மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label experience. Show all posts
Showing posts with label experience. Show all posts

27.4.22

அந்தக் காலத்தில் நாங்கள் வாங்கிய அடிகள்!


அந்தக் காலத்தில் நாங்கள் வாங்கிய அடிகள்!

அந்த காலத்தில எதுக்கெல்லாம் நாங்க அடி வாங்கி இருக்கோம்னு இப்போ பலருக்கு  தெரிய வாய்ப்பில்லை...*

ஆனால் வாங்கின ஒவ்வொரு அடியும் எங்களை புடம் போட்ட தங்கமா ஆக்கிடுச்சு என்பதுதான் இங்க மேட்டரே...

1. அடி வாங்கி ரொம்ப நேரம் அழுதுட்டு இருந்தா மறுபடியும் அடி!

2. அடி வாங்கிட்டு அமுக்கமா அழாமல் இருந்தால் மறுபடியும் அடி.

3. அடி வாங்காமலேயே அழுதா விழும் அடி.

4. பெரியவங்க உக்காந்திருக்கர இடத்ல நின்னுட்டு இருந்தா அடி

5.பெரியவங்க நின்னுட்டு இருக்கும் போது உக்கார்ந்திட்டே இருந்தா அடி.

6. பெரியவங்க உக்கார்ந்து இருக்கும் போது குறுக்காலும் நெடுக்காலும் நடந்தா அடி.

 7. விருந்தாளிக்கு சமைத்ததை முன்னதாக சாப்பிட்டா அடி

8. தட்ல சோத்தை வெச்ச பிறகு சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிச்சா அடி.

 9. சூரியன் மறைஞ்ச பிறகு லேட்டா வீட்டுக்கு வந்தா,எங்க சுத்திட்டு வர்ரன்னு ஒரு மொத்து.

10.அடுத்தவன் வீட்ல சாப்பிட்டு வந்தா அடி 

11. எப்போ பார்த்தாலும் மூஞ்சியை தூக்கி வெச்சுட்டு இருந்தா அடி.

 12. ரொம்பவும் துள்ளிக் குதிச்சாலும் அடி. 

13. மூத்தவங்களோட சண்டை போட்டு தோத்தா அடி

 14. சின்ன பசங்களோட சண்டை போட்டு ஜெயிச்சிட்டூன்னு கூவினா அடி.

 15.ரொம்பவும் மெதுவா சாப்பிட்டா அடி.
 
16.அவசர அவசரமா அள்ளி போட்டு சாப்பிட்டாளும் அடி. 

17. காணாது கண்டது போல கண்டமேனிக்கு சாப்பிட்டால் அடி.

 18. பூரணமா சப்பிடாம இருந்தால் அடி

19.சாப்பிட்ட பிறகும் தட்டை சுரண்டிட்டு இருந்தால் அடி,
 
20. பேசிட்டே சாப்பிட்டா அடி

21.பெரியவங்க எழுந்த பிறகும் தூங்கிட்டு இருந்தா அடி. 

22.விருந்தாளிங்க சாப்பிடுவதை பார்த்தால் அடி. 

23. தடுமாறி நடந்து விழுந்தா உதை.

24. பெரியவங்களை முறெச்சு பார்த்தா அடி

25. பெரியவங்க பேசும்போது முழிச்சா அடி

26. அவங்க பேசும்போது முழிக்காம வெறிச்சு பார்த்தா அடி

27. பெரியவங்களை ஓரக் கண்ணால பார்த்தால் அடி

28. நண்பர்கள் தெருவில் ஃபுட்பால் ஆடும்போது நாம அவங்களோட சேர்ந்தால் அடி.

 29. நண்பர்கள் விளையாடும் போது நாம உம்முன்னு வீட்ல உக்கந்திருந்தாலும் அடி.

 30. சாப்பிட்டபின் தட்ட அலம்பலேன்னா அடி.

 31. சாப்பிட்ட தட்டை சரியா கழுவலைன்னா அடி.

 32. சாப்பிட்ட தட்டை கீழே போட்டு நசுங்கல் ஏற்பட்டா அடி.

 33. கழுவின தட்டை ஒழுங்கா வைக்கலேன்னா அடி
34.நகத்தை கடிச்சா அடி

 34..குளிக்காட்ட அடி. 

35.காக்கா குளியலா குளிச்சு உடனே வந்தா முதுகுல பொளேர் 

36. உள்ள போயி ஒரு மாமாங்கம் ஆச்சுன்னா வெளில வந்தவுடன் அடி.

 37. ஸ்கூல்ல மிஸ்பிஹேவ் பண்ணினேன்னு தெரிஞ்சா வீட்ல அடி.

 38.தெருல போர கார் உறசிட்டு போச்சுன்னா அடி. 

39. கார் அடிச்சு குத்துயிரும் குலையுயிருமா இருந்தாலும் அஜாக்கைரதைக்கு நாலு அடி.

 40. கேட்ட கேள்விக்கு பதில் வரலைன்னா அடி

41. பெரியவங்க பேசும்போது பதில் சொன்னா அடி.

 42 லேட்டா கோவிலுக்கு போனா அடி.

 43ஃப்ரெண்ட்ஸ்ட்டேந்து ஓஸியா ஷூ வாங்கி போட்டுகிட்டா அடி. 

44.அம்மா செலெக்ட் பண்ணின சட்டை பிடிக்கலைன்னா அடி 

45. கடைசில அவங்க சூஸ் பண்னின ஷர்ட்டை செலெக்ட் பண்ணினா,இதுக்கு இம்புட்டு நேரமான்னு அடி

46. வாத்தி சொல்லிகுடுத்த ரெண்டுங்கெட்டான் பதிலை பரிஷைல எழுதினா அதே வாத்தி”சொந்தமா என்னடா gas விட்ர”ன்னு சொல்லி  அடிக்கும்.

 47டீச்சர் தப்பு தப்பா நோட்ஸ் கொடுத்தாலும் நாம கர்ரெக்ட் பதில் எழுதினா வாத்திட்ட”நீ பெரிய பிச்தாவா”ன்னு சொல்லி வாங்கும்  அடி.. 

48.வீட்ல பெற்றோர்கள் இடையில் அல்லது பெருசுங்க சண்டை மூட்ல இருந்தா நாம வாங்கும் அடி.

49 சொந்த காரங்கவீட்ல,நண்பர் வீட்ல பக்கிங்க மாதிரி சாப்பிட்டால், வீட்ல வந்து வாங்கும் அடி.

50 மூணு தோசை/பூரியை தாண்டி இன்னொண்ணுன்னா வாங்கும் அடி.

51 எல்லாத்துக்கும் நெய்யா கேக்குதுன்னு முதுகுல பளார்.

52.சாப்பிட்ட பிறகு தட்டை நக்கினால் அடி.

53) காரணமும் தாண்டி காரணமே இல்லாமல் வாங்கும் அடி. 

இன்னிக்கு பசங்களுக்கு இதெல்லாம் அபத்தமா தெரியலாம்.
ஆனால் கிட்டதட்ட கூட்டு குடும்பத்தில் பெரியோர்கள்- பங்காளிகளுடன் வாழ்ந்த அந்நாட்களில் *இந்த அடிகள்* வாங்கியது தான் எங்களுக்கு  வாழ்வில் முன்னேற உதவின.

வாழ்க  பெற்றோர்கள்
----------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
==================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.12.20

சுஜாதா சிறுகட்டுரை - போதை லேகியம்!!!!


சுஜாதா சிறுகட்டுரை - போதை லேகியம்!!!!

1970 களில் குமுதம் இதழில் வந்தது - படியுங்கள் செமகிக் காரண்ட்டி 

ஒரு வட இந்திய நகரில் நண்பர்கள் இருவருடன் இரவில் கடைத் தெருவில் சுற்றிக் கொண்டிருந்த போது ஒரு கடையில் கறிவேப்பிலைத் துவையல் போல ஏதோ பச்சிலை அரைத்துக் கொண்டிருப்பதைக் கண்டோம். பலர் வந்து ஆளுக்கு ஒரு பெரிய கோலி அளவுக்கு வாங்கி வாயில் அடக்கிக் கொண்டு, ஒரு கிளாஸ் தண்ணீருடன் மளக்கென்று விழுங்கி விட்டுக் காசு கொடுத்துவிட்டுத் தம் வழியே சென்றார்கள்.

இது என்ன? ஸீனியர் நண்பரைக் கேட்டபோது, ‘‘சாப்பிட்டுப் பார்க்கிறீர்களா?’’ என்றார்.

‘‘என்ன செய்யும்?’’ என்றேன்.

‘‘வேலை செய்யும்’’ என்றார்.

அதையும் பார்த்து விடலாம் என்று ஸ்பெஷலாகப் பாதாம் பால் கலந்து ஆளுக்கு ஓர் உருண்டையை விழுங்கினோம். விழுங்கிவிட்டு நடந்தோம். அரை மணி ஆயிற்று. ஒன்றுமே ஏற்படவில்லை. சாப்பிட்ட அளவு போதாது, இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் (வேண்டாம்! சுத்தும்!) என்று பிடிவாதமாக மறுபடி அந்தக் கடைக்குச் சென்று அதே அளவு துவையலை .உட்கொண்டோம்.

நேராக ஓர் ஓட்டலுக்குப் போய்ச் சாப்பிட்டு விட்டு ஓர் ஓட்டைத் தியேட்டரில் போய் உட்கார்ந்தோம். ம்ஹும்... ஒன்றும் நிகழவில்லை எங்களுக்கு. அமெரிக்க கட்டிடக் கலை பற்றி ஒரு டாக்குமெண்டரி காட்டிக் கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு காட்சியில் ஒரு ஃப்ரேம் சட்டென்று மாறியது. அவ்வளவுதான். என்னுள் ஸ்விட்ச் போட்டாற் போல் மருந்து வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.

முதன்முதலில் உடம்பெல்லாம் சூடாயிற்று. ஜப்பானிய நீராவிக் குளியல்போல், காது நுனியிலிருந்து ஆரம்பித்து உடம்பு பூராவும் சூடு. நாக்கு உலர்ந்து எதிரே திரைப்படம் தூர தூரச் செல்ல ஆரம்பித்தது. இந்த வேக்காட்டில் இனி உள்ளே உட்கார முடியாது என்று எழுந்து வெளிவந்தால் நடக்க முடிகிறதா? முழங்காலுக்குக் கீழ் பஞ்சு போலவும், பூட்ஸுக்குள் மேகம் போலவும் ஒரே தொள தொள. ஒரு கடைக்குச் சென்று ஆரஞ்சு ஜூஸ் உறிஞ்சிப் பார்த்தோம். நாக்கு நனையவில்லை.

மனத்திற்குள் பயம் ஏற்பட்டது. திரும்பப் போய்விடலாம் என்று டாக்ஸியைக் கூப்பிட்டேன். நண்பர்களில் ஒருவன், ‘‘என் பல்ஸைப் பார். என் பல்ஸைப் பார்’’ என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருப்பது தூரத்தில் கேட்டது. என்னை விட்டு நானே ரொம்பத் தொலைவில் நடந்து கொண்டிருப்பது போன்ற .உணர்ச்சி.

எப்படியோ டாக்ஸி பிடித்தோம். டாக்ஸியில் செல்லும் போது நகரமே துப்புரவாக அலம்பி விட்டிருப்பது போலத் தெரிந்தது. நியான்கள் பளிச்சென்று ஒளிர்ந்தன. 

உடன் ஒரு பயம். ‘நீ காலி, நீ காலி’ என்று ஒரு கோரஸ் (இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்). டாக்ஸியில் மூன்று மாதம் பிரயாணம் செய்து எங்கள் விடுதியை அடைந்தோம். யார் பணம் கொடுத்தார்கள்? எப்போது படுக்கையில் விழுந்தேன்..?

என்னைப் பொறுத்த வரை ஒரு தடவை
-----------------------------------------------
படித்ததில் வியந்தது!
அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!