திரையிசை: சந்திரனையும் சூரியனையும் அஞ்சல்காரர்களாக்கிய கவிஞர்
ரசித்த திரையிசைப் பாடல்
காதல் பாடல்களை எத்தனை எத்தனை ரசனையுடனும்,
கற்பனையுடனும் கவிஞர்கள் எழுதிக் கலக்கியுள்ளார்கள்.
அப்படி நல்ல வளமான கற்பனையுடனும், எளிமையான
வரிகளுடனும் அமைந்த பாடல் ஒன்றின் வரிகளையும்,
காணொளியையும் இன்று பதிவிட்டுள்ளேன். கச்சிதமான
இசையமைப்புடன் கண்ணையும் உள்ளத்தையும் கவரும்
விதமாகப் பாடல் படமாக்கப்பட்டுள்ளது,
அனைவரும், கேட்டு, பார்த்து மகிழுங்கள்,
அன்புடன்,
வாத்தியார்
-----------------------------------
காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டு வா
பேனா மையோ தீர்ந்திடும்
சந்திரனும் சூரியனும்
அஞ்சல் காரார்கள்
இரவு பகல் எப்பொழுதும்
அஞ்சல் உன்னை சேர்ந்திடும்
காதல்…
கடிதத்தின் வாரத்தைகளில்
கண்ணா நான் வாழ்கின்றேன்
பேனாவில் ஊற்றி வைத்தது
எந்தன் உயிரல்லோ ?
பொன்னே உன் கடிதத்தை
பூவாலே திறக்கின்றேன்
விரல் பட்டால் உந்தன்
ஜீவன் காயம் படுமல்லோ
அன்பே உந்தன் அன்பில்
ஆடிப் போகின்றேன்
செம்பூக்கள் தீண்டும் போது
செத்துச் செத்து பூப்பூக்கின்றேன்
காதல்…
கண்ணே உன் கால் கொலுசில்
மணியாக மாட்டேனா?
மஞ்சத்தில் உறங்கும் போது
சிணுங்க மாட்டேனா?
காலோடு கொலுசல்ல
கண்ணோடு உயிரரானாய்
உயிரே நான் உறங்கும்போது
உறங்க மாட்டாயா?
தப்பு செய்ய பார்த்தால்
ஒப்புக் கொள்வாயா?
மேலாடை நீங்கும் போது
வெட்கம் என்ன முந்தானையா ?
காதல்…
----------------------------------------
"கண்ணே உன் கால் கொலுசில்
மணியாக மாட்டேனா?
மஞ்சத்தில் உறங்கும் போது
சிணுங்க மாட்டேனா?" என்ற வரிகள் பாடலின் முத்தாய்ப்பான வரிகள்
-----------------------------
படம் : ஜோடி (1999)
பாடல் : காதல் கடிதம் தீட்டவே
பாடலாசிரியர் : வைரமுத்து
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்கள் : எஸ் ஜானகி, உன்னி மேனன்
நடிப்பு: பிரசாந்த், சிம்ரன்
-------------------------------------
பாடலின் காணொளி வடிவம்:
our sincere thanks to the person who uploaded the clipping in the net
======================================
வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!











