மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label இளைஞர் மலர். Show all posts
Showing posts with label இளைஞர் மலர். Show all posts

21.11.15

Week end Posts: அடப் பாவிகளா...... வாழைப்பழத்தை இப்படியா பழுக்க வைக்கிறீர்கள்?

Week end Posts: அடப் பாவிகளா...... வாழைப்பழத்தை இப்படியா பழுக்க வைக்கிறீர்கள்?

எத்தனால் என்ற இராசயனக் கலவையை 50 மில்லி லிட்டர் அளவில்
20 லிட்டர் தண்ணீரில் கலந்து அதில் பழுக்காமல் சந்தைக்கு வந்த வாழைக்காய் சீப்புக்களை முக்கி எடுத்து வைத்து விடுவார்களாம்.
15 நாட்களில் பழுக்க வேண்டிய காய்கள் ஒரே நாளில் பழுத்து விடுமாம். எங்கே நடக்கிறது இந்த அக்கிரமம் ? கர்நாடகாவில் உள்ள குல்பர்கா
நகரிலாம். செய்தி வடிவில் ஆதாரத்துடன் காணொளி உள்ளது. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த அவலம் நம் ஊர்களிலும் பரவ எத்தனை நாள் ஆகும்? அதையும் யோசித்துப் பாருங்கள்!


-----------------------------------------------------------
2

கள்ளின் மறுபக்கம்

கள் குடிப்பதைக் கேள்விப் பட்டிருப்பீர்கள்! கள்ளின் வேறு உபயோகம்
 என்ன தெரியுமா - தெரிந்து கொள்ளுங்கள். காணொளி உள்ளது.
ஆமாம் எண்ணெய்க்குப் பதிலாக கள்ளை ஊற்றிச் சமைக்கிறார்கள்.



புதிது புதிதாக என்னென்ன செய்கிறார்கள் சாமிகளா!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

11.6.11

முகவரி தெரியாமல் மோதியபோது!

-------------------------------------------------------------------------------------
முகவரி தெரியாமல் மோதியபோது!

புதுக்கவிதைக்கு வித்திட்ட பாரதிக்குப் புதுக்கவிதையாலேயே அஞ்சலி செலுத்தவேண்டும் என்ற எண்ணம்தான் காவியத்திற்கு ஆரம்பம்.

புதுக்கவிதைக்கு காவிய அந்தஸ்த்தைக் கொடுத்துவிட்டார் கவிஞர் வைரமுத்து.

புதுப்புதுச் சொற்கள். புதிய பிரயோகங்கள். சொற்சிலம்பம் ஆடி அசரவைக்கிறார்.

ஒரு கவிஞருடைய நூற்றாண்டு விழாவை ஒட்டி எழுதப்பட்ட இந்த நெடுங்கவிதை பல நூற்றாண்டுகளைக் காணப்போவது உறுதி.

சா.விஸ்வநாதன்.
(கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதிய கவிராஜன் கதை என்னும் நூலிற்கு திரு சாவி அவர்களின் வாழ்த்துரை)

ஒரு கவிஞனின் வாழ்க்கை வரலாறு புதுக் கவிதையில் எழுதப் பட்டது என்றால் அது கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதிய இந்த கவிராஜன் கதையாகத்தான் இருக்கும். சரி அதன் 48 -ஆவது பகுதிக்குப் பயணிப்போம்.

மகாகவியின் மரணம்

கொஞ்சம் தாமதித்திருந்தால்
சில நிமிஷங்களில்
ஒரு சகாப்தத்தையே
சாகடித்திருக்கும்.

நல்லவேளை
தரையில்
கொட்டிக்கிடந்த பாரதியை
குவளைக் கண்ணனின்
அம்புக்கைகள் விரைந்து
அள்ளி எடுத்தன.

காய்ந்த உடம்பெங்கும்
காயங்கள்
தேகமெல்லாம் அங்கங்கே
சின்ன சின்ன
கிழிசல்கள்

அவன் பட்ட துயருக்காய்
அங்கங்கள் அங்கங்கே
ரத்தமாய் அழுதன.

அங்கே
இன்னும் சில நிமிஷங்கள்
இருந்திருந்தால்-
அந்த யானை
தேங்காய் தந்தவனையே
சிதறு தேங்காய் போட்டிருக்கும்.

காயப்பட்ட கவிஞனை
ராயப்பேட்டை மருத்துவமனையில்
சீனுவாச்சாரியார் சேர்த்தார்.

பகைவனுக்கு அருளச்சொன்ன
பாவலன் - தன்னைப்
பழுதாக்கிய யானையைப்
பழித்தானா?... இல்லை.
கண்ணீரின் வலிக்கு -
புன்னகை ஒத்தடம்
கொடுத்துக் கொண்டான்.

"யானை - என்
முகவரி தெரியாமலே
மோதிவிட்டது
இருந்தாலும் அதற்கு
இறக்கமதிகம்
இல்லையேல் -
துதிக்கையால் என்னைத்
துவைத்திருக்காதா? "

அங்கங்களின் காயம்
ஆறிவிட்டது
ஆனால் அந்த அதிர்ச்சி
அவசர வியாதிகளை
அழைத்து வந்தது.

....................................
...................................
ஏ மரணமே
எங்கள் மகாகவியின்
படுக்கையை அன்று
பாடையாக்கி விட்டாயே

அந்த மரண இரவில்
ஒரு மயான மௌனம்

விளக்குகள் வெளிச்சத்தை
அழுது கொண்டிருந்தன.

ஒரு மகாகவி
மரணத்தோடு
மல்யுத்தம் நடத்துகிறான்
வெளியேறத் துடிக்கும் உயிர்
உடம்பை அடிக்கடி
உதைக்கிறது.

மருந்தை மாகவிஞன்
மறுதலிக்கிறான்.

*******************************************************
ஆம், மரணப் படுக்கையில்
முடங்கிக் கிடக்கும்
செஞ்சூரியனை
சமதர்ம சங்க நாதத்தை,
பெண்ணடிமை ஒழிக்கப் புறப்பட்ட
கவிச் சுடரொளியை

நாள்தோறும்
மறவாமல் சென்று
ஆறுதல் கூறும்
அந்த மீனவ நண்பர்
அன்றும்
காணச் சென்றார்.

சிங்காரவேலர்,
தனது தோழருக்கு;
எப்போதும் போல் அன்றும்,

அக்னிக் குஞ்சிற்கு ஆகாரம் தர
வெந்நீரில் 'ஹார்லிக்சைக்'
கலந்து கொண்டார்.

அறிவு ததும்பும் அமுதக் கலசத்தை
தன் மடியிலே வைத்து கொண்டு - ஆம்
மகாகவியின் சிரத்தை தன் மடியில்
இருத்திக் கொண்டு
அமுதுக்கு அமுதூட்டினார்.

கலந்த ஹார்லிக்சை கனிவோடு
ஊட்டினார்.

அமுது பருகும் அந்நேரம்..
வெடித்துச் சிதறி விண்ணையே
முட்டிய எரிமலை
அமைதி கொள்கிறது.

சுயராஜ்ஜியம் வேண்டி
புறப்பட்ட புரட்சிப் புயல்
நிசப்தம் கொள்கிறது.

காலனையே மிதிக்கத்
துணிந்தவனை,
சக்தியும் மடியில் இருந்து
இறக்கி விட்டாள்.

அமரத்துவம் கொண்ட
கவிகளைப் படைத்து
உலகமே உய்ய
மானுடம் பாடிய மகாகவி
அமைதி கொள்கிறான்.

அடுத்த சில மணித்துளிகள் - தன்
அருமை நண்பர் மடியிலே
அமரர் ஆனார்.

********************************************************************
(மேலே உள்ள அந்த செவ்வரிகள் நான் கூறியவை. அதை கவிஞர் வைரமுத்து தனது கவிராஜன் கதையில் செதுக்கவில்லை?! இப்போது மீண்டும் வைரமுத்துவின் வரிகளுக்கே செல்வோம்)

ஏகாதிபத்தியத்தை
எதிர்த்துப் பறந்த ராஜாளி
சிரமத்தில் துடித்துச்
சிறகடிக்கிறது.

அந்த இரவில்
ஒரு யுகபாஷை
ஊமையாகிவிட்டது.

செப்டம்பர் ராத்திரி
அதிகாலை இரண்டு மணி

மரணம் - அந்த
முப்பத்தொன்பது வருஷக்
கவிதைக்கு
முற்றுப் புள்ளி வைத்தது.

உயிர் துடிக்கிறது பாரதி

உடம்பெல்லாம் கண்ணீர்
ஓடுகிறது மகாகவியே

இன்று நினைத்தாலும்
தலையறுந்த சேவலாய்த்
தவிக்கிறது நெஞ்சு

என் கண்ணீர் - உன்
எரிந்த சடலந்தேடி
எங்கெங்கோ அலைகிறது.


அந்த சமூகச் சிற்பிகளின் சிந்தனையோடு வணக்கம் கூறுகிறேன்.
நன்றி!

ஆலாசியம் கோவிந்தசாமி,
சிங்கப்பூர்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

28.5.11

கண்ணதாசனும் வைரமுத்துவும்!

கண்ணதாசனும் வைரமுத்துவும்!

இளைஞர் மலர்

இந்தவார இளைஞர் மலருக்கு யாரும் ஆக்கங்கள் எதையும் அனுப்பாததால், வாத்தியாரே களத்தில் இறங்கியிருக்கிறார். மனதளவில் வாத்தியாரும் இளைஞர்தான் அதை மனதில் வையுங்கள்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 ஏன் பெண் உறங்கவில்லை!

கவியரசர் அவர்கள் எழுதிய ஒரு பாட்டைக் கேட்டுவிட்டு இளைஞர்கள்
பலர் சேர்ந்து, அவரைப் பிடித்துக் கொண்டு பல கேள்விகள் கேட்டார்கள்..

பாடலின் முதல் ஏழு வரிகளைப் பாருங்கள்.

நீ இல்லாத உலகத்திலே  நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே   
சிந்தனை இல்லை .. சிந்தனை இல்லை
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை
உன்னைக் கண்டு கொண்ட நாள் முதலாய்
பெண் உறங்கவில்லை .. பெண் உறங்கவில்லை.

இளைஞர்கள் கேட்டது இதுதான்.

"
உணர்வுகள் என்பது ஆண், பெண் என்று இருபாலருக்கும் பொதுவானதுதானே!
அப்படியிருக்கையில், உன்னைக் கண்டு கொண்ட நாள் முதலாய் பெண் உறங்கவில்லை என்று நீங்கள் பெண்ணை மட்டும் எப்படிச் சிறப்பித்துக் கூறலாம்? அதே காதல் உணர்வினால் அவளுடைய காதலனும் பாதிக்கப்பட்டிருக்க மாட்டானா? சொல்லுங்கள்! இவள் உறங்காதது போல அவனும் உறங்கியிருக்க மாட்டானில்லையா? அப்படியிருக்கும்
போது பெண் உறங்கவில்லை என்று பெண்ணை மட்டும் ஏன் உயர்த்தி எழுதினீர்கள்? காதல் உணர்வில் அதிகமாகப் பாதிக்கப்பட்டுத் தூக்கமின்றித் தவிப்பவன் ஆண்தான். அது உங்களுக்குத் தெரியாதா?"" என்று கேட்டுத் துளைத்து எடுத்து விட்டார்கள்.

அவர் நடத்திக் கொண்டிருந்த தென்றல் என்ற பத்திரிக்கை மூலமாகத்தான் இந்தக்
கேள்வியைப் பல ஆண் வாசகர்கள் கேட்டு எழுதியிருந்தார்கள். கடிதங்கள் நூற்றுக் 
கணக்கில் வந்து குவிந்து விட்டது.

நம் கவியரசர் அவர்கள் நல்லதாக ஒரு பதிலைக் கொடுத்து அனைவரையும்
சமாதானமடையச் செய்தார்.

அதற்கு முன் வெளிவந்திருந்த வானம்பாடி என்ற படத்தில், தான் எழுதியிருந்த பாடல் ஒன்றை மேற்கோள் காட்டிப் பதில் எழுதியிருந்தார்.

"
கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் - அவன்
காதலித்து வேதனையில் வாட வேண்டும்!
பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும் - அவன்
பெண்ணென்றால் என்னவென்று உணர வேண்டும்!"

என்று துவங்கும் பாடல் அது. அந்தப் பாட்டின் இடையில்

"
அவனை அழைத்துவந்து
ஆசையில் மிதக்க விட்டு
ஆடடா ஆடு என்று
ஆட வைத்துப் பார்த்திருப்பேன்!

படுவான் துடித்திடுவான்
பட்டதே போதுமென்பான்
பாவியவன் பெண்குலத்தைப்
படைக்காமல் நிறுத்தி வைப்பான்!"

என்ற வரிகள் வரும். அதைச் சுட்டிக் காட்டிக் கவியரசர் இப்படி எழுதினார்:

"
பெண் குலத்தைப் படைபதை நிறுத்திவை" என்று ஒரு காதலன் துக்க உணர்வு
மேலோங்கிப் பாடுவதாக எழுதியிருந்தேன்.அவன் ஒருவனுடைய உணர்வுகளுக்காக மொத்த பெண் குலமும் என்ன செய்யும்? கடவுளென்ன அவன் வைத்த ஆளா? இவனுக்காக அவர் எப்படி பெண்ணைப் படைப்பதை நிறுத்துவார்?.

இதையே ஒரு பெண் குரல் கொடுத்து ஆண்களைப் படைப்பதை நிறுத்து கடவுளே என்றால் என்ன ஆகும்?

ஆனாலும் அவன் பாட்டில் தவறு இல்லை தன் உணர்வுகளின் தாக்கத்தினால்
அவன் அப்படிப் பாடுகின்றான். அவனுடைய சூழ்நிலை அப்படி.

அதே போன்ற சூழ்நிலையில் தான் அந்தப் பெண்ணும், தன் உணர்வுகள் மேலோங்கப் பெண் உறங்கவில்லை என்கிறாள்! அதைத் தவறென்று நீங்கள் சொல்வீர்கள் என்றால், இதுவும் தவறுதான். அது தவறில்லை என்றால் இதுவும் தவறில்லை. என்ன சொல்கிறீர்கள்?" என்று வந்த எதிர்ப்பிற்கு சரியான கேள்வி ஒன்றைக்கேட்டு அவர்களையே உணர வைத்தார்.

மேலும் அதன் தொடர்ச்சியாக அடுத்து வந்த தென்றல் இதழில் இப்படி எழுதினார்.

"
இந்த வானம்பாடிப் படப்பாடல் வந்த போது ஒரு பெண் கூட என்னைக் கேள்வி
கேட்கவில்லை. நீங்கள் எத்தனையோ பேர் கேட்டு எழுத நான் பதில்சொன்னேன்.
உங்களுக்கு மேலும் ஒன்று சொல்வேன். உணர்வுகள் பொதுவானவை. உணர்வுகளுக்கு ஆண், பெண் என்கின்ற பேதம் கிடையாது! திரைப்படப் பாடல்கள் எல்லாம் படத்தின் சூழ்நிலைக்கு, நாயகன், நாயகியின் மன உணர்வுகளுக்கு எழுதப்படுபவை. அவைகளை நீங்கள் அந்தப் பாத்திரங்களின் தன்மையோடு மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள்"

என்ன நிதர்சனமான உண்மை!
----------------------------------------------------------------------------


 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பாவாடை சட்டையும் பரமசிவன் வரமும்
ஒரு சம்பவத்தைச் சுவையாகச் சொல்வதில் கதாசிரியர்களுக்கும் கவிஞர்களுக்குமிடையே மிகுந்த வித்தியாசம் இருக்கிறது. பதினைந்து வரிகளில் சொல்லவேண்டியதை, உணர்வு மேலோங்கிடச் சொல்வதற்குக் கதாசியருக்கு நாற்பது வரிகள் தேவைப்படும்.ஆனால் சிறந்த கவிஞரால் அதை நான்கே வரிகளில் அசத்தலாகச் சொல்லிவிட முடியும்.

எப்படியென்று பார்ப்போம்.

ஒரு ஏழைத் தாய். வறுமைதான் அவளுக்குத் துணைவன்.வீடுகளில் வேலை செய்து அரைவயிற்றுக் கஞ்சியோடு காலத்தை அவள் ஓட்டிக் கொண்டிருந்த நிலையில், அவளுடைய பதினோரு வயது நிரம்பிய மகள் வயதிற்கு வந்து விட்டாள். அவளுக்கு மகளாகப் பிறந்துவிட்ட அந்தப் பாவப்பட்ட சிறுமிக்கு இருப்பது இரண்டே உடைகள்தான் .ஒன்றை அவள் அணிந்து கொண்டிருக்கின்றாள்.மற்றொன்று வீட்டு வாசலில் உள்ள கொடியில் காய்ந்து கொண்டிருக்கிறது. பூப்படைந்துவிட்ட அந்தப் பெண்ணின் அவசரத் தேவைக்கு மற்றுமொரு மாற்று உடை இல்லாத நிலை. அந்த இருவருக்கும் ஒரே ஆதரவான அந்தப் பெண்மணியின் சகோதரனோ - காலக் கோளாறால் தற்சமயம் சிறையில் இருக்கிறான். அவன் இருந்திருந்தாலாவது இவர்களது வாட்டத்தைப் போக்குவான் அதை எண்ணி அந்த அன்புத்தாய் கண்ணீரோடு குடிசை வாசலில் அமர்ந்திருக்கின்றாள்.

தாயின் இந்தப் பரிதாப நிலைக்கு மனம் உருகி கவிஞர் வைரமுத்து
அவர்கள் பளிச்சென்று நம் மனதில் தைக்கும் விதமாகச் சிலவரிகளிலேயே இப்படிச் சொன்னார்

"
பாவாடை சட்டையோ பரமசிவன் தந்தவரம்!
தாவணிக்கு எங்குபோவேன்?
தாவணி வேணுமின்னா மாமன் வரவேணும்
மாமன் வரவேணுமின்னா - ஜாமீனில் வரவேணும்!"

என்ன அற்புதமான வெளிப்பாடு பாருங்கள்!

நச்' சென்று இருக்கிறதல்லவா?
----------------------------------------------------------------------------------
 அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

21.5.11

மரப்பெட்டிக்குள் கிடைத்த பொக்கிஷம்!

--------------------------------------------------------------------------------
மரப்பெட்டிக்குள் கிடைத்த பொக்கிஷம்!

இளைஞர் மலர்

கவிச் சூரியன் அவன்!
கனிவோடு வேண்டினால் - கவிக்
கனி அமுதுப் படைப்பான்,
இனிது, இனிது என்றால் -இமைதிறவாது
இன்னிசை இசைப்பான்.

கலைமகளின் கைப் பொருளவன்
மீட்டுபவரின் விரல்களைப் பொறுத்தே
நாதம் உயிர்ப்பான்; அதற்கு
நாமகளையே நர்த்தனமும் ஆடச்செய்வான்.

சோதிக்க நினைப்பவரின் மனம்
பாதிக்க தீந்தமிழ் கவிபாடி
சுகத்தில் ஆழ்த்திடுவான்.

வீண் வம்பிற்கு வந்தவரையும்
விண்முட்டும் கவித்திறத்தால்
மண்முட்ட விழ செய்து  - தன்
கண்ணிரெண்டும் அகலவிரித்தே
கண்ணிவெடி சிரிப்பு ஒலியால்
விண்ணையும் மண்ணையும்
இணைத்து இமயமாக உயர்ந்து நிற்பான்!!

யாரவன்?
கவியோகி பாரதி -  அவன்
கவி பாடும் பாங்கைப் பார்ப்போம் வாரீர்!!!
---------------------------------------------------------------------------------
ஆடை குலைவுற்று நிற்கிறாள்: - அவள்
  ஆவென் றழுது துடிக்கிறாள்: - வெறும்
மாடு நிகர்த்ததுச் சாதனன் - அவள்  
  மைக்குழல் பற்றி இழுக்கிறான்.. 

பூமியைத் தாங்குகின்ற பொற்பாம்பே ! - பூதேவி
   சாமியவன் தூங்குகின்ற சாற்றரவே! - நாமிறைஞ்சும்
செஞ்சடையான் மேலணியுஞ் செய்ய படமுடையாய்
   நஞ்சை நீக்குவாய், நன்று.

பாட்டும் அது கூறும் அற்புத நிகழ்வும் படித்து இன்புறுவீர்!.

(இந்த அருமையான செய்தி 1968 - ஜூன் மாத கலைமகள்
பத்திரிகையில் வெளிவந்ததாக எனது தந்தையார் பென்சிலில்
முதல் பக்கத்தின் மேலேக் குறித்து வைத்திருக்கிறார்கள்.
நான் பிறப்பதற்கு  ஓராண்டிற்கு முன்பே பத்திரப் படுத்திய
பொக்கிஷம். நீங்களும் படித்து இன்புறவேண்டுகிறேன்).


----------------------------------------------------------------------------------------
கவியோகி பாரதி இவன் ஒரு மகாகவியே !!!......

நன்றி வணக்கம்.
ஆலாசியம் கோவிந்தசாமி,
சிஙகப்பூர்



வாழ்க வளமுடன்!

30.4.11

எங்கே போகிறது இந்த உலகம்?

-------------------------------------------------------------------
எங்கே போகிறது இந்த உலகம்?
இளைஞர் மலர்

ஏன் இந்த அவலம்? எங்கே போகிறது இந்த உலகம்?

சில தினங்களுக்கு முன்பு தினமலர் தனது சினிமா செய்திப் பிரிவில் இந்தச் செய்தியை பிரசுரித்திருந்தது!!!

"பிரிட்டன் இளவரசர் வில்லியம்சிற்கு, ஏற்ற இந்திய மணப்பெண் காத்ரீனா கைப்தான் என்று பிரபல  மேட்ரிமோனியல் தளமான ஷாதி.காம் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் இளவரசர் சார்லஸ், மறைந்த டயானா ஆகியோரின் மூத்த
மகனான வில்லியம்ஸ் ஆர்தர் பிலிப்யிஸ்க்கும், கதே மிடில்டனுக்கும் நாளை(29.04.11) திருமணம் நடைபெற இருக்கிறது. லண்டனில் உள்ள பாரம்பரியம் மிக்க வெஸ்ட்மின்ஸ்டர் அபே எனும் தேவாலயத்தில் விமரிசையாக நடக்கிறது. உலகமே இவர்களது திருமணத்தை 
ஆவலாக எதிர்பார்த்துள்ள நிலையில், இளவரசர் வில்லியம்ஸ்க்கு
ஏற்ற இந்திய மணப்பெண் பாலிவுட் நடிகைகாத்ரீனா கைப்தான்
என்று பிரபல மேட்ரிமோனியல் தளமான ஷாதி.காம் தெரிவித்து
இருக்கிறது.

இதுதொடர்பாக அந்த இணையதளம் 8000பேரிடம் நடத்திய கருத்து
கணிப்பில் 75.3சதவீதம் பேர் காத்ரீனா  கைப்புக்கும், 16.7சதவீதம்
பேர் பிரியங்கா சோப்ராவுக்கும், 8சதவீதம் பேர் சோனாக்ஷி
சின்ஹாவுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இத்தகவலை
ஷாதி.காம் இணையதளத்தின் தலைமை அதிகாரி கவுரவ் ராக்ஷித்  தெரிவித்துள்ளார்."

எவ்வளவு நேர்த்தியான ஒரு பணி..... இந்தக் கருத்துக் கணிப்பில்
எட்டாயிரம் பேர் கலந்ததும் தான்...... என்னே??...

சரி இதைப் பாருங்கள்...

"எந்த நடிகையை நிர்வாண ஓவியத்தை பார்க்க ஆசை? என்ற
கேள்வியுடன் ஒரு ஏடாகூட கருத்துக்கணிப்பை  நடத்தியிருக்கிறது
ஒரு ஆங்கில நாளிதழ். ஹாலிவுட் நடிகைகள் பலரும் நிர்வாண
ஓவியத்திற்கு போஸ் கொடுத்து பல கோடிகளை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அதேகலாச்சாரம் விரைவில் பாலிவுட்
நடிகைகள் மத்தியிலும்  பரவப் போகிறது. இதற்கான முயற்சிகளில்
பிரபல ஓவியர்கள் இறங்கியிருக்கிறார்கள். இதன் முன்னோட்டமாக 
பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று நிர்வாண ஓவியத்தை மையக் கருத்தாக வைத்து ஒரு கருத்துக்கணிப்பை  நடத்தியுள்ளது.

அதாவது, எந்த நடிகையின் நிர்வாண ஓவியத்தை பார்க்க ஆசை?
என்ற கேள்வியுடன், நாட்டின் முக்கிய  நகரங்களில் நடத்தப்பட்ட
இந்த கருத்துக்கணிப்பில் பலரும் உற்சாகமாக கலந்து கொண்டு
கருத்து தெரிவித்தனர்.

கருத்துக்கணிப்பு முடிவின்படி, 40 சதவீத ஓட்டுக்கள் பெற்று
ஐஸ்வர்யா ராய் முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு  அடுத்தபடியாக பிரியங்கா சோப்ரா 30 சதவீத வாக்குகள் பெற்றிருக்கிறார்.
ரேகா 14 சதவீதமும், வித்யாபாலன்  13 சதவீதமும், கரீனா கபூர்
12 சதவீதமும், மலாய்கா அரோரா, அனுஷ்கா சித்ராங்கடா தலா
1 சதவீதமும்  ஓட்டுக்கள் பெற்றுள்ளனர். சென்னை ரசிகர்கள் அதிக
அளவில் விரும்பியது கரீனா கபூரைத்தானாம். நம்ம ஊர்  த்ரிஷா
உள்ளிட்ட நடிகைகளை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளவில்லையா?
அல்லது ஓட்டுக்கள் விழவில்லையா?

என்பது பற்றி விவரங்கள் வெளியாகவில்லை."

என்ன நடக்கிறது இங்கே? எதை நோக்கி இந்தப் பயணம்? எங்கே சென்று முடியும்?

இப்படியெல்லாம் ஒரு ஆசை! இந்த மஞ்சள் பத்திரிக்கைச் செய்தியை தினமலரில் மணம் பரப்பச் செய்வது தான்  ஏன்?

முன்னைய செய்தி தொடர்புள்ள, அந்த நிறுவனம் பதிந்தவர்களுக்கு
மாத்திரம் பணம் பெற்றுக் கொண்டு திருமண  ஜோடி சேர்த்துக்
கொண்டு இருந்தது. இப்போது வேறு வேலையை செய்து
கொண்டிருக்கிறது?.

அடுத்ததாய் உள்ளது:

யாரைப் பிறந்த மேனியில் பார்க்கப் பிடிக்கும் என்று ஒரு ஆங்கில
நாளேடு இந்தியாவின் பல நகரங்களில்  நடத்திய சர்வே... அதில் இன்னொருவனின் மனைவி தான் முதலிடத்தில் வந்திருக்கிறார்!?...

பங்கெடுத்து வாக்களித்தவர்கள்....

தமது தாய் நாட்டையே தாயின் கோலத்தில் பார்க்கும் நம்
மண்ணின் மைந்தர்கள்  என்பது தான் வெட்கக்கேடு....ஆங்கிலப்
பத்திரிகை நடத்தும் அயோக்கியர்கள் பெண்ணில்லாமல் சுயம்பாய் வந்தவர்களா?

இல்லை பெண் என்றாலே வக்கிரமாய்ப் பார்க்கும் மன நோயாளிகளா?

வெள்ளைக் கலாச்சாரம் கொள்ளை கொள்வது எதை?

விவேகானதர் சொன்னார்.. மேலை நாடுகளிலே ஒரு நாள்
தொடர்ந்து அழுகுரல் கேட்கும் என்றார்... கீழை  நாடுகளிலும் அது
தொடர்ந்தே ஒலிக்கும் என்பதில் ஐயமில்லை....

நம்மைப் பெற்றவளும், நம்மொடுப் பிறந்தவளும் பெண்தானே, நாம் பெற்றாலும் அது பெண்தானே?

அபிராமி பட்டராக இருக்க வேண்டாம், சுத்தானந்த பாரதியாக
இருக்க வேண்டாம்... ஒரு நல்ல மகனாக,  தமையனாக, தந்தையாக இருக்கலாமே?

நமது முன்னோர்களின் அறவுரைகளை இந்தத் தருணத்திலே சற்று
திருப்பிப் பார்ப்போம்!!

பெருவாயின் முள்ளியாரின் ஆசாரக்கோவை
(கடைச்சங்க காலத்தை சேர்ந்த பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில்
ஒன்று ஆசாரக்கோவை)

ஒழுக்க மற்றவை
சுடரிடைப் போகார் சுவர்மேல் உமியார்
இடரெனினும் மாசுணி கீழ்தம்மேற் கொள்ளார்
படைவரினும் ஆடை வளியுரைப்பப் போகார்
பலரிடை ஆடை உதிராரே என்றும்
கடனறி காட்சி யவர்.


நரகத்துக்குச் செலுத்துவன
பிறர் மனை கள்களவு சூது கொலையோடு
அறனறிந்தார் இவ்வைந்து நோக்கார் - திறனிலரென்று
எள்ளப் படுவதூஉம் அன்றி நிரயத்துச்
செல்வழி உய்த்திடுத லால்.


தனித்திருக்கக் கூடாதவர்

ஈன்றாள் மகள்தம் உடன்பிறந்தாள் ஆயினும்
சான்றார் தமித்தா(க) உறையற்க ஐம்புலனும்
தாங்கற்கு அரிதஆக லான்.


“ பெற்றவள், தாம் பெற்ற மகள், உடன் பிறந்த சகோதிரி என்றாலும் ஒரே இடத்தில்  தனியாக உறக்கம்  கொள்ளக் கூடாது”

ஐம்புலன்களில் எது எப்படிக் கெடும் என்பதை யாரறிவார்?

ஆக, ஒவ்வொருவருக்கும் முதல் உரிமை தாய், அடுத்து மகள் கடைசியாக உடன் பிறந்த சகோதரி என்று இதில் வகை படுத்தியதையும் காணலாம்... எவ்வளவு உரிமை இருந்தாலும்... செய்யத் தாகாதன என புலவர் கூறியதை
மனதில் கொள்ள வேண்டும்...

“பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்” - கலித்தொகை.

இங்கே பண்பையும் பாடறிந்து ஒழுகும் தன்மையையும், அதன் உண்மையையும் இந்த உலகிற்கு கூறியவன் தமிழன் தான்...   

தமிழில் இல்லாதது ஏதும் இல்லை. இவை எக்காலத்திற்கும்
பொருந்தும். பல சூழலில் ஆசையின் பொருட்டு பெண்ணிற்கு
பெண்ணே தீங்கிளைத்தாலும், மகாகவியின் ஆதங்கத்தை பார்ப்போம்.

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக் குள்ளே சிலமூடர் - நல்ல
மாத ரறிவைக் கெடுத்தார்.

கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்திக்
காட்சி கெடுத்திட லாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால் - வையம்
பேதைமை யற்றிடுங் காணீர்.


அந்த மகாகவியே மேலும் கூறுகிறான்....

பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!
தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன
தாயின் பெயரும் சதியென்ற நாமமும்.

அன்பு வாழ்கென் றமைதியில் ஆடுவோம்.
ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்;
துன்பம் தீர்வது பெண்மையி னாலடா!
சூரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோம்.

வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!
மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்;
கலிய ழிப்பது பெண்க ளறமடா!
கைகள் கோத்துக் களித்துநின் றாடுவோம்.

பெண்ண றத்தினை ஆண்மக்கள் வீரந்தான்
பேணு மாயிற் பிறகொரு தாழ்வில்லை!
கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே
காத லின்பத்தைக் காத்திடு வோமடா.

சக்தி யென்ற மதுவையுண் போமடா!
தாளங் கொட்டித் திசைகள் அதிரவே,
ஓத்தி யல்வதொர் பாட்டும் குழல்கழும்
ஊர்வி யக்கக் களித்துநின் றாடுவோம்.

உயிரைக் காக்கும்,உயரினைச் சேர்த்திடும்;
உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்;
உயிரு னும்இந்தப் பெண்மை இனிதடா!
ஊது கொம்புகள்; ஆடு களிகொண்டே.

'போற்றி தாய்' என்று தோழ் கொட்டி யாடுவீர்
புகழ்ச்சி கூறுவீர் காதற் கிளிகட்கே;
நூற்றி ரண்டு மலைகளைச் சாடுவோம்
நுண்ணி டைப்பெண் ணொருத்தி பணியிலே.

'போற்றி தாய்' என்று தாளங்கள் கொட்டடா!
'போற்றி தாய்' என்று பொற்குழ லூதடா!
காற்றி லேறியவ் விண்ணையுஞ் சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே.

அன்ன மூட்டிய தெய்வ மணிக் கையின்
ஆணை காட்டில் அனலை விழுங்குவோம்;
கன்னத் தேமுத்தம் கொண்டு களிப்பினும்
கையைத் தள்ளும்பொற் கைகளைப் பாடுவோம்.

பாழும் சமூகம் இன்று எதைச் சொல்கிறது பாருங்கள்....

எந்த நடிகையை நிர்வாண ஓவியத்தை பார்க்க ஆசை? கருத்துக்
கணிப்பு முடிவின்படி, 40 சதவீத ஓட்டுக்கள் பெற்று ஐஸ்வர்யா ராய்
முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பிரியங்கா
சோப்ரா 30 சதவீதவாக்குகள் பெற்றிருக்கிறார். ரேகா 14 சதவீதமும், வித்யாபாலன் 13 சதவீதமும், கரீனா கபூர் 12 சதவீதமும், மலாய்கா
அரோரா, அனுஷ்கா சித்ராங்கடா தலா 1 சதவீதமும் ஓட்டுக்கள்
பெற்றுள்ளனர்.

சரி, இந்த செய்தியைத் தந்த தினமலர் என்ன சொல்கிறது பாருங்கள்....

“நம்ம ஊர் த்ரிஷா உள்ளிட்ட நடிகைகளை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளவில்லையா? அல்லது ஓட்டுக்கள்  விழவில்லையா?
என்பது பற்றி விவரங்கள் வெளியாகவில்லை."

இதை வெளியிட்ட தினமலர் எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை ?

பாவம் அதனின் ஆதங்கம் அது!

ஆமாம்.. நடிகைகள் தானே.... என்பது அல்ல... அவளும் ஒருவனின்
மகள், இன்னொருவனின் மனைவி, வேறொருவனுக்கு தாய்.... இப்படிக் கண்டால் உண்மை புரியும்...

இந்தப் பெரும் வியாதி எங்கும் பரவினால்.... இப்படிப்பட்ட மன
நோயாளிகள் எங்கும் நிறைந்திருந்தால் என்ன  ஆகும்? வாருங்கள்!!!
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்???

நன்றி,
அன்புடன்,
ஆலாசியம் கோவிந்தசாமி
சிங்கப்பூர்


வாழ்க வளமுடன்!

23.4.11

அம்பி கல்யாணத்திற்கு அலைந்த கதை!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 அம்பி கல்யாணத்திற்கு அலைந்த கதை!

இளைஞர் மலர்

இளைஞர் ஒருவர் தான் கல்யாணத்திற்கு, அதாவது தன்னுடைய கல்யாணம் நடைபெறுவதற்காக  அலைந்த கதையைச் சுவையாகச் சொல்லியுள்ளார். என்ன, 36 ஆண்டுகள் கழித்துச் சொல்லியுள்ளார். ஆண்டுகள் போனால்  என்ன? சம்பவம் நேற்று நடந்ததுபோல சுவையாக உள்ளது. அத்துடன் தகப்பன் சாமி (அதான் நம்ம  சுவாமி நாதன்) தன் வாழ்வில் நிகழ்த்திய அதிசயத்தையும் சொல்லியுள்ளார். அப்படியே கொடுத்துள்ளேன். படித்து  மகிழுங்கள். யார் அந்த இளைஞர்? பதிவின் முடிவில் அவர் பெயர், படத்துடன் உள்ளது!
அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++
26 ஜனவரி 1975 அன்று தான் என்னவளை நான் பெண் பார்த்தது.தில்லகேணி என்று சென்னை நகரவாசிகளால்  செல்லமாக அழைக்கப்படும் திருவல்லிக் கேணி சிவராமன் தெருவில், என் தாய் மாமன் சத்யவாகீஸ்வரன்
அவர்கள்  இல்லத்தில் வைத்துத்தான் இந்த வைபவம் நடந்தது.என் துணைவியார் என் மாமாவின் மைத்துனி பெண் தான்.  ஆகவே மாமாவின் மகள் என்ற முறையும்தான்.

ஏற்கனவே என் தாய் தந்தையெல்லோரும் பெண்ணைப் பார்த்து இருப்பதால் என்னை மட்டும் தஞ்சையில் இருந்து  சென்னைக்கு வண்டி ஏற்றி அனுப்பி விட்ட‌னர்.

"எனக்கும் பெண்ணைப் பார்க்க வேண்டாம். எப்படி இருந்தாலும் கட்டிக்கொள்கிறேன்" என்றேன்.

"அது சரிதான். ஆனால் பெண் உன்னைப் பார்க்க வேண்டாமா? பெண்ணுக்கு உன்னைப் பிடிக்க வேண்டாமா?  பெண் பார்ப்பது என்று பெயர்தானே தவிர அது ஆண் பார்ப்பதுமாகும்.உன் அக்காவை அழைத்துச் சென்று  பெண் பார்த்துவிட்டு வா!" என்றார் அப்பா.

சென்னையில் அக்காவையும், என் பெரியப்பா பையனான என் அண்ணன் ஸ்ரீநிவாஸனையும் துணைக்கு  அழைத்துக் கொண்டு பெண் பார்க்கச் சென்றேன்.

என் மூத்தவருடைய திருமணம் முடிந்தவுடனேயே என் திருமணத்திற்கு அவசரப்படுத்தினேன்.'என்ன இப்படி கல்யாணம் கல்யாணம் என்று அலைகிறான்' என்று அப்பாவும் அம்மாவும் தனிமையில் பேசிக் கொண்டதையும்  ஒட்டுக் கேட்டும் கேளாதது போல் இருந்து கொண்டேன்.ஆனாலும் கல்யாணப் பேச்சை நிறுத்தவில்லை.

ஏன் அப்படி கல்யாணத்திற்கு அலைந்தேன்? ஏன் அவசரப்படுத்தினேன்? எல்லாம் ஒரு காரணமாகத்தான். அதென்ன காரணம்?

ஒருநாள் காலையில் எழுந்தவுடன் வழக்கமாக கர தரிசனம் செய்யும் போது வலது கை கட்ட விரலுக்குக் கீழே  சுக்கிர மேட்டில் பட்டாணி அளவில் ஒரு வெள்ளைத் தழும்பைக் கண்டேன்.முதல் நாள் இரவு வரை இல்லாத அந்தத் த‌ழும்பு திடீரெனத் தானாகத் தோன்றியிருந்தது.தேய்த்துப் பார்த்தாலும் போகவில்லை.

அன்று மாலையே ஒரு தோல் நோய் நிபுணரிடம் 1 1/2 மணிநேரம் காத்துக் கிடந்து ஆலோசனை கேட்டேன்.

"இது லூகோடெர்மா! உடல் முழுதும் பரவ வாய்ப்பு உண்டு.இது ஒரு தோல் நிலைப்பாடே தவிர, இது ஒரு நோய்  கிடையாது. தோலுக்கு நிறம் கொடுக்கும் 'பிக்மெண்ட்' இல்லாமல் போய் விடுவதால் இப்படி ஆகிறது. நம்  தமிழ்நாட்டில் இதற்கு 'வெண்குஷ்டம்' என்று பெயர் வைத்துவிட்டதால் மக்களிடம் நமக்குப் பரவுமோ என்ற  ஒரு  பீதி உள்ளது.அப்படிப் பரவாது.பார்க்கவும் விகாரமாக‌ உள்ளதால் இந்த 'ஸ்கின் கண்டிஷன்' வந்தவர்களுக்கு  சமூக அங்கீகாரம் கிடைப்பது சிரமமாக உள்ளது. திருமணத் தடை ஏற்படும். ஆன திருமணம் கூட விவாகரத்தில்  முடியும்.உஙளுக்குத் திருமணம் ஆகவில்லை என்கிறீர்கள். முடிந்தால் கூடிய விரைவில் திருமணம் செய்து  கொள்ளுங்கள். ஏனென்றால் உடல் முழுதும் பரவி விட்டால் பெண் கிடைப்பது அரிதாகிவிடும்...."

அந்த டாக்டர் சொன்னதையெல்லாம் கேட்டு மன உளைச்சலுக்கு ஆளானேன். உடல் முழுதும் வெள்ளையாகப்  போய் கண்களைச் சுற்றிமட்டும் வளையமாக பழுப்பாக நிறம் மாறாமல் இருந்து, பார்க்க ஒரு பிசாசைப் போல  நடமாடுவது போலக் கனவெல்லாம் வர ஆரம்பித்து விட்டது.

அந்த டாக்டர் சொன்னது தப்பாக இருக்கலாமோ என்ற நப்பாசையில் வேறு ஒரு தோல் நிபுணரை அணுகினேன்.  அவரோ 'இது விடிலிகோ' என்று
புதுப் பெயரைச்சொன்னார்.'அப்பாடி!  அந்த டாக்டர் சொன்னது இல்லை போல
உள்ளதே' என்று சந்தோஷமாக மருத்துவ அகராதியைப் புரட்டிப் பார்த்தேன். விடிலிகோ என்பதற்குப் பொருள்  லூகோடெர்மா என்றும், லூகோடெர்மா விற்குப் பொருள் விடிலிகோ என்றும் கண்டிருந்தது.

இது அந்த மாதிரி இருக்கக்கூடாதே என்று வேண்டாத தெய்வமில்லை. எனக்கு சரியாகப் போய்விட்டல் உனக்குப்  பத்து தேங்காய் உடைக்கிறேன் என்று ஒரு பிள்ளையார் கோவிலில் வேண்டிக் கொண்டால், அடுத்த பிள்ளை

யாருக்கு அது 20 ஆக உயரும். இப்படி உயர்ந்து ஊரில் உள்ள எல்லா பிள்ளை யாருக்கும் வேண்டிக் கொண்ட  தேங்காய் எண்ணிக்கை 10000ஐத் தாண்டும். ஆனாலும் ஒரு பலனும் இல்லை.என்னைக் குணப்படுத்த வேண்டிய
பொறுப்பைத்  தன் தம்பியிடம் விட்டு விட்டதால் பிள்ளையார் என்னைக் கண்டு கொள்ளவில்லை.

இப்போது புரிகிறதா திருமணத்திற்கு ஏன் அலைந்தேன் என்று? உடல் பூராவும் வெண்மை பர‌வி விட்டால் பெண்  கிடைப்பது சிரமமாகிவிடுமே என்ற பக்காவான சுயநலம் தான் காரணம்.

சொஜ்ஜி பஜ்ஜி காப்பி ஆனவுடன், வழக்கமாகக் கேட்கும் "ஒரு பாட்டுப் பாடேன் கேட்போம்" என்றார் அக்கா. இதற்காகவே காத்து இருந்தது போல ஒரு கிராமபோன் பிளேட்டை முடுக்கிவிட்டதைப்போல அந்தப் பெண்
பாடினார்கள்.

      "மோஹம் கொண்டேன் முருகா
      முத்துக்குமாராஆஆஆஆஆ குஹா ஆஆஆஆஆ‍ உன்மேல்
      மோஹம் கொண்டேன் முருகா ஆஆஆஆஆ"


"முத்து"என்ற பெயர் வருகிறதாம் அந்தப்பாட்டில்! பெண் பார்க்க வந்திருக்கும் மாப்பிள்ளையின் பெயர் என்பதால்  அந்தப் பாட்டை தெரிவு செய்து மிகவும் சாமர்த்தியமாகப் பாடினார்களாம். திருமணம் முடிந்த பின் எடுத்துச்  சொன்னார்கள். அந்த அளவு கலை நுண்ணுணர்வு இருந்தால் நான் ஏன் இப்படி இருக்கப் போகிறேன்.?

கூட வந்த அண்ண்ன ஸ்ரீநிவாசன் எல்லோரும் கேட்க உரக்க அங்கேயே வைத்து, "டேய்! அம்பி! இவளையே கல்யாணம் பண்ணிக்கோ..ஆமாம்.. சொல்லிட்டேன்...உனக்கு இதை விட நல்ல பெண்  எல்லாம் கிடைக்காது ...என்ன கேட்டியா...சரின்னு இப்பவே சொல்லு...." என்கிறார்.

நானும் பூம் பூம் மாடு மாதிரி தலை ஆட்டி வைத்தேன்.எல்லோருக்கும் மகிழ்ச்சி.

ஆனாலும் மனதுக்குள் ஒரு குற்ற உணர்வு.

"நாம் அந்தப் பெண்ணை ஏமாற்றுகிறோமோ? நாளைக்கே இந்த வெள்ளை புள்ளி உடல் முழுதும் பரவி விட்டால்  என்னை வெறுப்பாளோ? கல்யாணத்திற்கு முன்பாகவே சொல்லுவதா வேண்டாமா? சொன்னால் கல்யாணம் நின்று  விடுமா?"

இரவு முழுதும் என் மனச்சாட்சி விழித்துக் கொண்டு ஆட்ட‌ம் போட்டது.

மறு நாள் விடிந்ததும் யாரிடமும் சொல்லாமல் திருவல்லிக்கேணி போய் மாமன் வீட்டுக் கதவைத்  தட்டினேன்.  மாமன் மனைவியிடம் (அம்மாமி என்போம்.சுந்தரி மாமி) விஷயத்தைப் புட்டு புட்டு வைத்தேன்.மாமி

எல்லோரிடமும் பேசி, பெண்ணிடமும் பேசி ஒப்புதல் வாங்கி விட்டார்கள்.

திருமணத்திற்கு நாள் பார்த்து 24 ஏப்ரில் 1975 அன்று சுவாமிமலையில் வைத்துத் திருமணம் எளிமையாகவும்  இனிமையாகவும் நடந்தது. என் துணைவியார் கைத்தலம் பற்றும் போது கையில் உள்ள வெண்புள்ளி உருத்துவது போல ஒரு பிரமை.

மாலையும் கழுத்துமாக சுவாமிநாதனைத் தரிசிக்கும் போது மனமாற வேண்டிக் கொண்டேன், "அப்பனே!  என்னுடைய குறையைத் தீர்த்தருளும்"

தகப்பன் சுவாமி உண்மையாகவே என் குறையை நீக்கினார். அந்த அதிசயத்தைச் சொல்லவே இந்தப்பதிவு.

திருமணம் முடிந்து ஒருவருடம் கழிந்தபின்னர் என் அண்ணன் முனைவர் கண்ணன் அவர்கள் பங்களூருவில்  டாட்டா இன்ஸ்டிட்யூட்டில் பி ஹெச் டி படிக்கச் சென்றார். அங்கே அவருக்கு ஆய்வில் பல தடங்க‌ல் ஏற்பட்டது.
சோர்வு உற்றார்.அவரை உற்சாகப்படுத்தவும், வேண்டுதலாகவும் ஒரு ஆன்மீகச் சுற்றுலா போனோம்.

முன்னர் ஒருமுறை நான் திருச்செந்தூர் போன போது, அங்கே ஒருவர் ஒரு மண்டபத்தில் 20 பண்டாரங்களுக்கு, அவர்களுடைய திருவோடுகளில் ஒவ்வொரு சம்பா சாதக்கட்டி, பெரியது, வைத்து கூடவே சிறிது த‌ட்சணையும்
வைத்து விழுந்து கும்பிட்டார்.அந்தப் பண்டாரங்களும் தானம் கொடுத்தவருக்கு அழகு தமிழில் மந்திரம் போல  வாழ்த்துச் சொன்னார்கள். அந்தக் காட்சியைப் பார்த்த நான், 'நானும் அப்படிச் செய்வேன்' என்று வேண்டிக்  கொண்டேன்.

சுவாமிமலையில் 25 பண்டாரங்களை ஒரு சேரக் கண்டவுடன், திருச்செந்தூரில் கண்டது நினைவுக்கு வந்தது.உடனே  மடப்பள்ளியில் சொல்லி 25 பெரிய பட்டை வெண்பொங்கல் போடச் சொல்லி ஏற்பாடு செய்துவிட்டு சுவாமி
தரிசனம் செய்யச் சென்றோம். தரிசனம் முடிந்து வந்து பண்டாரங்களுக்கு அந்தப் பொங்கலை அளித்து விட்டு  சிறிது தட்சணையும் அளித்து சாஷ்டாங்க‌ நமஸ்காரம் செய்தேன்.

மறுநாள் காலை வழக்கம் போல படுக்கையை விட்டு எழுந்தவுடன் கர தரிசனம் செய்தேன். அதிசயம் காத்து  இருந்தது. ஆம்! அந்த வெண் புள்ளி காணவில்லை. என்னையே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.புள்ளி இருந்த  இடத்தைச் சுரண்டிப் பார்த்தேன். போயே போச்!

கண்களில் ஆனந்தக் க‌ண்ணீர் பெருகியது. எல்லாம் அந்த தகப்பன் சுவாமியின் அருளேதான். அவன்  சன்னதியிலேயே திருமணம் செய்வித்து, என் குறையயும் தீர்த்து வைத்தானே ,அவன் புகழை எப்படிப்பாடுவேன்?

என்ன சொல்லிப் போற்றுவேன்?

வருகின்ற 24 ஏப்ரல் 2011க்கு 36 வருட திருமண வாழ்க்கை முடிவுறுகிறது. குறை உள்ளவன் என்று தெரிந்தும்  என்னைத் ஏற்றுக் கொண்டு துணிவுடன் குடும்பம் நடத்திய என் துணைவியார் திருமதி ஜெயலக்ஷ்மி பி.எஸ்ஸி.,எம்
எட் அவர்களுக்கு என்றும் என் வந்தனம்.

ஸ்ரீசுவாமிநாத குருவே போற்றி! தகப்பன் சுவாமியே போற்றி! ஓம்காரப் பொருளே போற்றி! உள் நின்று  ஒளிர்வாய் போற்றி!

நன்றி, வணக்கத்துடன்
கே.முத்துராமகிருஷ்ணன்
லால்குடி



+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

2.4.11

என்ன கேட்டார் மன்மோகன் சிங்?

---------------------------------------------------------------
என்ன கேட்டார் மன்மோகன் சிங்?

இன்றைய இளைஞர் மலரை, நமது வகுப்பறை மாணவியின் ஆசை ஒன்று....சாரி ஆக்கம் ஒன்று அலங்கரிக்கிறது. உறிக்காமல், உப்புப்போடாமல் அப்படியே கொடுத்துள்ளேன். வேண்டியவர்கள் உப்போ அல்லது அஸ்காவோ (சீனி) தங்கள் விருப்பப்படி போட்டுக்கொள்ளலாம்.

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வெள்ளிக்கிழமை.  கைபேசி மணி அடிக்கிறது.  எடுத்துப் பார்த்தால் நம்ம மன்மோகன் சிங்ஜி.   அவரும் நானும் ஹிந்தி / பஞ்சாபியில் பேசியதன் மொழிபெயர்ப்பு கீழே:

என்ன உமாஜி எப்படி இருக்கீங்க?

ம்ம் நல்லா இருக்கேன், நீங்க எப்படி இருக்கீங்க?  ஆமா எதுக்கு போன் பண்ணீங்க?  இந்த நேரத்துல நான் வேலையா இருப்பேன்னு உங்களுக்குத் தெரியுமில்ல?

கோச்சுக்காதீங்க.  ஒரு முக்கியமான விஷயம் சொல்லத்தான் கூப்பிட்டேன்.

சரி சரி சீக்கிரமா சொல்லுங்க.  உங்களுக்கு ஒரு பத்து நிமிஷம்தான் நேரம் கொடுக்க முடியும்.

நாளைக்கு உலகக்கோப்பை இறுதிப்போட்டி.

ஆமா அதுக்கென்ன?

இல்ல, அரையிறுதிக்கே உங்களை நேர்ல வந்து பாக்கறதுக்குக் கூப்பிட்டேன்.  ஆனா நீங்க ரொம்ப பிசின்னு சொல்லி மறுத்திட்டீங்க.

அதனால?

நாளைக்கு இறுதிப்போட்டியவாவது நேர்ல வந்து பாருங்களேன்.

ம்ம் என்னோட schedule பார்த்துட்டுச் சொல்றேன்.

அப்படியெல்லாம் சொல்லாதீங்க.  நீங்க வந்துதான் ஆகணும்.  ஜெயிச்ச அணிக்கு உங்க கையாலதான் உலகக்கோப்பையை தரச் சொல்லலாம்னு நாங்க எல்லாரும் சேர்ந்து முடிவு பண்ணியிருக்கோம். உங்களுக்காக உங்களைக் கேக்காமலேயே பிரைவேட் ஜெட் கூட ஏற்பாடு பண்ணிட்டேன்.

ம்ம் நீங்க இவ்ளோ சொல்றதால வரேன்.  ஆனா சில conditions இருக்கு.

நீங்க வரேன்னு சொன்னதே மகிழ்ச்சி.  இல்லேன்னா சோனியாஜியைவிட்டு பேசச் சொல்லலாம்னு நினைச்சேன்.  என்ன சொல்லுங்க?

எனக்கு இந்த விளம்பரம் பிடிக்காது.  அங்க யாரும் என்னை போட்டோவோ வீடியோவோ எடுக்கக்கூடாது.

சரி நான் சொல்லிடறேன்.

அப்புறம் உங்களோட ஒரே மேடையில கிலானி மாதிரியெல்லாம் உட்கார்ந்து மேட்ச் பார்க்கமாட்டேன்.

சரி

அப்புறம் ஜெயிச்ச அணிக்கு உங்க கையாலதான் உலக்கோப்பையைத்  தரணும்னு தொந்தரவு செய்யக்கூடாது.

நீங்க முதல்ல சொன்ன இரண்டும் சரி, ஆனா இந்த மூணாவது கண்டிஷன் ஐ கொஞ்சம் விட்டுடுங்களேன்.

ம்ஹூம், இது எல்லாத்துக்கும் நீங்க ஒத்துக்கிட்டாதான் நான் மேட்ச் பார்க்க வருவேன்.

சரி எப்படியோ நீங்க வந்தா அதுவே போதும்.  அப்புறம் இன்னொரு விஷயம்.

என்ன சீக்கிரமா சொல்லுங்க.

இல்ல வர தேர்தல்ல எங்களை ஆதரிச்சு ஒரு குரல் குடுத்தீங்கன்னா, எங்களுக்கு தமிழ்நாட்டுல தனிப்பெரும்பான்மை கிடைச்சுடும்...........

ஹலோ, உங்களுக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன், எனக்கு அரசியல் பிடிக்காது, எந்த அரசியல் கட்சியையும் பிடிக்காதுன்னு.  அதுவும் உங்க கட்சியை சுத்தமாவே பிடிக்காது.  ஏதோ உங்ககிட்ட பேசினா உடனே இப்படியெல்லாம் கேக்கறீங்க.

சரி சரி டென்ஷன் ஆகாதீங்க.  இந்த டொபிக்கை  இதோட விட்டுடறேன்.

சரி பை!

டிஸ்கி: என்ன ஒரே மொக்கையா இருக்கா?  அது ஒண்ணுமில்ல.  ஒரு வாரமா செம வேலை, மண்டை ரொம்ப காய்ஞ்சு போயிடுச்சு.  அது போறாதுன்னு இரண்டு பர்சனல் குழப்பங்களை சமாளிச்சு முடிவு எடுக்க வேண்டியதா போயிடுச்சு.  அதோட பாதிப்புதான் இப்படியெல்லாம். 

எவ்ளோவோ படிக்கறீங்க, இதையும் படிக்க மாட்டீங்களா என்ன? 

நன்றி, வணக்கத்துடன்,
எஸ்.உமா, தில்லி

++++++++++++++++++++++++++++++++++++++++++++===


வாழ்க வளமுடன்!

27.3.11

ஆறிய பவனும் ஆறாத பவனும்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆறிய பவனும் ஆறாத பவனும்!

ஒரு சமயம் டெல்லி உமாஜியைப் பார்த்து நானும் ஜோக் பட்டியல் ஒன்று தயாரித்து வாத்தியாருக்கு அனுப்பினேன். வாத்தியார் வெளியிடவில்லை.

மின்னஞ்சலில் கேட்டபோது, "நீங்கள் 'சீரியஸ்' ஆன செய்தியையே எழுதுங்கள்"என்று பணித்துவிட்டார்.சினிமாவில் எந்த வேடம் முதல் படத்தில் செய்கிறோமோ, அதுவேதான் கடைசி வரைக்கும்.வில்லன் ஆக முதலில் செய்தால் அந்த முத்திரையைக் குத்தி மீண்டும் மீண்டும் வில்லனாக நடிக்கவே அழைப்பு வரும்.இதற்கு ரஜனி மட்டும்தான் விதிவிலக்கு. முதலில் நிறைய வில்லன் ரோல் செய்தார். 16 வயதினிலே பரட்டையை மறக்க முடியுமா? ஆனால் பின்னர் கதாநாயகன் அந்தஸ்து கிடைத்து, சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டர்.

என்னை நானே சுய பரிசோதனை செய்து கொண்டேன். "நமக்கு நகைச்சுவை உணர்வு இல்லையோ? சொல்லப்  போனால் நான்தான் அதிகமாக மனதுக்குள் சிரிக்கும் ஆசாமி.ஒரு குணம் (கெட்டதோ?) என்னிடம் இருப்பதை நானே கண்டு கொண்டேன். அது என்னவென்று கேளுங்கள்.('என்ன‌?' என்று கோரஸ் சத்தம் கேட்கிறது)  என்னைக் கடந்து செல்லும் ஒவ்வொருவருடைய முகத்தையும் போல என் முகத்தை மாற்றிக் காட்டுவது. இதை ஒரு கலையாகவே பலர் செய்கின்றனர். அதைக் கலை என்று பார்க்கத் தெரியாதவர்கள் "வலித்தா காண்பிக்கிறாய்?" என்று கோபித்து 'தர்ம அடி' கிடைக்க வழியுண்டு. என்றைக்கு எனக்கு 'அறம் சார்ந்த அடி' கிடைக்கப் போகிறதோ?!அதென்ன 'அறம் சார்ந்த அடி'? அதாங்க தர்ம அடியே தான்!  திடீரெனத் தோன்றிய தனித் தமிழ் ஆர்வம் அப்படிச் சொல்ல வைத்தது.

ஜோக்குக்காகப் பத்திரிகைகளையும் இணையத்தையும் பார்க்க வேண்டாம். நம் அன்றாட வாழ்விலே பார்க்கக்கூடிய நிகழ்வுகளிலேயே பல நகைச்சுவைகள் நிரம்பியுள்ள்ளன. கண்ணையும், காதையும், கூடவே ரசிகத் தன்மயையும் கூர்மைப்படுத்தினால், மகிழ்ச்சியில் கூத்தாடலாம்.சிலேடை, நக்கல், திருகுதாளம் என்று ஒரு 'ரவுண்டு'க‌ட்டி ஜோக்"கடி"க்கலாம்.

ஒருநாள் நானும் என் பெரியம்மாவும் சேலத்தில் இரண்டாவது அக்ரஹாரத்தில் வாசல் திண்ணையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தோம். பெரியம்மா படிக்காதவர்கள். 2,3 வகுப்பு படித்து இருக்க‌லாம். ஆனால் நல்ல கூர்மையான அறிவு.எங்க‌ள் இல்லத்தைக் கடந்து பல கூவி விற்போர் சென்று கொண்டிருந்தனர்.முதலில் ஒரு ஆண் வாழைக் காயும், பின்னால் ஒரு பெண் வாழை இலையும், அதன் பின்னர் ஒரு ஆண் பாகற்காயும், அவருக்குப்பின்னே ஒரு பெண் பாக்கு மட்டையும் கூவிக்கூவி விற்றுச்சென்றனர்.

முதல் ஆள் ஓங்கிய குரலில் "வாழக்காஆஆஆ வாழக்கா..." என்று கூவினார் பெரியம்மா சொல்கிறார்கள்,"அவன் எந்த அக்காவை வாழச் சொல்கிறான்?"

பின்னால் வந்த பெண் "வாழலை..ய்..ய்.. வாழலெய்ய்ய்" என்று கீழ்ஸ்தாயியில் அழும் குரலில் சொல்கிறாள். பெரியம்மா சொல்கிறார்கள்,"ஓஹோ!இவள் தானோ அவனுடைய வாழாத அக்கா?"

அதன் பின்னர் ஒருவன் "பாருக்காஆஆஆ பாருக்காஆவ்..." என்று பாகற் காயைக் கூவி விற்கிறான்.பெரியம்மா மீண்டும், "எந்த அக்காவை இவன் பார்க்கச் சொல்கிறான்?" என்று கேட்கிறார்கள்.

பின்னாலயே ஒரு பெண் "பாக்க‌மாட்டெய்ங் பாக்கும‌ட்டைய்ய்ய்.."என்று கூவுகிறாள்.பெரியம்மாவின் மூளை வேலை செய்கிறது. "ஓஹோ! இவள் தானோ அவன் பார்க்கச் சொன்ன அக்கா? ஏன் பார்க்க மறுக்கிறாள்?"என்று சிரிக்காமல் கேட்டார்கள்.

ஒரு சாதாரண நிகழ்வில் நகைச்சுவையை, யாரையும் புண்படுத்தாத வகையில், இலக்கிய நயம் சொட்டச் சொட்டக் கூறிய பெரியம்மாவின் ஆற்றல் இன்று நினைத்தாலும் வியக்க வைக்கிறது.நகைச்சுவையாகப் பேசுவது, எழுதுவது எப்படி என்று பாடம் சொல்லிக் கொடுத்தாலும் நகைச்சுவை வந்து விடுமா? நகைச்சுவைக்கு 'டைமிங்', 'பாடி லாங்குவேஜ்' மற்றும் மொழி ஆற்றல் அவசியம்.'காமெடி டிராக்' என்று தனியாகப் போடக்கூடாது.நகைச்சுவை பெரியம்மாவைப் போல இயல்பாக மனத்துக்குள் முகிழ்க்க வேண்டும்.அதை மற்றவரும் மகிழும் வண்ணம் நேரம் பார்த்து அவிழ்த்து விடவேண்டும்."நான் ஒரு ஜோக் சொல்கிறேன் கேட்கிறீர்களா?" என்று கேட்டால், பெரும்பாலும் அடிக்கப்போகும் ஜோக் அறுவையாகப் போய்விடும் அபாயம்  உண்டு. பெரியம்மாவின் பெயர் கணப‌தி நடராஜன் சாரின் ஊரில் உள்ள பிரபலமான அம்பாளின் பெயர்.

முன்பெல்லாம் "அய்யர் காபி கிளப்", "பிராமணாள் டிபன் சென்டர்" என்று பெயர்ப் பலகையைத் தாங்கி நிற்கும் சிறிய சாப்பாட்டுக் கடைகள் உண்டு. அந்தக் கடையின் முக்கிய முதலே அந்த சாதிப் பெயர்தான். தந்தை பெரியார் சாதி ஒழிப்புப் போராட்டத்தின் ஒரு செயல் திட்டமாக, பொது இடத்தில் சாதிப்பெயர் இருந்தால் தார் கொண்டு அதனை அழிக்கச் சொன்னார்.

தி க வினர் அப்படி தார் கொண்டு அழித்தனர். பெரியாருக்கு ஆதரவு பெருகியது. எனவே 'அய்யர்', 'பிராமணாள்' என்ற பெயர்க‌ள் மாற்றப்பட்டு 'லக்ஷ்மி பவன்' 'சரஸ்வதி கபே' 'ஷண்முக விலாஸ்' 'கணபதி கபே' என்று பெயர்கள் சூட்டப்பட்டன. அதிலும் கொஞ்சம் பேர் சாமர்த்தியம் செய்து "ஆரிய ப‌வன்"
என்று இனப் பெயரைச் சூட்டிக்கொண்டனர்.(ஆரியப் படையெடுப்போ, ஆரிய இனமோ, ஒன்றும் இல்லை' என்று அந்தக் கதையை அவிழ்த்து விட்ட மாக்ஸ்முல்லரே சொல்லியும் இன்றளவும் பிராமணர்களை ஆரியர்கள் என்றும் வந்தேறிகள் என்றும் சொல்வது நிற்கவில்லை) இந்த 'ஆரிய பவன்' என்ற பெயர் தங்க‌ளுடைய பிராமண அடையாளத்தை வியாபாரத்திற்காகத் தக்கவைக்கும் என்று கருதியவர்கள் அவ்வாறு பெயர் சூட்டிக்கொண்டனர்.

பிராமணர் அல்லாதோர் சப்பாட்டுக்கடை ஆரம்பிக்கும்போது 'திராவிடச் சிற்றுண்டி நிலையம்' என்று போட்டி போட்டார்கள்.

ஜோக் சொல்ல வந்துவிட்டு பழக்க தோஷத்தால்  சீரியஸ் ஆகிவிட்டேனோ? ஒரு சமயம் நண்பர் கூப்பிட்டார். "வாருங்கள் ஆரிய பவனில் ஒரு காப்பி சாப்பிடலாம்" என்றார்."வேண்டாம் சூடான பவனுக்கே போவோம்" என்றேன். நண்பர் ஒரு வினாடி புரியாமல் திகைத்தார். புரிந்தவுடன் ஆழமான நகைச்சுவையை ரசித்தார்.  "ஆரிய","ஆறிய" என்ற சொற்களை வைத்து விளையாடிய சிலேடை அது.

என்ன கொஞ்சமாவது சிரிப்பு வருதா? சிரிப்பு வராவிட்டாலும் வாய்விட்டுச் சிரியுங்கள்.நோய் விட்டுப் போகும்.குமரி முத்து, மதன் பாப் போலச் சிரியுங்கள். வீரப்பாச் சிரிப்பு வேண்டாம். நன்றி!

ஆக்கம்:
கே.முத்துராமகிருஷ்ணன் (KMRK)
லால்குடி

------------------------------------------------------------------------------------------------------------
கட்டுரையாளர். திரு.கே.முத்துராமகிருஷ்ணன் அவர்கள் 
ஒரு கூட்டத்தில் பேசும்போது எடுக்கப்பெற்ற படம்
(ஆண்டு 1994)

வாழ்க வளமுடன்!

26.3.11

இளையராஜாவிற்கு எந்தவரியைப் பாட மனம் ஒப்பவில்லை?

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 இளையராஜாவிற்கு எந்தவரியைப் பாட மனம் ஒப்பவில்லை?

இன்றைய இளைஞர் மலரை இரண்டு ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள்.
அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++
திரிவேணி சங்கமம்.

மனிதர்குல மாணிக்கம்... ஜவஹர்லால் நேரு அவர்களைக் காலன் அழைத்துப் போன வேளை!

நமது கவிபாடும் சோலை, கவியரசு அவர்களின் இதயத்தில் அந்தச் செய்தி இடியாய்  இறங்கியதால்; அவரின் இதயத்தில் கசிந்தோடும் செங்குருதியை நிரப்பிக் கொண்டு;  கவிஞரின் இரு விரல்களுக்கு இடையே குடிபுகுந்த அந்தப் பேனா... துக்கத்தைக் கக்கியது....

அதுவும், செங்கனலாய் வெடித்துச் சிதறி பீறிட்டு பொங்கி எழுந்து; தமிழ் பாரெங்கும் வழிந்தோடியது....

இதோ! அந்த துக்கம் தோய்ந்து விழுந்த வரிகள்!... கோபம் கொண்டு எழுந்து செங்கனலாய், வெடித்துச் சிதறுவதை பாருங்கள்.

சீரிய நெற்றி எங்கே?
சிவந்தநல் இதழ்கள்  எங்கே?
கூறிய விழிகள் எங்கே?
குறுநகை போனது எங்கே?
நேரிய பார்வை எங்கே?
நிமிர்ந்தநன் நடைதான் எங்கே?
நிலமெல்லாம் வணங்கும் தோற்றம்
நெருப்பினில் வீழ்ந்தது இங்கே!...

அம்மம்மா என்ன சொல்வேன்
அண்ணலை தீயில் இட்டார்!
அன்னையை தீயில் இட்டார்!!
பிள்ளையை தீயில் இட்டார்!!!
(அம்மம்மா என்ன சொல்வேன்....)

தீயவை நினையா நெஞ்சை
தீயிலே கருக விட்டார்!
தீயசொல் சொல்லா வாயை
தீயிலே கருக விட்டார்!!
(அம்மம்மா என்ன சொல்வேன்....)

சாவே உனக்கொரு நாள்
சாவு வந்து சேராதோ!
சஞ்சலமே நீயும் ஒரு
சஞ்சலத்தைக் காணாயோ?
தீயே உனக்கொரு நாள்
தீ மூட்டிப் பாராமோ?
யாரிடத்து பொய் உரைப்போம்?
யார்மொழியில் அமைதி கொள்வோம்?...

***********************************************************************************************
கவியரசு கண்ணதாசன் அவர்கள் இந்தப் பாடலை வடித்தபோது நடந்த நிகழ்வைப் பற்றி அறிய நேர்ந்தது! நீங்களும் அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித நேரு அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கிடைத்த உடன் அனைத்துப் பத்திரிக்கைகளிலும்இரங்கல் கட்டுரையை வெளியிட்டு இருந்தார்கள். அன்று மாலை கடற்கரையிலே இரங்கல் கூட்டமும் நடக்க ஏற்பாடு நடந்து கொண்டும் இருந்தது.

அப்போது பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்த தோழர்கள், பால தண்டாயுதமும், தா.பாண்டியன் அவர்களும் கவிஞரைக் கண்டு கவிதைப் புனைய சொல்ல வேண்டும் என்ற நோக்கோடு சென்று பார்த்து இருக்கிறார்கள்.

அங்கு கவிஞர், தந்தையை இழந்த மகனைப் போல தேம்பி, கண்ணீர் விட்டு அழுது கொண்டு இருந்திருக்கிறார், அப்போது அங்கு சென்ற இவர்கள் இருவருக்கும் அவரைத் தேற்றுவதே பெரும் பாடாகி விட்டதாம்.

பாலன், "கவிஞர், இதே சோகத்தோடு மாலைக் கூட்டத்தில் பாட ஒரு பாடலை எழுதுங்கள்" என்றாராம். கவிஞரின் உதவியாளர் ஒரு ஐந்தாறு மாத்தரைகளையும், தண்ணீரையும் கவிஞருக்குக் கொடுத்தாராம். காய்ச்சல் நெருப்பாய் கொதித்ததாம் கவிஞருக்கு.

நாற்காலியில் சாய்ந்துக் கொண்டு கண்ணீர் விட்டபடியே ராகம் போட்டுப் பாடிக் கொண்டு எழுதச் செய்வதை தா. பா. பார்த்துக் கொண்டு இருந்ததாக , நினைவு கூறுகிறார்.

+++++++++++++++++++++++++++++++++++
                  
"கவிஞர்கள் என்றாலே உணர்ச்சிக் கடலில் மூழ்கக் கூடியவர்கள். அவர்கள் நவரச உணர்வுகளின் எல்லைவரை அதாவது, நுனிவரை செல்பவர்கள். அவர்கள் மெல்லிய இதயம் கொண்டவர்கள். ஆனால், அவர்கள் பலவீனமானவர்கள் அல்ல. அவர்கள் எளிதில் காயப் படக் கூடியவர்கள், ஆனால், முழுச் சுரணையும் உள்ளவர்கள். அதோடு, அவர்கள் சுதந்திரமானவர்கள். புறக்கண்ணை மறந்து அகக் கண்ணாலே அதிகம் பார்ப்பவர்கள். ஏனென்றால், அதற்கு உண்மை மட்டுமே தெரியும்!

அவர்களின் படைப்புகளில் உள்ள நயமும், அழகும்,  உயிரோட்டமும் அதனாலே அவர்களுக்கு வசப் படுகிறது.  அது அந்தப் படைப்பை வாசிப்போரையும் எளிதில் ஆட்கொள்ளும்  அளவிற்கு சென்று விடுகிறது.”
அவர்கள் வாழும் சமுதாயத்தை ஆற்றுப் படுத்த அவதரித்த அவதாரர்கள். அவர்களின் அந்த முயற்சிக்கு தடையாய் வரும் எதையும் எரியும் கனலாய் சுட்டெரிப்பது மட்டும் அல்ல... அதற்கு உதவியவர்கள் பிரியும் போது, அவர்களின் பிரிவுக்கும் கண்ணீர் வடிப்பவர்கள் ஆவர்.

ஆக, அப்போது  கண்ணதாசன்; அந்த காலக் கணித மேதை கதறி அழுததும், கண்ணீர் விட்டதும் அதன் பொருட்டே என்று சொல்லவும் வேண்டுமோ? அப்படி எழுதப் பட்ட அந்தப் பாடல், அன்று மாலை கூட்டத்தில் திரு. சீர்காழி கோவிந்தராஜனின் கம்பீரக் குரலில் உணர்ச்சிப் பொங்கப் பாடினாராம். அந்தப் பாடல் தான் மறுதினம் பத்திரிக்கைகளிலே வந்ததாம்.

சரி கட்டுரையின் நோக்கிற்கு வருவோம்!....

அப்படி அந்த துக்கத்தை சுமந்து கொண்டு வந்தத் தந்தியை! தீக்கதிரை!! ஜனசக்தியாய் விளங்கிய அந்த சிகப்பு மலரின் இறப்புச் செய்தியால் விளைந்த அந்த பா(பூ)மாலையில்  தேனது வடியாமல் துக்கம் தாளாமல் கண்ணீர் வடிந்தது!!

அன்று அந்த செய்தித்தாள் சற்று கனத்தே இருந்தது. குடகுமலை குளிராலா? அல்லது இதயம் கனக்கும் செய்தியை தாங்கி வந்ததாலா? அல்லது அதுவே அழுது, அழுது தன்னை தானே நனைத்ததாலா? அல்லது இரங்கல் பாமாலையில் வடிந்தக் கண்ணீராலா? யாரறிவார்?.

அப்படி கவியரசரின் துக்கத்தை சுமந்துச் சென்ற அந்த சோகப் பாடல் ஒரு பதினேழு வயது சிறுவனின் கரம் சேர்ந்தது. அவன் கண்களில் தெறித்த, கவியரசரின் செங்குருதித் தமிழ் வரி; அச்சிறுவனின் கண்களின் வழியே நுழைந்து, இதயம் புகுந்தது. ஆம், இதயம் புகுந்தது.

அது புனல் திரியும் கருவண்டுகள்;  துளையிட்ட, நாணல் தோகையின் ஓட்டையின் வழியே, காற்றுப் புகுந்து நாதத்தை எழுப்புவது போல்… இந்த சோகப் பாடல் அவனுள் புகுந்து ஒரு சோக ராகத்தை சுரம் பிரித்தது.

சுக ராகம் சோகம் தானே!!...

(Sweetest Songs are those that tell us of saddest Thoughts - Shelly.)

ஆம், அப்படி அந்தச் சிறுவனின் கண்களின் வழியே புகுந்து, சிந்தையில் கருவுற்று நின்ற;  கவியரசரின் அந்தக் கோபக் குரலின் வெப்பத்தால். அது கூறிய மாபெரும் தியாகியின் மறைவுச் செய்தியால்; கண்ணீரும் பெருகியது.
ஆம், அச்சிறுவனின்  கண்களில் கண்ணீர் பெருகியது என்றால் அது ஒன்றும் பெரிய வியப்பாகாது.  வேறென்ன வியப்பு?....

“ஒரு தேசக் காவலனின் மறைவுச்செய்தி. இன்னொரு, தேச  நேசனின் உள்ளக் குமுறல்களில் கவிதையாய் பிறந்து; அது கடைசியாக அன்று, அந்த பண்ணபுரத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண மனிதனை; இசைஞானியாய் உருவாக காரணமான முதல் பாடல் என்றால்; இசைஞானியை உருவாக்க கருவானது என்றால்; அது தான் பின்னாளில்... இன்றும் வியப்பாய் நிற்கிறது.” ஆம், அந்தப் பாடல் தான் இசைஞானி இளைய ராஜா அவர்கள் இசை அமைத்த முதல் பாடலாம்!!!.

அதை அவரே கூறுவதைக் கேட்க, http://www.youtube.com/watch?v=8gbZ_AezSUw இந்த சுட்டியை முடுக்குங்கள். முத்துதிரும். ஆம் உங்கள் கண்களில் கண்ணீர் முத்துதிரும்.
**********************************************************************************************
மேலே எழுதப் பட்டப் பாடல் இளையராஜா பாடுவதை கணினியில் கேட்கும் போது நான் எழுதியது..... அதிலே கவிஞர் எழுதிய ஒரு வரியை அவர் நீக்கி அல்ல தவிர்த்து இருக்கிறார்."தெய்வமே உன்னையும் நாம் தேம்பி அழவையோமோ! என்ற வரி தாம் அது.

பொதுவுடைமை இயக்கத்தில் ஈடுபட்டப் போது... அன்று இந்த வரியை  பல மேடைகளிலே இளையராஜா அவர்கள் பாடி இருந்தாலும்; இன்று அவர் ஒரு முழு ஆன்மீக வாதி என்பதால்; அம்மா என்று தரையில் எழுதப்பட்ட எழுத்தைக் கூட தனது காலில் மிதிக்க எப்படி மனம் ஒப்பாதோ! அப்படி அவருக்கு அந்த வரியைப் பாட அவர் மனம் ஒப்பவில்லை போலும்.

கவிஞரும் கொண்ட வேசத்திற்கு தகுந்தாற் போல் (ஏன் வேஷம் என்கிறேன் என்றால் அன்றைய சூழலில் புனைப் பெயரிலே பக்திப் பாடல்களையும் எழுதி இருக்கிறார் என்று கேள்வியுறுகிறேன்) அந்த வரிகளை கைகொள்கிறார்.
அந்தக் கருத்தை மறுப்பது என்றாலும், அவர் இறைவனிடம் தான் கொண்ட உரிமையில் கூட அப்படி எழுதி இருக்கலாம் என்றும் சொல்லத் துணியலாம்.

“கவிஞர்களின் எண்ணமும், கருத்தும் அவர்கள் வாழும் காலத்தோடு மாறுபடும், இல்லை மேம்படும்.”

அன்று இந்தியாவின் முதல் பிரதமரின் மறைவிற்கு ஒரு பெரும் கவிஞரால் எழுதப்பட்ட இரங்கல் பாட்டிற்கு தான், தனது முதல் இசை அமைத்தேன் என்று அந்த பதினேழு வயது சிறுவன் கூறினால் அது அப்போது நமக்கெல்லாம் சாதாரணம்.

ஆனால், இன்று ஒரு இசை ஞானி என்று பெரும்பாலான மக்களால்  அன்போடு அழைக்கும் தகுதி படைத்த ஒரு கலைஞன், அது தான் தனது முதல் இசை அமைத்தப் பாடல் என்பது தான் மேதைகளின் சங்கமத்தை / முக்கூடலைப் பற்றி சிந்திக்கச் செய்கிறது. கங்கையாய், யமுனையாய், சரஸ்வதியாய்.... மூவரும் இங்கே சங்கமித்தது தான் ஆச்சரியப் படச்செய்கிறது!

நாட்டிலோ !, வீட்டிலோ !!, காட்டிலோ !!!.....  தாமரைகள், அவைகள் எந்தச் சேற்றில் முளைத்தால் என்ன?

அவைகள்; நிறத்தால், அளவால் வேறுபட்டால் என்ன?. ஆனால், அவைகள்; அழகாலும், மணத்தாலும் ஒன்றல்லவோ!

எங்கோ பிறந்து; எப்படியெல்லாமோ வளர்ந்து; முப்பெரும் மேதைகளின் சங்கமம் எப்படி நடந்தேறியது!  இதுவே, என்னை பெரிய வியப்பாய் ஆழ்த்தியது.

அவனின்றி அணுவும் அசையாது; யாரை எதற்காகப் படைத்தானோ! அவர்கள் தாமாகவே தங்களது கடமைகளை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் / இருந்திருக்கிறார்கள்.

அது இந்த பரந்து விரிந்த ஆகாயமும், எரியும் சூரியனும், கொட்டும் அருவியும், வீசும் காற்றும், சுற்றும் பூமியும் மட்டுமல்ல. அதை, விரும்பினாலும் விரும்பா விட்டாலும்; இந்த மானுடமும் அப்படித்தான். அவர்கள் தாமாகவே தங்களது கடமைகளை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் / இருந்திருக்கிறார்கள்.

எல்லாவற்றிலும் எல்லாமமுமாக நீக்கமற நிறைத்திருக்கும் அவனே எல்லா அதிசயங்களையும் நடத்துகிறான். இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் யாவும் அவனின் செயலே என்ற சிந்தனையை மேல் நிறுத்துவோம்.

நன்றி வணக்கம்.
ஆலாசியம் கோவிந்தசாமி,
சிங்கப்பூர்

+++++++++++++++++++++++++++++++++++++===
2

மனக்கண்ணில் மகிழ்ச்சி தெரிய வேண்டாமா?

'ஒரு சீட்டும் சரியா வரலியே?  பேசாம பாதில கழண்டுக்கலாமா?  இல்ல கொஞ்ச நேரம் பார்க்கலாமா?  கடைசியா மிஞ்சி இருக்கிறது இந்த அம்பது ரூபாதான்.  அதுவும் மனைவி அரிசி வாங்குவதற்காகக் கொடுத்தது.  இதையும் இழந்து அரிசியும் வாங்காம வீட்டுக்குப் போனா நிலைமை கேவலமாயிடும்'.

'என்ன யோசிக்கிற பட்டுன்னு சீட்டைப் போடு ' பாலுவின் குரல் துரிதப்படுத்தியது.

சீட்டைப்போட்டதுதான் தாமதம், எடுத்து டிக்கி அடித்தான் ராசு.

போச்சு எல்லா பணமும் காலி.  வெறுத்துப்போய் எழுந்தான் சுந்தர்.

தண்ணியடிக்கக் கிளம்பிக்கொண்டிருந்தார்கள் அவன் கூட்டாளிகள்.  சுந்தர் வீட்டைப் பார்க்க நடந்தான்.

வேலை இருந்தவரை கையில் பணப்புழக்கம் இருந்தது.  இப்போது கொஞ்ச நாளாகவே சரியாக வேலையும் கிடைப்பதில்லை.

மனைவியிடம் என்ன காரணம் சொல்லலாமென்று ஒரே யோசனையாக இருந்தது. சுந்தரும் இதிலிருந்து விடுபடத்தான் நினைக்கிறான்.  ஆனால் அவன் தேமேன்னு போனால் கூட நண்பர்கள் இழுத்துப்பிடித்து உட்கார வைத்துவிடுகிறார்கள்.

வீட்டுக்குப்போனவனுக்கு நினைத்தபடியே வரவேற்பு இருந்தது.  கூடவே ஆத்தாவும் அது பங்குக்கு திட்டியது.  இது வழக்கமாக நடப்பதுதான்.  அவளையும் சொல்லி என்ன பயன்?  நாலு வீடுகள்ல வேலை பார்த்து சம்பாதிக்கறதை இப்படி தொலைச்சுட்டு வந்தா?

கண்ணை மூடிக்கொண்டு அமைதியாக உட்கார்ந்தான்.  பெண் ஒரு பக்கம் உட்கார்ந்து வீட்டுப்பாடம் செய்துகொண்டிருந்தது.  கிழிஞ்ச சீருடையை போட்டுக்கிட்டு வருதுன்னு பள்ளிக்கூடத்தில நாலு நாளா திட்டுறாங்களாம். 

'ஏங்க உங்க நண்பர் வந்துருக்காரு.  உங்ககிட்ட பேசணுமாம்', சிந்தனை கலைத்து எழுந்தான்.

வாசலில் வேலு.

'அண்ணே, நம்ம சந்தானம் அண்ணன் கடைல வேலைக்கு ஆள் வேணுமாம்.  உங்களைப்பத்தி சொன்னேன்.  உடனே அழைச்சுகிட்டு வரச் சொன்னாரு'.

உடனே சுறுசுறுப்பானான்.  'இரு சைக்கிளை எடுத்துகிட்டு வரேன்'.

'வேணாண்ணே நம்ம சைக்கிள்லையே போயிடலாம், வாங்க'
--------------------------------------------------------------------------------------
ஒரு மாதம் ஓடியதே தெரியவில்லை.  காலையில் ஏழு மணிக்குக் கடைக்குப் போனால் திரும்ப வர இரவு எட்டு ஒன்பது மணி ஆகிவிடுகிறது.  இன்று சம்பள நாள்.

காலையில் கிளம்பும்போதே பரபரப்புடன் இருந்தான்.  வேலையில் இருப்பே கொள்ளவில்லை.  மெதுவாக முதலாளியிடம் ஆரம்பித்தான்.  'அண்ணே, இன்னிக்கு கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு அனுப்புவீங்களா?'

'சரி'

பையில் சம்பளம்.  உற்சாகத்துடன் சைக்கிளை மிதித்தான்.  'நேரா அப்படியே பெண்ணோட பள்ளிக்குப் போயி அதுக்கு அப்படியே சீருடையும் வாங்கிக் கொடுத்து வீட்டுக்கு அழைச்சுட்டுப் போயிட்டா என்ன?  அப்படியே ஆத்தாவுக்கும் ரெண்டு நல்ல புடவையா வாங்கிடலாம்'  என்று காலையில் மனதில் உதித்த திட்டத்தைச் செயல்படுத்தும் நோக்குடன் விரைந்தான்.

மரத்தடியில் அவனுடைய சீட்டாட்ட நண்பர்கள் பட்டாளம் குழுமியிருந்தது.

'ஏ மாப்ளே, என்னடா உன்னை பிடிக்கவே முடியல.  வேலைக்குப் போக ஆரம்பிச்சதும் எங்களையெல்லாம் மறந்துட்ட போல.  ஒரு கை குறையுது.  வா வா'.

'இல்லண்ணே, பெண்ணுக்கு உடம்பு சரியில்லன்னு பள்ளிக்கூடத்திலேர்ந்து சொல்லி விட்டாங்க.  அதான் போய்கிட்டிருக்கேன்' கூசாமல் பொய் சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

ஆத்தாவும், பெண்ணும் ஏன் மனைவியும் கூட மகிழ்ச்சியாகச் சிரிப்பது மனக்கண்ணில் தெரிந்தது.

ஆக்கம்: திருமதி. S. உமா, தில்லி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!