
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
சனிப் பெயர்ச்சி!
சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும்
இல்லை என்பார்கள்.
சனி என்ன நம் மாமனாரா? பெண்ணைக் கொடுத்தவரா? அவராக
வந்து கொடுப்பதற்கு?
நம் ஜாதகத்தின் படி என்னென்ன பலாபலன்கள் உள்ளதோ - அதாவது
நம் கர்மவினைப்படி என்ன பலன்கள் store ஆகியுள்ளதோ - அதைக்
கொடுப்பவர் அவர். அவர் store keeper. அவ்வளவுதான். அவரைக் கண்டு
பயப்பட வேண்டாம்.
அவரில்லாமல் யாருடைய வாழ்க்கையும் இங்கே நடக்காது.
ஆமாம், அவர்தான் ஆயுள்காரகர். அயுள் முடிந்துவிட்டால், ஜாதகனை
ஒரு விநாடிகூட, இங்கே இருக்க அவர் அனுமதிக்க மாட்டார்.
வலுக்கட்டாயமாக போர்டிங் பாஸ் கொடுத்து அனுப்பி விடுவார்.
எங்கே?
எங்கே அனுப்பிவைப்பார் என்பது தெரியாது. இந்த உலகத்தைவிட்டு
அனுப்பி வைத்து விடுவார். அது மட்டும் தெரியும்.
”வந்தது தெரியும், போவது எங்கே?
வாசல் நமக்கே தெரியாது!”
என்று கவியரசர் பாடி வைத்துள்ளார்.
அதோடு, தொடர்ந்து சொல்லியுள்ளார்:
”உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது - இது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா...!”
கவியரசர் சொன்ன அந்தக் கோட்டைதான் எங்கே உள்ளது என்பது
தெரியவில்லை:-)))
ஆகவே சனீஷ்வரன் நமக்கு முக்கியமானவர். அவருக்கு இன்னொரு
இலாக்காவும் இருக்கிறது. அவர்தான் தொழில்காரகன், ஜீவனகாரகன்.
ஒரு ஜாதகன் தன் வாழ்க்கையை நடத்துவதற்கு உரிய தொழிலை அல்லது
வேலையைக் கொடுப்பவர் அவர்தான்.
ஆகவே, அவர் அங்கேயும் நமக்கு முக்கியமானவர்
=====================================================
++++++ ஒரு ஜாதகனுக்கு அவன் பார்க்கும் தொழிலில் அல்லது வேலையில்
பிரச்சினை என்றால். அது ஏன்? எப்போது அந்த நிலை மாறும் என்பதைப்
பார்க்க ஒரு ஃபார்முலா உள்ளது.
10ஆம் வீட்டை, லக்கினமாக எடுத்துக் கொண்டு, அன்றையத் தேதியில்
கோச்சார சனீஷ்வரன் அந்த வீட்டிலிருந்து எங்கே இருக்கிறான் என்று
பாருங்கள். அந்த வீட்டிற்கு 6, 8,12ஆம் வீடுகளில் அவன் சஞ்சாரம் செய்தால்,
பிரச்சினைதான். அந்த வீட்டை விட்டு நகரும் வரை பிரச்சினை தீராது.
பதவி நீக்கம், பதவி பறிமுதல், பதவியிலிருந்து கீழ் நிலைக்குத் தள்ளப்படுதல்,
தண்ணீர் இல்லாக் காட்டிற்கு மாற்றப்படுதல் என்று எது வேண்டுமென்றாலும்
நடக்கும். அந்த வீட்டிற்கு 11ல் சனி சஞ்சாரம் செய்தால், பதவி உயர்வு,
பதவியில் மேன்மை, பெருமை எல்லாம் கிடைக்கும்
----------------------------------------------------
அதுபோல எப்போது டிக்கெட் கிடைக்கும் என்பதைச் சொல்ல முடியுமா?
அதற்கு ஏதாவது சூத்திரம் இருக்கிறதா?
++++++இருக்கிறது. அது ஒருவரிச் சூத்திரம். அதை இங்கே சொல்ல முடியாது.
வாசகர்கள் என்னைப் பிறாண்டி எடுப்பதோடு. எனக்கு டிக்கெட் கொடுத்து
விடுவார்கள். ஆகவே, சொல்ல வேண்டிய இடத்தில், சொல்ல வேண்டிய
நேரத்தில் அதைச் சொல்லி உங்களுக்கு அறியத் தருகிறேன். பொறுத்திருங்கள்
--------------------------------------------------------
சரி விஷயத்திற்கு வருகிறேன்
செப்டம்பர் 26ஆம் தேதி சனிக்கிழமை, மதியம் மணி 3.18க்கு சனீஷ்வரன்
சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்குள் நுழைகிறார்.
இந்த சனிப் பெயர்ச்சியினால் ஒவ்வொரு ராசிதாரரின் வாழ்விலும் ஏற்படக்கூடிய
மாற்றங்கள், பாதிப்புகள் அதற்கான பரிகாரங்கள் ஆகியன ராசி வாரியாக
தொகுத்து கீழே உள்ள தளத்தில் கொடுக்கப்பெற்றுள்ளது!
விரிவான சனிப்பெயர்ச்சி (பொதுப்பலன்களுக்கான) தளம் அது!
உங்கள் ராசிக்கான பகுதியைக் க்ளிக் செய்து, படித்து முழு விவரங்களையும்
அறிந்து கொள்ளுங்கள். அதற்கான சுட்டி கீழே உள்ளது.
----------------------------------------------------
இந்தப் பொதுப்பலன்களைப் பற்றி ஒரு விஷயம்.
அவைகள் பொதுவானவை அவ்வளவுதான்.
அவர்கள், பத்திரிக்கை விற்பதற்காகவும், சிலர் புத்தகங்கள் விற்பதற்காகவும்
பொதுப் பலன்களை எழுதுகிறார்கள்.
நாமும் காசு கொடுத்து வாங்கி, மாய்ந்து மாய்ந்து படிக்கிறோம்.
அது எப்படி நமக்குப் பொருந்தும்?
அம்பானிக்கும், அனுஷ்கா சர்மாவிற்கும், அஜீத்திற்கும், அய்யம்பேட்டை
கலிவரதனுக்கும், அம்மா மண்டபம் ரங்கராஜனுக்கும், ஒரே ராசி என்று வைத்துக்
கொள்ளூங்கள், இந்தப் பொதுப் பலன்களின் படியா, அவர்கள் அனைவருக்கும்
இன்ப, துன்பங்கள் வரப்போகின்றன. இல்லை!
110 கோடி மக்கள் வகுத்தல் 12 ராசிகள் = 9.16 கோடி மக்கள்
இந்த 9.16 கோடி மக்களுக்கும் எப்படிப் பலன் ஒருவிதமாகப் பொருந்தும்?
++++++அவரவர்களின் ஜாதகப்படிதான் பலன்கள் அமையும்.
1. உங்கள் ஜாதகத்தில் ஏகப்பட்ட யோகங்கள் இருந்து, அதற்கான தசாபுத்தி
நடந்து கொண்டிருந்தால், இந்தக் கோச்சாரங்கள் வழிவிட்டு விடும்.
2. நல்ல தசை அல்லது புத்தி நடந்து கொண்டிருந்தாலும் கோள்சாரங்கள்
பாதிப்பை ஏற்படுத்தாது.
சுருங்கச் சொன்னால், கோள்சாரத்தைவிட, தசை/புத்தி முக்கியம்.
ஒரு சாலையில் முதலமைச்சர் வருகிறார். அவருக்கு முன், அவருடைய பைலட்
மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் வருகின்றன என்றால் மொத்த சாலையும்
துடைக்கப்பட்டு, வழி ஏற்படுத்தப் பட்டிருக்கும் இல்லையா? ஏன் தப்பித்தவறி
நீங்கள் சென்றாலும், வழி விட்டு ஒதுங்கி நிற்ப்பீர்கள் இல்லையா?
அதுபோலத்தான் இதுவும்.
------------------------------------------------------------------
பெயர்ச்சி என்றவுடன், சனீஷ்வரன் மூட்டை முடிச்சுகளைக் கட்டி எடுத்துக்
கொண்டு வீடு மாறுகிறார் என்று நினைக்க வேண்டாம்.
அவருக்கு எதற்கு மூட்டை, முடிச்சு?
வானவெளியில், 121 பாகையில் இருந்து 150 பாகைகள் வரை, சிம்ம ராசியில்
இதுவரை சஞ்சாரம் செய்தவர், இப்போது 151 பாகைக்குள், தன் சுழற்சியின் மூலம்
நுழைகிறார். அது கன்னி ராசி. அங்கே அவர் இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு
வாசம் செய்வார்.
அவர் ஒரு பாகையைக் கடக்க எடுத்துக் கொள்ளூம் காலம் ஒரு மாதமாகும்.
கன்னிராசியின் 30 பாகைகளையும் அவர் கடப்பதற்கு 30 மாதங்களாகும்.
அதுவரை அங்கே இருப்பார். அங்கே மடக்கு நாற்காலியைப் போட்டு உட்கார்ந்து
கொண்டு செய்ய வேண்டிய பணிகளைச் செவ்வனே செய்வார்.
--------------------------------------------------------
இந்த சனிப்பெயர்ச்சியால், அதிக நன்மைகளை அடைய உள்ளவர்கள், மகர
ராசிக் காரர்களும், கடக ராசிக்காரர்களும் ஆவார்கள்.
1
மகர ராசிக்காரர்கள், அஷ்டமச் சனியால் (அதாவது 8ஆம் இடத்துச் சனியால்)
பலவிதமான தொல்லைகளை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். அந்தத்
தொல்லைகள் அனைத்தும் நீங்கிவிடும். வாழ்க்கை வளம் பெறும், மகிழ்ச்சி
உடையதாக இருக்கும்.
+++++++++++++++++++++++++++++++++++++++
2
அதுபோல கடக ராசிக்காரர்களும், இதுவரை, ஏழரைச் சனியால் அவதிப்
பட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த அவதிகள் முழுமையாக நீங்கி விடும்.
வாழ்க்கை வளம் பெறும், மகிழ்ச்சி உடையதாக மாறும்.
இதுவரை பாதச்சனியாக அமர்ந்து அவர்களைப் பலவழிகளிலும் அலைக்கழித்த
சனிஷ்வரன் யோகம் தரும் வீடான 3ஆம் வீட்டில் (அவருக்கு அது நல்ல வீடு)
அமர்ந்து, புகழையும், பாராட்டையும் அவர்களுக்குத் தருவார்.
+++++++++++++++++++++++++++++++++++++++++
3.
மேஷ ராசிக்கு ஆறாம் இடத்திற்கு சனி வருகிறார். அந்த ராசிக்காரர்களுக்கு
எல்லா நன்மைகளும் கிடைக்கும்.
இதுவரை 5ஆம் வீட்டில் அமர்ந்து கொண்டு, அல்லல்படுத்திய சனீஷ்வரன்,
விபரீத வீடான 6ஆம் வீட்டில் அமர்ந்து சகல யோகங்களையும் தர உள்ளார்.
++++++++++++++++++++++++++++++++++++++++
4.
விருச்சிக ராசிக்குப் பதினொன்றாம் இடத்திற்கு சனி வருகிறார்.
அந்த ராசிக்காரர்களுக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.
இதுவரை 10ஆம் வீட்டில் நின்ற சனிபகவான், லாப வீடான 11ஆம் வீட்டில்
அமர்ந்து பல நன்மைகளைச் செய்ய உள்ளார்.
+++++++++++++++++++++++++++++++++++++++
5.
மீன ராசிக்காரர்களுக்கு 7ஆம் இடத்திற்கு சனி வருகிறார். அவர்களுக்கு
தொல்லைகள் அவ்வப்போது தலையைக் காட்டும். இதுவரை ராசிக்கு 6வது
வீட்டில் அமர்ந்து பல நன்மைகளைச் செய்த சனீஷ்வரன், ராசிக்கு 7வது வீட்டில்
நுழைந்து தலைவலியைத் தரப்போகிறார். வீண் அலைச்சல், நஷ்டங்கள் ஏற்படும்.
நன்மைகள் அதிகமாக இருக்காது!
+++++++++++++++++++++++++++++++++++++++
6.
கும்ப ராசிக்காரர்களுக்கு சனி, 8ஆம் இடத்திற்கு சனி வருகிறார்.
அவர்களுக்குத் தொல்லைகள் முதுகில் ஏறி சவாரி செய்யும்.
இந்த ராசிக்காரர்களுக்குத்தான் அதிகமான தொல்லைகள், பிரச்சினைகள்
ஏற்படும். அஷ்டமச்சனி. அதை நினைவில் வையுங்கள்
இதுவரை உங்களின் ராசிக்கு 7வது வீட்டில் இருந்தவர் அஷ்ட்டமத்துச் சனியாக
இருந்து செயல்படப் போகிறார்.அஷ்ட்டமத்துச் சனி அவஸ்தை தான்.
அகப்பட்டவனுக்கு அஷ்ட்டமத்துச் சனி என்பார்கள்!
+++++++++++++++++++++++++++++++++++++++++
7.
துலாம் ராசிக்காரர்களுக்கு ஏழரைச் சனி ஆரம்பம். முதல் இரண்டரை
ஆண்டுகளில் பலவிதமான விரையங்கள் ஏற்படும். விரையம் = Loss
+++++++++++++++++++++++++++++++++++++++
10.சிம்மம் - 2ல் பாதச்சனி (ஏழரையில் கழிவுச்சனி)
11. கன்னி - 1ல் ஜன்மச்சனி (ஏழரையில் 2வது காலகட்டம்)
இவ்விரண்டு ராசிக்காரர்களுக்கும் விட்டகுறை, தொட்டகுறை.
ஏழரைச் சனியின் பாதிப்புக்கள் தொடரும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
8. ரிஷபம் - 5ல் கோள்சாரச்சனி (கோள்சாரத்தில் மனஸ்தானம்)
9. மிதுனம் - 4ல் (சுகஸ்தானத்தில் கோள்சாரச்சனி)
12. தனுசு - 10 ல் கோள்சாரக் கேந்திரச்சனி
இந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் கலந்த பலன் (Mixed Results)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சனியின் கோச்சார சஞ்சாரத்தால் கிடைக்கும் நன்மைகள் அல்லது
தீமைகளின் அளவைச் சொல்ல முடியுமா? அதற்கு ஏதாவது சூத்திரம்
இருக்கிறதா?
++++++இருக்கிறது. உங்கள் ஜாதகத்தில் எந்தந்த இடங்களில் 30ம்
அதற்கு மேற்பட்ட பரல்களும் உள்ளன என்பதைக் குறித்து வைத்துக்
கொள்ளுங்கள். அந்த இடங்களில் சஞ்சார சனியால் எந்தவிதமான
உபத்திரவங்களும் இருக்காது.
ஏழரைச் சனியின் இடங்களான 12, 1, 2ஆம் வீடு ஆகிய மூன்று இடங்களிலும்,
30ம் அதற்கு மேற்பட்ட பரல்களும் இருந்தால், ஏழரைச் சனி, ஜாதகனை
ஒன்றும் செய்யாது. அந்த ஏழரை ஆண்டுகளும் ஜாதகன் செளக்கியமாக
இருப்பான்.
அதற்கு மாறாக சனி சஞ்சாரம் செய்யும் இடம் 25 பரல்களூம், அல்லது
அதற்குக் குறைவான பரல்களைக் கொண்டிருந்தால் கோள்சாரச் சனி,
ஜாதகனைப் படுத்தி எடுக்கும்.
------------------------------------------------------------------
முழுப் பலன்களுக்கான சுட்டி
இங்கே!
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!