மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label புத்தக விமர்சனம். Show all posts
Showing posts with label புத்தக விமர்சனம். Show all posts

26.8.20

மகிழ்ந்து பாராட்டிய வகுப்பறை மாணவர்



மகிழ்ந்து பாராட்டிய வகுப்பறை மாணவர்

வகுப்பறை ஜோதிடம் தொகுதி 2

manick vasagam
Aug 25, 2020, 10:29 PM (7 hours ago)
https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif
https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif
to SP.VR.SUBBAIYA, me
https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif
உயர் திரு வாத்தியார் அவர்களுக்கு.

வகுப்பறை ஜோதிடம் தொகுதி 2 கிடைத்தது
புத்தகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. வகுப்பறையில் பல மாதங்கள், வருடங்கள் வந்தவை  ஒரு நேர்த்தியான  வரிசையில் உள்ளன
நான் உங்கள் வகுப்பறை கண்டுபிடிப்பதற்கு முன் ஆர்வத்தில் ஜாதக அலங்காரம், ஜாதக சிந்தாமணி, மகரிஷி ஜெமினி ஜோதிட விளக்கம், குமாரசுவாமி யம், கிருஷ்ணமூர்த்தி ஜோதிட விளக்கம், உத்தர காலாமிர்தம், புலிப்பாணி ஜோதிடம், How to Judge A Horoscope by B. V. Raman போன்ற பல புத்தகங்கள் வாங்கி படித்தாலும் புரியாமல் இருந்தது, உங்கள் வகுப்பறை படித்த பின்னர் ஜோதிடம் பிடிபட்டது

வகுப்பறை பாடம் மற்றும் Galaxy 2007 & Stars 2015ல் வந்த முக்கிய மேல்நிலைப் பாடங்கள் உள்ளதால் தேடாமல் ஓர் இடத்தில் உள்ளது சிறப்பு

உங்களுடைய வகுப்பறை ஜோதிடம் 1&2 மற்றும் வரப்போகும் புத்தகங்கள் புதிதாக கற்போர்க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், கற்றவர்களுக்கு சிறந்த கையேடு ஆக இருக்கும்

என்னை பற்றி
சிறு வயதிலிருந்தே கடவுள் நம்பிக்கை.

Speak Japanese lived about 6 years in Tokyo, teach Japanese to many people, now also teaching. Worked few Japanese companies and did many interpretation, my last company closed India operations in last November due to low price market. Waiting for corona to fix my next project. 

இப்படிக்கு
உங்கள் மாணவன்
மாணிக்கவாசகம்
----------------------------------------------------------------------
இந்த அன்பான மாணவக் கண்மணிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்
என்றென்றும் அன்புடன்
வாத்தியார்
=================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.2.15

புத்தக விமர்சனம்!



புத்தக விமர்சனம்

விஜய் டிவி புகழ் மங்களம் ஆச்சி அவர்கள் எழுதிப் பதிப்பித்துள்ள ‘ செட்டிநாட்டு பாரம்பரிய சமையல்’ என்னும் நூலைப் பற்றிய செய்தியை  உங்களுக்கு அறியத் தரவிரும்புகிறேன்

புத்தகத்தைக் கையில் எடுத்தவுடனேயே நிமிர்ந்து உட்கார்ந்து விடுவோம். எல்லாவிதத்திலும் அப்படியொரு நேர்த்தியான அமைப்பு.  அருமையாக வடிவமைக்கப்பெற்று நல்ல காகிதத்தில் நேர்த்தியாக அச்சிடப்பெற்றுள்ளது.

செட்டிநாடு' என்றாலே, கலைநயம் மிளிரும் அழகழகான வீடுகளும், தனிச் சிறப்புமிக்க உணவு வகைகளும்தான் முதலில் நம் கண் முன்னே வந்து நிற்கும்.

வெள்ளைப் பணியாரம்,பால் பணியாரம்,கும்மாயம், இனிப்பு சீயம்,
ஐந்தரிசி பணியாரம், பால் கொழுக்கட்டை, கல்கண்டு வடை, கந்தரப்பம்.
கவுனி  அரிசி. என்று சுவையான உணவுவைகள் நூற்றுக்கும் மேல்
உள்ளன. அவைகள் அனைத்தும் கண் முன்னே வந்து நிற்கும்.

செட்டிநாட்டு உணவுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசி உடையதாகும்.  மேலான  சிறப்பிற்கு அதுதான் காரணமுமாகும்.

செட்டிநாட்டு பாரம்பரிய உணவு மற்றும் பலகார வகைகளுக்கு தமிழர்கள் வாழும் பகுதிகளில் மட்டுமல்ல, உலகம் முழுக்கத் தனி செல்வாக்குண்டு. சொக்க வைக்கும் சுவையுடனும், மணத்துடனும் இருக்கும் செட்டிநாட்டு உணவு வகைகள்தான், இப்பொழுது ஐந்து நட்சத்திர உணவகங்களில்
இருந்து கையேந்தி பவன்கள்வரை கோலோச்சுகிறது.

இந்த நூலில், திருமதி மங்களம் ஆச்சி அவர்கள் சிறப்பாகப் பல
செட்டிநாட்டு  உணவுவகைகளைப் பட்டியலிட்டுக் கொடுத்துள்ளார்கள். செய்முறைகளை எளிமையான  தமிழில் எழுதியுள்ளார்கள். ஆச்சி அவர்களுக்கு 86 வயதாகிறது. இந்த வயதிலும் அவர்களின் இப்பணியைச் செய்துள்ளது மிகுந்த பாராட்டிற்கு உரியதாகும். முதற்கண்  அவர்களைப் பாராட்டி மகிழ்வோம்!

இந்த “பாரம்பரிய செட்டிநாடு சமையல்” நூல் சிறப்பாக அமைந்துள்ளது. நீங்கள்  எளிதில் செய்யக்கூடிய நோக்கில் எழுதியுள்ளார்கள். நீங்களும்  செய்து பாருங்கள். தன்னுடைய நீண்ட நாள் சமையல் அனுபவம்
பலருக்கும் பயன்பட வேண்டும் என்று அவற்றை எழுதி நூலாக்கித்
தவழ விட்டிருக்கிறார்கள்.

இந்த நூல் ஒரு மூத்த குடிமகளின் அனுபவ வெளிப்பாடு. அதுதான்
இந்த நூலுக்கு  உரிய முத்தாய்ப்பான சிறப்பாகும்.

அனைவரும் இந்த நூலைப் பணம் கொடுத்து வாங்கி, படித்துப் பயனடையுங்கள்.

இனிப்பு வகைகள், காரசிற்றுண்டிகள், சட்னி வகைகள், சாத வகைகள், சூப் வகைகள், மண்டி/பச்சடி/கூட்டு வகைகள், பொறியல் வகைகள், குழம்பு வகைகள், பாயாச வகைகள் என்று மொத்தம் ஒன்பது பகுதிகளாகப் புத்தகம் தொகுக்கப்பெற்றுள்ளது கூடுதல் சிறப்பாகும்!

புத்தகம் கிடைக்கும் இடம்:
மங்களம் ஆச்சி பதிப்பகம்,
வி - 84, ரங்கா திரியம்பவா,
காளப்பட்டி ரோடு,
கோயமுத்தூர் - 641 014
அலைபேசி எண்: 94432 76860

பக்கங்கள் 166
விலை: ரூ.150:00 + கூரியர் செலவு (ஊரைப் பொருத்து) தனி. உத்தேசமாக
200 ரூபாய்கள் ஆகும். ஆனால் அதில் உள்ள மேட்டரைப் பார்க்கும் போது இந்தத் தொகை ஒன்றும் மேட்டரல்ல! அதாவது பெரிய விஷயமல்ல!

அன்புடன்,
வாத்தியார்
----------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

26.5.14

புத்தக விமர்சனம்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு!

 

புத்தக விமர்சனம்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு!

நேர்த்தியான வடிவமைப்பு, அத்தனை பக்கங்களும் வண்ணங்களில், ஏராளமான தகவல்கள், வண்ணப் படங்கள், என்று புத்தகம் அருமையாக
இருக்கிறது. அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய நூல்!

கவிஞர் வைரமுத்துவின் வைரவரிகளிலான அணிந்துரை புத்தகத்திற்கு மேலும் அணி சேர்க்கிறது!

’ரஜினிகாந்த்’ தமிழ்நாட்டு ரேஷன்கார்டுகளில் எழுதப்படாத ஒரு குடும்பப் பெயர் என்று ரஜினிகாந்தின் பெருமையை ஒற்றைவரியில் சொல்லிவிடுகிறார்அவர். சுருங்கச் சொல்லி மனதைத் தொடும்படியாக எழுதுவதுதான் கவிஞர்களுக்கே உரிய சிறப்பு. மேலும் இப்படிக் குறிப்பிடுகிறார்:

”இந்தியாவின் ஒரு கலை அடையாளம். இந்தியாவிற்கு வெளியிலும் இந்தியத் திரைப்படக் குறியீடு.”

தினத்தந்தி நாளிதழின் வரலாற்றுச் சுவடுகள் பகுதியில் பல வாரங்கள் வெளிவந்து படித்தவர்கள் அனைவரையும் பரவசப்படுத்திய தொடர்
கட்டுரைகளின் தொகுப்புத்தான் இப்போது நூல் வடிவம் பெற்றுள்ளது.

”என்னுடைய முழு வாழ்க்கையையும் சரியானபடி பிரதிபலிக்கும் விதத்தில் இந்த நூல் அமைந்துள்ளது” என்று ரஜினிகாந்த் அவர்களே பாராட்டியபடி
நூல் அமைந்துள்ளது என்பது குறிப்பிட வேண்டிய செய்தியாகும்.

தினத்தந்தி நாளிதழின் இயக்குனர் திரு. சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன் அவர்களின் முன்னுரை நூலிற்கு மேலும் ஒரு அணியைச் சேர்க்கிறது
என்றால் அது மிகையல்ல!

101 அத்தியாயங்கள் உள்ள இந்தப் புத்தகத்தைக் கையில் எடுத்துவிட்டால், தொடர்ந்து படிக்கும்படி விறுவிறுப்பான நடையில் உள்ளது.

ரஜினிகாந்த் அவர்களின் பெற்றோர்களான தந்தையார் திரு. நானோஜிராவ், தாயார் திருமதி.ராம்பாய் ஆகியவர்களைப் பற்றிய செய்தியுடன் துவங்கி,
அவருடைய இளமைக்கால வாழ்க்கை முதல் 10 அத்தியாயங்களில் சிறப்பாகப் பதிவு செய்யப்பெற்றுள்ளது. திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து அவர் படித்ததில் இருந்து, அங்கே அவர் இயக்குனர் திரு.பாலச்சந்தர் அவர்களின் கவனத்தைப் பெற்றதுவரையிலான காலகட்டமும் சுவையாக அலசப் பெற்றுள்ளது.

15.8.1975ஆம் தேதியன்று வெளிவந்த ரஜினிகாந்த் அவர்களின் முதல் படமான ‘அபூர்வ ராகங்களில்’ ஆரம்பித்து 23.5.2014 அன்று வெளியான கோச்சடையான் வரை மொத்தம் 157 படங்களைப் பற்றிய தகவல்கள் விரிவாக உள்ளன.

இதுவரை அவர் நடித்த படங்கள் வகைப்படுத்தப் பெற்றுள்ளன:

தமிழ் மொழியில் 107 படங்கள்.
கன்னடம் (15), தெலுங்கு (11) மலையாளம் (9) இந்தி (13) வங்காளம் (1) ஆங்கிலம் (1) என்று பிறமொழிகளில் அவர் நடித்த படங்கள் 50.
ஆக மொத்தம் உள்ள 157 படங்களுமே, வெளிவந்த தேதியுடன் பட்டியலிடப் பட்டிருக்கிறது.

அவரைத் திரையுலகிற்கு அறிமுகம் செய்த இயக்குனர் திரு.கே.பாலச்சந்தர் அவர்கள், அவரை வைத்து 9 படங்களை இயக்கி உள்ளார்.
அவரை  வைத்து மிக அதிகமான படங்களை இயக்கியவர் என்ற
பெருமையை இயக்குனர் திரு.SP. முத்துராமன் அவர்கள் பெறுகின்றார். மொத்தம் 25படங்கள். அவர்கள் இருவரைப் பற்றியும் உள்ள செய்திகள் வண்ணப் படங்களுடன் புத்தகத்தில் சிறப்பாகப் பதிவு
செய்யப்பெற்றுள்ளது.

தினத்தந்தி நாளிதழின் ஆஸ்தான ஜோதிடரான கவிஞர் திரு.சிவல்புரி சிங்காரம் அவர்கள், ராஜின்காந்தின் ஜாதகத்தை அலசிப்
பதிவிட்டிருக்கிறார். அதுவும் சிறப்பாக உள்ளது.

சுப வருடம் கார்த்திகை மாதம் 27ஆம் தேதி (12.12.1950) இரவு 11.45 மணிக்கு ரஜினிகாந்த் பிறந்துள்ளார். செவ்வாய்க்கிழமை. சிம்ம லக்கினம்.
திருவோண நட்சத்திரம். மகர ராசி. பிறந்த ஊர் குறிப்பிடப் படவில்லை. ரஜினிகாந்தின் தந்தையார் பெங்களூர் காவல்துறையில் பணி செய்து
கொண்டிருந்தார் என்பதை வைத்து பெங்களுர்தான் அவருடைய பிறந்த ஊர் என்று நாம் முடிவு செய்துகொள்ள வேண்டியதுதான்.

ராஜயோகம் பற்றிக் குறிப்பிடும்போது, கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் - 12ஆம் இடத்து விரையச் சந்திரன் ஜாதகரின் ஆறாம் வீட்டில்
அமர்ந்து பெருத்த ராஜ யோகத்தைக் கொடுத்தான் என்று குறிப்பிட்டுள்ளார் அவர்.

ராகு கொடிப் பிடிக்கும் காலசர்ப்ப தோஷ/யோக ஜாதகம். அதனால்தான் ரஜினிகாந்த் இளமைக் காலத்தில் பல சிரமங்களுக்கு ஆளாகியிருக்கிறார்.
பின்னால் அத்தனையும் யோகமாக மாற்றிக் கொடுத்திருக்கிறான் 7ல் இருந்து லக்கினத்தைத் தன் பார்வையில் வைத்திருக்கும் ராகு.

அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய நூல். ஆகவே காசு கொடுத்து வாங்கிப் படியுங்கள்

24.5.2014 சனிக்கிழமை மாலையில்தான் புத்தகம் கடைகளில் கிடைத்தது. புத்தகம் வெளிவந்தவுடனேயே நான் அதை வாங்கிப் படித்துவிட்டேன்.
நீங்களும் படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அதற்கு நல்லதொரு விமர்சனம் எழுதி இன்று பதிவிட்டுள்ளேன்

நூலின் தலைப்பு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு
விலை: ரூ.200:00
பக்கங்கள்: 400 (1/8 சைஸில்)
வெளியீடு: தந்தி பதிப்பகம்
86, ஈ.வி.கே சம்பத் சாலை
வேப்பேரி
சென்னை - 600 007
போன்: 044 - 2661 8661
மின்னஞ்சல்:  support@dt.co.in
இணையதள முகவரி: WWW.dailythanthi.com
அச்சிட்டோர்: ஈகிள் பிரஸ்
சென்னை - 600 013

அன்புடன்
SP.VR.சுப்பையா
கோயம்புத்தூர்

=====================================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

21.7.10

உயர் அதிகாரி எழுதியுள்ள ஒப்பற்ற நூல்!



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நூல் நயம்:  உயர் அதிகாரி எழுதியுள்ள ஒப்பற்ற நூல்!

இறைவனின் புகழைப் பாடும் பாடல்கள் எல்லாம் புகழ் பெற்ற பாடல்கள் என்று சொல்வதைப் போல,  வள்ளுவரின் திருக்குறளை நயந்து எழுதும் நூல்கள் எல்லாம் ஒப்பற்ற நூல்கள்தான்.

வித்தியாசமாக ஒரு இடுகையைத் தரும் பொருட்டு, சிறந்த நூல் ஒன்றை உங்களுக்கு அறிமுகம் செய்வதில்  உவகை கொள்கிறேன்.

கதை, கவிதை, கட்டுரைகள் முதலியவற்றில் உள்ள மகிழ்விப்பதாக அமையும் தன்மையைக் குறிக்கும் சொல் நயம்  என்னும் சொல். artistic beauty, literary beauty, merit என்று ஆங்கிலத்தில் வகைப் படுத்துவதை தமிழில் ஒரு சொல்லால் விளங்க வைத்துவிடலாம். அதுதான் செம்மொழியான தமிழ்மொழியின் சிறப்பு.

இந்திய வருவாய்த் துறையில் பணி புரியும்  உயர் அதிகாரி திரு. சி. இராஜேந்திரன் அவர்களால் எழுதப்பெற்ற ‘திருக்குறள் உவமை நயம்’
என்னும் ஒப்பற்ற நூல், படிப்பவர்களின் மனதில் படிக்கும்போது
ஏற்படுத்தும் இன்பத்தாக்கத்தை அடியவனின் பார்வையில் கீழே கொடுத்துள்ளேன்.

நூல்நயம் அல்லது புத்தக விமர்சனம் என்று நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்

புத்தகத்தைப் பிரித்தவுடன் 'முகவுரை' பகுதியில் தன்னுரையாக திரு. சி. இராஜேந்திரன் அவர்கள் எழுதியுள்ள வரிகளைப் படித்தவுடனேயே நாம் நிமிர்ந்து உட்கார்ந்து விடுவோம்!

    “ஓர்  இனத்திற்குப் பண்பாடும், நாகரிகமும்தான் ஆணிவேர்
போன்றவை. ஆணிவேர் ஆழமாகச் சென்றால்தான் ஒரு மரம் 
நிலைபெற்று  நிற்கும். அதன்  கிளைகளும் பல திசைகளில் பரவி, 
தளிர்த்து,  இலைவிட்டு, பூத்து, காய்த்து, கனி தந்து  பயனுள்ளதாய் 
விளங்க முடியும். வேர்களை மறந்த மரங்களுக்கு வாழ்க்கையில்லை.

  நமது முன்னோர்கள், அவர்கள் உணர்ந்து எழுதி வைத்து விட்டுச் சென்ற அரிய, ஏற்புடைய கருத்துக்களைக் கொண்ட இலக்கியங்கள்தான் நமது பண்பாட்டையும், நாகரிகத்தையும்  நமக்கு  உணர்த்துபவை. 
அவற்றை  மறந்து ஓர் இனத்திற்கு வளமான வாழ்க்கை இல்லை.
நாம் நமது இலக்கியங்களில் ஆழக் கால் ஊன்றி அதிலுள்ள
கருத்துக்களை  உள்வாங்கி செயல்பட்டால்தான், நமக்கும்,
மற்றவர்களுக்கும் பயன் தரும் வாழ்க்கையை வாழ முடியும்”

புத்தகம் பிறந்த கதைக்கு என்னதொரு விளக்கம் பார்த்தீர்களா?

அறத்துப்பாலில் 22ம் பொருட்பாலில் 56ம் இன்பத்துப்பாலில் 19ம் ஆக மொத்தம் 97 அதிகாரங்களில் உள்ள உவமைகள், நயமாக, விளக்கங்களுடன் எடுத்துச் சொல்லப்பெற்றுள்ளன!

எனக்குப் பிடித்த நிலையாமை அதிகாரத்தில் உள்ள உவமைகளை நூல் ஆசிரியர் எடுத்துச் சொல்லியிருக்கிறாரா என்றுதான் முதலில் தேடிப் படித்தேன். அதில் 4 குறள்களின் உவமை நயம் சிறப்பாக எடுத்துச்
சொல்லப்பெற்றிருக்கிறது.

  “கூத்தாட்டு அவைக்குழாத் தற்று பெருஞ்செல்வம்
   போக்கும் அதுவிளித் தற்று”

                            - குறள் எண் 332

கூத்தாட்டுக் களத்துக்கு ஒவ்வொன்றாய் வரும் மக்கள் கூட்டம் போல் செல்வம் சிறிது சிறிதாக வரும். ஆனால் போகும்போது கூத்தாட்டுக் களத்திலிருந்து கூத்து முடிந்ததும் செல்லும் பெரும் மக்கள் கூட்டத்தைப் போல சிறுகச் சிறுகச் சேர்த்த பெருஞ்செல்வம் விரைந்து ஒரேயடியாகச் சென்றுவிடும்.

தமிழ் - இயல், இசை, நாடகம் - என மூன்று வகைப்படும். கூத்து என்பது நாடகத்தமிழ். கூத்தின் மூலம்  மக்களுக்கு நல்ல பல கருத்துக்களையும், நமது பண்பாட்டையும், கலைஞர்கள் விளக்கிக் கொண்டிருந்த காலம்  அது.......என்று தொடர்கிறது நூலாசிரியரின் விளக்கம்.

    “பீலிபெய் சாகடும் அச்சிறும் அப்பண்டம்
     சால மிகுத்துப் பெயின்
- குறள் 475 (வலி அறிதல் அதிகாரம்)

மயிலறகே  ஆனாலும் வண்டி தாங்கும் அளவிற்கு ஏற்றாமல்
அளவிற்கு மிஞ்சி ஏற்றினால் வண்டியின் அச்சு முரிந்துவிடும்
என்று வள்ளுவப் பெருந்தகை மயிலிறகை வைத்து  உவமையாகச் 
சொன்ன  இந்தக் குறள்  மட்டும் பள்ளிப் பாடத்தில் படித்ததினால்
பலருக்கும் தெரியும். வேறு இரண்டு உவமை நயங்களைச்
சொல்லுங்கள் என்றால் பலரும் விழி பிதுங்க விழிப்பார்கள்.

ஆகவே இந்த நூலில் எடுத்துச் சொல்லப்பட்டுள்ள உவமை நயங்களை எல்லாம் படித்து அனுபவிக்கும் போது வள்ளுவரின் மேன்மை மேலும் பளிச்சிடுகிறது.

படித்து முடித்தவுடன் உவகை மேலிட, தமிழ்கூறும் நல்லுலகத்தோர் அனைவரும் இதைப் படித்து மகிழ வேண்டும்  என்ற ஆதங்கத்தில் இதற்கு ஒரு விமர்சனம் எழுதத் துணிந்தேன்.

ஒரு உயர் அதிகாரிக்கு படிப்பதற்கு நேரம் கிடைத்தாலும், எழுதுவதற்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்பது  திகைப்பிற்கு உரிய விஷயம். ஆர்வம் இருந்தால் போதும் என்று பதில் சொல்லாமல் ஒரு இரண்டு பக்கங்கள்  எழுதிப் பாருங்கள், அப்போது தெரியும் நன்றாக எழுதுவது என்பது வரம் என்று!

வள்ளுவரின் உவமை நயங்களை, நயம்பட தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ள இந்த நூல் 288 பக்கங்களைக் கொண்டது. சிறந்த முறையில் அச்சிடப்பெற்றுள்ளது.  

Nightingale Binding  என்னும் முறையில்  பக்கங்கள்படிப்பதற்கு வசதியாகக் கட்டமைத்துக் கொடுக்கப் பெற்றுள்ளது. நூலின் வடிவமைப்பைப் பார்க்கும்போது அதன்  விலை குறைவுதான்.  விலை ரூ. 125:00 மட்டுமே

நூலில் உள்ள அத்தனை கட்டுரைகளுமே முத்துக்கள். எல்லாவற்றையும் எடுத்து எழுத நான் விரும்பினாலும்  பதிப்பாளர்கள் தங்கள் காப்புரிமையை மீறி அனுமதிப்பார்களா என்பது தெரியாது! அதேபோல மிகவும்

அதிகமாக நெஞ்சைத் தொட்ட வரிகளைக் குறிப்பிட்டு எழுதுவதென்றால் எதை எழுதுவது எதை விடுவது என்ற திகைப்புத்தான் மேலிடும். ஒரு புத்தக விமர்சனத்தில் அதைச் செய்வதும் சரியல்ல!

ஆகவே ஒரே ஒருவழிதான் உண்டு. நூலை விலை கொடுத்து வாங்கிப் படியுங்கள்.அதுதான் நூலைச் சிறப்பாக  எழுதிய திரு.சி.இராஜேந்திரன் அவர்களுக்கும், வெளியிட்டவர்களுக்கும் நாம் செய்யும் மரியாதையும், நன்றிக்  கடனுமாகும்.

பதிப்பாளர்களின் முகவரி:

கவிதா பப்ளிகேஷன்
8, மாசிலாமணி தெரு,
பாண்டி பஜார், தி. நகர்
சென்னை - 600017

தொலைபேசி எண்: 24364243, 24322177


நன்றி, வணக்கத்துடன்,
SP.VR.சுப்பையா
-------------------------------------------------------------------


வாழ்க வளமுடன்!

28.8.08

ஜோதிட நூல் அறிமுகம் : அலெக்ஸாண்டர் முதல் ஜியா-உல் ஹக் வரை!


வித்தியாசமாக ஒரு இடுகையைத் தரும் பொருட்டு, ஜோதிட நூல் ஒன்றை
உங்களுக்கு இன்று அறிமுகம் செய்கிறேன்.

திரு.ரேவன சித்தப்பா என்னும் கல்லூரிப் பேராசியர் சரித்திரப்பாடங்களில் விற்பன்னர்
அந்தத் துறையில் கரைகண்டு சரித்திரப் பாடங்களைப் போதிக்கும் ஆசிரியராகப் பல
ஆண்டுகள் கல்லூரியில் பணியாற்றியவர். அதே நேரத்தில் ஜோதிடத்தில் மிகுந்த
நம்பிக்கை உடையவர்.

உலகப் புகழ் பெற்ற 60 பிரபலங்களின் சரித்திரத்தை ஆராய்ந்து அவர்களைப் பற்றி,
அவர்களுடைய காலத்துத்துச் ஜோதிடர்கள் சொன்னது என்ன? அதன்படி நடந்ததா?
என்று அசத்தலாக எழுதியுள்ளார்.

Blitz (Mumbai) , Sadhane (Bangalaore University), Sidda Ganga போன்ற சஞ்சிகை
களிலும், வார இதழ்களிலும் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.

1. அலெக்ஸாண்டர், 2 ஜூலியஸ் சீசர், 3.புத்தர், 4 ராணி மேரி 5. ராணி எலிஸபெத்
6. ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், 7 எட்வர்டு மன்னர், 8 .நெப்போலியன், 9 ஜவஹர்லால் நேரு.
10. ப்ரொஃபட் முகமது.11 அக்பர். 12, மர்லின் மன்ரோ 13. ஷேக் முஜிபிர் ரெஹ்மான்
14. ஜியா உல் ஹக் என்று 60 பிரபலங்கள் மற்றும் பிரெஞ்சுப் புரட்சி போன்ற பல
சம்பவங்களை, ஜோதிடம் மற்றும் சரித்திரப் பின்னணியில் அவர் எழுதியுள்ளார்.

அதாவது ஜோதிடன் சொன்னது என்ன? அதன்படி நடந்தது என்ன? என்பவற்றை
ஆதாரங்களோடு எழுதியுள்ளார்

நாம் எல்லாம் பகுத்து அறிபவர்கள் அதானால் நமக்கு சம்பவங்களைவிட ஆதாரங்கள்
முக்கியம்.

ஆதாரம் இல்லாமல் எழுதினால் நம்மைக் கிழித்துத் தொங்க விட்டு விடுவார்கள்.

இந்தப் புத்தகங்களில் நிறைய ஆதாரங்களோடு பேராசிரியர் மாய்ந்து மாய்ந்து எழுதியுள்ளார்

ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் படித்தால் மிகவும் சந்தோஷமடைவார்கள்.
அதனால் இதை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

விரும்பியவர்கள் தேடிப் பிடித்து, வாங்கிப் படியுங்கள்.

எங்கே தேடுவதா?

ஸிம்ப்பிள்: அந்தப் பதிப்பகத்திற்கே கடிதம் எழுதுங்கள் கிடைக்காமலா போய்விடும்?

இந்தப் புத்தகத்தை நான் வாங்கிய ஆண்டு 1992. (ஹைதராபாத் சென்றிருந்த சமயம்,
அங்கே விமான நிலையத்தில் இருந்த ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக் கடையில் இதை
வாங்கியதாக நினைவு.

பக்கங்கள் 92
அன்றைய விலை: ரூ.18:00

புத்தகத்தின் பெயர்: Alexander to Zia -Ul- Hag

ஆசிரியர்: H. Revanasiddappa (Reader in History, Siddaganga College, Tumkur, Karnataka)

பதிப்பகத்தின் பெயரும், முகவரியும்:

Shashi Prakashana,
Third Main,
K.R.Extension,
Tiptur - 572 202
Karnataka

அன்புடன்
வாத்தியார்




வாழ்க வளமுடன்!

21.3.07

சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்



சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல்

ஆகாயத்துக்கு அடுத்த வீடு

'ஆகாயத்துக்கு அடுத்த வீடு' என்னும் அசத்தலான
தலைப்பில் கவிஞர்.மு.மேத்தா அவர்கள் எழுதிய
கவிதை நூலிற்கு 2006ம் ஆண்டிற்கான சாகித்ய
அகாதமியின் விருது கிடைத்ததும், அதைக்கவிஞர்
பெற்றுக் கொண்டு தமிழுக்குப் பெருமை சேர்த்ததையும்
அனைவரும் அறிவோம்.

அந்த நூலைப் படிக்கவும், கவிஞருக்குக் கோவையில்
நட்ந்த பாராட்டு விழாவில் பங்கு கொள்ளவும்
ஒரு சேரப்பேறு சென்ற ஞாயிற்றுக்கிழமையன்று
(17.03.2007) அடியவனுக்குக் கிடைத்தது.

கவிஞர் மு.மேத்தா அவர்களின் அந்தக் கவிதைத்
தொகுப்பு நூல் படிப்பவர்களின் மனதில் படிக்கும்
போது ஏற்படுத்தும் இன்பத்தாக்கத்தை அடியவனின்
பார்வையில் கீழே கொடுத்துள்ளேன்.

நூல்நயம் அல்லது புத்தக விமர்சனம் என்று நீங்கள்
எடுத்துக் கொள்ளலாம்

புத்தகத்தைப் பிரித்தவுடன் 'இந்தியா என் காதலி''
என்னும் தலைப்பில் உள்ள கவிதையின் முதல் ஒன்பது
வரிகளைப் படித்தவுடனேயே நாம் நிமிர்ந்து உட்கார்ந்து
விடுவோம்!

அதில் கவிஞர் மேத்தா அவர்கள் இப்படித்
துவங்கியுள்ளார்

"உண்மையை நான்
ஒப்புக் கொள்கிறேன்
காதலித்து உன்னைக்
கட்டிக் கொள்ளவில்லை...
கட்டிக்
கொண்டதால்தான்
காதலித்துக்
கொண்டிருக்கிறேன்!"

தொடர்ந்து வரும் வரிகளில்,

"உன்
தர்பார் மண்டபங்களில்
நியாயங்கள்
தற்கொலை
செய்துகொள்ளும்
முன்பே
கொலை
செய்யப்படுகின்றன

சட்டங்கள் விசிலடிக்க
ஜனநாயகம்
கை தட்டுகிறது!"
என்று நாட்டு நடப்பை ஆதங்கத்தோடு
சிறப்பாகச் சொல்கின்றார்

அந்தத் தலைப்பின் கீழ் மேலும்
ஒன்பது பத்திகளில் நாட்டின்
அவலத்தை ஆணி அடிப்பதுபோல் சிறப்பாகச்
சொல்லிவிட்டுக் கடைசியில்
"கட்டிக்
கொண்டதால்தான்
காதலித்துக்
கொண்டிருக்கிறேன்!"
என்று முத்தாய்ப்பாய் முடிக்கின்றார்.

குற்றப் பத்திரிக்கை, வழுவமைதி, ஞானம்,
வாழ்க்கையென்பது, உயிர்பாடும் ஒப்பாரி, வரலாறு,
குடியரசு தினம், நதி, நீயும் நானும், பாடம், இன்னொரு
கடத்தல், எழுத்தெனப் படுவது, அகமே புறம், புறமே அகம்,
விளக்குகளின் விழா, ஒரே குரல், சிறு குறிப்பு வரைக,
கவிதையின் கதை, விழாக்காலம், நேரம், ஆகாயத்துக்கு
அடுத்த வீடு,தீண்டாமை, அன்பழைப்பு, கடலுடன் ஒரு
கலந்துரையாடல், மனக் கதவு, இதயத்தின் தொலைபேசி,
புன்னகைக்கும் புயல், தாய் மண்ணே வணக்கம்,
அவளுக்கு ஒரு ஆடை(சில்க் ஸ்மிதாவிற்கு
அஞ்சலியாக எழுதப்பெற்றது), நியாயங்கள், பொங்கும்
கனவுகள், ஓர் உரையாடல், வாழ்க்கை, கன்னி மாடம்,
தாய், கும்பகோணத்தில் ஒரு மகாவதம் (பள்ளித்
தீவிபத்தில் பலியான சிறார்களுக்கு அஞ்சலியாக
எழுதியது) கல்விக் கடைகள், சொற்பொழிவு, வெற்றித்
தூண், வெற்றியின் மறுபக்கம், கி.பி. 2000, இன்று முதல்,
சுவரொட்டித் தலைவர்கள், பிறவிக்கடன், நினைவு நாள்,
மதிப்பீடு, விடைபெறும் வேளை
என்று 48 ற்கும் மேற்பட்ட தலைப்புக்களில் அருமையான
கவிதைகள் இந்த நூலிற்குச் சிறப்பைச் சேர்க்கின்றன!

எளிமையான் சொற்களில் ஆழமான கருத்துக்களை
அசத்தலான வெளிப்பாட்டில் சொல்வதுதான் கவிஞரின்
தனிச் சிறப்பு

உதாரணம் கொடுத்துள்ளேன்:

1. தலைப்பு: குடியரசு தினம்
ஆளுநர் மாளிகையில்
விருந்து
அனைத்துக் கட்சிகத்
தலைவர்களுக்கும்!

பணியாற்றிக் கொண்டிருந்த
பணியாளர்கள் தமக்குள்
பேசிக் கொண்டனர்:

"யார்
யாரைச்
சாப்பிடப் போகிறார்களோ?"

2. தலைப்பு - மதிப்பீடு

எழுதிக் கொண்டிருந்தான்
விமர்சனங்கள் வந்தன....
எழுதாமல் இருந்தான்
விருதுகள் வந்தன!

எப்படி நச்' சென்று இருக்கிறது பார்த்தீர்களா?
அதுதான் திரு.மு.மேத்தா!

படித்து முடித்தவுடன் உவகை மேலிட, தமிழ்கூறும்
நல்லுலகத்தோர் அனைவரும் இதைப் படித்து மகிழ
வேண்டும் என்ற ஆதங்கத்தில் இதற்கு ஒரு விமர்சனம்
எழுதத் துணிந்தேன்.

அற்புதமாக எழுதப்பெற்றுள்ள இந்த நூல் 96 பக்கங்களைக்
கொண்டது. நூலில் உள்ள அத்தனை கவிதைகளுமே
முத்துக்கள்.

எல்லாவற்றையும் எடுத்து நான் எழுத விரும்பினாலும்
பதிப்பாளர்கள் தங்கள் காப்புரிமையை மீறி அனுமதிப்பார்களா
என்பது தெரியாது! அதேபோல மிகவும் அதிகமாக நெஞ்சைத்
தொட்ட வரிகளைக்குறிப்பிட்டு எழுதுவதென்றால் எதை
எழுதுவது எதை விடுவது என்ற திகைப்புத்தான் மேலிடும்.
ஒரு விருதுபெற்ற நூலில் அதைச் செய்வதும் சரியல்ல!

புத்தகத்தின் வடிவமைப்பும் வழவழ்ப்பான உயர்ந்த
காகிதத்தில் அச்சிட்டுக் கொடுத்துள்ள நேர்த்தியையும்,
ஒவ்வொரு பக்கத்திற்கும் அந்தப் பக்கத்திலுள்ள
கவிதைக்குத் தோதாகக் கொடுக்கப்பட்டுள்ள
படங்களையும் பாராட்ட வார்த்தைகள் இல்லை
என்பதுதான் நிதர்சனமான உண்மை!

ஆகவே ஒரே ஒருவழிதான் உண்டு. நூலை விலை கொடுத்து
வாங்கிப் படியுங்கள்.அதுதான் நெஞ்சைத் தொடும்படி எழுதிய
கவிஞர்.மு.மேத்தா அவர்களுக்கும், சிறப்பாக வெளியிட்ட
குமரன் பதிப்பகத்தார்க்கும் நாம் செய்யும் மரியாதையும்,
நன்றிக் கடனுமாகும்.

பக்கங்கள் 96 - விலை ரூ.60:00

பதிப்பாளர்களின் முகவரி:
குமரன் பதிப்பகம்
3, முத்துக்கிருஷ்ணன் தெரு,
பாண்டி பஜார்,
சென்னை - 600 017
தொலைபேசி எண்: 2815 3742, 2815 2559

நன்றி, வணக்கத்துடன்,
SP.VR.சுப்பையா
-------------------------------------------------------------------


21.1.07

இயேசு காவியம்

இயேசு காவியம் - ஆக்கம் - கவியரசர் கண்ணதாசன்

"தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது
யூத நிலத்தினிலே
சத்திய வேதம் நின்று நிலைத்தது
தாரணி மீதினிலே!
எத்தனை உண்மை வந்து பிறந்தது
இயேசு பிறந்ததிலே!
இத்தனை நாளும் மானிடன் வாழ்வது
இயேசுவின் வார்த்தையிலே!

மண்ணிடை இயேசு மறுபடி வருவார்
என்பது சத்தியமே!
புண்கள் இருக்கும் வரையில் மருந்து
தேவை நித்தியமே!
விண்ணர சமையும் உலகம் முழுவதும்
இதுதான் தத்துவமே!
எண்ணும் எழுத்தும் எல்லாம் அவரே
இயேசுவை நம்புவமே!"
- கண்ணதாசன்
-----------------------------------------------------------------
கவியரசர் கண்ணதாசன் அவர்களால் எழுதப்பெற்ற இறவாக்
காவியமான
'இயேசு காவியம்' படிப்பவர்களின் மனதில் படிக்கும்
போது ஏற்படுத்தும்
இன்பத்தாக்கத்தை அடியவனின் பார்வையில்
கீழே கொடுத்துள்ளேன்.


நூல்நயம் அல்லது புத்தக விமர்சனம் என்று நீங்கள் எடுத்துக்
கொள்ளலாம்


புத்தகத்தைப் பிரித்தவுடன் 'என்னுரை' பகுதியில் தன்னுரையாகக்
கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதியுள்ள வரிகளைப்
படித்தவுடனேயே
நாம் நிமிர்ந்து உட்கார்ந்து விடுவோம்!

"இயேசு காவியம் - பேச்சுவாக்கிலே துவங்கிய ஒரு முயற்சி.
கலைக்காவிரியின் சார்பில் தந்தையர் என்னைச் சந்தித்துப்
பேசிய பொழுதும், திரு.சந்திரமோகன் என்னை விடாப்பிடி
யாகக் குற்றாலத்திற்குக் கூட்டிச் சென்றபொழுதும் இது

ஏதோ ஒரிரு நாள் வேலை என்றே நான் எண்ணியிருந்தேன்.

ஆனால், வேலை செய்ய உட்கார்ந்தபொழுது பயம் என்னைப்
பிடித்தது. 'என்ன பிரம்மாண்டமான வேலையில் நாம்
கைவைத்து விட்டோம்' என்று பீதியடைந்தேன்.இயேசு பெருமான்
அருள் பாலித்தார்! நான் இதுவரை உழைக்காத வகையில்,
தொடர்ந்து பதினைந்து நாட்கள், தினமும் எட்டு மணி நேரம்
வேலை செய்து இதை முடித்தேன் என்றால் அது அவரது
கருணையே!"


காவியம் எழுதப்பெற்ற கதைக்கு என்னதொரு விளக்கம் பார்த்தீர்களா?

மேலும் கவியரசர் சொல்கின்றார்,"பலர் என்னை இறவாக்
காவியம்
ஒன்று எழுதுங்கள்
என்று வற்புறுத்தியதுண்டு.அந்த
இறவாக் காவியம் 'இயேசு காவியம்'தான் என்று நான்
உறுதியாகக் கூறமுடியும்"


இந்தக் காவியம் உருவாவதற்குக் கவியரசருக்கு உறுதுணையாக
இருந்த
அன்பர் திரு.ஜே.பி.ஸ்தனிஸ்லாஸ் அவர்கள் மனம்
நெகிழ்ந்து இப்படிச சொல்கின்றார்.


"தமிழகத்தின் தனிப்பெரும் கவிஞராய் விளங்கிய கண்ணதாசன்
அவர்கள்
தமிழ்கூறும் நல்லுலகிலுள்ள அனைவருக்கும்
பொதுவான சொத்து.அந்த சொத்தில் நமக்கும் உரிமை
உண்டு என்று எண்பித்து, பேருவகை கொண்டு,இறைமகன்
இயேசுவின் புகழ் பாடும்படி அழைத்தோம்.கிறிஸ்துவின்
வரலாற்றையே காவியமாக வடிக்க வேண்டினோம். கவிஞரும்
அதை உடனே ஏற்று அற்புதமாக எழுதிக்கொடுத்தார்


குற்றலாம் அருவி தோற்கும் அளவிற்குக் கவிதை வெள்ளம்
அங்கே
கரைபுரண்டோடியது!"

மேலும் அவர் இந்த நூலைப் பற்றி, "தம் வேலை முடிந்ததும், கவிஞர்
அவர்கள்
காவியத்தை, விவிலியத்திலும் தமிழிலும் தேர்ச்சி பெற்ற
கிறிஸதுவ அறிஞர்கள்
ஆய்ந்து ஆலோசனை கூறவேண்டுமென
விரும்பினார். தனது நூல், யாராலும்
குறைசொல்ல முடியாத
அளவுக்குச் சிறப்புடன் அமைய வேண்டுமென்பதில்

அவர் கருத்தாயிருந்தார்" என்கின்றார்.

அதன்படி காவிய நூல் அச்சாவதற்கு முன்பு, பதினோரு பேர்கள்
கொண்ட
ஆய்வுக்குழு அமைக்கப்பெற்று, அவர்கள் சமர்ப்பித்த
சில திருத்தங்கள்
கவியரசர் அவர்களால் சரி செய்யப்பெற்றுப்
பின் பதிப்பிக்கப் பெற்றதாம்.
அந்தக் குழுவில் எட்டு அருள்
திருவாளர்களும், மூன்று தமிழ் அறிஞர்களும்
கூடிப் பணியாற்றி
யிருக்கிறார்கள் எனும்போது இந்த நூல் உருவான
பிரம்மாண்டம்
கண்ணில் வந்து நிற்கின்றது!


1981ம் ஆண்டு ஜூன் மாதம், கவியரசர் மேல் நாட்டுப் பயணம்
மேற்கொள்
வதற்குச் சில தினங்கள் முன்பு அவருடைய ஒப்புதலைப்
பெற்ற புத்தகம்
அச்சிற்குத் தயாரானதாம். தாயகம் திரும்பியதும்,
சிறப்பான முறையில்
வெளியீட்டு விழா நடத்தவேண்டும் என்று
கவியரசர் பெரிதும் விரும்பினாராம்.

ஆனால் இறைத்திட்டம் வேறு வகையில் அமைந்துவிட்டது.

ஆமாம், அவர் தாயகம் திரும்பாமலேயே இறைவனடி சேர்ந்துவிட்டார்.

அதைப் பற்றித் தன் கண்ணில் நீர் திரையிட திரு.ஜே.பி.ஸ்தனிஸ்லாஸ்
இப்படிக் கூறுகின்றார்.

"இருப்பேன் பலநாள் என்றானே - எம்மை
ஏய்த்தது போல் இன்று சென்றானே - அவன்
சிரிக்கும் அழகைப் பார்ப்பதற்கே - அந்த
தேவன் அருகில் அழைத்தானோ!"

என்னவொரு அற்புதமான மனவெளிப்பாடு பாருங்கள்!

1982ம் ஆண்டு பதிப்பிக்கபெற்ற இந்த நூல் இதுவரை ஆறு
பதிப்புக்களைக்
கண்டுள்ளதோடு, ஐந்து லட்சம் பிரதிகளுக்கு
மேலும் விற்றுள்ளது. ]


இந்த அரிய நூலைப் படிக்கும் வாய்ப்பை எனக்கு இறைவன்
இன்றுதான்
நல்கினார்.

அடியவன் படித்து மகிழ்ந்து எழுதுவதற்கு 2002ம் ஆண்டு
வெளிவந்த
பதிப்பு உதவியது. அதன் பதிப்பாசிரியர்
திரு.செ.பிலோமின்ராஜ் அவர்கள்,
"இறைமகன் இயேசுவின்
வாழ்வையும், வாக்கையும் கவிதை வடிவில் படித்து

மகிழ்வதில் மக்களின் தாகம் இன்னும் தணியவில்லை
என்பதை இதுவரை
வெளியான பதிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன!"
என்று தன் பதிப்புரையில் சிறப்பாகக் கூறியுள்ளார்

படித்து முடித்தவுடன் உவகை மேலிட, தமிழ்கூறும் நல்லுலகத்தோர்
அனைவரும் இதைப் படித்து மகிழ வேண்டும் என்ற ஆதங்கத்தில்
இதற்கு
ஒரு விமர்சனம் எழுதத் துணிந்தேன்.

இயேசுநாதரின் வரலாறு கவிதை வடிவில் அற்புதமாக எழுதப்
பெற்றுள்ள
இந்த நூல் 400 பக்கங்களைக் கொண்டது. நூலில்
உள்ள அத்தனை கவிதைகளுமே
முத்துக்கள். எல்லாவற்றையும்
எடுத்து நான் எழுத விரும்பினாலும்
பதிப்பாளர்கள் தங்கள்
காப்புரிமையை மீறி அனுமதிப்பார்களா என்பது தெரியாது!

அதேபோல மிகவும் அதிகமாக நெஞ்சைத் தொட்ட வரிகளைக்
குறிப்பிட்டு
எழுதுவதென்றால் எதை எழுதுவது எதை விடுவது
என்ற திகைப்புத்தான்
மேலிடும். ஒரு காவியத்தில் அதைச்
செய்வதும் சரியல்ல!


ஆகவே ஒரே ஒருவழிதான் உண்டு. நூலை விலை கொடுத்து
வாங்கிப் படியுங்கள்.
அதுதான் எழுதிய கவியரசருக்கும்,
வெளியிட்டவர்களுக்கும் நாம் செய்யும்

மரியாதையும், நன்றிக் கடனுமாகும்.

பதிப்பாளர்களின் முகவரி:
கலைக்காவிரி,
49-J, பாரதியார் சாலை,
திருச்சிராப்பள்ளி - 620 001

நன்றி, வணக்கத்துடன்,
SP.VR.சுப்பையா
-------------------------------------------------------------------