![]() |
| சோமஸ்கந்தர் - திருநாகேஷ்வரம் |
எல்லா நாளிதழ்களிலும் ராகு மற்றும் கேதுவின் பெயர்ச்சியைப் பற்றி நான்கு கால செய்தியைப் போட்டு, ந்ம்மைக் கவலைப்பட வைத்திருக்கிறார்கள்.
யாரும் கவலைப் பட வேண்டாம். நம்மைப் படைத்த இறைவன் பார்த்துக்கொள்வான் என்று மன தைரியத்துடன் இருங்கள்
அது என்ன பெயர்ச்சி?
கோள்சாரத்தில் (transit of planets) ராகுவும் கேதுவும் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடம் மாறுகிறார்கள். உங்கள் மொழியில் சொன்னால் transfer ஆகிப் போகிறார்கள். மாற்றல் உத்தரவு தேவையில்லாத ஆசாமிகள் அவர்கள்.
ராகு விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் மாறுகின்றார் (anti clockwise) கேது ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம் மாறுகின்றார் (anti clockwise)
2.12.2012 அன்று இடம் மாறும் அவர்கள், அந்த இடத்தில் சுமார் 18 மாதங்கள் தங்கியிருப்பார்கள். 21.6.2014 வரை அங்கே இருப்பார்கள். அவர்களின் இடம் மாற்றத்தில் சிலருக்கு நன்மையும், சிலருக்கு தீமையும் உண்டாகும்.
ராசி வாரியாக அதைப் பார்ப்போம்:
1. மேஷ ராசி: நன்மையும் தீமையும் சரி சமமாகக் கலந்த கலவையான பலன்
2. ரிஷப ராசி. இதுவரை பிடித்திருந்தவர்கள் விட்டு விலகிப் போவதால் இனி எல்லாமுமே நல்லதாக நடக்கும்
3. மிதுன ராசி இன்றைய நிலவரப்படி அது (கேதுவிற்கு) 11ஆம் இடம். பெரும்பாலும் யோகமான பலன்களே நடைபெறும். வேலையில் தொழிலில் முன்னேற்றங்கள் உண்டாகும்
4. கடக ராசி. பெரும்பாலும் யோகமான பலன்களே நடைபெறும்.
5. சிம்ம ராசி. ராசிக்கு மூன்றில் ராகு வருகிறார். அது மறைவிடம். இந்த ராசிக்காரர்களுக்கு இனி எல்லாமுமே யோகமான பலன்கள்தான். வளம் உண்டாகும். நினைத்ததெல்லாம் நிறைவேறும்.
6. கன்னி ராசி. ராசிக்கு இரண்டில் ராகு வருகிறார். ஏற்கனவே சனியிடம் ஒரு பக்கம் உதை வாங்கிக் கொண்டிருக்கும் இந்த ராசிக்காரர்களை ராகுவும் உதைக்கத்துவங்குவான். சுமாரான பலன்களே. இறைவழிபாடு ஒன்றுதான் பரிகாரம்
7. துலாம் ராசி. ராசிக்கு ஒன்றில் ராகு வருகிறார். ஏற்கனவே சனியிடம் ஒரு பக்கம் உதை வாங்கிக் கொண்டிருக்கும் இந்த ராசிக்காரர்களை ராகுவும் உதைக்கத் துவங்குவான். சுமாரான பலன்களே. இறைவழிபாடு ஒன்றுதான் பரிகாரம்
8. விருச்சிக ராசி. இதுவரை பிடித்து அமுக்கி வைத்திருந்த ராகு விட்டு விலகிப் போவதால் இனி நல்லகாலம்தான். பெரும்பாலும் நன்மையான பலன்களாகவே நடைபெறும்.
9. தனுசு ராசி. இன்றையப் பெய்ர்ச்சிப்படி அது ராகுவிற்கு (from thanusu) பதினொன்றாம் இடம். யோகமான பலன்களே நடைபெறும்
10. மகர ராசி. ராகு 10ல், கேது 4ல். நல்ல அமைப்பு இல்லை. இருந்தாலும் கவலைப்பட வேண்டாம். நம்ம ஆள் - அதாங்க ராசி நாதன் சனீஷ்வரனின் சேர்க்க, மற்றும் பார்வையில் அவர்கள் இருப்பதால், அவர் பார்த்துக் கொள்வார்.
11. கும்ப ராசி. கேது 3ல். உபத்திரவம் இருக்காது. உற்சாகமே அதிகமாக இருக்கும். எதையும் துணிச்சலாகச் செய்வீர்கள். பணவரவுகள் இருக்கும்.
12. மீன ராசி. எட்டில் ராகு. முன்பாகவே அஷ்டமச்சனியும் அங்கே உள்ளார். ஆகவே கைக்காசெல்லாம் கரைந்து போகும் (2ல் இருக்கும் கேது அதைச் செய்வார்)
இவை எல்லாமுமே பொதுப் பலன்கள்தான்!
நல்ல தசா புத்திகள் நடப்பவர்களை, இந்தப் பெயர்ச்சிகள் ஒன்றும் செய்யாது. தசாபுத்திகள்தான் முக்கியம். கோளசாரத்திற்கு இரண்டாம் இடம்தான். ஆகவே உங்கள் ஜாதகப்படி தற்சமயம் உங்களுக்கு நல்ல தசா புத்திகள் நட்ந்தால், நீங்கள் நிம்மதியாக இருக்கலாம். மற்ற எதுவும் உங்களைப் பாதிக்காது.
அதுபோல துலாம் ராசியிலும், மேஷராசியிலும் சர்வாஷ்டகப்பரல்களின்படி 30ம் அத்ற்கு மேற்பட்ட பரல்களும் உடையவர்களையும் இந்தப் பெயர்ச்சிகள் ஒன்றும் செய்யாது. அதையும் கவனத்தில் கொள்க
சனியின் சுற்றிலும் அதுதான் அஷ்டகவர்க்க விதி. சனி வரும் இடத்தில் 30 பரல்களோ அல்லது மேலாகவோ இருந்தால் சனியின் பாதிப்பு எதுவும் இருக்காது. அந்த இடம் 30 பரல்களுடன் இருப்பதால், அது வலிமையான இடம். அங்கே தீய கிரகங்களின் ஆட்டம் செல்லாது. அவைகள் அடக்கி வாசிக்கும். அதையும் மனதில் கொள்க!!!!!
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------
மேலதிகத் தகவல்
Naganatha Swami temple - Rahu stalam (தகவல்: விக்கி மஹாராஜா)
கும்பகோண்த்தில் இருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஸ்தலம் உள்ளது
Naganatha Swami (Naga in Tamil/Sanskrit means Snake and Natha means God) is a temple dedicated to Lord Shiva. An important feature of Naganatha Swami temple is that of Rahu bhagawan (one of the nine celestial bodies) sannathi. It is the 29th in the series of Tevara Stalams located south of the river Kaveri. Here milk abhishekam is performed daily during Rahukaalam. At this time, the milk that is poured on the statue turns blue when it passes over the body and once again to white after it reaches the floor. This wonder is watched by many daily during the Raahu Kaalam. This is also the only place wherein one can view Rahu bhagawan with his consorts. The mythological serpents Aadi Seshan, Dakshan and Kaarkotakan worshipped Shiva here. Nala worshipped Shiva here too. Gautama Maharishi, Parashara and Bhageerata are also associated with this temple.
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

