்திருப்ப வனைத் துயரப்படுத்தினால்
என்ன நியாயம்? மூலத்திரிகோணம், கேந்திர வீடுகள் என்பதெல்லாம் அடிப்படைப் பாடங்கள். நீங்கள் முதலில் இருந்து படம் பார்ப்பது நல்லது. அதாவது துவக்கத்தில் இருந்து எல்லாப் பாடங்களையும் படிப்பது
நல்லது. (உங்களுக்கும் நல்லது. எனக்கும் நல்லது)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.69
M.நித்தியானந்தம்
வயது 49
கரையாம்பாளையம், பல்லடம்

குருவுக்கு வணக்கம்,
1 குரு ஆறு பரல்களுடன் லக்கினத்தில் இருந்தாலும் அது பகை வீடாக (மிதுனம்) இருக்க ஆறு பரல்களுக்கு உரிய பலன்களைத் தருமா?
2 புதன் ஆறு பரல்களுடன்ஆட்சி வீட்டில் (மிதுனத்தில்) இருக்க அஸ்தமனம் ஆகி இருந்தால்  ஆறு பரல்களுக்கு உரிய பலன்களைத் தருமா?
நன்றி குருவே!

இரண்டு கேள்விகளும் பரல்களைப் பற்றி இருப்பதால் இரண்டிற்கும் ஒரே பதில்தான். பகை வீட்டில் இருக்கும் கிரகத்திற்கும், அஸ்தமனமாகி
இருக்கும் கிரகத்திற்கும் ஆறு பரல்கள் எப்படி வந்தன என்று
யோசித்தீர்களா? உங்களுக்காக அவைகள் பெட்டி கொடுத்து
அதிகமான பரல்களை வாங்கியிருக்க வழியில்லை. பெட்டி கொடுத்து
மார்க் வாங்குவது என்பது என்னவென்று தெரியுமல்லவா? அவைகள் ஜாதகத்தில் இருக்கும் அமைப்பை வைத்து அந்தப் பரல்கள் வந்திருக்க வேண்டும். பரல்கள் அதிகமாக இருப்பதால் அவைகள் ஜாதகத்தில்
சிறப்பாக உள்ளன என்று பொருள். சிறப்பாக இருப்பதால், அவைகள் தங்களுடைய தசாபுத்தியில் நன்மைகளைச் செய்யும்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.70
சரவணகுமார்,
கோயம்புத்தூர்
   
Dear vathiyar sir,
Thanks for your Service. 
1. Plase tell us Guru will do good things for all lagnas? ex. for thula, he is athipathi
for 3 & 6, if he gets utcham in 10th house, Katagam, means, what will be the effect?

அண்ணே, வாங்க, வாங்க! அண்ணே என்பது ஒரு மரியாதைக்காகத்தான். நீங்க நம்ம ஊருக்காரர், அதற்காகத்தான் இந்த உபரி மரியாதை. குரு எங்கே இருந்தாலும் உங்களை மாதிரி நல்லவர்தான்!  கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களேன்னு சொல்லுவாங்க இல்லையா? அதை மனசுல
வச்சுக்குங்க சாமி!

அதோட அவரு உங்க ஜாதகத்தில் கேந்திரத்தில உச்சமாக உக்காந்திருக்காரு. அவருடைய தசா புத்திகள்ல உங்களுக்குப் பல நன்மைகளைச் செய்து, பார்க்கும் வேலையில் உயர்வடையச் செய்வாரு!

நீங்க கேட்ட கேள்விய ஜூம் பண்ணிப் பார்த்தா, அவரு 10ஆம் வீட்டில உக்காந்துகிட்ட இரண்டாம் வீட்டைப் பார்க்கிறாரு (5ஆம் பார்வையா) அதனால இரண்டாம் வீட்டுக்குரிய பலனை சிறப்பாகத்தருவாரு! ஆறாம் வீட்டுக்கு, அந்த வீட்டில இருந்து கணக்குப்போட்டா, அவரு அந்த வீட்டுக்கு (அந்த வீட்டுக்கு அதிபதிவேற) கேந்திரத்தில் உக்காந்திருக்காரு. அதனால் அந்த வீட்டுக்கும் பல நன்மைகளைச் செய்வாரு. எல்லாமே நல்லா இருக்கு!!! ஜமாயுங்க!

மூனாம் வீடு ரெம்ப முக்கியமா என்ன? கவியரசரே பாடி வச்சிட்டுப்போயிருக்காரு “அண்ணன் என்னடா, தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே!”

கண்ணாலத்துக்குப் பொண்ணு பாத்துக்கிட்டிருந்தீங்களே, ஏதாவது அம்மணி வந்து மாட்டீயிருச்சா .... ஸாரி...கிடைச்சிருச்சா?

2. ones character and behaviour will be good if one has guru in lagnam. right? I saw
a horoscope (which is with me), it has moon & guru in Kataga lagnam, which has 
gejakesari yogam as well, but personal character is not good. why and what should 
I check in her/his horoscope?

இதான வேண்டாம்ங்கிறது. படிச்ச பாடத்தை மறந்துட்டீங்களே! குருவும் சந்திரனும் ஒன்னா டூயட் பாடிக்கிட்டிருந்தா அதாவது சேர்ந்திருந்தா அதற்கு குருச்சந்திரயோகம்னு பேரு. குருச்சந்திர யோகத்திற்கான பலன் பழைய பாடத்தில் உள்ளது. வண்டியை அங்க திருப்பி பாடத்தை எட்டிப் பார்த்து, படிச்சிட்டு வாங்க!

ஸ்ரீராமச்சந்திர மூர்த்திக்குப்பிறகு கேரக்டர் 100% ஃபர்பெக்ட்டா இருந்த
/இருக்கிற மனுசனே கிடையாது. அப்பிடி இப்பிடி இருக்கத்தான்
செய்வாங்க. அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டுப் போகவேண்டியதுதான்!

3. For thula lagnam, 11th house occupied by Sani(Simmam) and it has 44parals and 6 is suya vargam.how the sani dhisai will be for the native?

கேள்வியிலேயே பதில் இருக்கிறது சாமியோவ்! பதினொன்னாம் வீட்டில பரல்கள் அதிகம் இருக்கிறதுனால வாழ்க்கையே லாபம் மிகுந்ததா இருக்கும்.வர்ற அம்மணி 100 பவுன் நகையோட வரலாம். எதுக்கும்
இப்பவே வங்கிப் பெட்டகம் (Bank Locker) ஒன்னைப் பிடிச்சு வச்சுக்குங்க. இன்னிக்கு பவுன் என்ன விலை விக்கிதுன்னு தெரியும்ல?!!!!!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

14.9.10

இவள் எதற்காக நிற்கிறாள் என்று உங்களால் சொல்ல முடியுமா?


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இவள் எதற்காக நிற்கிறாள் என்று உங்களால் சொல்ல முடியுமா?

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி.19
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
++++++++++++++++++++++++++++++++++++++===========
மின்னஞ்சல் எண்.64
நந்தினி நடராஜன்
   
வணக்கம்  ஐயா ,

நான் சில வருடங்களுக்கு முன் நாடி ஜோதிடம் பார்க்க சென்றேன் 
நாடி ஜோதிடர் என் இடது கை பெருவிரல்  ரேகை எடுத்து சென்றார் .
10 நிமிடங்களுக்கு பிறகு ஒலைகளுடன் வந்தார் .அப்பொழுது 
எனக்கு திருமணமாகவில்லை .எனது பெயர் கசடதபற என்ற 
எழுத்தில் ஆரம்பிக்குமா என்றார். பிறகு 3  ஒலைகள் பின் 4 வது  
ஒலை எனது பெயர் தாய் தந்தை மற்றும் தந்தை தொழில் என 
அனைத்தையும் சொன்னார் .பிறகு நான் தற்காலிகமாக  வேலை விட்டுவிட்டேன் என்றும் சொன்னார் .நான் ஆடிப்போய் விட்டேன் 
காரணம் நான் அப்போதுதான் வேலையை  விட்டிருந்தேன் .பிறகு 
எனது ஜாதகக் கட்டம் எழுதிக் கொடுத்தார் .எனக்கு இந்த வயதில் 
இந்த திசையில் இருந்துதான்  மாப்பிளை வருவார் என்றார்.அந்த 
மாப்பிளை ஜாதகக் கட்டம் இப்படித்தான் இருக்கும் என்றும்
சொன்னார்.அனைத்தையும் பதிவு செய்து கொடுத்தார். வீட்டிக்கு 
வந்ததும் எனது ஜாதகக் கட்டம் (ஒரிஜினல்)  ஒப்பிட்டுப் பர்ர்தேன் .
மிகச் சரியாக இருந்தது . என் திருமணம் நடைபெற்றது .எனது 
கணவரின் ஜாதகக் கட்டம் அவர் சொன்னது போலவே இருந்தது .
ஐயா எனக்கு ஒன்று புரியவே இல்லை.நான் எனது பிறந்த நேரம் 
வருடம்  எதுவும் சொல்ல வில்லை .மிகக் கவனமாக பதிலளித்தேன் .
பிறகு எப்படி அவர் என்னுடைய ஜாதகக் கட்டம்  சரியாக எழுதிக் 
கொடுத்தார்? என்னுடைய கணவரின் ஜாதகக் கட்டம் குரு எங்கே 
இருப்பார் மற்றும் புதன்  சுக்கிரன் சூரியன் எந்த கட்டத்தில் இருப்பார் 
என்று எப்படிச் சொன்னார் ? இது சத்தியமா ? ஒருவருடைய பிறந்த
நேரம் மற்றும் வருடம் இல்லாமல் ஜாதகக் கட்டம் கண்ணிக்க 
இயலாதுதானே ! பிறகு எப்படி அவர் எனது  பெயரைச் சரியாகச் சொல்லியதுடன் பிறந்த நேரம் மற்றும் வருடத்தை சொன்னார்? 
எனக்கு வரப் போகும் கணவரின் ஜாதகக் கட்டம் எப்படி சொல்ல 
முடியும்? தயவுகூறிச் சொல்லுங்கள் ////////

நாடி ஜோதிடத்தைப் பற்றி ஒரு பிரபல ஜோதிடர் அருமையாகச் சொன்னார்.“கடந்த காலத்தை அவர்கள்  அசத்தலாகச் சொல்கிறார்கள். எதிர்காலத்தைச் சொல்வதில்தான் குழப்பம் உள்ளது”

நாடிச் சுவடுகள் பல காண்டங்களாக இருக்கும். நமது நல்ல நேரம்
அவைகள் அடுத்தடுத்துக் கிடைத்தால் சரியாகச் சொல்வார்கள்.
இல்லை என்றால் சொதப்பி அனுப்பிவிடுவார்கள்.

முன்பு கூட்டுக் குடும்ப வாழ்க்கை இருந்த காலத்தில் ஒருவீட்டில்
எல்லா காண்டங்களுக்குமான ஏடுகள் இருந்தன. இப்போது அப்படி இருப்பதாகத் தெரியவில்லை. குடும்பங்கள் அனைத்தும் சுயநலத்தால்
சிதறி மைக்ரோஃபாமிலிகளாக ஆகிவிட்ட நிலையில் சொத்துக்களைப் பங்குவைப்பதைப் போல ஏட்டுச் சுவடிகளையும் பங்கு வைத்துக் கொண்டுவிட்டார்கள்.

அதனால்தான் இன்று நாடி ஜோதிடம் பார்க்கச் செல்லும் பலரும் உங்களைப்போல இல்லாமல் திருப்தியின்றித் திரும்புகிறார்கள்.

காரைக்குடியில் சாரி என்று நாடி ஜோதிடர் ஒருவர் இருந்தார். நீங்கள் சென்றால், உங்களுடன் ஒன்றும் பேச  மாட்டார். உங்களுடைய வலது கைப்பெருவிரல் ரேகையை மட்டும் பதிவு செய்து கொண்டு உங்களை
அனுப்பி விடுவார். இரண்டு மணி நேரம் கழித்து வாருங்கள் என்பார்.
மீண்டும் நீங்கள் செல்லும்போது அசந்துவிடுவீர்கள்.

உங்கள் ஜாதகம், ராசி, அம்சங்கள், மற்றும் தசா இருப்புக்களுடன்,
மற்றும் பலா பலன்களுடன், தயாராக  இருக்கும். அவர் இப்பொது
உயிருடன் இல்லை. அந்தக் கலையை அவர் யாருக்கும்  சொல்லித்
தந்து விட்டும்  போகவில்லை. அதுதான் அவலம்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.65
திருமதி. கார்த்திகா சிவகுமார்
   
Dear Sir,
Please clarify the following doubts.
1) If a planet is the owner of good and bad house (eg. for leo lagna Jupiter is the 
lord for 5th and 8th houses) What will be the effect?

அவ்வாறன நிலைமை, சுக்கிரன், செவ்வாய், குரு, சனி ஆகிய
நான்கு கிரகங்களுக்கும் உண்டு. அவ்வாறு இரண்டு  வீடுகளுக்கு
அதிபதியாகும் கிரகம், இரண்டு வீடுகளுக்கான பலன்களையும்
தரும்.

எப்படித்தரும்?

வீட்டில் அதிகாரம் செய்யும் கணவன், தன்னுடைய அலுவலகத்தில், தன்னுடைய மேலதிகாரிகளுக்குப் பெட்டிப் பாம்பாக அடங்கி நடப்பதில்லையா? அது போலத்தான் இதுவும்.

உதாரணத்திற்கு, ரிஷப லக்கினத்திற்கு அதிபதி சுக்கிரன். அவனே
அதன் ஆறாம் வீடான துலாத்திற்கும் அதிபதி. நீங்கள் சொல்வது
போல ஒரு நல்ல சேலை மற்றும் ஒரு கிழிந்த சேலை. இரண்டையும்
அவன் தனித்தனியாகக் கட்டிக் கொண்டு, கட்டிக்கொண்டதே
தெரியாமல் ஆடிக் காட்டுவான்.

ரிஷப லக்கின ஜாதகனுக்கு, சுக்கிரன் 12ல் இருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதாவது மேஷத்தில் இருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அது லக்கினத்திற்கு நல்லதல்ல.
லக்கினாதிபதி சீட்டாட்டக் கிளப்பில் (12ல்) போய் உட்கார்ந்து
கொண்டால், ஜாதகன் எல்லாவறிற்கும் போராட வேண்டியதிருக்கும்.

ஆனால் அதே நேரத்தில் ஆறாம் வீடான துலாத்திற்கு, அங்கிருந்து
மேஷம் ஏழாம் வீடு. ஆறாம் அதிபதியாகிய  சுக்கிரன் மேஷத்தில்
அமர்ந்து ஏழாம் பார்வையாகத் தன் ஆறாம் வீட்டைத் தன் பார்வையில் வைத்திருப்பதனால்,  ஜாதகனுக்கு அது  நன்மையளிக்கும் அமைப்பாகும். ஜாதகன்  எதிரிகளைத்  துவம்சம் செய்துவிடுவான்.
நோய்  நொடிகள்  அண்டாது. கடன் கப்பி ஏற்படாது.
உபரிச் செய்தி: அத்துடன் சீட்டாட்டத்தில் பணமும்  கிடைக்கும்.

ஆகவே இரண்டு பெண்டாட்டிகள் என்னும் போது...மன்னிக்கவும்...
இரண்டு வீடுகள் என்னும்போது. ஒவ்வொரு  வீட்டு வாசலிலும்
நின்று கொண்டு, சம்பந்தப்பட்ட ஆசாமி எங்கே நின்று
கொண்டிருக்கிறான் அல்லது எங்கே கூத்தடித்துக்கொண்டிருக்கிறான்
என்று பார்த்து, அவனால் பலன் உண்டா என்று தெரிந்து கொள்ளுங்கள். இரண்டு சம்சாரம் உள்ளவனைக் கேளுங்கள் - யார் மேல் பிரியம் என்று...ஹி.ஹி.. இருவர் மேலும் பிரியம்  என்பான். அதுபோலத்தான் கிரகங்களுக்கும், இரண்டு வீடுகளின் பேரிலும் அவை பிரியமாக
இருக்கும்.

காதை சற்று அருகே கொண்டு வாருங்கள். 12 வீடுகளுக்கும் பலன்
பார்க்கும் ரகசியத்தைச் சொல்லித் தருகிறேன். ஒவ்வொரு
வீட்டிற்கும் தனிதனியாக பலனை ஆராய்ந்து பாருங்கள். அந்த
வீட்டையே லக்கினத்திற்கு சமமாக நினைத்துக்கொண்டு, அந்த
வீட்டின் அதிபதி எங்கே இருக்கிறான் என்று பாருங்கள்.

உதாரணத்திற்குப் பத்தாம் வீடு என்றால், அதை லக்கினமாக நினைத்துக்கொண்டு அதன் அதிபதி எங்கே இருக்கிறார்? அவருடன்
யார்யார் இருக்கிறர்கள்? யாராருடைய பார்வைகள் அந்த வீட்டின்
மேல் விழுகிறது? யாராருடைய பார்வைகள் அவர் மேல் விழுகிறது?
அந்த வீட்டின் சர்வாஷ்டக பரல்கள் என்ன? அவருடைய  சுயவர்க்கப்
பரல்கள் என்ன? அவருக்கு உரிய தசை அல்லது புத்தி எப்போது வர
உள்ளது? என்று பாருங்கள்.  அது உங்களுக்கு கிடைக்கவிருக்கும் வேலைக்கான பதிலத் தரும்.

அத்துடன் கோள்சாரச் சனி லக்கினத்திற்குப் பத்தாம் வீட்டிற்கு
6, 8, 12ஆம் வீடுகளில் சஞ்சாரம் செய்யும்  காலங்களில், (அதாவது
சுற்றி வரும் வேளையில்) வேலையில் பிரச்சினைகள் உண்டாகும்.
நீங்கள் தண்ணீரில்லாக் காட்டிற்குத் தூக்கியடிக்கப்படலாம்.
ஏதாவது தவறு செய்ய நேரிட்டு விசாரணைக்கு உட்பட நேரிடலாம். சஸ்பென்ட்டாக நேரிடலாம். உத்தியோகத்தால் ஊர் மாற்றம் ஏற்பட நேரிடலாம். உத்தியோகத்தையே மாற்ற நேரிடலாம். அது
அத்தனையும் பத்தாம் இடத்திற்கு எதிராகச் சுற்றிவரும் சனியால் அவ்வப்போது நடக்கும்.

விளக்கம் போதுமா?

போதாது என்றால் சொல்லுங்கள். மீண்டும் வருகிறேன்
விளக்கங்களுடன்!

2) Retrogated and debeliated jupiter will act like exalted Jupiter and vice 
versa. Pls explain this. student with regards,
nivedhitha.

வக்கிரகதியிலும் நீசமடைந்தும் உள்ள குரு உச்சனைப் போல நடந்து கொள்வாரா என்கிறீர்களா? எனக்குத் தெரிந்து நடந்து கொள்ள மாட்டார்.
ஒரு கிரகம் உச்சமடையாவிட்டாலும் பரவாயில்லை - நீசமடையக்
கூடாது. ஒரு வியாபாரத்தில் லாபம் வராவிட்டாலும் பரவாயில்லை.
நஷ்டம் வரக்கூடாது. புரிகிறதா சகோதரி?

இன்னும் அழுத்தமான உதாரணம் வேண்டுமா? ஒரு பெண்ணிற்குத் திருமணமாகாவிட்டாலும் பரவாயில்லை. தாய்  வீட்டிலேயே
இருந்து விடுவாள் ஆனால் திருமணமான அடுத்த நாளே விதவை
யானால் என்ன ஆகும்?

உச்சமடைந்த கிரகம் தலை நிறையப் பூ, பொட்டு, கை நிறைய
வளையல்கள் என்று வளைய வரும் பெண்ணிற்குச்  சமம்.
நீசமடைந்த கிரகம் விதவைக்குச் சமம். விளக்கம் போதுமா?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.66
ராஜூ ரங்கநாத் என்னும் ருக்மாங்கதன்
   
Dear sir,
     if two debiliated planets[saturn,sun neecham] aspects directly each other,
will it amount to "neesa banga raja  yogam" as there is a say that "neechanai 
neechan paarthaal kittidum rajayogam". sukra is also in debilitation.will  the 
above position of two debilited planets release sukra from debilitation and 
give neesa bangam.if so when will it comes into effect?
My son's  horoscope is given below.
Dhanusu lagnam.moolam 3rd paatham.moon and  mars are in lagna.kedhu in 
second.jupiter and Saturn are in  fifth.raghu in eighth.venus in tenth.sun in eleventh.mercury in twelth. pl. can you clarify?  
thanking   you                                                                     
yours R.Rukmangathan

உதிரியான கிரக நிலைகளைக்கொடுத்து, can you clarify? என்றால் என்னத்தைச் சொல்வது? பீச்சில் நிற்கும் ஒரு  பெண்ணைக் காட்டி -
இவள் யார், இங்கே எதற்காக நிற்கின்றாள் என்று உங்களால் சொல்ல முடியுமா?  என்று கேட்பதுபோல உள்ளது உங்கள் கேள்வி.

முழு ஜாதகத்தையும் கொடுத்து, உங்களுடைய சந்தேகத்தை
நேரடியாகக் குறிப்பாகக் கேட்பதுதான் (by a specific question)  
 முறையானது! அவ்வாறு அனைவரையும் பழகிக்கொள்ள
வேண்டுகிறேன்! அதுதான் நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விக்கு
உரிய பதிலைப் பெற்றுத்தரும்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

13.9.10

நமீதாவின் நடனத்தை மட்டுமே வைத்து ஒரு முழுத் திரைப்படத்தை எடுத்தால் ஓடுமா?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நமீதாவின் நடனத்தை மட்டுமே வைத்து ஒரு முழுத் திரைப்படத்தை எடுத்தால் ஓடுமா?

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி.18
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
++++++++++++++++++++++++++++++++++++++===========
மின்னஞ்சல் எண்.61
அகிலா நாராயணன்

Dear vathiar avarkale!
        kindly clarify how bindus are assigned to all 12 places. in the chart for calculation of bindus  ,only lagna and 7 plantes are taken into account. also you have assigned one bindu number only for rasi where3 planets available.for the past 4 months i am reading all the lesson through kuduthurai. this blog is suggested by my son. kindly excuse me and enlighten me by sparing little time in your busy schedule.
with regards,
snarayanan

நல்ல கேள்வி. நீங்கள் கூடுதுறையார் பிரித்துக் கொடுத்திருக்கிற வழி மூலம் செல்லாமால், துவக்கத்தில் இருந்து அத்தனை பாடங்களையும் படிப்பது நல்லது சகோதரி!

ராகுவிற்கும், கேதுவிற்கும் சொந்த வீடு இல்லாததால் அவர்களை அஷ்டகவர்க்க ஆட்டத்தில்  சேர்த்துக் கொள்ளவில்லை. சூரியனுக்கு அவர் இருக்க வேண்டிய இடத்தை வைத்து மதிப்பெண்கள் கொடுத்து ஒரு அட்டவனையும், மற்ற கிரகங்களில் இருந்தும் லக்கினத்தில் இருந்தும் அவர் இருக்க வேண்டிய இடத்தை வைத்து அட்டவனைகளையும் தயார் செய்து (மொத்தம் 8 அட்டவனைகள்) பார்த்தால் சூரியனின் சுயவர்க்க அட்டவனை கிடைக்கும். இது போல மற்ற கிரகங்களுக்கும் சுயவர்க்க அட்டவனைகளைத் தயார் செய்து மொத்தத்தையும் கூட்டி இறுதி அட்டவனை தயார் செய்தால் சர்வாஷ்டக அட்டவனை கிடைக்கும்.

நீங்கள் இதைத் தயார் செய்யலாம். அந்தக் காலத்தில் கணினி ஜாதகங்கள் வரும் முன்பு அப்படித்தான் தயார் செய்தார்கள். புதியவர்களுக்கு நாக்குத் தள்ளிவிடும். ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தயார் செய்ததைச் சரி பார்க்க வேண்டும்.

கணினி கண் இமைக்கும் நேரத்தில் அதைச் செய்து கொடுக்கும். ஆகவேதான் அனைவரையும் கணினி மூலம் எடுத்துக் கொள்ளச் சொல்கிறேன். சிலர் அதையும் மீறி நாங்கள் அதைத் தெரிந்து கொண்டு செய்து பார்க்க விரும்புகிறேன் என்பார்கள். அவர்களுக்காக ஒரு நெடிய கட்டுரை மூலம் அதை விளக்க உள்ளேன். பொறுத்திருங்கள்.

சென்னையில் இருந்து மும்பைக்கு விமானத்தில் போகலாம். ரயிலில் போகலாம். பேருந்திலும் போகலாம். நடந்து போவேன் என்று சொன்னால் என்ன செய்வது?



++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.62
சிங்கை சூரி என்னும் சுரேந்திரன் சங்கர்
சிங்கப்பூர்
   
ஐயா வணக்கம்,

1. முதல் கேள்வி, 6,8,12 ல் எதேனும் ஒன்றில் கெட்டவர்கள் (ராகு, கேது, சனி, செவ்) இருந்தால் "கெட்டவன் கெட்டிடின் கிட்டிடும் ராஜ யோகம்” என்ற பஞ்ச் டயலாக் பெருந்துமா, எந்த அமைப்புக்கு இந்த டயலாக் பொருந்தும்?  

துஷ்ட ஸ்தானம் என்பது 6, 8, 12ஆம் வீடுகளைக் குறிக்கும். 3ஆம் வீட்டையும் இந்தக் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு துஷ்ட ஸ்தானத்தின் அதிபதி, மற்றொரு துஷ்ட ஸ்தானத்தில், ஒரு துஷ்டனுடன் அமர்ந்திருந்தால் யோகம் உண்டாகும்.

உதாரணத்திற்கு, சிம்ம லக்கினத்திற்கு, சனி 6ஆம் இட அதிபதி. அவர் ஜாதகனின் 12ஆம் வீட்டில் (கடகராசியில்) சந்திரனுடன் இருந்தால், அது விபரீத ராஜயோகம் ஆகும்!

சுருக்கமாகச் சொன்னால் 3, 6, 8, 12ஆம் அதிபதிகளில் இருவர், அந்த வீடுகள் ஒன்றில் கைகோர்த்துக் கொண்டு இருந்தால், அது விபரீத ராஜயோகம் ஆகும். கிடைக்காததை, அவர்கள் கிடைக்க வைப்பார்கள்.

அது மட்டுமே இந்த டயாலாக்கிற்குப் பொருந்தும்.

சனி இரண்டு லக்கினங்களுக்கு அதிபதி. ஆயுள்காரகன். கர்மகாரகன் (authority for work) அவனை எப்படிக் கெட்டவர்கள் லிஸ்ட்டில் சேர்ப்பீர்கள்? அதுபோல செவ்வாய் இடம் பூமிகளுக்குக்குக் காரகன். அத்துடன் இரண்டு வீடுகளுக்குக் காரகன். அவனை எப்படிக் கெட்டவர்கள் லிஸ்ட்டில் சேர்ப்பீர்கள்? ராகு & கேது தாங்கள் இருக்கும் இடத்தைத் தங்கள் வீடாக்கி கொண்டு அதற்கான பலனைத் தருபவர்கள். அவர்களையும் எப்படி முழுக் கெட்டவர்களாகச் சித்தரிக்கமுடியும். ஆற அமர்ந்து யோசித்துப்பாருங்கள்!

2. ரிஷப லக்னம், 8ம் விட்டில் அமர்ந்திருக்கும் ராகுவிற்கு , 2ம் வீட்டில் அமர்ந்திருக்கும் சனியின் பார்த்தால், does it signifies Longevity or still subject undergoes painful death as per you 8th house lessons?

சனி இரண்டில் அமர்ந்திருப்பது தனம், குடும்பம் ஆகிய மேட்டர்களுக்கு நல்லதல்ல. மற்றபடி அவர் ஆயுள் ஸ்தானத்தைப் பார்ப்பது நன்மையளிக்கும் அமைப்பாகும். நீங்கள் சொல்லும் வலியுடைய மரணத்திற்கு எட்டாம் வீட்டைவைத்து இன்னும் அலச வேண்டும். ஆகவே பொதுவிதியை வைத்துக் கும்மி அடிக்க முடியாது. கும்மி அடிப்பதற்கு மேளமும் வேண்டும், தாளமும், நாயனமும் வேண்டும் அதை நினைவில் வையுங்கள்!

3. செவ்வாய் 2,4,7,8,12 அமர்ந்திருந்தால் தோஷம்,  செவ்வாய் - 2,4,7,8,12க்கு இந்த எதேனும் ஒன்றில்/இரண்டிற்கு  அதிபதியானாலும்  தோஷம் ஆகுமா? எது நிக்கவைத்து family life அடிக்கும் - எது தொங்கவிட்டு அடிக்கும்?

செவ்வாய் தோஷத்தை வைத்து இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளன. அவன் அந்த வீடுகளுக்கு அதிபதியானால் தனக்குத்தானே தோஷத்தைக் கொடுக்க மாட்டான் என்பது பரவலாக நம்பப்ப்டுகிறது. மாந்தி, ராகு போன்றவர்கள்தான் தொங்க விட்டு அடிப்பார்கள். வாய்ப்புக் கிடைத்தால் செவ்வாய் நிற்க வைத்து மட்டுமே அடிப்பார்:-)))))
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.63
T.மகேஷ் என்னும் மகேஷ் ராஜ்
திருச்சி
    

1). லக்னத்தில் சனி என்றால் அவன் துன்பப்படப் பிறந்தவனா?

யார்தான் துன்பப்படவில்லை? 100% இன்பமாக இருக்கிறேன் என்று யாரையாவது சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்! இன்பமும், துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை! இரவு பகலைப் போல இன்பமும் துன்பமும் மாறி மாறித்தான் வரும்! லக்கினத்தில் குரு இருந்தால் மட்டும் வாழ்க்கை இன்ப மயமாகிவிடுமா என்ன? இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றாகப் பார்க்கப் பழகிக்கொள்ளுங்கள். நமீதாவின் நடனத்தை மட்டுமே வைத்து முழுமையாக ஒரு படத்தைத் தயாரிக்க முடியுமா என்ன? இரண்டரை மணி நேரம் அதைத் தொடர்ந்து பார்க்க முடியுமா என்ன? படம் என்றால் ஒரு நாயகன் ஒரு நாயகி, நான்கு காதல் காட்சிகள், இரண்டு பாடல்கள், வெட்டு, குத்து, வில்லன்களின் சேஸிங், இரண்டு காட்சிகள் வடிவேலின் காமெடி என்று எல்லாம் கலவையாக இருக்க வேண்டாமா? வாழ்க்கையும் அதுபோலத்தான். ஜாதகமும் அதற்குத் தக்கபடிதான் வெரைட்டியாக இருக்கும்.

2). லக்னத்தில்  சனி  இருந்தால் அவன் சனி பகவானை வணங்கினால் வெற்றி பெறுவானா? அவன் தொழிலில் வெற்றி கான முடியாது அதாவது தொட்டது துலங்காது என்பார்களே அது சரியா? ஒபாமா ஜாதகம்கூட லக்னத்தில்  சனி அவர் ஹனுமான் பக்தர் அதனால் வெற்றி வந்ததா?

அன்னை இந்திரா காந்தியின் ஜாதகத்தில் லக்கினத்தில் சனி இருந்தது. அவர் வெற்றி பெறவில்லையா? பதினேழு ஆண்டுகள் இந்தியப் பிரதமராக இருந்தாரே - அதை எந்தக் கணக்கில் சேர்ப்பது? பகவானை வணங்கினாலும் வெற்றி பெறுவான். வணங்காவிட்டாலும் வெற்றி பெறுவான். உங்கள் வணக்கத்தை எல்லாம் எதிர்பார்த்து சனி பகவான் ஒன்றும் காத்துக்கொண்டிருக்க மாட்டார். அதை முதலில் உணருங்கள். வணங்குபவனுக்குத் துன்பம் விலகாது. ஆனால் ஸ்டாண்டிங் பவர் கிடைக்கும்.  மழையில் சும்மா செல்பவனுக்கும், குடையுடன் செல்பவனுக்கும் உள்ள வித்தியாசம் என்று அதை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

3).லக்னத்தில் சனி இருப்பவன் தொழிலதிபர் (business management guy) ஆவான். சனி (sani is good for management and all kind of business - is it true?) இருப்பவனை வெல்வது கடினம் இப்படி ஒரு கருத்து உள்ளது  அது உண்மையா?

லக்கினத்தில் சனி இருப்பவன் அத்தனை பேரும் எப்படித் தொழிலதிபர் ஆக முடியும்? பத்தாம் வீட்டுக்காரனின் தயவு வேண்டாமா?

4). லக்னத்தில் சனி குரு நீசம். ஆனால் எழில் லக்னாதிபதி நின்று லக்னத்தை (விருச்சிக லக்னம்) பார்த்தால் சனி ஏழைப் பார்த்தால் ஏழை குரு 5 பார்வை  இதனால் திருமணம் தாமதம்  ஆகுமா ? இதில் ஏழில் (செவ்வாய் +சூரியன் ) இருந்தால் ?

மிகவும் குழம்பிப் போயிருக்கிறீர்கள்! ஏழாம் வீட்டை சனி பார்த்தால் திருமணம் தாமதம் ஆகும் என்பது பொது விதி! களத்திரகாரகன் சுக்கிரன் எங்கே இருக்கிறான்? அவனை ஏன் ஒளித்து வைத்திருக்கிறீர்கள்? அவன் முக்கியமில்லையா? உங்கள் ஜாதகத்தில் - லக்கினத்தில் சனி இருக்கிறது - அதனால் கேட்ட கேள்விகள் அனைத்துமே லக்கினத்தில் சனியை வைத்து - சரிதானே?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்
========================================================


வாழ்க வளமுடன்!

8.9.10

நடப்பது நடக்கும், நடக்காதது நடக்காது!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நடப்பது  நடக்கும்; நடக்காதது  நடக்காது!

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி.17
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
++++++++++++++++++++++++++++++++++++++===========
மின்னஞ்சல் எண்.57
மகேஷ்
   
Dear Sir,
I like to ask one question ....how to find the ista devatha ( favourable god) from our horoscope,  please explain in detail
Regards
Mahesh

இன்று 30 வயதிற்குக் கீழ்ப்பட்டவர்கள் பலருக்கு, திரைப்பட
நட்சத்திரங்கள் தான்  இஷ்ட தெய்வம். திரிஷா, ஸ்ரேயா,
நயன்தாரா, அனுஷ்கா சர்மா, அஸின், தமன்னா என்று  இஷ்ட
தெய்வங்களின் பட்டியல் நீளும். சிலர் கோவில் கட்டியும்
கும்பிடுகிறார்கள். சிலர் மன்றங்கள்  வைத்துக் கூட்டு வழிபாடு
செய்கிறார்கள். அதுதான் நிலைமை

நீங்கள் வித்தியாசமாக வான நட்சத்திரங்களுக்குரிய இஷ்ட தெய்வங்களைக் கேட்டிருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. (உங்கள் வயது என்ன? அநேகமாக 30ஐத் தாண்டியிருக்க வேண்டும். என் ஊகம் சரியா?)

உங்களுக்காக 27 நட்சத்திரக்காரர்களுக்கும் உரிய தெய்வங்களைப் பட்டியல் இட்டுள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் வணங்கிப் பயனடையலாம்.

01. அஸ்வினி - ஸ்ரீ சரஸ்வதி தேவி
02. பரணி - ஸ்ரீ துர்கா தேவி
03. கார்த்திகை - ஸ்ரீ சரவணன் (முருகப் பெருமான்)
04. ரோகிணி - ஸ்ரீ கிருஷ்ணர். (விஷ்ணு பெருமான்)
05. மிருகசீரிடம் - ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் (சிவ பெருமான்)
06. திருவாதிரை - ஸ்ரீ சிவபெருமான்
07. புனர்பூசம் - ஸ்ரீ ராமர் (விஷ்ணு பெருமான்)
08. பூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)
09. ஆயில்யம் - ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)
10. மகம் - ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)
11. பூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி
12. உத்திரம் - ஸ்ரீ மகாலெட்சுமி
13. ஹஸ்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி
14. சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்
15. சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி
16. விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான்.
17. அனுசம் - ஸ்ரீ லெட்சுமி நாராயணர்.
18. கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)
19. மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர்
20. பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)
21. உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்.
22. திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணு பெருமான்)
23. அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணு பெருமான்)
24. சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)
25. பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)
26. உத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)
27. ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்.

மேலே உள்ளவை ஒவ்வொரு நட்சத்திரகாரர்களிற்கும் அதிர்ஷ்டம் தரக்கூடிய தெய்வங்கள் ஆகும். அதைவிட முக்கியமாக துன்பங்களைப் போக்கும்  அல்லது துன்பங்களைத் தாக்குப்பிடிக்கும் தன்மையைத் தரக்கூடியவை யாகும். அதை மனதில் கொள்க!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.58
S.A. பாபு
   
சார்

1. நவரத்தின  மோதிரம்  எல்லோரும் போடலாமா அல்லது ஜாதக கிரக அமைப்பிற்கு ஏற்ற கல் போட வேண்டுமா.போட்டால் எந்த விரலில் போட வேண்டும்.?

ஒவ்வொரு தசைக்கும் ஒவ்வொரு மோதிரமாக மாற்றிக்
கொண்டிருப்பதில் உள்ள பணச் செலவு காரணமாக,
ஒரே நவரத்தின மோதிரமாகப் போட்டுக் கொள்பவர்கள்
இருக்கிறார்கள். நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும்
போட்டுக்கொள்ளலாம். உங்கள் வங்கி இருப்பை
வைத்து நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.  
மோதிர விரல் எதற்கு இருக்கிறது? அதில் போட்டுக்
கொள்ளுங்கள்.

இந்தமாதிரி நவரத்தின மோதிரம் போட்டுக்கொண்டால், நமது
ஜாதகம் தலைகீழாக மாறிவிடும் என்ற நினைப்பு இருந்தால்
அதை விட்டு விடுங்கள். எதுவும் மாறாது. நடப்பது நடக்கும்,  
நடக்காதது நடக்காது. கிடைப்பது கிடைக்கும். கிடைக்காதது 
கிடைக்காது.

கற்கள் உங்களுக்கு வரவிருப்பதை enhance பண்ணிக்கொடுக்கும். அவ்வளவுதான்.

 2. பெயர் வைப்பது பிறந்த தேதி அல்லது மொத்த கூட்டு எண்ணுக்கு பொருத்தமாக வைப்பது நல்லது என்று சொன்னிர்கள்.அப்படி வைக்கும்போது அந்த கிரகம் ராசி கட்டத்தில் 6,8 அல்லது நவாம்சத்தில்  நீசமாக இருந்தாலும் பரவாயில்லையா?
அன்புடன்
உங்கள் மாணவன்
S.Α.BABU

நீங்கள் பெயரை மாற்றிவைத்தவுடன் நீசத்தன்மையும் மாறிவிடுமா என்றுதானே கேட்கிறீர்கள்? அதெல்லாம் மாறாது. நீசத்தன்மை அப்படியே இருக்கும். பெயரை மாற்றினாலும் மாற்றாவிட்டாலும் பலன்களும் உள்ளது உள்ளபடியே தொடரும்.

பெயர் மாற்றமும் உங்களுக்கு வரவிருப்பதை enhance பண்ணிக்கொடுக்கும். அவ்வளவுதான்.

விளக்கம் போதுமா?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.59
புரட்சி மணி   
ஐயா,

இதோ என்னுடைய சந்தேகங்கள்,

1.அட்டவர்கத்தில் இராகு,கேது, மாந்தி- ஐ கணக்கில் எடுத்து கொள்வது இல்லை என்று நினைக்கின்றேன். அப்படி இருக்கும் பொழுது, அவைகள் இருக்கும் மூன்று வீட்டின் வலு எப்படி அட்டவர்கத்தில் சரியாக தெரியும்?

தமிழ்நாட்டிலுள்ள பல ஜோதிடர்கள் அஷ்டகவக்கத்தையே 
கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. மாந்தியையும் எடுத்துக் கொள்வதில்லை. அது இரண்டும் இல்லாமல் அவர்களால் பலன்
சொல்ல முடியும் என்னும் போது நீங்கள் கேட்டுள்ளது
சாத்தியமாகாதா என்ன?

2. மாந்தி இராசியில் தீங்கிழைப்பது போலவும் அம்சத்தில் நல்லது செய்வது போலவும் அமர்ந்து இருந்தால் அவன் எதை செய்வான்? நல்லது தானே?

அம்சத்தில் நல்லது செய்வது போலவா? நோ சான்ஸ். மாந்தி deadly planet. எங்கே இருந்தலும் தீமைதான்.

3.ஜகன்னாத ஹோரா மற்றும் நமது வகுப்பு மாணவர் திரு. தியாகராஜன்(என்று நினைக்கின்றேன்) இவர்களுடைய மென்பொருளில் திசையில் ஐந்து முதல் எட்டு மாதங்கள் வித்தியாசம் வருகின்றதே ஐயா? தவறு என்னுடையதா அல்லது அவர்களின் மென்போருளிலா?

தவறு உங்களுடையதுதான். எதற்காக இரண்டு மென்பொருட்களை உபயோகிக்கிறீர்கள்? சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து கம்ப்யூட்டரை வணங்கிவிட்டு, ஏதாவது ஒரு மென்பொருளை மட்டும் உபயோகியுங்கள்.

4. இராகு மற்றும் கேது தீய வீட்டில் இருப்பின் நல்லது என்பது 
பொது விதி. அவர்கள் தாங்கள் இருக்கும் வீட்டை சொந்த வீடாக்கிக் கொள்வதால் அவர்களும் , திரிகோண வீடுகளில் அமர்வது 
நல்லது தானே? திரிகோண வீட்டின் அதிபதி எப்போதும் சுபராகவே கருதப்படவேண்டும் என்பதும் ஒரு விதி. ஆதலால் அவர்களும் 
நல்லவர்கள் ஆகிவிடுவார்கள்தானே?

உங்கள் சந்தோஷத்திற்காகச் சொல்வதென்றால், நல்லவராகிவிடுவார்கள். ஆனால் என்னதான் பதவி கிடைத்தாலும்  உண்மையான சுபக்கிரகங்களைப் போல வாரி வழங்க மாட்டார்கள். ரேசனில்தான் வழங்குவார்கள்.

5. ஒருவனின் ஜாதகத்தில் இருக்க வேண்டியது லக்னத்தில் குரு, இருக்ககூடாதது லக்னத்தில் சனி. இருவருமே லக்னத்தில் இருந்தால் அவன் எப்படி இருப்பான்? குரு வலுவாக இருக்கும் பட்சத்தில்  நீங்கள் முன்பு சொன்னது போல  ஒரு பெண் அவனை கண்ணை மூடி கொண்டு திருமணம் செய்யலாமா?

எப்படியிருப்பான் என்பதோடு நீங்கள் நிறுத்திக்கொண்டிருக்க
வேண்டும். எதற்காக பெண்ணை உங்கள் கேள்விக்குள்
திணித்திருக்கிறீர்கள்? இருவரும் லக்கினத்தில் இருந்தால்,
ஆசாமி கலவையாக இருப்பான். வாழ்க்கையும் கலவையாக
இருக்கும். பெண்ணும் கண்னைத் திறந்து வைத்துக் கொண்டுதான்
அவனை மணக்க வேண்டும்.

6. ஒருவனுக்கு புதன் கன்னியில்  இருப்பின் அவன் அங்கே அவன் ஆட்சி, உச்சம், திரிகோணம் இதில் எந்த பலத்தில் உள்ளான் என்பதை எப்படி அறிய முடியும்? இதேபோல் மற்ற கோள்களுக்கும்ஆட்சி, திரிகோணம் கண்டு பிடிப்பது எப்படி?

இது எல்லாம் அடைப்படைப் பாடம். அடிப்படைப் பாடத்தைப்
படிக்காமல், நீங்கள் புரட்சி செய்யப் புறப்பட்டால்,  அது
அட்டைக் கத்தியுடன்  யுத்தத்திற்கு செல்வதற்குச் சமம்.
முதலில் அடைப்படைப் பாடத்தை  எல்லாம் படியுங்கள்.
புரட்சியைப் பின்னால் வைத்துக்கொள்வோம்:-))))

7. நிறைய கேள்விகள் கேட்டு விட்டேன் என்று நினைக்கின்றேன், ஒரு மாணவன் இவ்வளவு சந்தேகங்கள் தான்  கேட்க வேண்டும் என்று ஏதேனும் வரை முறை இருந்தால் சொல்லி விடுங்கள் ஐயா.
தங்களுடைய பொன்னான நேரத்திற்கு மிக்க நன்றி ஐயா.
இவன்
என்றும் அன்புடன் மற்றும் சந்தேகங்களுடன்
இரா.புரட்சிமணி

என்று அன்புடன் இருங்கள். ஆனால் என்றும் சந்தேகத்துடன் இருக்க வேண்டாம். இந்த ஸீசனுக்கு உங்களுடைய கோட்டா முடிந்துவிட்டது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.60
ஷியாம் சுந்தர்
   
Hi,

I have been reading your blog and I am follower of your wirtings. How important is birth nakshatra? Which the most powerful nakshatra? Is there a way to rank them? How does it affect a person's horoscope? Please write regarding this in your blog.
Shyam

நட்சத்திரத்தை எல்லாம் தகுதி அடிப்படையில் வரிசைப்படுத்த
முடியாது. நல்ல காலம் அவற்றிற்கு ரேங்க் அளிக்கப்படவில்லை.
அளிக்கப்பட்டிருந்தால், வானத்தில் இட ஒதுக்கீட்டில்
அவைகளுக்குள் பிரச்சினை வந்திருக்கும். கடவுள் காப்பாற்றினார்

உங்களுக்கு உங்கள் நட்சத்திரம் உயர்ந்தது. எனக்கு என் நட்சத்திரம்தான் உயர்ந்தது.

திரு என்று துவங்கும் நட்சத்திரங்கள் இரண்டு. ஒன்று திருவாதிரை. மற்றொன்று திருவோணம். திருவாதிரை ஈசனுக்கு உரிய நட்சத்திரம். திருவோணம் பெருமாளுக்கு உரிய நட்சத்திரமாகும்.

எச்சரிக்கையாக உரிய நட்சத்திரம் என்றுதான் குறிப்பிட்டுள்ளேன்.
பெருமாள் பிறந்த நட்சத்திரம் என்று எழுதியிருந்தால், கடை பெஞ்ச்
கண்மணி யாராவது, பிறப்பு சான்றிதழைக் காட்டச் சொல்லிக்
கேட்பார்கள்.

சதயம் விநாயகருக்கு உரியது. கார்த்திகை and விசாகம் முருகப்
பெருமானுக்கு உரியது. மூலம் ஆஞ்சநேயருக்கு உரியது.
புனர்பூசம் ராமபிரானுக்கு உரியது. பூசம் பரதனுக்கு உரியது.
ஆயில்யம் லெட்சுமணன் மற்றும் சத்ருக்கனனுக்கு உரியது.

மற்றபடி நட்சத்திரங்களை வைத்துப் பல சொல்லடைகள் உண்டு:

தவத்துப் பிள்ளை ‘மகத்தில்’ பிறக்கும் என்பார்கள்.
ஆண் ‘மூலம்’ அரசாளும் என்பார்கள்.
அவிட்டத்தில் பிறந்தால் வீட்டில் தவிட்டுப்பானைகூட மிஞ்சாது
என்பார்கள். அதில் (சொல்லடைகளில்) எல்லாம் உண்மையில்லை!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!