மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label Lessons 921 - 930. Show all posts
Showing posts with label Lessons 921 - 930. Show all posts

27.3.16

Astrology: quiz: புதிர் எண்.106 புதிருக்கான விடை


Astrology: quiz: புதிர் எண்.106 புதிருக்கான விடை

படித்து முடித்தவுடன் வேலை கிடைத்தால் நல்லது. அதிலும் ஸ்திரமான வேலை கிடைத்தால் மிகவும் நல்லது.

எல்லோருக்கும் அப்படிக்கிடைத்துவிடுகிறதா என்ன?

ஸ்திரமான வேலை கிடைக்காமல் எத்தனை பேர் அவதிப் படுகிறார்கள்?

அதற்குக் காரணம் என்ன? நிவர்த்தி என்ன?

அது சம்பந்தமாக நேற்று ஒரு ஜாதகத்தைக் கொடுத்து அலசச் சொல்லியிருந்தேன்.

அதில் 3 கேள்விகள் கேட்டிருந்தேன். அதில் முதல் கேள்வி கொஞ்சம் கடினமானது. ஜாதகத்தைப் பார்க்கும்போது ஒவ்வொருக்கும் ஒவ்வொன்று
முக்கியமானதாகத் தோன்றும். ஆகவே அதை விட்டுவிட்டு அடுத்த 2 கேள்விகளுக்கு வந்த பதிலை மட்டும் பார்ப்போம்.

அந்த முதல் கேள்விக்கான பதில் பதில் லக்கினநாதன் திரிகோண வீட்டில் (5ல்) அமர்ந்திருப்பது. அதுவே ஜாதகனின் ஜாதகத்தில் முக்கியமான
அமைப்பாகும். அத்துடன் சனீஷ்வரன் பரிவர்த்தனை யோகத்திலும் உள்ளார். இந்தக் கருத்தை நமது மூத்த மாணவர்களில் ஒருவரான யு.எஸ்.ஏ 
சந்திரசேகரன் சூரியநாராயணா அவர்களும் சுட்டிக் காட்டியுள்ளார் (பதில் எண்.12ஐ பார்க்கவும்) அவருக்கு ஒரு விஷேசமான பாராட்டு.

போட்டியில் மொத்தம் 13 பேர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்களின் 12 பேர்கள் சரியான பதிலை அல்லது ஒட்டிய பதிலை எழுதி, தேர்ச்சி
பெற்றுள்ளர்கள், அவர்கள் அனைவருக்கும் எனது மனம் உவந்த பாராட்டுக்கள். உங்களுடைய பர்வைக்காக அவர்களுடைய பதிலைக் கீழே
கொடுத்துள்ளேன்.
-----------------------------------------------------------------------------------

ஜாதகத்தைப் பாருங்கள்.



கும்ப லக்கின ஜாதகம். கும்பலக்கினத்திற்கு லக்கினாதிபதியும், 12ஆம் அதிபதியும் ஒருவரே. அதாவது சனீஷ்வரன். இந்த லக்கினத்திற்கு மட்டும்

அப்படியொரு அவஸ்தையான அமைப்பு. இந்த லக்கினக்காரர்களுக்கு லக்கினாதிபதி சனீஷ்வரன் கேந்திரம் அல்லது திரிகோணங்களில்
அமர்ந்திருந்தால் வெற்றிகரமான வாழ்க்கை

இல்லையென்றால் தோல்விகள் நிறைந்த வாழ்க்கை. கும்ப லக்கினத்திற்கு லக்கினநாதன் சனீஷ்வரன் 3, 6, 8  &12 ஆம் இடங்களில் மறையக்கூடாது!

ஜாதத்தில் சனி ஐந்தாம் வீட்டில் அமர்ந்துள்ளது. அது நட்பு வீடும் கூட. அதானால் ஜாதகனின் வாழ்க்கை வெற்றிகரமான வாழ்க்கைதான்.

ஜாதகன் பொறியியல் படித்தவன்.

ஆனால் துவக்கத்தில் ஜாதகனுக்கு நிரந்தரமான வேலை கிடைக்கவில்லை. 10 ஆண்டுகளில் 9 வேலைகளுக்கு  மாறியுள்ளான்.

ஏன் அப்படி?

பத்தாம் வீட்டில் ஆறாம் அதிபதி சந்திரன் அமர்ந்துள்ளான். அது விரும்பத்தக்கதல்ல! அத்துடன் 3ல் உள்ள  செவ்வாயின் பார்வையும் (பத்தாம்
வீட்டின்மேல் உள்ளது) உள்ளது, அத்துடன் கேது திசையும் நுழைந்து ஜாதகரைப் படுத்தி விட்டது.

28 வயதிற்குப் பிறகு யோககாரகன் சுக்கிரனின் திசையில் ஜாதகனுக்கு ஸ்திரமான நல்ல வேலை கிடைத்தது.

சுக்கிரன் ஜாதகத்தில் 12ல் இருந்தாலும் நவாம்சத்தில் அதே மகரத்தில் அமர்ந்து வர்கோத்தமம் பெற்றிருப்பதால் அவர் சரி செய்து ஜாதகனின்
வாழ்க்கையை சீரமைத்தார். அத்துடன் அவர் பத்தாம் வீட்டின் அதிபதி அவர் 12ல் மறைந்தாலும் தன்னுடைய வர்கோத்தம பலத்தால் சரி செய்தார்.

விளக்கம் போதுமா?

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
வந்த பதில்கள்:
1
//////Blogger kmr.krishnan said...
ஜாதகர் 14 மார்ச் 1974 அன்று பிறதவர். காலை 6 மணி என்றால் லக்கினம் சரியாக அமைகிறது.ஆனால் தசா இருப்பை, நேரத்தை சரி செய்து
கொடுத்துள்ள தசா இருப்புடன் பொருத்த முடியவில்லை.அப்படி தசா இருப்பை சரி செய்தால் லக்கினம் மாறிப் போகிறது.
1. கஜ கேசரி யோகம் இந்த ஜாதகத்தின் சிறப்பு.மேலும் சந்திரன் மற்றும் சுக்கிரன் ராசி நவாம்சத்தில் ஒரே இடங்களில் இருப்பது சிறப்பு.சந்திரன் நீச பங்கம் பெற்றது மேலும் சிறப்பு.
2. 6க்கு உடைய சந்திரன் பத்தில் அமர்ந்தது, 10க்கு உடைய செவ்வாய் 3லும் மேலும் தன் வீட்டுக்கு ஆறிலும், அமர்ந்தது, காரகன் சனி கேதுவுடன்
உறவு வைத்தது, பூர்வ புண்ணியத்தில் சனி கேது நின்றது ஆகியவையும், வேலைக்கு வரும் பருவமான 20 வயது போல கேதுதசா நடந்தது ஆகியவை
வேலையில் ஸ்திரத்தன்மையை கொடுக்காமல் அடிக்கடி வேலை மாறியது.
3.சுக்கிர தசா சுக்கிர புக்தி அல்லது சுக்கிர தசா சூரிய புக்தியில் நல்ல வேலையில் நிரந்தரமாக அமர்ந்தார். சுக்கிரன் இவருக்கு யோக காரகன்.
12ல் இருந்தாலும் ராசி நவாம்சத்தில் மகரத்தில் இருந்து வலிமை பெற்றதால் சுக்கிரதசாவில் நிரந்தர வேலையைக் கொடுத்து இருப்பார்.
Friday, March 25, 2016 8:57:00 AM//////
-----------------------------------------
2
//////Blogger daya nidhi said...
வணக்கம் குருஜி ,
1. கும்ப லக்னத்திற்கு யோககாரகன் சுக்ரனும் vrgotthamam .
, சந்திரனும் வர்கோத்தமம் பெற்றது மற்றும் கெஜ கேசரி யோகம் உள்ள ஜாதகம்.
2. கேது தசா , சுகர தசா சுயபுத்தி வரை நிலையான வேலை இல்லை
3. யோகாதிபதி சுகர தசையில் பத்தாம் இடத்தில உள்ள சந்திரன் புத்தியில் (சந்திரன் சுய வர்க்கம் 7 பரல்கள் ) நிலையான வலை கிடைத்தது
சு. தயாநிதி அவியனுர்
Friday, March 25, 2016 12:26:00 PM///////
-----------------------------------------
3
/////Blogger Gopal Krishnan said...
வாத்தியார் அவர்களுக்கு எனது பணிவான நமஸ்காரங்கள்.
"Astrology: Quiz: புதிர் 106: கேள்விக்கென்ன பதில்!"
எதோ எனக்கு தெரிந்த சில விவரங்களை வரிசைப்படுத்தி எழுதியிருக்கிறேன்... தவறு இருந்தால் எனது தலையில் உங்களின் மோதிர விரல் அணிந்த கையால் குட்டி... எனக்கு புரியும்படி தெளிவு படுத்துங்கள்.
# நீங்கள் குறிப்பிட்டிருந்த ஜாதகருக்கு கால சர்ப தோஷம் இருக்கிறது. 33 வயதிற்குப் பிறகுதான் சிறப்புநிலையை எட்ட முடியும்.
# கும்ப லக்கினத்தில் சனியின் வீட்டில் சூரியனோடு மற்ற இரு கிரகங்களும் கிரக யுத்தத்தில் (சூரியனுக்கு 7 பாகைக்குள் இருப்பின்) குரு , புதன்
நீசமாகும் வாய்ப்பு உள்ளது. புதன் பரிவர்த்தனை என்று பார்த்தால் சனியும் சூரியனும் எதிரிகள் ஆகவே பரிவர்த்தனை பெற்றும் பலனில்லை.
# புதன் பரிவர்த்தனை பெறுவதால், புத-ஆதித்ய யோகம் முழுமையாக கிடைக்காமல் போகிறது. பரிவர்த்தனையால் குரு சனி இணைவு சண்டாள
யோகமாக மாறும் நிலை.
# தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் குருவின் வீட்டில் மாந்தன் (குளிகன்) இருப்பது விதண்டா வாதம் செய்பவராகவும், பிடிவாத குணமுடையவராகவும் இருப்பார் அதுவே அவரது செயல் திறனை கெடுக்கும்.
# எத்தனை படித்திருந்தாலும் சனியும் புதனும் பரிவர்த்தனை பெற்று, பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேதுவோடு சனி அல்லது பரிவர்த்தனை பெற்ற
புதன் அவரது வேலை வாய்ப்பை கெடுப்பார், அதோடு கேது அவரை பதப்படுத்தி எதிலும் நிலைத்தன்மை அற்ற நிலையில் நல்ல அனுபவத்தை
தருவார்.
# திரிகோணத்தில், தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் தனது சொந்த வீட்டில் உச்சம் பெற்று ஜாதகருக்கு எதையும் தாங்கும் மன தைரியத்தை
தருகிறார்.
# கேந்திரிய மாத்துரு ஸ்தான சுக்கிரன் 12இல் மறைவு.
# சுக்கிரன் வர்கோத்தமம் பெற்று, சுப பார்வை பெறாமலும் ஜாதகரின் விரய ஸ்தானத்தை உறுதிபடுத்தியுள்ளார். ஆகவே ஜாதகரின் கையில் காசு
தங்காது. இருப்பினும் சூரியனுக்கு 12 இல் சுக்கிர- சுபகிரகம் அமைந்ததால் "சுபாவாசி யோகம்" ஏற்ப்படுவதால், வேலை சம்பாத்தியம் இல்லை
என்றாலும் ஜாதகர் சுபவாசியாக இருப்பார். மேலும் இவருக்கு இருக்கும், பரிவர்த்தனையால் நீசபங்க ராஜ யோகமும், மேலும் கஜ கேசரி யோகமும்
இதை உறுதி செய்கிறது. ஆகவே ஜாதகர் கால சர்ப தோஷம் இருக்கிற -33 வயதிற்கு பிறகு நல்ல நிலையை பெறுவார்.
# கும்ப, ஸ்திர லக்ன காரரான இவருக்கு சுக்கிரன் பாதகாதிபதியாக அமைகிறார் ஆகவே "காசு பணம் துட்டு- கோவிந்தா கோவிந்தா என"
உறுதியாகிறது
# தொழில் மற்றும் லாபஸ்தானமான குருவின் வீட்டில் ராகு இருப்பதும் தொழில் வாய்ப்புக்கள் இல்லை என்பது தெரிகிறது
# 6வது மறைவு வீட்டின் ரண, ரூன, ரோக ஸ்தான அதிபதி சந்திரன், 10வது வீட்டில் கர்ம ஸ்தானத்தில் செவ்வாயின் வீட்டில் நீச சந்திரனாக அமர்ந்து
கஷ்டங்களை தருகிறார். (விருசிக ராசிக்கு நீச சந்திரன் பிறந்த வீட்டின் பெருமை கிடைக்காமல் போகும் )
அன்புடன் கோகி என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி.
Friday, March 25, 2016 12:55:00 PM//////
-----------------------------------------
------
///////Blogger சேனா said...
கோவிலில் விளக்கு ஏற்றி அதை எடுத்து வைக்கும் போது அது கைதவறி கீழே விழுந்துள்ளது, அதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? தயவு
செய்து கூறவும்.///////

கை தவறித்தானே விழுந்தது. அதற்கு ஏன் கவலைப் படுகிறீர்கள்? மீண்டும் விளக்கை ஏற்றி வையுங்கள்!
-----------------------------------------------
4
///////Blogger asbvsri said...
புதிர் 106:
ஜாதகத்தின் சிறப்புகள்: ஜாதகர் 15 / 02 / 1974 ல் காலை பிறந்தவர்.
கும்ப லக்னம். லக்னாதிபதி திரிகோணத்தில் 5 ஆம் இடத்தில் வக்ரம். குருவின் பார்வையில்.
ஐந்தாம் அதிபதி புதன் (8 ஆம் அதிபதியும் கூட) லக்னாதிபதியுடன் பரிமாற்றம்.
இரண்டுக்கும் 11க்கும் அதிபதியான குரு, ஏழாம் அதிபதி சூரியன், 5 & 8 ஆம் அதிபதி புதன் மூவரும் லக்னத்தில். குரு அஸ்தமனம்.
யோகாதிபதி சுக்ரன் 12 ல்.
சந்த்ரன் 10 ஆம் இடத்தில் நீச்ச வர்க்கோத்தமம்.
சந்த்ரன், குரு, சூரியன், புதனுக்கு கேந்த்ரத்தில்.
ராஹு 11 ஆம் வீட்டில் தனுசுவில் குருவின் வீட்டில். சனியின் பார்வையில்.
மாந்தி இரண்டாம் வீட்டில். சனியின் பார்வை.
அஷ்டவர்க பரல் – 1, 3, 5, 6, 8, 10, 11, 12 க்கு 25க்கு மேல். (10 ஆம் வீட்டிற்கு 35, 11 ஆம் வீடு 40). வீடுகள் 2 மற்றும் 7 க்கு பரல்கள் 20.
கேள்வி 2: ஜாதகர் 20 ஆவது வயது வரை புதன் தசையில் படித்து முடித்தார். பின்னர் வந்த கேது தசை அவரை ஒரு நிரந்தர வேலையை
கொடுக்காமல் 27 வயது வரை படுத்தியது. பின்னர் வந்த சுக்ர தசை சுக்ர புக்தி அவர் யோகாதிபதியாக இருந்தும் 12ல் இருந்ததாலும், சூரியன் புக்தி
லக்னாதிபதிக்கு பகையானதாலும், சந்த்ர புக்தி அவர் நீச்ச வர்கோத்தமமாயிருப்பதாலும் பெரிதும் வேலையில் படித்த பின்னர் 10 வருடங்களுக்கு உதவவில்லை.
கேள்வி 3: செவ்வாய் புக்தியில் அவர் 10 ஆம் அதிபதியாவதால் மேஷத்தில் அவர் வீட்டில் இருப்பதால் ஒரு நிரந்தர வேலையை கொடுத்தார்.
நன்றியுடன்,
க இரா அனந்தகிருஷ்ணன்
Friday, March 25, 2016 3:33:00 PM//////
-------------------------------------------
5
/////Blogger thozhar pandian said...
இலக்கினாதிபதியும் கர்மகாரகருமான சனி பகவான், 10ம் வீட்டிற்கு 8ல் மறைந்தார். உடன் கேது. 10ம் வீட்டு அதிபதியான செவ்வாய் ஆட்சி பலம்
பெற்றும் 10ம் வீட்டிற்கு 6ல் மறைந்தார். 10ம் வீட்டிற்கோ 10ம் வீட்டு அதிபதிக்கோ சுபர் பார்வை இல்லை. 10ம் வீட்டில் தேய்பிறை சந்திரன் நீசத்தில். படித்து முடித்தவுடன் இவருக்கு கேது தசை தொடங்கி இருக்கும். அதன் பின்னர் நடந்த சுக்கிர தசையில் செவ்வாய் புக்தியில் ஜாதகருக்கு நிரந்தர வேலை கிடைத்திருக்கும்.
Saturday, March 26, 2016 2:22:00 AM///////
---------------------------------------------
6
Blogger lrk said...
ஐயா வணக்கம்
புதிரின் 106 பதில்
1......ஜாதகத்தின் முக்கியமான சிறப்பு என்ன?
கும்ப லக்ன யோக்காரகன் சுக்கிரன் வர்கோத்தம்ம் அதிக வலிமை.
செயல் வீரர் செவ்வாய் ஆட்சி,
11 ல் ராகு உகந்த இடம் ,
மனக்காரகன் சந்திரன் வர்கோத்தம்
2.....ஜாதகருக்கு படித்து முடித்தவுடன் 10 ஆண்டுகளுக்கு மேல் நிரந்தமான வேலை கிடைக்கவில்லை. ஆண்டுக்கு ஒரு வேலை என்று மாறிக்
கொண்டே இருந்தார். அதற்கு என்ன காரணம்?
தசாபுத்தி யும் கர்மகாரகன் சனி கேது கூட்டணி, அம்சத்தில் சனி பகை வீட்டில், மாந்தி கூட்டணிதான் காரணம் ஐயா
சனி , புதன் ( நீசமாகியுள்ளார் ), கேது திசை வரை அலைச்சல் தான்
3......சுக்கிர திசை சுயபுக்தியில் வேலை நிரந்த மாகியுள்ளது.
நன்றி
கண்ணன்
Saturday, March 26, 2016 9:51:00 AM//////
------------------------------------------
7
///////Blogger J Sudarsan Kumar said...
வாத்தியார் அவர்களுக்கு வணக்கம்
1) ஜாதகம் கால சர்ப்ப தோஷம் அமைந்த ஜாதகம் .
சந்திரன் தவிர அனைத்து கிரகங்களும் ராஹு கேது பிடியில் .
ஆனால் கிரகங்கள் கேதுவை நோக்கி செல்கின்றன .
அதனால் 32 வயதுக்கு மேல் யோகமாக மாறும் . (அ) லக்ன பரல்கள் எத்தனையோ அத்தனை வயதுக்கு மேல் யோகமாக மாறும் .
2) 6 க்குடைய வில்லன் சந்திரன் 10ம் இடத்தில அமர்ந்ததனால் வேலையில் நிரந்தரமின்மை . ஆனால் 10 க்குடைய செவ்வாயே 10 ம் இடத்தை
பார்ப்பது பிளஸ் பாயிண்ட்
3)சுக்ரன் 12 ல் மறைந்தாலும் வர்கோத்தமம் .
அவர் 4க்கும் 9க்கும் (ஒரு கேந்திரத்துக்கும் த்ரிகோணத்துக்கும் )அதிபதியான ராஜயோகாதிபதி
மேலும் தன்னுடைய சுகஸ்தானத்துக்கு(4 ம் வீட்டிற்கு ) பாக்கியத்திலும்(9 லிலும் ) தன்னுடைய பாக்கிய ஸ்தானத்துக்கு(9 ம் வீட்டிற்கு )
சுகஸ்தானத்திலும்(4 லிலும் ) உள்ளார்
10 க்குடையவரான செவ்வாய் தன்னுடைய 10 ம் வீட்டை 8 ம் பார்வையாக பார்க்கிறார் ஆகையால் சுக்ரனின் தசையில் செவ்வாய் புத்தியில் வேலை
நிரந்திரம் ஆகியிருக்கும்
ஜெ.சுதர்சன் குமார் , செங்கல்பட்டு
Saturday, March 26, 2016 10:26:00 AM//////
-----------------------------------------
8
///////Blogger seenivasan said...
Dear sir,
1. good points are
i) lord of second,eleventh house guru is sitting in lagnam
ii)lagna lord is placed fifth house 
iii) lagna lord and fifth house lords are exchanged their house
iv) seventh lord is sitting in lagna along with mercury which gives putha adipathiya yogam
v) Ragu is sitting in eleventh house
Vi) Third place lord mars is sitting in his own sign and it gives lot of confident
2.Answer for second question
i) he must have completed his education during the start of kethu dasa ,Kethu dasa never gives good result during his period hence he got temporary job
ii) Next period venus has given some trouble during his own sub period and after that sun sub period or moon sub period would have good permanent job.
Saturday, March 26, 2016 1:43:00 PM///////
-----------------------------------------
9
////////Blogger venkatesh r said...
புதிர் எண் 106 கேள்விக்கென்ன பதிலுக்கான‌ அலசல்:
வணக்கம் அய்யா!
கும்ப லக்கினம், விருச்சிக ராசி ஜாதகர்.
1) ஜாதகத்தின் முக்கியமான அம்சம் என்ன?
ஐந்தாம் அதிபதி புதனும் 7ம் அதிபதி சூரியனும் லக்கினத்தில் அமர்ந்து வலுவான ராஜயோகத்தை கொடுக்கின்றனர்.அது அவருக்கு நல்ல படிப்பை

கொடுத்தது.லக்கினாதிபதி சனி ஐந்தில் அமர்ந்து, அதன் அதிபதி புதனுடன் பரிவர்த்தனையிலுள்ளார்.
2)ஜாதகருக்கு படித்து முடித்தவுடன் 10 ஆண்டுகள் நிரந்தரமான வேலை கிடைக்கவில்லை.அதற்கு என்ன காரணம்?
1.ஆறாம் அதிபதி சந்திரன் நீசமாகி 10மிடத்தில் அமர்ந்தது.
2.ஜாதகரின் படிப்பு முடிந்த போது அவருக்கு கேது தசை நடப்பில் இருந்தது. பிறகு வந்த‌ சுக்கிர தசை,சந்திர‌ புத்தி முடியும் வரையில் (13

வருடங்கள்)அவருக்கு நிரந்தரமான வேலை அமையவில்லை. தவிர யோககாரகனும் தசா நாயகனுமான‌ சுக்கிரன் லக்கினத்திற்கு 12ல் மறைந்தது.
3) பிற்காலத்தில் அவருக்கு நிரந்தரமான வேலை கிடைத்தது. அது எப்போது?
சுக்கிர தசை, செவ்வாய் புத்தியில் 33 வயதிற்கு மேல் வேலை நிரந்தரமானது. 10ம் அதிபதி செவ்வாய் 3ல் அமர்ந்து தன் 8ம் தனிப்பார்வையில்

10மிடத்தை பார்ப்பது ஒரு காரணம்.
ஒரு சந்தேகம். அவருக்கு திருமணமாயிற்றா?ஜாதகரின் குடும்ப வாழ்க்கை எப்படி உள்ளது? தெரிந்திருந்தால் பதில் சொல்லவும்.
Over to Vaathiyaar!
Saturday, March 26, 2016 1:53:00 PM///////
-------------------------------------------
10
/////////Blogger Sudharsan Dhamu said...
சுதர்சன்,
காஞ்சிபுரம்.
1. லக்னாதிபதியும் 5ஆம் அதிபதியும் பரிவர்தனையில் உள்ளது.செவ்வாய் ஆட்சி வீட்டில் உள்ளது.லக்கனத்தில் குரு.(venus and moon in same rasi at

both amsam and rasichakram).
2. சனி ஆரம்ப தசை(3yr), அடுத்து முறையே புதன் தசை(17yrs), அடுத்து வந்த கேது தசை(7yrs) காரணமாக வேலையில் தடுமாற்றம் இருந்திருக்கும்.
3.பிறகு வந்த சுக்கிர தசையினால் வேலை மாற்றம் நின்றிருக்கும். சுக்கிரன் ஜாதகத்தில் 12ஆம் அதிபதி. ஆகவே சுக்கிர தசையில் சந்திர (அ)

செவ்வாய் புக்தியில் வேலை மாற்றம் நின்றிருக்கும்.
Saturday, March 26, 2016 5:50:00 PM ///////
---------------------------------------------
11
//////Blogger slmsanuma said...
DOB 15.02.1974 Place of Birth Chennai Time 7 AM
In fifth place Kethu. Sanniyasi Yokam or Raja Yokam.
Mars is in Own house.
Mercury and Saturn are in Parivarthanai yokum.
Jupiter is in Lakna. So this Native is a blessed One.
Venus and Moon is in Varkothamam.
Moon is in Neecham and in 10th place. Jupiter is also in Asthankatham. 
Though the 10th place owner Mars is in his own house but the neecha Moon spoiled his opportunity to get the standard job in time. 
Karmakaragan Saturn is also in Vakkiram. 
10th Bhavgam got 34 Parals.
So delay in getting good job.
But got permanent job during sukkira Thisa Moon Bukthi
Santhanam, Salem
Saturday, March 26, 2016 10:52:00 PM//////
-------------------------------------------------
12
////Blogger Chandrasekaran Suryanarayana said...
வணக்கம் QUIZ 106 ; (முதலில் பதிவு இட்டதை நீக்கவும். கை தவறுதலாக ஏற்பட்டது மன்னிக்கவும்)
ஜாதகர் கும்ப லக்கினம், அனுஷ நட்சத்திரம் , விருச்சிக ராசி.
லக்கினாதிபதி சனி , கும்ப லக்கின யோக காரர்கள் ; சுக்கிரன்
1. முக்கியமான சிறப்பு ;
1ம் வீட்டு அதிபதியும் (சனி) , 5ம் வீட்டு திருகோண அதிபதியும் (புதன்) பரிவர்த்தனை . பலன்; ஜாதகர் புகழ் பெற்று விளங்குவார் , மகிழ்ச்சியுடன்

இருப்பார்.
[ வாத்தியார் குறிப்பு: - ஒரு வீட்டின் பலம், வீட்டு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்று இருத்தல். இந்த விதிதான் இருக்கும் விதிகளில் அதீத பவரானது.

உங்கள் மொழியில் சொன்னால் சூப்பர் பவரானது. மற்றதெல்லாம் அதற்கு அடுத்ததுதான். ]
அடுத்த சிறப்பு : லக்கினத்தில் குரு அமர்ந்து 9ம் பார்வையால் பாக்கியஸ்தான வீட்டை பார்ப்பது . 5ம் பார்வையால் புத்திர ஸ்தான வீட்டையும், 7ம்

பார்வையால் களத்திரஸ்தானத்தையும் பார்ப்பது விசேஷம் .
ஜாதகத்தில் புதனும், சூரியனும், இருவரில் ஒருவர், 6, 8, 12 ஆம் வீடுகளில் ஏதாவது ஒன்றிற்கு அதிபதி என்றால், யோக பலன்கள் இருக்காது.

ஆகையால் சிறப்பு கிடையாது. (இந்த ஜாதகத்தில் புதன் 8ம் வீட்டு அதிபதி)
2. நிரந்திர வேலை கிடைக்கவில்லை காரணம்:
ஜாதகருக்கு 3 வயதில் புதன் தசை ஆரம்பம் , 20 வயதில் கேது தசை ஆரம்பம் , 27 வயதில் சுக்கிரதசை ஆரம்பம்.47 வயதில் சூரிய தசை ஆரம்பம்.
1. 6ம் வீட்டு அதிபதி சந்திரன் 10ம் வீட்டில் அமர்ந்தது தான் முக்கிய காரணம் .
2. 10ம் வீடு விருச்சிகம் . அதில் சந்திரன் நீசம். நவாம்சத்திலும் சந்திரன் நீசம்.
3. 27 வயது முதல் 47 வயது வரை சுக்கிர தசை. சுக்கிரன் 12ல் விரய ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார் . அவர் பாக்கிய ஸ்தானத்தின் அதிபதி. 12ம் வீடு

பாப கர்தாரி தோஷம் (ஒரு பக்கம் ராகு, மறு பக்கம் சூரியன் )
4. 5ம் வீட்டில் சனி இருப்பதால் அதிர்ஷ்டமும் துரதிஷ்டமும் மாறி மாறி வரும்.
சனியும் கேதும் கூட்டு 5ம் வீட்டில் இருப்பதால் துறவு மன பான்மை ஏற்படும் . சன்யாச யோகம்.
3. நிரந்திரமான வேலை கிடைத்தது :
சுக்கிர தசை ராகு புக்தியில் .
11ம் வீட்டில் ராகு - பலம் பொருந்திய வீடு. (41 பரல்) வளம் உடைய வாழ்க்கை கிடைக்கும் , சுகங்களையும் சௌகரியங்களையும் அனுபவிப்பான்.

தொழில் காரகன் சனியின் பார்வை ராகுவின் மீது உள்ளது.
அல்லது
சுக்கிர தசை குரு புக்தியில்:
லக்கினத்தில் குரு அமர்ந்து 9ம் பார்வையால் பாக்கியஸ்தான வீட்டை பார்ப்பதால் . குருவின் 5ம் பார்வை தொழில் காரகன் சனியின் மீது உள்ளது.
யோகங்கள்: சங்க யோகம், பர்வத யோகம்,, பாச யோகம்
ஜாதகத்தில் செவ்வாய் மேஷ ராசியில் உள்ளது கம்ப்யுட்டரில் செவ்வாய் ரிஷப ராசியில் உள்ளது. (14 march 1974 5.45.02 காலை இடம்: Chennai)
மற்ற எல்லா ராசியும் சரியாக உள்ளது.
வாத்தியார் தவறு செய்யமாட்டார் என்ற அடிபடையில் கம்புயுட்டர் ஜாதகத்தை எடுத்துக்கொள்ளவில்லை .
Sunday, March 27, 2016 12:58:00 AM ///////
==========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

25.3.16

Astrology: Quiz: புதிர் 106: கேள்விக்கென்ன பதில்!

Astrology: Quiz: புதிர் 106: கேள்விக்கென்ன பதில்!


மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

இந்த ஜாதகத்தை வைத்து இன்றைய கேள்விகள்:

1. ஜாதகத்தின் முக்கியமான சிறப்பு என்ன?
2. ஜாதகருக்கு படித்து முடித்தவுடன் 10 ஆண்டுகளுக்கு மேல் நிரந்தமான வேலை கிடைக்கவில்லை. ஆண்டுக்கு ஒரு வேலை என்று மாறிக் கொண்டே இருந்தார். அதற்கு என்ன காரணம்?
3. பிற்காலத்தில் ஜாதகருக்கு ஒரு நிரந்தமான வேலை கிடைத்தது. அது எப்போது?

ஜாதகத்தை நன்றாக அலசி உங்கள் பதிலை எழுதுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

20.3.16

Astrology: புதிர் எண்.Q.105 புதிருக்கான பதில்!

Astrology: புதிர் எண்.Q.105 புதிருக்கான பதில்

20-3-2016

கொடுக்கப்பெற்றிருந்த ஜாதகம் குழந்தையின்மைக்கு ஒரு உதாரண ஜாதகம்

குழந்தை இன்மை என்பது ஒரு சாபம்தான். சாபம் என்றாலும் குழந்தை இல்லாதவர்கள் வருந்தாதீர்கள். காலதேவன் கொடுக்கும் சாபங்களுக்கெல்லாம், இறைவன் நஷ்ட ஈட்டையும் கொடுத்துத்தான் மனிதர்களைப் படைக்கிறார். இல்லை என்றால் அனைவருக்கும் 337 என்ற மந்திரம் எப்படி வரும்?

தங்கள் குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்து, தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து, அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் பாதுகாத்து வளர்த்த பெற்றோர்களை எத்தனை பிள்ளைகள உதாசீனப் படுத்துகின்றன தெரியுமா? எத்தனை பெற்றோர்கள் உரிய அன்பு பாசம் அரவணைப்பு கிடைக்காமல் முதியோர் இல்லங்களில் வாடிக்கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?

அவர்களைப் பார்க்கும் போது, குழந்தை இல்லாதவர்களின் நிலைமை எவ்வளவோ மேல்!

என்ன, சமூகம் அவர்களைச் சீண்டும். அது ஒன்றுதான் வருத்தத்திற்கு உரியது! உறவினர்களோ அல்லது நண்பர்களோ திடீரென்று உங்கள் குழந்தைகள் என்ன செய்கின்றன என்று கேட்டு அவர்களைச் சங்கடத்திற்கு ஆளாக்குவார்கள்

லைசென்ஸ் இல்லாத வாகன ஓட்டியைப் போலீஸ்காரன் மடக்கிக் கேள்வி கேட்பதைப் போல கேள்வி கேட்பார்கள்!

கேட்டால் என்ன? அடக்கமாகப் பதில் சொல்லுங்கள்

“I do not have a child. I don't know whether it is a curse or boon. But i accepted the out come of the life destined to me, happily!”

“எனக்குக் குழந்தை இல்லை. அது சாபமா அல்லது வரமா என்று தெரியவில்லை. விதிக்கப்பெற்றதை ஏற்றுக்கொண்டு வாழும் மனப்பக்குவம் எனக்கு உள்ளது. அதனால் நான் குழந்தையின்மைக்காக வருந்தவில்லை”. என்று சொல்லுங்கள்!

குழந்தை இருப்பவனுக்கு அவன் குழந்தைகள் மட்டுமே குழந்தைகளாக இருக்கும். குழந்தை இல்லாதவனுக்கு, அவன் செலுத்தும் அன்பினால் உறவினர்கள், நண்பர்கள் என்று மற்ற வீட்டுக் குழந்தைகளும் அவனுடைய குழந்தைகள்தான் என்ற பெருந்தன்மையால் நிறையக் குழந்தைகள். ஆகவே குழந்தையின்மை சாபமல்ல ஒரு விதத்தில் அது வரம்தான்!
----------------------------------------------------------------
சரி சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்!

கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தைப் பாருங்கள்



கடக லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சந்திரன் லக்கினத்திலேயே இருக்கிறார்.

குடும்ப ஸ்தான அதிபதி (Lord of the 2nd house) சூரியன் பாக்கியத்தில் (9ஆம் வீட்டில்) ஆகவே நல்ல குடும்ப வாழ்க்கை அமைந்தது

குழந்தையின்மைக்கான காரணங்கள் என்ன என்பதைக் கீழே பட்டியலிட்டுள்ளேன்.

1
குழந்தை பாக்கியத்திற்கான வீட்டில் (ஐந்தில்) ராகு,
2
அந்த (ஐந்தாம்) வீட்டு அதிபதி செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து கெட்டிருக்கிறார். வீக்காக உள்ளார்
3
குழந்தைக்குக் காரகன் குரு  (authority for children) அஷ்டமத்தில் மறைந்துவிட்டார் அதாவது எட்டாம் இடத்தில் அமர்ந்து விட்டார். அத்துடன் விரையாதிபதி புதனுடன் சேர்ந்து செல்லாக் காசாகிவிட்டார்.
4
அத்துடன் அதே குரு பகவான்தான் இந்த ஜாதகத்திற்கு பாக்கியாதிபதி அதாவது Ninth Lord அவர் தன்னுடைய இடத்திற்குப் பன்னிரெண்டில் அமர்ந்திருக்கிறார். அது மோசமான இடமாகும் (It is the most melefic place for a house lord)
5
மேலும் இயற்கையாகவே சுபக்கிரகங்களான சுக்கிரன், குரு, மற்றும் புதன் ஆகிய மூவரும் எட்டில் அமர்ந்ததால் எந்தப் பயனும் இல்லாமல் போய்விட்டது!

விளக்கம் போதுமா?
-------------------------------
இன்றைய போட்டியில் 30 அன்பர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். பதிலையும் சரியாக எழுதியுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.
ஆனால் முக்கியமான காரணம்: இயற்கையாகவே சுபக்கிரகங்களான சுக்கிரன், குரு, மற்றும் புதன் ஆகிய மூவரும் எட்டில் அமர்ந்ததால் எந்தப் பயனும் இல்லாமல் போய்விட்டது!

இதைக் குறிப்பிட்டு எழுதியவர்கள் இரண்டு பேர்கள். அவர்களுடைய பதில்கள் கீழே உள்ளன. அவர்களுக்கு எனது விஷேச பாராட்டுக்கள்!

அன்புடன்
வாத்தியார்
---------------------
1
///////Blogger Sivachandran Balasubramaniam said...
மதிப்பிற்குரிய ஐயா !!!
புதிர் எண்: 105 இற்கான பதில் !!!
ஜாதகி கடக ராசி, ஆயில்யம் நட்சத்திரம், கடக லக்கினத்தில் பிறந்தவர். லக்கினாதிபதி சந்திரன் லக்கினத்தில். ஐந்தாம்அதிபதி செவ்வாய் லாபம் மற்றும் பாதகஸ்தானமான 11 இல் உடன் கேது. கிரகயுத்தம். ஐந்தில் ராகு. ஐந்தாம் வீடு 26 பரல். குழந்தைகாரகன் குரு எட்டில் மறைவு. குரு அம்சத்தில் நீசம்.ராசிக்கு பன்னிரெண்டில். குருவின் பரல்கள் 3. ஐந்தாம் வீட்டிற்கு சுபகிரக பார்வை இல்லாமல் போனதும், குரு,சுக்கிரன்,புதன் ஆகிய சுபகிரகங்கள் எட்டில் மறைந்ததாலும் 40 வயது வரை எட்டாம் வீடு சம்பந்தப்பட்ட திசைகள் நடந்ததால் குழந்தை பாக்கியம் இல்லை. இப்பொழுது சூரியன் திசை நடப்பதால் குழந்தை பாக்கியம் கிடைக்கலாம் !!!!
இப்படிக்கு
சிவச்சந்திரன். பா
Friday, March 18, 2016 4:54:00 PM//////
------------------------------------
2
//////////Blogger siva kumar said...
வணங்குகிறேன் குருவே
105 புதிர்: கான விடைகள்
1.ஜாதகிக்கு ஏன் குழந்தை இல்லை?
பதில்: கடக லக்கினம், கடக ராசி லக்கின அதிபதி சந்திரன் லக்கினத்தில் இருப்பதால் ஜாதகி அழகிய தோற்றம் உடையவர்.
கடக லக்கினத்திற்கு யோககாரர் செவ்வாய் மற்றும் பூர்வபுன்னிய அதிபதியும் அவறே. அவர் ராகு மற்றும் கேது அகியோர் பார்வை மற்றும் சேர்க்கையால் பலம் இழந்து கெட்டுபோய் உள்ளார்.
ஐந்தாம் இடத்தில் ராகு வந்து அமர்ந்து அதுவும் உச்சம்பெற்று அந்த ஐந்தாம் வீட்டை கெடுத்தான்.
குழந்தைக்கு காரகர் குரு பகவான் அந்த வீட்டிற்கு 4ல் அமர்ந்தாலும் அவர் லக்கினத்திற்கு 8ல் மறைந்ததும் 12ம் இடத்து காரர் புதனுடன்சேர்ந்து கெட்டுள்ளார்.
2ம் இடமான குடும்ப வாழ்க்கைக்கு உரிய இடத்திற்கு மிகவும் கேடான செவ்வாய் மற்றும் சனி பகவானின் பரஸ்பர பார்வை வேற உள்ளது. இது குடும்ப வாழ்க்கைக்கு ஏற்ற அமைப்பு இல்லை. ஜாதகி விவாகரத்து பெற்றோ அல்லது கனவரை இழந்தோ இருப்பார்.
ஆகிய காரனங்கலால் ஜாதகிக்கு குழந்தை கிடையாது சார்.
2 ஜாதகத்தில் பல கிரஹக் கோளாறுகள் உள்ளன. அவைகள் என்னென்ன?
ஜாதகத்தில் சுபகிரகங்கள் குரு சுக்கிரன் புதன் ஆகியவை கெட்டுவிட்டது
யோககாரர் செவ்வாய் ராகு கேது உடன் சேர்ந்து கெட்டார்
7,8ம் அதிபதி சனி பகவான் 12,3ம் அதிபதி புதனுடன் பரிவர்தனை ஆகியுள்ளார்
மனகாரன் சந்திரனுடன் மாந்தி சேர்ந்து ஜாதகிக்கு பிடிவாத குனத்தை கொடுத்தது.
2ம் வீட்டதிபதி அந்த வீட்டிற்கு 6ல் மறைந்ததும்.
Sunday, March 20, 2016 7:06:00 AM //////
================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

18.3.16

Astrology Q.105 புதிர்: ஜாதகிக்கு ஏன் குழந்தை இல்லை?


Astrology Q.105 புதிர்: ஜாதகிக்கு ஏன் குழந்தை இல்லை?

18-3-2016

காசைச் சுண்டிப் போட்டு பதில் சொல்ல முடியாதபடி சற்று சிக்கலான கேள்வி.

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.



ஜாதகிக்குக் குழந்தை இல்லை. ஏன் குழந்தை இல்லை? ஜாதகத்தில் பல கிரஹக் கோளாறுகள் உள்ளன. அவைகள் என்னென்ன? சரியாகச்
சொன்னால்தான் மதிப்பெண் கிடைக்கும்.

ஜாதகத்தை அடித்து துவைத்து, நன்றாக அலசி உங்கள் பதிலைச் சொல்லுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

6.3.16

Astrology: Quiz 104: புதிருக்கான விடை!


Astrology: Quiz 104: புதிருக்கான விடை!

6-3-2016

நேற்றைய புதிரில் ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, ”ஜாதகருக்கு எப்போது திருமணம் ஆனது? அதாவது எந்த வயதில், எந்த மகா திசை மற்றும் புத்தியில்  (Sub Period) திருமணம் ஆனது?” என்ற கேள்வியைக் கேட்டிருந்தேன்.

திருமணம் ஆகும் நேரம் பற்றிய கேள்வி அது

ஜாதகனுக்கு 36 வயதிற்குப் பிறகுதான் திருமணம் ஆனது! காரணம் ஜாதகத்தில் களத்திரம் சம்பந்தமான கிரக அமைப்புக்கள்தான் காரணம். வாருங்கள் ஜாதகத்தை ஒருமுறை பார்ப்போம்.



சிம்ம லக்கின ஜாதகம் சித்திரை நட்சத்திரம்

1. ஏழாம் அதிபதி சனி அந்த வீட்டில் உடன் இரண்டு தீய கிரகங்களின் பிடியில் (சூரியன் மற்றும் செவ்வாயுடன் சேர்க்கை)
2. களத்திரகாரகன் சுக்கிரன் எட்டில் (மறைவு ஸ்தானத்தில்)
3. சுப கிரகமான குரு பகவானும் எட்டில்
4. ஜாதகனுக்கு செவ்வாய் திசை இருப்புடன் ராகு திசை முடியும்போது 25 வயதாகி விட்டது. அடுத்து வந்த மகா திசை அதிபதி குரு பகவானும் எட்டில் இருப்பதால், அந்த திசையும் மேன்மையுடையதாக இல்லை.
5. லக்கினாதிபதி சூரியன் ஏழில் இருப்பதால், அவர் தன்னுடைய புத்தியில் (sub period) திருமணத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் தசா நாதனும் புத்தினாதனும் (குருவும், சூரியனும்) ஒருவருக்கொருவர் 12/2 நிலையில் இருப்பதைப் பாருங்கள். ஆகவே சூரிய புத்தியில் திருமணம் நடக்கவில்லை
6. அதற்கு அடுத்துவந்த (குரு மகா திசை) சந்திர புத்தியில் ஜாதகனுக்குத் திருமணம் நடந்தது. சந்திரனும் குருவும் ஒருவருக்கொருவர் நேரடிப் பார்வையில் இருப்பதைப் பாருங்கள்

உரிய தசா புத்தி வரும்போது நடக்க வேண்டியது நடக்கும். அதை வலியுறுத்திச் சொல்வதற்காக, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை வகுப்பில் நடத்தப் பெற்ற பாடம். அனைவருக்கும் பயன்படட்டும் என்பதற்காக இப்போது வலை ஏற்றினேன்

இந்தப் புதிர்ப்போட்டியில் 18 பேர்கள் கலந்து கொண்டார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். அவர்களுள் 3 பேர்கள் மட்டும் மிகச் சரியான பதிலை எழுதியுள்ளார்கள். அவர்களின் பெயர்களுடன் அவர்கள் எழுதிய பதிலையும் கீழே கொடுத்துள்ளேன். அவர்கள் மூவருக்கும் எனது மனமுவந்த பாராட்டுக்கள்.

அன்புடன்
வாத்தியார்
---------------------------
1
**********//////////Blogger Srinivasa Rajulu.M said...
வணக்கம் ஐயா,
இரண்டு வருடங்களுக்கு முன் தங்களின் புதிரில் அலசிய ஜாதகம் இது. பார்த்தவுடன் நினைவுக்கு வந்தது. 36 வயதுக்கு மேல் வந்த குரு-சந்திரனில், மிகவும் தாமதமாக நடந்த திருமணம். (இருந்தாலும் லீப் வருடம் 29,ஃபெப்ரவரியில் பிறந்தவர்களுக்கு 4 வருடங்களுக்கு ஒருமுறைதான் பிறந்த தினம வருவதால் இவருக்கு 9-ஆம் பிறந்த தின வருடத்தில் திருமணம் நடந்ததாக எண்ணி மகிழ வேண்டியதுதான்)
Friday, March 04, 2016 7:24:00 AM/////

உங்களின் நினைவாற்றல் வாழ்க!
------------------------------------------
2
**********//////OpenID guest2015 said...
DOB - MAR 1 1964
Marriage happened possibly in the Jupiter-moon dasha/subperiod. 1999-2000.
reason for the delayed marriage.
lagna lord in the 7th house with saturn and mars.
auspicious planets like venus and jupiter in 8th house.
9th lord mars got combusted.
there is no connectivity between jupiter and other planets like mars, mercury, sun and saturn as they are postioned 12/2.
however jupiter/venus/moon aspects each other.
so marriage happened in jupiter dasha/moon subperiod.
thanks
sree///////
Saturday, March 05, 2016 10:17:00 AM 
------------------------------------------------
3
*********///////Blogger Chandrasekaran Suryanarayana said...
QUIZ NO. 104 வணக்கம்
01.03.1964 ஆம் தேதி ஞாயிறு கிழமை மாலை 6.59 மணிக்கு பிறந்தவர் இந்த ஜாதகர்.
37 வது வயதில் திருமணம் நடைபெற்றது.
லக்கினம்: சிம்மம், ராசி: கன்னி, நட்சத்திரம்: சித்திரை
யோககாரகர்கள்: சூரியன் (5 பரல்), குரு, செவ்வாய்(5பரல்), யோகமில்லாதவர்கள்: புதன், சுக்கிரன், சனி.
ஏழாம் அதிபதி சனி அந்த வீட்டில் சூரியன் , செவ்வாய் கிரகங்களின் பிடியில் .
7ல் சனி (4 பரல்) இருந்தால் திருமணம் தாமதமாகும். 30 வயதிற்க்கு மேல் தான் திருமணம் நடைபெறும் .
களத்திரகாரகன் சுக்கிரன் (2 பரல்) எட்டில் ,குரு பகவானும் எட்டில்.
சந்திரனும் (5 பரல்) குருவும் (5 பரல்) ஒருவருக்கொருவர் 7ம் பார்வையில் இருக்கிறார்கள்.
7ம் வீட்டில் (25 பரல்) 4 கிரகங்கள் இருந்தால் நான்கு கல்யாணம் நடக்கும் என்று கூறுவார்கள் . எது உண்மையோ?
ராகு தசை முடிந்தது - 25 வயது.
குரு தசை சந்திர புக்தியில் திருமணம் நடைபெற்றது . காரணம் : சந்திரனும் குருவும் ஒருவருக்கொருவர் 7ம் பார்வையில் இருக்கிறார்கள்.
மேலும் , சந்திர ராசியிலிருந்து 7ம் வீட்டில் சுக்கிரனும், குருவும் சுப கிரகங்கள் உள்ளன . ராசியிலும் , நாவாம்சத்திலும் சுக்கிரனும், குருவும் சுப கிரகங்கள் உள்ளன .ஆகையால் வர்கோத்தமம். 37 வது வயதில் திருமணம் நடைபெற்றது.
குரு தசை குரு புக்தியில் திருமணம் நடைபெற வாய்ப்பில்லை . காரணம் : 8ம் வீட்டு அதிபதி 8ல்.
குரு தசை சூரிய புக்தியில் திருமணம் நடைபெற வாய்ப்பில்லை . காரணம்: குருவும், சூரியனும் ஒருவருக்கொருவர் 12/2 நிலையில் இருக்கிறார்கள்.
சந்திரசேகரன் சூரியநாராயணன்.
Saturday, March 05, 2016 10:47:00 AM////////
-----------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.3.16

Astrology Q.104 புதிர்: ஜாதகருக்கு எப்போது திருமணம் ஆனது?


Astrology Q.104 புதிர்: ஜாதகருக்கு எப்போது திருமணம் ஆனது?

காசைச் சுண்டிப் போட்டு பதில் சொல்ல முடியாதபடி சற்று சிக்கலான கேள்வி.

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

ஜாதகருக்கு எப்போது திருமணம் ஆனது? அதாவது எந்த வயதில்,
எந்த மகா திசை மற்றும் புத்தியில்  (Sub Period) திருமணம் ஆனது.
சரியாகச்  சொன்னால்தான் மதிப்பெண் கிடைக்கும்.


ஜாதகத்தை அடித்து துவைத்து, நன்றாக அலசி உங்கள் பதிலைச் சொல்லுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

29.2.16

Astrology: Quiz 103: பதில்: அக்கரையைக் காணும் வாய்ப்பு ஜாதகருக்குக் கிடைக்கவில்லை!


Astrology: Quiz 103: பதில்: அக்கரையைக் காணும் வாய்ப்பு ஜாதகருக்குக் கிடைக்கவில்லை!

கர்மவினையின்படி நமக்கு என்ன வேலை விதிக்கப்பட்டுள்ளதோ அதைத்தான் நாம் செய்ய வேண்டியதிருக்கும்.
அரசாங்க உத்தியோகம் என்றால் அதுதான் அமையும். இல்லை என்றால் என்ன கரணம் போட்டாலும் அமையாது.

சிலருக்குத் தாங்கள் செய்கின்ற வேலை பிடிக்கும். சிலருக்கு பிடித்தம் இல்லாமல் இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்குத் தொழில் செய்தால் பரவாயில்லை, நிறைய காசு பார்க்கலாமே, வேலைக்குச் செல்வதில், கைக்கும் வாய்க்குமாக இருக்கிறதே என்ற மன நிலை இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு, இதில் ஏற்ற இறக்கங்கள், ரிஸ்க் எல்லாம் உள்ளதே, வேலை என்றால் மாதாமாதம் வருமானம் இருக்குமே என்ற ஆதங்கம் இருக்கும்.

பொதுவாகப் பலரும் திருப்தியாக இல்லை. நிம்மதியாக இல்லை. இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற நிலைமை.

பலர் மனதிலும் உள்ள கேள்விகள் இவைதான்:

1. நமக்கு ஏற்ற தொழில் எது?
2. வெளி நாட்டில் வேலை கிடைக்குமா?

அது சம்பந்தமாக வெள்ளிக்கிழமையன்று ஒரு ஜாதகத்தை அலசக் கொடுத்திருந்தேன்.
-----------------------------------------------------------------------------------
அந்த ஜாதகத்தைப் பாருங்கள்.


இது மகர லக்கின ஜாதகம். யோககாரகன் சுக்கிரன் (அதாவது ஒரு திரிகோண வீடு & ஒரு கேந்திர வீடு ஆகியவற்றிற்கு உரியவன்) இந்த ஜாதகத்திற்கு அவன் யோகாரகன் என்பதோடு 10ஆம் வீட்டிற்கும் அதிபதி.அவன் எங்கே இருக்கிறான். அடடா, 12ல் மறைந்து விட்டான். ஜாதகருக்கு எந்தத் தொழிலும் அல்லது வியாபாரமும் அமையாது. வேலக்குச் செல்ல வேண்டிய ஜாதகம். அல்லது சுய தொழிலாக இருந்தால், பணமுதல்லீடு இல்லாமல் கமிஷன் அடிப்படையில் உள்ள தொழில்களைச் செய்யலாம்.

சுக்கிரனுக்கு, 9ஆம் அதிபதி மற்றும் 7ஆம் அதிபதியுடன் தொடர்பு இல்லை. ஆகவே வெளிநாடு சென்று வேலை செய்யும் அமைப்பு ஜாதகத்தில் இல்லை. ஆசாமி இங்கேயே வேலை செய்ய வேண்டியதுதான். அதைத்தான் அவரும் செய்தார்.
----------------------------------------------------
24 பேர்கள் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். 5 பேர்கள் மட்டும் சரியான விடையை எழுதியுள்ளார்கள். அவர்களுக்கு எனது மனம் உவந்த பாராட்டுக்கள். அவர்கள் பெயருடன், அவர்கள் எழுதிய பதில்கள் உங்கள பார்வைக்காகக் கிழே கொடுத்துள்ளேன்

அன்புடன்
வாத்தியார்
==========================================
1
**********///////Blogger Srinivasa Rajulu.M said...
தொழில் காரகன் (லக்னாதிபதி) நாலில் நீச்சம்! தொழில் ஸ்தானாதிபதி பன்னிரண்டில் மறைவு! ஒன்பது மற்றும் பன்னிரண்டு ஆகிய ராசிகள் ஜல ராசிகளோ வாயு ராசிகளோ அல்ல! குருவுக்கும் ஒன்பதாம் இடத்துடன் சம்பந்தமில்லை! வேலை செய்யும் வயதில் வந்த சுக்கிர, சூரிய, மற்றும் (நீச்ச) சந்திர தசைகள் வலுவாக இல்லை!
ஆக, வெளிநாடு செல்லும் யோகமோ, சுயதொழில் யோகமோ இல்லாத ஜாதகர்.////////
------------------------------------------------------------------------
2
*********/////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
புதிர் எண் 103..
1.,மகர லக்னம் லக்னாதிபதி கேந்த்ரத்தில் ஆனால் நீசம்
2.,சுபர் பார்வை இல்லை..
3..மகர லக்னத்திற்கு யோகாதிபதி சுக்ரன் 12ல் விரயம் ..மேலும் பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டி கொண்டான் .
4. வெளிநாடு வாய்ப்பு 9 மிடம் நன்றாக..மேலும் சூரியன் .நல்ல இடத்தில. இங்கு அப்படி இல்லை.
சூரியன் பகை வீட்டில் 8 ம்வீட்டுக்கரன் 2ல் தனத்தில் அமர்ந்து கெடுத்தான் .
5.,10ம் அதிபதி சுக்ரன் 12ல் .
7.,வெளிநாடு சென்று சம்பாத்தியம் செய்வதற்கு 7'&9 வீடதிபதிகள் தொடர்பு இருத்தல் வேண்டும் ஜாதகரிடம் 7 வீட்டதிபதி சந்தரன் 9ம் வீட்டதிபதி புதனுடன் எந்த விதமான பார்வை தொடர்பு இல்லை ..???
8., ஆரம்பகால திசைகள் அவ்வளவு விசேடமாக இல்லை.
9.முக்கியமாக தனதிபதியும் லாப ஷ்தாநிபதியும் 6/8 நிலைமை ..[செவ்வாய் 11ல் சனி 4ல் அமர்ந்து அந்த இடம் செவ்வாய்க்கு 8மிடமாக அமைந்தது..!!!
10..***,இந்த ஜாதகர் வெளி நாடு சென்று சம்பாத்தியம் செய்வதற்கு வாய்ப்பே இல்லை. !!!!**,
முன்பு இந்த ஜாதகத்தை பார்த்த ஞாபகம் ..சரிவர பிடி படவில்லை..
Friday, February 26, 2016 1:46:00 PM ////////
---------------------------------------------------
3
////////Blogger adithan said...
ஐயா வணக்கம். லக்னாதிபதி சனி நீச்சம்.ஒனபதாம் அதிபதி புதன் லக்னத்தில் உடன் ராகு மேலும் கேதுவின் பார்வை.இரண்டில் எட்டாம் அதிபதி சூரியன்,சனி பார்வையுடன்.பணம் சம்பாதிக்க வாய்ப்பில்லை.நவாம்சத்திலும் புதன் பகை ஸ்தானத்தில்,சனி பார்வையுடன்.வெளிநாடு போக வாய்ப்பல்லை.ஆரம்ப முயற்ச்சி. தவறிருந்தால் சுட்டவும். நன்றி.
Friday, February 26, 2016 7:48:00 PM //////
-----------------------------------------
4
*********///////Blogger Chandrasekaran Suryanarayana said...
ஆசிரியருக்கு வணக்கம். தாங்கள் நலமாக இருக்கிறீர்களா ?
ஜாதகருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கவில்லை.
20.02.1971 ஆம் தேதி காலை 4.26.19 மணிக்கு அனுஷ நட்சத்திரத்தில் பிறந்த ஜாதகருக்கு மகர லக்கினம்(6 பரல்). (இடம் : சென்னை) .
லக்கினாதிபதி சனி நீசம். நவாம்சத்தில் லக்கினாதிபதி சனி துலா ராசியில் உச்சம். இருந்தும் லக்கினாதிபதி வலுவாக இல்லை. சுபக் கிரகங்களின் பார்வையும் இல்லை.
சுக்கிரனுக்கு 9ஆம் அதிபதி புதனுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் போனது வெளிநாட்டு வாய்ப்புகளுக்குக் கேடானது. பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார். ஒரு பக்கம் செவ்வாய். மறுபக்கம் ராகு.
பணம் ஈட்டலுக்கு 2ஆம் வீட்டுக்காரனும், 11ஆம் வீட்டுக்காரனும் ஒருவருக்கொருவர் நன்றாக இருக்க வேண்டும். இந்த ஜாதகத்தில் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அஷ்ட்டமம் / சஷ்ட்டமம் நிலையில் உள்ளார்கள். அதாவது சனியும், செவ்வாயும் 6/8, 8/6 நிலையில் உள்ளார்கள்.
லக்கினத்தில் 6ஆம் வீட்டுக்காரன் புதன் வில்லன். லக்கினத்தில் அமர்ந்தது கேடு உண்டாகும். ராகுவும் கூட்டணியாக சேர்ந்தது சரியில்ல. 7ம் வீட்டுக்காரன் சந்திரனும் நீசம்.
யோககாரகன் சுக்கிரன். 5ஆம், 11ஆம் இடங்களுக்கு உரியவன். அவன் வந்து 12ல் (விரையத்தில்) அமர்ந்தது கேடானது.
பத்தாம் வீட்டுக்கு அதிபதியான சுக்கிரன் 12ல் மறைந்து விட்டார். சுக்கிரனுடன் மாந்தியும் கூட்டு. முயற்சிகள் அனைத்தும் செல்லாமல் போனது.
தசைகளும் சாதகமாக இல்லை. சனி - 6 ஆண்டுகள் , புதன் மகா திசை - 17 ஆண்டுகள் ,கேது மகா திசை - 7 ஆண்டுகள், சுக்கிர மகா திசை - 20 ஆண்டுகள் (12ஆம் வீட்டுக்காரனின் திசை).
லக்கினத்தில் புதனும், ராகுவும் சேர்ந்து இருந்தால், ஜாதகன் சுறுசுறுப்பானவன் . கெட்டிக்காரன். வெட்டிக் கொண்டு வா என்றால் வெட்டி எடுத்து கூரு போட்டு கட்டிக் கொண்டு வந்து விடுவான். விட்டால் வெட்டியதைக் காச்சாக்கிக்கொண்டும் வந்துவிடுவான். புதுப்புது விஷயங்களில், செயல்களில் ஆர்வம் உடையவனாக இருப்பான்.
ஆக மொத்தம் சரியில்லை வெளிநாடு செல்வதற்கு.
இருந்தாலும், (பூவா, தலையா போட்டு பார்த்ததில் தலை தான் விழுந்தது). அதனால் தான் வெளிநாட்டில் வேலை கிடைக்கவில்லை.
சந்திரசேகரன் சூரியநாராயணன்.
Saturday, February 27, 2016 12:13:00 AM ////////
----------------------------------------------
5
*********///////Blogger slmsanuma said...
ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்ட ஜாதகம்.
மகர லக்கின ஜாதகம்.
யோககாரகன் & 10ஆம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன் 12ல் மறைந்து விட்டான்.
லக்கினாதிபதியும், தொழில்காரகனுமாகிய சனீஷ்வரன் நீசம்.
ஏழாம் அதிபதி சந்திரனும் நீசம்.
9ஆம் அதிபதி ராகுவோடு கூட்டு.
சுக்கிரனுக்கு, 9ஆம் அதிபதி மற்றும் 7ஆம் அதிபதியுடன் தொடர்பு இல்லை.
வெளிநாடு சென்று வேலை செய்யும் அமைப்பு ஜாதகத்தில் இல்லை.
ஜாதகருக்கு வெளிநாடு சென்று வேலை செய்து நிறைய பொருள் ஈட்ட வேண்டுமென்று ஆசை நிறைவேறாது.
SANTHANAM, SALEM
Saturday, February 27, 2016 11:48:00 AM ////////
>>>>>>>>>>>>>>>>>>>>>
ஏற்கனவே 4 ஆண்டுகளுக்கு முன்பு தனி வகுப்பில் ஆய்வு செய்யப்பட்ட ஜாதகம்தான். பொதுவகுப்பில் அனைவருக்கும் ஒரு வாய்ப்புக் கொடுப்பதற்காக வலையில் ஏற்றினேன்!
===============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

26.2.16

Astrology: Quiz 103: புதிர் எண்.103 ஜாதகரின் ஆசை நிறைவேறியதா?


Astrology: Quiz 103: புதிர் எண்.103 ஜாதகரின் ஆசை நிறைவேறியதா?

கீழே கொடுத்துள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

ஜாதகருக்கு வெளிநாடு சென்று வேலை செய்து நிறைய பொருள் ஈட்ட வேண்டுமென்று ஆசை!

அவருடைய ஆசை நிறைவேறியதா? ஜாதகத்தை நன்றாக அடித்துத் துவைத்து அலசி உங்கள் பதிலை எழுதுங்கள்.

Toss போட்டுப் பார்த்து ஒரு வார்த்தையில் விடையைச் சொல்லக்கூடாது. ஜாதக அமைப்பின்படி என்ன காரணம் என்பதைக் கணித்துக் கூற வேண்டும்!



அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.2.16

Astrology: நீங்களும் உங்கள் ஜாதகமும்!


Astrology: நீங்களும் உங்கள் ஜாதகமும்!

             அதுஇருந்தா இதுஇல்லே
                   இதுஇருந்தா அதுஇல்லே
              அதுவும்இதுவும் சேர்ந்திருந்தா
                  அவனுக்கிங்கே இடமில்லே!
                                  - கவியரசர் கண்ணதாசன்
--------------------------------------------------------------------------------------------------------------------------
ஜோதிடம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ கவியரசர் எழுதிய இந்த வரிகள்தான் ஜோதிடத்தின் முதல் பாடம்.

ஒரு மனிதக்கு அல்லது மங்கைக்கு எல்லா பாக்கியங்களுமிருக்காது! அப்படியிருந்தால் ஆயுள் பாவம் அடிபட்டிருக்கும். சின்ன வயசிலோ
அல்லது மத்திம வயசிலோ (32 to 50) போய்ச் சேர்ந்துவிடுவான்.

ஆகவே நமக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்காது!

எங்கே சொத்து இருக்கிறதோ அங்கே சுகம் (நிம்மதி) இருக்காது; எங்கே சொத்து இல்லையோ அங்கே பிரச்சினை இருக்காது!

எங்கே ஹெல்த் (Health) இருக்கிறதோ அங்கே வெல்த் இருக்காது:
எங்கே வெல்த் (Wealth) இருக்கிறதோ அங்கே ஹெல்த் இருக்காது!

ஒரு கை வண்டி இழுக்கும் தொழிலாளி பத்து ஜிலேபி கொடுத்தாலும்
ஒரு வெட்டு வெட்டுவான்: பெரிய செல்வந்தரால் இரண்டு ஜிலேபிகளைச்
சேர்ந்தாற்போல விரும்பி உண்ண முடியாது.

இரத்த அழுத்தம் (Blood Pressure), சர்க்கரை (Sugar, Diabetic), உப்பு,
கசப்பு என்று எந்த நோயும் கைவண்டிக்காரனுக்கு இருக்காது.

இறைவனின் படைப்பு அப்படி!

உங்களுக்கு ஒன்று இல்லையென்றால், வேறு ஒன்று இருக்கும். இல்லாததற்குக் கவலைப் படாமல், இருப்பதற்குச் சந்தோஷப்படுங்கள்

அதற்கு உதாரணம்:  ஆடு, மாடு, மான் போன்றவற்றிற்குக் கொம்பைக் கொடுத்த இறைவன், குதிரைக்குக் கொம்பைக் கொடுக்கவில்லை!

கொடுத்திருந்தால் என்ன ஆகும்? யோசித்துப் பாருங்கள்!

இதைக் கேட்ட நண்பர் ஒருவர் சொன்னார், "கழுதைக்கும் கூடத்தான் கொம்பில்லை!"

நான் சொன்னேன், "கழுதையின் பலம் அதன் கால்களிலே உள்ளது. உதை வாங்கிப் பார் தெரியும்!"

பலம், பலவீனம் இரண்டும் கலந்துதான் இருக்கும்.

இரவு பகலைப் போல, இன்பம்,துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை!

9 கிரகங்கள், 12 ராசிகள் என்று ஜாதகங்களும், அவற்றின் அமைப்பும், அதானால் கிடைக்கும் பலன்களும் விதம் விதமாக இருந்தாலும், மொத்த
மதிப்பெண், உலகில் அத்தனை பேர்களுக்கும் 337 தான். அஷ்டகவர்க்கக் கட்டத்தில் உள்ள எண்களைக் கூட்டிப் பாருங்கள் தெரியவரும்.

நரேந்திர மோடிக்கும் 337 தான். அவருடைய P.A விற்கும் 337 தான்
முகேஷ் அம்பானிக்கும் 337 தான். அவருடைய வாகன ஓட்டிக்கும் 337 தான்.

முகேஷ் அம்பானியின் பெண்ட்லி காரை ஓட்டி அனுபவிப்பவன்
அவருடைய வாகன ஓட்டிதான்!

பிரதமர் அலுவலகத்தில் உள்ள எல்லா வசதிகளையும் அனுபவிப்பவன் பிதமருடைய P.A தான்!

இந்த இருவருக்குமே மரண பயம், தீவிரவாதிகளின் தாக்குதல் பயம்
எதுவும் இருக்காது. வேலை முடிந்தால் ஹாயாகத் தெருவில் தனியாக
நடந்து
தங்கள் வீட்டிற்குப் போக அவர்களால் முடியும்.

ஆனால் அவர்களின் Boss களால் அப்படி செய்ய முடியாது.

பிரபலங்களுக்கு லக்கினம், ஒன்பது, பத்து, பதினொன்றாம் வீடுகள்
நன்றாக இருக்கும் அவர்களுடைய உதவியாளர்களுக்கு  நான்காம்
வீடும் நன்றாக இருக்கும்.

உங்களைவிடத் தாழ்ந்தவர்கள் யாருமில்லை;
உங்களைவிட உயர்ந்தவர்கள் யாருமில்லை!
அனைவரும் சமம்!
அதை மனதில் வையுங்கள்!
-------------------------------------------------
ஜோதிட விதிகளளைப் படிக்கும் போது, நமது மனம், அதன் படி நமது ஜாதகத்திலும் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள முனையும்.
ஒவ்வொரு முறையும் ஜாதகத்தைக் கையில் அல்லது பையில்
வைத்துக் கொண்டு கிடைக்கும் செய்திகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க
முடியாது.

ஆகவே முதலில் உங்கள் ஜாதகத்தை நீங்கள் மனப்பாடம் செய்து
வையுங்கள். எப்படி மனப்பாடம் செய்ய வேண்டு மென்றால்,
தூக்கத்தில் எழுப்பிக் கேட்டால் கூட நீங்கள் தயக்கமின்றிப் பதில்
சொல்ல வேண்டும்

உடனே அதைச் செய்யுங்கள்.

லக்கினத்தின் பெயர், ராசியின் பெயர், நட்சத்திரம், ஒன்பது கிரகங்களும் உங்கள் ஜாதகத்தில் உட்கார்ந்து இருக்கும் ராசியின் பெயர், அது
லக்கினத்தில் இருந்து எண்ணிக்கையில் என்ன இடம்? அவன் எதற்குக்
காரகன் என்னும் அடிப்படை விஷயங்களை அடக்கி உங்கள் ஜாதகத்தை
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மனதில் ஆணித் தரமாகப் பதிவு
செய்து வைத்திருக்க வேண்டும்.

எனக்கு என் உறவினர்கள் பலருடைய ஜாதகங்கள் மனப்பாடம். நீங்கள் அட்லீஸ்ட் உங்கள் ஜாதகத்தையாவது  மனப்பாடம் செய்து வையுங்கள்.
மூன்று நாட்களுக்குள் நீங்கள் அதைச் செய்ய வேண்டும்!

செய்வீர்களா? முடியும் என்று நம்பிக்கை உள்ளவர்கள் பதில் சொல்லுங்கள்!

இது 5 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை வகுப்பில் பதிவிட்ட பழைய பாடம். இப்போது நிறைய புதியவர்கள் வந்துள்ளதால் அனைவரும் தெரிந்து

கொள்ளட்டும் என்று இங்கே பதிவிட்டுள்ளேன்.

என்ன சரிதானே?

அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.2.16

நவக்கிரக பரிகாரக் கோயில்களில் எப்படி வழிபடுவது..?


படத்தின் மீது கர்சரை வைத்து அழுத்தினால் 
படம் பெரிதாகத் தெரியும். 
பார்ப்பதற்கு வசதியாக இருக்கும்
-----------------------------------------------------------------------
நவக்கிரக பரிகாரக் கோயில்களில் எப்படி வழிபடுவது..?

1.சூரியன்; 
 சூரியனார்  கோவில்;
இங்கு வந்து  முதலில்  நவக்கிரகங்களுக்கு அருள்  புரிந்த  திருமங்கலங்குடி  ஸ்ரீ பிராண  நாதேஸ்வரரை  வழிபட்டு   பின்பு  சூரியனார்  கோவில்  சென்று   கருவறையில்  சூரிய  சக்கரம்  பிரதிஷ்டை  செய்யப்பட்டுள்ளது.  சூரியனை  வழிபடுவதாலும்  இங்குள்ள  நவக்கிரகங்கள்  வழிபடுவதாலும்  அனைத்து  தோஷங்களும்  நீங்கப்  பெறுவர்.  ஞாயிறு  வழிபாடு  சிறப்பு.
வழித் தடம்; கும்பகோணம்-  மயிலாடுதுறை  சாலையில்  ஆடுதுறையிலிருந்து  2 கி.மீ.   தூரத்தில் உள்ளது.
திருவலஞ்சுழி;
தஞ்சாவூர்  அருகிலுள்ள  திருவலஞ்சுழியில்   உள்ள  சுபர்தீஸ்வரர்  கோவிலில்   சூரியன்,  சனி  ஆகிய  இரண்டு  கிரகங்களும்  நேருக்கு நேர்  உள்ளன என்பது  குறிப்பிடத்தக்கது.   இங்கு  இருவரும்  நட்பு  நிலையில்  இருப்பதாக  சொல்கிறார்கள்   சூரியன்  மற்றும்  சனி   பகவானால்  ஜாதகத்தில்   தோஷம்  உள்ளவர்கள்  இத்திருக்கோவில்  சென்று  அர்ச்சனை  செய்தால்  தோஷம்   நிவர்த்தியாகும்.
சூரக்குடி;
சூரியனுக்கு  சாபம்  நீக்கி  அருள்  தந்த  சுந்தரேசர்  சன்னதி.  சூரிய,  சனி  தோஷங்களை  நீக்கும்  ஸ்தலம்.
வழித் தடம்; குன்றக்குடி  கிழக்கே 12 கி.மீ.  தொலைவில்  உள்ளது.

2. சந்திரன்; 
திங்களுர்;
தாய்க்குப்பீடை  நோய்,  மன நிலை  பாதிப்பு,  சந்திரன் ஜாதகத்தில்  நீசம்,  மறைவு,  பாப  கிரக  சேர்க்கை  உள்ளவர்  இங்குள்ள   கைலாச  நாதர்  கோவிலில்  உள்ள   சந்திரனை  வழிபடுவதால்  தோச  நிவர்த்தியாகும்.
வழித் தடம் ;  கும்பகோணம்-  திருவையாறு  சாலையில்  உள்ளது.

3.செவ்வாய்;
வைத்தீஸ்வரன்  கோவில்;
ஜாதகத்தில்  செவ்வாய்  பாதிப்பு,   திருமணத்தடை,  தொழில்  சிக்கல்,   வீடு,  மனை  வாங்க,  அடிக்கடி  விபத்து  போன்றவை  ஏற்பட்டாலும்,  செவ்வாய்  தெசை  நடைபெறும்   காலங்களிலும்   இங்கு  தனி  சன்னதியில்   உள்ள   செவ்வாய்க்கு  தீபம்  ஏற்றி  தரிசனம்  செய்ய   எத்தகைய  கடுமையான  செவ்வாய்   தோசமும்  நீங்கும்
வழித் தடம்; மயிலாடுதுறையிலிருந்து  14 கி.மீ.  தூரத்தில்  உள்ளது
பழநி-  திருவாவின்குடி;
செவ்வாய்க்கிழமை  மதியம்  உச்சிகால  பூஜையில் முருகனுக்குப்  பால்   அபிசேகம்  செய்து  வழிபட  தோசம்  நீங்கும்.
வழித் தடம்; திண்டுக்கல்லிருந்து   சுமார்  60 கி.மீ.  தூரத்திலுள்ள  பழனியில்  அடிவாரத்திலுள்ள  கோவில்.

4.  புதன்; 
திருவெண்காடு;
குழந்தைகளுக்கு  கல்வியில்  ஆர்வமின்மை,  தடங்கல்கள் ஏற்படும் போது  இங்குள்ள   புதன்  வழிபட்ட  ஸ்ரீ  ஸ்வேதா  ரண்யேஸ்வரரையும்   தரிசித்து  பின்பு  அங்கு  எழுந்தருளியுள்ள  புதனையும்  வழிபட்டால்  தோசங்கள்  நீங்கும்.
வழித் தடம்; மயிலாடுதுறையிலிருந்து    பூம்புகார்  சாலையிலுள்ளது.

5.குரு;  
 ஆலங்குடி;     திருமணத்தடை,  புத்ர  தோஷம்,  குடும்ப ஒற்றுமை  நிம்மதி  குறைவு,  ஜாதகத்தில்  குரு  தோஷம்  உள்ளவர்  வியாழக்கிழமை  இங்குள்ள  குரு  பகவானை  நெய் தீபம்  ஏற்றி,  வழிபடுவது  சிறந்த  பரிகாரமாகும்.
வழித் தடம்; கும்பகோணம்-  மன்னார்குடி  சாலையில்  உள்ளது.
தென்குடி  திட்டை;   அருள் மிகு  வசிஷ்டேஸ்வரர்  திருக்கோயிலில்  சுவாமிக்கும்,  அம்பாளுக்கும்  இடையில்  ராஜ  குருவாக   நின்ற  கோலத்தில்  தனி  சந்நிதியில்   அருள்  பாலித்து   வருகிறார்.  எனவே,  இத்தலமே   குரு  பரிகாரம்  செய்வதற்கு   சிறந்த   தலம்  என்பது  பெரியோர்  கருத்து.
வழித் தடம்;
தஞ்சாவூர்-  திருக்காவூர்  சாலையில்  பள்ளி   அக்ஹாரம்  வழியாக  மெலட்டூர்  செல்லும்   பாதையில்  உள்ளது.
தாருகாபுரம்;
இங்குள்ள   சிவன்  கோவிலில்  உள்ள  தட்சிணாமூர்த்தி  பாதத்தில்   சுற்றிலும்   ஒன்பது  நவகிரகங்கள்   உள்ளன.  இவரை  வழிபட்டால்  குரு   எந்த  ராசிக்கு  மாறினாலும்   நற்பலன்  கிடைக்கும்.
வழித் தடம்; ராஜபாளையம்  அருகிலுள்ள   வாசுதேவ-  நல்லூரிலிருந்து  பேருந்து வசதி  உண்டு.

6.  சுக்கிரன்; 
கஞ்சனூர்;
சுக்கிர  தோஷம்,  பலஹீன,  உள்ளவர்   இங்குள்ள   மூலவர்  சுக்ரீஸ்வரரை   சுக்கிர பகவானாக்  கருதி  வழிபட்டால்  தோஷம்  நீங்கும்.
வழித் தடம் சூரியனார் கோவிலுக்கு  அருகில்  உள்ளது.
திருநாவலூர்;
இங்குள்ள   பார்கவீஸ்வரரை  வழிபட  சுக்கிர   தோஷம்  நீங்கும். சுக்கிர  தெசை   பாதிப்புக்கும்  உரிய  ஸ்தலம்.
வழித் தடம்; விழுப்புரம்-  உளுந்தூர்  பேட்டை  சாலையில்  உள்ளது.

7.  சனி 
திருநள்ளாறு;
ஜாதகப்படி  7 1\2 சனி, அஷ்டம  சனி,  அர்த்தாஷடம் சனி  ஏற்படும்  காலங்களில்   இங்குள்ள  நள  தீர்த்தத்தில்   நீராடி  தர்ப்பாரண்யேஸ்வரரையும்  போக  மார்த்த  அம்மனையும்  வழிபட்ட   பிறகு   சனீஸ்வரர்  சன்னதி  சென்று  எள்  தீபம்  ஏற்றி  வழிபட  தோசம்  நீங்கும்.
வழித் தடம்;
மயிலாடுதுறையிலிருந்து  30 கி.மீ.  தூரத்திலுள்ளது.
குச்சனூர்;
7 1\2  சனி,  அஷ்டம சனி,  அர்த்தாஷடம  சனி ,  கண்டச்சனி  ஆரம்பிக்கும் பொழுது  இங்கு  சுயம்புவாய்  எழுந்தருளியுள்ள  சனீஸ்வர  பகவானை  சனிக்கிழமை   எள் தீபம்  ஏற்றி  வழிபட  வேண்டும்.  சனி  பகவானின்  பிரம்ம  ஹத்தி தோசம்  நீங்கிய  ஸ்தலம்.
வழித் தடம்;
தேனி  மாவட்டம்  சின்னமனூர் அருகில் உள்ளது.
சேந்தமங்கலம்;
சனி  நடைபெறும்  காலங்களிலும்சனி  தெசை, சனி புத்தி  நடைபெறும்   காலங்களிலும்  இங்குள்ள  தத்தகிரி  முருகன்  கோவிலில்  உள்ள  சனீஸ்வரரை   சனிக்கிழமை  வழிபட  வேண்டும்.
வழித் தடம்; சேலம்,  நாமக்கல்  அருகில்  கொல்லிமலை  செல்லும்  வழியில்  12 கி.மீ.  தூரத்தில் உள்ளது.
திருவாதவூர்; சனி  பாதிப்புள்ள்வர்  இங்குள்ள  சனீஸ்வரனை  சனிக்கிழமை  வழிபட  வேண்டும்.  சனி, ஈஸ்வரனைப்  பிடிக்க முயன்று,  கால்  முடமாகி,  கால்  சரியாக   ஈஸ்வரனை  நோக்கி   தவமிருந்த  இடம்.
வழித் தடம்; மதுரை  மேலூர்  சாலையில் உள்ளது.
ஸ்ரீ  வை குண்டம்; மனிதனின்   மன  நிம்மதியை  நிர்ணயிப்பவர்  சனி  பகவான்.  அவரவர்  செய்யும்   வினையைப்  பொறுத்து  நல்லதையும்  கெட்டதையும்  தருவார்.  சனிபகவானின்   அம்சத்துடன்  சிவ பெருமான்  இத்தலத்தில்  காட்சி  தருகிறார்.
 இத்தலத்தில்  சனி  திசையால்  பாதிக்கப்பட்டுள்ளவர்கள்   பரிகாரம்  செய்தால்  தடைபட்ட  திருமணங்கள்  நடக்கும்,  இழந்த  சொத்துக்களை  மீண்டும்  பெறலாம்.
திருநள்ளாறு  சனீஸ்வரன்  திருக்கோவிலுக்கு  ஈடானது  இக்கோவில்
வழித் தடம்; திரு நெல்வேலியிலிருந்து  திருச்செந்தூர்  செல்லும்  சாலையில்  1 கி.மீ.  தூரத்தில்   அமைந்துள்ளது.
திருநாரையூர்;
சனீஸ்வரர்  தனது  இரு  மனைவிகள்  மந்தா  தேவி.  ஜேஷ்டா  தேவி  ஆகியோருடன்  இவ்வாலயத்தில்  அருள்   பாலிக்கிறார்.  மூலவருக்கு   இல்லாத   கொடி மரம்  இங்கே  சனீஸ்வரருக்கு  உண்டு.  பலிபீடமும்,   காகவாகனமும்  கொண்ட்து  சனீஸ்வரரின்  தனிச்சிறப்பு.
தம்பதி  சமேதராய்  மட்டுமல்ல,  இவ்வாலயத்தில்  சனீஸ்வரர்  தனது   இரு  மகன்களுடன்  [குளிகன்,  மாந்தி]  குடும்ப   சமேதராய்  அருள்  புரிகிறார்.
வழித் தடம்; கும்பகோணத்துக்கு  அருகே  நாச்சியார்  கோவிலுக்கு   பக்கத்தில்  திருநாரையூர் உள்ளது.

8. ராகு 
திருநாகேஸ்வரம்;
ராகுவினால்  ஏற்படும்  அனைத்து   தோசங்களினால்   திருமணத்தடை,   புத்ர தோசம்,  மாங்கல்ய  தோசம்  ஏற்படும்..   இங்கு  வெள்ளிக்கிழமை   காலை  10.30 மணி  முதல்   12 மணி,  ஞாயிறு   மாலை  4.30  மணி முதல்  6 மணி  வரை   ராகுவிற்கு   பாலாபிசேகம்,  அர்ச்சனை  செய்து  வழிபட  நாக  தோசம்  நீங்கும்.
வழித் தடம்;கும்பகோணத்திலிருந்து  6 கி.மீ தூரத்தில் உள்ளது.
ஸ்ரீ பெரும் புதூர்;
ஆதிசேஷன்  அவதாரமான  ஸ்ரீ மத் ராமானுஜர்  எழுந்தருளியுள்ள  இத்தலம்  சென்று   நெய்  தீபம்  ஏற்றி,   ஸ்ரீ மத்  ராமானுஜரையும்,  ஸ்ரீ  ஆதி  கேசவப்  பெருமாள்  ஸ்ரீ  யதிராஜ  நாதவல்லித்  தாயாரையும்  திருவாதிரை  நட்சத்திரம்  வரும்  நாளில்  வழிபட   நாக  தோசம்  நீங்கும்.  கால  சர்ப்ப   தோஷம்  பரிகார  தோசம்.
வழித் தடம்; செங்கல்பட்டுக்கு  அருகில் உள்ளது.
கதிராமங்கலம்;
இங்குள்ள வன துர்க்கை  முன் பக்கம் பார்ப்பதற்கு  பெண்  உருவமாகவும் பின்பக்கம்  பார்ப்பதற்கு  நாகம்  படம்  எடுத்த்து  போன்றும்  தோன்றும்.  கம்பர்  வழிபட்ட  ஸ்தலம்.  ராகு,  கேது  தோசம்,  கால  சர்ப்ப  தோசம்  உள்ளவர்  துர்க்கைக்கு  அபிசேகம்  செய்து  வழிபட  கிரக  தோசம்  நீங்கும்.  இத்துர்க்கை  ல்லித   சகஸ்ர  நாமத்தில்  வரும்  வித்யா   வன  துர்க்கையாகும்.
வழித் தடம்; கும்பகோணம்- மயிலாடுதுறை  சாலையில்  குத்தாலத்திலிருந்து  3 கி.மீ.  தூரம்

9.கேது;
திருக்காளத்தி;
பஞ்ச  லிங்கங்களில்  வாயு  லிங்கம்  உள்ள  இடம்.  கண்ணப்பனுக்கு  காட்சி   தந்த   ஸ்தலம்.  இங்குள்ள   காளத்தீஸ்வரருக்கு  ருத்ரா பிசேகம்  செய்து  அர்ச்சனை  செய்ய  கேதுவினால்  ஏற்படும்  தோசம்  நீங்கும்.  கால  சர்ப்ப தோச  பரிகார  ஸ்தலம்.
வழித் தடம்; திருப்பதிக்கும்  சென்னைக்கும்  நடுவில்  உள்ளது.
கீழ்ப்பெரும் பள்ளம்;
இங்குள்ள  நாகநாத சாமி   கோவிலில்  தனி   சன்னதியில் உள்ள  கேதுவை  வழிபட   கேதுவினால்  ஏற்படும்  தோசம்  நீங்கும்.
வழித் தடம்;மயிலாடுதுறை- பூம்புகார்  சாலையில்   பூம்புகாரிலிருந்து  3 கி.மீ.  தூரத்திலுள்ளது.

அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!