மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label முருகன் பாமாலை. Show all posts
Showing posts with label முருகன் பாமாலை. Show all posts

29.8.17


ஆன்மீகம்: கலக்கிய காணொளிகள்!

உங்களுக்காக 3 காணொளிகளைப் பதிவிட்டுள்ளேன். அனைவரும் அவசியம் பாருங்கள்!

அன்புடன்
வாத்தியார்
====================================
1
 முதலில்  திருவாசகம் பற்றிய திருவாளர் வைகோவின் உரை!!!

---------------------------------------------------------------------------
2.
நாம் பயணிக்க வேண்டிய கப்பல்கள் பற்றி
திருச்சி கல்யாணராமன் கூறியது!

-------------------------------------------------------------------------------------
3
ஒரு சிறுமி ஞானப் பழத்தை எப்படிப் பிழிகின்றார் - பாருங்கள்


==========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.1.16

இன்று தைப்பூசம்!

இன்று தைப்பூசம்!

தை மாதத்தில் பொங்கலுக்கு இணையாக இன்னொரு விசேட நாள் இருக்கிறது என்றால் அது தைப்பூச தினம்தான்! ஆயிரக் கணக்கான முருக பக்தர்கள் நடைப் பயணமாக பழநிக்குச் செல்லும் நாள் இது. இன்னன்நாளில் நாமும் முருகப் பெருமானை நினைத்து, வழிபட்டு அவனருளைப் பெறுவோம்!

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் அற்புதமாக முருகனைப் பாடிய சில பாடல்களை இன்று பதிவிடுகிறேன். படித்து மகிழுங்கள்!

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாகக் குவலயத்தோர் வழிபடட்டும் என்று சிறப்பாகத் தன் வசனத்தில் எழுதிப் படங்களிலும்
அதைச் சிறப்பாகக் காட்டியவர் திரு.ஏ.பி.நாகராஜன்.

எல்லா இடங்களிலும் குன்றில் உறையும் குமரன், திருச்சீரலைவாய் எனப்படும் திருச்செந்தூரில் மட்டும் கடலோரத்தில் குடிகொண்டுள்ளார்.

சூரனைவென்று தேவர்களைக் காத்தகுமரன், இன்றும் இன்முகத்துடன் அங்கே நின்று, தன் அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார்.

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் திருச்செந்தூர் சண்முகநாதனைச் சிறப்பித்துப் பாடிய  பாடல்களை நீங்கள் படித்து மகிழ இன்று பதிவிட்டுள்ளேன்!

பாடலைப் பாருங்கள்:
-------------------------------------------------
"திருச்செந்தூரின் கடலோரத்தில்
செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்!

அசுரரை வென்ற இடம் - அது
தேவரைக் காத்த இடம்
ஆவணி மாசியிலும் - வரும்
ஐப்பசித் திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம்!

கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள்
தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும்
குமரனவன் கலையா?

மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும்முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரை தாங்கும்முகம் ஒன்று
சாதிமத பேதமின்றிப் பார்க்கும்முகம் ஒன்று
நோய்நொடிகள் தீர்த்துவைக்கும் வண்ணமுகம் ஒன்று
நூறுமுகம் காட்டுதம்மா ஆறுமுகம் இங்கு!

பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா
கண்மலர்கள் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால்
கந்தா முருகா வருவாய் அருள்வாய் முருகா!

படம்: தெய்வம் - வருடம் 1972

"திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - அவனைத் தேடித்தேடி வருவோர்க் கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்!" என்று

பாடலைத் துவங்கியவர், கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் - தலையா கடல் அலையா? என்று வியந்ததோடு, குழந்தைகள், பெரியவர் என்று

அனைவரையும் அங்கே வரவழைக்கும் செயல் குமரனுக்கு மட்டுமே தெரிந்த கலை!" என்று சொன்னது இந்தப்பாடலின் சிறப்பாகும்.

நம்பியவர் வந்தால், நெஞ்சுருகி நின்றால், முருகன் வந்து அவர்களுக்கு அருள் புரிவான் என்று முத்தாய்ப்பாய்ப் பாடலை முடித்தது கவியரசருக்கே

கைவந்த கலை என்றால் அது மிகையல்ல!
---------------------------------------------
மற்றுமொரு பாடல்:

செந்தூர் முருகன் கோவிலிலே - ஒரு
சேதியை நான் கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்

(செந்தூர்)

என்னிரு கைகள் தூக்கியபோது
பெண்பார்க்க வந்தானம்மா,
பன்னிரு கையில் வாரி யணைத்துப்
பண்பாட வந்தானம்மா!

கொஞ்சும் குமரனின் அழகிய மடியில்
கொண்டாட வரலாமா?
குங்குமம் சிவந்த கோதை இதழில்
ஒன்றேனும் தரலாமா?"

படம்: சாந்தி - வருடம்.1965
-------------------------
மேலும் ஒரு பாடல்:

இந்தப் பாடலை ஒருமுறைக்கு இருமுறை படித்துப் பாருங்கள். என்னதொரு சொல் விளையாட்டு என்று கண்டு கூறுங்கள்!

"காவலுக்கு வேலுண்டு ஆடலுக்கு மயிலுண்டு
கோவிலுக்கு பொருளென்னடா - குமரா
நீயிருக்கும் இடம் தானடா

(காவ..)

நதிகளிலும் மலர்களிலும் நடந்துவரும் தென்றலிலும்
உன்முகம் கண்டேனடா - எங்கும்
சண்முகம் நின்றானடா

(காவ..)

ஓம் முருகா என்றவுடன் உருகுதடா உள்ளமெல்லாம்
ஒருகணம் சொன்னேனடா - அங்கே
சரவணன் வந்தானடா!

தெய்வயாணை தேடிவந்தாளே விழி வண்டோடு
கந்தனுன்னைக் காண வந்தாளோ அருள் கண்ணோடு
பக்தனென்னைப் பார்க்க வந்தாளோ

(காவ..)

ஆடுவதும் தொட்டிலடா அன்புமகன் கட்டிலடா
பாடுவது வள்ளி அல்லடா - என் கந்தையா
ஏழையுடன் பள்ளி கொள்ளடா!

திருப்பதம் நான் தாங்கத் தாலேலோ
புவியாவும் நீ தாங்கத் தாலேலோ
கந்தைய்யா வேலையா தாலேலோ
தங்கையா முருகையா தாலேலோ நீ தாலேலோ"

படம்: மனிதனும் தெய்வமாகலாம் - வருடம் 1975

"காவலுக்கு வேலுண்டு ஆடலுக்கு மயிலுண்டு கோவிலுக்கு பொருளென்னடா - குமரா நீயிருக்கும் இடம் தானடா" என்று கோவிலுக்கு ஒரு புது

விளக்கம் சொல்லிப் பாடலைத் துவக்கியவர், "நதிகளிலும் மலர்களிலும் நடந்துவரும் தென்றலிலும், ஏன் எங்கும் உன்முகம் தான் தெரியுது  சண்முகா"

என்று சொன்னது இந்தப் பாடலின் சிறப்பு.

புவியைக் காப்பவனே, உன் திருவடிகளை நாங்கள் தாங்குவோம் என்று முத்தாய்ப்பான வரிகளில் சொன்னது இந்தப் பாடலின் மற்றுமொரு சிறப்பு!!!

அன்புடன்
வாத்தியார்
===================================================

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13.10.15

இன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற வாசல் அது!

இன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற வாசல் அது!

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப் பெருமான் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------
ஆறுமுகன் வாசம் செய்யும் ஆலயத் திருவாசல்
அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்
(ஆறுமுகன் ... )

அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்
ஏறுமயில் ஏறிவரும் இறைவனின் தலை வாசல் 
எண்ணற்றக் காவடிகள் எடுத்தாடும் எழில் வாசல் 
(ஆறுமுகன் ... )

ஏழைமுகம் பார்த்திறங்கும் ஈராறு விழி வாசல் 
இன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற மன வாசல் 
வாழையடி வாழை என வாழ வரம் தரும் வாசல் 
வானவரும் வந்திறங்கி வணங்கி நலம் பெரும் வாசல்
(ஆறுமுகன் ... )

பொங்கும் சரவணப்பொய்கை போகின்ற தனி வாசல்
புலவோர்கள் நா துதிக்கும் புகழ் திருப் புகழ் வாசல் 
சங்கும் முரசும் முழங்கும் சங்கீதம் தவழ் வாசல் 
சக்தி வடிவேல் முருகன் சன்னிதியைத் தொழும் வாசல் 
இளைத்தாரும் களைப்பாற இளம் தென்றல் வரும் வாசல்
நீலவர்க்கும் ஞானியர்க்கும் இன்பம் தரும் ஒரு வாசல்
மலைத்தேனும் தினைமாவும் மணம் வீசும் மலர் வாசல் 
மால் மருகன் திருச்செந்தூர் மகராசன் எழும் வாசல் 
(ஆறுமுகன் ... )

அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்
ஏறுமயில் ஏறிவரும் இறைவனின் தலை வாசல்
எண்ணற்றக் காவடிகள் எடுத்தாடும் எழில் வாசல்
(ஆறுமுகன் ... ).

பாடிப்பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள் 
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.10.15

தேரில் வந்தவன் நேரில் தந்தது என்ன?


தேரில் வந்தவன் நேரில் தந்தது என்ன?

பக்தி மலர்

6.10.2015

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப்
பெருமான் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும்
படித்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------
பழநி என்னும் ஊரிலே ... பழநி என்ற பேரிலே
பவனி வந்தான் தேரிலே ... பலனும் தந்தான் நேரிலே
முருகன் ... பலனும் தந்தான் நேரிலே.

பழமுதிரும் சோலையிலே ... பால் காவடி ஆடிவர
தணிகை மலை தென்றலிலே ... பன்னீர் காவடி ஆடிவர
சாமிமலை கோயிலிலே ... சர்க்கரை காவடி ஆடிவர 
செந்தூரின் வாசலிலே ... சந்தனக் காவடி ஆடிவர 

குமரன் ...
பழநி என்னும் ஊரிலே ... பழநி என்ற பேரிலே

பரங்குன்றின் மலையோரம் ... சேவற்கொடி ஆடிவர
குன்றக்குடி என்நாளும் ... வண்ண மயிலும் ஆடிவர
மயிலத்தின் மலைமேலே ... மணி ஓசை முழங்கிவர 
விராலிமலை மேலிருந்து ... வீரவேலும் வெற்றி தர.

கந்தன் ...
பழநி என்னும் ஊரிலே ... பழநி என்ற பேரிலே
பவனி வந்தான் தேரிலே ... பலனும் தந்தான் நேரிலே
முருகன் ... பலனும் தந்தான் நேரிலே.

பாடிப் பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள் 
========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

29.9.15

பாடவந்தது ஏன் மறந்தது?


பாடவந்தது ஏன் மறந்தது?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப் பெருமான் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------
உன்னைத்தான் பாடவந்தேன் ... வண்ணமயில் வேல்முருகா
உன்னைக்கண்டு மறந்துவிட்டேன் ... என்ன சொல்லிப் பாடுவதோ ...
என்ன சொல்லிப் பாடுவதோ
(உன்னைத்தான் ...)

பழமுதிரும் சோலை வந்தேன் ... மனமுருகி பாடி நின்றேன் 
பழநிமலை ஓடி வந்தேன் ... அழகு தமிழ் பாடி நின்றேன் 
திருத்தணிக்கு தேடி வந்தேன் ... திருக்காட்சி காணவந்தேன் 
(உன்னைக்கண்டு ...)

தினைப்புனத்தைக் காத்துநின்ற ... அனைவரையும் கேட்டுவந்தேன் 
திருப்பபரங்குன்றூர் வந்தேன் ... தென்குமரி தேவைவந்தேன் 
ஆறுபடை வீதியெல்லாம் ... நூறுமுறை சென்றுவந்தேன் 
(உன்னைக்கண்டு ...)

பாடிப் பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள் 
-------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

22.9.15

பூமாலை போட்டவன் என்ன கேட்டான்?


பூமாலை போட்டவன் என்ன கேட்டான்?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப் பெருமான் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------
வேல் வந்து வினை தீர்க்க ... 
மயில் வந்து வழிகாட்ட
கோயிலுக்குள் சென்றேனடி ... 
குமரன் கொலுவிருக்கக் கண்டேனடி
(வேல் வந்து ... )

பால் கொண்டு நீராட்டிப் 
பழம் தந்து பாராட்டி 
பூமாலைப் போட்டேனடி ...
பூமாலைப் போட்டேனடி ... 
திருப்புகழ் மாலை கேட்டேனடி 
(வேல் வந்து ... )

பங்குனியில் உத்திரத்தில் ... 
பழநி மலை உச்சியினில் 
கந்தன் என்னைக் கண்டேனடி ...
கந்தன் என்னைக் கண்டேனடி ... 
எந்தன் சிந்தையில் நின்றானடி 

வேலழகும் மயிலழகும் ... 
வீற்றிருக்கும் பேரழகும் 
காலமெல்லாம் இருக்குமடி ... அந்த ... 
காட்சி என்றும் இனிக்குமடி 
(வேல் வந்து ... ).

பாடிப் பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள் 
=====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

15.9.15

தினமும் செய்ய வேண்டிய முதல் வேலை!


தினமும் செய்ய வேண்டிய முதல் வேலை!

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப் பெருமான் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து
மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------
முருகா உனக்கு புகழ் மாலை
சூட்டுவதே தினம் முதல் வேலை
கந்தா உன் திரு வடிவேலை
வணங்கிடத் தானே அதிகாலை
(முருகா ... )

தூவிடக் குறிஞ்சி மலருண்டு
தேன் தினையோடு கனியுண்டு 
பாதத்தில் வைத்திட மனம் உண்டு
பூஜையை ஏற்பாய் நீ வந்து
(முருகா ... )

ஆலயம் என்பதுன் நிழல்தானே
அணையா தீபம் உன் அருள் தானே
காலமும் துணையாய் நீ தானே
கருணையைப் பொழிவதுன் விழிதானே
(முருகா ... )

தேவயானை ஒருபுறமும்
மான்மகள் வள்ளி மறுபுறமும்
தோன்றிட நீ தரும் திருக்காட்சி
மங்கலம் வழங்கிடும் அருட்காட்சி
(முருகா ... )

கந்தா உன் திரு வடிவேலை
வணங்கிடத் தானே அதிகாலை
முருகா முருகா முருகா.

பாடிப் பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள் 
=====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8.9.15

எத்தனை திருநாட்கள் அவனுக்கு!


எத்தனை திருநாட்கள் அவனுக்கு!

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப் பெருமான் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------
முருகனுக் கொருநாள் திருநாள்
அந்த முதல்வனின் வைபவப் பெருநாள்
(முருகனுக் கொருநாள் ... )

கடம்பனுக் கொருநாள் திருநாள்
நல்லக் கார்த்திகைப் பெருநாள் ஓருநாள் 
(முருகனுக் கொருநாள் ... )

வைகாசி விசாகத் திருநாள்
அந்த வண்ணக் கதிர்வேலன் பெருநாள் 
வடிவேல் குமரனின் திருநாள் 
சோமவாரத்தின் திங்கள் பெருநாள்

வடிவேல் குமரனின் திருநாள்
சோமவாரத்தின் திங்கள் பெருநாள்

கந்த சஷ்டிக்கொருத் திருநாள் 
கந்தன் கருணைப் பொழிகின்றப் பெருநாள்

கந்த சஷ்டிக்கொருத் திருநாள்
கந்தன் கருணைப் பொழிகின்றப் பெருநாள்
(முருகனுக் கொருநாள் ... )

சரவணன் பிறந்தத் திருநாள்
அருள் சந்தணம் வழங்கிடும் பெருநாள் 

செந்தூர் வாசலில் ஒருநாள் 
கந்தன் காவடி ஆடிடும் பெருநாள்

வள்ளிக் குமரனின் மண நாள் 
நம் வாழ்வின் சுடர் ஒளிப் பெருநாள்

முருகனுக் கொருநாள் திருநாள்
அந்த முதல்வனின் வைபவப் பெருநாள்
கடம்பனுக் கொருநாள் திருநாள்
நல்லக் கார்த்திகைப் பெருநாள் ஓருநாள்

நல்லக் கார்த்திகைப் பெருநாள் ஓருநாள் 

பாடிப் பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள் 
=======================================================
2


நாடென்ன வீடென்ன காடென்ன மேடென்ன எல்லாம் ஓர் நிலம் தான்

வெளி நாடுகளில் வசிக்கும் நமது மாணவக் கண்மணிகள் பலரிடம் இருந்து, வாத்தியாரின் புத்தகம்’ எங்களுக்கில்லையா? என்று கேட்டு மின்னஞ்சல்கள் வந்த வண்ணம் உள்ளன.

ஏன் இல்லை? அவர்களுக்கும் உண்டு.

என்ன வித்தியாசம். அஞ்சல் செலவுதான் அதிகமாக உள்ளது. இந்தியாவிற்குள் எந்த ஊரில் இருந்தாலும் கூரியர் அல்லது தபாலில் (Post) 50 ரூபாய் செலவில் புத்தகத்தை யாருக்கும் கிடைக்கும்படி செய்து விடலாம்.

ஆனால் வெளிநாடுகளுக்கு அவ்வாறு குறைந்த செலவில் அனுப்ப முடியாது. அந்தந்த நாடுகளின் பொருளாதார சூழ்நிலை அப்படி!

புத்தகத்தின் எடை 360 கிராம்கள் (பக்கங்கள் 320)

இந்தியாவில் இருந்து அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் உள்ளவர்களுக்கு  வகுப்பறை ஜோதிடம் - முதல் தொகுதியை அனுப்ப ரூ.800:00 முதல் ரூ.900:00 வரை தபால் செலவு ஆகும். அதுபோல சிங்கப்பூர் அல்லது கோலாலம்பூர் போன்ற ஊர்களில் வசிப்பவர்களுக்கு அனுப்ப
ரூ.600:00 அல்லது ரூ.700:00 ஆகும். அத்துடன் புத்தகத்தின் விலையையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

அதற்கு சம்மதம் உள்ளவர்கள் எழுதுங்கள். உங்களுக்கு புத்தகம் உடனடியாக அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும்!

பதிப்பகத்தாரின் மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com

அன்புடன்,
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

1.9.15

அறிவுக் கண்ணைத் திறந்து வைக்கும் அருமருந்து எது?




அறிவுக் கண்ணைத் திறந்து வைக்கும் அருமருந்து எது?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப் பெருமான் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------

திருநீறில் மருந்திருக்கு தெரியுமா

திருநீறில் மருந்திருக்கு தெரியுமா? 
அதை தினம் அணிந்தால் புகழ் இருக்கு புரியுமா? 
முருகன் ... திருநீறில் மருந்திருக்கு தெரியுமா?

அருள் மணக்கும் ... ஐயனின் திருமருந்து 
நல்ல அறிவுக் கண்ணைத் திறந்து வைக்கும் அரும் மருந்து
அருள் மணக்கும் ... ஐயனின் திருமருந்து
நல்ல அறிவுக் கண்ணைத் திறந்து வைக்கும் அரும் மருந்து

அன்பு வழியில் வாழவைக்கும் பெருமருந்து 
நல்ல ஆசியெல்லாம் நமக்கென்றும் தரும் மருந்து 
வேலன் ... திருநீறில் மருந்திருக்கு தெரியுமா?

கன்னியரைக் கற்பு வழியில் நடத்தும் மருந்து
இளங் காளையரைக் காலமெல்லாம் காக்கும் மருந்து 
மங்கையர்க்கு மழலைச்செல்வம் கொடுக்கும் மருந்து 
திருமங்கலமாய் குங்குமமும் வழங்கும் மருந்து 
குமரன் ... திருநீறில் மருந்திருக்கு தெரியுமா?

கற்பனையில் கவிதைப்பாட செய்யும் மருந்து
பெருங் கள்வரையும் திருந்தி வாழ செய்யும் மருந்து
முன்வினை தந்த நோயெல்லாம் தீர்க்கும் மருந்து
நம் வாழ்வில் நல்ல செல்வமெல்லாம் சேர்க்கும் மருந்து

கந்தன் ... திருநீறில் மருந்திருக்கு தெரியுமா?
அதை தினம் அணிந்தால் புகழ் இருக்கு புரியுமா?
முருகன் ... திருநீறில் மருந்திருக்கு தெரியுமா?

பாடிப் பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள் 
=======================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

25.8.15

கரம்கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல் அது!


கரம்கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல் அது!

பக்தி மலர்

இன்றையப் பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப்பெருமான் பாடல் ஒன்றின் வரிகள் அலங்கரிக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
-----------------------------------------------------------------------------
ஆறுமுகன் வாசம் செய்யும் ஆலயத் திருவாசல்
அலைக்கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள்வாசல்
(ஆறுமுகன் ... )

அலைக்கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள்வாசல்
ஏறுமயில் ஏறிவரும் இறைவனின் தலை வாசல் 
எண்ணற்றக் காவடிகள் எடுத்தாடும் எழில் வாசல் 
(ஆறுமுகன் ... )

ஏழைமுகம் பார்த்திறங்கும் ஈராறு விழி வாசல் 
இன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற மனவாசல் 
வாழையடி வாழை என வாழ வரம் தரும் வாசல் 
வானவரும் வந்திறங்கி வணங்கி நலம் பெரும் வாசல் 
(ஆறுமுகன் ... )

பொங்கும் சரவணப்பொய்கை போகின்ற தனி வாசல்
புலவோர்கள் நா துதிக்கும் புகழ் திருப்புகழ் வாசல் 
சங்கும் முரசும் முழங்கும் சங்கீதம் தவழ் வாசல் 
சக்திவடிவேல் முருகன் சன்னிதியைத் தொழும் வாசல் 

இளைத்தாரும் களைப்பாற இளம் தென்றல் வரும் வாசல்
நீலவர்க்கும் ஞானியர்க்கும் இன்பம் தரும் ஒரு வாசல்
மலைத்தேனும் தினைமாவும் மணம் வீசும் மலர்வாசல்
மால்மருகன் திருச்செந்தூர் மகராசன் எழும் வாசல் 
(ஆறுமுகன் ... )

அலைக் கரம்கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்
ஏறுமயில் ஏறிவரும் இறைவனின் தலை வாசல்
எண்ணற்றக் காவடிகள் எடுத்தாடும் எழில் வாசல்
(ஆறுமுகன் ... ).

பாடிப்பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்!
=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.8.15

குன்றெல்லாம் ஆள்பவன் அவன்!


குன்றெல்லாம் ஆள்பவன் அவன்!

பக்தி மலர்

இன்றைய பக்திமலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப்பெருமானின் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன.
அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
----------------------------
அழகெல்லாம் முருகனே

அழகெல்லாம் முருகனே ... 
அருளெல்லாம் முருகனே
தெளிவெல்லாம் முருகனே ... 
தெய்வமும் முருகனே
(அழகெல்லாம்)
... தெய்வமும் முருகனே

பழஞானப் பசியாலே ... 
பழநிக்கு வந்தவன் 
பழமுதிர்ச்சோலையிலே ... 
பசியாறி நின்றவன் 
... பசியாறி நின்றவன்
(அழகெல்லாம்)
... தெய்வமும் முருகனே

குன்றெல்லாம் ஆள்பவன் ... 
குகனாக வாழ்பவன் 
குறவள்ளிக் காந்தனவன் ... 
குறிஞ்சிக்கு வேந்தனவன் 
பூவாறு முகங்களிலே ... 
பேரருள் ஒளிவீசும் 
நாவாறப் பாடுகையில் ... 
நலம்பாடும் வேலனவன் 
(அழகெல்லாம்)
... தெய்வமும் முருகனே.

பாடிப் பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள் 
----------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

11.8.15

காலை இளம் கதிரில் என்ன தெரியும்?

காலை இளம் கதிரில் என்ன தெரியும்?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய முருகப் பெருமானின் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------
காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது
கடலலையில் மயில் எழுந்து நடனம் புரியுது
முருகா ...
(காலை இளம்)

நீல ...
கடலலையில் மயில் எழுந்து நடனம் புரியுது
கலையாதது நிலையாகுது கதியாகுது
(காலை இளம்)

மாலை வெயில் மஞ்சளிலே உன் மேனி மின்னுது
அந்த கோலம் கண்டு உள்ளம் கொள்ளை உறுதிகொள்ளுது 
குமரா உனை மனம் நாடுது கூத்தாடுது
முருகா ...
(காலை இளம்)

கடலலையில் மயில் எழுந்து நடனம் புரியுது
முருகா ...
(காலை இளம்)

சோலை மலர்க் கூட்டம் உந்தன் தோற்றம் கொள்ளுது
சிவ சுப்ரமண்ய சுப்ரமண்யம் என்று சொல்லுது 
சுகமாகுது ... குக நாமமே ... சொல்லாகுது
முருகா ...
(காலை இளம்)

கடலலையில் மயில் எழுந்து நடனம் புரியுது
முருகா ...
(காலை இளம்)

வேலை ஏந்தும் வீரம் வெற்பு சிகரமாகுது
வெற்றி வேல் சக்தி வேலா என்றே சேவல் கூவுது
சக்தி வேல் சக்தி வேல் என்றே சேவல் கூவுது
சக்தி வேல் வேல் சக்தி வேல் வேல் என்றே சேவல் கூவுது

வேலை ஏந்தும் வீரம் வெற்பு சிகரமாகுது
வெற்றி வேல் சக்தி வேலா என்றே சேவல் கூவுது
வினை ஓடுது வடி வேலது துணையாகுது
ஆகுது ...
(காலை இளம்)

கடலலையில் மயில் எழுந்து நடனம் புரியுது
முருகா ...
(காலை இளம்)

பார்க்கின்ற காட்சியெல்லாம் நீயாகவே
நான் பாடுகின்ற பாட்டெல்லாம்
முருகா ... முருகா ...
பாடுகின்ற பாட்டெல்லாம் நினக்காகவே
முருகா ...

பார்க்கின்ற காட்சியெல்லாம் நீயாகவே
நான் பாடுகின்ற பாட்டெல்லாம் நினக்காகவே
உருவாகுது திருவாகுது குருநாதனே
முருகா ...
(காலை இளம்)

நீல ...
கடலலையில் மயில் எழுந்து நடனம் புரியுது
கலையாதது நிலையாகுது கதியாகுது
(காலை இளம்)

நீல ...
கடலலையில் மயில் எழுந்து நடனம் புரியுது
குருநாதனே முருகா 

பாடலைப் பாடிப் பரவசப் படுத்தியவர்: பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜன்
===================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

4.8.15

முதல் வேலை எது?


முதல் வேலை எது?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப்பெருமானின் பாடல் வரிகள் அலங்கரிக்கின்றன.
படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
========================================================
முருகா உனக்கு புகழ் மாலை
சூட்டுவதே தினம் முதல் வேலை
கந்தா உன் திரு வடிவேலை
வணங்கிடத் தானே அதிகாலை
(முருகா ... )

தூவிடக் குறிஞ்சி மலருண்டு
தேன் தினையோடு கனியுண்டு 
பாதத்தில் வைத்திட மனம் உண்டு
பூஜையை ஏற்பாய் நீ வந்து
(முருகா ... )

ஆலயம் என்பதுன் நிழல்தானே
அணையா தீபம் உன் அருள் தானே
காலமும் துணையை நீ தானே
கருணையைப் பொழிவதுன் விழிதானே
(முருகா ... )

தேவயானை ஒருபுரமும்
மான்மகள் வள்ளி மறுபுரமும்
தோன்றிட நீ தரும் திருக்காட்சி
மங்கலம் வழங்கிடும் அருட்காட்சி
(முருகா ... )

கந்தா உன் திரு வடிவேலை
வணங்கிடத் தானே அதிகாலை
முருகா முருகா முருகா.

சூலமங்கலம் சகோதரிகள் - முருகா உனக்கு புகழ் மாலை
===================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

28.7.15

எது நடக்காது?


எது நடக்காது?

பக்தி மலர்

இன்றைய பக்திமலரை பத்மஸ்ரீ டி. எம். செளந்தரராஜன் அவர்கள் பாடிப் பரவசப் படுத்திய முருகப் பெருமானின் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
--------------------------------------------------------
பழநிக்குச் சென்று ... அழகனைப் பார்த்து
உருகிய மேனி உலகிலே
தன் ... வீட்டுக்கு வரவும் நினைக்குமா?
யார் கூப்பிட்டப்போதும் நடக்குமா?
(பழநிக்குச் சென்று ... )

தன் ... வீட்டுக்கு வரவும் நினைக்குமா?
யார் கூப்பிட்டப்போதும் நடக்குமா?

தணிகைக்கு வந்து ... தலைவனைக் கண்டு
வணங்கியப் பின்னால் வாழ்விலே 
அன்பில் ... கும்பிட்ட கைகள் விலகுமா?
பொன் கோடி தந்தாலும் தீண்டுமா?
(பழநிக்குச் சென்று ... )

அறுபடை வீடும் ... அடியவரோடு
நடந்திடும் கால்கள் புவியிலே 
இனி ... வேரொருப் பாதையில் செல்லுமா?
வடிவேலவன் உறவைத் தள்ளுமா?
(பழநிக்குச் சென்று ... )

காவடிக் கொள்ளும் ... பூவடி நிழலில்
கலந்தப்பின் உள்ளம் கனவிலும் 
நாம் ... வாவென அழைத்தால் திரும்புமா?
அது வானுலகாயினும் விரும்புமா?
(பழநிக்குச் சென்று ... )

தன் ... வீட்டுக்கு வரவும் நினைக்குமா?
யார் கூப்பிட்டப்போதும் நடக்குமா?
 --------------பத்மஸ்ரீ டி. எம். செளந்தரராஜன் 
==========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

21.7.15

பழம் உதிர்த்த சோலை அது!


பழம் உதிர்த்த சோலை அது!

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப் பெருமானின் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும்
படித்து மகிழுங்கள்

அன்புடன்,
வாத்தியார்
----------------------------------------------------
பழமுதிரும் சோலையிலே பழமுதிர்த்த முருகா
பட்டுக்குறத்தி வள்ளி மணவாளா 
பருவம் சிறியதாக இருந்தாலும்
ப்ரணவத்தை உபதேசம் செய்தவனே வேல் முருகா 
வேல் முருகா ... வெற்றி வேல் முருகா 

பக்தியோடு நீரணிந்து வருவோரை எல்லாம்
பற்றோடு காப்பவனே வேல் முருகா 
பச்சை மயிலேறி உலகைச் சுற்றி வலம் வந்த வேல் முருகா 
பாதத்தைப் பற்றி உன் கோயிலைச் சுற்றியே வந்தேன் வேல் முருகா 
வேல் முருகா ... வெற்றி வேல் முருகா 

பாடும் குயிலினங்களும் ஆடும் மயில் இனங்களும்
பாடிடும் குகா குகா என்றே வேல் முருகா 
பறக்கும் பறவையெல்லாம் உன் பெயர் சொன்னால் வேல் முருகா 
நான் ... பாடிடவும் வேண்டாமா
நாளும் கொண்டாடிட வேண்டாமா? 
வேல் முருகா ... வெற்றி வேல் முருகா 

பழமுதிரும் சோலையிலே பழமுதிர்த்த முருகா
பட்டுக்குறத்தி வள்ளி மணவாளா
பருவம் சிறியதாக இருந்தாலும்
ப்ரணவத்தை உபதேசம் செய்தவனே வேல் முருகா
வேல் முருகா ... வெற்றி வேல் முருகா 
- பாடிப் பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்
==================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14.7.15

அவனிருக்கையில், எது வந்தாலென்ன எது போனாலென்ன?


அவனிருக்கையில், எது வந்தாலென்ன எது போனாலென்ன?

பக்தி மலர்

14.7.2015

இன்றைய பக்தி மலரை பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய முருகப்பெருமானின் பாடல் ஒன்றின் வரிகள் அலங்கரிக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
அருணகிரி பரவு திருஅடிகள் தொழும் அடியவர்க்கு
ஒரு பயமும் உலகிலில்லை மனமே 
சிவ குமரனையே வணங்கிடுனே தினமே
குமரனையே வணங்கிடுனே தினமே

அரு மறையின் ஒரு பொருளை அறுமுகத்தின் திருவருளை
பெறுபவர்க்கு பிணிகள் இல்லை நினைவாய் 
அந்தப் பேரின்பச் சோலையிலே நுழைவாய் 

(அருணகிரி பரவு திருஅடிகள் தொழும் அடியவர்க்கு
ஒரு பயமும் உலகிலில்லை மனமே
குமரனையே வணங்கிடுனே தினமே)

வளரெழிலும் மலர் மணமும் ... வழிநெடுக தேன்சுவையும் 
விருந்தாக நிறைந்து மனம் இனிக்கும்
வடிவேலுடனே மயிலும் வந்து அழைக்கும்
(அருணகிரி ... )

புதிய மனம் புதிய சுவை ... புதிய நிலை புதிய வழி 
தெறிந்தவர்க்கு திகைப்பேது பின்னே
இங்கு எதுவந்து எதுபோயின் என்னே 
(அருணகிரி ... )

அழகுவிழி பழகியபின் அமுத மழை பொழியும் அதில்
நனைந்தவர்க்கு வாய்த்ததுவே தருணம் 
குருநாதனவன் தாள் சரணம் சரணம்
(அருணகிரி ... )

குமரனையே வணங்கிடு தினமே

பாடிப்பரவசப் படுத்தியவர்: பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜன் 
==========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

7.7.15

இன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற மன வாசல் எது?


இன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற மன வாசல் எது?

பக்தி மலர்

இன்றைய பக்திமலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிப் பரவசப் படுத்திய முருகப் பெருமானின் பாடல் ஒன்றின் வரிகள் அலங்கரிக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
==============================================
ஆறுமுகன் வாசம் செய்யும்

ஆறுமுகன் வாசம் செய்யும் ஆலயத் திருவாசல்
அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்
(ஆறுமுகன் ... )

அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்
ஏரு மயில் ஏறிவரும் இறைவனின் தலை வாசல் 
எண்ணற்றக் காவடிகள் எடுத்தாடும் எழில் வாசல் 
(ஆறுமுகன் ... )

ஏழைமுகம் பார்த்திறங்கும் ஈராறு விழி வாசல்
இன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற மன வாசல் 
வாழையடி வாழை என வாழ வரம் தரும் வாசல் 
வானவரும் வந்திறங்கி வணங்கி நலம் பெரும் வாசல் 
(ஆறுமுகன் ... )

பொங்கும் சரவணப்பொய்கை போகின்ற தனி வாசல்
புலவோர்கள் நா துதிக்கும் புகழ் திருப் புகழ் வாசல் 
சங்கும் முரசும் முழங்கும் சங்கீதம் தவழ் வாசல் 
சக்தி வடிவேல் முருகன் சன்னிதியைத் தொழும் வாசல் 

இளைத்தாரும் களைப்பாற இளம் தென்றல் வரும் வாசல்
நீலவர்க்கும் ஞானியர்க்கும் இன்பம் தரும் ஒரு வாசல்
மலைத்தேனும் தினைமாவும் மணம் வீசும் மலர் வாசல் 
மால் மருகன் திருச்செந்தூர் மகராசன் எழும் வாசல் 
(ஆறுமுகன் ... )

அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்
ஏறுமயில் ஏறிவரும் இறைவனின் தலை வாசல்
எண்ணற்றக் காவடிகள் எடுத்தாடும் எழில் வாசல்
(ஆறுமுகன் ... ).

பாடிப்பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள் 
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.6.15

நண்பனாக வந்தவன் அவன்!


நண்பனாக வந்தவன் அவன்!

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய பக்திப் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------
ஆயிரம் போற்றி பாடினும் ஆவல் ஆறுமோ முருகா
(ஆயிரம் ... )
ஆறுமுகா ...
(ஆயிரம் ... )

தாயினும் இனித்தாய் தந்தையாய் வளர்த்தாய் 
வாழ்வெல்லாம் வகுத்தாய் வரம் எனக்களித்தாய் 
(ஆயிரம் ... )

நீயே எளியேன் நெஞ்சினில் நின்றாய்
நிம்மதி தந்தே அஞ்சேல் என்றாய் 

நாயேன் பிழைகள் நாளும் பொருத்தாய் 
நண்பனாய் வந்தே துன்பம் தவிர்த்தாய் 
(ஆயிரம் ... )
ஆறுமுகா
(ஆயிரம் ... ).

பாடியவர்: பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜன் 
==============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

23.6.15

கண்ண பெருமாளை ஒருவர் காதலிக்கும்போது முருகப் பெருமானையும் ஒருவர் காதலிக்கக்கூடாதா என்ன?


கண்ண பெருமாளை ஒருவர் காதலிக்கும்போது முருகப் பெருமானையும் ஒருவர் காதலிக்கக்கூடாதா என்ன?

பக்தி மலர்

காதல் எப்படி பக்தியாகும். பக்தியின் அதீத நிலைப்பாடுதான் காதல். கண்ணனைக் காதலானாக்கி பாரதியார் பாடலை எழுதினார். இப்போது முருகனைக் காதலானாக்கி ஒருவர் பாடலை எழுதியுள்ளார். சூடிக் கொடுத்த ஆண்டாள் கண்ணனைக் காதலிக்கவில்லையா?

ஆனால் முருகப்பெருமான் மீது காதல் கொண்டு ஒரு பெண் மயக்கத்துடன் பாடுவதைப் போல பாடலை எழுதியுள்ளார் கவிஞர் ஒருவர். இன்று அல்ல. பல ஆண்டுகளுக்கு முன்னாள். ஆனால் அதை ஒரு பெண் பாடகியை வைத்துப் பாட வைக்காமல். ஆண் பாடகர் ஒருவரை வைத்துப் பாட வைத்ததுதான் சற்று நெருடலாக உள்ளது. அதை மறந்து விட்டுப் பாடலை மட்டும் பார்ப்போம்.

இன்றைய பக்தி மலரை அந்தப் பாடலின் வரிகள் நிறைக்கிறது. அனைவரும் படித்து மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------
பாங்கி என்றால் தோழி என்று வைத்துக்கொள்ளுங்கள்

(பல்லவி)

இன்பக் கனா ஒன்று கண்டேன் ... பாங்கி 
என்னுள்ளம் மகிழ்வு கொண்டேன் ... என்பாங்கி
(இன்பக் கனா ஒன்று கண்டேன்)

அனுபல்லவி
தென்பழனி ஊரன் ... சேவற் கொடிக்காரன் 
என்னுயிர்காதாரன் ... இரவில் எனையடைய
(இன்பக் கனா)

சரணம்
1.
பன்னிரு தோளழகும் ... பரந்த விழியழகும்
மின்னொளி வேலழகும் ... மேனி அழகும் 
காதல் ...
கன்னல் மொழி அழகும் ... களிற்றின் நடையழகும் 
பொன்மயில் தன்னழகும் ... புன்னகையின் அழகும் 
(இன்பக் கனா)

பாங்கி ... என்னுள்ளம் மகிழ்வு கொண்டேன் ... என்பாங்கி
(இன்பக் கனா)

2.
தென்றல் மலர் மணத்தை ... வாரி இறைத்தெங்கும்
திங்கள் அடைந்ததெந்தன் ... தேகம் சிலிர்த்தது
அங்கு ...
தென்றல் மலர் மணத்தை ... வாரி இறைத்தெங்கும்
திங்கள் அடைந்தது எந்தன் ... தேகம் சிலிர்த்தது
அங்கு ...
அந்திப் பேடோடு நடம் ... ஆடிக்களித்தப் போது 
ஆறுமுகன் வந்தென்னை அணைந்து சுகித்ததைப் போல்
(இன்பக் கனா)

பாங்கி ... என்னுள்ளம் மகிழ்வு கொண்டேன் ... என்பாங்கி
(இன்பக் கனா)

3.
முன்னர் யான் கண்டறியா ... மோகக்கிளர்ச்சி பல
மூண்டது என்னுள்ளத்தில் ... முற்றும் எனை மறந்தேன் 
உன்னைக் கைவிடேன் என்றோர் ... உறுதி மொழியும் சொன்னான் 
ஒப்பிவிட்டேன் ஆவியை ... தப்பிதம் ஏதும் உண்டோ? 
(இன்பக் கனா)

பாங்கி ...
(இன்பக் கனா)

4.
அன்புடன் பேசி என்னை ... அணைத்துப் பிடித்துவிட்டான்
அதரம் கனிய முத்தம் ... அமுதமெனக் கொடுத்தான் 
துன்பம் பிறப்பிறப்பு ... சோகம் இல்லாதொழித்தான் 
தோகையே இதன் பயன் ... சொல்லடி நீயறிந்தால் 
(இன்பக் கனா)

பாங்கி ...
என்னுள்ளம் மகிழ்வு கொண்டேன் ... என்பாங்கி
இன்பக் கனா 
--------------------------------
பாடகர்: M.M. தண்டபாணி தேசிகர்
வரிகள்:  கு.சா. கிருஷ்ணமூர்த்தி
---------------------------


Dandapani Desikar
Vocalist
M M Dandapani Desikar was a Carnatic vocalist, actor and composer. Dandapani Desikar was born in Tiruchengattangudi, near Nannilam in Madras Presidency. He got training from Manicka Desikar and Kumbakonam Rajamanickam Pillai. Wikipedia
Born: August 27, 1908, India
Died: June 26, 1972
Parents: Muthiah Desikar
-------------------------------
கண்ணன் - என் காதலன் 
பாடலாக்கம்: மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
-------------------------------------------------
செஞ்சுருட்டி - திஸ்ர ஏக தாளம்
சிருங்கார ரசம்

தூண்டிற் புழுவினைப்போல் - வெளியே
சுடர் விளக்கினைப் போல்,
நீண்ட பொழுதாக - எனது
நெஞ்சந் துடித்த தடீ!
கூண்டுக் கிளியினைப் போல் - தனிமை
கொண்டு மிகவும் நொந்தேன்;
வேண்டும் பொருளை யெல்லாம் - மனது
வெறுத்து விட்டதடீ! . ... 1

பாயின் மிசை நானும் - தனியே
படுத் திருக்கை யிலே,
தாயினைக் கண்டாலும் - சகியே!
சலிப்பு வந்த தடீ!
வாயினில் வந்ததெல்லாம் - சகியே!
வளர்த்துப் பேசிடுவீர்;
நோயினைப் போலஞ் சினேன்; - சகியே!
நுங்க ளுறவை யெல் லாம். ... 2

உணவு செல்லவில்லை; - சகியே!
உறக்கங் கொள்ளவில்லை.
மணம் விரும்பவில்லை; - சகியே!
மலர் பிடிக்க வில்லை;
குண முறுதி யில்லை; - எதிலும்
குழப்பம் வந்த தடீ!
கணமும் உளத்திலே - சுகமே
காணக் கிடைத்ததில்லை. ... 3

பாலுங் கசந்தடீ தடீ! - சகியே!
படுக்கை நொந்த தடீ!
கோலக் கிளிமொழியும் - செவியில்
குத்த லெடுத்த தடீ!
நாலு வயித்தியரும் - இனிமேல்
நம்புதற் கில்லை யென்றார்;
பாலத்துச் சோசியனும் - கிரகம்
படுத்து மென்று விட்டான். ... 4

கனவு கண்டதிலே - ஒருநாள்
கண்ணுக்குத் தோன்றாமல்,
இனம் விளங்க வில்லை - எவனோ
என்னகந் தொட்டு விட்டான்.
வினவக் கண்விழித்தேன்; - சகியே!
மேனி மறைந்து விட்டான்;
மனதில் மட்டிலுமே - புதிதோர்
மகிழ்ச்சி கண்டதடீ! . ... 5

உச்சி குளிர்ந்ததடீ! - சகியே!
உடம்பு நேராச்சு,
மச்சிலும் வீடுமெல்லாம் - முன்னைப்போல்
மனத்துக் கொத்தடீ!
இச்சை பிறந்ததடீ! - எதிலும்
இன்பம் விளைளந்ததடீ!
அச்ச மொழிந்ததடீ! - சகியே!
அழகு வந்ததடீ! ... 6
=======================================

எண்ணும் பொழுதி லெல்லாம் - அவன்கை
இட்ட விடத்தினிலே!
தண்ணென் றிருந்ததடீ! - புதிதோர்
சாந்தி பிறந்ததடீ!
எண்ணி யெண்ணிப் பார்த்தேன்; - அவன்தான்
யாரெனச் சிந்தை செய்தேன்;
கண்ணன் திருவுருவம் - அங்ஙனே
கண்ணின் முன் நின்றதடீ! ... .7
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.6.15

அந்த நாயகன் எப்போது கூட வந்தான்?

அந்த நாயகன் எப்போது கூட வந்தான்?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை திருமதி பி.சுசீலா அவர்கள் பாடிய முருகன் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்

அன்புடன்,
வாத்தியார்
====================================
சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
இரு கரம் நீட்டி வரம் கேட்டேன் அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்
சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம்

அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை
இவ்விதம் இவர் தந்த இன்ப நிலை கண்டு எவ்விதம் நான் கண்டேன் மாறுதலை

ஓஹோஹோஹோ...ஹோஹோஹோ. ஓஹோஹோஹோ
ஓஹோஹோஹோ...ஹோஹோஹோ. ஓஹோஹோஹோ

சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம்

நல்லவர் என்றும் நல்லவரே உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே
நல்லவர் என்றும் நல்லவரே உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே
நல்ல இடம் நான் தேடி வந்தேன் அந்த நாயகன் என்னுடன் கூட வந்தான்

சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
இரு கரம் நீட்டி வரம் கேட்டேன் அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்
சரவணப் பொய்கையில் நீராடி துணை தந்தருள் என்றேன் முருகனிடம்

பாடல்: சரவணப் பொய்கையில் நீராடி
திரைப்படம்: இது சத்தியம்
பாடியவர்: பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
ஆண்டு: 1963
=============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!