மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 121 - 130. Show all posts
Showing posts with label Lessons 121 - 130. Show all posts

6.11.08

ஜோ.பாடம்.130: பன்னிரெண்டாம் வீடு - முதல் பகுதி!

ஏமாற்றங்கள், துரோகங்கள், நஷ்டங்கள், கவலைகள், வெளியில் சொல்ல முடியாத
பய உணர்வுகள், விரையங்கள், செலவுகள், தண்டனைகள். படுக்கை சுகங்கள்,
தூக்கம், தீய பழக்கங்கள், ரகசிய எதிரிகள், பிறந்த இடத்தில் இருந்து தொலை
தூரத்தில், வேறு இடங்களில் வசிப்பது , இடது கண், கால்கள், பாதங்கள், அடுத்த
பிறவி போன்ற பல விஷயங்களைச் சுட்டிக் காட்டுவது பன்னிரெண்டாம் வீடு.

மொத்தத்தில் பன்னிரெண்டாம் வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பல விஷயங்கள்
நம்மைக் கேட்காமலே நடக்ககூடியவை. நாம் முயன்றாலும் தடுக்க முடியாதவை.
நாம் விரும்பாவிட்டாலும் வந்து நின்று நம்மைத் தொல்லைப் படுத்துபவை.

ஆகவே இருக்கின்ற வீடுகளிலேயே மிகவும் மோசமான வீடு பன்னிரெண்டாம்
வீடுதான்.

அதை மோசமான வீடு என்று சொல்லாமல் மறைவிடம் என்று ஜோதிட வல்லுனர்கள்
குறிப்பிடுவார்கள்.

நட்பு, நட்பு என்று அலைபவன், தன் நண்பன் ஒருவனால் ஒரு துரோகத்தைச்
சந்திக்கும்பொதுதான் நட்பை முறித்துக் கொண்டு, "இறைவா, என் எதிரிகளை நான்
பார்த்துக் கொள்கிறேன்; என் நண்பர்களை நீ பார்த்துக்கொள்!" என்பான்.

சேர்த்து வைத்த பணத்தை எல்லாம், ஒரு நாள் பங்கு வணிகத்திலோ அல்லது
ரியல் எஸ்டேட்டின் வீழ்ச்சியிலோ பறி கொடுத்த பிறகுதான் ஒரு மனிதனுக்கு நஷ்டம்
என்பது என்ன வென்று தெரியவரும்.

ஆசை ஆசையாக வளர்த்த பெண், ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல், வீட்டை
விட்டுத் தனக்குப் பிடித்தமானவனுடன் ஓடிப்போய் விடும்போதுதான் அல்லது வளர்த்த
மகன், "அப்பா, உன்னை வீட்டில் வைத்து போஷிக்க என் மனைவி விரும்பவில்லை,
நான் பணம் கட்டிவிடுகிறேன், நீ முதியோர் இல்லத்தில் போய் இரு" என்று சொல்லும்
போதுதான்," தென்னையை பெத்தா இளநீரு, பிள்ளையைப் பெத்தா கண்ணீரு;
பெத்தவன் மனமே பித்தம்மா பிள்ளை மனசே கல்லம்மா" என்ற பாடல் நினைவிற்கு
வந்து அல்லாடுவான்.

"தீய பழக்கங்கள், வேலைக்காரனைப் போல முதலில் வரும்.பிறகு அது உனக்கு
எஜமானாக மாறிவிடும். ஆகவே தீய பழக்கங்கள் வேண்டாம் ' என்று பெரியவர்கள்
சொல்வதைக் கேட்காமல், "அவர்கள் கிடக்கிறார்கள், அனுபவிக்கத்தெரியாதவர்கள்"
என்று சொல்லி தீய பழக்கங்களுக்கு உள்ளாகுபவன், ஒரு நாள் கடும் நோய் வந்து
மருத்துவ மனையில் படுத்துப் பெரும் செலவுகளைச் சந்திக்கும்போதுதான், தீய
பழக்கங்களின் கொடுமையை உணருவான்.

'காதலி, காதலி என்று ஒரு தேவதைக்காக உருகியவன், உருகிப் பெற்றோர்களை
உதறிவிட்டு, அவளைக் கை பிடித்தவன், திருமணத்திற்குப் பிறகு, தோற்றத்தில்
மட்டும்தான் அவள் தேவதை, குணத்தில் அவள் பிசாசு' என்று தெரிந்து கொள்ளூம்
போதுதான், தான் ஏமாந்து போனதை உணருவான்.

இப்படிப் பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டே போகலாம். கட்டுரையின் நீளம் கருதி
பல உணர்த்தல்களை உங்கள் பரிசீலனைக்கு விட்டு விடுகிறேன்.

இப்படி வாழ்க்கையில் பல துன்பமான அனுபவங்களைப் பெற்று, கசப்புற்று,
இறுதியில், போனால் போகட்டும் போடா அல்லது யாரை நம்பி நான் பிறந்தேன்
போங்கடா போங்க என்று ஒருவன் சொல்லும் நிலைக்கு வருவது இந்தப்
பன்னிரெண்டாம் வீட்டை வைத்துத்தான்.

"அடும்வரை ஆட்டம், ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம் கொள்ளிவரை வருமா?" என்று உறவுகளைப் பற்றியும்,
நண்பர்களைப் பற்றியும் ஒருவனுக்கு உணரவைத்து, உலகில் எதுவுமே நிலையானது
அல்ல, நிலையாமைதான் நிலையானது என்கின்ற ஞானத்தைக் கொடுப்பதும்
இந்தப் பன்னிரெண்டாம் வீடு!

ஞானம் என்றால் முழுமையான அறிவு (wisdom) என்று பொருள்

இந்த ஞானம் எப்போது வரும்?

சிலருக்கு 40 வயதில் வரும், சிலருக்கு 50 வயதில் வரும், சிலருக்கு 60 வயதில்
வரும், சிலருக்கு 70 அல்லது 80 வயதில் வரும். ஆனால் வராமல் இருக்காது.
சனி, ராகு, கேது ஆகிய மூன்று கிரகங்களுக்கும் அதுதான் வேலை. அவைகள்
உணர்த்தாமல் விடாது. அந்த உணர்த்தலில் இருந்து எந்த மனிதனும் தப்பிக்க
முடியாது. சிலருக்குக் கொஞ்சம் மொஞ்சமாகப் புரியவைப்பார்கள். சிலருக்கு
அதிரடியாக ஒரே நாளில் புரிய வைப்பார்கள்! இது அவரவர்கள் ஜாதகப் பலன்!

எல்லாம் இருக்கிறது; நீ மட்டும் எங்கே போனாய்?

சட்டையைப் பிடித்து உலுக்கி. செவிட்டில் அறைவதைப்போன்று சொல்வது -
நெத்தியடியாக ஒரு விஷயத்தைச் சுருங்கச் சொல்வது எல்லாம் - சிலருக்கு
மட்டுமே கைவந்த கலை. அப்படிச் சொன்னவர்களில் பட்டினத்தாருக்கு ஈடு
இணையாக ஒருவரும் இல்லை. ஞானம் பெற பட்டினத்தார் பாடல்களைப் படிக்க
வேண்டும். அந்தப் பாடல்களை ஒரு வார்த்தையில் வர்ணிக்க வேண்டும் என்றால்
இப்படிச் சொல்ல வேண்டும்.

"புதையல் (Treasure) "
-------------------------------------------------------------------------------------
எல்லாம் இருக்கிறது; நீ மட்டும் எங்கே போனாய்?

மனித வாழ்வு, ஒருநாள் முடிந்து, ஒன்றுமில்லாமல் போய் விடும் அவலத்தை,
பட்டினத்தார் அற்புதமாக நான்கே வரிகளில் நெத்தியடியாக ஒரு பாட்டில்
சொன்னார்.

திருபானி அம்பானியாக இருந்தாலும் சரி, இந்திரா காந்தியாக இருந்தாலும்
சரி, பில் கேட்சாக இருந்தாலும் சரி அல்லது வாரன் ப்ஃபெட்டாக இருந்தாலும்
சரி, அல்லது சாதாரண குப்பன், சுப்பனாக இருந்தாலும் சரி எல்லொருக்கும்
அந்த ஒரு பாட்டு போதும். வாழ்க்கையின் அவலம் விளங்கும். முடி சார்ந்த
மன்னனும் ஒரு நாள் பிடி சாம்பலாகிப் போவான் என்ற வாழ்க்கையின்
முடிவு தெரிய வரும்!!

”வீடிருக்கத் தாயிருக்க வேண்டுமனை யாளிருக்கப்
பீடிருக்க வூணிருக்கப் பிள்ளைகளும் தாமிருக்க
மாடிருக்கக் கன்றிருக்க வைத்த பொருளிருக்கக்
கூடிருக்க நீபோன கோலமென்ன கோலமே!”
- பட்டினத்தார்

முன்பே பதிவில் எழுதியதுதான். இருந்தாலும் இந்தப் பாடத்திற்கு அது சம்பந்தம்
உடையது என்பதால் மீண்டும் அந்த வரிகளை உங்களுக்காக இன்று கொடுத்துள்ளேன்

”நீ பிறந்த வீடு இருக்கிறது. நீ பொருள் சேர்த்துக் கட்டிய வீடு இருக்கிறது
உன்னைப்பெற்றவள் இருக்கிறாள், உன் கரம் பிடித்தவளும் இருக்கிறாள்
நீ பெற்ற பிள்ளைகளும் இருக்கின்றன
நீ பெற்ற விருதுகளும், ஊர் பேசிய பெருமைகளும் இருக்கின்றன
உற்றார் உறவினர்களும் இருக்கிறார்கள், சேர்த்த பொருள்களும் இருக்கின்றன
உனக்கு அடுத்த வேளை உணவும் தயாராக இருக்கிறது. இத்தனை காலமும்
உனக்கு உருவமளித்த உடலும் இங்கே இருக்கிறது -உயிரற்ற நிலையில்!
உன்னை மட்டும் காணவில்லையே - எங்கே போனாய்?”

பீடு = பெருமை (Honour)
ஊண் = உணவு (food)
----------------------------------------------------------------------------------
இந்தப் பாட்டிலுள்ள கருத்தைக் கவியரசர் கண்ணதாசன்
அவர்கள் எளிமைப்படுத்தி இப்படிச்சொன்னார்:

ஆடிய ஆட்டமென்ன?
தேடிய செல்வமென்ன?
திரண்டதோர் சுற்றமென்ன?
பேசிய வார்த்தையென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால்
கூடவே வருவதென்ன?
----------------------------------------------------------------------------------
மொத்ததில் மனிதனுக்கு ஞானத்தைத் தருவது பன்னிரெண்டாம் வீடு.
அது மறைவிடம் அல்ல. மனிதன் மறைத்து வைத்துவிட்டுப் பார்க்கப்
பயப்படும் இடம்.

(பாடம் தொடரும்)

வாழ்க வளமுடன்!

3.11.08

ஜோதிடர்களின் விவரம்!

I have appended the names of some reknowned astrologers for your use!

1
Express Star Teller (Astrologers - Chennai)
Contact: BANERJEE
Express Estates, No:4 Club House Road-600002. Phone: 044-28460517
Email: starcs@starteller.com starcs@starteller.com
2
K P Stellar Astrological Research Instt (Astrologers - Chennai)
Contact: HARIHARAN K
769 Mount Rd-600002. Phone: 044-28526046
Email: kpsari@md4.vsnl.net.in kpsari@md4.vsnl.net.in
3
Kadalangadi Astrological Indological Research Centre (Astrologers - Chennai)
Contact: ARDHANAESWARAN
38 Natesa Iyer St T Ngr-600017. Phone: 044-24343406
4
Shankuntala Devi (Astrologers - Bangalore)
Contact: 105 7 Uls Rd-560042. Phone: 080-25321922
5
Raman Associates
" Rajeswari ",
# 28, Nehru Circle,
Nagappa Street,
Seshadripuram,
Bangalore 560020, India.
Phone: 91 - 80 - 23449229
Telefax: 91 - 80 - 26682050
E - mail horodept@ramanassociates.com
6.
Mr.N.K.Diwakaran
Astrologer,
Savithri Photo Shop Building (upstairs)
Next to Hotoel Seetharam
Kalingarayar Street, Ramnagar
Coimbatore - 641 009

வாழ்க வளமுடன்!

28.10.08

ஜோதிடப் பாடம் எண் 128: பதினொன்றாம் வீடு - பகுதி 2

இதன் முன் பகுதி இங்கே உள்ளது. அதைப் படித்துவிட்டு இதைப் படிக்க வேண்டுகிறேன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
பதினொன்றாம் அதிபதி உச்சமாகவும், லக்கினத்திற்குத் திரிகோணத்திலும்
இருந்து, புதன் இரண்டாம் இடத்து அதிபதி என்றால், ஜாதகன் வணிகம்
செய்து பெரும் பொருள் ஈட்டுவான்.

2
குரு 11ல் இருந்து புதனின் பார்வை பெற்றால், ஜாதகன் சிறந்த கல்வியாளன்.
பிறரால் போற்றப்படுவான்.

3.
11ஆம் அதிபதியும், அதில் அமரும் கிரகமும் வலுவாக இருந்தால்,
ஜாதகன் சமூகத்தில் அந்தஸ்தும், செல்வாக்கும் உள்ளவனாகத் திகழ்வான்.

4.
பதினொன்றாம் வீட்டில் ராகு, செவ்வாய், சனி, சூரியன் ஆகிய நான்கு
கிரகங்களும் அமர்ந்திருந்தால், வேறு நல்ல பார்வை இல்லாமல் இருந்தால்
ஜாதகன் மன நோயாளியாகிவிடுவான்.

5.
சுபக் கிரகங்கள் பதினொன்றில் வந்து அமர்ந்தால், ஜாதகன் நல்ல
வழியில் பெரும் பொருள் ஈட்டுவான்.

6
தீய கிரகம் பதினொன்றில் வந்து அமர்ந்திருந்தால் ஜாதகன் தவறான
வழிகளில் பொருள் ஈட்டுவான்.

7.
பதினொன்றாம் வீட்டில் 30ற்கும் மேற்பட்ட பரல்கள் இருந்தால், ஜாதகன்
வீடு, வாகனம், என்று செளகரியமாக வாழ்வான்.

8.
பதினொன்றாம் வீட்டில் உள்ள கிரகங்கள் அஸ்தமனம் பெற்று இருந்தாலும்
அல்லது நீசமாகிப் பலமின்றி இருந்தாலும், ஜாதகன் குடும்பச் சொத்துக்களை
ஒவ்வொன்றாக இழப்பான்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பதினொன்றில் வந்து அமர்ந்திருக்கும் கிரகங்களை வைத்துப் பலன்கள்:
(எல்லாம் பொதுப்பலன்களே!)

11ல் சூரியன் இருந்தால்
ஜாதகனுக்கு அதிக முயற்சிகள் இன்றி வெற்றிகள் கிட்டும்.
நீண்டு நாட்கள் வாழ்வான்
செல்வந்தனாக மாறுவான்.
மனைவி, குழந்தைகள், வேலையாட்கள் என்று செளகரியமாக வாழ்வான்
கொள்கைக் குன்றாக இருப்பான்.
அரசில் செல்வாக்கு இருக்கும். அரச மரியாதைகள், விருதுகள் கிடைக்கும்
================================
11ல் சந்திரன்.
புனிதனாக இருப்பான். பெருந்தன்மை உடையவனாக இருப்பான்.
மனைவி மக்கள் என்று குடும்பக் குறைபாடுகள் இல்லாதவனாக இருப்பான்.
அமைதியைக் கடைப்பிடிப்பவனாக இருப்பான்.
செய்யும் வேலையில் மேன்மை அடைவான்.
வணிகனாக இருந்தால் பெரும்பொருள் ஈட்டுவான்
இடங்கள், சொத்துக்கள் என்று அதீத செல்வம் சேரும்
=================================
11ல் செவ்வாய்
ஜாதகன் அதிரடியாகப் பேசக்கூடியவன்
புத்திசாலியாக இருப்பான்.
சபலமுடையவன்
எராளமான இடங்கள் சேரும்
அதிகாரவர்க்கத்தினருடன் தொடர்புடையவனாக இருப்பான்.
==================================
11ல் புதன்
அதிகம் படித்தவன்
கூர்மையான புத்தி உள்ளவன்
செல்வந்தனாகவும், மகிழ்ச்சி உள்ளவனாகவும் இருப்பான்.
விசுவாசமான வேலைக்கரர்கள் கிடைப்பார்கள்
பொறியியல் சம்பந்தப்பட்ட துறைகளுக்குப் போனால் சாதனை படைப்பார்கள்
========================================
11ல் குரு
ஜாதகன் நீண்ட நாட்கள் வாழ்வான்
துணிச்சலானவன்.செல்வந்தன்
புத்திசாலி. பலராலும் அறியப்பட்டவன்
இசையில் ஆர்வமுள்ளவன்
ஏராளமான நண்பர்களை உடையவன்
=========================================
11ல் சுக்கிரன்
ஊர் சுற்றி.
காசில், லாபத்தில் குறியாக இருப்பான்.
ஆடம்பரம் மிக்க, செளகரியங்கள் மிகுந்த வாழ்க்கை அமையும்
சபலமுள்ளவன். பெண்களின் மேல் மிகுந்த ஏக்கமுடையவன்
நண்பர்கள் வட்டாரத்தில் பிரபலமானவன்
==========================================
11ல் சனி
ஜாதகன் பலரை வேலைக்கு அமர்த்தி அவர்கள் மூலம் பொருள் ஈட்டுவான்.
குறைந்த எண்ணிக்கையில் நண்பர்கள் இருப்பார்கள்
வாழ்க்கையை அனுபவிக்கும் முனைப்பில் இருப்பான்
சிலர் அரசாங்க கான்ட்ராக்டுகள் அல்ல்து பணிகள் மூலம் பொருள்
ஈட்டுவார்கள்
நீண்ட நாள் வாழ்வான். ஆரோக்கியத்துடன் வாழ்வான்
சிலர் அரசியலில் நுழைந்து பிரபலம் அடைவார்கள்
==========================================
11ல் ராகு
ஜாதகன் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுவான். அதில் புகழ் பெறுவான்
சிலர் வெளி நாடுகளில் வணிகம் அல்லது வேலை செய்து பெரும்
பொருள் ஈட்டுவார்கள்
ஜாதகன் கற்றவனாகவும், செல்வந்தனாகவும், புகழுடையவனகவும்
இருப்பான்.
=========================================
12ல் கேது
ஜாதகனுக்கு, சூதாட்டம், குதிரைப் பந்தயம், லாட்டரிச் சீட்டு
அல்லது பங்கு வணிகம் போன்றவற்றில் இருந்து பணம் வரும்.
அதில் நாட்டமுடையவனாக இருப்பான்,
நல்லவனாக இருப்பான். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும்
தர்மங்கள் செய்வான்.
=========================================
இந்த விதிகளை எல்லாம் ஒத்துப் பார்த்துப் பலன்களை அறிவதைவிட
சுலபமான முறை உள்ளது. அதுதான் அஷ்டகவர்க்கம் & சர்வாஷ்டகவர்க்கம்

11ஆம் வீட்டில் 30ம் அதற்கு மேலும் பரல்கள் இருப்பது நல்லது
28 பரல்கள் இருந்தால் சராசரி.
25ற்குக்கீழே இருந்தால் சுமார்.
20ம் 20ற்குக் கீழே யும் இருந்தால் பலனில்லை!

பதினொன்றாம் அதிபதி, அதில் அமர்ந்திருக்கும் கிரகம், அதைப் பார்க்கும்
கிரகம், மேலும் லக்கினாதிபதி ஆகியோர் தங்களது சுயவர்க்கத்தில் 5 அல்லது
அதற்கு மேல் பெற்றிருத்தல் நல்லது. நல்ல பலன்கள் அவர்களது தசா புத்தியில்
கிடைக்கும்

4 என்பது சராசரி
3 என்பது சுமார்
2ம் 2ற்குக் கீழேயுமான பரல்கள் என்றால் பலனில்லை!
அவற்றிற்கான தசாபுத்திகள் பலனைத் தராது.
=======================================================
(இவை எல்லாமே பொதுவிதிகள். தனிப்பட்ட ஜாதகங்களில் உள்ள
கிரகங்களின் அமைப்பை வைத்து இவைகள் சற்று மாறுபடும்)

பதினொன்றாம் வீட்டைப் பற்றிய பாடம் நிறைவு பெறுகிறது

அன்புடன்,
வகுப்பறை வாத்தியார்
வாழ்க வளமுடன்!

20.10.08

ஜோதிடம்: பதினொன்றாம் வீடு!


பதினொன்றாம் வீட்டு அதிபதியை லாபாதிபதி என்பார்கள். அதாவது லாபத்தைக்
கொடுக்கக்கூடியவன். இன்றைய சூழ்நிலையில் லாபத்தை விரும்பாதவர்கள் யார்
இருக்கிறார்கள் சொல்லுங்கள்?

பெரிய அரசியல் தலைவரில் இருந்து, தலையிலும், தோள்களிலும் சுமைகளைத்
தூக்கிக் கொண்டுபோய்க் கொடுத்துப் பிழைப்பு நடத்தும் சாமான்யத் தொழிலாளிவரை
அனைவருமே லாபத்தை எதிர் நோக்கி இருக்கிறார்கள்.

அதனால்தான் ஆட்டோ ஓட்டுனர்கள் மீட்டர் போட்டு ஓட்டுவதில்லை!
மீட்டர் போட்டு ஓட்டினால் என்ன பெரிதாக லாபம் வந்துவிடப்போகிறது?
அரசியல்வாதிகளும் தங்கள் கொள்கைகளில் பிடிப்பாக இருப்பதில்லை!
பிடிப்பாக இருப்பதனால் என்ன லாபம் வந்து விடப்போகிறது?
கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டு விட்டு ஆட்சியை பிடித்து, தொடர்ந்து
அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்வதிலேயே முனைப்பாக இருக்கிறார்கள்.
அதிகாரத்தைப் பயன்படுத்தினால்தானே நான்கு காசு (கோடிக்கணக்கில்)
பார்க்க முடியும்?

இப்போது பெண்களுக்கும், லாபத்தை வைத்துத்தான் காதல் வருகிறது. நல்ல
குணம் உடையவன் என்று எந்தப் பெண்ணாவது தேடிப்போய்க் காதலிக்கிறாளா?
ஒருவனுடைய வருமானம் என்ன? செலவழிக்கும் சக்தி என்ன என்பதைப்
பார்த்துத்தான் காதல் வருகிறது.

நல்ல வேளை, வங்கிகளில் ஸ்திர சொத்துக்களை (Collateral security) அடமானமாக
வாங்கிக் கொண்டு தொழில் முனைவோருக்குக் கடன் உதவி செய்கிறார்களே,
அதுபோல பெண்களும் ஸ்திர சொத்துக்களைக் (Collateral security) கையில் வாங்கிக்
கொண்டு காதலிக்கும் நிலைமை வரவில்லை. எதிகாலத்தில் அதுவும் வரலாம்.

அம்பிகாபதி, அமராவதி போன்ற தெய்வீகக் காதல் எல்லாம் இப்போது கிடையாது
இப்போதையைக் காதல் எல்லாம் இன்ஃபோசிஸ், டி.சி.எஸ், எல் அண்ட் டி என்று
காதலின் வட்டம் சுருங்கிவிட்டது.

வட்டம் சுருங்காத காதல் சினிமாவில் மட்டுமே!

ஒரு தந்தை தன் மகளுக்கு வரன் பார்த்தார். பையன் டெக்ஸ்டைல் டிப்ளமோ
ஹோல்டர். ஒரு நூற்பாலையில் வேலை பார்க்கிறான். மாதம் ஐயாயிரம் ரூபாய்
சம்பளம். பெண் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.

ஏன் என்று கேட்டால் "ஐயாயிரம் ரூபாயில் எப்படிக் குடும்பம் நடத்துவது?'
என்கிறாள்

ஊருக்கு வெளியே புறநகர் காலனிகளில் 1,500 ரூபாய்க்கு வாடகை வீடுகள்
கிடைக்கும். இருவருக்கு உணவிற்காகும் செலவு 2,500 ரூபாய் ஆகும் மேல்
செலவிற்கு மீதத்தை வைத்துக் கொள்ளுங்கள், என்றால் - ஒண்டிக்குடித்தனம்
பண்னுவதற்கெல்லாம் நான் தயாரில்லை. நாளைக்கு ஒரு குழந்தை பிறந்தால்
என்ன செய்வது? இப்படிப்போய் ஒருவனுடன் குடும்பம் நடத்த வேண்டிய
அவசியம் இல்லை. அதற்கு பதிலாக இருக்கும் இடத்திலேயே ஹாப்பி'யாக
இருந்துவிட்டுப்போகிறேன். ஆளை விடுங்கள்' என்கிறாள்.

திருமணம் ஆகின்ற நாள் அன்றே, கணவனிடம் எல்லா வசதிகளும் இருக்க
வேண்டும் என்று பெண் எதிர்பார்க்கிறாள். எட்டாயிரம் அல்லது பத்தாயிரம்
ரூபாய் வாடகையில் ஒரு அபார்ட்மெண்ட், ஆறாயிரம் ரூபாய்க்கு டிபார்ட்மென்ட்
ஸ்டோரில் அரிசி, மளிகைச்சாமான்களை அனாசயமாக வாங்கிப்போடக்கூடிய
திறன், பல்சர் அல்லது ஹோண்டா மோட்டார்சைக்கிள், வீட்டில் கேஸ் ஸ்டவ்,
குக்கர், மிக்ஸி, வெட் கிரைண்டர், பிரிஜ், வாஷிங் மெஷின், ஸ்பிளிட் ஏர்கண்டி
ஷனர் பொருத்தப் பட்ட படுக்கை அறை, மாலை வேளைகளில் மூன்று முழம்
மல்லிகைப்பூ, பானிப்பூரி, பேல்பேரி இத்யாதிகளுக்கு தினமும் நூறு ரூபாயை
முகம் சுழிக்காமல் செலவழிக்கும் திறன் ஆகிய உள்ள ஆடவனையே
இன்றைய பெண்கள்(பெரும்பாலோனோர்) விரும்புகிறார்கள்

இதற்கெல்லாம் அடிப்படை பணம். நார்மல் சானலில் வருகிற பணம் இல்லை.
அதீதமாக வருகிற பணம். அதாவது பொத்துக் கொண்டு வருகிற பணம்.

அதற்கு எங்கே போகிறது?

எங்கே போகலாம் என்பதைப் பதினொன்றாம் பாடத்தின் முடிவில் சொல்கிறேன்.

இப்போது பாடம்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Eleventh house is called as house of profit! House for elder brother,
friend, acquisitions freedom from misery and total happiness!

பதினொன்றாம் வீடு நன்றாக இருந்தால் இவைகளும் நன்றாக இருக்கும்.
இல்லை என்றால் இல்லை.

நன்றாக இல்லை என்றால், மூத்த சகோதரரை இழக்க நேரிடும். நல்ல
நண்பர்களை இழக்க நேரிடும்.செல்வங்களை இழக்க நேரிடும். வாழ்க்கை
துன்பம் என்ற மேகங்களால் சூழப்பட்டதாகிவிடும். மகிழ்ச்சியின்மை என்ற
இருள் சூழ்ந்து நிற்கும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

1. லக்கினாதிபதி பதினொன்றில் இருந்தாலும் அல்லது பதினொன்றாம் வீட்டு
அதிபதி லக்கினத்தில் வந்து இருந்தாலும். நல்ல பலன் உண்டாகும். அதுதான்
முதல் விதி.

அதற்குரிய பலன்: குறைந்த முயற்சி; நிறைந்த பலன் (Minimum efforts;
Maximum Benefits) அதாவது 100 ரூபாய்க்கான உழைப்பு. ஐநூறு ரூபாய்
வருமானம். நான்கு மணி நேரம் மட்டுமே வேலை. எட்டு மணி நேர வேலைக்
குரிய சம்பளம். டேட்டா என்ட்ரி வேலை ஆனால் டீம் மானேஜரின் சம்பளம்.
வியாபாரம் என்றால் ஐந்து லட்சம் முதலீடு. செலவுபோக வருட லாபம் ஐந்து
லட்சம். இப்படி எழுதிக்கொண்டே போகலாம்.

2. லக்கினத்திற்குப் பதினொன்றாம் வீட்டு அதிபதி லக்கினத்தில் வந்து இருந்தால்
ஜாதகன் அதிகம் படித்தவனாகவும், சாதுர்யமாகப் பேசுபவனாகவும் இருப்பான்.
எந்தத் தொழில் செய்தாலும் அதீத லாபம் வரும். செல்வத்துடனும், செல்வாக்கு
டனும் இருப்பான்.

3. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு இரண்டில் இருந்தால், ஜாதகன்
வருமானம், கெளரவம், அதிகாரம் ஆகியவற்றுடன் பலரும் விரும்பும்படியாக
வாழ்வான்.

4. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு மூன்றில் இருந்தால், ஜாதகனின்
மூத்த சகோதரர்கள், மூத்த சகோதரிகள் நல்ல அந்தஸ்துடன் இருப்பார்கள்
அவர்களின் ஆதரவு ஜாதகனுக்குக் கிடைக்கும்.

5. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு நான்கில் இருந்தால், ஜாதகனுக்கு
இடங்கள், கட்டிடங்கள், வண்டி, வாகனங்கள் இருக்கும்.சந்தோஷத்துடன்
வாழ்வான். தெய்வீக வழிபாடுகளைக் கொண்டவர்களாகவும், நேர் வழியில்
செல்பவர்களாகவும் இருப்பார்கள்.

6. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு ஐந்தில் இருந்தால், ஜாதகனின்
புத்திரர்களால் நல்ல செல்வாக்குடனும், புகழுடனும் அவனது குடும்பம்
விளங்கும். தந்தையின் தொழிலையே அவனுடைய பிள்ளைகளும் செய்து
பெரும்பொருள் ஈட்டுவார்கள்.

7. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு ஆறில் இருந்தால், வரும்
லாபத்தையெல்லாம், கடன்காரர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் கொடுக்க
நேரிடும். செய்தொழிலில் சத்துருக்கள் இருப்பார்கள். பல இடைஞ்சல்கள்
உண்டாகும். லாபத்தைவிட, கடன் அதிகமாகும்!

8. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு ஏழில் இருந்தால், ஜாதகனுக்கு
அவனது மனைவி மூலம் செல்வங்கள், லாபங்கள் வந்து சேரும்.
திருமணம் ஆன நாள் முதலாய் யோகத்துடன் விளங்குவான்.பதவிகளிலும்
சிறப்புப் பெற்று விளங்குவான்.

9. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு எட்டில் இருந்தால், ஜாதகன்
சஞ்சலம் உடையவன். பலவிதமான தொழில்களைச் செய்ய முயல்வான்.
செய்வான். கையில் இருக்கும் செல்வத்தை இழந்து, சஞ்சலத்துடனேயே
காலத்தைக் கழிக்கும்படியாகிவிடும்.

10. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு ஒன்பதில் இருந்தால்,
ஜாதகன் தன்னுடைய தந்தையின் தொழிலை, அவரைவிடச் சிறப்பாகச்
செய்து பெரும்பொருள் ஈட்டுவான். பலவிதமான பொருள் லாபங்களை
அடைவான். வாழ்க்கை எல்லா விதத்திலும் சிறப்பாக இருக்கும்.

11. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு பத்தில் இருந்தால், ஜாதகன்
கெளரவமான உத்தியோகத்தில் அமர்ந்து, கைநிறையச் சம்பாதிப்பான்.
ஆடம்பரமின்றி அமைதியான குடும்ப வாழ்க்கை அமையும்.

12. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு பதினொன்றிலேயே இருந்தால்,
ஜாதகனுக்குப் பெரிய லாபங்கள் கிடைக்காது. மிதமான பலனே ஏற்படும்.
வயதான காலத்தில் தனவந்தராக இருப்பார்கள்.

13. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு பன்னிரெண்டில் இருந்தால்,
ஜாதகனுக்குப் பொருள் விரையம் ஏற்படும். கடன் தொல்லைகள்,
வியாதிகள் ஏற்படும். போஜன வசதிகளும், நித்திரை சுகங்களும்
இருக்கும். ஆனாலும் மன அமைதி இருக்காது.

(இவை எல்லாமே பொதுவிதிகள். தனிப்பட்ட ஜாதகங்களில் உள்ள
கிரகங்களின் அமைப்பை வைத்து இவைகள் சற்று மாறுபடும்)

பதினொன்றாம் படம் இன்னும் இரண்டு வகுப்புக்கள் உள்ளன
அவற்றையும் படித்துவிட்டு, பிறகு உங்கள் ஜாதகத்தை வைத்து
ஒத்துப் பாருங்கள்.

Do not jump to any conclusion, before reading the next two lessons in this topic!

(தொடரும்)

வாழ்க வளமுடன்!

19.10.08

அமெரிக்க நிதிநிலைச் சிக்கல் என்ன ஆகும்?

StefanStenudd - Sweedish Astrologer

அமெரிக்க நிதிநிலைச் சிக்கல் என்ன ஆகும்?
US credit crisis as per it's transit horoscope

என்ன ஆனால் நமக்கென்ன என்று இருக்க முடியுமா?
நமது கண்மணிகள் பலபேர் அங்கே இருக்கிறார்கள். அதோடு அமெரிக்காவை
பற்றிய ஒவ்வொரு செய்திக்கும் நமது பங்குச் சந்தைக்கு வயிற்றுப் போக்கு
ஏற்பட்டு, 700 அல்லது 800 புள்ளிகளைப் பறிகொடுத்துவிட்டு அசந்து படுத்துக்
கொண்டு விடுகிறது. நமது மாண்புமிகு நிதியமைச்சர் என்ன மருந்து மாத்திரை
கொடுத்தாலும் எழுந்து உட்கார மறுக்கிறது. எழுந்தாலும் அடுத்தடுத்து வரும்
கலவரச் செய்திகளால் மறுபடியும், மறுபடியும் வயிற்றுப்போக்கால் அடிபட்டு
விழுந்துவிடுகிறது.

என்னதான் ஆகும்?

ஒரு வெளிநாட்டு ஜோதிடர் அது பற்றி விவரமாக எழுதியுள்ளார்.
அனைவரையும் படித்துப் பார்க்க வேண்டுகிறேன்.

Link to the article: Click here!

நமது வலையுலக 'சந்தேகப் பதிவருக்கு' (வாரத்திற்கு இருமுறை சந்தேகப்
பதிவுகள் போடுவார். எல்லாப் பதிவுகளுமே சந்தேகக் கேள்விகளுடன் முடியும்)
இது குறித்து - அதாவது இந்த ஜோதிடரின் ஜோதிடப் பதிவு குறித்து
ஏற்படும் சந்தேகங்களுக்கும், இந்தச் சரிவு நிரந்தமானால் மற்ற நாடுகளுக்கு
என்ன ஆகும் என்கின்ற நியாமான சந்தேகங்களுக்கும், அதேபோல இதை
வானத்தில் விட்டேறியாகச் சுற்றும் கோள்களை வத்து எந்த ஆதாரத்துடன்
எழுதினார் என்பது போன்ற அதிரடியான சந்தேகங்களுக்கும், அவரையே
தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்:-))))))

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

பின் குறிப்பு: ப்ளூட்டோ கிரகம் வானில் ஒருமுறை சுற்றிவர 248 ஆண்டுகள்
ஆகும். அதனால் அதைத் தனி மனிதர்களின் ஜாதகக் கணக்கிற்கு எடுத்துக்
கொள்வதில்லை. அதேபோல நெப்டியூன் கிரகம் வானில் ஒருமுறை சுற்றிவர
164.8 ஆண்டுகள் ஆகும்.நாடுகளின் ஜாதகத்திற்கு அவற்றை எடுத்துக்
கொள்வார்கள்

வாழ்க வளமுடன்!

15.10.08

பட்டுக்கிடப்பான் என்றால் என்ன?




எங்கள் பகுதியில் - அதாவது காரைக்குடிப் பகுதியில் ஒரு சொல் உண்டு;
ஆனால் அதற்கு இரண்டு பொருள் உண்டு. அந்தப் பகுதி மக்கள் - அந்தப்
பகுதியில் உள்ள 4 நகரங்கள், மற்றும் 72 கிராம மக்கள் - பேசும் போது
அந்த சொல்லை அதிகமாகப் பயன்படுத்துவார்கள்.

ஒருவனைத் திட்டுவதற்கும் அந்தச் சொல்தான். அதேபோல் ஒரு
குழந்தையை அல்லது இளைஞனைக் கொஞ்சு மொழியில் விளிப்பதற்கும்
அந்தச் சொல்தான்.

பட்டுக்கிடப்பான்' என்பதுதான் அந்தச்சொல். எங்கள் பகுதியைச்
சேர்ந்தவரான நடிகை மனோரமா அவர்கள் அந்தச் சொல்லை
லாவகமாக - அனாசயமாகப் பயன்படுத்துவார். தில்லானா மோகனாம்பாள்
படத்தில் தன் கணவனாக நடிக்கும் நாகலிங்கம் என்பவரைக் குறிப்பிடும்
போது - "ஆமா, அந்தப் பட்டுக்கிடப்பான்தான்" என்று பல்லைக் கடித்துக்
கொண்டு கோபமாகக் கூறுவார்.

பட்டுக்கிடப்பான் - என்ற சொல் அடிபட்டுக் கிடப்பவன் அல்லது
கிடக்க வேண்டியவன், நோய்பட்டுக் கிடப்பவன் அல்லது கிடக்க
வேண்டியவன் என்ற பொருளைக் கொடுக்கும்

அதே வார்த்தையை வீட்டில் உள்ள பெரிசுகள் தங்கள் பேரனைத் தூக்கிக்
கொஞ்சும் போதும் சொல்லிக் கொஞ்சுவார்கள். அதேபோல இளவயதுக்
காளையாகத் திரியும் தங்கள் பேரனைக் கூப்பிடுவதற்கும்
அந்தச் சொல்லைத்தான் பயன் படுத்துவார்கள்,"அட பட்டுக் கெடப்பா(ய்)
- இங்கின வந்து கேட்டுப் போடா" என்பார்கள்

இங்கே அந்தச் சொல்லிற்குப் பெயர். பட்டில் கிடப்பவன் - பட்டுத்
துணியில் கிடப்பவன் அல்லது பட்டுத்துணியில் கிடந்து வளர்ந்தவன்
என்று பொருள்படும்.
---------------------------------------------------------------------
இதை எதற்காகச் சொன்னேன் என்றால், ஜோதிடத்திலும் இந்த இரட்டைப்
பொருள் உள்ள வேலைகளைச் சில கிரகங்கள் செய்யும்!

உதாரணத்திற்கு சனி தீய கிரகம். ஆனால் அதே சனி பத்தாம்
வீட்டிற்குக் காரகன். அவன் கையெழுத்துப்போட்டால்தான்
பாத்தாம் வீட்டின் சட்ட திட்டங்கள் பாஸாகும். ஆகவே பத்தாம்
வீட்டைப் பொறுத்தவரை அவன் நல்லவன். பட்டில் கிடக்கும்
"பட்டுக்கிடப்பான்' அவன்! இதை மனதில் வையுங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பத்தாம் வீட்டில் அமர்ந்திருக்கும் கிரகங்களை வைத்துப் பொதுப்பலன்!

1.சூரியன்
இங்கே சூரியன் தனியாக நல்ல நிலையில் இருந்தால் - உதாரணம் கடகம்
ஒருவருக்கு லக்கினமாக இருந்து, பத்தாம் வீடாகிய மேஷத்தில் சூரியன்
இருந்தால், அவர் அங்கே உச்சம் பெற்றிருப்பார். அதே போல பத்தில்
இருக்கும் சூரியன், குருவின் பார்வை பெற்றிருப்பதும் நல்ல நிலைமைதான்.
இந்த அமைப்பால் ஜாதகருக்கு பலவிதமான நன்மைகள் ஏற்படும்.
ஜாதகருக்கு அவர் தொட்டதெல்லாம் துலங்கும். தெலுங்குக்காரர்கள்
சொல்வதுபோல மட்டி (மண்) கூட பங்காரம் (தங்கம்) ஆகிவிடும். எடுத்துச்
செய்யும் வேலைகள் அனைத்தும் வெற்றி பெரும். செழிப்பான, மகிழ்ச்சியான
வாழ்க்கை கிடைக்கும். அது பத்தாம் இடத்தின் அதிபதி மற்றும் சூரியனுடைய
தசா அல்லது புத்திகளில் அபரிதமாகக் கிடைக்கும்.

நுண்ணறிவு, பணம், பதவி, அதிகாரம், புகழ், செல்வக்கு என்று எல்லாம்
கிடைக்கும். சொந்த வீடு,வாகனம்,வேலையாட்கள் என்று ஜாதகன்
செளகரியமாக வாழ்வான்.

அரசாங்க உத்தியோகம் அல்லது பதவி கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள்
கிடைக்கும். இசை ரசிகராக ஜாதகர் இருப்பார்.

மற்றவர்களை ஈர்க்கக்கூடிய சக்தி உடையவராக இருப்பார்.
(இவ்வளவு இருக்கும்போது ஈர்க்கமுடியாதா என்ன?)

பத்தில் சூரியனுடன், செவ்வாய் சேர்ந்திருந்தால், ஜாதகர் குடி மற்றும் போதைப்
பழக்கங்களுக்கு அடிமையாகிவிடும் அபாயம் உண்டு!

பத்தில் சூரியனுடன், புதன் சேர்ந்தால், ஜாதகருக்கு விஞ்ஞானத்தில் அதிக
ஈடுபாடு உண்டாகும். பிரபல விஞ்ஞானியாக உருவெடுப்பார். அதே நேரத்தில்
பெண் பித்து (மயக்கம்) ஏற்படும் அபாயமும் உண்டு.

பத்தில் சூரியனுடன், சுக்கிரன் சேர்ந்தால், ஜாதகருடைய மனைவி, பெரும்
செல்வந்தர் வீட்டுப்பெண்ணாக இருப்பாள். அவள் மூலம் அவருக்குப் பெரும்
சொத்துக்கள் கிடைக்கும்.

பத்தாம் வீட்டில் சூரியனுடன், சனி சேர்ந்திருந்தால், அது நல்லதல்ல.
ஜாதகருக்குப் பலவிதமான துன்பங்கள் ஏற்படும். இறுதியில் வாழ்க்கை
வெறுத்துப்போகும் நிலைமைக்கு ஆளாகி விடுவார்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

2.சந்திரன்
பத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகர் இறைவழிபாட்டில், ஆன்மிகத்தில் மிகவும்
நாட்டம் கொள்வார். புத்திசாலியாக இருப்பார். துணிச்சல் மிக்கவராக இருப்பார்.
செய்யும் செயல்களில் வெற்றி காண்பராக இருப்பார்.உதவி செய்யும் மனப்பான்
மையும், தர்ம சிந்தனையும் மேலோங்கியவராக இருப்பார். பல கலைகளில்
தேர்ந்தவராக இருப்பார். மொத்தத்தில் சகலகலா வல்லவராக இருப்பார்.

இதே பத்தில் சந்திரனுடன், சூரியனும், குருவும் சேர்ந்திருந்தால், ஜாதகர்
வேதாந்தங்களிலும், ஜோதிடத்திலும் விற்பன்னராக இருப்பார்.

பத்தில் சந்திரன் இருந்து, அவர் சூரியனுடைய பார்வையையும், சனியினுடைய
பார்வையையும் பெற்றிருந்தால், ஜாதகர் மாறுபட்ட சிந்தனை உடையவராக
இருப்பார். அச்சுத்தொழில் அல்லது பதிப்பகத் தொழில் துவங்கிப் பெரும்பொருள்
ஈட்டுவார். அவருக்கு அனேக நண்பர்கள் இருப்பார்கள்.வாழ்க்கை வசதியானதாக
இருக்கும். நீண்ட ஆயுள் இருக்கும். பல அறக்கட்டளைகளைத் தலைமை
தாங்கி நடத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3.செவ்வாய்
பத்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால், ஜாதகருக்கு ஆளும் திறமை இருக்கும்.
பெரிய பதவிகள் கிடைக்கும். இதே செவ்வாய், சனி அல்லது ராகுவுடன்
கூட்டணி போட்டிருந்தால் கடுமையான ஆட்சியாளராக இருப்பார். துணிச்சலாக
ஆட்சி நடத்தும் திறமை இருக்கும். பாராட்டுகளுக்கு மயங்குபவராக இருப்பார்.
எதிலும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று வேகம் உடையவர்களாக இருப்பார்

பத்தில் செவ்வாயுடன், புதனும் சேர்ந்தால், நிறைய செல்வங்கள் சேரும். சொத்துக்கள்
குவியும். சிலர் மதிப்புமிக்க விஞ்ஞானியாக உருவெடுப்பார்கள்.சிலர் கணிதத்தில்
பண்டிதராக விளங்குவார்கள். பத்தில் செவ்வாயுடன் குரு சேர்ந்திருந்தால் பல
ஏழை மக்களின் துயர் தீர்க்கும் தலைவனாக ஜாதகன் விளங்குவான். அதே பத்தில்
செவ்வாயும், சுக்கிரனும் சேர்ந்திருந்தால் ஜாதகன் தூரதேசங்களுக்குச் சென்று
வணிகம் செய்து பொருள் ஈட்டுவான். பத்தில் செவ்வாயுடன் சனி சேர்ந்திருந்தால்
ஜாதகன் அதிரடியாக வேலைகளைச் செய்யும் திறமை பெற்றிருப்பான்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4 புதன்
ஜாதகன் நேர்மையனவனாகவும், மகிழ்ச்சியுடையவனாகவும் இருப்பான்.
எல்லாக் கலைகளிலும் வித்தகனாக இருப்பான். அதோடு அறிவுத்தேடலில்
ஈடுபாடு கொண்டிருப்பான்.புகழ் பெற்று விளங்குவான். எடுத்த காரியங்களில்
வெற்றி காண்பவனாக இருப்பான்.
கணிதத்திலும், வானவியலிலும் தேர்ச்சியுற்றவனாக இருப்பான். அதே இடத்தில்
புதனுடன் சுக்கிரனும் சேர்ந்து இருந்தால் ஜாதகன் அழகான மனைவியையும்,
செல்வத்தையும் பெற்றவனாக இருப்பான். அதே இடத்தில் புதனுடன், குரு
சேர்ந்திருந்தால், ஜாதகனுக்குக் குழந்தைப்பேறு இருக்காது. வாழ்க்கையில்
மகிழ்ச்சியும் இருக்காது, ஆனால் அரசு வட்டாரங்களில் மிகுந்த தொடர்பு
உடையவனாக இருப்பான். இந்தப் பத்தாம் இடத்தில் புதனுடன் சனி சேர்ந்திருந்தால்
ஜாதகன் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். அச்சுத்தொழில் அல்லது
ப்ரூஃப் ரீடர் போன்ற தொழில்களில் ஈடுபட்டிருப்பான்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5. குரு
ஜாதகன் அரசாங்கத்தில் உயர்ந்த நிலையில் உள்ள அதிகாரியாக விளங்குவான்.
செலவந்தானாக, தர்ம சிந்தனை உடையவனாக, இறை நம்பிக்கையாளனாக,
மத விஷயங்களில் ஈடுபாடு உடையவனாக, புத்திசாலித்தனம் மிக்கவனாக,
மகிழ்ச்சி உடையவனாக ஜாதகன் விளங்குவான். உயர்ந்த கொள்கைகள்
அவனுடைய வாழ்க்கைக்கு வழிகாட்டியாக விளங்கும். குருவுடன் சுக்கிரனும்
சேர்ந்திருந்தால் அரசில் முக்கியமான பொறுப்பில் இருப்பான்.
குருவுடன் ராகு சேர்ந்திருந்தால் ஆசாமி குசும்பானவன். மற்றவர்களுக்குத்
தொல்லைகளைக் கொடுப்பவனாக இருப்பான். ஒவ்வொரு செயலிலும் தொல்லை
யாக இருப்பான்.
பத்தில் இருக்கும் குருவை செவ்வாய் பார்த்தால், கல்விக் கேந்திரங்களுக்கும்
ஆராய்ச்சிக்கூடங்களுக்கும் தலைமை ஏற்று நடத்தும் பொறுப்பில் இருப்பான்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6.சுக்கிரன்
ஜாதகன் இடம், வீடுகளை வாங்கி, கட்டி விற்கும் ரியல் எஸ்டேட் தொழிலில்
ஈடுபட்டுப் பெரும் பொருள் ஈட்டுவான். செல்வாக்கு மிகுந்தவனாக இருப்பான்.
நிறையப் பெண்களுக்கு வேலை கொடுப்பான். அல்லது நிறைய பெண்கள்
வேலை செய்யும் இடங்களில் வேலை பார்ப்பன். நட்புடையவனாக, பலராலும்
அறியப்பட்டவனாக இருப்பான். யதார்த்தவாதியாக இருப்பான்.

இங்கே சுக்கிரனுடன் சனி சேர்ந்தால் உடல் வனப்புப் பொருட்களை உற்பத்தி
செய்பவனாக அல்லது விற்பவனாக இருப்பான். பெண்களுக்கான அலங்காரப்
பொருட்களை விற்கும் தொழிலில் ஈடுபடுவான். யாரையும் வசப்படுத்தக்கூடிய
சக்தி இருக்கும். தனது திறமையால் வியாபாரத்தில் சிறந்து விளங்குவான்

சுக்கிரனும், சனியும் சேரும் இந்த அமைப்பினால் ஜாதகனுடைய கல்வி தடைப்
படும். தெய்வ சிந்தனை மிக்கவனாகவும், தெய்வ வழிபாடு மிக்கவனாகவும்
இருப்பான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
7.சனி
ஜாதகன் ஆட்சியாளனாகவோ அல்லது அமைச்சராகவோ அல்லது அதற்குச்
சமமான பதவியிலோ சென்று அமர்வான். சிலர் ஜாதகத்தில் உள்ள வேறு
அமைப்புக்களின் கூட்டணியால், விவசாயியாக அல்லது விவசாயத்தொழிலில்
சிறந்து விளங்குவார்கள். துணிச்சல் மிக்கவனாக இருப்பான். செல்வம், புகழ்
இரண்டும் தேடிவருபவனாக இருப்பான். அடித்தட்டு மக்களுக்குப் பாடுபடுபனாக
இருப்பான். கோவில், குளம் என்று அடிக்கடி பயணம் செல்பவனாக இருப்பான்
ஒரு கட்டத்தில் மிகுந்த பக்திமானாக மாறிவிடுவான்.

பத்தில் சனி இருப்பவர்களுக்கு, வேலை அல்லது தொழிலில் பல ஏற்றங்களும்
இறக்கங்களும் இருக்கும். உச்சிக்கும் போவான். பள்ளத்திலும் விழுவான்

சனி எட்டாம் அதிபனுடன் சேர்ந்து நவாம்சத்தில் தீய இடங்களில் அமர்ந்திருந்தால்
ஜாதகனுக்கு எப்போதும் தொழிலில் அல்லது வேலையில் மோதல்கள் இருந்து
கொண்டேயிருக்கும். தொல்லைகள் இருந்து கொண்டேயிருக்கும்.
சனியுடன் பத்தாம் வீட்டதிபனும் சேர்ந்திருந்து, ஆறாம் அதிபனின் பார்வை
பெற்றால் ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட தாரம் அமையும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
8.ராகு
காம இச்சை அதிகம் உடையவானாக ஜாதகன் இருப்பான். சிலர் அந்தக்
காம இச்சையிலும், தன்னைவிட விட வயதில் மூத்த பெண்ணிடம் தொடர்பு
வைத்திருப்பார்கள்.

(இது பொதுவிதி. இதைப்படித்துவிட்டு, எனக்குப் பத்தாம் இடத்தில் ராகு
உள்ளது. ஆனால் நான் அப்படிப்பட்ட ஆசாமி இல்லையே என்று யாரும்
சொல்ல வேண்டாம். வேறு சுப கிரகங்களின் பார்வையால், அது இல்லாமல்
இருக்கலாம். அதற்காக சந்தோஷப்படுங்கள்)

ஏன் சந்தோஷப்பட வேண்டுமா?
மண், பெண், பொன் ஆகிய மூன்றின் மீதும் ஆசைவைத்தவன் திருப்திய
டைந்ததாக சரித்திரம் இல்லை. உருப்பட்டதாகவும் சரித்திரமில்லை!

இந்த அமைப்பினர் (அதாவது 10ல் ராகு இருக்கும் அமைப்பு) கை தேர்ந்த
கலைஞர்களாக இருப்பார்கள். எல்லாக் கலைகளையும் சுலபமாகக் கற்றுக்
கொண்டு விடுவார்கள்.இலக்கியங்களிலும், கவிதைகளிலும் ஆர்வமுள்ளவர்களாக
இருப்பார்கள்.

அதிகமாக ஊர் சுற்றுபவர்களாக இருப்பார்கள். சிலர் கற்றவர்களாகவும், புகழ்
பெற்றவர்களாகவும் விளங்குவார்கள். சிலர் சுய தொழில் செய்து மேன்மை
அடைவார்கள். கடுமையான உழைப்பாளிகளாக இருப்பார்கள். தைரியம்
உடையவர்களாக, சாதனைகள் படைப்பவர்களாக இருப்பார்கள்

சிலர் அந்தரங்கமாக பல பாவச்செயல்களைச் செய்பவர்களாகவும் இருப்பார்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
9. கேது
ஜாதகன் தன் தொழிலில் அல்லது வேலையில் பல தடைகளைச் சந்திக்க
வேண்டியதாக இருக்கும். ஜாதகன் மிகுந்த சாமர்த்தியசாலியாக இருப்பான்.
பத்தாம் இடத்துக் கேது சுபக் கிரகங்களின் பார்வை பெற்று அமர்ந்திருந்தால்
ஜாதகன் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்தவனாக இருப்பான்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சரி பத்தாம் வீட்டிற்குரிய பலன்கள் எப்போது கிடைக்கும்?

1.பத்தாம் வீட்டின் அதிபதி
2.பத்தாம் வீட்டில் அமர்ந்தவன்
3.பத்தாம் வீட்டைப் பார்க்கும் கிரகம்
2.பத்தாம் வீட்டு அதிபதியைப் பார்க்கும் கிரகம்

ஆகிய கிரகங்களின் தசா (Major Dasa) அல்லது புத்திகளில் (Sub period)
பலன்கள் கிடைக்கும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பத்தாம் வீட்டை வைத்து, தொழில் முனைவோர், வேலையில் இருப்போர்,
பொறியாளர்கள், விளையாட்டு வீரர்கள், தலைவர்கள், நிதி நிறுவனங்கள்
வங்கிகளில் வேலை பார்ப்போர் போன்றவர்களுக்கான அமைப்புக்களைப்
பற்றிய பாடத்தை விடுபட்டவை என்ற பெயரில் தனித்தனியாகத் தரவுள்ளேன்
அது பின்னால் வரும். நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்

இத்துடன் 10ஆம் வீட்டின் முக்கியமான பகுதிகள் நிறைவுறுகின்றது.

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

13.10.08

வகுப்பறையின் இருநூறாவது பதிவு இது!

14.01.2007 பொங்கல் நன்நாளன்று இந்த வகுப்பறை துவங்கப்பெற்றது. இன்றுடன்
சுமார் 21 மாத காலங்களில் 200 பதிவுகளை இதில் எழுதியிருக்கிறேன்.
பெரும்பாலான பதிவுகள் நீளமான பதிவுகள்.

இந்த வகுப்பறையின் வெற்றிகரமான போக்கிற்கு வாசகர்களாகிய உங்களுடைய
அன்பும், ஆதரவும்தான் முக்கிய காரணம்.

உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
====================================================================
இன்றைய பதிவில் 33 பிரபலங்களின் பிறப்பு விவரங்களைக் கொடுத்துள்ளேன்.
என்னுடைய சேகரிப்புக்களிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்டவைகள் அவைகள்.
ஒவ்வொரு பிரபலத்தின் பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடம் ஆகிய மூன்றும்
உள்ளன.

இம்மூன்றையும், அதுவும் இத்தனை பேர்களுக்குக் கிடைக்கப்பேறுவது அரிதான
விஷயம். அதை உணரும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த விவரங்களை வைத்து, அவர்களுடைய ஜாதகத்தை நீங்கள் நொடியில்
பெறலாம். சைடுபரில் உள்ள planetarypositions.com இணைய தளத்தின் சுட்டி
உங்களுக்கு உதவும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பாடம் படிப்பவர்களுக்கு, இதுவரை எழுதிய பதிவுகளில் உள்ள ஜோதிட
விதிகளுக்கும், இனி எழுதப்போகும் பதிவுகளில் உள்ள ஜோதிட விதிகளையும்
ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு இந்த ஜாதகங்கள் பேருதவியாக இருக்கும்.

உதாரணத்திற்கு, திருமதி இந்திரா காந்தி அவர்களின் ஜாதகத்தைப் பார்த்தீர்கள்
என்றால் அதில் ஆறு கிரகங்கள் பரிவர்த்தனை யோகத்தில் இருப்பது தெரியும்.
அதுதான் அவருடைய உயர்விற்குக் காரணம்.

அதுபோல என்.டி. ராமராவ் அவர்களின் ஜாதகத்ததப் பார்த்தீர்கள் என்றால், துலா
லக்கினக்காரரான அவருடைய ஜாதகத்தில் லக்கினகாரகன் சுக்கிரன் ஏழாம் வீட்டில்
இருந்து லக்கினத்தைப்பார்ப்பது தெரியும், அந்த நிலைப்பாடும், பார்வையும்தான்,
அவருக்கு ஒரு அழகான தோற்றத்தையும், புகழையும் கொடுத்து, அவரை மக்கள்
மனதிலே ராமனாகவும், கிருஷ்ணனாகவும் நடிக்கவும் வைத்து, இருக்கவும்
வைத்தது. அவர் போடாத புராண வேடங்களா?

இப்படி ஒவ்வொரு ஜாதகத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு.

ஆகவே இந்த ஜாதகக் குறிப்புக்களின் மேன்மையை உணர்ந்து பத்திரப்படுத்தி
வையுங்கள். உங்களுக்குப் பின்னால் உதவும்.

அவர்களைப் பற்றிய பாடங்கள் பின்னால் வரும் (அடிப்படைப் பாடங்கள் முடிந்தபிறகு!)

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

1
பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்
பிறந்த தேதி: 26 September 1932
பிறந்த நேரம்: 21.06 Hours
பிறந்த இடம்: 32 N 35 73 E 47
2
இசைக் கலைஞர் எம்.எஸ்.திருமதி சுப்புலெட்சுமி.
பிறந்த தேதி: 16 September 1916
பிறந்த நேரம்: 09.30 Hours
பிறந்த இடம்: 13 N 05 80 E 18
3
கவிஞர் ரவீந்திரநாத் தாகூர்
பிறந்த தேதி: 7th May 1861
பிறந்த நேரம்: 02.45 Hours
பிறந்த இடம்: 22 N 82 88 E 20
4
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி
பிறந்த தேதி: 25 December 1924
பிறந்த நேரம்: 02.30 Hours
பிறந்த இடம்: 24 N 54 74 E 55
5
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி
பிறந்த தேதி: 19 November 1917
பிறந்த நேரம்: 23.13 Hours
பிறந்த இடம்: 25 N 27 81 E 51
6
அரசியல் தலைவி திருமதி சோனியா காந்தி
பிறந்த தேதி: 09 December 1946
பிறந்த நேரம்: 21.30 Hours
பிறந்த இடம்: 45 N 30 11 E 33
7
விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர்
பிறந்த தேதி: 24 April 1973
பிறந்த நேரம்: 18.20 Hours
பிறந்த இடம்: 18 N 58 72 E 50
8
தேசத் தந்தை மகாத்மா காந்தி
பிறந்த தேதி: 2 october 1869
பிறந்த நேரம்: 07.45 Hours
பிறந்த இடம்: 21 N 37 69 E 49
9
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு
பிறந்த தேதி: 14 November 1889
பிறந்த நேரம்: 23.03 Hours
பிறந்த இடம்: 25 N 25 82 E 00
10
அரசியல் தலைவர் எல்.கே.அத்வானி
பிறந்த தேதி: 08 November 1927
பிறந்த நேரம்: 09.15 Hours
பிறந்த இடம்: 25 N 24 68 E 22
11
சுவாமி விவேகானந்தா
பிறந்த தேதி: 12 January 1863
பிறந்த நேரம்: 06.33 Hours
பிறந்த இடம்: 22 N 40 88 E 30
12
விளையாட்டு வீரர் ராகுல் டிராவிட்
பிறந்த தேதி: 11 January 1973
பிறந்த நேரம்: 11.00 Hours
பிறந்த இடம்: 22 N 42 75 E 54
13
விளையாட்டு வீரர் சுனில் கவாஸ்கர்
பிறந்த தேதி: 10 July 1949
பிறந்த நேரம்: 20.42 Hours
பிறந்த இடம்: 18 N 56 72 E 51
14
விளையாட்டு வீரர் வீரேந்திர சேவாக்
பிறந்த தேதி: 20 October 1978
பிறந்த நேரம்: 08.00 Hours
பிறந்த இடம்: 28 N 39 77 E 13
15
திரைப்பட நடிகர் அமிதாப் பச்சன்
பிறந்த தேதி: 11 October 1942
பிறந்த நேரம்: 15.00 Hours
பிறந்த இடம்: 25 N 28 81 E 52
16
தொழிலதிபர் திருபாய் அம்பானி
பிறந்த தேதி: 28 December 1932
பிறந்த நேரம்: 06.37 Hours
பிறந்த இடம்: 28 N 42 77 E 11
17
திரைப்பட நடிகர் ராஜ் கபூர்
பிறந்த தேதி: 14 December 1924
பிறந்த நேரம்: 10.00 Hours
பிறந்த இடம்: 34 N 02 71 E 37
18
திரைப்பட நடிகர் திலீப் குமார்
பிறந்த தேதி: 11 December 1922
பிறந்த நேரம்: 11.15 Hours
பிறந்த இடம்: 34 N 02 71 E 37
19
திரைப்பட நடிகர் தேவானந்த்
பிறந்த தேதி: 26 September 1923
பிறந்த நேரம்: 09.30 Hours
பிறந்த இடம்: 30 N 23 76 E 26
20
திரைப்பட நடிகர் தர்மேந்திரா
பிறந்த தேதி: 08 December 1935
பிறந்த நேரம்: 06.00 Hours
பிறந்த இடம்: 22 N 35 88 E 21
21
திரைப்பட நடிகர் ராஜேஷ் கன்னா
பிறந்த தேதி: 29 December 1942
பிறந்த நேரம்: 17.45 Hours
பிறந்த இடம்: 31 N 35 74 E 57
22
திரைப்பட நடிகர் சாரூக்கான்
பிறந்த தேதி: 02 November 1965
பிறந்த நேரம்: 02.30 Hours
பிறந்த இடம்: 28 N 38 77 E 17
23
திரைப்பட நடிகர் ரஜினிகாந்த்
பிறந்த தேதி: 12 December 1950
பிறந்த நேரம்: 11.50 Hours
பிறந்த இடம்: 13 N 00 77 E 30
24
திரைப்பட நடிகர் நாகேஸ்வரராவ்
பிறந்த தேதி: 20 September 1924
பிறந்த நேரம்: 07.30 Hours
பிறந்த இடம்: 17 N 26 78 E 27
25
திரைப்பட நடிகர்.என்.டி.ராமராவ்
பிறந்த தேதி: 28 May 1923
பிறந்த நேரம்: 16.43 Hours
பிறந்த இடம்: 10 N 25 81 E 00
26
அரசியல் தலைவி செல்வி.ஜெயலலிதா
பிறந்த தேதி: 24 February 1948
பிறந்த நேரம்: 14.34 Hours
பிறந்த இடம்: 10 N 46 76 E 42
27
திரைப்பட நடிகை அஷ்வர்யா ராய்
பிறந்த தேதி: 01 November 1973
பிறந்த நேரம்: 04.30 Hours
பிறந்த இடம்: 12 N 55 74 E 07
28
திரைப்பட நடிகை சுஷ்மிதா சென்
பிறந்த தேதி: 19 November 1975
பிறந்த நேரம்: 06.30 Hours
பிறந்த இடம்: 17 N 26 78 E 27
29
முன்னாள் ஜனாதிபதி (Dr) ராதாகிருஷ்ணன்
பிறந்த தேதி: 6 September 1888
பிறந்த நேரம்: 06.30 Hours
பிறந்த இடம்: 13 N 05 80 E 18
30
Great Astrologer நீலகண்டசர்மா (கேரளா)
பிறந்த தேதி: 18 June 1858
பிறந்த நேரம்: 08.30 Hours
பிறந்த இடம்: 10 N 31 76 E 13
31
விளையாட்டு வீரர் சவ்ரவ்கங்குலி
பிறந்த தேதி: 08 July 1972
பிறந்த நேரம்: 07.30 Hours
பிறந்த இடம்: 22 N 35 88 E 23
32
விளையாட்டு வீரர் அனில்கும்ப்ளே
பிறந்த தேதி: 17 October 1970
பிறந்த நேரம்: 09.40 Hours
பிறந்த இடம்: 13 N 00 77 E 35
33
கலைஞர்.மு.கருணாநிதி
பிறந்த தேதி: 03 June 1924
பிறந்த நேரம்: 12.00 Hours
பிறந்த இடம்: 10 N 40 79 E 25

+++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

10.10.08

ஜோதிடம்: விடுபட்டவை

இராமேஸ்வரம் கோவில்


தேவிபட்டணம் கடற்கரையில் நவக்கிரஹ ஸ்தலம்


திருப்புல்லாணி கோவில்

எல்லோரும் விடுபட்டவை எழுதுவதுபோல வாத்தியாரும் விடுபட்டவை எழுதுகிறார்
என்று நினைக்க வேண்டாம்.

உண்மையிலேயே விடுபட்ட சின்னச் சின்ன விஷயங்களை இதில் எழுதலாம் என்று
உள்ளேன்.

தமிழக அரசின் மின்வெட்டு உயிரை வாங்குகிறது. ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம்
விட்டு விட்டு மின் வெட்டு என்றால் என்ன செய்ய முடியும்? சொந்த வேலைகளை
ஒழுங்காகப் பார்க்க முடியவில்லை. ஒரு பதிவை விவரமாக எழுத முடியவில்லை.
நேரா நேரத்திற்குப் பின்னூட்டங்களைப் படித்துப் பதில் எழுத முடியவில்லை.
என்ன வாழ்க்கை போங்கள்!

தமிழ் நாட்டிற்கே சனி பிடித்திருக்கிறது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எனக்கு நிறைய மின்னஞ்சல்கள் வரும்.

சார், மிகவும் சிரமப் படுகிறேன். கிரகங்களுக்குப் பரிகாரம் ஏதாவது
செய்ய வேண்டுமா?

கிரகங்களுக்குப் பரிகாரமா? அதெல்லாம் ஒன்றும் இல்லை!

நீங்கள் கிரகங்களை வழிபடலாம். மனம் உருகி வழிபடலாம். அதுதான் உண்மையான பரிகாரம்.

உங்கள் ஊரில் கோவில்களில் நவக்கிரகங்களுக்கு என்று தனியாக சன்னிதானம் இருக்கும்.

வாரத்தில் ஒரு நாள். குறிப்பாக சனிக்கிழமை காலையிலோ அல்லது மாலையிலோ
சென்று நவக்கிரகங்களை ஒன்பது முறைகள், வேறு சிந்தனைகள் எதுவுமின்றி, சுற்றி
வந்து வழிபட்டு விட்டு வரலாம்.

கிரக தோஷங்களுக்கென தமிழ் நாட்டில் இரண்டு பரிகார ஸ்தலங்கள் (இடங்கள்) உண்டு!

ஒன்று இராமேஸ்வரம். இன்னொன்று ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள
தேவிபட்டணம். அங்கே சென்று வழிபடலாம்.

இராமேஸ்வரத்திற்குச் செல்பவர்கள். ராமேஸ்வரம் கிழக்கு கோபுர வாசலுக்கு எதிரில்
இருக்கும் கடலில் நவக்கிரகங்களை வழிபட்டு விட்டுக் கடலில் குளித்துவிட்டுப் பிறகு
கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வரலாம்.

கடற்கரையில் நவக்கிரகங்களுக்கு எங்கே போவது? அதை நாமே உண்டாக்கித்
தரிசிக்கலாம். ஒன்பது தொன்னைகளில் நவக்கிரகங்களுக்கு உரிய நவதான்யங்களை
வைத்து. அதை ஒன்பது முறை சுற்றி வந்து வழிபட்டுவிட்டு, அந்தத் தொன்னைகளை
அப்படியே கடலில் கொண்டுபோய்க்கொட்டிவிட்டுப் பிறகு அங்கே குளித்து விட்டு,
கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வரலாம்.

ராமேஸ்வரம் போக முடியாதவர்கள், உள்ளூரில் உள்ள ஆற்றங்கரையிலும் அதைச்
செய்யலாம். ஆறு இல்லாத ஊரில் உள்ளவர்கள், தங்கள் வீட்டுத் தோட்டத்தில் அதைச்
செய்துவிட்டு, தங்கள் வீட்டுக் கிணற்று நீரில் குளித்துவிட்டு, கிரகங்களை வழிபடலாம்.

வழிபட்ட பிறகு அந்த நவதான்யங்கள் காலில் மிதிபடக்கூடாது. நீரில் கலந்துவிட
வேண்டும் அதை மட்டும் நினைவில் வையுங்கள்.

இதை எல்லாம் நம்பிக்கையின் அடிப்படையில் செய்ய வேண்டும்.

ஆதாரம் கேட்பவர்கள் இதைப் படித்தவுடன் மறந்து விடலாம்.

கிரங்களும் (அவை கோவில்களில் உள்ள அமைப்பின்படி), அவற்றிற்கு உரிய
தானியங்களையும் கீழே உள்ள படத்தில் கொடுத்துள்ளேன்.

கஷ்டங்கள், துன்பங்கள் என்றில்லாமல் காரியத் தடை உள்ளவர்களும், காரியத்
தாமதம் உள்ளவர்களும் இதைப் பின்பற்றலாம்.

எல்லாவற்றையும் அவரவர் விருப்பத்திற்கு விட்டு விடுகிறேன்.

அன்புடன்
வாத்தியார்
நவக்கிரகங்களும் அவற்றிற்குரிய தானியங்களும்


வாழ்க வளமுடன்!

4.10.08

ஜோதிடம்: அடிப்படைப் பாடம் (Basic Lesson)

அடைப்படைப் பாடத்தைச் சுருக்கி வாசகர்களின் வசதிக்காக ஒரே பக்கத்தில்
வருமாறு கீழே கொடுத்துள்ளேன். இதைப் பிரதி எடுத்துக் கையில் வைத்துக்
கொண்டு, கிடைக்கும் நேரத்தில் படித்து, மனதில் உருவேற்றவும். இந்தப் பாடம்
வசப்பாட்டால் மட்டுமே, இங்கே நடத்தும் பாடங்கள் புரியும்.
இல்லை என்றால் புரியாது.

1. பன்னிரெண்டு ராசிகளின் பெயர்கள் என்ன?

மேஷம்,
ரிஷபம்,
மிதுனம்,
கடகம்,
சிம்மம்,
கன்னி,
துலாம்,
விருச்சிகம்,
தனுசு,
மகரம்,
கும்பம்,
மீனம்.

2. ராசி அதிபதிகளின் பெயர் என்ன?

மேஷம் - செவ்வாய்
ரிஷபம் - சுக்கிரன்
மிதுனம் - புதன்
கடகம் - சந்திரன்
சிம்மம் - சூரியன்
கன்னி - புதன்
துலாம் - சுக்கிரன்
விருச்சிகம் - செவ்வாய்
தனுசு - குரு
மகரம் - சனி
கும்பம் - சனி
மீனம் - குரு

3. 12 வீடுகளுக்கும் தனித்தனியாக உள்ள வேலைகள் (Portfolios) என்ன?
அட்டவனை உள்ளது பார்க்கவும்



++++++++++++++++++++++++++++++++++++++++++++
4. லக்கினம் என்பது என்ன?

ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில், அந்தக் குழந்தை வானத்தில் எந்த ராசியைப்
பார்த்தவாறு ஜனித்திருக்கிறதோ அதுதான் அந்தக் குழந்தையின் பிறந்த லக்கினம்

உதாரணம். சித்திரை மாதம் முதல் தேதியன்று (That is on April 14th) காலை
6 மணி முதல் 8 மணி வரை மேஷ லக்கினம்.
ஆவணி மாதம் (August 17th or 18th) அதே காலை நேரத்தில் உதய லக்கினம்
சிம்மம் இப்படி. அதையடுத்து ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் அடுத்தடுத்த
லக்கினம் வரிசைப்படி மாறிக்கொண்டிருக்கும்.

5. லக்கினத்தை வைத்து ஒவ்வொருவீட்டையும் எண்ணிப்பார்க்கும் முறை என்ன?

லக்னம் இருக்கும் ராசி முதல் வீடு. அதில் இருந்து கடிகார சுற்றுப்படி வந்தால்
ஒவ்வொரு ராசியும் 2,3,4,5,6,7,8,9,10,11, 12 என்று வரிசைப்படி வரும்.

6. சந்திர ராசி என்றால் என்ன? அது எதை ஆதாரமாகக் கொண்டது?

ஒரு ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசி, சந்திர ராசி எனப்படும்.
அது ஜாதகன் பிறந்த நட்சத்திரத்தை ஆதாரமாகக் கொண்டது.

7. லக்கினம் எதற்குப் பயன்படும்? சந்திர ராசி எதற்குப் பயன்படும்?

பிறந்த ஜாதகம் (Birth Chart) என்பது வாகனம்,
தசாபுத்தி என்பது ரோடு,
கோள்சாரம் என்பது டிரைவர்.
லக்கினத்தையும் அதை அடுத்துள்ள பன்னிரெண்டு வீடுகளையும் வைத்து
ஜாதகனுடைய வாழ்க்கையையும், தசாபுத்தியைவைத்து அந்த ஜாதகன்
பயனடையப் போகும் காலத்தையும் கோள்சாரத்தைவைத்து அந்தப் பலன்கள்
கையில் கிடைக்கும் காலத்தையும் அறியலாம்.

8. கோச்சாரம் (கோள் சாரம் - Transit of planets) என்பது என்ன?

ஒவ்வொரு கோளும் வானவெளியில் சுழன்று ஒரு ராசியில் இருந்து மற்றொரு
ராசியில் இடம் பெயர்ந்து அமருவதே கோள்சாரம் எனப்படும்.

9. தசா / புத்தி என்பது என்ன? அதன் பயன் என்ன?

ஜாதகன் பிறந்த நட்சத்திரத்திற்கு அதிபதியான கிரகம் எதுவோ அதற்குரிய
தசாதான் ஜாதகனின் ஆரம்ப தசா, அதை அடுத்து ஒவ்வொரு தசாவாக மாறிக்
கொண்டே வரும் மொத்த தசா காலம் 120 ஆண்டுகள். ஒவ்வொரு தசாவையும்
மற்ற கோள்கள் பங்குபோட்டுக் கொள்ளும். அதற்கு புத்தி என்று பெயர்
(Sub period). ஒவ்வொருகிரகமும் அதன் தசாவில் அல்லது புத்தியில்தான்
தனக்குரிய நல்ல அல்லது தீய பலன்களைக் கொடுக்கும்

10. தசா புத்திகள் எதை வைத்து ஆரம்பிக்கின்றன?

ஒரு ஜாதகரின் பிறந்த நட்சத்திரத்தின் அதிபதியின் தசைதான் துவக்க தசை.

11. தசா புத்திகளின் கால அளவு, மற்றும் வரிசை என்ன?

சூரிய தசை - 6 ஆண்டுகள்
சந்திர தசை - 10 ஆண்டுகள்
செவ்வாய் தசை - 7 ஆண்டுகள்
ராகு தசை - 18 ஆண்டுகள்
குரு தசை - 16 ஆண்டுகள்
சனி தசை - 19 ஆண்டுகள்
புதன் தசை - 17 ஆண்டுகள்
கேது தசை - 7 ஆண்டுகள்
சுக்கிர தசை - 20 ஆண்டுகள்

மொத்தம் 120 ஆண்டுகள்

ஒரு பார்முலா உள்ளது:
Major Period x Sub Period = Number of months & Days of the Sub- Period
(In the three digit answer, first 2 digits are months and the last digit
multiplied by three is the days

12. கோள்களின் பெயர் என்ன? அவைகளின் சொந்த வீடு எது?

சூரியன் - சிம்மம்
சந்தின் - கடகம்
(இந்த இரண்டு கோள்களுக்கும் ஒரு வீடு மட்டுமே சொந்தம்)
செவ்வாய் - மேஷம், விருச்சிகம்
புதன் - மிதுனம், கன்னி
குரு - மூலம், மீனம்
சுக்கிரன் - ரிஷபம், துலாம்
சனி - மகரம், கும்பம்
(இந்த ஐந்து கிரகங்களுக்கு தலா 2 வீடுகள் சொந்தம்)
ராகு - சொந்த வீடு இல்லை
கேது - சொந்த வீடு இல்லை

13. அவைகள் உச்சம் அல்லது நீசம் ஆவது என்றால் என்ன?எங்கே ஆகும்?

ஒரு கிரகத்திற்கு அதன் சொந்த வீட்டில் 100% சக்தி (Power) உண்டு
உச்ச வீட்டில் சொந்தவீட்டைப்போல இரண்டு மடங்கு சக்தி உண்டு!

கோள்கள் "உச்சம்" அடையும் இராசி
சூரியன் - மேஷத்தில்,
சந்திரன் - ரிஷபத்தில்,
குரு - கடகத்தில்
புதன் - கன்னியில்
சனி - துலாமில்
ராகு, கேது - விருச்சிகத்தில்
செவ்வாய் - மகரத்தில்
சுக்கிரன் - மீனத்தில்
=======
நீசவீட்டில் ஒரு கிரகத்திற்கு சுத்தமாக வலிமை இருக்காது.

கோள்கள் "நீசம்" அடையும் இராசி
சூரியன் - துலாமில்,
சந்திரன் - விருச்சிகத்தில்,
செவ்வாய் - கடகத்தில்,
புதன் - மீனத்தில்
குரு - மகரத்தில்
சுக்கிரன் - கன்னியில்
சனி - மேஷத்தில்
ராகு, கேது - ரிஷபத்தில்

14. அவைகளின் நட்பு வீடு, பகை வீடுகள் எவை?

Chart கொடுக்கப்பட்டுள்ளது
கேந்திரம் என்பது லக்கினத்தில் இருந்து 4, 7,10ஆம் வீடுகள்
திரிகோணம் என்பது லக்கினம், 5, 9 ஆம் வீடுகள்
கேந்திரம் சிறப்பானது
அதைவிட திரிகோணம் இன்னும் சிறப்பானது.
இந்த வீடுகளில் அமரும் கிரகங்கள் வலிமை பெற்றுவிடும்

+++++++++++++++++++++++++++++++++++++++++++
15. அஸ்தமனம் என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகிறது?

ஒரு கிரகம் வலிமை இழந்து போவதுதான் அஸ்தமனம்
இரண்டு கிரகங்கள் 5 டிகிரிக்குள் அமர்ந்திருந்தால், 2-வதாக இருக்கும்
கிரகம் வலிமை இழக்கும். இந்த விதிப்படி சூரியனுடன் ஒரு கிரகம்
10 பாகைக்குள் இருக்கும்போது வலிமை இழந்துவிடும்

16. அஷ்டகவர்கம் என்றால் என்ன?

அஷ்டவர்க்கம் என்பது ஒரு கிரகத்தின் வலிமையையும், ஒரு வீட்டின்
தன்மையையும் மதிப்பெண்கள் கொடுத்துக் கணிப்பது.
ஒருகிரகத்தின் அதிகபட்ச மதிப்பெண் 8
ஒரு ஜாதகத்தின் மொத்த மதிப்பெண் 337
(யாராக இருந்தாலும் 337 மட்டுமே)
இந்த மதிப்பெண்களை வைத்து ஒரு ஜாதகத்தில் உள்ள நன்மை
தீமைகளை சுலபமாக அறியலாம்.
இதற்கு பதிவின் சைடுபாரில் உள்ள ஜகன்நாதஹோரா மென்பொருளைப்
பயன்படுத்தவும்.

17. நவாம்சம் என்றால் என்ன? அது எதற்குப் பயன்படும்?

Navamsam is the magnified version of a Rasi Chart
ஒரு ராசியை ஒன்பது சமபாகங்களாகப் பிரித்து, ராசியில் உள்ள கிரகம்
அதன் எந்தப் பகுதியில் உள்ளது என்பதைக் காட்டுவதுதான் நவாம்சம்.
(குறிப்பாக கணவன் அல்லது மனைவியைப் பற்றி அறிய உதவும்)

18. காரகன் என்பவன் யார்? எது எதற்கு யார் யார் காரகன்?
காரகன் என்பவன் authority
ஒரு வீட்டின் அதிபதி என்பது அந்த வீட்டின் சொந்தக்காரன் (Owner)
காரகன் என்பவன் அந்த வீட்டின் செயல்களுக்கு உத்தரவு போட்டு
நடத்திவைக்கும் வலிமை உடையவன்(authority)

(உதாரணத்திற்கு ஒன்பதில் சனி இருந்தால், அப்பாவிற்கும் மகனுக்கும் ஒத்துவராது.
ஆனால் ஜாதகனுடைய ஜாதகத்தில் சூரியன் நன்றாக இருந்தால் நல்ல தந்தையாகக்
கொடுப்பான். ஒத்துவராமைக்கு இவன் காரணமாக இருந்தாலும் தந்தை அனுசரித்து
அன்பாக இருப்பார். அதற்கு காரகன் காரணமாக அமைவான்.)

தந்தைக்குக் காரகன் சூரியன்
உடல் காரகன் சூரியன்
தாய்க்குக் காரகன் சந்திரன்
மன காரகன் சந்திரன்
ஆயுள் காரகன் சனி
தொழில் காரகன் சனி
களத்திர காரகன் சுக்கிரன்
தன (பணம்) காரகன் குரு
புத்திரகாரகன் குரு
கல்வி, புத்தி காரகன் புதன்
ஆற்றல், திறமைகளுக்குக் காரகன் செவ்வாய்!

++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

கண்மணிகள் எழுதிய பரிட்சை முடிவுகள்!

கண்மணிகள் எழுதிய பரிட்சை முடிவுகள்!

இந்தப் பதிவிற்குத் தொடர்புடைய முன்பதிவின் சுட்டி இங்கே உள்ளது!

வருகைப் பதிவேட்டில் உள்ளவர்கள் 48 பேர்கள்.
பதிவில் உள்ள ஹிட் கவுண்டர் மூலம் குறைந்தது (சராசரியாக)
500 பேர்களாவது தினமும் வகுப்பறைக்கு வந்து போவதை உணர்கிறேன்.
ஆனால் தேர்வு என்றதும் பலரைக் காணவில்லை.
எழுதியவர்கள் எட்டு பேர்கள் மட்டுமே!

முடிவுகள்

1. K.தங்கராஜ் (தங்ஸ்) 18ல் 8 கேள்விகளுக்கு விடைகளை எழுதியுள்ளார்
=======================================================
2. சங்கரலிங்கம் பிச்சைய்யா 18ல் 5 கேள்விகளுக்கு விடைகளை எழுதியுள்ளார்
=======================================================
3. அருண் ராஜேஷ் 18 கேள்விகளுக்கு 9 கேள்விகளுக்கு மட்டும் பதில்
எழுதியுள்ளார். வாங்கிய மதிப்பெண்கள் 50%
=======================================================
4. Sridhar Subramanaiam - 18 கேள்விகளில் 11 கேள்விகளுக்கு மட்டும் பதில்
எழுதியுள்ளார். 2 விடைகள் தவறானது வாங்கிய மதிப்பெண்கள் 50%
=======================================================
5. கூடுதுறை 18 கேள்விகளுக்கும் விடைகளை எழுதியுள்ளார்
12 பதில்கள் மட்டும் சரியானவை கூடுதுறையார் வாங்கிய மதிப்பெண்கள் 67%
=========================================================
6. நாமக்கல் சிபி சிரத்தையுடன் பதில் எழுதியுள்ளார்.
15 கேள்விகளுக்கான பதில் உள்ளது. அதில் 2 தவறுகள் உள்ளன!
வாங்கிய மதிப்பெண்கள் 72%
கிரகங்களின் Portfolioக்களுக்கு தமது வழக்கமான கலாய்ப்புக்களுடன்
பதில் எழுதியுள்ளார். சுவை கருதி அதைக் கீழே கொடுத்துள்ளேன்.
=========================================================
7. V.N.சுதாகர் 18 கேள்விகளுக்கும் விடைகளை எழுதியுள்ளார்.
14 பதில்கள் மட்டும் சரியானவை. வாங்கிய மதிப்பெண்கள் 78%
=======================================================
8. S.ராஜகோபால் - 18ல் 16 கேள்விகளுக்குச் சரியான பதில்கள் உள்ளன
வாங்கிய மதிப்பெண் 92% முதல் மாணவராகத் தேர்வு பெற்றுள்ளார்
அவருக்கு விஷேசமான பாராட்டுக்கள்
=========================================================
மதிப்பெண் வாங்குவது முக்கியமில்லை. தேர்வில் கலந்து கொள்வது முக்கியம்
ஏன் பலர் கலந்து கொள்ளவில்லை என்று தெரியவில்லை!
அடுத்த தேர்வில் இப்படி நடக்காது என்று நம்புகிறேன்
_____________________________________
பதில் எழுதிய அனைவருக்கும் பாராட்டுக்கள்

சரியான விடைகள், சில அட்டவனைகளுடன் (அடிப்படைப் பாடத்தின் சுருக்கம்)
அடுத்த பதிவில் வெளியாகும்! புதியவர்கள் பலருக்கும் அது உதவியாக இருக்கும்!

அன்புடன்,
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++

வீடுகளின் பணிகளுக்கான விளக்கம் (நாமக்கல் சிபி அவர்கள் எழுதியது.
கலாய்ப்புடன் எழுதியுள்ளார். சுவைக்காகக் கொடுத்துள்ளேன்)

12 வீடுகளுக்கான பணிகள்

a.லக்கினம் – தலைமைச் செயலகம்
The first house of your horoscope represents your identity, physical characteristics, appearance, health and well-being, the
physical body, vitality, attitude, temperament and the way you look upon the world. It also represents your self-image, outer
personality and disposition

b.இரண்டாம் இடம் : நிதித் துறை (& குடும்ப நலத்துறை)

The second house in your birth chart governs money, possessions, material assets, self worth, attitude towards security, bank and
savings accounts, spending and how money is acquired. Emotional and financial security, personal values and principles are all
2nd house issues

c. மூன்றாம் இடம் : சகோதர, சகோதரிகள் உறவுத்துறை, ராணுவத் துறை(தைரிய ஸ்தானம்)
உள்நாட்டு, வெளியுறவுத்துறை & தகவல் தொடர்புத் துறை

The third house of your horoscope governs all forms of communication and transportation. The style and manner of
communications, neighbors, siblings and other relatives such as aunts, uncles, and cousins are representative of the third house.
Additionally, letters, contracts, telephone calls, computers, early childhood education, documentation, papers, books, writing
utensils, cars, the subway and all forms of short distance travel are found in the third house. Your mental attitude, learning style,
opinions, the analytical mind, self-expression and speech are also 3rd house issues.

d.நான்காவது இடம் : கல்வித்துறை, வசதித் துறை, தாய்மைத் துறை

The fourth house of your horoscope governs areas related to home, family and property. Your roots, family background, childhood, inner emotions, immovable possessions, domestic life, the end of life and endings in general are covered by this house.
Psychological foundations and conditioning are also found in the 4th house.
There is some controversy as to whether this house covers the Father or the Mother. One might say that the parent with the
most influence is covered by this house. In my practice, the Mother is found in the fourth house and the Father in the tenth
house. Given that females are ruled by the moon in your chart and the moon is the natural ruler of the fourth house, I use the
fourth house as a significant factor of the mother. This house also covers the one that nurtures, which is primarily the mother

e.ஐந்தாவது இடம் : வாரிசு அரசியல், நுண்ணறிவுத் துறை

Children and how one relates to them are found in the fifth house. Also, romance, love affairs (the type that will not lead to
commitment or marriage), pleasures, enjoyment, fun, amusement parks, playgrounds, sports of all kinds, games, arts, leisure
activities, creativity, entertainment, concerts, holidays, games of chance such as, gambling, speculation, financial risks, stocks
and investments are found in the 5th house. This is the house of self-expression through creativity

f.ஆறாவது இடம் : சுகாதாரத் துறை (நோய், கடன், …) மறைவுஸ்தானம் என்றும் அழைக்கப்படும்.

The sixth house of your horoscope is the house of health and service. General well-being and illness are found here. Proactive
measures you take for your health such as diet and exercise are also found in the sixth house. Hygiene, work (not career, as that
is a tenth house matter), service, employees, relations with employer, anyone who provides a service to you in whatever
capacity, domestic pets and your daily routine are related to the 6th house

g.ஏழாவது இடம் : ஹிஹி.. வாழ்க்கைத் துணை

Serious committed relationships are found in the seventh house. Traditionally, this was the house of marriage as marriage is a
contract you have with another person. Your spouse, contractual partnerships, one-on-one relationships, business partnerships
including verbal commitments, rivals, justice, law, opponents (adversaries) are included in this house. Whereas the 5th house
governs romance and love affairs, the seventh house is about the deep commitment of love. It also shows what you need in a
relationship and partner

h.எட்டாவது இடம் : ஆட்சியின் பலம் மற்றும் எப்போ கவிழும்
என்று சொல்லுவது (ஆயுளைத் தீர்மானிப்பது)

Traditionally known as the house of rebirth and regeneration, this house is symbolized by the Phoenix rising up from the ashes.
The eight house covers birth, death, decay, surgery, healing, wills, gifts, inheritance, credit, legacies, other people's money, your
partner's money, child support, taxes, investments, the clearing away in order to make room for the new, reincarnation, sex and
attitudes towards sex. As sex is a gift of giving one's self to another, so sex is found in the 8th house.

i. ஒன்பதாவது இடம் : பாக்கிய ஸ்தானம் மற்றும் தொலைதூரப் பயணங்கள், தந்தையார் துறை
ஒன்பதாவது ஸ்தானம் லக்கினத்தை விட வலுவாக இருந்தால் ஜாதகரின் தந்தை ஜாதகரைக் காட்டிலும் செல்வாக்கோடு இருப்பார். அல்லது ஜாதகரின் தந்தையைக் காட்டிலும் ஜாதகர் நல்ல செல்வாக்கோடு இருப்பார்.

Traditionally the ninth house is known as the house of long distance travel. Travel of distances greater than 500 miles would be
found in this house. Voyages, foreigners, foreign countries, journeys into the unknown both physical and mental, church, religion,
theology, philosophy, beliefs, divination, languages, higher learning, college education, literature, books, publishing, media, law,
lawyers, truth, justice, prophecy, expansion and broadening of one's horizons in all ways are covered by the 9th house.

j.பத்தாவது இடம் : தொழில் ஸ்தானம்

The tenth house is the house of career and status. Ambitions, aspirations, attainments, success, occupation, recognition,
reputation, prestige, identity within the community, public image, duty, responsibility, superiors, authority and the father within a family are found in the 10th house. Since the tenth house focuses on ambition and career, it makes sense that it would be the
house that appropriately symbolizes the father

k. பதினோராவது இடம் : லாப ஸ்தானம்,

Traditionally known as the house of hopes and wishes, the eleventh house is where dreams do come true. If you don't think your
dreams can come true, just wait until you have a significant planet transit this house. They do! Friends, group activities, your role
in your community, social life, acquaintances, associates, societies, volunteering, leagues, clubs, other cultures and how we relate
to them, humanitarian causes and charity are 11th house issues

l.பன்னிரெண்டாவது இடம் : விரைய ஸ்தானம்

Things that are hidden are found in this house. Seclusion, secrets, occult activities, psychic matters, escapism, drugs, alcohol,
sorrow, confinement, imprisonment, prisons, restraint, institutions, hospitals, anywhere that you might be detained for whatever
reason, exile, the unconscious self, dreams, hidden fears, paranoia, self-undoing, something behind the scenes, the subconscious
mind, spirituality, faith and psychological problems are covered by the 12th house. This is the last house of the horoscope and the
end of a complete cycle

++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!