--------------------------------------------------------------
Astrology எந்தப்பிள்ளை நல்லபிள்ளை?
ஒரு தாயிடம் சென்று நேர்காணல் செய்து, உங்கள் பிள்ளைகளில் எந்தப் பிள்ளை நல்லபிள்ளை என்றால், அவள் தன்னுடைய எந்தப் பிள்ளையையும் விட்டுக் கொடுக்க மாட்டாள். “எல்லாப் பிள்ளைகளுமே நல்லபிள்ளைகள்” என்றுதான் சொல்லுவாள். அதுதான் தாய் உள்ளம்.
தாயன்பிற்கு நிகரானது உலகில் எதுவும் இல்லை!
ஆனால், அதே தாயின் பிள்ளைகளை நேர்காணல் செய்து, “உங்கள் தாய்க்கு எந்தப் பிள்ளையின் மீது அதிகப் பாசம்” என்று கேட்டால், ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்வார்கள்
அதைக் கவியரசர் கண்ணதாசன் ஒரு பாட்டில் அற்புதமாக விளக்கினார்
“படிச்சிருந்தும் தந்தை தாயை மதிக்க மறந்தான் - ஒருவன்
படுக்கையிலே முள்ளை வச்சி பார்த்து மகிழ்ந்தான்
பிடிச்ச முயல் அத்தனைக்கும் மூன்று காலென்றான் - ஒருவன்
பெண்டாட்டியின் கால்களுக்கு காவல் இருந்தான்....... காவல் இருந்தான்!
சொன்னதை ‘நச்’ சென்று சொன்னார் அதுதான் சிறப்பு
தாயை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு, மனைவியின் கண் வீச்சில் கிறங்கி, அவளுடைய காலடியில் கிடக்கும் ஆசாமிகள்தான் இன்று அதிகம்!
அதைப் பற்றி இன்னொரு நாள் விரிவாக எழுதுகிறேன். பொறுத்திருங்கள். இப்போது பாடத்தைப் பார்ப்போம்
------------------------------------------------------------------------------
ஜோதிடத்தை நன்கு அறிந்தவனை, எந்தக் கிரகம் நல்ல கிரகம் (எந்தக் கிரகம் மிகவும் அத்தியாவசியமானது - எந்தக் கிரகம் நமக்கு நன்மை செய்யத் தேவையானது) என்று கேட்டால்...... நன்றாகக் கவனிக்கவும்...... நன்கு அறிந்தவனைக் கேட்டால், என்ன சொல்வான்?
“எல்லாக் கிரகங்களுமே நல்ல கிரகங்கள்” என்றுதான் சொல்வான்
உண்மையும் அதுதான்.
கர்மவினைப்படி ஜாதகனுக்கு என்ன கொடுக்க வேண்டுமோ, அதைக் கிரகங்கள் உரிய நேரத்தில் தவறாமல் கொடுத்துவிடும்.
நன்மை, தீமை இரண்டும் கிரகங்களுக்கு ஒன்றுதான். அதில் அவைகளுக்குப் பேதம் இல்லை.
நன்மை, தீமை இரண்டையும் ஒன்றாக நினைத்தால், எதிர்கொண்டால் நமக்கும் எந்த வாதமும் இல்லை! வழக்கும் இல்லை!
------------------------------------------------------------------------------
சராசரி மனிதன் கேட்பான்:
“நன்மையை எப்போது வேண்டுமென்றாலும் கொடுக்கட்டும். தீமைகளை எப்போது கொடுப்பார்கள்? அதை மட்டும் சொல்லுங்கள்!”
“தங்களுடைய தசாபுத்திகளில் கொடுப்பார்கள். கோச்சாரத்தில் (கோள் சாரத்தில் That is in their transit) கொடுப்பார்கள். அதுவும் குறிப்பிட்ட நிலைப்பாடுகளில் அதிகமாகக் கொடுப்பார்கள். உங்கள் மொழியில் சொன்னால் தட்டிவிட்டுப் போவார்கள்.கவிழ்த்துவிட்டுப் போவார்கள். சிலரை உள்ளே பிடித்து வைத்துவிட்டும் போவார்கள்”
“அதை எப்படித் தெரிந்து கொள்வது?”
“அதற்கான பாடல் கீழே உள்ளது. படித்துப்பாருங்கள்”
-------------------------------------------------------------------------------
“கேளப்பா குருமூன்றில் கலைதானெட்டு
கேடு செய்யும் சனி ஜென்மம் புந்திநாலில்
சீளப்பா சேயேழு செங்கதிரோன் ஐந்தும்
சீறிவரும் கரும்பாம்பு நிதியில்தோன்ற
ஆளப்பா அசுரகுரு ஆறிலேற
அப்பனே திசையினுடை வலுவைப்பாரு
மாளப்பா குற்றம்வரும் கோச்சாரத்தாலே
குழவிக்கு திரியாணங் கூர்ந்து சொல்லே!”
சந்திரன் உங்கள் ஜாதகத்தில் நிற்கும் ராசியை வைத்துக் கோள்சாரத்தைக் கணக்கிட வேண்டும். அதை மனதில் கொள்க!
குரு தனது சுற்றில் மூன்றாம் வீட்டிலும்
கலை (சந்திரன்) எட்டாம் வீட்டிலும்
சனி ஒன்றாம் வீட்டிலும்
புந்தி (புதன்) நான்காம் வீட்டிலும்
சேய் (செவ்வாய்) ஏழாம் வீட்டிலும்
செங்கதிரோன் (சூரியன்) ஐந்தாம் வீட்டிலும்
கரும்பாம்பு (ராகு) இரண்டாம் வீட்டிலும்
அசுரகுரு (சுக்கிரன்) ஆறாம் வீட்டிலும்
அதிகமான கேடுகளை (துன்பங்களைக்) கொடுப்பார்கள்
-----------------------------------------------------------------------------------
“சரி, அவர்களை எப்படி follow செய்வது? எந்தந்த வீட்டில் இன்று இருக்கிறார்கள். எப்போது இடம் மாறுவார்கள் என்று எப்படித் தெரிந்து கொள்வது?”
அது வெரி சிம்ப்பிள். அதற்கு ஒரு வழி இருக்கிறது. இங்கே அதைச் சொன்னால், அதுவும் சேர்ந்து திருட்டுப் போகும். வகுப்பறையின் சுவர்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஆசாமிகள் திருடிக் கொண்டுபோய்விடுவார்கள். ஆகவே மின்னஞ்சல் அனுப்புங்கள். பதில் கிடைக்கும்
அன்புடன்
வாத்தியார்
________________________________________
வாழ்க வளமுடன்!
Astrology எந்தப்பிள்ளை நல்லபிள்ளை?
ஒரு தாயிடம் சென்று நேர்காணல் செய்து, உங்கள் பிள்ளைகளில் எந்தப் பிள்ளை நல்லபிள்ளை என்றால், அவள் தன்னுடைய எந்தப் பிள்ளையையும் விட்டுக் கொடுக்க மாட்டாள். “எல்லாப் பிள்ளைகளுமே நல்லபிள்ளைகள்” என்றுதான் சொல்லுவாள். அதுதான் தாய் உள்ளம்.
தாயன்பிற்கு நிகரானது உலகில் எதுவும் இல்லை!
ஆனால், அதே தாயின் பிள்ளைகளை நேர்காணல் செய்து, “உங்கள் தாய்க்கு எந்தப் பிள்ளையின் மீது அதிகப் பாசம்” என்று கேட்டால், ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்வார்கள்
அதைக் கவியரசர் கண்ணதாசன் ஒரு பாட்டில் அற்புதமாக விளக்கினார்
“படிச்சிருந்தும் தந்தை தாயை மதிக்க மறந்தான் - ஒருவன்
படுக்கையிலே முள்ளை வச்சி பார்த்து மகிழ்ந்தான்
பிடிச்ச முயல் அத்தனைக்கும் மூன்று காலென்றான் - ஒருவன்
பெண்டாட்டியின் கால்களுக்கு காவல் இருந்தான்....... காவல் இருந்தான்!
சொன்னதை ‘நச்’ சென்று சொன்னார் அதுதான் சிறப்பு
தாயை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு, மனைவியின் கண் வீச்சில் கிறங்கி, அவளுடைய காலடியில் கிடக்கும் ஆசாமிகள்தான் இன்று அதிகம்!
அதைப் பற்றி இன்னொரு நாள் விரிவாக எழுதுகிறேன். பொறுத்திருங்கள். இப்போது பாடத்தைப் பார்ப்போம்
------------------------------------------------------------------------------
ஜோதிடத்தை நன்கு அறிந்தவனை, எந்தக் கிரகம் நல்ல கிரகம் (எந்தக் கிரகம் மிகவும் அத்தியாவசியமானது - எந்தக் கிரகம் நமக்கு நன்மை செய்யத் தேவையானது) என்று கேட்டால்...... நன்றாகக் கவனிக்கவும்...... நன்கு அறிந்தவனைக் கேட்டால், என்ன சொல்வான்?
“எல்லாக் கிரகங்களுமே நல்ல கிரகங்கள்” என்றுதான் சொல்வான்
உண்மையும் அதுதான்.
கர்மவினைப்படி ஜாதகனுக்கு என்ன கொடுக்க வேண்டுமோ, அதைக் கிரகங்கள் உரிய நேரத்தில் தவறாமல் கொடுத்துவிடும்.
நன்மை, தீமை இரண்டும் கிரகங்களுக்கு ஒன்றுதான். அதில் அவைகளுக்குப் பேதம் இல்லை.
நன்மை, தீமை இரண்டையும் ஒன்றாக நினைத்தால், எதிர்கொண்டால் நமக்கும் எந்த வாதமும் இல்லை! வழக்கும் இல்லை!
------------------------------------------------------------------------------
சராசரி மனிதன் கேட்பான்:
“நன்மையை எப்போது வேண்டுமென்றாலும் கொடுக்கட்டும். தீமைகளை எப்போது கொடுப்பார்கள்? அதை மட்டும் சொல்லுங்கள்!”
“தங்களுடைய தசாபுத்திகளில் கொடுப்பார்கள். கோச்சாரத்தில் (கோள் சாரத்தில் That is in their transit) கொடுப்பார்கள். அதுவும் குறிப்பிட்ட நிலைப்பாடுகளில் அதிகமாகக் கொடுப்பார்கள். உங்கள் மொழியில் சொன்னால் தட்டிவிட்டுப் போவார்கள்.கவிழ்த்துவிட்டுப் போவார்கள். சிலரை உள்ளே பிடித்து வைத்துவிட்டும் போவார்கள்”
“அதை எப்படித் தெரிந்து கொள்வது?”
“அதற்கான பாடல் கீழே உள்ளது. படித்துப்பாருங்கள்”
-------------------------------------------------------------------------------
“கேளப்பா குருமூன்றில் கலைதானெட்டு
கேடு செய்யும் சனி ஜென்மம் புந்திநாலில்
சீளப்பா சேயேழு செங்கதிரோன் ஐந்தும்
சீறிவரும் கரும்பாம்பு நிதியில்தோன்ற
ஆளப்பா அசுரகுரு ஆறிலேற
அப்பனே திசையினுடை வலுவைப்பாரு
மாளப்பா குற்றம்வரும் கோச்சாரத்தாலே
குழவிக்கு திரியாணங் கூர்ந்து சொல்லே!”
சந்திரன் உங்கள் ஜாதகத்தில் நிற்கும் ராசியை வைத்துக் கோள்சாரத்தைக் கணக்கிட வேண்டும். அதை மனதில் கொள்க!
குரு தனது சுற்றில் மூன்றாம் வீட்டிலும்
கலை (சந்திரன்) எட்டாம் வீட்டிலும்
சனி ஒன்றாம் வீட்டிலும்
புந்தி (புதன்) நான்காம் வீட்டிலும்
சேய் (செவ்வாய்) ஏழாம் வீட்டிலும்
செங்கதிரோன் (சூரியன்) ஐந்தாம் வீட்டிலும்
கரும்பாம்பு (ராகு) இரண்டாம் வீட்டிலும்
அசுரகுரு (சுக்கிரன்) ஆறாம் வீட்டிலும்
அதிகமான கேடுகளை (துன்பங்களைக்) கொடுப்பார்கள்
-----------------------------------------------------------------------------------
“சரி, அவர்களை எப்படி follow செய்வது? எந்தந்த வீட்டில் இன்று இருக்கிறார்கள். எப்போது இடம் மாறுவார்கள் என்று எப்படித் தெரிந்து கொள்வது?”
அது வெரி சிம்ப்பிள். அதற்கு ஒரு வழி இருக்கிறது. இங்கே அதைச் சொன்னால், அதுவும் சேர்ந்து திருட்டுப் போகும். வகுப்பறையின் சுவர்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஆசாமிகள் திருடிக் கொண்டுபோய்விடுவார்கள். ஆகவே மின்னஞ்சல் அனுப்புங்கள். பதில் கிடைக்கும்
அன்புடன்
வாத்தியார்
________________________________________
வாழ்க வளமுடன்!









