மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 1011 - 1020. Show all posts
Showing posts with label Lessons 1011 - 1020. Show all posts

28.2.18

எதை எப்படிச் சொன்னார் நாடி ஜோதிடர்?


எதை எப்படிச் சொன்னார் நாடி ஜோதிடர்?

அரசனுக்கு அவனுடைய எல்லா பற்களும் விழுந்து பொக்கை வாயுடன் இருப்பதாக ஒரு கனவு வந்தது. இதனால் காலையில்
பீதியுடன் எழுந்த அவன், அந்தக் கனவால் என்ன விளைவுகள் நேருமோ என்று பயந்துபோய் முதல் வேலையாக ஒரு நாடி
ஜோதிடரை வரவழைத்தான்.

அந்த நாடி ஜோதிடர் தனது ஓலைச்சுவடியை எடுத்து, அதில் பொக்கை வாய் கனவு பற்றி விளக்கியிருந்த ஒரு ஓலையை
வாசித்துவிட்டு, ‘அரசே! உங்கள் மனைவி, குழந்தைகள், சொந்த பந்தங்கள் எல்லாம் உங்களுக்கு முன்பே இறந்து விடுவார்கள்’
என்று பலன் சொன்னார். உடனே அந்த அரசன் மிகவும்
கோபமுற்று, ‘இவனைப் பிடித்து சிறையில் தள்ளுங்கள்!’
என்று உத்தரவிட்டான்.

அதன் பிறகும் மன்னனின் மனம் சமாதானமடையவில்லை. இன்னொரு நாடி ஜோதிடரை வரவழைத்து, அவரிடம் தன்
பொக்கை வாய் கனவின் அர்த்தம் என்ன என்று வினவினான்.
அந்த ஜோதிடரும் அதே மாதிரியான ஓலைச்சுவடியைத்தான் வைத்திருந்தார்.

அவரும் அதைப் பார்த்துவிட்டு, ‘மன்னா! உங்கள் சொந்த, பந்தங்களையெல்லாம் விட நீங்கள் நீண்ட காலம் நீடூடி
வாழ்வீர்கள்’ என்று பலன் கூறினார். இதனால் மனம் குளிர்ந்த அரசன், அந்த ஜோதிடருக்கு தகுந்த பரிசுகள் வழங்கி அனுப்பி வைத்தான்.

இருவரும் அதே ஓலையைத்தான் படித்தார்கள், அதே விஷயத்தைதான் சொன்னார்கள். ஒருவர் எல்லோரும் இறந்துவிடுவார்கள் என்றார், இன்னொருவர் எல்லோரையும்
கடந்து வாழ்வீர்கள் என்றார், அவ்வளவுதான் வித்தியாசம்.

பேசும் வார்த்தைகள் கவனமுடன் உபயோகித்தால் வாழ்வில் ஜெயிக்கலாம்.! நாம் பேசும் வார்த்தைகள் மற்றவரை சந்தோஷம் படுத்த வேண்டுமே தவிர எந்த விதமனகசப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

படித்தேன்; பகிர்ந்தேன்!!!   

அன்புடன்
வாத்தியார் 
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.2.18

Astrology: எனக்கு ஜோதிடம் வருமா? (அதாவது மண்டையில் ஏறுமா?)


Astrology: எனக்கு ஜோதிடம் வருமா? (அதாவது மண்டையில் ஏறுமா?)

கல்வி, வைத்தியம், ஜோதிடம் ஆகிய மூன்றும் தர்மப் பணிகள். அதெல்லாம் முற்காலத்தில். அத்தொழிலைச் செய்பவர்களுக்கெல்லாம் மன்னர் மானியம் தருவார். அதனால் அன்றைய காலகட்டத்தில் அது சாத்தியப்பட்டது.

இப்போது மன்னர்களையும் ஒழித்துவிட்டார்கள். அதோடு அவர்களுக்குக் கொடுத்துவந்த மானியத்தையும் ஒழித்துவிட்டார்கள். எல்லாம் கலியுகம். கலி முற்றிக்கொண்டு வருகிறது.

இப்போது அவை மூன்றும்தான் காசு கொழிக்கும் தொழில்!

சரி, போகட்டும் சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன். வகுப்பறைக்கு வருபவர்களில் சிலர் (தனி மின்னஞ்சல் மூலமாக) கேட்கும் முக்கியமான கேள்விகள் இரண்டு உண்டு!

1. சார், எனக்கு ஜோதிடம் வருமா? (அதாவது மண்டையில் ஏறுமா?)
2. சார், நான் ஜோதிடராகப் பணி புரிய ஆசைப் படுகிறேன். அதற்கான வாய்ப்பு (என் ஜாதகப்படி) எனக்கு உண்டா?

ஜோதிடம் கற்றுக்கொள்வதற்கு ஆர்வமும், முயற்சியும் இருந்தால் போதும். யார் வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாம்! அத்துடன் கற்றுக்கொண்டவை அவ்வப்போது மறந்து போகாமல் இருப்பதற்கு, நினைவாற்றல் முக்கியம். முக்கியமான விதிகளைத் திரும்பத் திரும்பவும் படிக்க வேண்டும்.

புரிதலுக்கும், நினைவாற்றலுக்கும், ஜாதகப்படி (அதைச் சொல்லாவிட்டால் கடைசி பெஞ்ச் கண்மணி விடமாட்டாரே) புதன் ஜாதகத்தில் வலுவாக இருக்க வேண்டும். வலு என்றால் என்ன என்பதைப் பலமுறை சொல்லித்தந்திருக்கிறேன். புதன் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கேந்திரங்கள் அல்லது திரிகோணங்களில் இருந்தால் நல்லது.

விளக்கம் போதுமா?

போதாது!

இரண்டாவது கேள்வி பாக்கியுள்ளது.

நீங்கள் ஜோதிடத்தைக் கற்றுக்கொள்வதுடன், பலரது ஜாதகத்தைப் பார்த்து, அலசி, பலன் சொல்லி, அவர்கள் அதைக்கேட்டு முகம் மலர்ந்த அனுபவம் வேண்டும். ஜோதிடத் தொழில் முதலில் டல்’ லடிக்கும். நீங்கள் பிரபலமான பிறகு, உங்களிடம் வந்தவர்களே மீண்டும் மீண்டும் வருவார்கள். பலரையும் கூட்டிக் கொண்டு வருவார்கள். அல்லது பலரையும் அனுப்பி வைப்பார்கள். அப்போதுதான் நீங்கள் சம்பாதிக்க முடியும்!

“அந்தக் கதை எல்லாம் வேண்டாம். ஜாதகப்படி என்ன அமைப்பு வேண்டும்? அதைச் சொல்லுங்கள்”

புதன் (Planet for Astrology) வர்கோத்தமம் பெற்றிருக்க வேண்டும். அதாவது இராசியிலும், நவாம்சத்திலும் ஒரே வீட்டில் இருக்க வேண்டும்.

ஐந்தாம் அதிபதியும், பத்தாம் வீட்டுக்காரனும் ஒருவருக்கொருவர் பார்வையில் இருக்க வேண்டும்.

அதைவிட முக்கியமாக நீங்கள் அட்டை (Board) மாட்டி ஜோதிடம் சொல்லத் துவங்குவதற்கு உங்களுக்கு நல்ல தசா புத்தி நடைபெறவேண்டும்

அதெல்லாம் எதற்கு?

எதையும் கற்று அறிவதில் தவறில்லை. ஆகவே இந்தக் கட்டுரையின் ஏழாம் பத்தியை மீண்டும் ஒருமுறை தருகிறேன். அதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஜோதிடம் கற்றுக்கொள்வதற்கு ஆர்வமும், முயற்சியும் இருந்தால் போதும். யார் வேண்டுமென்றாலும் கற்றுக்கொள்ளலாம்! இறையருளால் நமக்கு வேறு தொழில் இருக்கிறது. ஆகவே கற்றுக்கொள்வதுடன், அதைவைத்து நமது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் உதவி செய்வதுடன் நிறுத்திக்கொள்வோம்.

அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.2.18

Astrology: ஜாதகம்: உங்களுக்குப் பொருத்தமான துணை வேண்டுமா?


Astrology: ஜாதகம்: உங்களுக்குப் பொருத்தமான துணை வேண்டுமா?

திருமணத்திற்குப் பெண் பார்க்கும்போது, முக்கியமாக எதைப் பார்க்க வேண்டும்? இருவருக்கும் ஜாதகம் பொருந்தியுள்ளதா என்பதைத்தான் முதலில் பார்க்க வேண்டும்!!!

தோற்றம், கல்வி, வேலை, வருமானம், பெற்றோர்கள், குடும்ப மேன்மை, போன்றவற்றை எல்லாம் பிறகுதான் பார்க்க வேண்டும்.

1.நட்சத்திரப் பொருத்தம்
(1. நட்சத்திரப் பொருத்தம், 2. கணப் பொருத்தம், 3. மகேந்திரப் பொருத்தம், 4. ஸ்திரி தீர்க்கப் பொருத்தம், 5.யோனிப் பொருத்தம், 6. ராசிப் பொருத்தம், 7. ராசி அதிபதிப் பொருத்தம், 8. வசியப் பொருத்தம், 9. ரஜ்ஜுப் பொருத்தம் (இது முக்கியமானது) 10, வேதைப் பொருத்தம், ஆகிய பத்துப் பொருத்தங்கள் இதில் அடங்கும்)

2.செவ்வாய் தோஷம்
3. பாவசாம்யம்
4. தசா சந்திப்பு
ஆகிய நான்கையும் அலச வேண்டும்!!!!
---------------------------------------------------
ஒருவரின் பிறந்த நக்ஷத்திரத்திற்கு, எந்த நக்ஷத்திரங்கள் பொருந்தும் என்று தெரிந்து கொண்டு ஆண், பெண் ஜாதகங்களை எடுக்க வேண்டும். நமக்குக் கிடைத்திருக்கும் ஜாதகம் சரியாக இருக்கிறதா என்று தெரிந்துகொள்வது அவசியம். கையால் எழுதும் ஜாதகத்தில் சில சமயம் தவறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர் கிடைத்தால், ஜாதகங்களைக் கணித்துச் சரிபார்க்க முடியும். ஒரே பஞ்சாங்கத்தில் கொண்டு வந்து பொருத்தம் பார்ப்பது திருப்திகரமாக இருக்கும். நக்ஷத்திரப் பொருத்தம், செவ்வாய் தோஷப் பொருத்தம், பாவசாம்யம், தசா சந்திப்பு என்ற 4 அம்சங்களையும் கவனமாகப் பார்க்க வேண்டும்.

1. யோனிப் பொருத்தம் தம்பதிகளின் அன்யோன்னிய உறவிற்கு அவசியம்.

2. ரஜ்ஜூ தட்டினால் அடிக்கடி இடம் மாறவேண்டி வரலாம், நோய்வாய்ப்பட்டு, திருமண வாழ்க்கை பாதிக்கப்படலாம், பிறக்கும் குழந்தைக்கு தோஷமும் கணவன் அல்லது மனைவி ஆயுளுக்குப் பாதிப்பும் வரலாம்.

3. ஷஷ்டாகமாக ராசி அமைந்தால் கணவன், மனைவி ஒற்றுமை பாதிக்கப்படும்.

4. செவ்வாய் தோஷம் சரியாகப் பொருந்தாவிட்டால், குடும்பத்தில் சண்டை சச்சரவு, பணக்கஷ்டம்.

5. குடும்ப நலன், உடல் நலம், மனநிலை, ஒழுக்கம், ஆயுள், இன்ப துன்பம், மாங்கல்ய பலம், தாம்பத்ய உறவு, படுக்கை சுகம் முதலியவை பாதிக்கப்படலாம்.

6. பாவசாம்யம் அல்லது தோஷசாம்யம் பார்க்காவிட்டால் ஒருவரின் தோஷத்தால் மற்றவர் பாதிக்கப்பட்டு, திருமண வாழ்க்கையில் பல கஷ்டங்கள் வர வாய்ப்பு உள்ளது.

7. தசா சந்திப்பு ஏற்பட்டால் எதிர்காலத்தில் சிரமமான காலகட்டங்களைச் சந்திக்க நேரிடும்.

இப்போது ஜாதகப் பொருத்தத்தின் விவரங்களைப் பார்ப்போம்.

நக்ஷத்திரப் பொருத்தம்

10 நக்ஷத்திரப் பொருத்தங்கள். தினம், கணம், ராசி, யோனி, ரஜ்ஜூ முக்கியமானவை. மற்ற ஐந்து, ராசி அதிபதி, வேதை, ஸ்த்ரீ தீர்க்கம், வசியம், மாகேந்திரம என்பன. தம்பதிகளின் உடலுறவிற்கு யோனிப் பொருத்தம் அவசியம்.

ரஜ்ஜூவில் சிரோ ரஜ்ஜூ, கண்ட ரஜ்ஜூ, ஊரு ரஜ்ஜூ, உதர ரஜ்ஜூ, பாத ரஜ்ஜூ என்று 5 வகை உள்ளது. ஒரே ரஜ்ஜூ அமையக் கூடாது. ரஜ்ஜூவும், யோனிப் பொருத்தமும் அமையாத ஜாதகங்களை ஒதுக்கிவிட வேண்டும். நக்ஷத்திரப் பொருத்தத்தை மட்டும் பார்த்துத் திருமணப் பொருத்தம் முடிவு செய்யக் கூடாது

செவ்வாய் தோஷம்

லக்னத்திலிருந்து 1-2-4-7-8-12ஆம் இடங்களில் செவ்வாய் இருப்பது செவ்வாய் தோஷம், லக்னம், சந்திரன், சுக்கிரன் 3இலிருந்தும், செவ்வாய் தோஷத்தைப் பார்க்க வேண்டும். செவ்வாய் தோஷத்திற்குப் பல விதிவிலக்குகள் உள்ளன. செவ்வாய் எந்த வீட்டில் இருக்கிறார் என்பதைப் பொருத்தும் இந்த விதிவிலக்குகளை அனுசரித்தும் கவனமாகப பொருத்த வேண்டும். செவ்வாய் தோஷம் இரத்த சம்பந்தப்பட்டது. செவ்வாய் தோஷம் இல்லாத ஜாதகத்தை செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்துடன் சேர்த்தால் திருமண வாழ்க்கை கண்டிப்பாகப் பாதிக்கப்படும். நோய்வாய்ப்பட்டு உயிருக்கு ஆபத்து வரக்கூடிய வாய்ப்புகூட உள்ளது.

பாவசாம்யம்

இதனை தோஷசாம்யம் எனவும் சொல்லலாம். பொதுவாக ஒரு ஜாதகத்தில் தோஷத்தை தரக்கூடியவர்கள் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது. இவர்களால் ஏற்படும் தோஷங்களை, லக்னம், சந்திரன், சுக்கிரன் என்ற மூன்றிலிருந்தும் ஒரு கணக்குப்போட்டு, பெண்ணிற்கு எவ்வளவு தோஷம், ஆணுக்கு எவ்வளவு தோஷம். பொருத்தலாமா, கூடாதா என்று தீர்மானிக்கும் மிக முக்கியமான அம்சம் பாவசாம்யம். தம்பதிகளின் நல்வாழ்விற்கு மிகவும் அவசியமானது. பாவசாம்யத்தில் பெண்ணின் தோஷம் ஆணின் தோஷத்தை விடக் குறைவாக இருப்பது நல்லது. இருவருக்கும் சமமாகவும் இருக்கலாம். பாவசாம்ய நிர்ணயத்திற்குச் சில விதி முறைகள் உள்ளன. அவற்றை அனுசரித்து பாவசாம்யத்தை முடிவுசெய்ய வேண்டும்.

தசா சந்திப்பு

எல்லா ஜாதகங்களிலும் ஜனனகால தசா இருப்பு குறிப்பிடப்பட்டு இருக்கும். உதாரணமாகக் சுக்ர தசை 8 வருஷம் 10 மாதம், 12 நாள் என்பது போல இருக்கும். இதிலிருந்து ஆண், பெண் இருவருக்கும் எந்தத் தசை எப்போது மாறுகிறது என்று 70 / 75 வயது வரை பார்க்க வேண்டும். ஒரு வருஷ காலத்திற்குள் ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ தசை மாறினால் பொருத்தம் இல்லை என்று தீர்மானிக்கப்படும்.

சில ஜோதிடர்கள் இருபாலருக்கும் ஒரே தசை (சமதசை) நடக்கிறதா என்று பார்ப்பார்கள். தசா சந்திப்பு, அல்லது சமதசை வந்தால், பிற்காலத்தில் சிரமமான கால கட்டங்களை கடக்க வேண்டிவரும். மேலும் களத்திர தோஷம், புத்திர தோஷம், நாடிப் பொருத்தம், ஆயுள் பாவம், சமசப்தமம், லக்ன பொருத்தம், ஷஷ்டாஷ்டகம், காலசர்ப்பதோஷம், நாகதோஷம், எப்படி இருக்கிறது என்று கவனிக்க வேண்டும். இவ்விதம் சரியான முறையில் ஜாதகப் பொருத்தம் பார்க்க அரைமணி நேரமாவது தேவைப்படும். சில நிமிடங்களில் பொருத்தம் பார்த்தால் சரியாகப் பார்க்க முடியுமா? எனது அனுபவத்தில் பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்தவர்கள் ஏதாவது ஒரு காலகட்டத்தில் பொருத்தம் பார்க்கிறார்கள். சிலர் காதலித்துவிட்டுப் பொருத்தம் பார்க்கிறார்கள். பொருத்தம் இல்லை என்றால் மனவேதனைப்படுகிறார்கள். தம்பதிகளுக்குள் மனக்கசப்பு ஏற்படுகிறது. பெற்றோர் துயரப்படுகின்றனர். பரிகாரம் தேடுகிறார்கள். திருமாங்கல்யத்தை மாற்றிக்கொள்கிறார்கள். திருமணப் பொருத்தம் பார்த்தும் கஷ்டங்கள் வருகின்றனவே என்று கேட்கலாம். அதற்கு வேறு எவ்வளவோ காரணங்கள் சொல்லலாம். வாழ்க்கையைச் சந்தோஷமாக நடத்துவது தம்பதிகளின் கையில்.

பொருத்தம் பார்க்கலாமா வேண்டாமா என்பது பெற்றோர் கையில்.

பொருத்தம் பார்த்துத் திருமணம் செய்வது தான் நல்லது. முடிவு உங்கள் கையில்.
---------------------------------------------------------------------------------------------

சரி, இவற்றை எல்லாம் எங்கே பார்ப்பது? என்னிடம் மென்பொருள் உள்ளது. பெண் மற்றும் பையனின் பிறப்பு விபரங்களைக் கொடுத்தால், அந்த மென் பொருள் இரண்டு ஜாதகங்களையும் அலசி பொருத்தம் உள்ளதா? அல்லது இல்லையா என்று சொல்லிவிடும். ஏ4 அளவில் 2 பக்கங்கள் விபரங்களைக் கொடுப்பதுடன். பொருத்தம் உள்ளது விவாகம் செய்யலாம் என்றோ அல்லது பொருத்தம் இல்லை விவாகம் செய்ய வேண்டாம் என்றோ சொல்லிவிடும்.

அது பணம் கொடுத்து நான் வாங்கி வைத்துள்ள மென்பொருள். ஆகவே பொருத்தம் பார்ப்பதற்கு நீங்கள் சிறிது கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும்.

திருமணத்திற்குக் காத்து இருப்பவர்களும் எழுதலாம். திருமணம் ஆனவர்களும் எழுதலாம். சரியான துணையோடுதான் வாழ்ந்துகொண்டிருக்கும் என்று திருப்தியடையலாம். அல்லது ரிசல்ட் வேறு மாதிரி இருந்தால், தெரிந்து கொண்டு அணுசரித்துக் கொண்டு போகலாம்.

என்ன சரிதானே?

விருப்பம் உள்ளவர்கள் எழுதுங்கள். என்னுடைய மின்னஞ்சல் முகவரி: spvrsubbiah@gmail.com
Subject Boxல்  Matching என்பதை மறக்காமல் குறிப்பிடுங்கள்!!!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.1.18

ஜோதிடத்தில் நமக்குத் தெரியாத உண்மைகள்!!!


ஜோதிடத்தில் நமக்குத் தெரியாத உண்மைகள்!!!

சித்திரை1
ஆடி1
ஐப்பசி1
தை1
--------------------------------------------
இந்த நாட்கள் எல்லாம் விழாவாகக் கொண்டாடப்படுவதை ஏதோ ஒரு சடங்கு அல்லது பழக்கம்  என்று  நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம்..

நம் முன்னோர்கள் இதுக்கு பின்னால் மிகப்பெரிய அறிவியலை வைத்திருக்கிறார்கள்...!

Lets look at the science behind it...

"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு" என்று பள்ளியில் படிக்கும் சிறார்களுக்கு சொல்லித்தருகிறோம்!!!!!!!....

என்றைக்காவது ஒரு compass கருவியை வைத்து சூரியன் உதிக்கின்றபோது பரிசோதனை செய்து பார்த்திருக்கிறோமா? நிச்சயமாக இருக்காது!!!.
--------------------------------------------
நமது கல்வியை வறையறுத்த ஆங்கிலேயர்கள், நம்மிடம் இருந்த முறையான  அறிவியலைக் கடாசிவிட்டு  அவர்களுக்குத் தெரிந்ததை பாடமாக தந்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். நாமும் அதைத்தான் இன்றுவரை கடை பிடித்துக் கொண்டிருக்கின்றோம்.
--------------------------------------------
ஆமாம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டும்தான் மிகத் துள்ளியமாகக் கிழக்கில் உதிக்கும்....

பிறகு சிறிது சிறிதாக வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட தினத்தில்  மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்...

மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...

இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு என்று போய்விட்டு மறுபடியும் கிழக்கிற்கு வருகின்ற நாள்தான் கணக்குப்படி ஒரு ஆண்டு ஆகும்..!!!!
--------------------------------------------
சரி... அதற்கும் தமிழ் மாதத்திற்கும்  என்ன சம்பந்தம் என்று உங்களுக்குத் தெரியுமா?
--------------------------------------------
சூரியன் சரியாக கிழக்கில் இருந்து தன் நகர்வைத் துவங்குகின்ற  நாள்தான் #சித்திரை1.., அதாவது தமிழ் புத்தாண்டு...!!!
(In science it is called Equinox)

பிறகு extreme வடகிழக்கு point தான் ஆடி1 .... (solstice)

மறுபடியும் கிழக்கிற்கு வருவது ஐப்பசி1 (equinox)

Going to extreme தென்கிழக்கு - தை1 (solistice)
--------------------------------------------
இந்த வானியல் மாற்றங்கள், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களை நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் திருவிழாக்களாகக் கொண்டாடினார்கள்...
--------------------------------------------
சித்திரை (equinox) - புத்தாண்டு
ஆடி (summer solstice) - ஆடிப்பிறப்பு
ஐப்பசி (equinox)- தீபாவளி
தை (winter solstice) - பொங்கல்
--------------------------------------------
நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதன் அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்...
--------------------------------------------
நமது முன்னோர்கள்....."தன்னிகரற்ற" மாபெரும் அறிவாளிகள் மிகவும் மகத்தானவர்கள்
-------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
===============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.12.17

Astrology: நீங்களும், நானும், சனிப் பெயர்ச்சியும்!


Astrology: நீங்களும், நானும், சனிப் பெயர்ச்சியும்!

சனி பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 19-12-2017 செவ்வாய்க்கிழமை காலை 9:59 மணி அளவில் விருச்சிக ராசியில் இருந்து
தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இடம் பெயர்கிறார்.
வீட்டை மாற்றுகிறார். எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்
கொள்ளுங்கள்.

எதற்காக வாக்கிய பஞ்சாங்கம்?

திருநள்ளாறு கோவிலில் அதைத்தான் வைத்து காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள் ஆகவே வாக்கிய பஞ்சாங்கம்!

சனி பகவான் இரண்டரை ஆண்டுகாலம் தனுசு ராசியில்
சஞ்சாரம் செய்வார். 12 ராசிகளுக்கான பலன்கள் சுருக்கமாக்
கீழே கொடுத்துள்ளேன்.

விரிவான, ராசிகள் வாரியான பலன்கள் வேண்டுமென்றால் எழுதுங்கள். ஏ4 சைசில் 9 பக்கங்கள் பி.டி.எஃப் (PDF) ஃபார்மாட்டில் உள்ளது. உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

எனது மின்னஞ்சல் முகவரி spvrsubbiah@gmail.com (இந்த முகவரிக்கு மட்டுமே எழுத வேண்டும்)

Subject boxல் மறக்காமல் ‘சனிப் பெயர்ச்சி’ என்று குறிப்பிடுங்கள்

அன்புடன்
வாத்தியார்
===================================
சுருக்கமான பலன்கள்:

----------------------------------------------------------------------------------------------------
மேலதிகத் தகவல்கள்!


காரைக்கால்:
திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற தெர்பாரண்யேஸ்வரர் கோயில்
(சனி பகவான் கோயில்) உள்ளது.

இங்கு வரும் 19ம் தேதி சனி பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.

இதையொட்டி பக்தர்கள் வசதிக்காக போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தருவது குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கலெக்டர் கேசவன் பேசுகையில், ‘தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து பக்தர்களை திருநள்ளாறுக்கு அழைத்து வருவதுபோல் மீண்டும் அதே பகுதிக்கு பக்தர்களை கொண்டு செல்வதிலும் பேருந்து நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும்
என்றார்!

சென்னை உள்ளிட்ட தொலைதூர பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் விழா முடியும் வரை சீர்காழி, சிதம்பரம், கும்பகோணம் போன்ற பகுதிகளில் ஏறி இறங்கும் பயணிகளை ஏற்ற மாட்டோம் என்று கூறக்கூடாது என்றும் கூறினார்.

பக்தர்கள் வசதிக்காக காரைக்கால்- கும்பகோணம் வழியாக 100 சிஆர்சி பேருந்துகள், காரைக்கால்- சென்னை வழியாக 100 சிஆர்சி பேருந்துகள், எஸ்இடிசி பேருந்துகள் 50, காரைக்கால்- புதுச்சேரி வழியாக 40 புதுச்சேரி சாலை போக்குவரத்து பேருந்துகள், 25 தனியார் பேருந்துகள் உள்ளிட்ட 350 பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

அதேபோல் திருநள்ளாறு யாத்ரிகா நிவாஸ் அருகில் ஒரு பேருந்து நிலையம், தேனூர் சுரக்குடி அருகில் ஒரு பேருந்து நிலையம் உட்பட 3 பேருந்து நிலையங்கள் மற்றும் வேன், கார், டூவீலர்கள் நிறுத்த தனி இடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றார். 

கோயில்கள் நிர்வாக அதிகாரி  விக்ராந்தராஜா, போக்குவரத்துத்துறை ஆய்வாளர் பழனிச்சாமி  மற்றும்
புதுச்சேரி சாலை போக்குவரத்துக்கழக, தமிழக சாலை  போக்குவரத்துக்கழக அதிகாரிகள் பங்கேற்றனர்.
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.12.17

மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என்றால் என்ன?


மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என்றால் என்ன?

தினசரி காலண்டரில் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என்று போட்டிருக்கிறார்களே, அப்படியென்றால் என்ன தெரியுமா...?*

மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் இரண்டோடு, சமநோக்கு நாள் என்பதும் நடைமுறையில் உள்ளது.
இவை மூன்றும் அன்றைய நட்சத்திரத்தின் அடிப்படையில் அமைகின்றன.

ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பதும்( ஊர்த்துவமுக ) நட்சத்திரங்கள் எனப்படுகின்றன.அதாவது, இந்த நட்சத்திரங்களைக் கொண்ட நாட்களை மேல்நோக்கு நாட்கள்.

இவை மேல்நோக்கி வளர்கின்ற பயிர்களுக்காக விதைக்கவும், மரங்களை நடுவதற்கும், மேல்நோக்கி எழும் கட்டிடங்கள் , உயரமான மதில் போன்றவற்றைக் கட்ட ஆரம்பிக்க உரிய நாட்கள் ஆகும்.

பரணி, கிருத்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்கள், ( அதோமுக ) நட்சத்திரங்கள், அதாவது, கீழ்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும். இந்த நட்சத்திரங்களைக் கொண்ட நாட்கள், கீழ்நோக்கு நாட்கள்.

இந்த நாட்களில் கிணறு வெட்டுதல், புதையல் தேடுதல், சுரங்கப் பணிகளை மேற்கொள்ளுதல், கிழங்கு வகைச் செடிகளைப் பயிரிடுதல் முதலான பணிகளைச் செய்வது நல்லது.

அஸ்வினி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி ஆகிய ஒன்பதும் ( த்ரியக்முக ) நட்சத்திரங்கள், அதாவது, சமநோக்கு நட்சத்திரங்கள் ஆகும்.

இந்த நட்சத்திரங்கள் இடம் பெறும் நாட்கள், சமநோக்கு நாட்கள்.

இந்த நாட்களில் வாகனங்கள் வாங்குதல், செல்லப் பிராணிகள், பசு, காளை வாங்குதல், சாலை அமைத்தல், வாசக்கால் வைத்தல், வயல் உழுதல் ஆகிய பணிகளைச் செய்வது உத்தமம்.

*நீங்களே இந்த நாட்களை தினசரி காலண்டர்கள் மூலமாக அறிந்து கொள்ளலாம்.தினசரி காலண்டரில்* *மேல்நோக்கு நாள், கிழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் என்று வார்த்தையில் பதிவு செய்யப்பட்டு இருக்கும். அல்லது குறியீடு முறையில் இருக்கும்.*

படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
===============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.11.17

அஷ்டமி, நவமி திதிகளை ஏன் தவிர்க்கிறோம்?


அஷ்டமி, நவமி திதிகளை ஏன் தவிர்க்கிறோம்?

அஷ்டமியன்றும், நவமி அன்றும் கிளம்பும் ரயில்கள் என்ன நடுவழியிலா நிற்கிறது ? அதே நாளில் கிளம்பும் விமானங்கள் கடலில் விழுந்துவிடுகிறதா ? பகுத்தறிவு வாதிகள் கேட்பார்கள்.

நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல .

நம் முன்னோர்கள் அஷ்டமி  அன்றும் , நவமி அன்றும் நல்ல காரியங்கள் ஏன் செய்வதில்லை ?  அதற்க்கு என்ன காரணம் ?

அதில்தான் விஞ்ஞானம் இருக்கிறது. நம் முன்னோர்களின் வானியல் அறிவு அதில் பளிச்சிடுகிறது.

கிருஷ்ண பரமாத்மா அஷ்டமி அன்று பிறந்ததால் ஒரு மிகப்பெரிய போரை நடத்த வேண்டி இருந்தது.

ஸ்ரீ ராமன் நவமி அன்று பிறந்ததால் அவரது வாழ்வில் 14 வருடம் காட்டில் கழிக்க வேண்டி இருந்தது. இதுதான் காரணமா ?

இல்லை !!!!

பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதை ஒரு நாள் என்று சொல்கிறோம்.

அதே பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றி வருவதை ஒரு வருடம் என்கிறோம்.

நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றி  வருவதை ஒரு மாதம் என்கிறோம். அதனால் தான் மாதத்திற்கு திங்கள் என்ற பெயர் உண்டு. ( திங்கள் என்றால் சந்திரன்)

நிலவு தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றிவரும்போது ஒரு பாதி சுற்று ( 15 நாட்கள் அமாவாசையாகவும் ) அடுத்த 15 நாட்கள் பௌர்ணமி என்றும் சொல்கிறோம்.

அமாவாசைக்கும், பௌர்ணமிக்கு இடைப்பட்ட எட்டாவது நாளை அஷ்டமி என்று சொல்கிறோம். ஒரு மாதத்திற்கு இரண்டு அஷ்டமி வரும்.தேய்பிறை அஷ்டமி என்றும் வளர்பிறை அஷ்டமி என்றும் சொல்கிறோம்.

சரியாக அஷ்டமி தினத்தன்று நாம் வாழும் பூமியானது சூரியனுக்கும், சந்திரனுக்கும் நடுவில் வருகிறது.

அவ்வேளையில் சூரியனின் சக்தியும் , சந்திரனின் சக்தியும் பூமியை தங்கள் பக்கம் இழுப்பதால் ஒருவித Vibration ஏற்படுகிறது.

அந்த Vibration  பூமியில் உள்ள அனைத்து ஜீவராசிகளிடமும் எதிரொலிக்கும்.

பேருந்தில் நாம் பயணம் செய்யும்போது நம்மால் சரியாக எழுத்முடிவதில்லை அல்லவா ? அதைப்போன்று.

அதன்காரணமாக எந்த ஜீவராசியாலும் ஒரு நிலையான முடிவை எடுக்க முடியாது. அவ்வேளைகளில் நாம் எடுக்கும் முடிவும் நிலையற்றதாக இருக்கும்.

நவமி கழிந்தபிறகே பூமி தனது இயல்பு நிலைக்கு திரும்பும். அப்போதுதான் மனிதர்கள் உட்பட அனைத்து ஜீவராசிகள் மனமும் நிலை பெரும்.

அதனால் அஷ்டமி அன்றும், நவமி நவநாழிகை வரை எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் முடிவெடுத்தார்கள்.

இப்போது சொல்லுங்கள் நம் முன்னோர்கள் சொல்வது சரிதானே?

படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.10.17

Astrology: ஜோதிடம்: குடை யோகம்!!!


Astrology: ஜோதிடம்: குடை யோகம்!!!

யோகங்களைப் பற்றிய பாடம்!

Chhatra என்னும் வடமொழிச் சொல்லிற்குக் குடை என்று பொருள். குடை நமக்கு வெய்யிலும், மழையிலும் பாதுகாப்புத் தரும். அதுபோல இந்த யோகம், ஜாதகனுக்கு இன்பத்திலும் துன்பத்திலும் பாதுகாப்புத் தரும்.

இந்த அமைப்புள்ள ஜாதகன் தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு, சுயநலமின்றி பாதுகாப்புத் தருவான்.

இன்பத்தில் பாதுகாப்பா? விளங்கவில்லையே என்று சொல்லாதீர்கள். இன்பமான சூழ்நிலையில், மனிதன் தகாத செயல்களைச் செய்து விடாமால் அவனைப் பாதுகாக்கும்! அதாவது அவனை நெறி பிறழாமல் பாதுகாக்கும்.

”ஆடிய ஆட்டமென்ன?
தேடிய செல்வமென்ன?
பேசிய வார்த்தை என்ன?
திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால்
கூடவே வருவதென்ன?” என்று பாட்டெழுதி சக மனிதனைக் கவியரசர் கண்ணதாசன் சிந்திக்க வைத்தாரே - அத்தகைய ஆட்டமில்லாமல், பிறப்பில் இருந்து இறப்புவரை ஒருவனைப் பாதுகாக்கும் யோகம் இந்த யோகம்!
--------------------------------------------------------
யோகத்தின் அமைப்பு: லக்கினத்தில் இருந்து முதல் ஏழு கட்டங்களுக்குள் அத்தனை கிரகங்களும் குடி கொண்டிருப்பது இந்த அமைப்பைத் தரும். யோகத்தைத் தரும்

பலன்: ஜாதகன் பிறப்புமுதல் இறப்புவரை மகிழ்ச்சியாக இருப்பான். தனது உடன் பிறப்புக்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் உதவியாக இருப்பான். அன்பு மிகுந்தவனாக இருப்பான். சமூகத்தில் உயர்ந்தநிலையில் இருப்பவர்களின் மதிப்பைப் (செல்வாக்கைப்) பெற்றிருப்பான். அதீத புத்திசாலியாக இருப்பான். நீண்ட நாள் வாழ்ந்திருப்பான். அதைவிட முக்கியம், வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சி நிரம்பியவனாக இருப்பான்.

அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.10.17

Astrology: ஜோதிடம்: உங்கள் ஜாதகத்தை நீங்களே அலச வேண்டுமா?


Astrology:  ஜோதிடம்: உங்கள் ஜாதகத்தை நீங்களே அலச வேண்டுமா?

உங்கள் ஜாதகத்தை நீங்களே அலச வேண்டுமா? 

     “என்ன சார் கேள்வி? ஆசை இருக்காதா பின்னே? என் ஜாதகத்தை மட்டுமல்ல எங்கள் வீட்டில் உள்ள மற்றவர்களின் ஜாதகத்தையும் அலசிப் பார்க்க வேண்டும்” என்கிறீர்களா!

அதற்கு ஜோதிடப் பாடங்களைப் படிப்பதுடன், பயிற்சிப் பாடங்களையும் படிக்க வேண்டும். கிரிக்கெட்டில் நெட் பிராக்டீஸ் உள்ளதல்லவா - அதைப் போல!!!

உதாரண ஜாதகங்களுடன் இரண்டு பயிற்சி பாடங்களை ஒவ்வொரு வாரமும் சொல்லிக் கொடுப்பதாக உள்ளேன். அதைத் தனி இணைய தளத்தில் துவங்கலாம் என்று உள்ளேன். இங்கே எழுதினால் உடனுக்குடன் திருட்டுப் போகும்.

விருப்பம் உள்ளவர்கள், அதற்கான விதிமுறைகள் சேர்க்கைகளுக்கு  மின்னஞ்சலில் எழுதுங்கள். அதற்கான மின்னஞ்சல் முகவரி: spvrsubbiah@gmail.com

Practical Lessons  - பயிற்சிப்பாடங்கள் என்று சப்ஜெக்ட் பாக்ஸில் மறக்காமல் குறிப்பிடுங்கள்.

எத்தனை பேர்கள் இதில் விருப்பம் உடையவர்களாக இருப்பீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

ஆகவே உடனே எழுதுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.10.17

Astrology: ஜோதிடம்: சக்ரா யோகம்


Astrology: ஜோதிடம்: சக்ரா யோகம்

யோகங்களைப் பற்றிய பாடம்!!!

சக்கரம் என்றவுடன் நமது மனக்கண் முன்பாக வந்து நிற்பது வண்டிச் சக்கரம்

வண்டி, இயந்திரம் முதலியவற்றின் இயக்கத்திற்குப் பயன் படும் அச்சில் சுழலக்கூடிய வட்டமான உறுப்பு. காரின் சக்கரம். புராணத்தில் திருமாலின் கையில் உள்ளதும் சுழன்று சென்று பகைவரை அழிப்பதுமான ஆயுதம்!

இன்னும் பல சக்கரங்கள் உள்ளன!

காலச் சக்கரம்
வாழ்க்கைச் சக்கரம்
ராசிச் சக்கரம்
நவாம்சச் சக்கரம்

பொதுவாகச் சுழற்சியைக் கொடுப்பது எல்லாம் சக்கரம்தான்.

மனித உடம்பிலும் ஆறு சக்கரங்கள் இருந்து சக்தியை உருவாக்கிக் கொண்டிருக்கும் என்று சொல்வார்கள். அதை மேலே உள்ள படத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

யோகத்தின் அமைப்பு: பத்தாம் வீட்டில் ராகு, பத்தாம் வீட்டு அதிபதி லக்கினத்தில், லக்கின அதிபதி 9ஆம் வீட்டில் இருந்தால் அது இந்த யோகத்தைக் கொடுக்கும். அதுபோல ஒற்றைப் படை வீடுகளில், அதாவது ஜாதகத்தில் 1,(லக்கினம்), 3, 5,7,9,11   ஆகிய வீடுகளில் எல்லா கிரகங்களும் இருப்பதும் இந்த யோகத்தைக் கொடுக்கும்.

பலன்: ஜாதகன் நாட்டின் ஒரு பகுதிக்கு நிர்வாகியாகும் நிலைக்கு உயர்வான். அது கிராம அதிகாரி அல்லது பஞ்சயாத்து ஒன்றியத் தலைவர் பதவியில் இருந்து மாவட்ட ஆட்சியாளர், மாநில ஆளுனர், முதன் மந்திரி பதவி வரைக்கும் மாறுபடலாம். அந்த பதவி வித்தியாசம் ஏற்படுவதற்கு, குறிப்பிட்டுள்ள அந்த வீடுகளின்/வீட்டு அதிபர் களின் அஷ்டகவர்க்கப் பரல்கள், சுயவர்க்கப்பரல்களின் அளவு காரணமாக இருக்கும். ஜாதகன் பொதுவாகப் பலரின் மரியாதைக்கு உரியவனாக விளங்குவான். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உடையவனாக விளங்குவான்.

சிலர் ஜாதகத்தில் மற்ற அம்சங்கள் மாறுபடும்போது, ஜாதகன் ராணுவத்தில் சேர்ந்து நல்ல அந்தஸ்த்தில் பணிபுரிவான்.

சார், 3ல் எனக்கு 2 இருக்கிறது, பாதி யோகம் உண்டா? என்று யாரும் கேட்க வேண்டாம். செயல்பாடுகள் பாதியாக இருப்பது பயன்படாது. நான்கு சக்கரங்களில், இரண்டுதான் இருக்கின்றன அல்லது இரண்டுதான் காற்றுடன் இருக்கின்றன எனும்போது கார் எப்படி ஓடும்?யோசித்துப் பார்த்து விட்டு எழுதுங்கள்!

நன்றி, வணக்கம்

அன்புடன்,
உங்கள் வகுப்பறை,
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!