மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label இணையத் திருட்டுக்கள். Show all posts
Showing posts with label இணையத் திருட்டுக்கள். Show all posts

26.12.12

என்னதான் எழுதிப் போடட்டுமே; எழுதியதை திருட்டுக் கொடுக்கட்டுமே!!!

என்னதான் எழுதிப் போடட்டுமே; எழுதியதை திருட்டுக் கொடுக்கட்டுமே!!!

என்னதான் எழுதிப் போடட்டுமே
எழுதியதை திருட்டுக் கொடுக்கட்டுமே
இணையத்தின் விதியதை உணரட்டுமே
என்னாளும் கலக்கம் கொள்ளட்டுமே!


(புரட்சித்தலைவரின் ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே’ என்னும் பாடலை கொஞ்சம் உல்டா செய்து எழுதியுள்ளேன்)

இணையத்தில் எழுதுவது என்பது ஒரு இளம் பெண் திறந்த வெளியில் குளிப்பதற்குச் சமமானது. ஒரு இளம் பெண், அதுவும் அழகான இளம் பெண் திறந்த வெளியில்தினமும் குளித்தால் என்ன ஆகும் என்பது உங்களுக்குத் தெரியும். நான் அதை விவரிக்க வேண்டியதில்லை.

2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வகுப்பறையில் எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆறு ஆண்டுகளில் இதுவரை 1277 பதிவுகள வெளிவந்துள்ளன

3,654 தொடர்பாளர்களும், கூகுள் ரீடர் வழியாகப் படிப்பவர்களுமாக சுமார்  
5, 000 வாசகர்கள் எனக்குக் கிடைத்துள்ளார்கள். அது மகிழ்ச்சி தரும் விஷ்யம். அதே நேரத்தில் என்னுடைய ஆக்கங்கள் அனைத்தும் திருட்டுப் போய்க் கொண்டிருக்கின்றன. அது மகிழ்ச்சி தரும் விஷயமல்ல. திருடுகிறவர்கள் அவற்றைத் தாங்கள் எழுதியதைப் போன்று தங்கள் வலைத்தளங்களில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான், என் அரிய நேரத்தைச் செலவழித்து இரண்டு மணி நேரம் அல்லது அதற்கு மேலான நேரத்தில்
எழுதுவதை, திருடர்கள் ஜஸ்ட் லைக் தட் என்று 2 நிமிடங்களில் copy & paste முறையில் எடுத்துக் கொண்டு போய் விடுகிறார்கள். அதனால் என்ன ஆதாயம் என்பது அவர்களுக்கே வெளிச்சம்!

நமது வகுப்பறைக் கண்மணிகள் பலர் எனக்குத் திருட்டுக்களைச் சுட்டிக் காட்டினார்கள் (முன்பு வந்த, அவர்களுடைய கடிதங்களில் சிலவற்றை, உங்கள் பார்வைக்காகக் கீழே கொடுத்துள்ளேன்.)

Right side click செய்து பிரதி எடுப்பதைச் சாத்தியமில்லாதபடி செய்து வைத்திருக்கிறேன். ஆனால் திருடர்களுக்கு வேறு வழிகள் உள்ளன. அந்த வழியாக வந்துதிருடிக்கொண்டு போய் விடுகிறார்கள். நமது வலைப் பதிவை, உறுப்பினர்களுக்கு மட்டும் என்று வரையறுத்துவிடலாம். ஆனால் நூறு பேர்களை மட்டும் தான் உறுப்பினர் ஆக்க முடியும். கூகுள் ஆண்டவர் அதற்கு மட்டும்தான் அனுமதியளிப்பார்.

நம்து வகுப்பறை நண்பர் சித்தூர் முருகேசன் அவர்கள் பூட்டுப் போட்டு வையுங்கள் என்று அறிவுறுத்தினார். வலைத்தளங்களுக்கு எப்படிப் பூட்டுப் போடுவது? ஆகவே மேல்நிலைப் பாடங்களையும், அஷ்டகவர்கப் பாடங்களையும் தனி இணைய தளங்களில் (My own websites) எழுதி வருகிறேன். அங்கேயும் திருடர்கள் நுழைய முடியாதபடி எச்சரிக்கையாக இருக்கிறேன்.
------------------------------------------------------------------
திருட்டைப் பற்றி வந்த வாசகர் கடிதங்களில் சில:

1  
Rajaramarunagiri <...............@gmail.com>
  
12 Apr’ 2012
      
to spvrsubbiah, me
பெரு மதிப்பிற்குரிய ஆசிரியர்,
                           அவர்களுக்கு தங்களது வகுப்பறையிலிருந்து சில ஆக்கங்களை ஒரு உத்தமர் திருடிக்கொண்டுபோய் அவரது வலைத்தளத்தில் தான்
உருவாக்கியது போல் மேக்கப் போட்டுள்ளார்.அந்தத் தளத்தின்  முகவரி http://jothidamkarka.blogspot.com/2012/01/blog-post.html இது தாங்களும் சென்று
பாருங்கள்.எல்லாமே பகல்கொள்ளையாக இருக்கிறது. அடுத்தவர் உழைப்பைத் திருடி வெறும் cut&Paste மட்டுமே செய்துள்ளார்.வேண்டுமானாலும் ஒன்று செய்யலாம்
select  செய்யாதவாறு செய்தால் copy யும் செய்யமுடியாது.

Yours Friendly,
Rajaram.AR
-----------------------------------------------------------
2
தங்கள் வலைத்தளத்தில் இருந்து பதிவுகள் திருடு போகின்றன
திருட்டுக்கள்
    x
Bhuvaneshwar ||| Dharmalingam <.................................@gmail.com>  
11 May’ 2012
      
to me
அன்பரே, வணக்கம்,
தங்கள் வலைத்தளத்தில் இருந்து பதிவுகள் திருடுபோவதாக நான் எண்ணுகிறேன்.இதோ, உதாரணமாக:  http://www.amanushyam.com/2012/05/blog-post_3461.html .... யதிர்சையாக பார்த்தேன்...... சொல்ல வேண்டும் யென
தோன்றியது......எதையாவது பண்ணி, copy paste பண்ணுவதை தடுங்கள். சில blog களில் இந்த வசதியை நான் பார்த்து இருக்கிறேன். எப்படி என தெரியாது எனக்கு. தெரிந்தால் சொல்லி விடுவேனே........

Best Regards,
Bhuvaneshwar Dharmalingam
------------------------------------------------------------------
3
srinivasan  <........................@yahoo.com>
12/09/2011      
to me
Dear sir,

Today  I had some free time & I am aware that  our classroom lesson is closed for one week. But with Google help  just I was roaming in the web World & observed your lessons are copied by one blog named after AKGUPTA. I have observed even the words are also same Dito of our classroom lessons.Please take care about this fellow.

Thanks & Regards
G.Seenivasan
-------------------------------------------------------------
4
S.Prabhu Navaneethakrishnan <..................................@gmail.com>  
20/04/2011      

Hello Sir,

Hope all is well. I'm one of the student who is following your blog from 2008 and dormant for a while due to work. I happened come across this site in which he copied some of our articles. Though he has some articles of his own, I feel its my responsibility to let you know this. http://psssrf.org.in/usfullastro/tamilastrobooks.aspx?id=6484

God Bless you.
S.Prabhu Navaneethakrishnan <................................@gmail.com>
--------------------------------------------------------------  
நான் அவ்வாறு வந்த கடிதங்களுக்கு இப்படிப் பதில் எழுதினேன்:

இணையத்தில் பாதிப்பேர் அடுத்தவர்களுடைய எழுத்துக்களைத் திருடித் தங்களுடையதைப்போலப் பதிவிட்டுக்கொள்கிறார்கள். அற்பர்கள். அவர்கள் மேல் நடவடிக்கை எல்லாம் சாத்தியமில்லை. இணையத்தில் எழுதுவது ஒரு பெண் திறந்தவெளியில் குளிப்பதற்குச் சமம். ஒருவர் மட்டுமல்ல. நிறையப் பேர்கள் திருடிப் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சட்டத்தின் துணையோடு போராடலாம். தற்சமயம் அதற்கு நேரமில்லை.நமது மண்ணில் அது சாத்தியமுமில்லை. உங்களின் தகவலுக்கு நன்றி!
-----------------------------------------------------------------
இதுவரை 622 ஜோதிடப் பாடங்களை எழுதியுள்ளேன். அவை அனைத்தும் படிப்பதற்கும் கிடைக்கும், திருடிக்கொண்டு போவதற்கும் கிடைக்கும்.

ஜோதிடம் பொதுவானதுதான். எனக்கு மட்டும் சொந்தமானதில்லை. ஒவ்வொருவரும் பழைய ஜோதிட நூல்களைப் படித்து, தங்கள் சொந்த நடையில் எழுதினால் அல்லது கற்பித்தால் தவறில்லை. அடுத்தவனுடைய ஆக்கத்தை, எழுத்தைக் கூசாமல் திருடுவது எப்படி நியாயம் ஆகும்?

ஜோதிடம் பெரிய கடல். இன்னும் எத்தனை ஆண்டுகள் வேண்டுமென்றாமல் சுவாரசியம் குறையாமல் தொடர்ந்து எழுதலாம். ஆனால் இப்படி அநியாயமாகத் திருடிக் கொண்டுபோனால் என்ன செய்வது?

தனி இணையதளங்களான classroom2012 & classroom337 ஆகிய இரண்டிலும், பாடங்கள் முடியும் தருவாயில் உள்ளன. இந்த 3 இடங்களிலும் எழுதுவதைச்
சிரமாகக் கருதுகிறேன். நேரம் இனமை, மின்வெட்டு ஆகியவை முக்கியமான காரணங்கள். அத்துடன் எனது வியாபார மற்றும் சொந்த அலுவல்கள் எல்லாம் பாதிப்பிற்கு உள்ளாகின்றன

புத்தாண்டில் ஒரு இடத்தில் மட்டுமே எழுத முடியும் என்னும் நிலைமை!
இன்னும் 5 தினங்களில் புது ஆண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டில் ஏதாவது செய்ய நினைக்கிறேன்.

தொடர்ந்து எழுதலாமா? அல்லது வேண்டாமா?

வகுப்பறையை மூடிவிடலாமா?

அல்லது வகுப்பறையில் ஜோதிடத்தைத் தவிர்த்து வேறு எதையாவது எழுதலாமா?

உங்களுடைய மேலான ஆலோசனை வரவேற்கப்படுகிறது?

எனது மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com.

அக்கறை, ஆர்வம்  உள்ளவர்கள் அனைவரும் உங்களுடைய மேலான கருத்துக்களை எழுதுங்கள்

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

5.12.10

மகிழ்ச்சியும் வருத்தமும் ஒருசேர வரும்போது!


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மகிழ்ச்சியும் வருத்தமும் ஒருசேர வரும்போது!

பாரதிராஜா  படங்களில் வரும்  ஒரு  கிராமத்தை  நினைத்துக்
கொள்ளுங்கள். அங்கே நாட்டாமைக்காரனின் வீடு.

அன்று துவாதசி. வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த நாள்.

நாட்டமைக்காரரின் மனைவி அதிகாலையிலேயே எழுந்து நன்றாக சமையல் செய்து, நாட்டாமைக்காரர் உட்பட, சொந்த பந்தங்கள் என்று மொத்தம் 20 பேர்களுக்கு சாப்பாடு பறிமாறினார்.

அற்புதம் என்று சொல்லியவாறு அனைவரும் சாப்பிட்டார்கள். துவாதசி ஆகையால் பாரம்பரியச் சமையல். கத்தரிக்காய் புளிக்குழம்பு, கருணைக் கிழங்கு கெட்டிகுழம்பு, லெட்சுமி குழம்பு (இது என்ன குழம்பு என்பதை வேறு ஒரு நாள் தனியாக எழுதுகிறேன்.) மஞ்சள் தூவி வாழைக்காய் பொரியல், பரங்கிக்காய் கூட்டு, புடலங்காய் துவட்டல், அகத்திக்கீரை பொரியல், மாங்காய் பச்சடி, வடை, பருப்பு, நெய், அப்பளம், அரிசி - வெல்லம், முந்திரி போட்டுப் பாயாசம், கெட்டித்தயிர், நெல்லிக்காய் ஊருகாய்.

சமையல் அதி ருசியாக இருந்தது. வந்திருந்த அனைவரும் ஒரு பிடிபிடித்தனர். நாட்டாமைக்காரரும் ஆனந்தமாகச் சாப்பிட்டார். வந்தவர்கள் எல்லாம் சென்று விட்டனர். நாட்டாமையின் மனைவி, தன் மகளைத் துணைக்கழைத்துக் கொண்டு, பக்கத்துக் கிராமத்தில் இருக்கும் தன் தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

“மதியம் வருகிறேன். கதவைத் தாள் போட்டுக்கொள்ளுங்கள்” என்று நாட்டாமையிடம், ஒரு முறைக்கு, இரு முறைகள் சொல்லிவிட்டுத்தான் போனார்.

பகலில் எவன் வரப்பொகிறான் என்று நாட்டமையும் அதைச் செய்யவில்லை.

காலையில் வயிறுமுட்டச் சாப்பிட்டால் தூக்கம் வராதா என்ன? தூக்கம் கண்ணைச் சொருகியது. கயிற்றுக்கட்டிலை, முற்றத்துக்குச் செல்லும் நடையில் போட்டு, நாட்டாமை சற்று நேரம் கண் அயர்வோம் என்று படுத்துக்கொண்டார். தென்றல் வருட, நித்திராதேவி அணைக்க நாட்டாமை நன்றாகத் தூங்கிவிட்டார்.

தூக்கத்தில் மனதுக்கு இதமாக இரு கனவு!

நாட்டாமைக்கு பெரிய பதவி கிடைத்துவிடுகிறது. மத்திய அரசில் நிதி அமைச்சராகி விடுகிறார். கட்சிக்கும் அவர்தான் பொருளாளர். அவருடைய ஒரே மகளுக்கு, சென்னை ராஜேஷ்வரி திருமண மண்டபத்தில் திருமணம் நடக்கவுள்ளது. அவருடைய நண்பர்களும், உதவியாளர்களும், கட்சித் தொண்டர்களும் திரளாகத் திரண்டு பம்பரமாக வேலை செய்கிறார்கள்.

முதல் நாள் இரவு மாப்பிள்ளை அழைப்பு. அந்த விருந்தே, பதினோரு வகைப் பலகாரங்களுடன் அருமையாகப் பறிமாறப்பெற்றது. (அவைகள் என்று KMRK  கேட்டால் சொல்லலாம் என்றுள்ளேன்) மொத்தம் பத்தாயிரம் பேர்களுக்குமேல் விருந்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அவர்களில் கணிசமான அளவு பிரபலங்கள்.

பாதுகாப்பிற்காக வந்த காவல் துறையினரே 500 பேர்கள். மற்றவர்களை உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்.

விடிந்தால் கல்யாணம்!

அப்போதுதான் அது நடந்தது.

முதுகில் பொளேர் என்று அடி விழுந்தது. எழுந்து உட்கார்ந்து விட்டார். கண்டது கனவு என்பதும், முதுகில் அடித்தது மனைவி என்றும் பத்து நொடிகளுக்குப் பிறகு புரிந்தது.

பகல் கனவு என்றால் பலிக்கும் என்பார்களே? விளங்காதவள் வந்து அடித்து எழுப்பிவிட்டாளே என்று கோபம் முட்டிக்கொண்டு வந்தது.

“ஏன்டா செல்லம் எழுப்பினே? தூங்கும்போது எழுப்பலாமா? எத்தனை பெரிய பாவம் தெரியுமா?” என்று பிரகாஷ்ராஜ் குரலில் இவர் கேட்கவும், அந்த அம்மணி அதற்குச் சற்றுக் குறையாத பாவத்துடன் பதில் சொன்னார்கள்.

“நல்லா இருக்குதே சாமி! இப்படிக்கதவைத் திறந்து போட்டுவிட்டுத் தூங்கினால் என்னத்தைச் சொல்வது? திருடர்கள் உள்ளே நுழைந்து இரும்பு அலமாரியை உடைத்து, உள்ளே இருந்த  வெள்ளிச் சாமான்களை
யெல்லாம் லவட்டிக்கொண்டு போயிருக்கிறார்கள்? மொத்தம்
பத்துக்கிலோ வெள்ளிச்சாமானும் களவு போயிருக்கிறது. தங்க நகைகளெல்லாம் வங்கி லாக்கரில் இருப்பதால், தப்பிப் பிழைத்திருக்கிறது.”

நாட்டாமை கிஞ்சித்தும் கவலைப் படாமல் சொன்னார்: “ வெள்ளிச் சாமன்கள்தானே போயிருக்கிறது. கவலைப்படாதேடா செல்லம். அடுத்த வெள்ளாமையில் செய்து தருகிறேன். என் மகளின் கல்யாணத்தைப் பார்க்க விடாமல் எழுப்பிவிட்டாயே?”

“என்ன மகளின் கல்யாணமா? என்ன உளறுகிறீர்கள்” ஒன்றும் புரியாமல் அம்மணி அப்பிராணியாகக் கேட்டார்கள்.

“அதெல்லாம் சொன்னால் உனக்குப் புரியாது” என்று சொன்ன நாட்டாமை, மீண்டும் படுத்து உறங்க ஆரம்பித்துவிட்டார் - விட்ட கனவு தொடரும் என்ற நைப்பாசையில்

உண்மைதான். மகளின் திருமணத்தைக் கண் குளிரக் காணும் அவரது மகிழ்ச்சி பெரிதா? அல்லது களவு போனதற்காக உட்கார்ந்து வருத்தப்படும் மனநிலை முக்கியமா?

நீங்களே சொல்லுங்கள்!

கிராமத்தானின் கதை என்று ஒரு பத்திரிக்கையில்முன்பு படித்த பத்து வரிக்கதை இது. ஊதிப் பெரிதாக்கி என்  நடையில் எழுதியிருக்கிறேன். 
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
”வாத்தி (யார்) எதற்காக இந்தக் கதை?”

“என் நிலையும் அதேதான். வகுப்பறையில் பின் தொடரும் மாணவர்களின் எண்ணிக்கை 2,000 ஐத்தைத் தாண்டியதற்காக நான் மகிழ்ச்சி கொள்ளவா? அல்லது 4 வருட உழைப்பில் எழுதப்பெற்ற எனது பதிவுகள் திருட்டுப் போனதற்குக் கவலைப் படுவதா? எதைச் செய்ய வேண்டும்? நீங்களே சொல்லுங்கள்!:-))))”

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++===


வாழ்க வளமுடன்!

1.12.10

e class: வலைப்பூவைப் (Blog) பூட்டிவைப்பது எப்படி?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
e class: வலைப்பூவைப் (Blog) பூட்டிவைப்பது எப்படி?
இன்றையப் பொருளாதார சூழ்நிலையில், பணத் தேடலில், மனிதன் பலவற்றை இழந்து விட்டான். படிக்கும் பழக்கத்தை நிறையப் பேர்கள்
இழந்து விட்டார்கள்.

தவறிப் படிப்பவர்கள் கூட நல்ல புத்தகங்களைப் படிப்பதில்லை. கேட்டால் நேரம் இல்லை என்பார்கள்.

எழுதுபவர்களுக்கு ஊக்கம் கொடுக்க ஆளில்லை. 'கல்கி’ போன்ற பெரிய எழுத்தாளர்கள் உருவாகாததற்குக்  காரணம் அதுவே!

வெகுஜனப் பத்திரிக்கைகள்கூட, திரைத்துறையைச் சார்ந்த செய்திகளையும், படங்களையும், கட்டுரைகளையும்  வைத்துத், தங்கள் பத்திரிக்கையை முன்னிறுத்துவதில் போராடுகின்றன. தங்களைத் தக்க வைத்துக்கொள்வதில்
சிரமப் பட்டுக்கொண்டிருக்கின்றன.

அதுபோல நல்ல செய்தித்தாள்களைப் படிப்பதற்கும் ஆளில்லை. தொலைக்காட்சி ஊடகங்கள் அந்த இடத்தைப்  பிடித்துக்கொண்டிருக்கின்றன!

Times of India  எனும் நாளிதழ் எவ்வளவு பெருமை வாய்ந்த நாளிதழ்! அவர்கள் கோவையில் அடுத்த மாதம் தங்கள் நாளிதழை இங்கேயே அச்சிட்டு வெளியிட உள்ளார்கள். அதற்காக கோவையில் உள்ள வாசகர்களைக்  கவரும் விதமாக சந்தாத் தொகையைக் குறைத்து, சந்தாதாரர்களைச்  சேர்த்துக் கொண்டிருக் கிறார்கள். ஏராளமான  வாசகர்களைத் தங்கள் பக்கம் இழுத்துள்ளார்கள். இழுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

நாள் இதழின் ஆண்டுச் சந்தா எவ்வளவு தெரியுமா? 299:00 ரூபாய்கள் மட்டுமே. சேருகிறவர்களுக்கு 150 ரூபாய் மதிப்புள்ள பயனப் பை (Traveling Bag) ஒன்றையும் அன்பளிப்பாகத் தருகிறார்கள்.

அதைப்பற்றிய விவரம் கீழே உள்ளது. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்




++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வகுப்பறைப் பதிவில் கடந்த 4 ஆண்டுகளாக எழுதிவருகிறேன். சராசரியாக ஒவ்வொரு பதிவும் 4,000  வாசகர்களால் படிக்கப்படுகிறது.

பின் தொடர்பவர்கள் பட்டியலில் இன்றையத் தேதியில் சுமார் 1,988 பேர்கள் இருக்கிறார்கள்

இது எப்படிச் சாத்தியப்பட்டது?

ஜோதிடப்பாடங்களால் மட்டுமா? அல்ல!

எதை எழுதினாலும் படிப்பவர்களுக்கு சுவாரசியம் தருவதாக அது இருக்க வேண்டும் என்ற முனைப்புடன்  எழுதிக்கொண்டிருக்கிறேன். அது தொடரும். அந்தப் பணி தொடரும்.

உதாரணங்கள், வர்ணனைகள், குட்டிக்கதைகள் என்று சுவாரசியமானவற்றைக் கலக்கலாகச் சேர்த்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.

வெறும் ஜோதிடம் என்றால் கசக்கும். ஜோதிடத்தை எளிமைப்
படுத்தி சுவாரசியமான நடையில் எழுதிக்  கொண்டிருப்பதால்,
அனைவராலும் படித்துத் தெரிந்துகொள்ள முடிகிறது. அறிந்து
கொள்ள முடிகிறது. நாட்டு மருந்துடன் தேனைக்கலந்து
கொடுப்பார்கள். அப்படி என்று வைத்துக்கொள்ளுங்கள்

கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகளில் இந்த சுவரசியம் தூக்கலாக இருக்கும்

  “ வாழ நினைத்தால் வாழலாம்
      வழியா இல்லை பூமியில்
   ஆழககடலும் சோலையாகும்
     ஆசையிருந்தால் நீந்தி வா”

என்று துவங்கியவர், நடுவில் இப்படி எழுதியிருப்பார்:

   “கண்ணில் தெரியும் வண்ணப் பறவை
      கையில் கிடைத்தால் வாழலாம்
    கருத்தில் வளரும் காதல் எண்ணம்
       கனிந்து வந்தால் வாழலாம்
    கன்னி இளமை என்னை அணைத்தால்
       தன்னை மறந்தே வாழலாம்.........

வண்ணப்பறவை நம்மை அணைத்தால் தன்னை மறப்போம் என்பதை எப்படிச் சுவாரசியாமச் சொல்லியிருக்கிறார்  பாருங்கள்..

இன்னொரு உதாரணம்:

     “கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா
        கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
     சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா
        சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா

இதழ் சிந்தும் சுவையை எப்படிக் கொண்டு வந்து சேர்த்தார் பாருங்கள். இதழ் சிந்தும் சுவை என்றால்  என்னவென்று தெரியுமல்லவா?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இனிமேல் எழுத உள்ள அரிய மற்றும் முக்கியமான ஆக்கங்கள் திருட்டுப்போகாமல் இருக்க நமக்கென்று, நமது  வகுப்பறை வாசகர்களுக்கென்று இணைய தளம் ஒன்று உருவாகிக்
கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் வலை ஏறும். குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே மாணவர்கள் அதில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

வலைப்பூவிலும் எனது ஆக்கங்கள் தொடரும். புதியவர்கள்
இதைப் படித்தால் போதும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நமது நண்பரும், வகுப்பறைக்கு வந்து போகும் பார்வையாளர்களில் ஒருவருமான திருவாளர் சித்தூர் முருகேசன்  அவர்கள், நமக்கு ஒரு செய்தியைச் சொல்லியிருக்கிறார். அதைக் கீழே கொடுத்துள்ளேன்.
அவர் ஒரு பெரிய  பத்திரிக்கையில் நிருபராகப் பணி புரிந்து கொண்டிருக்கிறார். அத்துடன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தேர்ந்தவர். அந்த இரண்டு மொழிகளிலுமே அவருக்கு வலைப்பூக்கள் உள்ளன. ஜோதிடத்தையும் நன்கு
அறிந்தவர். அவர் பின்னூட்டத்தில் சொன்ன செய்தியை, நீங்கள் அறிந்து கொள்வதற்காக அப்படியே  கொடுத்துள்ளேன்:

படத்தின் மீது கர்சரை வைத்து அழுத்தினால் படம் பெரிதாகத் தெரியும். படிப்பதற்கு வசதியாக இருக்கும்

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அவர் சொன்னபடி லாயத்தைப் பூட்டிவைக்கலாம். ஆனால் அதற்குப் பிறகு நான் அனுமதிப்பவர்கள் மட்டுமே  லாயத்தில் நுழைய முடியும். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது. 100 பேர்களுக்கு மட்டுமே லாயத்தின்  சாவியைக் கொடுக்க முடியும். கூகுள் அதற்கு 100 என்ற எண்ணிக்கை வரைமுறையை வைத்துள்ளது. அதையும் பாருங்கள்.

படத்தின் மீது கர்சரை வைத்து அழுத்தினால் படம் பெரிதாகத் தெரியும். படிப்பதற்கு வசதியாக இருக்கும்


1988 கண்மணிகள் இருக்கும் இடத்தில் 100 பேர்களுக்கு மட்டும் அனுமதி என்பது அதர்மமாகப் படுகிறது. ஆகவே திருட்டைத் தடுப்பதற்கு வேறு வழிகள் உள்ளன. அதை செயல் படுத்துவோம். இனிமேல் திருடர்கள்

நுழையாமல் தடுப்பதற்கு, எழுதுபவற்றில் முக்கியமான
பாடங்களுக்காக தனி இணைய தளம் தயாராகிக்
கொண்டிருக்கிறது. உண்மையில் ஜோதிடத்தில் ஆர்வம்
உள்ளவர்களை மட்டும் அதில் சேர்த்துக் கொள்வோம்.
மற்றறவர்கள் இதில் எழுதும் ஆக்கங்களைப் படித்தால் போதும்.

மற்றவை நாளை

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

22.11.10

ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தைக் காட்டலாமா?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தைக் காட்டலாமா?

“ஒருவன் உன் கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தையும் காட்டு. ஒருவன் உனது மேலங்கியை (coat) திருடிக்கொண்டு போனால், உன்னுடைய சட்டையையும், அவனிடம் கழற்றி கொடு” என்கிறது யேசு கிறிஸ்து பெருமகனாரின் அறிவுரை!

When someone hits you on the cheek offer the other as well.
When someone takes your coat let him have your shirt too.
Lk 6:29  Mt 5:39f   - 60

எனக்கு அந்தப் பக்குவம் இன்னும் வரவில்லை. கன்னத்தில் அறைந்தாலாவது பரவாயில்லை. முதுகில் கத்தியால் குத்திவிட்டுச் செல்பவனைக் கூப்பிட்டு, தம்பி,  நெஞ்சிலும் சொருகி விட்டுப்போ என்று சொல்ல முடியமா?

இது கலியுகம். கருணை கொண்டவனைவிட, அப்படித் திரிபவர்கள்தான் அதிகம்.

எனது ஜோதிடப் பாடங்களை ஒட்டு மொத்தமாகக் கடத்திக்கொண்டு சென்று தனது தளத்தில் பதிவிட்டுள்ளார் ஒரு அன்பர்.

கேட்டால் நான் உங்களிடமிருந்து கடத்தவில்லை என்கிறார். data files downloaded from http://www.4shared.com/ and http://gkgupthag.blog.com/ என்று எனக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்.

அந்த அருமைமிகும் குப்தாஜி என்ன சொல்கிறார்?

“பல இணைய தளங்களில்  இருந்த சுட்ட ஜாதக விபரங்களை வைத்து psssrf.org.in க்கு லிங்கு கொடுக்கிறேன் எனக்கு அலுவலக நேரம் முடிந்ததும் மாலை இரவு நேரங்களில் இன்டர்நெட்டில் இரண்டு ஆண்டிற்கு மேலாக இணையதளங்களில் இருந்த ஜாதக விபரங்களை சேகரிப்பது என் பொழுதுபோக்கு”

அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர், அவருக்குத் தமிழ் தெரியுமா? என்பது தெரியவில்லை! அவர் தன்னுடைய  வலைப்பூவில் அவற்றைக் கொடுக்கவில்லை. இவரும் அதை இன்னும் கொடுக்கவில்லை.

அத்துடன் http://www.4shared.com/ இணைய தளத்தில் இருந்து எடுத்ததாகக் குறிப்பிட்டதற்கு, அதன் சுட்டியைக் கேட்டிருந்தோம். அதற்கும் இதுவரை பதில் தரவில்லை.

கடத்திப் பதிவிட்டுள்ள பாடங்களின் அளவு சுமார் 140 MB.

4shared தளத்தில் அதன் உறுப்பினர்களுக்கு கோப்புக்களுக்காகத் தரப்படும் கொள்ளளவு 10 MB மட்டுமே.ஆகவே 140 MBக்கள் அளவிற்கான கோப்புக்களை அங்கிருந்து எடுத்திருக்க வாய்ப்பு இல்லை.

அவரே 40% அளவில் அங்கிருந்து எடுத்ததாகத் தன் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மீதியை எங்கிருந்து எடுத்தார்?

சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்போது, இவை அனைத்திற்கும் அவர் பதில் சொல்லியாக வேண்டும்!

அதுவரை, தற்சமயம், தகாத மொழியில் வசை பாடிக்கொண்டிருப்பதை அவர் தொடர்ந்து செய்யட்டும். வழக்கு என்னும்போது, இந்த வசை பாடல்களும் அதில் சேர்க்கப்படும். அதை அவர் மனதில் கொள்வது நல்லது.

அதைவிட ஒருபடி மேலே சென்று கையகப்படுத்திய எனது எழுத்துக்களை நீக்குவது அவருக்கு இன்னும் நல்லது!


படத்தின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கினால் படம் பெரிதாகத் தெரியும். படிப்பதற்கு வசதியாக இருக்கும்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இதுவரை 400 ஜோதிடப் பதிவுகளை வலையில் ஏற்றியுள்ளேன்.

தொடர்ந்து எழுத உள்ளேன்.

எழுத உள்ள அனைத்துமே மேல் நிலைப் பாடங்கள். அஷ்டகவர்க்கத்தில் மேல் நிலைப் பாடங்களைத் துவங்கினேன். அதைத் தொடர்ந்து எழுத உள்ளேன். ஜோதிட நுட்பங்களைப் பாடமாக நடத்த உள்ளேன். பிறகு பயிற்சிப்பாடங்கள், தொடர்ந்து அலசல் பாடங்கள் என்று என் பணி என் உயிர் உள்ளவரை தொடரும். ஜோதிடம் பெரிய கடல். என்னால் முடிந்த அளவு உங்களுக்குச் சுற்றிக் காட்டலாம் என்று உள்ளேன். அதற்கு அந்தப் பழநிஅப்பன் துணை மட்டும் வேண்டும்.

எழுத உள்ளவைகள் அனைத்துமே ஜோதிடத்தின் உயிர் நாடியான பகுதிகள். ஜீவனுள்ள பகுதிகள். சுவாரசியமான பகுதிகள். எழுத்தின் மேல் உள்ள காதலால், எழுதிப் பழகிவிட்டதால், செட்டிநாட்டு மண்வாசனைக் கதைகள் என்று நான் எழுதிய 60 சிறுகதைகளைப் புத்தகங்களாக்கிப் பலர் கைகளில் தவழ விட்டதால், அந்த ஆர்வம் கூடிக்கொண்டே செல்கிறது.

இனி எழுத உள்ள பகுதிகள் திருட்டுப்போகக்கூடாது. தனிப்பட்ட நபர் பயன் பாட்டிற்கு மட்டுமே அது உதவ வேண்டும்.

என்ன செய்யலாம்?

உங்களுடைய மேலான ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

இதுவரை நான் கேட்கும் முன்பாகவே 7 அன்பர்கள் தங்களுடைய ஆலோசனைகளை எழுதியுள்ளார்கள். அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்களுடைய பார்வைக்காக அவற்றைத் தொகுத்துக் கீழே கொடுத்திருக்கிறேன். அவற்றையும் படித்துப்பார்க்க வேண்டுகிறேன்

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++============
1
/////Sridhar Subramaniam said...
    அய்யா,
    போலீஸ் complaint எந்த அளவுக்கு உதவ முடியும் என தெரியவில்லை. இது ஒரு சைபர் crime
    எனக்கு தெரிந்து ஒரே வழி, மின் அஞ்சல் மூலம் பாடம் நடத்துவது தான்!
    நன்றி
    ஸ்ரீதர்
    ஸ்ரீதர்
    Sunday, November 14, 2010 11:11:00 PM
------------------------------------------------------------------------------
2
///////hamaragana said...
    அன்புடன் வணக்கம்
    எனக்கு தெரிந்த யோசனை..!!!வகுப்பறை ஐ இணையதளமாக மாற்றிவிடலாம் தற்போது இருக்கும் மாணவர்களுக்கு பயனர் எண்ணும்!! பாஸ்வோர்ட் கொடுக்கலாம் !!
    வகுப்பறையின் மூத்த மாணவர்கள் கலந்து ஆலோசித்து இணையதள அமைப்புக்கு ஆகும் செலவை வகுப்பறை மாணவர்கள் அனைவரும் பங்கு ஏற்றுகொள்ளலாம் !! தட்சிணை இல்லாத வித்தை பாழ் ??அடியேன் எதோ எனக்கு தெரிந்ததை கூறினேன் பிழை இருந்தால் பொருததுகொள்க நன்றி
    Tuesday, November 16, 2010 6:58:00 AM
------------------------------------------------------------------------------
3   
//////Sai said...
    //////அன்புடன் வணக்கம்
    எனக்கு தெரிந்த யோசனை..!!!வகுப்பறை ஐ இணையதளமாக மாற்றிவிடலாம் தற்போது இருக்கும் மாணவர்களுக்கு பயனர் எண்ணும்!! பாஸ்வோர்ட் கொடுக்கலாம் !!
    வகுப்பறையின் மூத்த மாணவர்கள் கலந்து ஆலோசித்து இணையதள அமைப்புக்கு ஆகும் செலவை வகுப்பறை மாணவர்கள் அனைவரும் பங்கு ஏற்றுகொள்ளலாம் !! தட்சிணை இல்லாத வித்தை பாழ் ??அடியேன் எதோ எனக்கு தெரிந்ததை கூறினேன் பிழை இருந்தால் பொருததுகொள்க நன்றி/////
    இந்த யோசனையை நானும் வரவேற்கின்றேன். இலவச bloggerல் தான் இப்படிப்பட்ட பிரச்சனை வரும்
    தனியார் இணைய தளத்தில் வர வாய்ப்பு குறைவு
    Tuesday, November 16, 2010 8:50:00 AM/////
-----------------------------------------------------------------------------
4   
kmr.krishnan said...
    'காப்பி ரைட் மீறல் இருந்தால் "முறைப்படி" தெரிவிக்கவும்' என்பதில் இருந்தே தெரிகிறது எப்பேர்ப்பட்ட "விளைஞ்ச கட்டை" அவர் என்பது.முறையற்ற செயலை செய்பவர்கள்தான் சட்டம் என்ற இருட்டறையில் புகுந்து கொண்டு மற்றவர்களுக்கு ஆட்டம் காட்டுவார்கள்.
    மனசாட்சி,தர்மம்,நியாயம் என்று சொல்பவர்கள் சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து புறப்பட மாட்டார்கள்.கோவிந்தன் "கோவிந்தா" ஆகட்டும்! நல்லவர்களின் சாபத்திற்கு ஆளாக‌ வேண்டாம் என்று எச்சரிகிறேன்.
    வகுப்பறையை இணையமாக மாற்றும் யோசனையை நானும் வரவேற்கிறேன்.
    ஆனால் இதுபோன்ற திருடர்களும் உறுப்பினர் ஆகி திருடாமல் இருக்க அதில் வழி உண்டா?
    ஆம்!ந‌டராஜன் சார் சொல்லும் "தட்சணை தராத கல்வி பாழ்"என்பது மிகச் சரி.சிறிய அள‌வாக இருந்தாலும் ஒரு தொகையை வலியுறுத்தி விட்டால், உண்மையான ஆர்வம் இருப்பவர்கள் மட்டுமே மிஞ்சுவார்கள். ஆர்வக்கோளாறு மட்டும் இருப்பவர்கள் விலகிக் கொள்வார்கள்.
    Tuesday, November 16, 2010 10:25:00 AM //////
-------------------------------------------------------------------------------
5  
//////sanjay said...
    வணக்கம் அய்யா,
    பதிவை இனணயதளமாக மாற்றுவது நல்ல யோசணை.'லாகின், பாஸ்வர்ட்' வைத்தாலும், கள்வர்கள் தானும் ஒரு உறுப்பிண‌றாகி கள்ளச்சாவியைப்போட்டு பெட்டியை உடைப்பார்! ஆகவே, இணையதளமாக‌ மாற்றினாலும் தொகுப்பு உள்ள பக்கத்திற்கு மட்டும் 'ரைட் க்ளிக்கை டிஸேபிள்' செய்துவிடவேண்டும். அய்யா, நம்முடைய இனணயதளத்தை வடிவமைத்துக் கொடுக்க நான் பொறுப்பேற்கிறேன். அதனுடைய 'வெப் ஹோஸ்டிங், டொமைன் ரெஜிஸ்ட்ரேஸன்' உங்களுடைய பொறுப்பு.(இரண்டுக்கும் சேர்த்து அதிகபட்சமாக ரூ.2500/‍ வருடச் சந்தா வரும்) அதன் இணைய முகவரி 'ஈவெப்குரு.காம்' சென்று சற்று நோட்டமிடுங்கள் உங்களுக்கே எல்லாம் புரிந்துவிடும்.
    டிஸ்கி:
    'இனணயதள வடிவமைப்பை ஒரு பொழுதுபோக்காகச் செய்துவருகிறேன். நான், சரக்குக் கப்பலில் முதல்நிலை அலுவலராகப் பணிபுறிகிறேன். ஆகவே, இந்த இனணயதள வடிவமைப்பை குரு தட்ச்சனையாக எற்றுக்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்'
    Tuesday, November 16, 2010 11:49:00 AM /////
----------------------------------------------------------------------------------
6
//////SHEN said...
    மதிப்புமிக்க பதிவுகளைக்கொண்டது உங்கள் வலைப்பூ..இதை இணையதளமாக ஆக்குவதே நல்லது..அதற்கு நாங்கள் என்ன செய்யவேண்டும் என அறிவிக்கவும்.
    அன்புடன்
    செங்கோவி
    Tuesday, November 16, 2010 8:42:00 PM //////
----------------------------------------------------------------------------------------
7.   
//////aryboy said...
    வணக்கம் அய்யா,
    திருடர்கள் எவ்வளவுதான் தன்டனை பெட்ராலும் காலம் காலமாக‌
    இது நடக்கதான் செய்யும்.நம் பாதுகாப்பை நாம் தான் அமைத்துக்
    கொள்ள வேண்டும்.நடக்கும் எதிர்மைரை சம்பவங்கல் நன்மை அளிக்கவே
    வருகிரது.எந்த முடிவு எடுத்தாலும் எங்களது ஆதரவு உண்டு.
    நன்றி,அரிபாய். வாழ்க வளமுடன்.
    Thursday, November 18, 2010 3:33:00 PM /////
---------------------------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்!

16.11.10

சுடப்பட்டது எப்படி?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 சுடப்பட்டது எப்படி?

முன்பதிவிற்கு பின்னூட்டம் எழுதிய அனைத்து மாணவக் கண்மணிகளுக்கும் நன்றி!

அன்பர் கோவிந்தன் பதில் எழுதியுள்ளார். அதை அப்படியே கீழே கொடுத்துள்ளேன். அனைவரும் படித்துப் பாருங்கள்.

http://www.4shared.com/ இணைய தளத்தில் இருந்து எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அது அந்தத் தளத்திற்கான நுழைவு முகவரி மட்டுமே. கோப்புக்கள் உள்ள பகுதியின் சுட்டி கொடுக்கப்படவில்லை!

இரண்டாவதாக, http://gkgupthag.blog.com/ என்ற தளத்தின் முகவரியைக் கொடுத்துள்ளார். அந்த G.K.குப்தா  தன்னுடைய பதிவில் இப்படி ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார்:
-------------------------------------------------------------------------------------
 “Hello world! 
By gkgupthag

psssrf.org.in இணையதளத்தில் என் ஜாதகத்தை ஆன் லைன்னில் கணித்தேன் மிகவும் திருப்திகரமாக இருந்தது. அந்த இணையதள
இயக்குனர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் மேலும்
psssrf.org.in பலருக்கு தெரியவில்லை எனவே பல இணைய
தளங்களில்  இருந்த சுட்ட ஜாதக விபரங்களை வைத்து
psssrf.org.in க்கு லிங்கு கொடுக்கிறேன் எனக்கு அலுவலக நேரம்
முடிந்ததும் மாலை இரவு நேரங்களில் இன்டர்நெட்டில் இரண்டு
ஆண்டிற்கு மேலாக இணையதளங்களில் இருந்த ஜாதக விபரங்களை சேகரிப்பது என் பொழுதுபோக்கு”
--------------------------------------------------------------------------------------
இணைய தளங்களில் சுடுவதுதான் அவரது பொழுதுபோக்காம். நிலைமை எப்படி இருக்கிறது பாருங்கள்?

சுடுவது என்றால் என்னெவென்று தெரியுமல்லவா?

அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர், அவருக்குத் தமிழ் தெரியுமா? என்பது தெரியவில்லை! அவர் தன்னுடைய  வலைப்பூவில் அவற்றைக் கொடுக்கவில்லை.

என் வலைப் பதிவில் 1,941 பின் தொடரும் மாணவக் கண்மணிகள்
உள்ளீர்கள். திருவாளர் முகமது இஸ்மாயில்  போன்ற தொழில் நுட்ப வல்லுனர்கள் உள்ளீர்கள். உங்கள் உதவியுடன் அதைக்
கண்டுபிடிப்போம். அவரையும் எச்சரிப்போம்.

நமது வகுப்பறையில், உயர்ந்த பதவியில் இருக்கும் காவல்துறை
அதிகாரி ஒருவரும் மாணவர். அத்துடன் சைபர்  க்ரைம்களில்
கைதேர்ந்த நிபுனர் ஒருவரும் எனக்குப் பரீட்சயமானவர்.
இதை நம் பதிவுகளைப் பிரதி எடுத்து படிப்பதற்கல்லாமல்  
வேறு நோக்கங்களுக்குப் பயன்படுத்துபவர்கள் மனதில்
கொள்வது, அவர்களுக்கு நல்லது!
-------------------------------------------------------------------------------------
அன்பர் கோவிந்தன் அவர்களுக்கு என்னுடைய பதில் இதுதான்:

“உங்கள் தளத்தில் 16.8.2010 அன்று 1,370 பிரிவுகளில் பதிவிடப்பெற்றுள்ள எனது ஜோதிடப்பாடங்கள் அனைத்தையும் உடனே நீக்குங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது. உங்கள் மின்னஞ்சல்களுக்கு மிக்க நன்றி!”

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்
SP.VR.சுப்பையா

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Developer
to    classroom2007@gmail.com
date    15 November 2010 22:11
subject    psssrf.org.in
mailed-by    gmail.com
Signed by    gmail.com  
  
hi i am Govindan
want you want i am not use your database
data File download from http://www.4shared.com/
and http://gkgupthag.blog.com/
any information call to me Ok

thank
any information
main to me
vs2008w7@gmail.com
Gocindan
Pondicherry
++++==============================
Developer
to    classroom2007@gmail.com
date    15 November 2010 23:08
subject    psssrf.org.in
mailed-by    gmail.com
Signed by    gmail.com
  
எச்சரிக்கை பதிப்புரிமை மீரல் இருப்பின் http://psssrf.org.in க்கு முறைப்படி தெரிவிக்கவும் இமெயில்

vs2008w7@gmail.com
இப்படிக்கு
Govindan
8870974887
http://psssrf.org.in
-------------------------------------------------------------------
Developer
to    classroom2007@gmail.com
date    15 November 2010 23:16
subject    psssrf.org.in
mailed-by    gmail.com
Signed by    gmail.com

எச்சரிக்கை பதிப்புரிமை மீரல் இருப்பின் http://psssrf.org.in க்கு முறைப்படி தெரிவிக்கவும் இமெயில்

vs2008w7@gmail.com
இப்படிக்கு
Govindan
8870974887
http://psssrf.org.in
பதிப்புரிமை மீரல் இருப்பின் data base file-லில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


படத்தின் மீது கர்சரைவைத்து அழுத்தினால் படம் பெரிதாகத் தெரியும். படிப்பதற்கு வசதியாக இருக்கும்

------------------------------------------------------------------------------------------------


வாழ்க வளமுடன்!

14.11.10

இணையத் திருடர்களை என்ன செய்யலாம்?

---------------------------------------------------------------------
 இணையத் திருடர்களை என்ன செய்யலாம்?

அடியவன் ஐந்தாண்டுகளுக்கு முன்பு பதிவில் எழுதத் துவங்கிய காலத்தில், என் எழுத்தாள நண்பர் ஒருவர் என்னை இப்படி எச்சரித்தார்.

“நீங்கள் பத்திரிக்கையில் செட்டிநாட்டு மண் வாசனைக்கதைகள் எழுதுவதைப்போல, ஜோதிடத்தையும் தனியாக  எழுதி, 'Copy Right’
உரிமைக்குப் பதிவு செய்து புத்தகமாக வெளியிடுங்கள். அதுதான்
நல்லது. இணையத்தில் எழுதினால் அதைத் திருடிக் கொண்டு
போவதற்கு இணையத்தில் நிறையத் திருடர்கள் இருக்கிறார்கள்.
உங்கள் பதிவுகள் திருட்டுப்போகும் அபாயம் உண்டு”

அதற்கு நான் சொன்னேன்:  “என் எண்ணங்களை, என் சிந்தனைகளை, என்னுடைய அறிவை, அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் நோக்கத்தில்தான் எழுதுகிறேன். எழுதிய பிறகு அதை ஆவணப் படுத்தும் முகமாக புத்தகங்களாக வெளியிடலாம் என்றுள்ளேன். என் எழுத்துக்கள் தனிதன்மை வாய்ந்தவை. நான்  என் ஸ்டைலில் எழுத உள்ளேன். அதைத் திருடுபவர்கள் மாட்டிக்கொண்டு விடுவார்கள்.”

ஒருபக்கம், இரு பக்கம் திருட்டுப்போனால் பரவாயில்லை. ஒட்டு மொத்தமாக வகுப்பறையில் எழுதப்பெற்ற  பாடங்கள் அனைத்தையும் ஒருவர் திருடி, தான் எழுதியதைப்போல பதிவிட்டுள்ளார். தொடர்ந்து செய்தும்  வருகிறார். அவர் பல ஜோதிட மென்பொருள்களை தான் தயார் செய்து விற்பதாகவும் தன் விலை விபரங்களையும்  எழுதியுள்ளார். அவைகளை அவர் தயார் செய்தாரா அல்லது அவைகளும் இதுபோலத் திருடப்பெற்ற  மென்பொருட்களா? கடவுளுக்கே வெளிச்சம். அவைகள் கிடக்கட்டும். சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.

நம் வகுப்பறையில்  ‘பின் தொடர்பவர்கள்’ இன்றையத் தேதியில்
1,937 பேர்கள் இருக்கிறார்கள். அதுதவிர கூகுள்  ரீடர் வழியாகப்
படிப்பவர்கள் எண்ணிக்கை தெரியாது. மாதம் சராசரியாக ஒரு லட்சம்
ஹிட்ஸ் விழுகிறது. எவர் திருடி பதிவிட்டாலும், அவர்கள் 
கண்ணிலிருந்து எவரும் தப்ப முடியாது.

என் பதிவுகள் திருடப்பெற்றுப் பதிவிடுவதை, நம் வகுப்பு மாணவக் கண்மணி ஒருவர் மின்னஞ்சல் மூலம் எனக்குத் தெரியப்படுத்தியிருந்தார். அதைக் கீழே கொடுத்துள்ளேன். அவருக்கு என் நன்றி

------------------------------------------------------------------------------------
from    DHANA SEKARAN
to    classroom2007@gmail.com
date    9 November 2010 17:37
subject    வகுப்பறை மாணவன்
mailed-by    gmail.com
Signed by    gmail.com

ஐயா!
    வணக்கம் தாங்கள் வகுப்பறையில் நடத்தும் பாடங்கள்  இந்த தளத்தில் உள்ளது. .

(psssrf.org.in/usfullastro/tamilastrobooks.aspx?id=6237) நீங்கள் கவனித்து நடவடிக்கை
எடுக்குமாறு கேட்டு கொள்கிறேன் நன்றி!
------------------------------------------------------------------------------------
நானும் சென்று பார்த்தேன். அதற்கான சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன். நீங்களும் சென்று பாருங்கள்


சுட்டி இங்கே!


நமது வகுப்பறையில் இருந்து கிட்டத்தட்ட அத்தனை பக்கங்களும் திருடப்பெற்று, அந்தத் தளத்தில் பதிவிடப்பெற்றுள்ளது. 1370 பிரிவுகளாகப் பதிவிடப்பெற்றுள்ளது. அத்தனையும் 16.8.2010 அன்று  வலையேற்றப் பெற்றுள்ளது. அத்தனை பக்கங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக வலையேற்றாமல், ஒட்டு மொத்தமாக பதிவில் ஏற்றப்பெற்றிருக்கிறது. அத்தனையும் copy & paste முறையில் பதிவிடப்பெற்றுள்ளது. சுமார் 2,000
பக்கங்கள் இருக்கலாம்.

நோகாமல் நொங்கு தின்பது இதுதான்!

இதைத் திருட்டு என்பதைவிடக் ‘கொள்ளை’ என்று சொல்லலாம்.

எனது எழுத்துக்கள் என்பதை சுட்டிக்காட்டும் விதமாக சில பகுதிகளை ஸ்கிரீன் ஷாட் எடுத்து சிவப்பு நிறத்தில்  கோடிட்டுக் காட்டியுள்ளேன்.

நீங்களும் சென்று பாருங்கள்.

கேள்வி 1: ‘திருடப்பெற்ற பகுதிகள் அனைத்தும் அந்தத் தளத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும். அதற்கு என்ன  செய்யலாம்?

கேள்வி 2: இனி எழுத உள்ள பாடங்கள் அனைத்தும் மேல் நிலைப் பாடங்கள். precise lessons அவைகள்  இதுபோல  திருடப்படாமல் இருக்க என்ன செய்யலாம்?

உங்கள் மேலான யோசனைகள் வரவேற்கப்படுகின்றன!

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
படங்களின் மீது கர்சரைவைத்து அழுத்தினால், படங்கள் பெரிதாகத் தெரியும் 


1

2

3


4

5

6


7

8
--------------------------------------------------------------------------------------
அததனை பதிவுகளும் 16.08.2010ல் பதிவிடப்பெற்றுள்ளதைக் கவனியுங்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

-----------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------
என் பெயர் கோவிந்தன் நேரம் கிடைக்கும்போது, இந்த முகவரிப் பக்கம் பூர்த்தியாகும் என்று குறிபிட்டுள்ளார். சுமார் 2,000 பக்கங்களைக் காப்பியடித்துப் பதிவு செய்தவர், இததனை மென்பொருட்களை விற்பவர், தன் முகவரியை மட்டும் ஏன் கொடுக்கவில்லை? பெயரும் உண்மைதானா? இல்லை அதுவும் பொய்யா என்பது தெரியவில்லை.

அலைபேசி எண் கொடுக்கப்பெற்றுள்ளது. 88709 - 74887 (ஏர்டெல் நம்பர்). மூன்று முறை முயன்றேன் ஸ்விட்சிடு ஆஃப் என்று வருகிறது. அந்த எண்ணைவைத்து அவரைப்பிடிப்பது ஒன்றும் சிரமம் இல்லை. அதற்கு வழி இருக்கிறது. அதை இப்போது சொல்ல விரும்பவில்லை!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!