மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label புதிர் போட்டிகள். Show all posts
Showing posts with label புதிர் போட்டிகள். Show all posts

2.12.17

Astrology: ஜோதிடம்: 1-12-2017ம் தேதி புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 1-12-2017ம் தேதி புதிருக்கான விடை!

அந்த ஜாதகத்திற்கு உரியவர் பிரபல திரைப்பட நடிகர்
மோகன்லால் அவர்கள்.

பிறந்ததேதி 21-5-2017 காலை 4:30 பிறந்த இடம் பத்தனம்திட்டா, கேரளா

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். சுமார் 19 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள். அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்த வெள்ளிக்கிழமை (8-12-2017) சந்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger sundinesh1 said...
Mohan Lal
Friday, December 01, 2017 5:44:00 AM 
-------------------------------------------------------
2
Blogger gowri radhakrishnan said...
நடிகர் மோகன்லால், மே மாதம் 21ம் தேதி, 1960ம் வருடம், காலை 4.30 மணியளவில் பிறந்தவர்
Friday, December 01, 2017 5:55:00 AM
-------------------------------------------------------
3
Blogger Maheswari Bala said...
Mohanlal may 21,1960
Friday, December 01, 2017 8:08:00 AM 
-------------------------------------------------------
4
Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir,the celebrity was famous Malayalam film actor Mohanlal,born on 21/05/1960 time 4.30am, place yelanthoor,Mesha lagna,meena rasi,uttharatadhi nakshtra,Gajakesari yoga,nibuna yoga, Chandra mangalya yoga,and dharmakarmathipathy yoga present in horoscope-
Friday, December 01, 2017 8:14:00 AM 
--------------------------------------------------------
5
Blogger amuthavel murugesan said...
Mohanlal Viswanathan Nair born 21 May 1960
M.Santhi
Friday, December 01, 2017 10:39:00 AM 
-----------------------------------------------------
6
Blogger Ananthakrishnan K R said...
வணக்கம் ஐய்யா,
ஜாதகர்: மோகன்லால், மலயாள நடிகர்
பிறந்த நாள்: 21/05.1960 @ 4.30 மணி
பிறந்த ஊர்: பத்தனம்த்திட்டா, கேரளா
நன்றியுடன்,
க இரா அனந்தகிருஷ்ணன்
சென்னை
Friday, December 01, 2017 10:57:00 AM
---------------------------------------------------
7
Blogger Palani Shanmugam said...
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
இந்த வார புதிரில் உள்ள ஜாதகம், பிரபல மலையாள நடிகர் திரு. மோகன்லால் அவர்களின் ஜாதகம்.
எஸ். பழனிச்சாமி
Friday, December 01, 2017 11:21:00 AM
-----------------------------------------------------
8
Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா வணக்கங்கள்!
ஜாதகம் திரு. மோகன்லால் மலையாள திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர்.
21-05-1960 அன்று காலை 4-07 மணிக்கு எலந்தூர் என்ற ஊரில் பிறந்தவர்.
அன்புடன்,
-பொன்னுசாமி.
Friday, December 01, 2017 12:08:00 PM
-------------------------------------------------------
9
Blogger umajana said...
ஐயா,
இந்த ஜாதகத்துக்கு உரியவர் மலையாள நடிகர் திரு. மோகன்லால் அவர்கள். அவர் பிறந்தது 21/06/1960 காலை சுமார் 5:00 மணி அளவில்.
Friday, December 01, 2017 4:29:00 PM
------------------------------------------------------
10
Blogger csubramoniam said...
ஐயா,
ஜாதகாதிற்கு உரிய பிரபலம்
மலையாள சூப்பர்ஸ்டார் மோகன் லால் அவர்கள்
பிறந்தநாள் :21 மே 1960
நேரம் :காலை:4 :30
இடம்:பத்தனம்திட்டா ,கேரளா
நன்றி
Friday, December 01, 2017 5:33:00 PM
-----------------------------------------------------
11
Blogger Thanga Mouly said...
லக்கின சுக்கிரன், கேந்திர குரு, சூரியன் நிலைகளை பார்த்ததும் இது ஒரு சினிமா பிரபலம் என்று புரிந்தது. கண்டு பிடிப்பதில் சிரமம் இருக்கவில்லை. மோகன்லால் அவர்கள் மிகப்... பிரபலம்.
Friday, December 01, 2017 5:45:00 PM
-----------------------------------------------------
12
Blogger guru said...
DOB:21-May-1960
Person:Actor Mohanlal
Friday, December 01, 2017 5:46:00 PM 
----------------------------------------------------
13
Blogger G.Ramesh said...
Quiz. 6 : ஜோதிடப் புதிர் 6 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!"
Name: Mohanlal ( famous South Indian actor)
Date of Birth: May 21, 1960
Time of Birth: 04:30:00 AM
Place of Birth: Pathanamthitta, Kerala
Longitude: 76 E 40
Latitude: 9 N 19
Ramesh Ganapathy
Nigeria
Friday, December 01, 2017 7:05:00 PM 
----------------------------------------------------
14
Blogger Yogesh Thanigaivel said...
ஐயா வணக்கம்,
விடை - மோகன்லால் - திரைப்பட நடிகர்
தேதி - 21.05.1960 [ 4.30 to 4.32 AM if place of birth in chennai.]
நன்றி,
தணிகைவேல்.ம
Friday, December 01, 2017 7:20:00 PM
---------------------------------------------
15
Blogger bala said...
vanakkam iyya,
Cinema actor Mohanlal avargal :) 
https://en.wikipedia.org/wiki/Mohanlal
nandri,
Bala
Friday, December 01, 2017 7:40:00 PM 
--------------------------------------------------
16
Blogger adithan said...
வணக்கம் ஐயா,புதிர் விடை:மோகன்லால்,நடிகர்.பிறந்த தேதி 21/5/1960.இடம்:புத்தானம்திட்டா.நேரம்:4-30.நன்றி.
Friday, December 01, 2017 8:23:00 PM
-----------------------------------------------------
17
Blogger Shruthi Ramanath said...
Sir I think its the famous actor MOHANLAL....
Date of birth: 21-may-1960
Place of birth:pathanamithhitta
Time of birth:4.30 AM
Friday, December 01, 2017 8:40:00 PM
----------------------------------------------
18
Blogger kmr.krishnan said...
This is the horoscope of Mr Mohan Lal, Malayalam/Tamil film actor. Born on 21 May 1960 Birth time 4hrs 31Mins 30 secs. Birth place: ELANTHOOR,Pathinamthitta. Kerala.
Friday, December 01, 2017 10:15:00 PM 
-----------------------------------------------------
19
Friday, December 01, 2017 11:36:00 PM 
Blogger thozhar pandian said...
நடிகர் மோகன்லால்
Saturday, December 02, 2017 12:51:00 AM 
=======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1.12.17

Astrology: Quiz. 6 : ஜோதிடப் புதிர் 6 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. 6 : ஜோதிடப் புதிர் 6 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும்
இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச்
சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை
வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்?

எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!


க்ளூ வேண்டுமா? தென் இந்திய பிரபலம். எந்தத் துறையில் என்று சொன்னால் கோளாறாகிவிடும். ஆகவே சொல்லவில்லை!

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.11.17

Astrology: ஜோதிடம்: 24-11-2017ம் தேதி புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 24-11-2017ம் தேதி புதிருக்கான விடை!

அந்த ஜாதகத்திற்கு உரியவர் பிரபல தொழிலதிபர் திரு முகேஷ் அம்பானி அவர்கள்,
பிறந்த நாள்: 19 ஏப்ரல் 1957 @ 19.53 மணி
பிறந்த ஊர்: அடென் பெரெக் - ஏமன் நாடு

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். சுமார் 19 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள். அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்த வெள்ளிக்கிழமை (1-12-2017) சந்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir the celebrity was famous business person Thiru Mukesh Ambani born on 19/04/1957 place Aden-Yemen Time 7.45pm.
Friday, November 24, 2017 5:13:00 AM 
-------------------------------------------------
2
Blogger Thanga Mouly said...
திரு. முகேஷ் அம்பானி!! பிறந்த திகதி: 19/04/1957
Friday, November 24, 2017 5:51:00 AM
------------------------------------------------
3
Blogger sundinesh1 said...
Mukesh Ambani
Friday, November 24, 2017 7:37:00 AM 
--------------------------------------------------
4
Blogger Maheswari Bala said...
mukesh ambani april 19,1957
Friday, November 24, 2017 8:17:00 AM 
---------------------------------------------------
5
Blogger Ananthakrishnan K R said...
வணக்கம்,
ஜோதிடப்புதிர் 5: ஜாதகர் முகேஷ் அம்பானி
பிறந்த நாள்: 19 ஏப்ரல் 1957 @ 19.53 மணி
பிறந்த ஊர்: அடென் பெரெக்
நன்றியுடன்,
க இரா அனந்தகிருஷ்ணன்
சென்னை
Friday, November 24, 2017 8:48:00 AM
-------------------------------------------------
6
Blogger kmr.krishnan said...
This is Sri.Mukesh Ambani's horoscope. Date of birth 19 April 1957 Time of birth 10.10PM. Yemen born as per internet information.
Friday, November 24, 2017 9:05:00 AM 
----------------------------------------------------
7
Blogger csubramoniam said...
மதிப்பிற்குரிய ஐயா,
ஜாதகர் இந்தியாவின் பணக்காரர்களில் முதல்வரான முகேஷ் அம்பானி அவர்கள்
(CHAIRMAN OF RELIANCE INDUSTRIES)
பிறந்த தேதி :19 ஏப்ரல் 1957
பிறந்த நேரம் இரவு 7 :53
பிறந்த இடம் :ஏடன் பெர்க் ,ஏமன்
நன்றி
Friday, November 24, 2017 10:08:00 AM
-----------------------------------------------------
8
Blogger amuthavel murugesan said...
Mukesh Dhirubhai Ambani
19 April 1957
M.Santhi
Friday, November 24, 2017 10:37:00 AM 
---------------------------------------------------
9
Blogger SELVARAJ said...
Answer: Mukesh Ambani.
Is the Given data correct?
Friday, November 24, 2017 11:28:00 AM 
-------------------------------------------------
10
Blogger angr said...
ரிலையன்ஸ் அதிபர் திரு முகேஸ் அம்பானி அவர்கள்
Friday, November 24, 2017 12:04:00 PM
---------------------------------------------------
-----
Blogger Sinavar said...
இப்படியான புதிருக்கு எப்படி விடை காண்பதென தயவுசெய்து விளக்க முடியுமா ?
Friday, November 24, 2017 1:05:00 PM

புதிருக்கு மேல் பகுதியில் கொடுத்துள்ளேனே சாமி!
மற்றும் விரிவான முறையில் முன்பு பதிவில் எழுதியுள்ளேன். த்ஹெடிப் பிடித்துப் படிக்க வேண்டுகிறேன்
------------------------------------------------
11
Blogger Shruthi Ramanath said...
Sir I think its the MUKESH AMBANI
Date of birth: 19- april-1957
Time of birth: 7.53 PM
Place of birth: Aden berek
Friday, November 24, 2017 3:06:00 PM 
---------------------------------------------------
12
Blogger Palani Shanmugam said...
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
இந்தப் புதிரில் உள்ள ஜாதகத்துக்குச் சொந்தக்காரர் பிரபல தொழில் அதிபர் திரு. முகேஷ் திருபாய் அம்பானி அவர்கள்.
எஸ். பழனிச்சாமி
Friday, November 24, 2017 3:59:00 PM
------------------------------------------------
13
Blogger கதிரவன் said...
முகேஷ் அம்பானி
Friday, November 24, 2017 4:53:00 PM
------------------------------------------------------
14
Blogger guru said...
DOB:19-Apr-1957
Person: Mukesh Ambani
Friday, November 24, 2017 4:59:00 PM 
----------------------------------------------------
15
Blogger bala said...
vanakkam Iyya,
Mukesh ambani avargal :) 
nandri,
Bala
Friday, November 24, 2017 7:52:00 PM 
---------------------------------------------------
16
Blogger GOWDA PONNUSAMY said...
Ayya vanakkangal!
Given horoscope belongs to Shri.MUKESH AMBANI. DOB 19 April 1957.
Regards
Ponnusamy
Friday, November 24, 2017 9:13:00 PM 
----------------------------------------------------
17
Blogger umajana said...
ஐயா,
இந்த ஜாதகத்துக்கு உரியவர் திரு. முகேஷ் அம்பானி அவர்கள். அவர் பிறந்த தேதி 19/04/1957 இரவு 8:30 மணியளவில் தோராயமாக.
Friday, November 24, 2017 9:35:00 PM
----------------------------------------------------
18
Blogger சர்மா said...
வணக்கம் ஐயா தாமதமாக வகுப்பறை யில் வந்ததற்கு மன்னிக்கவும். புதிருக்கான விடை. திரு. முகேஷ் அம்பானி 19.04.1957 மும்பை 19.53hrs
Friday, November 24, 2017 11:49:00 PM /////
-----------------------------------------------------------
19
Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning... My answer for our Quiz no.5:
The native of the horosocope is Shri Mukesh Ambani (Chairperson of Reliance Group)
Born on April 19, 1957 time: 17:53 Place: Aden Berek (Yemen Country)
Have a great day.
With kind regards,
Ravi-avn
Saturday, November 25, 2017 1:15:00 AM 
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.11.17

Astrology: Quiz. 5 : ஜோதிடப் புதிர் 5 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. 5 : ஜோதிடப் புதிர் 5 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்ல லாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!


க்ளூ வேண்டுமா? அகில இந்திய பிரபலம். எந்தத் துறையில் என்று சொன்னால் கோளாறாகிவிடும். ஆகவே சொல்லவில்லை!

சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.11.17

Astrology: ஜோதிடம்: 17-11-2017 புதிருக்கான விடை!


Astrology: ஜோதிடம்: 17-11-2017 புதிருக்கான விடை!

அந்த ஜாதகத்திற்கு உரியவர் நம் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் திருவாளர் கபில் தேவ் அவர்கள். அவருடைய தலைமையினாலும், சிறந்த ஆட்டத்தினாலும்தான் நாம் 1983ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று வாகை சூடினோம்
அவர் பிறந்த தேதி : 6-1-1959 காலை 2:30 மணி சண்டிகார் நகரம்.

நான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். சுமார் 15 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள். அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்! அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

மீண்டும் ஒரு புதிருடன் அடுத்த வெள்ளிக்கிழமை (24-11-2017) சந்திப்போம்!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
1
Blogger sundinesh1 said...
Kapil dev
Friday, November 17, 2017 5:55:00 AM 
--------------------------------------------------------------------
2
Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
Good morning sir,the celebrity was famous farmer Indian cricket capten Kapil Dev was born on 6-01-1959 time 2.30am Place Chandigarh Punjab.thanks Sir vazhga valamudan
Friday, November 17, 2017 7:06:00 AM 
---------------------------------------------------------
Blogger kmr.krishnan said...
Classroom friend's!! PLease read vathiyar's post dt.15 Nov2017
Friday, November 17, 2017 9:22:00 AM 

ஆமாம். பாருங்கள் இதுவரை உதவிக்கரம் நீட்டியவர்களின் பெயர்கள் தெரியவரும்!!!
-------------------------------------------------------
3
Blogger amuthavel murugesan said...
Name : Kapil Dev Ram lal Nikhanj
Born : 6 January 1959 
M.Santhi
Friday, November 17, 2017 9:58:00 AM 
--------------------------------------------------------
4
Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
ஜாதகர் திருவாளர் கபில் தேவ் அவர்கள்.
ஜனவரி 06,1959 அன்று காலை 03-05 மணிக்கு பஞ்ஜாப் மாநிலம் சண்டிகரில் பிற்ந்தவர்.
இந்திய கிரிக்கெட் வீரர். இவரது தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி 1983 ல் உலக கோப்பையை வென்று சாம்பியன் ஆனது!
அப்பாடா!.... சரியாக சொல்லியுள்ளேனா?
அன்புடன்,
-பொன்னுசாமி.
Friday, November 17, 2017 10:36:00 AM
-----------------------------------------------------------
5
Blogger Ananthakrishnan K R said...
வணக்கம் ஐய்யா
ஜோதிடப்புதிர் - 4
ஜாதகர் கபில் தேவ்
பிறந்த நாள் ஜனவரி 6 ஆம் தேதி 1959 ஆம் வருடம் 2 மணி 29 நிமிடம்
பிறந்த ஊர் - சண்டிகர், பஞ்சாப்
நன்றியுடன்,
க இரா அனந்தகிருஷ்ணன்
சென்னை
Friday, November 17, 2017 10:41:00 AM
------------------------------------------------------
6
Blogger Palani Shanmugam said...
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
இந்த ஜாதகத்துக்கு உரியவர் ஜனவரி 6, 1959ல் பிறந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஆல்ரவுண்டர் கபில்தேவ் அவர்கள்.
எஸ். பழனிச்சாமி
Friday, November 17, 2017 12:21:00 PM
-------------------------------------------------------
7
Blogger csubramoniam said...
ஐயா,
ஜொதிட புதிர்க்கான விடை
ஜாதகத்திற்கு சொந்தக்காரர் : பிரபல கிரிக்கெட் வீரர் கபில்தேவ் அவர்கள்
பிறந்த தேதி :6 /ஜனவரி 1959
பிறந்த நேரம் : காலை 2 :30
இடம் :சண்டிகர்
நன்றி
Friday, November 17, 2017 12:31:00 PM
----------------------------------------------------
8
Blogger Shruthi Ramanath said...
Sir I think its the great cricketer KAPIL DEV... 
Date of birth: 6-january-1959
Time of birth: 2.30 AM
Place of birth: Chandigarh
Friday, November 17, 2017 1:44:00 PM 
--------------------------------------------------
9
Blogger bala said...
vanakkam iyya,
Jathagar kapil dev avargal. Indian cricketer kapil dev.
6th Jan 1959 - 2 hrs 20 mins at chandigarh, india
https://en.wikipedia.org/wiki/Kapil_Dev
nandri,
Bala
Friday, November 17, 2017 2:16:00 PM 
--------------------------------------------------
10
Blogger kmr.krishnan said...
இது கிரிக்கெட் கேப்டன் உயர்திரு கபில்தேவின் ஜாத‌கம்.
ஜாதகர் பிறந்ததேதி: 6 ஜனவரி 1959
பிறந்த நேரம்: அதிகாலை 2 மணி 34 நிமிடங்கள்.
பிறந்த ஊர் : சண்டிகர்=பஞ்சாப்
ருச‌க யோகம், கஜகேசரி யோகம், சதாசஞ்சார யோகம் உடையவர்.
செவ்வாய் ஆட்சியில் இருப்பதால் தலைமைப் பண்பு உடையவர்.
Friday, November 17, 2017 4:03:00 PM
---------------------------------------------------
11
Blogger guru said...
DOB: Jan-06-1959
Two popular(!!) people born on that day .
1. Kapil dev - cricketer
2.Beant Singh - who involved in Indira Gandhi Death
Based on the clue, It should be Beant Singh.
Friday, November 17, 2017 4:24:00 PM 
----------------------------------------------------
12
Blogger Maheswari Bala said...
Kapil dev cricketer
Friday, November 17, 2017 8:10:00 PM 
-----------------------------------------------------
13
Blogger Yogesh Thanigaivel said...
ஐயா வணக்கம்,
ஜாதகர் - கபில் தேவ் - கிரிக்கெட் வீரர் (KAPIL DEV - CRICKETER)
பிறந்த நாள் - 6.1.1959 - 2.30 am - Chandigarh
நன்றி
தணிகைவேல்.
Friday, November 17, 2017 11:11:00 PM
-------------------------------------------------
14
Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning... My answer for our Quiz No.4:
The Native of the horosocope is Shri Kapil Dev, Former Indian Cricketer.
Born on Jan 6, 1959 at 2:30am Chandigarh
With regards,
Ravi-avn
Saturday, November 18, 2017 1:29:00 AM 
-------------------------------------------
15
 Mr. Kapil Dev (Born:6th January 1959 at Chandigarh) – Former Captain of Indian Cricket Team.

DOB: 06.01.1956
TOB: 00.50 AM ( around this time)
POB: Chandigarh
Regards
Ramesh Ganapathy

Nigeria
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.11.17

Astrology: Quiz. 2 : ஜோதிடப் புதிர் 2 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!


Astrology: Quiz. 2 : ஜோதிடப் புதிர் 2 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்ல லாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

சென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!

க்ளூ வேண்டுமா? பிரபலமான பெண்மணியின் ஜாதகம்!



சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.10.17

Astrology: ஜோதிடப் புதிர்: ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

Astrology: ஜோதிடப் புதிர்: ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும்
இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச்
சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை
வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்)
சொல்ல லாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா
கஷ்டம்?

எங்கே முயற்சி செய்யுங்கள்

4 ஆண்டுகளுக்கு முன்பு இதே போல புதிர் போட்டியை நடத்தியபோது, நிறைய அன்பர்கள் ஆர்வமுடன் கலந்து
கொண்டு சரியான விடையைச் சொல்லி என்னை அசத்திவிட்டார்கள். தொடர்ந்து நடத்தும்படி செய்தார்கள்.
இப்போது இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு
இன்றுதான் ஒரு புதிரை வலையில் ஏற்றியுள்ளேன். எத்தனை பேர்கள் பங்கு கொள்கிறீர்கள் என்று பார்க்கும் ஆவலில்
உள்ளேன்!!!!

தேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே!

அத்துடன் இன்னொரு தளமும் இருக்கிறது உங்களுக்கு உதவ:
http://www.bornglorious.com/
Famous People's Birthdays

க்ளூ வேண்டுமா? ஜாதகர் அகில இந்திய அளவில் மிகவும் பிரபலமானவர்!!!!



சரியான விடை நாளை வெளியாகும்!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.8.16

Quiz: புதிர் எண்.115: பதில்: ஒரு தலைவன் இருக்கிறான். மயங்காதே!

Quiz: புதிர் எண்.115: பதில்: ஒரு தலைவன் இருக்கிறான். மயங்காதே!

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், இறைவன் இருக்கிறார். அவர் உதவுவார் என்ற நம்பிக்கையோடு இருந்தால், தலைவலி இல்லை அல்லவா?

நேற்று ஒரு ஜாதகத்தைக் கொடுத்து, அலசச் சொல்லியிருந்தேன்!

1. நிரந்தர வேலை இல்லை. கையில் போதிய அளவு வருமானம் இல்லை!.
ஜாதகத்தை அலசி என்ன காரணம் என்பதையும் - தீர்வு உண்டா இல்லையா என்பதையும் எழுதுங்கள் என்று சொல்லியிருந்தேன்
-------------------------
இதே ஜாதகத்தை 27-3-2016 (quiz: புதிர் எண்.106) அன்று நாம் அலசிவிட்டதாக நமது வகுப்பறை மாணவர் திலகம் ஸ்ரீனிவாஸ ராஜுலு தெரிவித்திருந்தார். அவருடைய நினைவாற்றலுக்குப் பாராட்டுக்கள்.

சரி விஷயத்திற்கு வருகிறேன்!

படித்து முடித்தவுடன் வேலை கிடைத்தால் நல்லது. அதிலும் ஸ்திரமான வேலை கிடைத்தால் மிகவும் நல்லது.எல்லோருக்கும் அப்படிக்கிடைத்துவிடுகிறதா என்ன? ஸ்திரமான வேலை கிடைக்காமல் எத்தனை பேர் அவதிப் படுகிறார்கள்?

அதற்குக் காரணம் என்ன? நிவர்த்தி என்ன? ஜாதகக் கோளாறுகள்தான் காரணம்!! ஜாதகத்தில் நிவர்த்தி இருந்தால் நிவர்த்தியாகிவிடும்!
-----------------------------------------------------------------------------------


ஜாதகத்தைப் பாருங்கள்.
கும்ப லக்கின ஜாதகம். கும்பலக்கினத்திற்கு லக்கினாதிபதியும், 12ஆம் அதிபதியும் ஒருவரே. அதாவது சனீஷ்வரன். இந்த லக்கினத்திற்கு மட்டும்
அப்படியொரு அவஸ்தையான அமைப்பு. இந்த லக்கினக்காரர்களுக்கு லக்கினாதிபதி சனீஷ்வரன் கேந்திரம் அல்லது திரிகோணங்களில்
அமர்ந்திருந்தால் வெற்றிகரமான வாழ்க்கை. இல்லையென்றால் தோல்விகள் நிறைந்த வாழ்க்கை. கும்ப லக்கினத்திற்கு லக்கினநாதன் சனீஷ்வரன் 3, 6, 8  &12 ஆம் இடங்களில் மறையக்கூடாது!

ஜாதத்தில் சனி ஐந்தாம் வீட்டில் அமர்ந்துள்ளது. அது நட்பு வீடும் கூட. அதானால் ஜாதகனின் வாழ்க்கை வெற்றிகரமான வாழ்க்கைதான்.

லக்கினநாதன் திரிகோண வீட்டில் (5ல்) அமர்ந்திருப்பது. அதுவே ஜாதகனின் ஜாதகத்தில் முக்கியமான அமைப்பாகும். அத்துடன் சனீஷ்வரன் பரிவர்த்தனை யோகத்திலும் உள்ளார். இந்தக் கருத்தை நமது மூத்த மாணவர்களில் ஒருவரான யு.எஸ்.ஏ சந்திரசேகரன் சூரியநாராயணா அவர்களும் சுட்டிக் காட்டியுள்ளார் (பதில் எண்.12ஐ பார்க்கவும்) அவருக்கு ஒரு விஷேசமான பாராட்டு.

ஜாதகன் பொறியியல் படித்தவன்.
ஆனால் துவக்கத்தில் ஜாதகனுக்கு நிரந்தரமான வேலை கிடைக்கவில்லை. 10 ஆண்டுகளில் 9 வேலைகளுக்கு  மாறியுள்ளான்.
ஏன் அப்படி?
பத்தாம் வீட்டில் ஆறாம் அதிபதி சந்திரன் அமர்ந்துள்ளான். அது விரும்பத்தக்கதல்ல! அத்துடன் 3ல் உள்ள  செவ்வாயின் பார்வையும் (பத்தாம்
வீட்டின்மேல் உள்ளது) உள்ளது, அத்துடன் கேது திசையும் நுழைந்து ஜாதகரைப் படுத்தி விட்டது.
28 வயதிற்குப் பிறகு யோககாரகன் சுக்கிரனின் திசையில் ஜாதகனுக்கு ஸ்திரமான நல்ல வேலை கிடைத்தது.
சுக்கிரன் ஜாதகத்தில் 12ல் இருந்தாலும் நவாம்சத்தில் அதே மகரத்தில் அமர்ந்து வர்கோத்தமம் பெற்றிருப்பதால் அவர் சரி செய்து ஜாதகனின்
வாழ்க்கையை சீரமைத்தார். அத்துடன் அவர் பத்தாம் வீட்டின் அதிபதி அவர் 12ல் மறைந்தாலும் தன்னுடைய வர்கோத்தம பலத்தால் சரி செய்தார்.

விளக்கம் போதுமா?

கலந்துகொண்டவர்களில் 8 பேர்கள் பாதிக் கிணறைத் தாண்டியுள்ளார்கள். முழுக்கிணறையும் தாண்டியவர்கள் 5 பேர்கள்தான்! அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். 13 பேர்களின் பெயர்களையும் உங்களின் பார்வைக்காகக் கீழே கொடுத்துள்ளேன்.

எந்து உடல்நிலை காரணமாக பதிவை உரிய நேரத்தில் பதிவிட முடியவில்லை. வருந்துகிறேன். அனைவரும் பொறுத்துக் கொள்ளுங்கள்.

1. Blogger Ramanathan said... பாதி விடை சரி. தீர்வை சரியாகச் சொல்ல வில்லை!
2.Blogger kmr.krishnan said... இரண்டையும் சரியாக எழுதியுள்ளார். பாராட்டுக்கள்
3.Blogger amuthavel murugesan said...பாதி விடை சரி. தீர்வை சரியாகச் சொல்ல வில்லை!
4.Blogger Sathish Kumar said...இரண்டையும் சரியாக எழுதியுள்ளார். பாராட்டுக்கள்
5.க இரா அனந்தகிருஷ்ணன் - சென்னை. இரண்டையும் சரியாக எழுதியுள்ளார். பாராட்டுக்கள்
6.Blogger venkatesh r said...பாதி விடை சரி. தீர்வை சரியாகச் சொல்ல வில்லை!
7.Blogger mohan said...பாதி விடை சரி. தீர்வை சரியாகச் சொல்ல வில்லை!
8.Blogger adithan said...பாதி விடை சரி. தீர்வை சரியாகச் சொல்ல வில்லை!
9.Blogger Gajapathi Sha said...இரண்டையும் சரியாக எழுதியுள்ளார். பாராட்டுக்கள்
10.Blogger Chandrasekaran Suryanarayana said...பாதி விடை சரி. தீர்வை சரியாகச் சொல்ல வில்லை!
11.Blogger seenivasan said...பாதி விடை சரி. தீர்வை சரியாகச் சொல்ல வில்லை!
12.Blogger Ravichandran said...இரண்டையும் சரியாக எழுதியுள்ளார். பாராட்டுக்கள்
13.Blogger Kondal Vannan said...பாதி விடை சரி. தீர்வை சரியாகச் சொல்ல வில்லை!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

22.8.16

Astrology Quiz: ஜோதிடப் புதிர் எண்.115: என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!!!!


Astrology Quiz: ஜோதிடப் புதிர் எண்.115: என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!!!!

22-8-2016

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே! என்று எல்லோராலும் இருக்க முடியுமா? அதுவும் ஒரு நிரந்தர வேலை இல்லாத போது. கையில் போதிய அளவு வருமானம் இல்லாதபோது. 99% நிம்மதியாக இருக்கமுடியாது.  ஒரு ஜாதகருக்கு நிரந்தமான நல்ல வேலை கிடைக்கவில்லை. வருமானமும் போதவில்லை. என்ன செய்வார் பாவம்! கீழே ஒரு ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன்.


படத்தின் மீது கர்சரை வைத்து அழுத்தினால் - அதாவது க்ளிக்கினால் படம் முழுமையாகத் தெரியும்!

ஜாதகத்தைப் பாருங்கள்:

ஜாதகத்தை அலசி என்ன காரணம் என்பதையும் - தீர்வு உண்டா இல்லையா என்பதையும் எழுதுங்கள்

சரியான விடையை நாளை 24-8-2016 புதன்கிழமை மாலை 6 மணிக்குள் எழுதுங்கள். உங்களுக்குப் போதிய அவகாசம் கொடுத்துள்ளேன். அதை மனதில் கொள்ளுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.8.16

Quiz: புதிர் எண்.114: பதில்: மலர்கள் மலர்ந்தன; ஆனால் மனம் லயிக்கவில்லை!



Quiz: புதிர் எண்.114: பதில்: மலர்கள் மலர்ந்தன; ஆனால் மனம் லயிக்கவில்லை!

13-8-2016

நேற்று ஒரு ஜாதகத்தைக் கொடுத்து, ஒரு அம்மணியின் திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கையை அலசிப் பதில் எழுதும்படி கேட்டுக்கொண்டிருந்தேன்.

பதில்:

அம்மணிக்குத் திருமணம் நடைபெறவில்லை. திருமணம் நடைபெறாதபோது குடும்ப வாழ்க்கை ஏது? ஆகவே குடும்பவாழ்க்கையும் இல்லை. புதனும், சுக்கிரனும் சேர்ந்துள்ளதால் அம்மணி அதிபுத்திசாலியாக இருந்தார். கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக வேலை செய்து கை நிறைய சம்பளம் வாங்கித் தன் பெற்றோர்களுடன் அன்பாக வாழ்ந்தார். தன் வரையில் எப்போதும் மகிழ்ச்சியாகவே இருந்தார்.

இதுதான் சரியான விடை!

காரணம் என்ன? வாருங்கள் ஜாதகத்தைப் பார்ப்போம்!
--------------------------------------------------


அம்மணி கும்ப லக்கின ஜாதகக்காரர். கும்ப லக்கினம் நல்ல லக்கினம். அதுவும் பெண்களுக்கு உயரிய லக்கினம். கும்ப லக்கினப் பெண் என்றால் கண்னை மூடிக்கொண்டு திருமணம் செய்யலாம் என்று நான் அடிக்கடி கூறுவேன். ஆனாலும் அம்மணிக்குத் திருமணம் கூடி வரவில்லை.

லக்கினாதிபதி சனி 11ல். ஆனாலும் செவ்வாயின் பார்வையில் மற்றும் மாந்தியின் கூட்டுடன். அது நல்ல அமைப்பு அல்ல!

ஏழாம் வீட்டில் அதன் அதிபதி சூரியனுடன் ராகு. லக்கினத்தில் கேது. ஆக மொத்தம் லக்கினமும் கெட்டுள்ளது. ஏழாம் வீடும் கெட்டுள்ளது,

பெண்களுக்கு பாக்கியஸ்தானமான ஒன்பதாம் வீடு முக்கியம். அம்மணியின் ஜாதகத்தில் ஒன்பதாம் வீட்டுக்காரன் அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில் போய் உட்கார்ந்து கொண்டுவிட்டான். அத்துடன் எட்டாம் அதிபதி புதனுடன் கூட்டணியில் உள்ளான். சுகமில்லை. பாக்கிய ஸ்தானமும் கெட்டுள்ளது. ஆகவே அம்மணிக்குத் திருமணம் கூடிவரவில்லை.

சந்திரன் அமர்ந்திருக்கும் இடத்தை வைத்துப்பார்த்தால், 7ல் சனி அத்துடன் சனியின் மீது செவ்வாயின் நேரடிப்பார்வை. கடுமையான புனர்பூ தோஷம். ஆகவே திருமணம் நடைபெற்றிருந்தால் கூட கணவனைப் பிரிந்து, விவாகத்தை ரத்து செய்து வாழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் அப்படிப்பட்ட சிரமங்களுக்கு ஜாதகியை ஆளாக்க விடாமல் மற்ற கிரகங்கள் காப்பாற்றியுள்ளன. குறிப்பாக 11ல் இருக்கும் லக்கினாதிபதி காப்பாற்றியுள்ளார்!

திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம் இது. ஆகவே அம்மணிக்கு கடைசிவரை திருமணம் நடைபெறவில்லை! திருமணம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதிதான். அது நடைபெறவில்லை என்பதால் உயிரைவிட முடியுமா என்ன? மற்ற சந்தோஷங்களுடன் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டியதுதான்.

விளக்கம் போதுமா?
------------------------
போட்டியில் 19 பேர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். சரியான விடையை நெற்றியில் அடித்தாற்போல இருவர் மட்டுமே எழுதியுள்ளார்கள். ஒருவர் திரு. சந்திரசேகரன் சூர்யநாராயணா, இன்னொருவர் திரு. சதீஷ்குமார். இருவருக்கும் எனது மனம் உவந்த பாராட்டுக்கள். அவர்களின் பதிலை/ கணிப்பைக் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------
******/////Blogger Chandrasekaran Suryanarayana said...
திருமணம் மறுக்கப்பெற்ற ஜாதகம்
7ஆம் வீடு, 7ஆம் அதிபதி, பாக்கியாதிபதி ஆகிய மூன்றும் கெட்டிருந்தால் திருமணம் ஆவது மிகவும் கடினம்.It will be called as denial of marriage.
Friday, August 12, 2016 7:06:00 AM//////

--------------------------------------------------------
****//////////Blogger Sathish Kumar said...
ஜாதகர் பிறந்த தேதி : 13 – 09 – 1960
கும்ப லக்னம். லக்கினாதிபதி சனியுடன் மாந்தி
லக்கினாதிபதி சனி வக்கிரம். லக்கினத்தில் கேது. லக்னம் வர்கோத்தமம்
சனி பார்வையில் சந்திரன், புனர்பூ தோஷம்
சனி குரு சேர்க்கை, பிரம்மஹத்தி தோஷம்
பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஆறாம் அதிபதி சந்திரன். அத்துடன் சந்திரன் தேய்பிறைச் சந்திரன்.
பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி புதன் நவாம்சத்தில் நீச்சம்
பாக்கியஸ்தான அதிபதி சுக்கிரன் நீச்சம். மேலும் பாக்கியஸ்தான அதிபதி சுக்கிரன் தன் வீட்டிற்கு பன்னிரெண்டாம் வீட்டில் உள்ள கெட்ட அமைப்பு.
களத்திரகாரன் சுக்கிரன் எட்டாம் வீட்டில் மறைவு
ஏழில் சூரியன் களத்திர தோஷம்
ஏழாம் அதிபதி சூரியன் ஆட்சி பலத்துடன் இருந்தாலும் ராகுவின் பிடியில்
கேதுவின் பார்வையில் ஏழாம் வீடு
இரண்டாம் வீடு அதிபதி குரு ஆட்சி பலத்துடன் இருந்தாலும் சனி & மாந்தியின் பிடியில்
பாக்கிய ஸ்தான அதிபதி சுக்கிரன், ஏழாம் அதிபதி & ஏழாம் வீடு ஆகிய மூன்றும் கெட்டு இருப்பதால் இது திருமண தடை ஜாதகம்.
கன்னியில் உச்ச புதன் & நீச சுக்கிரன் இணைவு. நீசபங்க ராஜயோகம்.
குரு தனது ஒன்பதாம் பார்வையால் ஏழாம் வீட்டை பார்க்கின்றார். குரு பார்வையால் தாமத திருமணம் நடந்து இருந்தாலும் பிரிவை தந்து இருக்கும்.
லக்கினாதிபதி சனியுடன் தனக்காரன் குரு லாபஸ்தானத்தில் உள்ளதால் வருமானத்திற்கு குறைவில்லை.
Saturday, August 13, 2016 2:10:00 PM//////
-----------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.8.16

Astrology Quiz: ஜோதிடப் புதிர் எண்.114: உலகம் பிறந்தது உங்களுக்காக!!!!


Astrology Quiz: ஜோதிடப் புதிர் எண்.114: உலகம் பிறந்தது உங்களுக்காக!!!!

12-8-2016

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்:


கட்டத்தின் மீது கர்சரை வைத்துக் கிளிக்கினால் படம் முழுமையாகத் தெரியும்

இது ஒரு அம்மணியின் ஜாதகம். அம்மணியின் திருமண வாழ்க்கையையும், குடும்ப வாழ்க்கையையும் பற்றிய உங்கள் கணிப்பை விபரமாக எழுதுங்கள்.

சரியான விடையை நாளை 13-8-2016 சனிக்கிழமை மாலை 6 மணிக்குள் எழுதுங்கள். உங்களுக்குப் போதிய அவகாசம் கொடுத்துள்ளேன். அதை மனதில் கொள்ளுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.8.16

Quiz: புதிர் எண்.113 புதிருக்கான பதில்


Quiz: புதிர் எண்.113 புதிருக்கான பதில்

வெள்ளிக்கிழமை (5-8-2016) புதிருக்கான பதில்:

பணிச் சுமை காரணமாக நேற்று இந்தப் பதிலை வெளியிட முடியவில்லை. காத்திருந்த அனைவரும் மன்னிக்கவும்!

ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, அவர் பிறந்தது 1962ம் வருடம் என்றும், ஜாதகருக்கு அவருடைய 34வது வயதில் கடுமையான பணக் கஷ்டம் ஏற்பட்டது என்றும் ஜாதகப்படி 1.பணக் கஷ்டம் எதனால் ஏற்பட்டது? என்ற கேள்வியையும், 2.அது தீர்ந்து ஜாதகர் பிரச்சினையில் இருந்து மீண்டாரா - அல்லது மீளவில்லையா? என்ற கேள்வியையும் கேட்டிருந்தேன்.

வித்தியாசமாக ஜாதகர் பிறந்த வருடத்தையும், கஷ்டம் ஏற்பட்ட காலத்தையும் கொடுத்தன் காரணமே நீங்கள் அன்றைய தேதியில் கோள்சாரச் சனியை உற்று நோக்குவீர்கள் என்ற எண்ணத்தில்தான். ஆமாம், அது சமயம் ஜாதகருக்கு ஏழரைச் சனி நடந்து கொண்டிருந்தது. ஏழரைச் சனி தொழில், மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நெருக்கடியை உண்டாக்கும். அது ஜாதகருக்கும் அத்தகைய நெருக்கடியை உண்டாக்கியது. 1996ம் ஆண்டு ஜாதகரின் ராசியில் சனி. இப்போதாவது அதைக் கவனியுங்கள். அது முக்கிய காரணம்.

1.மேஷ லக்கின ஜாதகர். லக்கினாதிபதி செவ்வாய் 11ல்
2.கஷ்டம் ஏற்பட்டபோது ஆறாம் வீட்டுக்காரன் புதனின் மகாதிசை.
3.புதன் சனி மற்றும் கேதுவோடு மாட்டிக்கொண்டு உள்ளார். அவரும் கூடுதலான கெடுதல்களைச் செய்தார்.

ஆனால்
4. 2 மற்றும் 7க்குரிய சுக்கிரன் உச்சமாகியுள்ளார். 12ல் இருந்தாலும் உச்சமானதன் பலனை அவர் தராமல் விடமாட்டார். அவருடன் இன்னொரு சுபக்கிரகமான (4ம் அதிபதி) சந்திரனும் உள்ளார். அத்துடன் இருவர் மீதும் கர்மகாரகன் சனியின் பார்வை உள்ளது (3ம் பார்வை). ஆகவே ஜாதகர் சுக்கிர திசையில் பணப்பிரச்சினையில் இருந்து மீண்டுவந்தார். பத்து ஆண்டுகள் கழித்து ஜாதகரின் 44வது வயதில் இருந்து பிரச்சினைகள் படிப்படியாகக் குறைந்து அவரை சுக்கிர திசை மீள வைத்தது.

விளக்கம் போதுமா?
--------------------------------
போட்டியில் எட்டு பேர்கள் சரியான விடையை எழுதியுள்ளார்கள். அவர்களுக்கு பாராட்டுக்கள்.
அவர்களில் ஐந்து பேர்கள் மட்டும் மிகச்சரியான விடையை எழுதியுள்ளார்கள். அதாவது கோள்சார  ஏழரை
சனியின் சேட்டையையும் கவனித்து எழுதியுள்ளார்கள். அவர்களின் பெயருக்கு முன்னால் ****** போட்டு விஷேசமாக அவர்களைப் பாராட்டியுள்ளேன். பின்னூட்டங்கள் கீழே உள்ளன. பார்த்துத் தெரிந்து கொள்ளூங்கள். அவர்களுக்கு எனது மனம் உவந்த பராட்டுக்கள்!!!

அன்புடன்,
வாத்தியார்
=================================================
1
******/////Blogger Sathish Kumar said...
ஜாதகர் பிறந்த தேதி : 07 – 03 – 1962
மேஷ லக்னம். திரிகோண அதிபதிகள் மூவரும் லாப ஸ்தானத்தில் உள்ள நல்ல அமைப்பு.
தனஸ்தானத்தில் மாந்தி
ஆறாம் அதிபதி புதன், கேது & பாதகாதிபதி சனி மூவரும் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து ஜாதகருக்கு தொழிலில் கடுமையான பிரச்னை கொடுத்து இருப்பார்கள்.
பாதகாதிபதி சனி ஆட்சி பலத்துடன் உள்ளது நல்ல அமைப்பு இல்லை.
ஜாதகருடைய 34வது வயதில் ஆறாம் அதிபதி புதன் தசை மற்றும் ஏழரைசனி நடந்தாலும் கடனில் மூழ்கி இருப்பார். கேது திசையிலும் சிரமப்பட்டு இருப்பார்.
45வது வயதில் வந்த சுக்கிர திசையில் கடனில் இருந்து மீண்டு இருப்பார். (தனஸ்தான அதிபதி சுக்கிரன் உச்சம்)
காலசர்ப்ப தோஷம் உள்ள ஜாதகம். இளமையில் சிரமப்பட்டு மத்திய வயதில் முன்னுக்கு வரும் அமைப்பு.
--------------------------------------------------------------------
2
******///////Blogger Chandrasekaran Suryanarayana said...
1. ஆறாம் வீட்டு அதிபதியின் தசை நடந்தாலும், ஏழரைசனி நடந்தாலும் பணப் பிரச்சினைகள் தலை தூக்கும்.
2. ஜாதகர் தனது மத்திய வயதில் பணத்தட்டுப்பாட்டிற்கு ஆளாகி, கடனில் மூழ்கி, பிறகு மீண்டு வந்தவர்.
மேஷ லக்கினம். லக்கினாதிபதி 11ல்
இரண்டாம் வீட்டிற்கு உரிய (தனஸ்தானத்திற்கு அதிபதி) சுக்கிரன் உச்சம், ஆனாலும் 12ல் அமர்ந்திருக்கிறார்.
11ஆம் அதிபதி சனி தன் வீட்டில் ஆட்சி பலத்துடன் லக்கினத்திற்கு அது 10ஆம் வீடு. ஆனாலும் 11ஆம் இடத்திற்கு அது 12ஆம் இடம்.
ஜாதகரின் ஆறாம் அதிபதி புதன் 10ல் பலத்த பாதிப்புடன் அமர்ந்துள்ளார். உடன் சனியும், கேதுவும் இருப்பதைப் பாருங்கள். 1996 - 2001 காலகட்டத்தில் அவருக்கு ஆறாம் அதிபதியின் தசை நடந்ததோடு, ஏழரைச் சனியும் சேர்ந்து கொண்டு, ஆசாமியைத் தெற்கு வடக்காகப் புரட்டிப் போட்டு விட்டது.அடுத்து வந்த கேது தசையிலும் அது தொடர்ந்தது. பிறகு சுக்கிரதிசை நடந்த காலகட்டத்தில் அவர் மீண்டு வந்துள்ளார்.
Saturday, August 06, 2016 6:41:00 AM//////
-----------------------------------------------------
3
//////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
வணக்கம் வாத்தியாரே!
Quiz 113 க்கான பதில்.
கடன் தீர்ந்து, ஜாதகர் பிரச்சினையில் இருந்து சுக்கிர திசையில் மீண்டார்
ஜாதகர் பிறந்த தேதி : 07/Mar/1962 , 09.00 am
நட்சத்திரம் : பூரட்டாதி 4ம் பாதம்.
மேஷ லக்கினம், மீன ராசி.
6ம் அதிபதி புதனின் திசையில்; புதன், கேது மற்றும் சனியுடன்
கூடி 10ல் நின்று ஜாதகரை தொழிலுக்காக கடன் வாங்க வைத்தார்.
கேந்திரத்தில் இருக்கும் புதன் கடன் வாங்க வைக்கும்.
சனியுடன் கூடிய கேதுவால் பண வரவில் சிக்கல் ஏற்பட்டு கேது திசை முழுவதும் அவமான பட்டிருப்பார்.
அடுத்து வந்த சுக்கிர திசை ஆறாம் இடத்தை பார்ப்பதால் ஜாதகர் வியக்கும் விதத்தில் கடனிலிருந்து மீண்டிருப்பார்.
அன்புள்ள மாணவன்,
பா. லெக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.
Saturday, August 06, 2016 12:28:00 PM///////
--------------------------------------------------
4
******/////Blogger asbvsri said...
Astrology Quiz: 113 Answer
ஜாதகர் மேஷலக்னம். லக்னாதிபதியும் 8 ஆம் அதிபதியுமான செவ்வாய், 12 ஆம் அதிபதி மற்றும் 9 ஆம் அதிபதியான குரு மற்றும் யோகாதிபதி சூரியனுடன் 11 ஆம் இடத்தில்.
இரண்டுக்கும் 7 க்கும் அதிபதியான சுக்ரன் உச்சமாகி அவருடய பகைவர் சந்த்ரனுடன் ( 4ஆம் அதிபதி) 12 ஆம் இடத்தில்.
சனியும் புதனும் கேதுவுடன் கூடி 10 ஆம் வீட்டில். சனி நவாம்சத்தில் 12 ஆம் வீட்டில்.
34 வயதில் 1996 ல் அவருக்கு புதன் தசையில் சனி புக்தி ஆரம்பமானது. இருவரும் பகைவர்களாதலால் கேதுவுடன் கூடி நஷ்டத்தை ஏற்படுத்தினார்கள். கோள்சாரத்தில் சனி 1996 ல் 12 ஆம் இடத்திற்கு வந்து கேதுவுடன் மிகுந்த விரையங்களை ஏற்படுத்தினார். பின்னர் வந்த கேது தசையும் அவருக்கு நன்மை விளைவிக்கவில்லை. 1996 லிருது 2005 வரை சனி கோள்சாரத்தில் 12, லக்னம் மற்றும் 2 ஆம் வீட்டிலிருப்பதால் அவருடைய பணக்கஷ்டம் தீர்ந்திருக்காது.
கேது தசை 2005 ல் முடிந்தபிறகு வந்த சுக்ர தசையில் 2 க்கும் 7க்கும் அதிபதியாதலால் உச்சமாகியிருப்பதாலும் அவருடைய தசையில் பணக்கஷ்டத்திலிருந்து மீளும் வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பார். சூரியன் புக்தியில் யோகாதிபதியாதலால் கஷ்டத்திலிருந்து முழுவதும் மீண்டுருப்பார்.
நன்றியுடன்,
க இரா அனந்தகிருஷ்ணன் - சென்னை
Saturday, August 06, 2016 1:10:00 PM//////
----------------------------------------------------
5
/////Blogger Srinivasa Rajulu.M said...
1962 - மார்ச் மாதம் 7-ஆம் தேதி பிறந்த அன்பர், நல்ல உழைப்பாளி. சொந்த உழைப்பில் முன்னுக்கு வந்தவர். புத தசை சனி புக்திக்கு முன் வரை நன்றாகப் போய்க் கொண்டிருந்தது.
1. தன ஸ்தானாதிபதி விரைய ஸ்தானத்தில் (சுக்கிரன்) என்ற ரீதியில் பார்க்கும்போது, பெரிய சொத்து ஒன்றும் கிடையாது. ருண ஸ்தானாதிபதி புதன் திசையில் வாங்கிய கடன் சனி புக்தியில் திருப்ப முடியாமல் பெரிய கஷ்டத்தில் மாட்டிக் கொண்டார். லாப ஸ்தானாதிபதி சனி அவ்விடத்திற்குப் பன்னிரண்டில் மறைந்ததால் இந்த நிலைமை.
பின் தொடர்ந்து வந்த கேதுவின் ஏழு வருடங்களும் கஷ்டங்களும் தொடர்ந்தன.
௨. ஆனால் உச்சனான சுக்கிரன் தசை வந்தபோது நிலைமையில் முன்னேற்றம். சுக்கிரனுக்குப் பன்னிரண்டாம் இடம் மறைவு கிடையாது. மேலும் தனஸ்தானத்திற்குப் பதினொன்றில் சுபரான சந்திரனுடன் நிற்பது பண வரவைக் கொடுத்தது. 2012-ஆம் வருடம் வந்த லக்னாதிபன் புக்தி நல்லதாக அமைந்து இப்போது நன்றாக இருக்கிறார்.
Saturday, August 06, 2016 1:27:00 PM/////
---------------------------------------------------------
6
******/////Blogger Rajam Anand said...
அன்புள்ள வாத்தியாரிற்கு அன்பு வணக்கங்கள்,
ஜாதகர் 07-03-1962 பூரட்டாதி 4ம் பாதத்தில் மீன ராசியில் ஜனனம் ஆனார்.
தோசங்கள் – யோகங்கள்,
1. கால சர்ப்ப தோசம்
2. எல்லா சுபர்களும் பாபகார்த்திரி யோகத்தினிலுள்ளனர்
3. சனி, ஆட்சியில் 10ம் வீட்டிலுள்ளார் கேந்திரத்திலுள்ளார் – சஷ்ய யோகம்
4. ஏழரை சனி – கும்பத்தில் 5-3-93ல் தொடங்கி 6-6-2000ல் ரிசபத்தில் போகும்போது முடிவடைந்த்து. 36ம் வயது இந்தக்காலகட்டத்தில் வரும்.
5. புதன் திசை முடிய கேது திசை ஆரம்பமாகின்றது. அது 2005 ஆவணி மாதத்தில் முடியும்.
6. 2006 ஐப்பசி மாதம் குரு விருச்சிக ராசிக்கு வருகிறார், 7ல் குரு.
புதிரிற்கு விடை
பணக் கஷ்டம் ஜாதகப்படி எதனால் ஏற்பட்டது?
மேற்கொண்ட காரணங்களினால்
அது தீர்ந்து ஜாதகர் பிரச்சினையில் இருந்து மீண்டாரா - அல்லது மீளவில்லையா?
2005ம ஆண்டிற்கு பின் எல்லாம் நல்லபடியாக நடக்கும்
நன்றி
அன்புடன்
ராஜம் ஆனந்த்
Sunday, August 07, 2016 2:47:00 AM//////
------------------------------------------------
7
******/////Blogger venkatesh r said...
முதலில் வாத்தியார் அவர்களுக்கு "10000" பேர்கள் தினமும் அவரின் பதிவை பார்வையிட்டதற்கான வாழ்த்துக்கள். அது மேலும் பெருகி ஒரு லட்சம், ஒரு கோடி பேர் என்று வளர‌, பழனி முருகப் பெருமானை வேண்டுகிறேன்.

புதிர் எண் 113க்கான அலசல்:
மேச லக்கினம், மீன ராசி ஜாதகர். கால சர்ப்ப தோசமுள்ள ஜாதகம். லக்கினாதிபதி செவ்வாய் 11ல் அமர்ந்து குருவுடன் கிரகயுத்ததிலுள்ளார். 5ம் அதிபதி சூரியனும் அவருடன் கூட்டணியில் இருக்கிறார். தனாதிபதி சுக்கிரன் 12ல் மறைந்தாலும் உச்சமடைந்துள்ளார்.
இப்ப வாத்தியாரின் கேள்விக்கு வருவோம். ஜாதகரின் 34 வயதில் மிகக் கடுமையான பணக்கஷ்டம் ஏன் ஏற்பட்டது? ஜாதகப்படி அதன் காரணம் என்ன?
ஜாதகரின் 34 வயதில் புதன் மகாதசை, சனி அந்தரம் நடைபெற்ற நேரம். கர்மாதிபதி சனி 6ம் அதிபதி வில்லன் புதன் மற்றும் கேதுவுடன் கூட்டணியில் 10மிடத்தில் தன் சொந்த வீட்டில் உள்ளார்.
அதே சமயம் கோச்சார ஜன்ம சனி வேறு ஜாதகரை புரட்டிப் போட்டது. ஜாதகருக்கு மேற்கண்ட காரணங்களால் இருந்த வேலையும் போய், கடுமையான பண நெருக்கடி, கடன் சுமை ஏற்பட்டது.
ஜாதகர் பணப் பிரச்சனையில் இருந்து மீண்டு வந்தாரா?
புதன் மகாதசை முடிந்து, கேதுவின் தசை 7 வருடம் வரை ஜாதகருக்கு அந்த பணப்பிரச்சினை இருந்தது. பிறகு வந்த சுக்கிர தசையில் அதாவது ஜாதகரின் 46 வயதில் எல்லாக் கஷ்டங்களும் தீர்ந்து மீண்டு வந்தார்.
Sunday, August 07, 2016 2:39:00 PM//////
----------------------------------------------------
8
/////Blogger bala said...
Vanakkam Iyya,
Mesha lagna kaarar. Pooratadhi natchathram paadham 4.
Lagnathipathi sevvai 11il + 5 aam athipathi + 9 aam athipathi guru vudan
Jaathagarin 34 aam vayathil Budhan (3&6 - Villan) dasa sukra bukthi nadai petru ullathu
Sukran 2 aam veetirku uriyavan, lagnathirku 12il + uchaam+ chandran udan graha yudhham.
11 aam veetilum graha yuddham.
Chandra rasi yil irundhu paarthalum, irandam veetiruku uriyavan (sevvai) antha veetirku 11il, aana chandra rasi ku 12il..
Ivaye jaathagarin pana kastathirku kaaranam.
Pana Prachanayil irundhu meendar. Sukra dasai chandra bukthiyil.
Sukranum chandranum sernthu kaapatrinar. sukkran (2&7 irku uriyavan, chandran 4iruku uriyavan)
nandri,
Bala
Sunday, August 07, 2016 2:47:00 PM/////
------------------------------------------
பாராட்டி வந்த கடிதங்களுக்கான பதில்

/////Blogger mohan said...
ஆசிரியர் ஐயா வணக்கம்.
மெஞ்ஞானமும், விஞ்ஞானமும்
தங்களுக்கு ஒன்று சேர்ந்ததுடன்
எழுத்தாற்றலும், நகைச்சுவை உணர்வும்
சமவிகிதத்தில் உள்ளதாலும்
நல்ல எண்ணத்தாலும் , உழைப்பாலும்
இலவச சேவையினாலும் தினசரி பார்வையிடுவோர்
எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டி உள்ளது.
வாழ்க நீ எம்மான்./////

நல்லது. உங்களின் மேலான விளக்கத்திற்கும் அன்பிற்கும் நன்றி மோகன்!
-------------------------------------------------
/////Blogger kittuswamy palaniappan said...
Ayya vanakkam, as the viewers increased the responsibilities increase but this is not a days job, your efforts made you to have this numbers. we all pray you a better health and the best of everything,. let LORD PALANIAPPAN showers bleesings regards,/////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
-------------------------------------------------
/////Blogger ARASU said...
ஆசிரியருக்கு வணக்கம் .
இன்னும் பத்து பத்தாயிரம் பேர் படித்து பயனடையும் வண்ணம் பழனி முருகனின் அருள் தங்களை
வழி நடத்தி செல்ல வேண்டுகிறேன் .
அன்புடன்
அரசு//////

உங்களின் பிரார்த்தனைக்கு நன்றி நண்பரே!
---------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.8.16

Astrology Quiz: ஜோதிடப் புதிர் எண்.113: கேள்வி பிறந்தது இன்று!!!

Astrology Quiz: ஜோதிடப் புதிர் எண்.113: கேள்வி பிறந்தது இன்று!!!

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்

:

இது ஒரு அன்பரின் ஜாதகம். அவர் பிறந்தது 1962ம் வருடம். ஜாதகருக்கு அவருடைய 34வது வயதில் கடுமையான பணக் கஷ்டம்.
1.பணக் கஷ்டம் ஜாதகப்படி எதனால் ஏற்பட்டது?
2.அது தீர்ந்து ஜாதகர் பிரச்சினையில் இருந்து மீண்டாரா - அல்லது மீளவில்லையா?
உங்கள் கணிப்பை விபரமாக எழுதுங்கள்.

சரியான விடை. 7-8-2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் வெளியாகும். உங்களுக்குப் போதிய அவகாசம் கொடுத்துள்ளேன். அதை மனதில் கொள்ளுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
======================================
2
உங்கள் அனைவருக்கும் நன்றி!

நான் வகுப்பறை துவங்கிய காலத்தில் முதலில் தினமும் 30 அல்லது 40 பேர்கள்தான் வந்து படித்துக்கொடிருந்தார்கள். 9 ஆண்டுகளாக எழுதியதன் பலன் ஒவ்வொரு ஆண்டும் எண்ணிக்கை கூடிக்கொண்டே வந்து இன்று அந்த எண்ணிக்கை 10,000 ஐ தாண்டியுள்ளது. படம் கீழே உள்ளது.
Google blogger page views taken from my blogger dash board



நான் எண்ணிக்கையைப் பற்றி எப்போதும் கவலைப்பட மாட்டேன். ஆனால் இத்தனை (பத்தாயிரம் பேர்கள்) எனும் போது, என் பொறுப்பு அதிகமாகியுள்ளது. ஆகவே நான் இன்னும் சிரத்தையோடு பதிவுகளை எழுத வேண்டும். எழுதுவேன்
உங்கள் அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக!

அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.7.16

Quiz: புதிர் எண்.112 புதிருக்கான பதில்


Quiz: புதிர் எண்.112 புதிருக்கான பதில்

வெள்ளிக்கிழமை (22-7-2016) புதிருக்கான பதில்:

ஜாதகிக்குத் திருமணம் ஆனது. ஆன மறுவருடமே விவாகரத்தும் ஆனது. மீண்டும் நான்காண்டுகளில் மறுமணமும் சிறப்பாக அமைந்தது. இதுதான் சரியான விடை
---------------------------------------------------------------------------------
ஜாதகி சிம்ம லக்கினக்காரர்.
லக்கினத்தில் யோககாரகன் செவ்வாய் நல்ல நிலைமையில் அமர்ந்துள்ளார்.
திருவோண நட்சத்திரம். சந்திரன், குரு பகவானின் நேரடிப் பார்வையில் உள்ளார்
பாக்கிய ஸ்தானத்தில் (9ல்) ராகு
7ம் அதிபதி சனீஷ்வரன் செவ்வாயின் பார்வையுடன் 7ல்
----------------------------------------
ஜாதகிக்கு அவளுடைய 28வது வயதில் திருமணமானது. ராகு திசையில் புத்தி நாதன் செவ்வாய் திருமணத்தை முடித்து வைத்தார். அதே ராகு திசை முடியும் போது ராகு, திருமண வாழ்க்கையை கவிழ்த்து விட்டுப் போய் விட்டார்.

7ம் அதிபதி சனீஷ்வரன் 7ல் இருப்பதாலும், செவ்வாயின் பார்வை சனி மேல் விழுவதாலும், சந்திரனில் இருந்து 4ல் ராகு இருப்பதாலும், சந்திரனுக்கு எட்டில் செவ்வாய் இருப்பதாலும், முதல் திருமணம் நிலைக்கவில்லை.

ஏழாம் அதிபதி சனீஷ்வரன் குரு பகவான் வீட்டில் இருப்பதாலும், அவரை உச்சமான குரு வலிமையாகப் பார்ப்பதாலும்,  ஜாதகிக்கு மீண்டும் திருமணம் ஆனது. கோச்சார குருபகவான் அதை நடத்தி வைத்தார்

குரு கெட்டிருந்தாலும் முடிந்தவரை நன்மைகளைச் செய்யக்கூடியவர். களத்திரகாரகன் சுக்கிரன் மேல் குருவின் 5ம் பார்வை விழுவதைப் பாருங்கள். இருவரும் சேர்ந்து குரு மகாதிசை சுக்கிர புத்தியில் ஜாதகிக்கு மறுபடியும் திருமணத்தை நடத்தி வைத்தார்கள்.

விளக்கம் போதுமா?
--------------------------------
போட்டியில் ஒன்பது பேர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கு பாராட்டுக்கள்.
ஒருவர் மட்டும் மிகச்சரியான விடையை எழுதியுள்ளார். அந்த அன்பர் பெயர் திருவாளர்.எம்.ஸ்ரீஇனிவாச ராஜூலு! அவருக்கு எனது மனம் உவந்த பராட்டுக்கள்: அவருடைய விளக்கத்தைக் கீழே கொடுத்துள்ளேன்:

1
******////////Blogger Srinivasa Rajulu.M said...
அம்மணி 1966-நவம்பர் 18 நள்ளிரவில் (பிறந்த ஊரைப் பொறுத்து, அது 19-ஆம் தேதி ஆகவும் இருக்கலாம்) திருவோண தினத்தில் பிறந்தவர்.
பத்து வயதில் வந்த ராஹு தசை நல்ல தசை. சுமார் 23 வயதில் சுக்கிர புத்தியில் காதல் திருமணம் (லக்னாதிபனுடன் சேர்ந்த களத்திர காரகனைப் பார்க்கும் செவ்வாயினால்). குரு பார்வையும் திருமணத்திற்கு உதவியது.
ஆனால் ஏழில் நிற்கும் வக்கிர சனியும், அவரைப் பார்க்கும் செவ்வாயும் திருமண வாழ்வை விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்தார்கள். இன்னொரு காரணம் மாங்கல்ய ஸ்தானாதிபதி பன்னிரண்டில் - உச்சமானாலும் - மறைந்துவிட்டது என்பதால்.
ஏழாம் இடத்தில் இருக்கும் சனியை, இயற்கையில் பாவியான செவ்வாய் பார்ப்பதால் மறுமணத்திற்கு இடமுண்டு. லக்ன மாந்தியாலும், லக்னத்தில் அமர்ந்த செவ்வாயாலும் கோபமும் பிடிவாதமும் மிகுந்திருக்கும் - அது அவ்வப்போது திருமண வாழ்வில் பிரச்சினைகள் கொடுக்கும்.
குடும்ப ஸ்தானாதிபதி மூன்றில் மறைவு. சுக ஸ்தானத்தில் சனியின் பார்வை - இவையெல்லாம் அமைதியான வாழ்விற்கு அனுகூலமாக இல்லை.//////
Friday, July 22, 2016 10:51:00 AM //////

,அன்புடன்
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.7.16

Astrology Quiz: ஜோதிடப் புதிர் எண்.112: கேள்வி பிறந்தது இன்று!!!

Astrology Quiz: ஜோதிடப் புதிர் எண்.112: கேள்வி பிறந்தது இன்று!!!

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்:



இது ஒரு அம்மணியின் ஜாதகம்.

ஜாதகியின் திருமண வாழ்க்கையைப் பற்றி உங்கள் கணிப்பை விபரமாக எழுதுங்கள்.

உப கேள்விகள் நிறைய உள்ளன. அவற்றையெல்லாம் கேட்டால் நானே உங்களுக்குக் க்ளூ கொடுத்தது போலாகிவிடும். ஆகவே இன்று ஒரே ஒரு பிரதான கேள்வி மட்டும்தான். நீங்கள் பதிலை விலாவரியாக (write in detail) எழுதுங்கள்

சரியான விடை. 24-7-2016 ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணிக்கு மேல் வெளியாகும். உங்களுக்குப் போதிய அவகாசம் கொடுத்துள்ளேன். அதை மனதில் கொள்ளுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.7.16

நேற்றைய திரைப்பாடல் புதிருக்கான விடைகள்!

நேற்றைய திரைப்பாடல் புதிருக்கான விடைகள்!

1. இந்தப் பாடல் இடம் பெற்ற இந்தி மொழிப் படத்தின் பெயர் என்ன? பாடலைப் பாடியவரின் பெயர் என்ன?
பதில் படம் woh kaun thi
பாடலைப் பாடியவரின் பெயர்: லதா மங்கேஷ்கர்

2.அந்தப் படத்தின் கதையை அப்படியே தமிழிலும் எடுத்து ஒரு ஹிட்டான படத்தைக் கொடுத்தார்கள். அந்தத் தமிழ்ப் படத்தின் பெயர் என்ன? பாடல் என்ன? அதைப் பாடியவரின் பெயர் என்ன? அந்தப் பாடலை அற்புதமாக மெட்டிற்குத் தகுந்தாற்போல தமிழில் எழுதிக் கொடுத்த கவிஞரின் பெயர் என்ன? இசையமைத்தவரின் பெயர் என்ன?
தமிழில் வந்த படத்தின் பெயர்: ”யார் நீ”
பாடல்: பொன் மேனி தழுவாமல்
பாடியவரின் பெயர்: திருமதி பி.சுசீலா
கவிஞரின் பெயர்: கவியரசர் கண்ணதாசன்
இசையமைத்தவரின் பெயர்: வேதா

3. இதுதான் முக்கியமான கேள்வி: இந்தக் கிளிப்பிங்கில், பாடலைப் பாடும் பாடகியின் பெயர் என்ன?
Smt.Vibhavari Apte Joshiji
----------------------------------------------------------
போட்டியில் எட்டுப்பேர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். மிகச்சரியான விடைகளை 4 பேர்கள் எழுதியுள்ளார்கள். மற்றும் 4 பேர்கள் முக்கால் வாசி விடைகளை எழுதியுள்ளார்கள். கலந்து கொண்டு பதில் எழுதிய அந்த எட்டுப் பேர்களுக்கும் பாராட்டுக்கள். மற்றும் நன்றி உரித்தாகுக!
மிகச் சரியான விடைகளை எழுதிய
1. சந்திரசேகரன் சூர்யநாராயணன்
2. ராமராவ்
3. வெங்கடேஷ்
4. எம்.திருமால்
ஆகியோருக்கு எனது மனம் உவந்த பாராட்டுக்கள்
அவர்களுடைய பின்னூட்ட்டங்களை உங்கள் பார்வைக்காகக் கீழே கொடுத்துள்ளேன்!

அன்புடன்,
வாத்தியார்
------------------------------
1.
/////Chandrasekaran Suryanarayanan Said:
Hindi picture: Woh Kaun Thi (1964) 2. Singer: Lata Mangeshkar 3. Actor: Manoj Kumar, Sahana  4. Tamil Movie Name: Yaar Nee (10th April 1966) 5. Tamil song: பொன் மேனி தழுவாமலே பெண் என்னும் அறியாமல் போக வேண்டுமா . 6. பாடியவர்: பி சுசிலீலா 7. இசை அமைப்பாளர் : வேதா 8. எழுதியவர் : கவிஞர் கண்ணதாசன் 9. பட தயாரிப்பாளர் : பி வீரப்பா /////

அருமை. பாராட்டுக்கள்!!!!
---------------------------------
2
******Ramarao said...
1. இந்தி மொழிப் படத்தின் பெயர்: Woh kaun Thi ?
பாடலைப் பாடியவர் பெயர்: லதா மங்கேஷ்கர்
2. தமிழ்ப் படத்தின் பெயர்: யார் நீ ?
பாடியவர்: பி.சுசீலா
பாடலை எழுதியவர் : கவிஞர் கண்ணதாசன்
இசையமைத்தவர்: வேதா
3. பாடகி பெயர்: Vibhavari Apte Joshi
Wednesday, July 20, 2016 6:00:00 AM Delete
Blogger Chandrasekaran Suryanarayana said...
1. Hindi picture: Woh Kaun Thi (1964)
2. Singer: Lata Mangeshkar
3. Actor: Manoj Kumar, Sahana
4. Tamil Movie Name: Yaar Nee (10th April 1966)
5. Tamil song: பொன் மேனி தழுவாமலே பெண் என்னும் அறியாமல் போக வேண்டுமா .
6. பாடியவர்: பி சுசிலா
7. இசை அமைப்பாளர் : வேதா
8. எழுதியவர் : கவிஞர் கண்ணதாசன்
9. பட தயாரிப்பாளர் : பி வீரப்பா//////

அருமை நண்பரே! சரியான விடைகள். பாராட்டுக்கள்!
---------------------------------------------
3
/////Blogger arumuga nainar said...
Dear Sir,
1) இந்தப் பாடல் இடம் பெற்ற இந்தி மொழிப் படத்தின் பெயர்
Movie name : who kaun thi
2) Singer Name : Lata Mangeshkar
3) Tamil movie Name :Yaar Nee (jaishankar & j.jayalalithaa)
4) Song " Naane Varuven
5) Singer : P.Suseela
6) Lyrics : Kannadasan
7) Music : Vedha/////

எல்லாம் சரிதான். இப்போது இந்தப் பாடலைப் பாடிய பாடகியின் பெயரை நீங்கள் எழுதவில்லை.
-------------------------------------------------
4
******////Blogger venkatesh r said...
படம் : யார் நீ?
வருடம் :1966
குரல் : சுசீலா
பாடல் வரிகள்: கவிஞர் கண்ணதாசன்
ஹிந்தி : லக் ஜா கலே.
அசல் பாடகர்: லதா மங்கேஷ்கர்.
படத்தில் உள்ளவர் : விபாவரி ஆப்தே ஜோஷி. நல்ல குரல் வளம். ஆனால் அவ்வளவு பிரபலமாகவில்லை.
என்ன மெலடி ஐயா!
கண்ணதாசனின் வரிகள் அருமை!
பாடல் வரிகள் இங்கே!
----------------------------------------
பொன் மேனி தழுவாமல்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பொன் மேனி தழுவாமல்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

பொன் மேனி தழுவாமல்
பெண் இன்பம் அறியாமல்
போக வேண்டுமா
கண்ணோடு கண் சேர
உன்னோடு நான் சேர தூது வேண்டுமா
பொன் மேனி தழுவாமல்
பெண் இன்பம் அறியாமல்
போக வேண்டுமா
கண்ணோடு கண் சேர
உன்னோடு நான் சேர தூது வேண்டுமா
பொன் மேனி தழுவாமலே
ஏ ஏ ஏ ....

இரவென்பது நம் வாழ்விலே இல்லாமல் போகுமா
இரவென்பது நம் வாழ்விலே இல்லாமல் போகுமா
உறவென்பது உன் நெஞ்சிலே என்றேனும் தோன்றுமா
நீ சொல்வதை நான் சொல்வதா
இது நீதியாகுமா
தாளாத பெண்மை எங்கும் போது மௌனமாகுமா
பொன் மேனி தழுவாமலே
ஏ ஏ ஏ ....

இரவென்பது நம் வாழ்விலே இல்லாமல் போகுமா
இரவென்பது நம் வாழ்விலே இல்லாமல் போகுமா
உறவென்பது உன் நெஞ்சிலே என்றேனும் தோன்றுமா
நீ சொல்வதை நான் சொல்வதா
இது நீதியாகுமா
தாளாத பெண்மை எங்கும் போது மௌனமாகுமா
பொன் மேனி தழுவாமலே
ஏ ஏ ஏ .....

மழை மேகமே
என் தீபமே
என் காதல் தெய்வமே
மழை மேகமே
என் தீபமே
என் காதல் தெய்வமே
மறு வாழ்விலும் உன்னோடு நான் ஒன்றாக வேண்டுமே
நான் என்பதும் நீ என்பதும் ஒரு ராகமல்லவே
நாமொன்று சேர்ந்து வாழும் போது வார்த்தை வேண்டுமா
பொன் மேனி தழுவாமல்
பெண் இன்பம் அறியாமல்
போக வேண்டுமா
கண்ணோடு கண் சேர
உன்னோடு நான் சேர தூது வேண்டுமா
பொன் மேனி தழுவாமலே
ஏ ஏ ஏ....

பகிர்ந்தமைக்கு நன்றி!
கூகுள் ஆண்டவருக்கும் நன்றி!//////

அருமை. தமிழ்ப் பாடலின் முழு வரிகளையும் கொடுத்த மேன்மைக்கு நன்றி!
---------------------------------------------
5
Blogger Chocks said...
Ayya,,, This song from the Hindi Movie, "Woh Koun Thi". (Who was she?). Sung by Latha manheshkar. The tamil film should be "Yaar Nee?". Jai shankar & Jaya lalitha.//////

எல்லாம் சரிதான். இப்போது இந்தப் பாடலைப் பாடிய பாடகியின் பெயரை நீங்கள் எழுதவில்லை.
--------------------------------------------------
6
Blogger Rajam Anand said...
Dear Vathiyar Iyah
Greetings!
Found the answer using Google and You tube –
1. Name of the film – Who Kaun THi
2. 2. Name of the Tamil Film – Yaar Nee
3. Name of the person who sang the song – Pooja Yadev.
Kind Regards
Rajam Anand/////

பாடகியின் பெயர் தவறு சகோதரி!
------------------------------------------
7
Blogger rishikesav said...
https://www.youtube.com/watch?v=DOks2BzWm2k
----------------------------------------
8
////Blogger Thirumal Muthusamy said...
Sir,
Good Morning.
The results are as follows:
Lag Ja Gale Ke Pir Yeh Haseen Raat Ho Na Ho - Lata
Film: Woh Koun Thi (1964)
Stars: Manoj Kumar & Sadhana
M. Thirumal
Pavalathanur
Blogger Thirumal Muthusamy said...
Sir,
Missing Answers:
The film was remade into Tamil as Yaar Nee? by Sathyam (1966) with Jaishankar and J.Jayalalithaa (who later became Chief Minister of Tamil Nadu).Now she is a chief minister.
M. Thirumal
Pavalathanur
Blogger Thirumal Muthusamy said...
அய்யா
பொன்மேனி தழுவாமல் பெண் இன்பம் அறியாமலே - பாடியவர் சுசிலா -
இசை வேதா - படம் யார் நீ - ஜெய்சங்கர் மற்றும் ஜெயலலிதா .
எம்.திருமால்
பவளத்தானூர்
Blogger Thirumal Muthusamy said...
sir,
Missing results: 
Smt.Vibhavariben Apte Joshiji
kannadasan
M.Thirumal
pavalathanur//////

அருமை. பாராட்டுக்கள்
=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.7.16

Quiz: புதிர்: திரைப்படப் பாடலை வைத்து ஒரு புதிர். காட்டுங்கள் உங்கள் திறமையை!


Quiz: புதிர்: திரைப்படப் பாடலை வைத்து ஒரு புதிர். காட்டுங்கள் உங்கள் திறமையை!

கீழே ஒரு பாடலின் காணொளியைக் கொடுத்துள்ளேன்.



காணொளியை நன்றாகப் பாருங்கள். பாடலையும் கேளுங்கள். மொழி புரியாவிட்டாலும் பாடலின் மெட்டு உங்களுக்குப் பழக்கமானதுதான்!.

சரி கேள்விகளுக்கு வருகிறேன்.

1. இந்தப் பாடல் இடம் பெற்ற இந்தி மொழிப் படத்தின் பெயர் என்ன? பாடலைப் பாடியவரின் பெயர் என்ன?

2.அந்தப் படத்தின் கதையை அப்படியே தமிழிலும் எடுத்து ஒரு ஹிட்டான படத்தைக் கொடுத்தார்கள். அந்தத் தமிழ்ப் படத்தின் பெயர் என்ன? பாடல் என்ன? அதைப் பாடியவரின் பெயர் என்ன? அந்தப் பாடலை அற்புதமாக மெட்டிற்குத் தகுந்தாற்போல தமிழில் எழுதிக் கொடுத்த கவிஞரின் பெயர் என்ன? இசையமைத்தவரின் பெயர் என்ன?

3. இதுதான் முக்கியமான கேள்வி: இந்தக் கிளிப்பிங்கில், பாடலைப் பாடும் பாடகியின் பெயர் என்ன?

எனக்கு பாடல் மட்டுமே வாட்ஸப்பில் வந்தது. அதை வைத்து, இன்றைய தொழில் நுட்பம், மற்றும் இணைய வசதி, கூகுள் ஆண்டவர், ஆகியவற்றின் உதவியுடன் மேலே உள்ள கேள்விகள் அனைத்திற்கும் விடைகளை நானே கண்டுபிடித்தேன்.

ஆகவே உங்களுக்கும் சிரமம் ஒன்றும் இருக்காது. நீங்களும் கண்டு பிடிக்கலாம். எங்கே உங்கள் திறமையைக் காட்டுங்கள் பார்க்கலாம்

அன்புடன்,
வாத்தியார்
------------------------------
கண்மணி: “வாத்தி (யார்) இதையெல்லாம் யார் கேட்டார்கள்? ஜோதிடப் புதிர் எங்கே வாத்தியார்?”
வாத்தியார்: 22-7-2016 வெள்ளிக்கிழமையன்று வெளிவரும் கண்ணா!!!!
================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!