மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label புதுப் பாடல். Show all posts
Showing posts with label புதுப் பாடல். Show all posts

24.11.14

திரையிசை: சந்திரனையும் சூரியனையும் அஞ்சல்காரர்களாக்கிய கவிஞர்


திரையிசை: சந்திரனையும் சூரியனையும் அஞ்சல்காரர்களாக்கிய கவிஞர்

ரசித்த திரையிசைப் பாடல்

காதல் பாடல்களை எத்தனை எத்தனை ரசனையுடனும்,
கற்பனையுடனும் கவிஞர்கள் எழுதிக் கலக்கியுள்ளார்கள்.
அப்படி நல்ல வளமான கற்பனையுடனும், எளிமையான
வரிகளுடனும் அமைந்த பாடல் ஒன்றின் வரிகளையும்,
காணொளியையும் இன்று பதிவிட்டுள்ளேன். கச்சிதமான
இசையமைப்புடன் கண்ணையும் உள்ளத்தையும் கவரும்
விதமாகப் பாடல் படமாக்கப்பட்டுள்ளது,

அனைவரும், கேட்டு, பார்த்து மகிழுங்கள்,

அன்புடன்,
வாத்தியார்
-----------------------------------
காதல் கடிதம் தீட்டவே
மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டு வா
பேனா மையோ தீர்ந்திடும்

சந்திரனும் சூரியனும்
அஞ்சல் காரார்கள்
இரவு பகல் எப்பொழுதும்
அஞ்சல் உன்னை சேர்ந்திடும்

காதல்…

கடிதத்தின் வாரத்தைகளில்
கண்ணா நான் வாழ்கின்றேன்
பேனாவில் ஊற்றி வைத்தது
எந்தன் உயிரல்லோ ?

பொன்னே உன் கடிதத்தை
பூவாலே திறக்கின்றேன்
விரல் பட்டால் உந்தன்
ஜீவன் காயம் படுமல்லோ

அன்பே உந்தன் அன்பில்
ஆடிப் போகின்றேன்
செம்பூக்கள் தீண்டும் போது
செத்துச் செத்து பூப்பூக்கின்றேன்

காதல்…

கண்ணே உன் கால் கொலுசில்
மணியாக மாட்டேனா?
மஞ்சத்தில் உறங்கும் போது
சிணுங்க மாட்டேனா?

காலோடு கொலுசல்ல
கண்ணோடு உயிரரானாய்
உயிரே நான் உறங்கும்போது
உறங்க மாட்டாயா?

தப்பு செய்ய பார்த்தால்
ஒப்புக் கொள்வாயா?
மேலாடை நீங்கும் போது
வெட்கம் என்ன முந்தானையா ?

காதல்…
----------------------------------------
"கண்ணே உன் கால் கொலுசில்
மணியாக மாட்டேனா?
மஞ்சத்தில் உறங்கும் போது
சிணுங்க மாட்டேனா?"  என்ற வரிகள் பாடலின் முத்தாய்ப்பான வரிகள்
-----------------------------
படம் : ஜோடி (1999)
பாடல் : காதல் கடிதம் தீட்டவே
பாடலாசிரியர் : வைரமுத்து
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்கள் : எஸ் ஜானகி, உன்னி மேனன்
நடிப்பு: பிரசாந்த், சிம்ரன்
-------------------------------------
பாடலின் காணொளி வடிவம்:


our sincere thanks to the person who uploaded the clipping in the net
======================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

9.3.12

Cinema காதல் வலியும் சூராவளியும்!




Cinema காதல் வலியும் சூராவளியும்!

நெஞ்சைத் தொட்ட புதுப் பாடல் எண்.9
படம்: வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
பாடல்: காடு திறந்தே கிடக்கின்றது 
-------------------------------
கானொளி;
http://youtu.be/ymeTiEXpYM0





பாடல் வரிகள்:

காடு திறந்தே கிடக்கின்றது
காற்று மலர்களைப் புடைக்கின்றது


கண்கள் திறந்தே கிடக்கின்றது
காதல் உயிர்களை உடைக்கின்றது
அடடா நெஞ்சில் ஒரு காதல் வலி பூவில் ஒரு சூராவளியோ


ஒ ஓ 


நெஞ்சை விட்டு வந்த வார்த்தை ஒன்று தொண்டைக்குள் சூழ் கொண்டதோ
உன்னை விட்டு உடல் மீளவில்லை என் கால்கள் வேர் கொண்டதோ


பூமிக்கு வந்த பனித் துளி நான்
சூரியனே என்னைக் குடித்துவிடு


யுகம் யுகாமாய் நான் எரிந்து விட்டேன்
பனித் துளியே என்னை அனைத்து விடு


உறவே உயிரே
உணர்ந்தேன்
நெஞ்சில் வரும் காதல் வலி பூவில் ஒரு சூராவளியோ 


சிற்றின்பத்தின் சின்ன வாசல் வழி பேரின்பம் நாம் அடைவோம்
கால் தடங்கள் அற்ற பூமியிலே காற்றாக நாம் நுழைவோம்


சித்திரை மாதத்தை நான் நனைத்து கோடையில் உனக்கொரு குளிர் கொடுப்பேன்
மார்கழி மாதத்தை நான் எரித்து முன்பனிக் காலத்தில் அனல் கொடுப்பேன்


அடியே சகியே சுகியே
நெஞ்சில் வரும் காதல் வழி பூவில் ஒரு சூராவளியோ 


காடு திறந்தே கிடக்கின்றது
காற்று மலர்களை புடைக்கின்றது
கண்கள் திறந்தே கிடக்கின்றது


காதல் உயிர்களை உடைக்கின்றது
அடடா நெஞ்சில் ஒரு காதல் வலி பூவில் ஒரு சூராளியோ
ஒ ஓ
---------------------------
பாடல் காடு திறந்தே கிடக்கின்றது
படம்: வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்
பாடல் வரிகள்: கவிஞர் வைரமுத்து
இசை: பரத்வாஜ்
பாடியவர்கள்: ஹரிஹரன், சாதனா சர்கம்
ஆண்டு 2004
-----------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

25.2.12

Cinema காதல் சொல்வது உதடுகள் அல்ல சம்பளச் சீட்டுடா தலைவா!


Cinema காதல் சொல்வது உதடுகள் அல்ல சம்பளச் சீட்டுடா தலைவா!

காதல் வயப்படுவது பெரும்பாலும் ஈர்க்கின்ற அழகை வைத்துத்தான். அதெல்லாம் ஒரு காலம். இப்போதெல்லாம் பார்க்கின்ற வேலையும், கிடைக்கின்ற சம்பளத்தையும் வைத்துத்தான் காதல் வசப்படுகின்றது. இன்றைய பொருளாதார சூழ்நிலையில் இரு பாலரும் தெளிவாக இருக்கிறார்கள். அதில் தவறொன்றும் இல்லை. கல்யாணம் செய்த பிறகு ஒண்டிக்குடித்தனத்தில் ஓட்டு வீட்டில் அவதிப்படக்கூடாது இல்லையா? ஆகவே அது சரிதான்.

அன்புடன்
வாத்தியார்
------------------------------------
நெஞ்சைத் தொட்ட புது பாடல் எண்.8
படம்: பத்ரி
பாடல்:  காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள்தான் தலைவா
------------------------------------------
காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள் தான் தலைவா
கண்கள் சொல்வதும் வார்த்தைகள் அல்ல கவிதைகள் தலைவா
கவிதை என்பது புத்தகம் அல்ல பெண்கள் தான் சகியே
பெண்கள் யாவரும் கவிதைகள் அல்ல நீ மட்டும் சகியே


அடடா இன்னும் என் நெஞ்சம் புரியலையா காதல் மடையா
இது என்னடி இதயம் வெளியேறி அலைகிறதே காதல் இதுவா
எப்படி சொல்வேன் புரியும் படி ஆளைவிடுடா
மன்னிச்சுக்கடி காதல் செய்வேன் கட்டளைப்படி
(காதல்..)


படப்படக்கும் எனது விழி பார்த்து நடந்துக்கணும் சொல்வது சரியா
தவறு செய்தால் முத்தம் தந்து என்னை திருத்திக்கணும் தண்டனை சரியா
எப்பொழுதெல்லாம் தவறு செய்வாய் சொல்லிவிடுடா
சொல்லுகிறேன் இப்போது முத்தம் கொடுடி
(காதல்..)
----------------------------------
படம்: பத்ரி (2001)
நடிப்பு: விஜய், பூமிகா சாவ்லா
இசை: ரமணா கோகுலா
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், சுனிதா
பாடலாக்கம்: கவிஞர்.பழநிபாரதி
இயக்குனர்: P.A.அருண் பிரசாத்

காணொளி:

http://youtu.be/xyHNJnFYF2Y
Our sincere thanks to the person who uploaded the video clipping



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

18.2.12

Cinema உனக்கு நான் எனக்கு நீ என்று உட்கார்ந்திருந்தால் பூவா'விற்கு என்னடா பண்ணுவது?

படத்தின் நாயகனும் நாயகியும்
Cinema உனக்கு நான் எனக்கு நீ என்று உட்கார்ந்திருந்தால் பூவா'விற்கு என்ன (டா) பண்ணுவது?

காதல் வயப்பட்டவர்களுக்கு, தங்களின் காதல் கிறக்கத்தில் எதுவும் கண்ணில் படாது. விளங்காது. ஆகவே கேள்விகளை மறந்துவிட்டு காதலை மட்டும் பார்ப்போம். காதல் கிறக்கத்தில் நாயகனும், நாயகியும் பாடும் பாடல் ஒன்றை இன்று வலை ஏற்றியுள்ளேன். கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------
நெஞ்சைத் தொட்ட புதுப்பாடல் - எண் ஏழு

படம்: காதலில் விழுந்தேன்

பாடல்: உனக்கென நான் எனக்கென நீ

Video Link: http://youtu.be/WAkcJkectWs
Our Sincere thanks to the person who uploaded the video clipping in the net


உனக்கென நான் எனக்கென நீ
நினைக்கையில் இனிக்குதே
உடலென நான் உயிரென நீ
இருப்பது பிடிக்குதே


உனதுயிராய் எனதுயிரும்
உலவிட துடிக்குதே
தனியொரு நான் தனியொரு நீ
நினைக்கவும் வலிக்குதே


இதயத்தை
இதுக்காக எதற்காக
இடம் மாற்றினாய்?
இனிக்கும் ஒரு
துன்பத்தை குடியேற்றினாய்


புதுமைகள் தந்து
மகிழ்ச்சியில் என்னை ஆழ்த்த
பரிசுகள் தேடி பிடிப்பாய்
கசந்திடும் சேதி வந்தால்
பகிர்ந்திட பக்கம் நீ இருப்பாய்


நோயென கொஞ்சம் படுத்தால்
தாய் என மாறி அணைப்பாய்
அருகினில் வா அருகினில் வா
இரு விழி வலிக்குதே
உனதுயிரில் எனதுயிரை
ஊற்றிட துடிக்குதே


நானென நீ
நீ என நான்
இணைந்திட பிடிக்குதே
புது உலகம் புது சரகம்
வலித்திட தவிக்குதே


மழைகையில் காற்றோடு
பூகம்பம் வந்தாலுமே
உனதுமடி
நான் தூங்கும் வீடாகுமே


அருகினில் வந்து
மடியினில் சாய்ந்து படுத்தால்
மெல்லிய குரலில் இசைப்பாய்
மார்பினில் முகத்தை புதைத்தால்
கூந்தலை கோதி கொடுப்பாய்
அருகினில் மயங்கி கிடந்தால்
அசைந்திட கூட மறுப்பாய்


உனது காதலில் விழுந்தேன்
மரணமாய்
பயந்திடும் தூரத்தில்
நாமும் வாழ்கின்றோம்
மனிதா நிலை தாண்டி போகிறோம்


இனி நமக்கென்றும் பிரிவில்லையே
ஓஹோ பிரிவில்லையே
எனக்கென எதுவும் செய்தாய்
உனக்கென என்ன நான் செய்வேன்?


பொங்கிடும் நெஞ்சின் உணர்வை
சொல்லவும் வார்த்தை போதாதே
விழிகளின் ஓரம் துளிர்க்கும்
ஒரு துளி நீரே சொல்லட்டும்
உனது காதலில் விழுந்தேன்
(உனக்கென..)
-------------------------------------
படம்: காதலில் விழுந்தேன் (2008)
நடிப்பு: நகுல், சுனேனா, ஹரிராஜ், சம்பத், லிவிங்ஸ்டன்
இசை: விஜய் ஆண்டனி
பாடலாக்கம்: கவிதாயினி தாமரை
பாடியவர்கள்: ரம்யா & விஜய் ஆன்ட்டனி
இயக்கம்: பி.வி.பிரசாத்
தயாரிப்பு: சன் பிக்சர்ஸ்

இந்தப் பாடல் உலகப்புகழ்பெற்ற பாட்கி ரிஹன்னாவின் unfaithful (என்ன தலைப்புடா சாமி) என்னும் பாடலின் இசையைத் தழுவி எடுக்கப் பெற்றதாகும்.அதையும் கொடுத்துள்ளேன். கேட்டுப் பாருங்கள் .அதற்கான சுட்டியும் கீழே உள்ளது
Video clipping http://youtube/rp4UwPZfRis
Our sincere thanks to the person who uploaded the video clipping in the net


ரிஹன்னாவைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கான சுட்டிகள்.
http://en.wikipedia.org/wiki/Unfaithful_(song)#Music_and_lyrics
http://en.wikipedia.org/wiki/Rihanna

-----------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

11.2.12

Cinema கதாநாயகி குதித்த குதியில் பூமிக்குள் போய்விட்ட பாடல்!





Cinema கதாநாயகி குதித்த குதியில் பூமிக்குள் போய்விட்ட பாடல்!

கதாநாயகி இந்தக் குதிகுதித்தால் பாடல் எப்படி விளங்கும்? அதாவது மண்டைக்குள் போகும். கண்ணை மூடிக்கொண்டு பார்த்தால்தான் பாடல் வரிகளும், இசையும், அத்துடன் யுவனின் அதிரடி டண்டனக்கா டக்கா தாளமும் நமக்குப் பிடிபடும். இல்லையென்றால் நோ சான்ஸ்

முதல் தடவை பார்க்கும்போது தமன்னா மட்டும்தான் தெரிகிறார். 100 கோடி ரூபாய்கள் லாட்டரியில் விழுந்தது போல அவர் அந்த்க் குதி குதிக்கிறார்.
அவர் குதிக்கும் அழகு மட்டும்தான் கண்ணுக்குத் தெரிகிறது. பாடலுடன் சேர்ந்து நாமும் பூமிக்குள் போய்விடுகிறோம்.

அதனால் கண்ணை மூடிக்கொண்டு பாடலை மட்டும் கேட்பது உத்தமம். அதாவது நல்லது

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
நெஞ்சைத் தொட்ட புதுப் பாடல் - பகுதி ஆறு

பாடல்: 
    "அடடா மழைடா அட மழைடா
         அழகா சிரிச்சா புயல் மழைடா"

காணொளி
http://youtu.be/e22QxrZ86Oc
Our sincere thanks to person who uploaded the video clipping



பாடல் வரிகள்: 

அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா
அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா


மாறி மாறி மழை அடிக்க
மனசுக்குள்ள குடை பிடிக்க
கால்கள் நாலாச்சு கைகள் எட்டாச்சு
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு


மயில் தோக போல இவ மழையில் ஆடும் போது
ரயில் பாலம் போல என் மனசும் ஆடும் பாரு
என்னாச்சு ஏதாச்சு ஏதேதோ ஆயாச்சு


அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா


பாட்டு பாட்டு பாடாத பாட்டு
மழை தான் பாடுது கேட்காத பாட்டு
உன்னை என்னை சேர்த்து வெச்ச
மழைக்கொரு சலாம் போடு


என்னை கொஞ்சம் காணலயே
உனக்குள்ளே தேடி பாரு
மந்திரம் போல இருக்கு
புது தந்திரம் போல இருக்கு
பம்பரம் போல எனக்கு
தல மத்தியில் சுத்துது கிறுக்கு


தேவதை எங்கே என் தேவதை எங்கே
அது சந்தோஷமா ஆடுது இங்கே


உன்னப்போல வேறாறும் இல்ல
என்னவிட்டா வேறாறு சொல்ல
சின்ன சின்ன கண்ணு ரெண்ட
கொடுத்தென்ன அனுப்பி வெச்சான்
இந்த கண்ணு போதலயே
எதுக்கிவள படைச்சி வெச்சான்


பட்டாம்பூச்சி பொண்ணு
நெஞ்சு படபடக்கும் நின்னு
பூவும் இவளும் ஒண்ணு
என்னை கொன்னுப்புட்டா கொன்னு


போவது எங்கே நான் போவது எங்கே
மனம் தள்ளாடுதே போதையில் இங்கே


அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா அனல் மழைடா
அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா அனல் மழைடா


பின்னி பின்னி மழை அடிக்க
மின்னல் வந்து குடை பிடிக்க
வானம் ரெண்டாச்சு பூமி துண்டாச்ச்சு
என் மூச்சு காத்தால மழை கூட சூடாச்சு


குடையை நீட்டி யாரும்
இந்த மழையை தடுக்க வேணாம்
அணைய போட்டு யாரும்
என் மனச அடக்க வேணாம்
கொண்டாடு கொண்டாடு கூத்தாடி கொண்டாடு 
--------------------------------
படம்: பையா (2010)
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள்: ராகுல்நம்பியார், சந்தவி
பாடலாக்கம்: கவிஞர். நா. முத்துக்குமார்
நடிப்பு: தமன்னா
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

3.2.12

பல்லாங்குழியின் வட்டத்தைப் பார்த்துக் கிறங்கிய பெண்!

பல்லாங்குழியின் வட்டத்தைப் பார்த்துக் கிறங்கிய பெண்!

நெஞ்சைத் தொட்ட புதுப் பாடல் - பகுதி ஐந்து

பாடல்: பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்
--------------------------------------------------------------

பெண்குரல்
பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்
துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன்
கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்
செவ்வந்தி பூவின் நடுவே பார்த்தேன்
தேசிய கொடியில் சக்கரம் பார்த்தேன்
இரவில் ஒருநாள் பௌர்ணமி பார்தேன் ஒற்றை நாணயம்

ஹம்மிங்.....

பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்

ஹம்மிங்.....

ஆண்குரல்:
அடி காலம் முழுவதும் காத்திருப்பேன்
நீ காணும் இடத்தினில் பூத்திருப்பேன்
அடி ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டும்
எந்தன் அன்பு சேர்ந்திருக்கும் நெஞ்சில் வைத்துக் காத்திரு

பெண்குரல்
தங்க ஆபரணம் ஒன்றும் தேவையில்லை
இந்த நாணயம் போதாதா
தழுவும் மனதை குங்குமச் சிமிழில் பதுக்க முடியாதா!

ஆண்குரல்:
செல்வ சீதனமே நீ சிரிக்கையிலே பல சில்லரை சிதறிவிடும்
செலவு செய்திட நினைத்தால் கூட இதயம் பதறிவிடும்

பெண்குரல்
பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்

ஆண்குரல்:
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்

ஹம்மிங்..........

பெண்குரல்:
அட நேற்று நடந்தது நாடகமா
நீ காசு கொடுத்தது சூசகமா
அட ஒற்றை ரூபாய் பக்கம் இரண்டு
என்ன சொல்லக் காசு தந்தாய் எண்ணி எண்ணிப் பார்க்கிறேன்

ஆண்குரல்:
அடி பேரழகே உன்னை சேர்ந்திடவே
இந்த நாணயம் ஓர் சாட்சி
இருக்கும் உயிரும் உனக்கே உபயம் எதற்கு ஆராய்சி

பெண்குரல்:
இந்த நாணயத்தில் உன்னை பார்த்திருப்பேன்
பிறர் பார்க்கவும் விட மாட்டேன்
கடவுள் வந்து கேட்டால் கூட காணிக்கை இட மாட்டேன்

ஆண்குரல்:
பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்

பெண்குரல்
துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன்

இருவரும்
கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்

பெண்குரல்:
செவ்வந்தி பூவின் நடுவே பார்த்தேன்
தேசிய கொடியில் சக்கரம் பார்த்தேன்

இருவரும்
இரவில் ஒருநாள் பௌர்ணமி பார்தேன்

ஹம்மிங்.......

----------------------------------------------------
படம் : ஆனந்தம் (2001)
பாடல் : பல்லாங்குழியின்
இசை : எஸ்.ஏ.ராஜ்குமார்
பாடலாசிரியர்: நா. முத்துகுமார்
பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன், ஹரணி
நடிப்பு: அப்பாஸ் & சிநேகா
இயக்கம்: லிங்குசாமி

-----------------------------------------------------
கானொளி: http//youtube/RDe5Tha4IqI
Our sincere thanks to the person who uploaded the song in the net


------------------------------------------------------------------------------------

28.1.12

காலையில் மீண்டும் உயிர் பெறுவோம்!

காலையில் மீண்டும் உயிர் பெறுவோம்!

நெஞ்சைத் தொட்ட புதுப் பாடல் - பகுதி நான்கு

பாடல்: அவரவர் வாழ்க்கையில்

அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்,
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள்

அது ஒரு அழகிய நிலாக் காலம்,
கனவினில் தினம்தினம் உலா போகும்
அது ஒரு அழகிய நிலாக் காலம்,
கனவினில் தினம்தினம் உலா போகும்,

நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே
அது ஒரு பொற்காலம்,

(அவரவர் வாழ்க்கையில்)

காற்றும்கூட எங்களுடன்,
இரவினில் தூங்க இடம் கேட்கும்,
மழைத்துளிகூட என் தாயின்,
மடியினில் தவழ தினம் ஏங்கும்

நத்தை கூட்டின் நீர் போதும்,
எங்களின் தாகம் தீர்த்துக் கொள்வோம்,
கத்தும் கடலும் கைக்கு எட்ட,
கவிதைகள் போலே வாழ்ந்து வந்தோம்,

தாயின் மடியில் தினம் இறந்து,
காலையில் மீண்டும் உயிர் பெறுவோம்,
கருவினில் காலையில் ஒளி பெயர்ந்து,
சொல்லி சொல்லி சுகமாய்,
தினம் சிரிப்போம்

ஐய்ந்தெழுத்து புது மொழியை,
அரிய வைதாள் என் அன்னை,
அண்ணன் தங்கை அனைவருமே
நேசம் கொண்டோம் தமிழ் மன்னை,

நிலவுகள் சேர்ந்து,
பூமியில் வாழ்ந்ததே,
அது ஒரு பொர்காலம்,

(அவரவர் வாழ்க்கையில்)

அன்னை ஊட்டிய பிடி சோற்றில்,
ஆயுள் முழுக்கப் பசி மறந்தோம்,
ஓற்றைக் கண்ணில் அடி பட்டால்,
பத்துக் கண்ணிலும் வலி கண்டோம்

பள்ளிக்கூடம் தந்ததில்லை,
பாசம் என்னும் நூல் ஒன்றை
வேதங்கள் நான்கும் சொன்னதில்லை,
எங்கள் கதை பொல் வேறொன்றை,

கண்களும் நீர் துளி கண்டதில்லை,
அழுதிட அவைகளும் பழகவில்லை,
கருப்பா சிகப்பா தெரியவில்லை,
கவலைகள் இதுவரை முளைத்ததில்லை,

சேகரித்து வைப்பதற்கு,
தேவை இன்று எதுவும் இல்லை,
இறைவனுக்கும் எங்களுக்கும்,
இடைவெளிகள் இருந்ததில்லை

நிலவுகள் சேர்ந்து பூமியில் வாழ்ந்ததே
அது ஒரு பொற்காலம்,

(அவரவர் வாழ்க்கையில்)

படம்: பாண்டவர் பூமி (2001)
பாடல் வரிகள்: கவிஞர்: சிநேகன்
இசை: பரத்வாஜ்
பாடலைப் பாடியவர்: பரத்வாஜ்
இயக்கம்: சேரன்
நடிப்பு: அருண்குமார், ராஜ்கிரன், ஷமிதா
--------------------------------------------------------------------------------


காணொளி: http://youtu.be/8YMebVMXukQ பாடல் உதவி: http://www.youtube.com/user/tube2eelam அவர்களுக்கு நமது நன்றி உரித்தாகுக!
our sincere thanks to the person who uploaded the song in the net
--------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

21.1.12

என் சமையலறையில் நீ சபீனா!


 என் சமையலறையில் நீ சபீனா!

நெஞ்சைத் தொட்ட புதுப் பாடல் - பகுதி மூன்று
------------------------------------------------------------
பாடல்: உன் சமையலறையில்,


பெண் குரலுக்கு உரிய வரிகள் நீல நிறத்தில் கொடுக்கப்பெற்றுள்ளன.
இருவரும் சேர்ந்து பாடும் வரிகள் ரோஸ் கலரில் கொடுக்கப் பெற்றுள்ளன
எல்லாம் உங்கள் செளகரியத்திற்காகத்தான்!

உன் சமையலறையில், நான் உப்பா? சர்க்கரையா?
நீ படிக்கும் அறையில், நான் கண்களா? புத்தகமா?

(உன் சமையலறையில்..)

நீ விரல்கள் என்றால், நான் நகமா? மோதிரமா? ஆ..அஅஅ,
நீ இதழ்களென்றால், நான் முத்தமா? புன்னகையா? ஆ,ஆ..
நீ அழகு என்றால், நான் கவியா? ஓவியனா?

(உன் சமையலறையில்..)

நான் வெட்கமென்றால், நீ சிவப்பா? கன்னங்களா? ஆ..அஅஅ,
நான் தீண்டல் என்றால், நீ விரலா? ஸ்பரிஸங்களா? ஆ,ஆஅ..
நீ குழந்தை என்றால், நான் தொட்டிலா? தாலாட்டா? ஆ,ஆ..
நீ தூக்கமென்றால், நான் மடியா? தலையணையா? ஆ,அஅஆ,
நான் இதயமென்றால், நீ உயிரா? துடிதுடிப்பா? ஆ,ஆ..
(உன் சமையலறையில்..)

நீ விதைகள் என்றால், நான் வேரா? விளைநிலமா? ஆ,அஅஆ,
நீ விருந்து என்றால், நான் பசியா? ருசியா? ஆ,ஆ..
நீ கைதி என்றால், நான் சிறையா? தண்டனையா? ஆ,ஆ..
நீ மொழிகளென்றால், நான் தமிழா? ஓசைகளா? ஆ,அஅஆ,
நீ புதுமையென்றால், நான் பாரதியா? பாரதிதாசனா?

நீ தனிமை என்றால், நான் துணையா? தூரத்திலா?

நீ துணைதானென்றால், நான் பேசவா? யோசிக்கவா?
நீ திரும்பிநின்றால், நான் நிற்கவா? போய்விடவா? ஆ,ஆ..
நீ போகிறாயென்றால், நான் அழைக்கவா? அழுதிடவா? ஆ,ஆ..
நீ காதலென்றால், நான் சரியா? தவறா?

உன் வலதுகையில், பத்துவிரல்.. பத்துவிரல்.
என் இடதுகையில், பத்துவிரல்.. பத்துவிரல்.

தூரத்துமேகம், தூரல்கள் சிந்த,
தீர்த்தமழையில், தீக்குளிப்போம்..


படம் தூள் (2001)
இசை: வித்யாசாகர்
பாடலாக்கம்: கவிஞர் கபிலன்
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், சுஜாதா
நடிப்பு: விக்ரம் & லைலா
இயக்கம்: தரணி

-----------------------------------------------------------
இந்தப்பாடல் வரியில் சிலாகித்த ஒரு கணவன் தன் மனைவிய்டம் கேட்டானாம்:

  “உன் சமையலறையில், நான் உப்பா? சர்க்கரையா?”

மனைவி சட்’டென்று பதில் சொன்னாளாம்:

  “என் சமையலறையில் நீ சபீனா”

சபீனா என்பது Dish washing powder -  இது அது பற்றிக் கேள்விப்படாத வெளிநாட்டுக் கண்மணிகளுக்காக!
-------------------------------------------------------------


காணொளி: http://youtu.be/o1lGCpImD2w
நன்றி: இப் பாடலை வலையேற்றிய முகம் தெரியாத அந்த நண்பருக்கு  நம் நன்றி உரித்தாகுக! Our sincere thanks to  http://www.youtube.com/user/Nithaarsan web site people
---------------------------------------------------
வாழ்க வளமுடன்!

14.1.12

காதலர்களுக்குத் தனியாக அஞ்சல்காரர்கள்!


 காதலர்களுக்குத் தனியாக அஞ்சல்காரர்கள்!

காதலர்களுக்கு இப்போது தனியாக அஞ்சல்காரர்கள் நியமைக்கப்பெற்றுள்ளார்கள். அவர்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமா?
மேலே படியுங்கள்
--------------------------------------------------------------------------------------
நெஞ்சைத் தொட்ட புதுப் பாடல் - பகுதி இரண்டு

காதல் கடிதம் தீட்டவே
-------------------------------

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
வானின் நீலம் கொண்டுவா பேனா மையோ தீர்ந்திடும்

சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்
இரவு பகல் எப்பொழுதும் அஞ்சல் உன்னைச் சேர்ந்திடும்

(காதல்..)

கடிதத்தின் வார்த்தைகளில் கண்ணா நான் வாழுகிறேன்
பேனாவில் ஊற்றி வைத்தது எதன் உயிரல்லோ
 

பொன்னே  உன் கடிதத்தைப் பூவாலே திறக்கின்றேன்
விரல் பட்டால் உந்தன் ஜீவன் காயம் படுமல்லோ

அன்பே உந்தன் அன்பில் ஆடிப் போகின்றேன்
செம்பூக்கள் தீண்டும்போது செத்துச் செத்துப் பூப்பூக்கிறேன்

(காதல்..)

கண்ணேஉன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா
மஞ்சத்தில் உறங்கும்போது சிணுங்க மாட்டேனா

காலோடு கொலுசல்ல கண்ணோடு உயிரானாய்
உயிரே நான் உறங்கும் போதும் உறங்கமாட்டாயா

தப்பு செய்யப் பார்த்தால் ஒப்புக் கொள்வாயா
மேலாடை நீங்கும்போது வெட்கம் என்ன முந்தானையா

(காதல்..)

படம்: ஜோடி (1999)
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னி மேனன், S ஜானகி
வரிகள்: வைரமுத்து
நடிப்பு: பிரசாந்த், சிம்ரன்

காணொளி: http://youtu.be/2hGON9d3_Gk


நன்றி: இப் பாடலை வலையேற்றிய முகம் தெரியாத அந்த நண்பருக்கு  நம் நன்றி உரித்தாகுக! Our sincere thanks to www.mediasite.net web site people

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

7.1.12

Old is Gold என்பது உண்மையா? பொய்யா?

பூமிக்கு வெளிச்சமெல்லாம்....!
Old is Gold என்பது உண்மையா? பொய்யா?

பேராசிரியர் அறிவொளி அவர்கள் மேடைகளில் பேசும் போது உண்மைகளில் பல விதங்கள் உள்ளது என்பார்.

தெரிந்த உண்மை, தெரியாத உண்மை, பாதி உண்மை, முழு உண்மை என்று உண்மைகளை வகைப்படுத்துவார்.

உலகில் மூன்று பங்கு நீர் உள்ளது என்பது பாதி உண்மை. நீர் எங்கிருந்தாலும் அதற்கடியில் பூமி உள்ளது என்பதுதான் முழு உண்மை. வலிகளில் அதீதமான வலி பிரசவ வலி என்பது நம்மில் பாதிப்பேர்களுக்கு (அதாவது ஆண்களுக்கு) தெரியாத உண்மை. நீரின்றி அமையாது இவ்வுலகு என்பது தெரிந்த உண்மை.

அதுபோல Old is Gold என்பது உண்மையா? என்றால் அது பாதி உண்மை. பழையது தங்கம் என்பதுபோல புதியதிலும் தங்கம் உள்ளது. Sometime, new things are also gold

எத்தனை நாட்களுக்குத்தான் பழையதையே தங்கம் என்று சொல்லிக்கொண்டிருப்பீர்கள்?

50 வயதிற்கு மேற்பட்டவர்களைக் கேட்டால் பழைய பாடல்களைத்தான் தங்கம் என்பார்கள்

“சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திடக் கண்டேனே”


என்பதுபோன்ற பாடல்களுக்கு இப்போது உள்ள பாடல்கள் இணையில்லை என்பார்கள்.

எம்.கே. தியாகராஜ பாகவதர் பாடிய பாடலான   “தீன கருணாகரனே நடராஜா.....நீலகண்டனே!”  என்ற பாடலைக் குறிப்பிட்டால் முகத்தைச் சுளிப்பார்கள். பாடல் அக்காலத்தில் பிரபலமானது. அனைவராலும் முணுமுணுக்கப்பெற்ற பாடல். படம். திருநீலகண்டர், ஆண்டு 1939 பாடலாக்கம். பாபநாசம் சிவன். எங்கள் அப்பா காலத்துப் பாடல்!

அதனால் காலத்தை வைத்துப் பாடல்களை ஒதுக்காதீர்கள். இன்றும் சில நல்ல பாடல்கள் வருகின்றன. அதையும் ரசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

அன்று மூன்று அல்லது நான்கு இசைக்கருவிகளை வைத்துப் பாடலை வடிவமைத்தார்கள். பிறகு பத்திற்கும் மேற்பட்ட இசைக்கருவிகளும், 50ற்கும் மேற்பட்ட வாத்தியக்காரர்களும் சேர பாடல்களைக் கேட்பதற்கு ரம்மியமாக அமைத்தார்கள். இன்று பல மின்னணு இசைக்கருவிகள் சேர்ந்து கொண்டுள்ளது. இன்று பல பாடல்கள் அதன் இசையால் மனதைக் கிறங்க வைக்கின்றன!

உங்களுக்காக இந்தப் பகுதியில் இன்று ஒரு புதுப் பாடலைப் பதிவு செய்துள்ளேன். வாரம் ஒரு புதுப் பாடலைத் தேடிப்பிடித்துத் தரவுள்ளேன். கேட்டு மகிழுங்கள். பாடல் வரிகளையும் படித்து மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++
நெஞ்சைத் தொட்ட புதுப் பாடல் - பகுதி ஒன்று

பூமிக்கு வெளிச்சமெல்லாம்......!
----------------------------------------------

பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்

பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்
கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்

நீ விழியால் விழியை பறித்தாய்
உன் உயிரினை எனக்குள்ளே விதைத்தாய்
உன் அழகால் எனை நீ அடித்தாய்
அய்யோ அதிசய உலகத்தில் அடைத்தாய்

நீ இதமாய் இதயம் கடித்தாய்
என் இதழ் சொட்டும் அருவியில் குளித்தாய்
நீ மதுவாய் எனையே குடித்தாய்
இந்த உலகத்தை உடைத்திட துடித்தாய்

காலம் வந்தபிறகு ஒட்டிக்கொள்ளும் சிறகு
வாழ ஒரு பூமி இனி தேவை இல்லை
ஒப்புக்கொண்ட உயிர்கள் கட்டிக்கொண்டு பறந்தால்
எட்டி நிக்கும் வானம் ஒன்றும் தூரமில்லை

பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்

நீ மெதுவாய் நடந்தால் கடந்தால்
என் உணர்ச்சிகள் தீப்பிடித்து எரியும்
ஏய் நீ துளியாய் எனக்குள் விழுந்தால்
என் உயிர் பனிக்கட்டியாக உறையும்

நீ இயல்பாய் அழைத்தால் சிரித்தால்
என் உள்ளம் வந்து மண்டியிட்டு தவளும்
நீ நெருப்பாய் முறைத்தால் தகித்தால்
என் நெஞ்சிக்குள்ளே கப்பல் ஒன்று கவிழும்

கண்களில் மின்மினி புன்னகை தீப்பொறி
மின்னலில் சங்கதி புரிகின்றதே
தொட்டவுடன் உருகும் ஒட்டிக்கொண்டு பழகும்
புத்தம் புது மிருகம் தெரிகின்றதே

பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்
பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்

கடலுக்கு நுரைகளெல்லாம் நீ பல் துலக்குவதால்
காலையில் அடித்தமழை நீ என்னை தழுவியதால்


------------------------------------------------------------------------------------------------
பூமிக்கு வெளிச்சமெல்லாம் சூரியனால்தான். ஆனால் காதல் வயப்பட்டவர்கள் உன்னால் என்று பிதற்றிக்கொள்வார்கள். காதல் மயக்கம் உச்ச நிலை அடையும்போது என்ன எழுதுகிறோம், என்ன சொல்கிறோம், என்ன செய்கிறோம் என்பது தெரியாது. அதேபோல் காதலில் சற்று சருக்கல் ஏற்பட்டாலும் பிதற்றுவார்கள். எங்கே மனிதன் இல்லையோ அங்கே எனக்கோர் இடம் வேண்டும் என்பார்கள். எனது கைகள் தீண்டும்போது மலரும் சுடுகின்றது என்பார்கள். மலர் எப்படிச் சுடும்? ஆனால் தன் நிலையை வெளிப்படுத்த அதைவிடச் சிறந்த வரி கிடையாது. நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை என்பார்கள்.
நாம் பார்க்காத காதலா? கவியரசர் கண்ணதாசன் எழுதாத காதற்பாடல்களா?

ஆகவே பூமிக்கு வெளிச்சமெல்லாம் அவன் கண் திறப்பதினால்தான் என்பதை எந்தக் கேள்வியும் கேட்காமல் ஏற்றுக்கொள்வோம்!

கானொளி - http://youtu.be/xTxRwwuX96I


நன்றி: இப் பாடலை வலையேற்றிய முகம் தெரியாத அந்த நண்பருக்கு  நம் நன்றி உரித்தாகுக! (Our sincere thanks to quality clipz.com)

பாடலாக்கம்: கவிஞர் வைரமுத்து
பாடியவர்கள்: காயத்ரி, ராகுல் நம்பியார்
நடிப்பு: ஜீவா & சந்தியா
இசையமைத்தவர்: விஜய் ஆண்ட்டனி
இயக்குனர்: சசி
படம்: டிஷ்யூம் (2006)

பாடலில் நெஞ்சைத் தொட்ட வரிகள் சிகப்பு நிற எழுத்துருவில் கொடுக்கப்பெற்றுள்ளன!

காலம் வந்தபிறகு ஒட்டிக்கொள்ளும் சிறகு
வாழ ஒரு பூமி இனி தேவை இல்லை
ஒப்புக்கொண்ட உயிர்கள் கட்டிக்கொண்டு பறந்தால்
எட்டி நிக்கும் வானம் ஒன்றும் தூரமில்லை


என்ற வரிகள் பாடலின் முத்தாய்ப்பான வரிகள்

வாழ்க வளமுடன்!