மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 861 - 870. Show all posts
Showing posts with label Lessons 861 - 870. Show all posts

6.4.15

Astrology: quiz number.81 திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்!


Astrology: quiz number.81 திருமணமாம் திருமணமாம் 
தெருவெங்கும் ஊர்வலமாம்!

திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்

கூரை நாட்டுப் புடவை கட்டிக் குனிந்திருப்பாளாம் - ஒரு
கூடை நிறையும் பூவைத் தலையில் சுமந்திருப்பாளாம்
கூரை நாட்டுப் புடவை கட்டிக் குனிந்திருப்பாளாம் - ஒரு
கூடை நிறையும் பூவைத் தலையில் சுமந்திருப்பாளாம்
சேர நாட்டு யானைத் தந்தம் போலிருப்பாளாம்
சேர நாட்டு யானைத் தந்தம் போலிருப்பாளாம் - நல்ல
சீரகச்சம்பா அரிசி போலச் சிரிச்சிருப்பாளாம் 
சிரிச்சிருப்பாளாம் ஹோஹோஹோஹோ

திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்

செம்பருத்திப் பூவைப் போல செவந்திருப்பாளாம் - நைசு
சிலுக்குத் துணியப் போலக் காற்றில் அசைந்திருப்பாளாம்
செம்பருத்திப் பூவைப் போல செவந்திருப்பாளாம் - நைசு
சிலுக்குத் துணியப் போலக் காற்றில் அசைந்திருப்பாளாம்
செப்புச் சிலை போல உருண்டு தெரண்டிருப்பாளாம்
செப்புச் சிலை போல உருண்டு தெரண்டிருப்பாளாம் நல்ல
சேலஞ்சில்லா மாம்பழம் போல் கனிதிருப்பாளாம்

திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்

ஊர்வலத்தில் வந்தவள் யர் கூறடியம்மா அவள்
உடனிருந்த மாப்பிள்ளை தான் யாரடியம்மா
ஊர்வலத்தில் வந்தவள் யர் கூறடியம்மா அவள்
உடனிருந்த மாப்பிள்ளை தான் யாரடியம்மா
மாலை சூடும் மணமகளும் நீதாண்டியம்மா
மாலை சூடும் மணமகளும் நீதாண்டியம்மா இந்த
மணமகனைக் கண் திறந்து பாரடியம்மா
பாரடியம்மா ஹோஹோஹோஹோ ஹொஹோ

திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்
ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம்

திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம்

பாடல்: திருமணமாம் திருமணமாம்
திரைப்படம்: குடும்பத் தலைவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1962
-----------------------------
என்னவொரு வர்ணனை பாருங்கள்:
கூரைநாட்டுப் புடவை. தலையில் ஒருகூடை பூ,
சேர நாட்டு யானைத் தந்தம்போன்ற தோற்றம்,
சீர்கச் சம்பா அரிசி போன்ற சிரிப்பு
செம்பருத்திப் பூவைப் போன்ற சிவந்த மேனி
செப்புச்சிலை போன்ற வடிவமைப்பு,
சேலம் ஜில்லா மாம்பழம் 
என்று கவியரசர் கண்ணதாசன் அசத்தியிருக்கிறார் பாருங்கள்
------------------------------------------------------------------------
Quiz No. 81

6.4.2015

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!


மேலே உள்ள ஜாதகம் ஒரு அம்மணியின் ஜாதகம்.

ஜாதகத்தை அலசி அம்மணியின் திருமண வாழ்க்கை பற்றிய உங்கள் கணிப்பை எழுதுங்கள்.

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்!

விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
-------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

11.3.15

Quiz.no.80 Answer: தைமாத மேகம் தரையில் வாடவில்லை!


Quiz.no.80 Answer: தைமாத மேகம் தரையில் வாடவில்லை!

புதிர் எண் 80ற்கான விடை

11.3.2015
--------------------------------------
நேற்றையப் பதிவில், அம்மணி ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து 2 கேள்விகளைக் கேட்டிருந்தேன்.

கேட்கப்பெற்றிருந்த கேள்விகள்:

1. அம்மணிக்கு பார்த்த வரன்களெல்லாம் ஒன்று கூட அமையவில்லை. திருமணம் அதீத தாமதமானது. ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?
2.அம்மணிக்குத் திருமணம் ஆனதா? அல்லது ஆகவில்லையா? ஆனது என்றால் எப்போது ஆனது? ஆகவில்லை என்றால் ஏன் ஆகவில்லை?

சரியான பதில்:
1. ஏழாம் வீடு அதீத பாதிப்பிற்கு உள்ளாகி யிருந்ததால் திருமணம் தாமதமாகியது.
2. ஜாதகிக்குத் திருமணம் அவளுடைய 32 வது வயதில் நடைபெற்றது.

ஜாதகப்படி என்ன காரணம்? வாருங்கள், பார்ப்போம்!

மகர லக்கின ஜாதகம்.
ஏழாம் வீட்டில் 12ம் வீட்டுக்காரன் குரு வந்து அமர்ந்திருக்கிறான்.
களத்திரகாரகன் சுக்கிரன் ஆறாம் வீட்டில் போய் அமர்ந்திருக்கிறான். ஏழாம் வீட்டுடனோ அல்லது லக்கினத்திடனோ அவனுக்குத் தொடர்பில்லை.
அத்துடன் சுக்கிரன் 6ம் வீட்டு அதிபதி புதனுடன் பரிவர்த்தனையாகி மேலும் கெட்டிருக்கிறான்.
ஏழாம் வீட்டு அதிபதி சந்திரன் நீசமாகியுள்ளான்.
தாமதத்திற்குக் காரணம் மேற்கூரிய அமைப்புக்கள்தான்.

ஆனால் ஒரு ஆறுதல்.ஏழாம் வீட்டுக்காரன் நீசமானாலும், ஏழில் அமர்ந்திருக்கும் குருவின் பார்வையைப் பெற்று, ஜாதகிக்குத் திருமணத்தை அமைத்துக் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருக்கிறான்.
ஜாதகிக்கு 18 வயதில் துவங்கி 38 வயது வரை சுக்கிர திசை.
ஜாதகியின் 31வது வயதில் சுக்கிர மகாதிசையில் சனி புத்தி துவங்கியது.
சனீஷ்வரன் லக்கினத்திற்கும் 2ம் வீட்டிற்கும் அதிபதி அவனும் சுக்கிரனும் சேர்ந்து தங்கள் தசாபுத்திகளில் ஜாதகிக்குத் திருமணத்தை நடத்தி வைத்தார்கள். உச்சமான குரு பகவான் கோச்சாரப்படி தன் நகர்வில் அதற்கு உதவி செய்தான்.
ஜாதகிக்கு அவளுடைய 32வது வயதில் திருமணம் நடந்தது

அலசல் போதுமா?
-----------------------------------------
போட்டியில் 32 பேர்கள் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். அவர்களில் 15 மட்டுமே இரண்டு கேள்விகளுக்கும் சரியான பதிலை/ஒட்டிய பதிலை எழுதியிருக்கிறார்கள். அதிலும் 3 பேர்கள் மட்டும்தான் திருமணம் நடந்த வயது அல்லது திசா புத்தியைச் சரியாகக் குறிப்பிட்டு 100/100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்கள். அவருக்கு மிகுந்த பாராட்டுக்கள். 12பேர்கள் திருமணம் ஆனதைக் குறிப்பிட்டுள்ளார்கள். திருமணம் நடந்த தசாபுத்தி அல்லது வயதில் குழம்பியிருக்கிறார்கள். அவர்களுக்கும் அவற்றிற்குரிய மதிப்பெண்களை வழங்கியிருக்கிறேன். மதிப்பெண்களைக் குறித்து யாரும் சண்டைக்கு வரவேண்டாம். அதை வாத்தியார் கொடுத்தவரை சரிதான் என்று எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்!

ஜாதகிக்குத் திருமணம் அவளுடைய 32 வது வயதில் நடைபெற்றது என்பதுதான் key answer
சுக்கிரதிசை குருபுத்தியில் திருமணம் நடந்தது என்று சிலர் எழுதியிருக்கிறார்கள். சுக்கிரதிசை சனிபுத்தியில் என்பது துல்லியமான விடையாகும்!

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
90 marks........////////Blogger Kirupanandan A said...
    இந்த ஜாதகத்தை பார்த்த முதல் பார்வையில் நான் நினைத்தது. "என்ன ஒரு ஆச்சரியம். முழு சுபனான குரு 7ல் உச்சமாக இருந்தும் திருமணம் தாமதமானதா?"
    1) தாமதத்திற்கு காரணம்: களத்திரகாரகனும் இந்த லக்கினத்திற்கு யோககாரகனுமான சுக்கிரன் 6ல் மறைவு. களத்திரஸ்தானாதிபதி சந்திரன் நீசம். 7ல் குரு உச்சமானாலும் இந்த ஜாதகத்திற்கு 2 துர்ஸ்தானங்களுக்கு அதிபதிமாகிறார்.
    முதல் கேள்வியில் திருமணம் தாமதம் என்று குறிப்பிட்டு விட்டு 2 கேள்வியில் ஆனதா இல்லையா என்று கேட்கிறீர்கள். அடுத்த பதில் தவறானால் அதற்கு தாங்கள்தான் பொறுப்பு. (தமாஷ்).
    2) திருமணம் ஆனது. 31 வயதிற்கு மேல் சுக்கிர தசையில் புதன் புத்தியில் நடந்தது. (இதற்கு தோதான பாடல் ஞாபகத்திற்கு வரவில்லை. நீங்களே உங்களுக்கு பிடித்த சரியான பாடலை இதற்கு போட்டுக் கொள்ளுங்கள்.)
    Tuesday, March 10, 2015 8:13:00 AM//////
-------------------------------------------------
2
90 marks .....//////Blogger slmsanuma said...
    Laknathipathi Saturn is looked by Vakkira Sevvai.
    Raghu looked the Second Place. Raghu also looked Sukkaran Karagan. Karagan Sukkaran is in 6th place (hidden place) and also 12th place to 7th place.
    Bhavagapathi Chandiran is in 11th place and Neecham. 11th place is also 5th place to the Bhavagam.
    Ucha Guru in 7th place looked Laknam and 7th Bhagavathipathi Chandiran.
    1) Marriage is delayed due to Karagan Sukkaran is in 6th place (hidden place) and also 12th place to 7th place. Bhavagapathi Chandiran is in 11th place and Neecham.
    2) Ucha Guru in 7th place looked Laknam and 7th Bhagavathipathi Chandiran.
    So the native got delayed marriage in her Sukkira Thisai and Guru Bukthi at the age of 30 years.
    Tuesday, March 10, 2015 8:16:00 AM/////////
------------------------------------------------
3
100 marks......../////OpenID guest2015 said...
    1. அம்மணிக்கு பார்த்த வரன்களெல்லாம் ஒன்று கூட அமையவில்லை. திருமணம் அதீத தாமதமானது. ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?
    Reason for delayed marriage..
    lagna lord in 3rd house (inimical house in both rasi and navamsa)
    venus karaka for marriage is in 6th house. dainya parivartan yoga between 5th and 6th lord.
    retrograded mars in 9th house. 9th house lord mercury is weak with 3 bindus.
    Neecha mars(R) in navamsa with rahu in cancer.
    7th house lord moon under rahu ketu aspect/company. (navamsa)
    12th house lord Jupiter exalted in 7th house also it is 6th to 2nd house. Jupiter is alone in the 7th house which is not good.
    Rahu and maandhi in 4th house.
    2.அம்மணிக்குத் திருமணம் ஆனதா? அல்லது ஆகவில்லையா? ஆனது என்றால் எப்போது ஆனது? ஆகவில்லை என்றால் ஏன் ஆகவில்லை?
    YES.. delayed marriage
    venus and mars aspecting 12th house, 12th lord exaltation ensures family life.
    7th lord moon is strong with 5 bindus aspecting his own house in navamsa
    exalted jupiter in 7th house. aspecting moon in navamsa.
    marriage might have happened during venus dasha- saturn or mercury sub period. that is after 1997.
    thank you!
    Tuesday, March 10, 2015 9:11:00 AM///////
-----------------------------------------------
4
90 marks....///////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
    Quiz 80க்கான பதில்.
    1.களத்திர காரகன் மற்றும் மகர லக்கின யோகாதிபதி சுக்கிரன் 6ல் மறைவு. களத்திர ஸ்தானாதிபதி சந்திரன் நீச்சம், மேலும் 7ல் குரு உச்சம். லக்கினாதிபதி சனியின் மீது வக்கிர செவ்வாய் பார்வை. ஆகவே அதீத தாமத திருமணம்.
    2. 30 வயதிற்கு மேல் சுக்கிர திசை, குரு புத்தியில் திருமணம் நடைபெற்றது. குரு சந்திர யோகம் உள்ளதால் நிச்சயம் திருமணம் நடைபெற்று இருக்கும்.
    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.
    Tuesday, March 10, 2015 9:58:00 AM/////
------------------------------------------------
5
90.....////////Blogger Chandrasekharan said...
    Respected Sir Vanakkam,
    1.) திருமணம் அதீத தாமதமானது endru neengaley Thirumanam aanadhai confirm seidhuviteer..
    2.) Jadhagikku 34 vayadhil Sukhra dhasa and budhan bukthiyil thirumanam nadandhirukkum.
    Lagnathipathi sani 3-il. 12 & 3-m adhipathy Guru, 7-il uccham. 7-m adhipathy chandran neecham kalathira kaaragan sukran 6-il adhanal thirumanam thamadhamadhu.
    18-vadhu vayadhil sukra dhasa. shukran 5-m adhipathyaga irundhalum avar 6-m adhipathy budhanudan parivardhanai.
    Parivardhanai endraley ivargal dhasavil avarum, avaradhu dhasavil ivarum palangalai seivaargal.
    sukran dhasavil budhan palangal nadandhirukkum. budhan 6-m adhipathy (Thirumanam veetirkku 12-m veedu). budhan sukrnai pole velai seivaar adhanal sukra dhasavil budhan bukthiyil thirumanam nadandhirukkum. sukra dhasa budhan bukthi 34 vayadhil.. aagavey 34 vayadhil adhidha thamadamaga (Pengalukku adhu adhidha thamadamadhamdhan)thirumanam nadandhirukkum.
    Thank You.
    Tuesday, March 10, 2015 1:21:00 
-------------------------------------------------
6
90marks......////////Blogger amuthavel murugesan said...
    Answer to Quiz:80
    1. Married in Sukra dasa Guru pudhi.
    Guru in 7th place with ucham.He must do marriage.
    Delay reason;
    Sukran in 6th place and 12 th place guru in 7th place.
    M.Santhi
    Tuesday, March 10, 2015 1:23:00 PM//////
---------------------------------------------------
7
90marks......//////Blogger kmr.krishnan said...
    ஜாதகி 24 மே 1967, இரவு 11 மணி 18 நிமிடம் 15 விநாடிக்குப் பிறந்தவர்.
    பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.
    1.திருமணம் தாமதமாக ஆனதற்கான காரணங்கள்: 7ம் அதிபன் சந்திரன் 11ல் நீசமடைந்தது.7ம் அதிபன் சந்திரனுக்கு 6ம் அதிபன் புதன், 8ம் அதிபன் சூரியனின் நேர் பார்வை.களத்திரகார‌கன் சுக்கிரன் 6ல் மறைந்தது.12,3க்கு உடைய குருஜி7ல் சென்று அமர்ந்தது.5ம் இடத்தில் 6,8க்கு உடையவர்கள் அமர்ந்ததால் குழந்தை பிறப்பு பற்றிய சந்தேகம் ஏற்பட்டு வரன் வீட்டினர் பல ஆண்டுகள் விலகிப் போயினர்.நவாம்சத்திலும் அந்த லக்கினத்திற்கு 7ம் இடத்திற்கு சனி கேது இரு பக்கங்களிலும் நின்றது.
    2. திருமணம் நடந்தது. 27 வயதில் சுக்கிரதசா குருபுக்தியில் திருமணம் நட‌ந்தது.சுக்கிரன் ஜாதகிக்கு யோககாரகன். எனவே அவரது தசாவில் திருமணம் நடந்தது. ராசி நவாம்சம் இரண்டிலுமே சந்திரனை குருபார்ப்பதால் கட்டாயம் திருமணம் உண்டு.
    Tuesday, March 10, 2015 1:28:00 PM/////////
---------------------------------------------------
8
90 marks.....///////Blogger bala said...
    Vanakkam Iyya,
    1.
    7aaam veedu kalathira sthanam
    Thirumanathiruku 7aam veedu + 7aam athipathi + 7aam veetuku kidaikum paaravayai+ 7 aam veetil amarnthirukum grahangalai+ Kalathira kaaragan paarka vendum.
    Intha jaathagathil,
    7 aam athipathi - Neecham (Chandran neecham in viruchigam)
    Kalathira kaaragan + yogakaaragan (for makara lagnam) - Sukran lagnathuku 6aam veetil.
    Chandran neecham aanalum, avan amarnthirupathu lagnathuku 11 aam veetil.
    Chandran ku 8aam athipathi (Maangalya sthanathipathi sooriyan + Villan aana 6aam veetukaaranin paaravai (Budhan suryanudan sernthu 6 aam veetu porupai yetrullan)
    Chandranku 7aam veetil amaranthirukum guru paaravai.
    Pothuvana vithi : 7il guru amarnthaal nala kanavan/Manaivi amayvaargal enbathu.
    9 aam veedanana bagya sthanthil Sevvai amarnthu irukiraar. (Makara lagnathuku sevvai nallavar kidayathu) + Antha sevvai ku lagnathipathiyin paaravaiyum kooda.
    9 aam veetinil sevvai irunthu thirumana bagyathai kaalaam kadathinaar.
    Ivai ellam sernthu thirumana thaamathathiruku kaaranam aanadhu.
    2.
    Thirumanam kandipaga nadanthu irukum.
    Guruvum + Kalathira kaaragan sukkiranum sernthu - Sukra thasai Guru buthiyil thirumanthai nadathi vethirupaargal.
    Tuesday, March 10, 2015 2:47:00 PM//////
-----------------------------------------------------
9
90 marks ......///////Blogger Sivachandran Balasubramaniam said...
    அன்பிற்குரிய ஐயா !!!
    புதிர் எண்: 80 இற்கான பதில் !!!!
    குடுக்கப்பட்ட ஜாதகி மகர லக்கினத்தில் பிறந்தவர். லக்கினாதிபதி சனி மூன்றாம் வீட்டில் (குரு வீட்டில் ) அமர்ந்துள்ளார். களத்திரஸ்தானாதிபதி சந்திரன் லாபஸ்தானத்தில் நீசம். 6 மற்றும் 8 ஆம் அதிபதிகளான புதன் மற்றும் சூரியன் 5இல் (பூர்வபுண்ணியத்தில்) அமர்ந்து 7ஆம் அதிபதி சந்திரனை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதாலும், 12 ஆம் அதிபதி 7இல் குரு உச்சமாய் அமர்ந்து இருப்பதாலும் ஜாதகிக்கு திருமணம் தாமதம். குரு பார்வை சந்திரனின் மேல் 5ஆம் பார்வையாக விழுவதால் ஜாதகிக்கு தனது 37ஆம் வயதில் சுக்கர திசை குரு புத்தியில் திருமணம் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது. இது திருமணம் மறுக்கப்பட்ட ஜாதகம் அல்ல !!!!
    சிவச்சந்திரன்.பா
    Tuesday, March 10, 2015 3:04:00 PM///////
-----------------------------------------------
10
100 marks.....////////Blogger asbvsri said...
    Quiz No: 80 – Answer
    ஐய்யா வணக்கம்.
    லக்னாதிபதி சனி மூன்றாம் இடத்தில். இரண்டுக்கு இரண்டாம் இடம். ஜன்ம பகைவன் செவ்வாயின் பார்வையில்.
    ஏழாம் இடத்ததிபதி மாரகாதிபதி சந்த்ரன் நீச்சம் – 11 ஆம் இடத்தில் – பாதகஸ்தானத்தில். நவாம்சத்தில் பகைவன் சனியின் வீட்டில், கேதுவுடன், – ராஹு, செவ்வாய் பார்வையில். மேலும் ராஹுவும் செவ்வாயும் இரண்டாம் இடத்தில் களத்திரத்தின் குடும்பஸ்தானத்தை வெகுவாக கெடுக்கிறார்கள். சுகஸ்தானாதிபதி (பாதகாதிபதி) செவ்வாய் கன்னியில், பகைவன் வீட்டில். நவாம்சட்தில் நீச்சம், ஏழாம் அதிபதி (ராசி) சந்த்ரன் வீட்டில். மேலும் சுகஸ்தானமான 4 ஆம் இடம் மாந்தியால் வேறு கெட்டிருக்கிறது.
    களத்திரகாரகன் சுக்ரன் ஆறாம் இடத்தில் இருப்பதால் சுகமில்லை.
    குரு உச்சமாக இருந்தாலும், 12 க்கும், 3 க்கும் அதிபதி, தவிர நவாம்சத்தில் பகைவன் புதன் வீட்டில் இருப்பதால் ப்ரயோஜனமில்லை.
    ஆக திருமணத்திற்கு உதவி செய்யும் சுக்ரன், குரு மற்றும் 7 ஆம் அதிபதி தீய ஸ்தானத்தில் இருப்பதால் திருமணம் தாமதமானது. யோகாதிபதி சுக்ரன் அவருடய தசையில் திருமணத்தை நடத்திவைத்தார்.
    இருப்பு தசை புதன் 10 வருடம், 7 மாதம். பிறந்த தேதி மே மாதம் 24 ஆம் தேதி 1967 வருடம். கேது தசை 1985 வரை திருமணம் நடக்கவில்லை. சுக்ர தசையில் திருமணம் லக்னாதிபதி சனிபகவான் புக்தியில் 7 ஆம் அதிபதி சந்த்ரன் அந்த்ரத்தில் திருமணத்தை 1999 / 2000 ஆண்டில் குரு பகவான் கோள்ச்சாரத்தில் மீனத்தில் இருக்கும்போது நடத்திவைத்தார்.
    K R Ananthakrishnan, Chennai
    Tuesday, March 10, 2015 3:27:00 /////////
-----------------------------------------------
11
75 marks......///////Blogger anand tamil said...
    1.அதீத தாமததிற்க்கு காரணம் 7ம் அதிபதி சந்திரன் நீசம். 7‍ம் இடத்தில் சுபர்களின் பார்வை இல்லை .களத்திரகாரன் சுக்கிரன் 6இல் மறைந்தான்.7ம் அதிபதி சந்திரன் மேல் 3,6,8,12 ம் அதிபதிகளின் பார்வை.
    2.திருமணம் நடைபெற்றது.
    காரணம்:புதன் மற்றும் சுக்கிரன் வர்கோத்தமம் பெற்றுள்ளது.யெனவே சுக்கிரதிசை‍ புதன் புத்தியில் 34 வயதில் திருமணம் நடைபெற்றது
    Tuesday, March 10, 2015 3:29:00 PM/////
-------------------------------------------------
12
75 marks......///////Blogger Palani Shanmugam said...
    மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
    மகர லக்ன ஜாதகி. லக்னாதிபதி சனி பகவான் 3ல் பகை வீட்டில், குரு பார்வையில் இருக்கிறார்.
    1. களத்திர காரகன் சுக்கிரன் 6ல் களத்திர ஸ்தானத்துக்கு 12ல் இருக்கிறார். களத்திர ஸ்தான அதிபதி சந்திரன் நீச்சம். செவ்வாயும், சனி பகவானின் நேரடிப் பார்வையில் இருக்கிறது; நவாம்சத்திலும் செவ்வாய் நீச்சம் ஆகியிருக்கிறார். அதனால் திருமணம் ஆகத்தான் செய்யும்.
    2. ஆனால் உச்சம் பெற்ற குரு 7ல் களத்திர ஸ்தானத்தில் இருந்து லக்னத்தையும், லக்னாதிபதியையும், களத்திர ஸ்தான அதிபதி சந்திரனையும் பார்க்கிறார். களத்திர காரகனும், பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியும் பரிவர்த்தனை ஆகியிருக்கிறார்கள். அவர்களே 9, 10க்கும் அதிபதி ஆகி தர்ம கர்மாதிபதி யோகத்தையும் கொடுக்கிறார்கள். 8ம் அதிபதி சூரியனும் பூர்வ புண்ணியத்தில். எனவே ஜாதகியின் 34வது வயதில் திருமணம் நடந்திருக்கும்.
    Tuesday, March 10, 2015 3:46:00 PM//////
---------------------------------------------------
13
100marks .....///////Blogger thozhar pandian said...
    குரு இயற்கை சுப கிரகமாக இருந்தாலும் மகர இலக்கினத்திற்கு 3 மற்றும் 12 வீட்டு அதிபதி. அதனால் பாவியாகிறார். அவர் 7ம் வீட்டில் உச்சம் பெற்று அமர்ந்து இலக்கினத்தை தனது பார்வையில் வைத்திருக்கிறார். அவருக்கு வீடு கொடுத்த சந்திரன் நீசம் பெற்று குரு பார்வையில் உள்ளார். களத்திரகாரகர் சுக்கிரன் இலக்கினத்திற்கு 6ல், 7ம் வீட்டிற்கு 12ல் மறைந்தார். இந்த காரணங்களால்தான் திருமணம் தள்ளிப்போனது. தசா புக்தி படி சுக்கிர தசை 17 வயதில் இருந்து 37 வயது வரை. சுக்கிர தசையில் குரு புக்தி முடியும் வரை திருமணம் இல்லை. அதாவது 30 வயதிற்கு மேல், இலக்கினம் மற்றும் 2ம் வீட்டு அதிபதியான சனியின் புக்தியில் திருமணம் நடந்திருக்கும். குரு இயற்கை சுப கிரகமாவதாலும், சுக்கிரன் களத்திரகாரகராக மகர இலக்கினத்திற்கு யோக காரகராக இருப்பதாலும், திருமணம் அவர் தசையில் நடந்திருக்கும்.
    Tuesday, March 10, 2015 9:28:00 PM//////
--------------------------------------------
14
75 marks.....///////Blogger ravichandran said...
    Respected Sir,
    My answer for our today's Quiz No.80:
    1. Reason for late marriage is Venus placed 12th house from seventh house.
    2. She has married at her age of 34 in Venus dasa mercury sub period (bhuthi).
    Explanations:
    I. Reasons for late marriage:
    i) Seventh house lord Moon is debilitated in 11th house.
    ii) Kalathra karaga is placed 12th house from seventh house.
    iii) Kathrakaraga (Venus) is not aspecting seventh house or house lord. (6/8)
    iv) Sun is aspecting (8th house lord) moon.
    II. Reasons for Married life:
    i) Jupiter is exalted in seventh house though it is twelfth house as well as 3rd house.
    ii) Exalted Jupiter is aspecting Moon, lagna and lagna lord.
    iii) Bagyathipathi Mercury is in 5th house and aspecting Moon (seventh house lord)
    iv) Mercury and Venus are in Mutual exchange position.
    v) Second house and twelfth house are not affected.
    Vi) In astavarga also having good parals.
    Hence, She has married after delay.
    With kind regards,
    Ravichandran M.
    Tuesday, March 10, 2015 9:49:00 PM//////
------------------------------------------------
15
90 marks.....///////Blogger Prakash Kumar said...
    Vanakkam ayya
    Answer for 80th question.
    Reason for late marriage: 7th athipathi neesam, sukran in 12th place from 7. Moon is under control of bhudhan (6th Lord) suriyan 8th Lord, dasaialum moosam
    Marriage might hv happened sukura dasa guru puthi. 7IL Samantha guru Athai seithuirupar
    Tuesday, March 10, 2015 10:59:00 PM/////
==============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10.3.15

Astrology: quiz number.80 தைமாத மேகம் அது தரையில் வாடுது!


Astrology: quiz number.80 தைமாத மேகம் அது தரையில் வாடுது!

”தைமாத மேகம் அது தரையில் ஆடுது” என்று பெண் குழந்தைகளைச் சொல்வார்கள். அதே குழந்தைக்கு உரிய வயதில் திருமணம் ஆகாமல்
தள்ளிக்கொண்டே போனால் என்ன சொல்வார்கள்: ”தைமாத மேகம் அது தரையில் வாடுது” என்றுதான் சொல்ல வேண்டும்.

Quiz No. 80

10.3.2015

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு இரண்டு கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்வி:


அட்டவணையின் மேல் கர்சரை வைத்துக் கிளிக்கினால் 
அது பெரியதாகத் தெரியும்

மேலே உள்ள ஜாதகம் ஒரு அம்மணியின் ஜாதகம்.

1. அம்மணிக்கு பார்த்த வரன்களெல்லாம் ஒன்று கூட அமையவில்லை. திருமணம் அதீத தாமதமானது. ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?

2.அம்மணிக்குத் திருமணம் ஆனதா? அல்லது ஆகவில்லையா? ஆனது என்றால் எப்போது ஆனது? ஆகவில்லை என்றால் ஏன் ஆகவில்லை?

ஜாதகத்தை அலசி உங்கள் பதிலை எழுதுங்கள்.

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்!

விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
-------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

4.3.15

Quiz.no.79 Answer: கனவு கலைந்தது! நிறைவேறிய ஆசை நிலைக்கவில்லை!


Quiz.no.79 Answer: கனவு கலைந்தது! நிறைவேறிய ஆசை நிலைக்கவில்லை!

புதிர் எண் 79 ற்கான விடை

4.3.2015
--------------------------------------
நேற்றையப் பதிவில், அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து 2 கேள்விகளைக் கேட்டிருந்தேன்.


கேட்கப்பெற்றிருந்த கேள்விகள்:

1. ஜாதகருக்குப் பிறப்பிலேயே சொத்துக்கள் (immovabale properties) உண்டா? அல்லது இல்லையா? உண்டு என்றால் எதனால் உண்டு? இல்லை
என்றால் எதனால் இல்லை?
2. மேலும் ஜாதகர் தன் சொந்தப் பணத்தில் வீடு ஒன்றைக் கட்டுவதற்கு ஆசைப்பட்டார். அது நிறைவேறியதா? அல்லது இல்லையா? நிறைவேறியது
என்றால் எந்த வயதில் நிறைவேறியது? நிறைவேறவில்லை என்றால் எதனால் நிறைவேறவில்லை?

சரியான பதில்:
1. 4ம் வீட்டில் கிரகயுத்தம். 9ல் ராகு. ஆகவே ஜாதகருக்கு பூர்வீக சொத்து இல்லை.
2. ஜாதகரின் ஆசை நிறைவேறியது. வீட்டைக் கட்டினார். ஆனால் வீடு நிலைக்கவில்லை. 31 வயதில் கட்டினார். 35 வயதில் வீட்டை 
விற்கும்படியாகிவிட்டது. நிறைவேறிய ஆசை நிலைக்கவில்லை!

ஜாதகப்படி என்ன காரணம்? வாருங்கள், பார்ப்போம்!

விருச்சிக லக்கின ஜாதகம்.
லக்கினாதிபதி செவ்வாய் உச்சம் பெற்றுள்ளார். ஆனால் சனீஷ்வரன் மற்றும் கேதுவுடன் சேர்ந்து கிரக யுத்தத்தில் மாட்டிக்கொண்டுள்ளார்.
ஜாதகருக்கு அவருடைய 23வது வயதிலிருந்து 43வது வயது வரை சுக்கிர மகா திசை. சுக்கிரன் அஸ்தனமாகியுள்ளார்.
அவர் (சுக்கிரன்) சொத்து சுகங்களுக்கான காரகன். அவர் அஸ்தமனம் பெற்றுள்ளார்.
மேலும் அவர் 12ம் இடத்திற்கும் அதிபதி அதை நினைவில் வையுங்கள்.
அவர் 4ல் அமர்ந்து அசையாத சொத்தான வீட்டைக் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியிருக்கிறார்.
ஆனால் 4ம் வீட்டிற்கு அதிபதியான சனீஷ்வரன் அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் உள்ளார்.
அத்துடன் அவர் (சனீஷ்வரன்) கேதுவுடன் சேர்ந்து கெட்டுப் போனதுடன் ராகுவின் பார்வையைப் பெற்று மேலும் வலுவிழந்து உள்ளார்.
அவருடன் எட்டாம் வீட்டுக்காரன் புதனும் உடன் உள்ளார்.
ஜாதகர் தனது முயற்சியில் பல சிரமங்களுக்கிடையே மிகவும் கஷ்டப்பட்டு தனது 31வ்து வயதில் வீடு ஒன்றைக் கட்டினார். ஆனால் அந்த வீட்டிற்கு
அவர் குடி போகவில்லை. மேலும் ஏற்பட்ட கஷ்டங்களினால் கட்டிய 4 ஆண்டுகளிலேயே வீட்டை விற்று விட்டார்.
காரகன் பாவநாசம் என்பது முழு வேலை செய்தது. அத்துடன் மேற்கூரிய காரணங்களால் கட்டிய வீட்டையும் இழக்க நேர்ந்தது.
அலசல் போதுமா?
-----------------------------------------
போட்டியில் 25 பேர்கள் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். அவர்களில் ஒருவர் மட்டுமே இரண்டு
கேள்விகளுக்கும் சரியான பதிலை/ஒட்டிய பதிலை எழுதி 100/100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். அவருக்கு மிகுந்த பாராட்டுக்கள். 16. பேர்கள் 2ல் ஒரு கேள்விக்கு மட்டும் சரியான சரியான பதிலை எழுதி 50/100 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்கள் அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்!

சொந்த வீடு கட்டினாலும் அது நிலைக்காது. கையை விட்டுப் போய் 
விடும் என்பதுதான் key answer

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
50 marks  /////Blogger Chandrasekaran Suryanarayana said...
QUIZ NO.79 வணக்கம்
01/03/1962 ஆம் ஆண்டு புதன் கிழமை காலை 1.30.01 மணிக்கு கேட்டை நட்சத்திரத்தில் விருச்சிக லக்கினத்தில் ஜாதகர் பிறந்தார். (இடம்:
சென்னை)
1. பிறப்பிலேயே சொத்துக்கள் இல்லை. 4ம் வீட்டு அதிபதி சனி 3ம் வீட்டில் அமர்ந்து இருப்பதால் சுய முயற்ச்சியால் தான் சொத்துக்கள் பெற
முடியும். 4ம் வீட்டில் 22 பரல்கள்.4ம் வீட்டில் வந்து அமர்ந்துள்ள சுக்கிரனும் அஸ்தங்கம் ஆகி விட்டது.//////
--------------------------------------------------
2
100 marks ///////Blogger slmsanuma said...
Laknathipathi Sevvai Ucham. Chandran is neecha Pangam in Laknam. Kethu look Laknam.
Ancestral Asset ---
Karagan Guru is in 12 place to 5th house which is for ancestral asset. 5th house looked by Sannesswaran and Kethu. Hence no ancestral asset to 
the native.
Father’s Asset ---
Karagan Suriyan is in 8th place to 9th house which is for father’s asset. Though the owner of the house chandran is in Neecha Pangam, in laknam 
and 5th place to the 9th house, Raghu is in 9th house with the Sevvai, Bhudhan, Saneeswaran parvai. Hence no father’s asset to the native.
House Construction ---
Karagan Bhudhan is in 12th place to 4th house which is for house construction. 4th house owner Saneeswaran is in 12th place to the 4th house. No 
other planets looks 4th house. So he cannot construct his own house.///////
---------------------------------------------------------------------------
3
50 marks /////Blogger Kirupanandan A said...
பிறப்பிலேயே சொத்துக்கள் என்றால் பரம்பரை சொத்தைப் பற்றி கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
1) பிறப்பிலேயே சொத்துகள் இல்லை.
காரணம். பரம்பரைச் சொத்துக்கான இடம் 9ம் வீடு. அங்கு ராகு இருக்கிறார். அந்த இடம் பாப கிரக பார்வையாலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. 9ம்

அதிபதி சந்திரன் நீசம் (நீச பங்கமா இல்லையா என்ற சர்ச்சைக்குள் செல்ல விரும்பவில்லை). 9க்கு 9ம் இடமான 5ம் வீட்டின் அதிபதி குரு அந்த

வீட்டிற்கு 12ல் இருக்கிறார். //////
--------------------------------------------
4
50 marks //////Blogger Gpbarathi P said...
1.the native has no ancestral property. because the ninet place chandran is debilated//////
Barathi//////
------------------------------------------
5
50 marks ///////Blogger SSS CONSTRUCTION said...
The person have not any assets belonging to his father because the fourth house lord is in 3rd place and the 9th house lord is in lakna and he is 
neecha //////
------------------------------------------
6
50 marks /////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யவுக்கு வணக்கம் .
புதிர் எண் 79.
லக்னம் விரிச்சிகம் ராசி விரிச்சிகம்..
1.பூர்வீக சொத்து இருக்காது .
1.a பூர்வ புண்ணிய ஸ்தானம் 5.வீட்டுக்காரன் *குரு *4ல் அமர்ந்துள்ளான் ..அதாவது தன வீட்டுக்கு 12ல் ஆனாலும் அது கேந்திரம்
..b பாகியஸ்தானமான 9ம் வீட்டில் ராஹு அமர்ந்து கெடுத்துள்ளான் ...அது ராசியாதிபதி வீடாகிறது ..ராசியாதிபதி நீசமாகிபோனான் .. .
c .பூர்வ புண்ணிய காரகன் குருவும் ,சூரியனும் [சுக்கிரன்] சேர்ந்து .. ..அமர்ந்துள்ளனர்.அவர்களின் பார்வை .9ம் மிடத்தை பார்கவில்லை.
..d .உச்சம் பெற்ற செவ்வாய்,ஆட்சி பெற்ற சனி கேது இவர்களது கூரிய பார்வை 9ம் மிடத்தை
இந்த 4.. a b,c,d, காரணத்தால் பூர்வீக சொத்து இருக்க வாய்ப்பு இல்லை...!!//////
----------------------------------------------------------
7
50 marks ///////Blogger valli rajan said...
Dear Guruji,
1. 9th lord is neecham.
2.9th place is aspected by sani, ketu and rahu in 9th place.
3. Guru, venus in 4th house is good.
4. sun in 4th house in kumba rasi is bad.
5. Mars lord of land is exalted. 
By birth he won't have immovable property /////
-----------------------------------------------------
8
50 marks ///////Blogger Govindasamy said...
1. ஜாதகருக்கு பிறப்பிலேயே சொத்துக்கள் இல்லை. 9ம் இடத்தில் ராகு. 9க்குரிய சந்திரன் லக்கினத்தில் நீசம். மேலும் ஆறு எட்டுக்குரிய

கிரகங்களின் பார்வை 9ம் இடத்தில்.//////
-------------------------------------------------------
9
50 marks ///////Blogger saravanakumar k Kumar said...
1. பூர்வீக சொத்துக்கள் இல்லை.
1. பூர்வீக சொத்துக்கள் இல்லை.
பூர்வீக 5ம் பாவகாதிபதி 5ம் பாவகத்திற்கு 12ல் மறைவு. மற்றும் 9ம் பாக்கியஸ்தானாதிபதி சந்திரன் விருச்சிகத்தில் நீசம்//////
------------------------------------------
10
50 marks //////Blogger kumar.S said...
1) ஒன்பதில் ராகு . ஒன்பதிற்கு அதிபதி நீசம். பரம்பரை சொத்து இருக்க வாய்ப்பு இல்லை சார் .
நன்றி ,
குமார் . S//////
------------------------------------------------
11
50 marks ////////Blogger Palani Shanmugam said...
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
லக்னாதிபதி செவ்வாய் 3ல் உச்சம். அவரை ராகு 7ம் பார்வையாக பார்க்கிறார். அதனால் மகா கோபக்கார்ர். 4ம் வீட்டு அதிபதி சனி பகவான் 3ல்

இருப்பது நல்லதல்ல. இவருக்கு சகோதர்ர்களுடன் சண்டை ச்ச்சரவு ஏற்பட்டு பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்காமல் போயிருக்கும்.//////
--------------------------------------------------
12
50 marks ///////Blogger S.Namasu said...
மதிப்பிற்குரிய அய்யா, ஜோதிட புதிர் எண் 79 க்கான எனது கணிப்பு:
1. ஜாதகருக்கு பூர்வீக சொத்து இருக்கும் ஆனால் கிடைக்காது
விருச்சிக லக்கினம், ராசி அதிபதி செவ்வாய் மகர ராசியில் (3ம் இடம் மறைவு ஸ்தானம்) உச்சம்.
பூர்வீக சொத்துக்கு காரகனான சூரியன் பகை வீடான கும்பத்தில், 9ம் வீட்டு அதிபதியான சந்திரன் நீசம் பெற்று லக்கினத்தில், 9ல் ராகு பகை

வீட்டில், 5 க்கு உரிய குரு 12ல் உள்ளதனால் ஜாதகருக்கு பூர்வீக சொத்து இருந்தும் கிடைக்காது.///////
-----------------------------------------------
13
50 marks ////////Blogger siva kumar said...
வணக்கம் ஐயா
Quiz no 79 திற்கான விடை
ஜாதகர் விருச்சக லக்கணம்
விருச்சக ராசி
லக்கண அதிபதி செவ்வாய்
1.ஜாதகருக்கு பிறப்பிலேயே சொத்துக்கள் இல்லை
ஜாதகபடி காரனங்கள்:
ஐயா விருச்சக லக்கணத்திற்கு யோககாரன் சந்திரன் நீச்சமாகி லக்கனத்தில் உல்லார்.மற்றும் பூர்வ புண்ணியதிபதி குருவும் தன் வீட்டிற்கு 12ல்

மறைவு.பாக்கியஸ்தானமான 9ம் வீட்டில் ராகு அமர்ந்து உள்ளார். மற்றும் பாவ கிரகங்களான சனி,கேது,புதன் ஆகியோரின் நேரடி பார்வை 9ம்

வீட்டிற்கு./////
-------------------------------------
14
50 marks ///////Blogger ravichandran said...
Respected Sir,
My answer for our today's Quiz No. 79:-
1. He is not blessed to get immovable properties (ancestral properties) by birth.
REASONS:
I. Properties by birth:
i) In nineth house, rahu is sitting and nineth house lord is debilitated as well as Saturn, Mars, Kethu and Mercury is aspecting nineth house. It is 

worst.
ii) There is no benefic planets aspect either nineth house or nienth house lord.
iii) Fourth house lord is sitting in twelfth house from its own house.
iv) In navamsa also, there is no good sign for having properties by birth.
v) No favorable yogas.
Hence, 9th house, 9th house lord as well as fourth house lord is affected, He is not blessed to get properties by birth.//////
-------------------------------------------------------------
15
50 marks ///////Blogger kmr.krishnan said...
ஜாதகர் 28 பிப்ரவரி 1962ல் காலை 1.30 மணிக்குப் பிறந்தவர். சென்னையைப்பிறந்த இடமாக் எடுத்துக்கொண்டேன்.
1.ஜாதகருக்கு பிறப்பிலேயே அசையாச் சொத்துக்கள் இல்லை.
நான்காம் அதிபன் சனைச்சரன் தன் வீட்டுக்கு 12ல் மறைந்தார். ஜன்மப் பகையாளர் செவ்வாயுடன் 3ல் கூட்டணியால் 4ம் அதிபன் சனி வலுவிழந்தார்.
மேலும் 8ம் அதிபன் புதனுடன் இருந்ததாலும் நான்காம் அதிபன் வலுவிழந்தார்.
கார்கன் செவ்வாயின் நிலையும் இதுவே. இவர்களுடன் கேதுவும் இருந்து சொத்துக்கள் இல்லாமல் செய்தார்.பாக்கிய ஸ்தான ராகு, 6ம் அதிபன்

செவ்வாய் 3ல், 4ம் அதிபன் சனியுடன் இருப்பது ஆகியவை பூர்வீகச்சொத்து இல்லாமல் செய்தது.//////
-------------------------------------------------------
16
50 marks //////Blogger lrk said...
ஐயா. வணக்கம்
புதிர். 79 க்கு. பதில்கள்
1) அன்பருக்கு பிறப்பிலேயே சொத்து கிடையாது .
காரணங்கள் ;
9க்கு அதிபதி நீசம்
9ஆம் இடத்தில் ராகு .பூர்வ புண்ணிய ஸ்தானம் பாதிக்கப்பட்டு உள்ளது .
நன்றி ஐயா .
கண்ணன் .//////
------------------------------------------
17
50 marks //////Blogger Manikandan said...
௧. பூர்வீக சொத்து கிடைக்காது. பாக்கியாதிபதி நீசம் + லக்கினாதிபதி செவ்வாய் சனி மற்றும் ராகு கேதுஉடன் சேர்க்கை.//////
--------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

3.3.15

Astrology: quiz number.79 சொத்தும், சுகமும்!


Astrology: quiz number.79 சொத்தும், சுகமும்!

சொத்து, சுகத்துடன் இருப்பதற்கு ஆசைப்படாதவர்கள் யார்? சிலருக்கு அந்த அதிர்ஷ்டம் உள்ளது. பலருக்கு அது இல்லை! அதாவது சொத்தும் இருக்காது சுகமும் இருக்காது. எல்லாம் வாங்கி வந்த வரம்!

Quiz No. 79

புதிர் போட்டி எண்.79 விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்! அத்துடன் உங்கள் பின்னூட்டத்தில் பதில்களை 1,2,என்று வரிசைப் படுத்தி முதலில் எழுதி விடுங்கள். பிறகு உங்கள் விளக்கங்களை எழுதுங்கள். எனக்கு உங்களின் விடைத்தாள்களைத் திருத்தி மதிப்பெண் கொடுக்கும் பணியை இலகுவாக்குங்கள்.

3.3.2015

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு இரண்டு கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்விகள்

:மேலே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம்.

1. ஜாதகருக்குப் பிறப்பிலேயே சொத்துக்கள் (immovable properties) உண்டா? அல்லது இல்லையா? உண்டு என்றால் எதனால் உண்டு? இல்லை என்றால் எதனால் இல்லை?

2. மேலும் ஜாதகர் தன் சொந்தப் பணத்தில் வீடு ஒன்றைக் கட்டுவதற்கு ஆசைப்பட்டார். அது நிறைவேறியதா? அல்லது இல்லையா? நிறைவேறியது என்றால் எந்த வயதில் நிறைவேறியது? நிறைவேறவில்லை என்றால் எதனால் நிறைவேறவில்லை?

ஜாதகத்தை அலசி உங்கள் பதிலை எழுதுங்கள். எந்தெந்த வீடுகளா? அதை எல்லாம் சொல்வதற்கில்லை. பழத்தை உரித்துத் தரமுடியாது. நீங்களே தோலை உரித்து சுளைகளை எடுத்துச் சாப்பிடுங்கள்!

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
-------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

25.2.15

Quiz.no.78 Answer: நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே!


Quiz.no.78 Answer: நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே!

நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே
நிழலை பார்த்து பூமி சொன்னது என்னை தொடாதே
நதியை பார்த்து நாணல் சொன்னது என்னை தொடாதே
நாளை பார்த்து இரவு சொன்னது என்னை தொடாதே
- கவியரசர் கண்ணதாசன்

புதிர் எண் 78 ற்கான விடை

25.2.2015
--------------------------------------


நேற்றையப் பதிவில், அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து
2 கேள்விகளைக் கேட்டிருந்தேன்.

கேட்கப்பெற்றிருந்த கேள்விகள்:

1. ஜாதகருக்குத் திருமணம் ஆயிற்றா அல்லது ஆகவில்லையா?
2. ஆயிற்று என்றால் திருமண வாழ்க்கை எப்படி இருந்தது? ஆகவில்லை என்றால் ஏன் ஆகவில்லை?

சரியான பதில்:

1.  ஜாதகருக்கு அவருடைய 25வது வயதில் திருமணம் நடைபெற்றது.
2. ஆனால் அது ஒராண்டிற்கு மேல் நிலைக்கவில்லை. விவாகரத்தில் முடிந்துவிட்டது.

ஜாதகப்படி என்ன காரணம்? வாருங்கள், பார்ப்போம்!

மகர லக்கின ஜாதகம்.
லக்கினம் மற்றும் லக்கினாதிபதியை உள்ளடக்கிய கால சர்ப்ப தோஷம்
உள்ள ஜாதகம்.
ஏழாம் வீடு கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியிருக்கிறது. ஏழில் செவ்வாயும், ராகுவும். அத்துடன் சனியின் பார்வையும் உள்ளது.
ஆனால் ஏழாம் வீட்டின் மேல் குருவின் பார்வையும் உள்ளது. குருபகவான் தன்னுடைய மகா திசையில் சுக்கிரபுத்தியில் ஜாதகனின் திருமணத்தை நடத்திவைத்தார்.
ஏழாம் வீட்டுக்காரன் சந்திரன் அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் 
அமர்ந்துள்ளது கேடாகும். அது கணவன் மனைவிக்குள் பிரிவை 
உண்டாக்கும் அமைப்பு. அதன்படியே நடந்தது.

அலசல் போதுமா?
-----------------------------------------
போட்டியில் 32 பேர்கள் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். அவர்களில்  9. பேர்கள் மட்டுமே சரியான பதிலை  எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்!

விவாகம் ரத்தாகும் என்பது தான் முக்கியமான பதில்! (key answer)
அதைக் குறிப்பிட்டு எழுதி 100% மதிப்பெண்கள் பெற்ற ஒன்பது அன்பர்களின் பெயர்களும் கீழே உள்ளது!

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
///////Blogger thozhar pandian said...
இலக்கினாதிபதி சனி இலக்கினத்தில் 2ம் வீட்டிற்கு 12ல் மறைந்தார். 7ம் அதிபதி சந்திரன் அந்த வீட்டிற்கு 12ல், இலக்கினத்திற்கும், இலக்கினாதிபதிக்கும், 6ம் வீட்டில், மறைந்தார். களத்திரகாரகன் சுக்கிரன் இலக்கினத்திக்கு 3ல் 7ம் வீட்டிற்கு 8ல் மறைந்தார். சந்திர இலக்கினத்தில் இருந்து 7ம் வீட்டில் மாந்தி. 7ம் வீட்டில் பாதகாதிபதி செவ்வாய் நீசம் பெற்று இராகுவுடன் கூட்டணி. 7ம் வீட்டிற்கும், களத்திரகாரகர் மற்றும் குடும்பகாரகருக்கும் சனி பார்வை. ஆனால் அவர் இலக்கினாதிபதியாக இருப்பதால், குரு தசையில் திருமணம் நடந்திருக்கும். சங்கடங்கள் நிறைந்த திருமண வாழ்க்கை. பிரிவில் முடிந்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
Tuesday, February 24, 2015 5:23:00 AM /////
-------------------------------------------
2
//////Blogger Thavam Mani said...
before 29 marrige he got divioce . 7 th house athipathi moon in oopaya rasiyil nirga many parter, but sani 7m parvai in 7 th place is not good, delay marriage. parter was elder. marriage was done 35 old. that was good.
Tuesday, February 24, 2015 9:33:00 AM /////
--------------------------------------------
3
//////Blogger anand tamil said...
1.ஜாதகருக்கு திருமண‌ம் ஆகிவிட்டது.
2.திருமண‌ வாழ்க்கை சிறப்பாக இல்லை. தோல்வியில் முடியும்.
இருவரும் பிரிந்து வாழ்வர் .
காரணங்கள்:
1.7ம் வீட்டின் மேல் லக்கினாதிபதி சனி மற்றும் குருவின் பார்வை.
களத்திரக்காரன் சுக்கிரனும் , குருவும் லக்கினாதிபதி சனியின் பிடியில். மேலும் சுக்கிரன் உச்சம் பெற்றிருப்பதால்
2.7ம் வீட்டின் அதிபதி சந்திரன் 6இல் மறைவு.இது 7ம் வீட்டிற்க்கு 12ம் வீடு. மேலும் சந்திரன் மேல் சுப கிரகங்களின் பார்வை இல்லை.
7ம் வீட்டில் செவ்வாய் மற்றும் ராகு ஆதிக்கம் .
Tuesday, February 24, 2015 1:15:00 PM ////////
-----------------------------------------------------
4
//////Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
அமுதும் தேனும் எதற்க்கு?” கேள்விக்கு பதில் “சட்டி சுட்டதடா, கை விட்டதடா” என்பதுதான்.
1).அன்பருக்கு 34 வயதில் சனி தசை புதன் புத்தியில் திருமணம் நடந்தது.
2).திருமண வாழ்வு துயரத்தில் முடிந்தது. மனைவி,அவரது 43 வது வயதில் இறந்திருப்பார்.சனி தசா-சந் புத்தி-சனி அந்தரம்.
1).மகர லக்னம்.லக்னாதிபதி சனி ஆட்சி,கேதுவுடன் கூட்டணி.7ம் வீடான கடகத்தில் அமர்ந்த நீச்ச செவ்வாய்+ராகு கூட்டணியின் நேரடி பார்வை லக்கினத்தின் மேல்.மகர லக்கின பாதகாதிபதி செவ்வாய். 7ம் பதி சந்திரனோ 6ல் அமர்வு.தன் வீட்டிற்க்கு 12ல் (நோய் ஸ்தானம்).
மூன்றில் அமர்ந்த உச்ச குருவின் 5ம் பார்வையும், அவருடன் கூட்டு சேர்ந்த உச்ச களத்திர காரகன் சுக்கிரனின் அமர்வும் களத்திர ஸ்தானத்தின் மீது லக்னாதி சனியின் பார்வையும் திருமணம் நடத்தியது.
2). குடும்ப ஸ்தான பதி சனி தன் வீட்டிற்கு 12ல் மறைவு.7ல் அமர்ந்த பாதகாதிபதி நீச்ச செவ்வாயின் 8ம் பார்வை. 4 மிட சுக ஸ்தானாத்தில் உச்சம் பெற்ற 8மாதி சூரியன் அமர்வு.7ம் பதி சந்திரன் (தன் வீட்டிற்கு 12மிடமான 6ல் இருந்து) 12மிடத்தை பார்வை செய்கின்றார்.
2மிடத்திற்கு சுபர் பார்வையில்லை.
அன்பருக்கு திருமண வாழ்வு பயனின்றி விரயமாகி விட்டது.
நன்றியுடன்,
-பொன்னுசாமி.
Tuesday, February 24, 2015 1:26:00 PM ///////
----------------------------------------------
5
Blogger asbvsri said...
Quiz No 78: Answer
ஐய்யா அவர்களுக்கு வணக்கம்.
ஜாதகர் கால சர்ப யோகத்தில் உள்ளவர். லக்னாதிபதி நல்ல நிலையில் ஆட்சியில் வலுவாக பாப கர்த்தாரி யோகத்தில் உள்ளார்.
5 ஆம் அதிபதி சுக்ரன் யோககாரகன், களத்திரகாரகன் ராசியில் உச்சம் – நவாம்சத்தில் ஆட்சி. கேந்திரம் / கோணாதிபதி
3க்கும் 12க்கும் (போகஸ்தானம்) அதிபதி குரு ஆட்சி. அவர் களத்திரஸ்தானத்தை 5 ஆம் பார்வையாக பார்க்கிறார். ஆனால் 12 ம் இடம் போகஸ்தானத்தில் மாந்தி. போகத்தை மறுக்கிறது.
7 ஆம் இடத்தில் செவ்வாய் ராசியில் நீச்சம். ஆனால் நவாம்சத்தில் உச்சம். ராஹு வர்க்கோத்தமம்.
ஜாதகருக்கு கண்டிப்பாக திருமணம் நடந்திருக்கும்.
ராஹு தசை 15 வயது வரை. பிறகு குரு தசையில் யோககாரகன் சுக்ரன் புக்தியில் 26 வது வயதில் திருமணம் நடந்திருக்கும். இது தவறியிருந்தால் 36 வது வயதில் சனி தசையில் சுக்ர புக்தியில் திருமணம் நடந்திருக்கும்.
களத்திரஸ்தானாதிபதி சந்த்ரன் 6 ஆம் இடத்தில் – ரோக ஸ்தானம். ஆதலால் மனைவி நோய்வாய்ப்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம். 12 ம் இடம் போகஸ்தானத்தில் மாந்தி. போகத்தை மறுக்கிறது. ஆதலால் திருமணமாகி சில காலங்களுக்குப்பிறகு சன்யாசி மாதிரி துறவி வாழ்க்கை வாழ வேண்டிய நிலையில் இருந்திருப்பார்.
K R Ananthakrishnan, Chennai
Tuesday, February 24, 2015 3:16:00 PM//////
--------------------------------------------
6
////Blogger Kirupanandan A said...
1) திருமணம் நடந்தது. களத்திரகாரகன் சுக்கிரன் உச்சமாகி இன்னொரு சுப கிரகமான ஆட்சி பெற்ற குருவுடன் இருக்கிறார்.
2) மிகவும் சண்டை சச்சரவு மிகுந்த திருமண வாழ்க்கை. முடிவில் விவாகரத்தானது. 7ம் அதிபதி 6ல் மறைந்துள்ளார். 7ல் 2 பாப கிரகங்கள். இதில் செவ்வாய் நீசமாகி இருக்கிறார்.
Tuesday, February 24, 2015 8:41:00 PM ///////
---------------------------------------------------
7
/////////Blogger Siva Radjane said...
1. ஜாதகர் திருமணம் ஆனவர்.
2.திருமண வாழ்கை போராட்டமாக இருந்திருக்கும். மனைவியை பிரிந்தவராய் இருப்பார். 
1.laknaathipathi சனிஸ்வரன் laknaththil amarnthu 7 ம் வீட்டை தன பார்வையில் வைத்துள்ளார். maylum 7 ம் veettiRku guru'vin paarvai. sukkiran ucham. சந்திரன்க்கு 7 ம் அதிபன் 'குரு' ஆட்சி.sevvaai ,sani பார்வை..மற்றும் 7ல் செவ்வாய் ராகு சேர்க்கை ஆகியவற்றால் ஜாதகருக்கு 31 வயதில் குரு thisai ,ராகு புத்தியில் திருமணம் நடந்திருக்கும்.
2. 2ம் அதிபன் சனி 2க்கு 12ல் மறைவு. 2ம் விட்டிற்கு செவ்வாயின் 8ம் பார்வை.7ம் அதிபன் சந்திரன் laknathiRku 6ல் ,7க்கு 12ல் மறைவு. 7ல் தீய கிரகங்களான செவ்வாய் ,ராகு கூட்டணி.சந்திரனுக்கு 2ல் செவ்வாய் ,ராகு சேர்க்கை . ஆகையால் ஜாதகரின் திருமண வாழ்கை போராட்டமாக இருந்திருக்கும்.மனைவியை பிரிந்தவராய் இருப்பார்.
Sivarajan (pondicherry)
Wednesday, February 25, 2015 12:42:00 AM /////
--------------------------------------------------
8
/////Blogger Chandrasekaran Suryanarayana said...
QUIZ NO. 78 வணக்கம்.
28/04/1963 ஆம் ஆண்டு ஞாயிறு கிழமை காலை 1.30.35 மணிக்கு திருவாதிரை நட்சத்திரத்தில் மகர லக்கினத்தில் ஜாதகர் பிறந்தார். (இடம்:சென்னை)
1. ஜாதகருக்கு திருமணம் 23 வயதில் நடைபெற்றது.
2. 42வயதில் திருமணம் விவாகரத்து எற்பட்டது.
மகர லக்கினத்திற்கு யோககாரகன் புதன்,சுக்கிரன். இந்த ஜாதகத்தில் களத்திரகாரகன் சுக்கிரன் உச்சம்.மகர லக்கினத்திற்கு 5 மற்றும் 10ஆம் இடங்களுக்கு உரியவன்.
1. லக்கினாதிபதி சனி மகர ராசியில் லக்கினத்திலேயே உள்ளார். லக்கினம் 37 பரல். கேதுவுடன் கூட்டு. துரதிர்ஷ்ட்டம். உடல் நல கேடு. உடல் குறைபாடுகள், வியாதி, ஜாதகரை ஒரு வழி ஆக்கிவிடும்.
2. மகர லக்கினதிற்க்கு ராஜ யோககாரன் செவ்வாய் 7ல் ராகுவுடன் கூட்டு சேர்ந்து இருப்பதால் கெட்டு போய் இருக்கிறார்.
3. ஆரம்ப ராகு தசையில் ஜாதகர் மிகவும் கஷ்ட்டப்ப்ட்டு இருப்பார்.
4. இந்த ஜாதகத்தில் யோககாரனான சுக்கிரன் உச்சம்(4 பரல்) 3ம் வீட்டில் மீன‌ ராசியில். மேலும், குருவுடன் கூட்டு.
5. குருவின்(3 பரல்) 5ம் பார்வை 7ம் வீட்டின் மீது உள்ளது.
6. உச்சமான சுக்கிரனின் 7ம் பார்வையும், குருவின் 7ம் பார்வையும் பாக்கியஸ்தானமான 9ம் வீட்டின் மீது உள்ளது. 9ம் வீட்டின் அதிபதி புதன் மூல திருகோணத்தில் 5ம் வீட்டில் இருக்கிறார்.
7. சந்திர லக்கினதிலிருந்து 7ம் வீடு தனூர் ராசி. அதாவது 12ம் வீடு.அதன் அதிபதி குரு 3வீட்டில் சுக்கிரனுடன் கூட்டு.அந்த வீடு சந்திரனிருந்து கேந்திரத்தில் இருப்பதால் அது கஜகேசரி யோகம் பெற்றுள்ளது.
8.மேலும், லக்கினாதிபதி சனியின் 3ம் பார்வை 3ம் வீட்டில் உள்ள சுக்கிரன், குருவின் மீது உள்ளது.
9. குருதசை சுக்கிர புக்தியில் 23 வயதில் திருமணம் நடைபெற்று இருக்கும்.
10. 5ம் வீட்டு அதிபதி சுக்கிரன் உச்சம் பெற்று குருவுடன் சேர்ந்து இருப்பதால் அவருக்கு ஒரு பெண் குழந்தை அதே சுக்கிர தசையில் கிடைத்தது.
11. 2ம் வீட்டு அதிபதி லக்கினத்தில் அதவது அந்த வீட்டிற்க்கு 12ல்.வீட்டின் மீது செவ்வாயின் 8ம் பார்வை உள்ள‌து.அந்த வீட்டில் 30 பரல்கள் உள்ளன.
12. குடும்பத்தில் பல பிரச்சனைகள் இருந்தது.காரணம், 7ம் வீட்டு அதிபதி சந்திரன் 6ல் அமர்ந்துள்ளதால் திருமணம் பிரிவில் முடியும். மேலும், சனி, சந்திரனின் 8/6 நிலைமை.
சனி தசையில் சந்திர புக்தியில் 42 வயதில் விவாக ரத்து எற்பட்டது.
13. நவாம்சத்திலும் ராகு 7ம் வீட்டில் உள்ளார்.
14. சூரியனுக்கு 4ம் வீட்டில் ராகு இருப்பதால் ஜாதகருக்கு செல்வாக்கு, புகழ், பெயர் எல்லம் கிடைக்காமல் போய்விட்டது.
15. 7ல் ராகு இருப்பதால் மண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்காது. பெண்னினால் அவமானம் எற்படும்., கேதுவின் 7ம் பார்வை 7ம் வீட்டின் மீது இருப்பதாலும்,திருமணம் பிரிவில் முடியும்.
சந்திரசேகரன் சூரியநாரயணன்
Wednesday, February 25, 2015 12:52:00 AM /////
--------------------------------------------
9
Blogger ravichandran said...
Respected sir,
My answer for our Quiz No. 78:-
1. He has married but delayed marriage.
2. His marriage life was not happy and ended with divorce or other reason.
Reasons for Delayed marriage:
i) Kala sarpa dhosa horoscope as well as seventh house and seventh house lord is affected. seventh house lord is sitting 12th place from its own house.
ii) kalathra karaga as well as yoga karaga Venus is exalted and associated with Jupiter and Jupiter is aspecting seventh house.
iii) Bagyathipathi is in good position and lagna lord is in own house.
Hence, He married but delayed ( after his 36th age) might be Saturn dasa, Venus bhuthi.
Reasons for unhappy married life:
i) Mars and Rahu is in seventh place and kethu aspecting.
ii) Lagna lord and seventh house lord is in 6/8 position as well as both are enemies.
iii) Second house lord is sitting 12th place from its own house and mars is aspecting second house.
iv) In 12th place Manthi is there.
v) From seventh house, eitgth house( i.e. second house) is indicating life partner's life. Here affected. 
Hence, marriage life was not happy and ended with divorce or other reason.
With kind regards,
Ravichandran M
Wednesday, February 25, 2015 1:58:00 AM ///////
==================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

24.2.15

Astrology: quiz number.78 அமுதும் தேனும் எதற்கு?


Astrology: quiz number.78 அமுதும் தேனும் எதற்கு?

”அமுதும் தேனும் எதற்கு - நீ
அருகினில் இருக்கையிலே எனக்கு?”
என்றொரு பழைய பாடல் - மனதை இதமாக்கும் பாடல் உண்டு. அமுதும் தேனும் என்பதை ஒரு பெண்ணின் துணையோடு ஒப்பிட்டுச் சொல்கிறார் கவிஞர். எல்லோருக்கும் அமுதும் தேனும் கிடைக்கிறதா என்றால் அதுதான் இல்லை! பலருக்குக்குக் கிடைக்கிறது. சிலருக்குக் கிடைப்பதில்லை. அதுதான் அவலம். எல்லாம் வாங்கி வந்த வரம்!

Quiz No. 78

புதிர் போட்டி எண்.78 விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்! அத்துடன் உங்கள் பின்னூட்டத்தில் பதில்களை 1,2,என்று வரிசைப் படுத்தி முதலில் எழுதி விடுங்கள். பிறகு உங்கள் விளக்கங்களை எழுதுங்கள். எனக்கு உங்களின் விடைத்தாள்களைத் திருத்தி மதிப்பெண் கொடுக்கும் பணியை இலகுவாக்குங்கள்.

24.2.2015

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு இரண்டு கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்வி:

                                         
  நவாம்சத்திற்கான அட்டவணை


மேலே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம்.

1. ஜாதகருக்குத் திருமணம் ஆயிற்றா அல்லது ஆகவில்லையா?
2. ஆயிற்று என்றால் திருமண வாழ்க்கை எப்படி இருந்தது? ஆகவில்லை என்றால் ஏன் ஆகவில்லை?

ஜாதகத்தை அலசி உங்கள் பதிலை எழுதுங்கள். எந்தெந்த வீடுகளா? அதை எல்லாம் சொல்வதற்கில்லை. பழத்தை உரித்துத் தரமுடியாது. நீங்களே தோலை உரித்து சுளைகளை எடுத்துச் சாப்பிடுங்கள்!

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்! விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
-------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

19.2.15

Quiz.no.77 Answer: பேச்சு வந்தது. பேச்சு வந்தது. பேசப் பேசப் பேச்சு வந்தது!


Quiz.no.77 Answer: பேச்சு வந்தது. பேச்சு வந்தது. பேசப் பேசப் பேச்சு வந்தது!

புதிர் எண் 77 ற்கான விடை

19.2.2015
--------------------------------------
நேற்றையப் பதிவில், குழந்தை ஒன்றின் ஜாதகத்தைக் கொடுத்து 2 கேள்விகளைக் கேட்டிருந்தேன்.

கேட்கப்பெற்றிருந்த கேள்விகள்:

1`. குழந்தைக்கு ஏன் பேச்சு வரவில்லை?
2. ஜாதகப்படி பின்னால் பேச்சு வருமா? அல்லது வராதா?

சரியான பதில்:

1. பேச்சுக்குரிய இரண்டாம் வீடு மற்றும் அதன் அதிபதி கெட்டிருந்ததால் 
பேச்சு வரவில்லை.
2. அது துவக்க நிலை. பின்னால் ரிஷப லக்கினத்திற்கு உரிய யோகாரகன் சனீஷ்வரனின் அதீதப் பார்வையால் மெல்ல மெல்ல பேச்சு வந்தது!

ஜாதகப்படி என்ன காரணம்? வாருங்கள், பார்ப்போம்!


ரிஷப லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சுக்கிரன் லக்கினத்திற்கு எட்டில். அதுவும் பாப கர்த்தாரி யோகத்தில்
துவக்க திசையாக ராகு மகா திசை.
இரண்டாம் வீடுதான் பேச்சிற்கு உரிய வீடு. House of speech. ஜாதகத்தில்
2ம் வீடு பாப கர்த்தாரி யோகத்தில் சிக்கி இருக்கிறது. ஒரு பக்கம் கேது.
மறுபக்கம் செவ்வாய்.
அத்துடன் 2ம் வீட்டு அதிபதி அந்த வீட்டிற்கு 6ல். அத்துடன் சூரியனோடு அஸ்தனமானதுடன், ராகுவுடன் சேர்க்கை.
அதனால் குழந்தைக்குப் பேச்சு வரவில்லை.

Small correction
(சந்திர ராசிக்கு இரண்டாம் இடத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள
வேண்டும். அந்த வீட்டிற்கு உரிய செவ்வாய் அந்த வீட்டிற்கு 
திரிகோணத்தில் இருப்பதுடன், யோககாரகன் சனியின் பார்வையையும் பெறுவது சிறப்பான அம்சமாகும்)

சிக்கல்களுக்கு சந்திர லக்கினத்தையும் பார்க்க வேண்டும். இங்கே
சந்திரன் நின்ற இடத்திற்கு இரண்டாம் அதிபதி செவ்வாய் அந்த
வீட்டிற்கு ஒன்பதில் முக்கியமான திரிகோணத்தில்
-----------------------------------------------------------------------
அத்துடன் ரிஷப லக்கினத்திற்கு யோககாரகனான சனியின்
நேரடிப் பார்வையில், குரு பகவான் ஐந்தில் அத்துடன் 9ம்
பார்வையாக லக்கினத்தைப் பார்க்கின்றார்.
லக்னாதிபதி சுக்கிரன் பார்வை வாக்கு ஸ்தானத்தின் மேல்.
யோககாரகன் சனீஷ்வரனும் லக்கினாதிபதி சுக்கிரனும் கை கோர்த்துக் குழந்தைக்குப் பின்னாளில் பேச்சை வரவைத்தார்கள்.
குழந்தை ராகு திசை சந்திரன் மற்றும் செவ்வாய் புத்தியில் மெல்ல 
மெல்லப் பேசத்துவங்கியவன், தனது பத்தாவது வயதில் குரு மகா 
திசை துவங்கியவுடன் நன்றாகப் பேசினான்.

அலசல் போதுமா?
-----------------------------------------
போட்டியில் 29. பேர்கள் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். அவர்களில்  17 பேர்கள் மட்டுமே
சரியான  பதிலை  எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும்
பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்!

பேச வரும் என்பது தான் முக்கியமான பதில்! (key answer)  அதைக்
குறிப்பிட்டு எழுதி 100% மதிப்பெண்கள் பெற்ற 17  பேர்களின் பெயரும்
கீழே உள்ளது!

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
/////Blogger amuthavel murugesan said...
Vanakam iyya,
Answer to Quiz:77
2nd lord is the owner of speech.
Here Budhan is in with Ragu & Suryan.
2nd place & langathipathi is in Pabakarthari yago.
She will speak with help of Guru.
M.Santhi
Wednesday, February 18, 2015 10:38:00 AM/////
--------------------------------------------------------
2
//////Blogger Kamban said...
1. குழந்தைக்கு ஏன் பேச்சு வரவில்லை?
2ஆம் இடத்தின் அதிபதி புதன் பரிபூரணமாய் ராகு சூரியனுடம் சேர்ந்து
கெட்டு இருக்கிறார் அதனால் பேச்சு வராது.
2. ஜாதகப்படி பின்னால் பேச்சு வருமா? அல்லது வராதா?
லக்னாதிபதி சுக்கிரன் பார்வை வாக்கு ஸ்தானத்தின் மேல், பின்னால் 
பேச்சு வரும்.
Wednesday, February 18, 2015 11:34:00 AM /////
-----------------------------------------------
3
/////Blogger Govindasamy said...
1. வாக்குஸ்தானாதிபதி புதன் லக்கினத்திற்கு ஏழில் இரண்டாமிடத்திற்கு ஆறில் ராகுவுடனும் சூரியனுடனும் இருப்பதால் ராகுதிசையில் பாதிப்பு.
மேலும் இரண்டாமிட அதிபதி சுக்கிரன் குருவினது வீட்டில் - பகை வீட்டில்.
2. குழந்தைக்கு குருதிசையில் பேச்சு வந்திருக்கும். குரு திரிகோணத்தில் இருப்பதால் குருபார்வை லக்கினத்தில். நன்மை செய்யும்.
Wednesday, February 18, 2015 11:55:00 AM /////
-----------------------------------------------
4
/////Blogger bala said...
வணக்கம் ஐயா,
2ம் வீடு வாக்கு ஸ்தானம்
1)2ம் வீடு பாப கர்த்தாரி யோகத்தில்.
இரண்டாம் வீட்டு அதிபதி(வாக்கு ஸ்தானதிபதி) புதன், 7ல் உடன் சூரியன்+ உச்சம் பெற்ற ராகு கூட்டு.
இரண்டாம் அதிபன் அந்த வீட்டில் இருந்து 6ல் மறைந்து விட்டார். அதனால் பேச்சு திறன் வரவே இல்லை.
காது சம்பந்தமுடைய மூன்றாம் இடத்தில் செவ்வாய்+மாந்தி. .ஆகவே பிறவியிலேயே கேட்கும் திறன் குறைந்ததால் பேச்சு வரவில்லை.
2)
லக்னாதிபதி 8ல். ஆனால் சுக்கிரன் 8ல் மறைவு இல்லை என்பது விதி.
2ம் வீட்டிற்கு லக்னாதிபதி சுக்கிரன் பார்வை. சுக்கிர திசை/புத்தி நேரத்தில் பேச்சு திறன் வரும்.
Wednesday, February 18, 2015 12:01:00 PM /////
-----------------------------------------------
5
/////Blogger murali krishna g said...
அய்யா,
குழந்தையின் ஜாதகத்தில் வாக்கு ஸ்தானாதிபதி புதன் அந்த வீட்டிற்கு
ஆறாம் வீட்டில் இருக்கிறார். வாக்கு ஸ்தானமான மிதுனமும் பாப கத்திரி
யோகத்தில் மாட்டி கொண்டிருக்கிறது.
ராகு தசை முடிந்து பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கும் குரு தசையில் பேச்சு வந்திருக்கும். குரு பாக்ய ஸ்தானத்தையும் முக்கியமாக
லக்னத்தையும் நோக்குகிறார்.
சரியா அய்யா ?.
Wednesday, February 18, 2015 12:13:00 PM /////
-----------------------------------------------
6
/////Blogger kmr.krishnan said...
ஜாதகர் 22 நவெம்பெர் 1992 அன்று மாலை 6மணி 4 நிமிடம் 30 வினாடிகளுக்குப் பிறந்தவர். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துகோண்டேன்
1.இரண்டாம் இடம்,இரண்டாம் இடத்து அதிபதி,பேச்சுக்கான காரகன் ஆகியவர்கள் கெட்டுவிட்டதால் பேச்சு வரவில்லை.
2.பின்னாலும் பேச்சு வராது
விளக்கம்:
1.ரிஷபம் தான் கழுத்து தொண்டைக்கான பாவம். அது லக்கினமாகி
அதிலேயே கேது அமர்ந்தது.புதன் இரண்டாம் இடத்திற்கானவர்,
பேச்சுக்கான காரகர், இவர் 7ல் சென்று அமர்ந்து, தன் விட்டுக்கு ஆறில், சூரியனால் எரிக்கப்பட்டு பலவீனமடைந்தார். மேலும் ராகுவாலும் பாதிக்கப்பட்டார்.
கேது,செவ்வாய்,மாந்தியால் சூழப்பட்டு இரண்டாம் இடத்தினை பாபகர்த்தாரியில் வைத்துவிட்டது.எனவே பேச்சு வரவில்லை.லக்கினாதிபதி 8ல் மறைந்தது.சந்திரன் லக்கினத்திற்கு ஆறில் மறைந்தது. இவையும் காரணம்.
2.மூன்றாம் இடம் காது சம்பந்தமுடையது. அந்த இடத்தில் செவ்வாயும் மாந்தியும் அமர்ந்து காது கேளாமல் செய்தது.மூன்றாம் இடத்திற்கும்
அங்கே அமர்ந்த செவ்வாயுக்கும் சனியின் பார்வை.எனவே செவிப்புலன் மிகவும் அதிகமாகப் பாதிப்புக்கு உள்ளானதால்தான் பேச்சு வரவில்லை.
நவாம்சத்திலும்
இரண்டாம் இடம் சனியால் பாதிப்பு.இரண்டாம் இடத்துக்கார‌ன் 4ல்
அமர்ந்து பரம எதிரியான செவ்வாயாலும், மாந்தியாலும் பாதிப்பு.குரு 
பார்வை லக்கினத்திகு, ராசி சக்கரத்திலும் நவமசத்திலும் இருப்பதால்
இவர் செவிப்புலன் வாய் பேசாதவர் பள்ளியில் சேர்க்கப்பட்டு ஓரளவு மழலையாகப் பேச அறிந்திருப்பார். ஆனாலும் சகஜமான பேச்சு வரவில்லை.
Wednesday, February 18, 2015 1:21:00 PM /////
----------------------------------------------------
7
/////Blogger venkatesh r said...
திர் எண் : 77 க்கான அலசல்.
குழந்தைக்கு ஏன் பேச்சு வரவில்லை?
1. லக்னாதிபதி 8ல் மறைந்து பாபகர்த்தாரியின் பிடியில் வலுவிழந்துள்ளார்.
2. 2ம் அதிபதி புதன் 7ல் வக்கிரமடைந்து ராகுவுடன் கூட்டணி வைத்துள்ளார்.
3. 2மிடமான வாக்கு ஸ்தானம் பாபகர்த்தாரியின் பிடியில் உள்ளது.
4. உடல் காரகன் சூரியனும் ராகுவின் பிடியில்.
5. பிறக்கும் போது இருந்த‌ ராகு தசை.
மேற்கண்ட காரணங்களால் பேச்சு வரவில்லை.
ஜாதகப்படி பின்னால் பேச்சு வருமா? அல்லது வராதா?
குரு தசா ஆரம்பித்த பிறகு, பேச்சு வந்திருக்கும்.
1. 2ம் அதிபதி புதன் லக்ன கேந்திரத்தில் 7ல் அமர்வு மற்றும் சுபகர்த்தாரியில் உள்ளார்.
2. லக்னாதிபதி சுக்கிரனின் பார்வை 2மிடத்திற்கு உள்ளது.
குருவின் சுய‌ புக்தியின் முடிவில், கிட்டத்தட்ட 12 வயதில் பேச ஆரம்பத்திருப்பார்.
Wednesday, February 18, 2015 2:06:00 PM /////
-------------------------------------------------
8
Blogger Anantha Kumar said...
வணக்கம் சார் இத்தனை நாட்களாக வகுப்பறைக்கு வெளிய நின்று
பாடங்களை படித்து வந்தேன் இது தான் வகுப்பறைக்கு உள்ளே வந்து
எழுதும் முதல் தேர்வு தவுறுகள் இருந்தால் மன்னிக்கவும் சார்
குழந்தைக்கு ஏன் பேச்சு வரவில்லை?
1.பேச்சுக்கு உரிய இடம் ஆனா 2ம் இடம் பவகர்த்தியோகத்தில் உள்ளது
2.லக்கனத்தில் நீசமான கேது அமர்ந்து ஜாதகருக்கு தடுமாற்றத்தை
கொடுக்கிறார்
3.2ம் இடத்துக்கும், பேச்சுக்கு உரிய கிரகமான புதன் 7ல் கேந்திரத்தில்
இருந்தாலும் உச்சம் பெற்ற ராகு மற்றும் சூரியனுடன் இணைந்து
அவரும் பாபகிரகம் மாகி தன சுயத்தை இழந்து உள்ளார்
4.மனதுக்கு காரகன் சந்திரன் 6ல் சனிபகவான் பார்வை வாங்கி மறைந்து ஜாதகருக்கு மனதை ஒரு நிலை படுத்த விடாமல் தடுக்கிறார்
5.புதனுக்கு வீடு கொடுத்த செவ்வாய் 3ல் நீசம் பெற்று சனிபகவானின்
பார்வை பெற்று மேலும் மாந்தி உடன் கூட்டாக அமைந்து அவரும் தன்னுடைய பலத்தை இழந்துள்ளார்
6.ராசிக்கு இரண்டில் மூன்று பாப கிரகங்கள்( பொதுவாக இரண்டிற்கு
மேற்பட்ட கிரங்கள் ஒரு இடத்தில் இருந்தால் அந்த இடத்தை பாதிக்கவே
செய்யும் ஆனால் இந்த விதி வெற்றி ஸ்தனமான 11ம் இடத்திருக்கு பொருந்தாது
7.மேலும் உச்சம் ராகு பாப கிரங்களுடன் சேர்ந்து திசையை நடத்துவதால் ஜாதகருக்கு பேச்சு வரவில்லை
பேச்சு வரும் ஆனால் சரளமாக வராது திக்கி திக்கி தான் பேசுவார்
காரணங்கள்
1.லக்னத்திற்கு 2ம் வீட்டு அதிபதி 7ல் சுபகர்த்தியோகத்தில் கேந்திரத்தில் இருப்பது (8ம் வீட்டில் சுக்கிரன், 6ம் வீட்டில் சந்திரன்)
2.ராசிக்கு 2ம் வீடும் சுபகர்த்தியோகத்தில் உள்ளது சார் (3ம் வீட்டில் சுக்கிரன், 1ம் வீட்டில் சந்திரன்)
சார் எனக்கு தெரிந்த அளவு எக்ஸாம் எழுதிருக்கேன் பேப்பரா திருத்தி மார்க் எவ்வோளோனு சொல்லுங்க சார் :-)
Wednesday, February 18, 2015 2:48:00 PM ////
-----------------------------------------------
9
////Blogger anand tamil said...
1. குழந்தைக்கு ஏன் பேச்சு வரவில்லை?
காரணம் :
2ம் வீட்டிற்க்கு அதிபதி புதன் 2ம் வீட்டிற்க்கு 6இல் மறைந்தது .
சுக்கிரன் லக்கினாதிபதி மற்றும் 6ம் வீட்டு அதிபதி. சுக்கிரன் 8இல் மறைந்து 2ம் வீட்டை பார்த்தார்
2. ஜாதகப்படி பின்னால் பேச்சு வருமா? அல்லது வராதா?
பேச்சு வரும் . காரணம் புதன் பூர்வ புண்ணிய அதிபதி . புதன், 4ம் வீட்டு அதிபதி சூரியன் மற்றும் குருவின் பார்வை லக்கினத்தில் பதிவதாலும் .
சுக்கிரன் லக்கினாதிபதியாகவும் இருந்து 2ம் வீட்டை பார்ப்பதாலும்
Wednesday, February 18, 2015 5:48:00 PM /////
------------------------------------------------
10
//////Blogger Raja Sekaran said...
லக்னத்தில் கேதுவும் ஏழாமிடத்தில் ராகுவும் உள்ளது. வாக்கு ஸ்தானாதிபதியான புதன் ஏழாமிடத்தில் ராகு மற்றும் சுகஸ்தான அதிபதியான சூரியனுடன் உள்ளார். நடப்பது ராகு திசை. லகனாதிபதியான சுக்கிரன் எட்டாமிடத்தில் மறைந்து உள்ளார். எனவே பேச்சு வரவில்லை. ஆனால் லக்னத்தை குரு பார்ப்பதால், அடுத்து வரக்கூடிய குரு திசையில் கண்டிப்பாக பேச்சு வரும்.
Wednesday, February 18, 2015 6:38:00 PM /////
------------------------------------------------
11
////Blogger Regunathan Srinivasan said...
அன்புள்ள அய்யா ,
லக்னம் ரிஷபம்.லக்னாதிபதி 8 இல் மறைவு.வாக்கு ஸ்தானம் என்பது 2 ஆம் இடம்.2 மற்றும் 5 ஆம் அதிபதி புதன் 7 ஆம் இடத்தில உள்ளார்.பிறப்பில்
பேச்சு இல்லை என்றாலும் பின்னாளில் பேச்சு வந்திருக்க வேண்டும்.
குரு திசையில் புதன் புத்தியில் பேச்சு வந்திருக்க வேண்டும் . மேற்கொண்டு
என்ன எழுதுவது என்று தெரியவில்லை...மற்றவர்களின் பதிலுக்காக மேலும் உங்களின் முடிவுக்காக காத்திருக்கிறேன்
S . ரகுநாதன்
Wednesday, February 18, 2015 7:00:00 PM /////
---------------------------------------------------------
12
/////Blogger Kirupanandan A said...
இதற்கு 2ம் இடம் (வாக்குஸ்தானம்) மற்றும் புதன் இவர்கள் கெடக்கூடாது. இந்த ஜாதகத்தில் 2ம் அதிபதியுமான புதன் பாப கிரகங்களுக்கிடையில்
இருப்பதுதான் காரணம். இது தவிர 2ம் இடம் பாப கர்த்தாரி யோகத்தில் இருப்பதும் ஒரு காரணம்.
புதன் சுபகர்த்தாரி யோகத்தில் இருப்பதால் பின்னாளில் பேச்சு வர வாய்ப்புள்ளது.
Wednesday, February 18, 2015 7:15:00 PM ///////
-----------------------------------------------------------
13
/////Blogger vignesh.t Kumar said...
VIGNESH : 2 am idam pavakarthi yogathil, oru pakam kethu matroru pakam sevvai 
lagnathipathi and rasi adhipathi 8 l maraivu , idhu ellam serthu vai pesa mudiyadha
 padi seidhadhu , may be SUKIRAN ( lagnadhipathi) arulal , 
pesa vaipundu
Wednesday, February 18, 2015 8:25:00 PM /////
-------------------------------------------------
14
/////Blogger Chandrasekharan said...
Respected Sir Vanakkam,
1.) 2-m adhibathy Budhan 7-il irundhalum, Avar veetirku 6-il ullar. Idhudhan pechuvaradhadarkku migaperiya karanamaga enakku thondrugiradhu. 
Kethuvin paarvaiyaiveru petrullar.
Budhanukku idam alitha Chevvai neesam. 
Lagnadhipathy 8-il amarvu.
Astamadhipathy Guru 5-il amarndhu 9-m paarvayaga lagnathai parkiraar.
Pechu kandippaga varum aanal 100% fluencyyaga varuvadhu kadinam.
Ennudaya lagnamum rishabam, sukran 8-il and budhan 8-il.. Bhavathil budhan 7-il ullar.. adhanaldhan naan pala nerangalil Fluencyyaga pesuvadhu 
illai. stammeringaga pesugiraen. 
Pechu sariyaga illai endral velai kidaikkadhu, mana sangadangal endru ellam nadakkum. Stammering irukkuravanukkudhan andha vedhanai 
puriyum...
Kuzhandhaiku Nandraga pesa varavendum endru Iraivanai Manamaara Vendugiraen.
Thank You.
Wednesday, February 18, 2015 9:20:00 PM /////
------------------------------------------------
15
//////Blogger Ravichandran said...
Ayya,
1. The reason for not getting speech is Second house owner(Bhudhan) in 6th house 
from 2nd house. Moreover is joined with Neecha Rahu and 
Combust with Sun as well
2. He will get speech after his Rahu Desa completes. After completing Neecha Rahu 
Dasa, he will get speech.
Your Student,
Trichy Ravi
Wednesday, February 18, 2015 9:58:00 PM /////
---------------------------------------------
16
//////Blogger siva kumar said...
வணக்கம் ஐயா
ஜாதகர் ரிஷப லக்கனம்
துலாம் ராசி
லக்கன அதிபதி சுக்கிரன்
1. 2ஆம் வீடான வாக்கு ஸ்தான அதிபதி பூரனமாக கெட்டுள்ளார்
2. ஜாதகருக்கு பேச்சு வரும்
1. 2ஆம் வீடான வாக்குஸ்தான அதிபதி புதன் சூரியன் மற்றும் ராகுவுடன் சேர்ந்து கிரக யுத்ததில் உள்ளார்
புதன் தன் வீட்டிற்கு 6ம் வீட்டில் உள்ளார் அதுவும் சாதகமாக இல்லை
வாக்குஸ்யான அதிபதி புதனிற்கு சுப கிரக பார்வைகள் இல்லை இதுவும்
ஒரு கரனம்
வாக்குஷ்தான அதிபதி புதனிற்கு நிச்சமான கேதுவின் பார்வையும்
விழுவதும் ஒரு குறை 2ஆம் வீட்டிற்கு லக்கின அதிபதி பார்வை
பெருவதால் பேச்சு வரும்.
Wednesday, February 18, 2015 10:17:00 PM /////
-----------------------------------------------
17
/////Blogger KJ said...
Sir,
1. Second house in paaba karthari yogam. Also this house owner sits 6th from second house with Ragu and Suriyan. So he cannot talk.
2. He will be able to speak in future. Second house owner in Suba karthari yogam. 
In upcoming Guru dasa he will able to speak. Also Lagnathypathy aspects second house. 
Thanks,
Sathishkumar GS
Wednesday, February 18, 2015 10:44:00 PM //////
-------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!