மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label விநாயகர் பாமாலை. Show all posts
Showing posts with label விநாயகர் பாமாலை. Show all posts

19.9.12

Happy Birth Day Ganesha!

சகல காரியங்களையும் சித்தியடையச் செய்யும் விநாயகருக்கு இன்று பிறந்த நாள். அவரை வணங்கி மகிழ்வோம்!

Ganesha Chaturthi (Marathi: गणेश चतुर्थी, Konkani: चवथ, Gujarati: ગણેશ ચતુર્થી, Hindi: गणेश चतुर्थी, Malayalam: വിനായക ചതുര്‍ത്ഥി, Tamil: விநாயகர் சதுர்த்தி, Kannada: ಗಣೇಶ ಚತುರ್ಥೀ, Telugu: వినాయక చవితి), also known as Vinayaka Chaturthi, also called Vinayagar in Tamil Nadu, is the Hindu festival celebrated on the occasion of birthday of Lord Ganesha[2], the son of Shiva and Parvati, who is believed to bestow his presence on earth for all his devotees in the duration of this festival. It is the day Shiva declared his son Ganesha as superior to all the gods. Ganesha is widely worshipped as the god of wisdom, prosperity and good fortune and traditionally invoked at the beginning of any new venture or at the start of travel.- information from wiki Maharaj
---------------------------------------------------------------------



கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் .................அடிபேணிக்
(கைத்தல)

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் எனவினை ...............கடிதேகும்
(கற்றிடும்)

மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள் புய ............மதயானை
(மத்தமும்)

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு ...........பணிவேனே
(மத்தள)

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய ...............முதல்வோனே
(முத்தமிழ்)

முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
அச்சது பொடிசெய்த ..........அதிதீரா
(முப்புரம்)

அத்துய ரதுகொடு சுப்பிரமணிபடும்
அப்புன மதனிடை........... இபமாகி
(அத்துய)

அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் .............பெருமாளே.
(அக்குற)

பாடல்: திருப்புகழ்
ஆக்கம்: அருணகிரிநாதர்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++=======

14.5.10

கண்ணதாசனும் கற்பகமூர்த்தியும்!



+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கண்ணதாசனும் கற்பகமூர்த்தியும்!

புகழ் பெற்ற பாடல்கள் - பகுதி 3

Òகழ் பெற்ற பாடல் என்றால் என்ன? இறைவனின் புகழைப் பாடும் பாடல்கள் எல்லாம் புகழ் பெற்ற பாடல்கள்தான்!
--------------------------------------------------------------------------------
அற்புத கீர்த்தி வேண்டின்
...ஆனந்த வாழ்க்கை வேண்டின்
நற்பொருள் குவிதல் வேண்டின்
...நலமெலாம் பெருக வேண்டின்
கற்பக மூர்த்தி தெய்வக்
...களஞ்சியத் திருக்கை சென்று
பொற்பதம் பணிந்து பாரீர்
...பொய்யில்லை கண்ட உண்மை!


பிள்ளையார் பட்டி என்னும்
...பேரருள் சுரங்கத்தின் கண்
உள்ளவன் மலையில் பூத்த
...உருவத்தின் இயற்கைத் தோன்றல்
தெள்ளிய மனத்தர்க்கு எல்லாம்
...திருவருள் வழங்கும் தெய்வம்
கள்ளமில் பக்தர் தந்தை
...கற்பக மூர்த்தி போற்றி!
- கவியரசர் கண்ணதாசன்

இந்த பாடல் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் இயற்றியது, கண்ணதாசன் அவர்கள் பிள்ளையார்பட்டியில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிறுகூடல்பட்டியில் பிறந்தவர். பிள்ளையார் சுயம்புவாய் ஒரு குகையில் எழுந்தருளியுள்ள பிள்ளையார்பட்டிக் கோவிலுக்குப் பலமுறை சென்று வந்தவர் அவர்.

தனது அனுபவத்தை கண்ணதாசன் அவர்கள் பாட்டில் வடித்துவைத்துள்ளார்.

இயற்கையாகக் குகையில் தோன்றியுள்ள கற்பகவிநாயகர் வலம்புரி விநாயகர். தும்பிக்கை வலப்புறம் வளைந்திருக்கும் நிலைப்பாடு. கற்பக விருட்சமாய் நமது துன்பங்களை துடைத்து எல்லா நலன்களையும் வழங்கக்கூடியவர் அவர். அதன் காரணமாகவே அவருக்குக் கற்பகவிநாயகர் என்னும் பெயர் உள்ளது.
அவர் தாள் பணிவோம். ஆனந்த வாழ்க்கை வாழ்வோம்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!