மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது
Showing posts with label அறிவுரைகள் advices. Show all posts
Showing posts with label அறிவுரைகள் advices. Show all posts

13.5.20

மரங்களை வெட்டினால் என்ன ஆகும்?


மரங்களை வெட்டினால் என்ன ஆகும்?

மதுரையின் மிகப் பிரபலமான மரக்கடை குடும்பத்தாரின் மகன் எனது பள்ளிக் காலத்து நண்பன். அவரை பல ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் சந்தித்தேன். பள்ளியில் படிக்கும் போதே அவர் எங்களை விட இரண்டு வயது பெரியவர். எல்லோரும் அவரை பெருசு என்றே அழைப்போம். படிப்பு சரியாக வராது. கடுமையாக மனப்பாடம் செய்தாலும் பரிட்சையில் கோட்டை விட்டு விடுவார். ஆசிரியர்கள் அவரை மரமண்டை ... பேசாம போய் மரக்கடையிலேயே உக்காரு என்றும் திட்டுவார்கள். பள்ளிக் காலம் முடிந்து ஆளுக்கு ஒரு திசையில் சென்றுவிட்டோம். நமது நண்பர் தனது தந்தையின் மரக்கடையிலேயே பொறுப்பெடுத்துக் கொண்டார். பின்னர் ஆறேழு வருடங்கள் கழித்து அவரை ஒரு முறை சந்திக்கும் போது சொந்த அத்தை மகளை திருமணம் எல்லாம் முடித்து கைக் குழந்தையுடன் இருந்தார். 28 வயதுக்குள் தனி வீடு, சொந்தமாக ஒரு புதிய மரக்கடை, கார், வேலையாட்கள், வெளிநாட்டுப் பயணம் என சகல வசதிகளுடன் இருந்தார். யார் வாழ்க்கையில் உருப்படமாட்டார், மரமண்டை என்று இகழப்பட்டாரோ அவரே எங்கள் அனைவரையும் விட உச்சத்தில் இருந்தார்.

கிட்டத்தட்ட இருபது ஆண்டு இடைவெளியில் மீண்டும் அவரை சந்தித்தேன். என் கண்களை நம்ப முடியவில்லை. ஆள், மிகவும் தளர்ந்து சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு ஒரு வித மன நோயாளியைப் போல இருந்தார். ஆதரவாக கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்தேன். அவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். மிகச் சிறிய வயதிலேயே திருமணம் முடித்த காரணத்தால் பிள்ளைகள் எல்லாம் இப்போதே பெரியவர்களாக இருந்தார்கள். ஆனால், குடும்பம் பல வேறு சிக்கல்களில். ஐந்து வருடம் முன்பு சிறுநீரக கோளாறில் மனைவி இறந்து விட்டார். மூத்த மகன் கல்லூரியில் படிக்கும் போது சாலை விபத்தில் ஒரு காலை இழந்து விட்டார். இரண்டாம் மகனுக்கு பிறவியிலேயே கொஞ்சம் மன நல கோளாறு, மகள் அமெரிக்க மாப்பிளைக்கு மணமுடிக்கப் பட்டு, இரண்டே வருடத்தில் விவாகரத்தை பெற்று வீட்டில் குழந்தையுடன் இருக்கிறார். இப்போது நண்பரோ, கோடிகளின் அதிபதி என்றாலும் ஜாதக புத்தகத்தை கையில் தூக்கிக் கொண்டு கோவில் கோவிலாக பரிகார பூஜைகள் செய்து வருகிறார்.

எங்கள் சந்திப்பில் அவரைப் பற்றிய பல விஷயங்கள் பேசிய பின் என்னை பற்றிய பேச்சு வந்தது. ஒரு கால கட்டத்தில் மனதுக்கு ஒவ்வாத வேலையை விட்டு விலகியதை பற்றி பேசியதும், அவரால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இரவி, இந்த மரக்கடை தொழில் எனக்கும் ரொம்ப நாளாகவே பிடிக்கவில்லை. கடை முழுசும் மரங்கள் வெட்டி வெட்டி அடுக்கி இருக்கிறதை பார்க்கும் போது எல்லாம் ஒரு பிணக்குவியலுக்கு நடுவே இருக்கிறதை போலவே தோணும். ஆனாலும், எனக்கு இதை தவிர வேறு எதுவும் தெரியாதே... இத்தனை மரத்தை வெட்டி அழிச்சி வயிறு வளர்த்த பாவமோ என்னவோ என் குடும்பம் இப்படி சீரழிஞ்சி கிடக்கு என்று அழுது விட்டார். அவரை ஆறுதல் படுத்தவே சில மணி நேரம் ஆனது. பின்னர், அருகில் இருந்த இன்மையில் நன்மை தருவார் கோவிலுக்குப் போனோம். மிகச் சிறிய வயதில் இருந்தே எல்லாவற்றையும் வியாபாரமாகவே பார்த்துப் பழகிய அவருக்கு என்ன சொல்வது என்று யோசித்தேன். மரம் என்னும் உயிர்களை வெட்டி வெட்டி அதையே வியாபாரமாக பார்த்த காரணத்தாலேயே குடும்பம் பல இன்னல்களில் இருப்பதாக உணரும் மனிதர் எந்த கோவில் போய் எப்படி பாவங்களை தொலைக்க முடியும். மனதின் பிரச்சனை ஆரம்பித்த இடத்திலேயே முடிவையும் தேட வேண்டும். எனவே நண்பருக்கு மர நாற்றுக்களை உற்பத்தி செய்யும் பண்ணை ஒன்றை ஆரம்பிக்கச் சொல்லி அறிவுறுத்தினேன். உற்பத்தி செலவு என்னவோ அதை தாண்டி பெரிய லாபம் இல்லாமல் அனைவருக்கும் மரகன்றுகளை கொடுங்கள் என்றேன். என்னுடைய இந்த கருத்து அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. இன்னும் ஓரிரு மாதங்களில் இதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்பதாக உறுதி சொன்னார். எதோ என் மூலமாக ஒரு தெய்வ வாக்கு கிடைத்த சந்தோசத்தில் அவர் என்னை பிரிந்து சென்றார். விரைவில் அவர் மூலமாகவும் இந்த இயற்கைக்கு சில நன்மைகள் நடக்கட்டும் என்று வேண்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.

நண்பரைப் பற்றி மறந்தாலும் அவரின் வேதனைகளின் ஊற்றாக இருந்த மரம் வெட்டி செய்யும்  வியாபாரம் அத்தனை பாவமானதாக இருக்குமா என்று வழக்கம் போல கூகுளை அலசினேன். எனக்கு கிடைத்த பதில்கள் .....

பச்சை மரத்தை வெட்டுபவருக்கு வந்து சேரும் பாவங்கள்:-
அரச மரம் = அற்ப ஆயுள்,விபத்தில் மரணம்,
ஆல மரம்= வம்சம் அழியும்
இலந்தை மரம்=செல்வம் கொள்ளை போகும்
ஈச்ச மரம்= மாரடைப்பு,நாவரட்ச்சியால் மரணம்
உதிய மரம்= தலையில் அடிபட்டு மரணம்
ஊஞ்ச மரம்= மருத்துவம் பலன் தராமல் மரணம்(தவறான மருத்துவம்)
எலுமிச்சை மரம்=இடி விழுந்து மரணம்
புளிய மரம்= ரத்த கொதிப்பு,மாரடைப்பால் மரணம்
வேப்ப மரம்=காமாலை,உடம்பில் புண் ஏற்பட்டு மரணம்
பனைமரம்= வம்சம் அழியும்
தென்னை மரம்= வளர்ந்த குழந்தைகள் கண்முன்னே இறக்கும்
புங்க மரம் = தீராத நோய் வரும்
... ... ...
ஆக மொத்தம் எந்த மரத்தை வெட்டினாலும் பாவம் நிச்சயமாம். இதை படிக்கும் போது நண்பர் காளிமுத்து தங்களாச்சேரி கிராமத்தில் சாலை ஓரங்களில் இருந்த பனை மரங்களை விழுங்கிய சில குடும்பங்களில் நிகழ்ந்த துர்மரணங்கள் பற்றி சொன்ன செய்திகள் உண்மையாக இருக்குமோ என்று கருதத் தோணுகிறது. நண்பர் கிருஷ்ணமூர்த்தி கூட இது போன்ற சில மர முழுங்கிகளைப் பற்றி பேசி உள்ளார். அவர்களின் குடும்பங்களும் நாசமானது தெரிந்ததே. இப்படி சில நூறு மரங்களை வெட்டி சாய்த்து வயிறு வளர்த்தவர்கள் நிலையே இப்படி என்றால் சாலையோரங்களில் இருக்கும் ஆயிரம் ஆயிரம் மரங்களை அழிக்கும் திட்டங்களை இடுபவர்கள் என்ன நிலைக்குப் போவார்கள். வாழ்வின் தேவைகளுக்காக   மரங்களை வெட்டுவதற்கும், அதையே வியாபாரமாகச் செய்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

மரங்களை வெட்டினால் பாவம் வரும் என்று சொல்வது எல்லாம் உண்மையோ, பொய்யோ எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்த ஒரு செவ்விந்திய பழமொழிஎன்ன என்றால் "உயிர் வாழ்விற்காக இயற்கையில் இருந்து நீங்கள் ஒன்றைப் பெறலாம்... ஆனால், உங்கள் குழந்தைகள் உயிர் வாழ அங்கே இயற்கையை மிச்சம் வையுங்கள். ஏன் என்றால் இயற்கை என்பது அடுத்த தலைமுறைகளுக்கான சொத்து. அதை அனுபவிக்க மட்டுமே உங்களுக்கு உரிமை உள்ளது... அழிக்க அல்ல".  எந்த சிந்தனையும் இல்லாமல் இயற்கையின் மீது மனிதர்கள்  பேராசை கொண்டு நடத்தும் வெறியாட்டம், அடுத்த தலைமுறையை   சவக்குழிகளில் நிரந்தரமாக தள்ளிவிடும்.
----------------------------------------------------------
படித்து அதிர்ந்தது!!!!
அன்புடன்
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.11.19

இவையல்லவா சிறந்த அறிவுரை!!!


இவையல்லவா சிறந்த அறிவுரை!!!

1
வாழ்க்கையில் தடுமாறி விழுந்தவனுக்கு ஆறுதல் கூறா விட்டாலும் பரவாயில்லை, அவமானப் படுத்தாதீர்கள்.

சூழ்நிலை உங்களை பதற்றப் பட வைக்கிறதா, இல்லை சூழ்நிலையையும் பதற்றப் படாமல் கையாளுகின்றீர்களா என்பதை பொறுத்தே உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும்.

பிறப்பில் இருந்து இறப்பு வரை துன்பமே இல்லாமல் வாழ்ந்தவர் யார். ஒரு கட்டம் அப்படி என்றால் மறுகட்டம் இப்படி. ஏற்றம் இறைவன் பரிசு. இறக்கம் கர்ம வினைக்கு தீர்வு.

புத்திசாலித் தனமாக பேசுபவர்கள் குறைவு. புத்திசாலி என்று நினைத்து கொண்டு பேசுபவர்கள் தான் அதிகம்.

ஜால்ரா அடிப்பவருக்கு உடனடி மரியாதை கிடைக்கும் ஆனால் நிலைக்காது. தகுதி திறமை உள்ளவருக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் குறையாது.
--------------------------------------------------------------------------
2
"வாழ்க்கையின் மிகப் பெரிய வெற்றி உங்கள் குடும்பமும், நண்பர்களும் உங்களை நேசிப்பது தான்" என்கிறார் உலகப் பணக்காரர் வாரன் பஃப்பட்.

"பலர் ஏகப்ட்ட பணம் சம்பாதித்து மிகப் பெரிய கட்டிடங்கள், தொழில்களை அமைக்கிறார்கள். ஆனால் அவர்களை ஒருவரும் விரும்புவது கிடையாது என் கையில் அவை அனைத்தும் வீண் தான்.

அன்பு மட்டும் தான் உலகில் விலைக்கு வாங்க முடியாத பொருள். எல்லாவற்றையும் காசு கொடுத்து வாங்க முடியும். அன்பை வாங்க முடியாது. அன்பை அடைய நீங்கள் அன்பானவராக இருக்க வேண்டியது அவசியம். அதிகமாக அன்பை கொடுக்க, கொடுக்க அதிகமாக அது திரும்ப கிடைக்கும். அதிலும் உங்கள் குடும்பம், நண்பர்களின் அன்பை எத்தனைக்கு எத்தனை அதிகமாக அடைகிறீர்களோ அத்தனைக்கு அத்தனை உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறும்"

தனது சுயசரிதையில் அவர் குறிப்பிட்டுள்ள தகவல் இது..
-----------------------------------------------------------------------
3
திரும்பத் திரும்ப செய்வது தான் வெற்றிக்கு வழியே தவிர, பாதியில் விட்டு விட்டு ஓடுவது வெற்றிக்கு வழியாகாது.

யார் மீதோ உள்ள கோபத்தை யார் மீதோ காட்டுவது தான் மனித இயல்பு. அப்படிக் கோபத்தை காட்டியும் நம்முடன் இருப்பவர்கள் நம் உறவினர்கள் மட்டும் தான்.

எல்லா நல்ல மனிதர்களும் உலகத்திற்கு தகுந்த மாதிரி தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். ஒரு சிலர் உலகத்தை தான் நினைப்பது போல மாற்ற நினைத்து நிம்மதியை இழக்கிறார்கள்.

எதையும் இலவசமாக வாங்க விரும்பாதே. அது சுயமரியாதைக்கு இழுக்கு.  முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டை.

நிதானமாக சிந்தித்து செயல் படுவது, உறுதியோடு செயல் படுவது, கடுமையாக உழைப்பது என்று இருந்தால் மன நிறைவான வாழ்க்கை அமையும்.
----------------------------------------------------------------------------------
4
’ சலனப் பட்ட மனம்..''
..................................

சிறு கல்லை துாக்கி போட்டால் கண்ணாடி சிதறி விடும். அதைப் போல் *மனதில் சிறு சலனம் ஏற்பட்டால் எடுத்த செயல் தோல்வியில் தான் முடியம்..*

சூரியன் மிக மிக சக்தி வாய்ந்தது. எங்கோயோ இருக்கிறது.. ஆனால் ஒருவராலும் அதன் அருகில் போக முடியாது.

ஆனால் அந்த பெரிய சூரியனை கிணற்று நீரில் காண முடியும். கிணற்றுக்குள் அந்த பிம்பத்தை காண முடியும்.

சலனம் இல்லாத கிணற்றில். சூரியனின் பிம்பம் மிகத் தெளிவாகத் தெரியும்.

அதற்கு காரணம் கிணற்றில் சலனம் இல்லை. அதனால் சூரியனின் பிம்பம் மிக தெளிவாகத் தெரிகிறது. அது போலத்தான் நம் உள்ளமும்..

எந்தவித சலனம் இல்லாமல் இருந்தால் தான் நாம் எண்ணிய குறிக்கோளை எளிதில் அடையலாம்..

ஓட்டப்பந்தயம் ஒன்றில் இருவர் மட்டுமே கலந்து பங்கேற்றனர். தொடக்கத்தில் இருவரும் சமமாக ஓடினர்.

ஒரு கட்டத்தில் ஒருவன் களைப்பு அடைந்தான். ஆனால் பந்தயத்தில் தோற்பதை அவன் விரும்பவில்லை.

அதனால் மற்றவனை திசை திருப்பும் விதமாக தங்க ஆப்பிள் ஒன்றை உருட்டி விட்டான். அதை எடுக்க விரும்பிய மற்றவன் கவனம் தடுமாறியது..

இதற்கிடையில் தங்க ஆப்பிளை உருட்டி விட்டவன் வேகமாக ஓடி எளிதில் இலக்கை அடைந்தான்..

ஆம்., நண்பர்களே..,

மனித வாழ்வும் ஓட்டப்பந்தயம் போலத்தான்.. சலனத்திற்கு இடம் கொடுத்தால், நம் எதிர்கால முன்னேற்றம் தடைபடும். அதனால் நிர்ணயித்த இலக்கை அடைய முடியாது.
---------------------------------------------------------------------
5
உன் உணர்வுகள் மதிக்கப்படாத இடத்தில் நீ இருக்காதே - உள்ளுக்குள் அழுது கொண்டு வெளியில் நீ சிரிப்பாய்.

போலி மனிதர்களை நம்பி நீ வாக்குக் கொடுக்காதே - நீ பொய்யனாக காண்பிக்க படுவாய்.

சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபவர்களை நம்பாதே - உன் முடிவிலிருந்து நீயே மாறி விடுவாய்.

மற்றவர்களின் குறைகளைப் பேசுபவர்களோடு சேராதே - ஒரு நாள் இதற்கு நீயும் இரையாக்க படுவாய்.

ஏமாற்றியவர்களோடு திரும்பவும் இணைந்து கொள்ளாதே - நீ மேலும் நோகடிக்கப் படுவாய்.

சரியான முடிவு எடுக்காமல் எந்த செயலிலும் இறங்காதே - உன் வாழ்நாள் முழுதும் நீ துயரப் படுவாய்.

உனக்கு சரி என்று தோன்றினால் யாருக்காகவும் நீ பின்வாங்காதே.
-----------------------------------------------------------------------------------
6
கற்ற நல்ல விஷயத்தை வாழ்வில் பின்பற்றாவிட்டால் கல்வி கற்றது வீண் விரயம் தான்.

தன்னை நேசிக்கும் கணவன் தன் பெற்றோரையும் மதிக்க வேண்டும் என்பதே பெரும்பாலான பெண்களின் விருப்பம்.

தர்மம் செய்ய பழகுங்கள். தவறு செய்ய பயப்படுங்கள். நல்லவை உங்களைத் தேடி வரும்.

தேவைப்படும் இடத்தில் பேசுங்கள். தேவையில்லாத இடத்தில் பேசி பிரச்சனையில் மாட்டிக் கொள்ளாதீர்கள்.

சுயநலம் அதிகமானால் நம்மை ஒரு வட்டத்திற்குள் நிறுத்தி விடும். சுயநலத்துடன் பொதுநலம் சேரும் போது வாழ்க்கை மகிழ்ச்சி தரும்.
----------------------------------------------------------------------------
7
பிரச்சினை வந்தால் கவலைப் படாமல், பிரச்னையை சமாளிக்க மனதை பக்குவப் படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.

முடிந்த வரை பிறரிடம் உதவி கேட்பதை தவிர்த்து விடுங்கள். இல்லை என்றால் வாழ்க்கை முழுவதும் முன்னேற முடியாது.

கணவனை கேட்டு முடிவெடுக்கும் மனைவியும், மனைவியிடம் எதையும் மறைக்காத கணவரும் நல்ல குடும்பத்திற்கான முன்மாதிரி.

நம்முடைய எண்ணம் செயல் யாவும் பிறருக்கு நன்மையும் பயனும் கிடைப்பதாக இருக்க வேண்டும்.

மற்றவர்களுக்கு என்ன தேவையோ, புரியுமோ அதை மட்டும் எடுத்து சொல்வது நல்லது. புரிந்து கொள்ள முடியாததை சொல்வதால் யாருக்கும் பயனில்லை.
--------------------------------------------------------------------------------
8
பெருமையைப் பகிர்ந்து கொள்ள பெற்றோர். மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள மனைவி. செல்வத்தை பகிர்ந்து கொள்ள மக்கள். மனக் குழப்பம் தீர நல்ல நண்பர்கள். இவை அமைந்தால் இல்லறம் நல்லறமாகும்.

அடுத்தவருக்கு உதவ பணமோ வசதியோ அனுபவமோ கல்வியோ  அவசியமில்லை. அக்கறை இருந்தால் போதும்.

கணவன் மனைவி சண்டையில் இருவரது பெற்றோரும் விலகி இருந்தால் பிரச்சினைக்கு எளிதாக தீர்வு கிடைத்து விடும்.

வாழ்க்கையில் இல்லறம் நல்லறமாக புரிதல் அவசியம். புரிதல் இருந்தால் பிரிதல் என்றுமே வராது.

ஆண்கள் பெரும்பாலும் மனைவியை விட மற்ற பெண்கள் அழகு என்று நினைப்பார்கள். பெண்கள் பெரும்பாலும்  கணவனை விட மற்ற ஆண்கள் புத்திசாலி என்று நினைப்பார்கள்.
---------------------------------------------------------------------------------
9
ஒருவர் திறமையை ஒருவர் ஊக்குவித்து, ஒருவர் கவலையில் ஒருவர் பங்கு கொண்டு, ஒருவர் குறையை ஒருவர் பொறுத்து, ஒருவர் துன்பத்தில் ஒருவர் ஆறுதல் அளித்து, ஒருவர் முயற்சியில் ஒருவர் ஒத்துழைத்து, ஒருவர் கோபத்தில் ஒருவர் அமைதி காத்து, ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்வதே நல்ல இல்லறம்.

சந்தித்த பல ஏமாற்றங்களை எல்லோரிடமும் சொல்ல வேண்டாம். உங்கள் பலவீனத்தை தெரிந்து கொண்டு அவர்களும் ஏமாற்ற நினைப்பார்கள்.

ஒருவரின் கோபத்தை குறைக்க இன்னொருவரின் மௌனமே சிறந்த இல்லறம்.

உலகத்தில் யாரும் சந்தோசமாக இருப்பதாக சொல்லவில்லை. தானே புத்திசாலி என்று நினைப்பது போல் தானே துக்கமுள்ளவன் என்று நினைக்கிறார்கள்.

நீங்கள் முயற்சி செய்யாமல், எதுவும் உங்கள் விருப்பம் போல் தானாக நடக்காது.
----------------------------------------------------------------------------------------
10
ஆணும் பெண்ணும் எத்தனை சாதித்தாலும் எவ்வளவு சம்பாதித்தாலும், ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்கிறோம் என்ற உணர்வை இருவரும் புரிந்து கொள்ள வேண்டும். இதுவே இனிய இல்லறம்.

பணத்தை தொலைத்தாவது வாழ்வைத் தேட வேண்டும். வாழ்வைத் தொலைத்து விட்டு பணத்தை தேடக் கூடாது.

உங்கள் மனதை சரியாக அறிந்தவர்கள், உங்கள் செயலை தவறாக நினைக்க மாட்டார்கள்.

சுயமரியாதையை இழந்து பணம் சம்பாதிக்கக் கூடாது. பிறகு அந்த அவப் பெயர் நீங்காது.

சந்தோஷமோ துக்கமோ சமநிலையில் இருக்க பழகினால்,
===================================================================
படித்தேன்: பகிர்ந்தேன்!!!!
அன்புடன்
வாத்தியார்
========================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.9.19

அசத்தலான அறிவுரைகள்!!!!!


அசத்தலான அறிவுரைகள்!!!!!

1. மனிதனின் நல்ல பண்புக்கு காரணம், அவன் இருக்கக் கூடிய இடம், பழகக் கூடிய மனிதர்கள், அவன் தாய் தகப்பனார்.

2. விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருக்கும் நபரை பார்க்க போனால், அவரது குடும்ப நபர்களிடம் எப்படி நடந்ததென கேட்காதீர்கள், அதை சொல்லிச் சொல்லி அவர்கள் மனம் இடிந்து போகும், அதை மற்றவர்களிடம் கேளுங்கள், இவர்களிடம் ஆறுதல் மட்டும் சொல்லுங்கள்.

3. நம்மால் ஒருவருக்கு பிரச்சனைகள் வருகிதென்றால் அந்த இடத்தை விட்டு விலகிடனும் அது உறவானாலும் சரி, நட்பென்றாலும் சரி.

4. பிறரை எண்ணி தேற்றிக் கொள்வதும் மனம் தான். பிறரைப் போல் எண்ணி தாழ்த்திக் கொள்வதும் அதே மனம் தான்._*

5. நம் மதிப்பு தெரியாதரிடம் மரியாதையை எதிர் பார்ப்பது தவறு.

6.அளவுக்கு அதிகமான புத்திசாலித்தனம் சில வேளைகளில் உங்களை சிறந்த முடிவை எடுக்க அனுமதிக்காது._*

7.சோகமான நேரம் கூட சுகமாக மாறிப் போகும், வலிகள் கூட தொலைந்து போகும் நல்ல நண்பர்களுடன் இருந்தால்.

8.நீங்கள் உங்களை பற்றி நல்ல விதமாக உணராத வரை இன்னொரு நபரை நல்ல விதமாக உணரச் செய்வது சாத்தியமில்லை.

9. உறவு, நட்பு, தொழில் கூட்டாளி எதிலும் ஒருவரிடம் பழகும் போது பிடிக்கவில்லை எனில் ஆரம்பத்திலேயே விலகி விடுங்கள், அது இருவருக்குமே நல்லது.

10. பெண்ணிற்கு சிறந்த கல்வியை வழங்குவதோடு நல்ல துணையை அமைத்துக் கொடுத்து விடுங்கள். கல்வி அவளுக்கு புகழைத் தந்தாலும் புரிந்து கொண்ட கணவனால் மட்டுமே நிம்மதியை தர முடியும்.*

11. அநியாயத்தை தட்டி கேட்பதில் எல்லாருக்குமே விருப்பம் தான். ஆனால் அதையும் வேடிக்கை மட்டுமே பார்க்கும் கூட்டம் தான் நம்மை ஊமையாய் கடந்து விட செய்கிறது.

12. கொஞ்ச காலம் எல்லா பிரச்சினைகளையும் ஒதுக்கி வைக்கலாம் என்று பார்த்தால், அது நம்ம கூடவே ஒட்டிக் கொண்டு வருகிறது.*

13. தெரியாததை தெரிந்து கொள்ள  வெட்கப் பட்டுக் கொண்டு அமைதியாக இருப்பதை விட, தைரியமாக எல்லா சந்தேகங்களையும் தெளிவு படுத்திக் கொள்வது சிறந்தது.

14. சில ஆண்களின் எண்ணம், பெண்கள் அனைவரும் சுயநலவாதிகள் என்று. ஆனால் பல பெண்கள் தனக்கென வாழ்ந்ததே இல்லை.

15. பணக்காரராக இருப்பதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று நீங்கள் விரும்பும் அனைத்தையும் கொண்டிருக்க வேண்டும். மற்றொன்று உங்களிடம் இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.*

16. ஒரு மனிதன் தன்னை மிகச் சிறந்தவராக எப்படி எல்லாம் தயார் படுத்திக் கொள்ளலாம் என்பதற்கு நிறைய வழிமுறை வகுப்புகள் இருக்கின்றன, என்னவொரு பிரச்சினை எனில் ஒழுங்கற்ற, சீரற்ற ஒரு சமூக அமைப்பில் இருந்து கொள்வதால் இந்த வழிமுறைகள் எல்லாம் பயனற்றுப் போகின்றன.

17. தான் உண்டு தன் வேலை உண்டு" என்று இருப்பதற்கு மறுபெயரே சுயநலம்.

18. பிறரைப் பற்றி பொறமைப் பட நேரமிருந்தால், அதை உங்கள் அடுத்த உயர்வுக்கான சிந்தனையாய் மாற்றிக் கொள்ளுங்கள். பயனிருக்கும்.

19. *உங்களைக் குறைத்து மதிப்பிடுபவரிடம், உங்கள் உயரத்தை "விளக்கிக் கொண்டு" இருக்காதீர்கள்.*

20. தான் எந்த ஒரு வேலையும் செய்து கஷ்டப் படக் கூடாது என நினைப்பவர்கள் சோம்பேறியாகி விடுகிறார்கள்.

21. 🏵வாழ்க்கையில் நம்மை காயப் படுத்திய விஷயங்கள் கற்றுக் கொடுத்த பாடங்கள் தான் நம் முன்னேற்றத்திற்கான வழிகள்.

22. பெண்களின் திருமணதிற்கு "சீர்" செய்வதோடு, பெண்களின் திருமண வாழ்க்கையை "சீர்"  செய்வதே ஒரு சிறந்த தந்தையின் கடமையாகும்.

23. *மகிழ்ச்சி வேண்டுமானால் பணம் சார்ந்ததாக இருக்கலாம். ஆனால் நிம்மதி என்றும் மனம் சார்ந்தது தான்.*

24. நாம் கஷ்டப் படும் போது வருத்தப் படாதவர்கள், நாம் சந்தோஷமாக  இருக்கும் போது மட்டும் பொறாமைப் படுவார்கள்.

25._உறவுகளுக்கு முக்கியத்துவம் தருவதை விட முதலில் உங்கள் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். ஏனெனில் உங்கள் வாழ்வை தீர்மானிப்பது உறவுகளல்ல உங்கள் உணர்வுகள் தான்._*

26. _நாம் நடந்து கொள்ளும் முறையே நம்மை சிறப்பிக்கும்_*

27. உங்களின் அருமை தெரிந்தவர்களிடம்  கோபம் காட்டாதீர்கள்!

28. உங்களின் குணம் அறியாதவர்களிடம் மரியாதை எதிர் பார்க்காதீர்கள்!*

29. குறைகளை மட்டுமே கூறாதீர்கள்!

30. நிறைகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் கூறுங்கள்!*

31. பெற்றோருக்கு முதலில் பிள்ளையாய் இருங்கள்! நாட்டுக்கு நல்லவனாய் பிறகு மாறுவீர்கள்!

32. கைபிடித்தவளை கலங்க வைக்காதீர்கள்! காலக்கடைசியில் அவளே உங்கள் தாயாவாள் மறக்காதீர்கள்! 

33. நண்பன் வீடென்றால் இழுத்து போட்டு எல்லா வேலைகளையும் செய்யுங்கள்!

34. எதிரி என்றால் தள்ளி நின்று பேசுங்கள்!

35. துரோகி என்றால் அந்த திசையே செல்லாதீர்கள்!

36. வாழ்வில் விட்டு கொடுங்கள் ; வாழ்க்கையையே விட்டு கொடுக்காதீர்கள்!*
-------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
=================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.7.19

அசத்தலான அறிவுரைகள்; அவசியம் படியுங்கள்!!!!


அசத்தலான அறிவுரைகள்; அவசியம் படியுங்கள்!!!!

1. கடவுளிடம் நம்பிக்கை கொண்டால் நிம்மதியுடன் வாழலாம். நியாயத்தின் பக்கம் உங்களால் நிற்க முடியும்.

2. ஏதோ தவறு செய்து விட்டோம் அடுத்ததில் சரியாக இருப்போம் என கடந்து போக பழகியவர்களே வெற்றி பாதையை சீக்கிரம் அடைந்து விடுவார்கள்.

3. கடன் கொடுத்து பார் நீ எவ்வளவு முட்டாள் என்று தெரியும். கடன் கேட்டு பார் அடுத்தவன் எவ்வளவு புத்திசாலி என்று உனக்கே புரியும்.

4. மனசு ஏத்துக்கிட்டா ஒரு விஷயத்த சந்தோஷமா செய்யுறோம். அதே மனசு ஏத்துகிடலனா பிறர் பார்வைக்காக மட்டுமே செய்கிறோம்.

5. வாழ்க்கையில் சந்தோசத்தை மட்டும் எதிர் நோக்கி சென்றால். நமக்கு துன்பம் தான் வந்து சேரும். நமக்கு வரும் கஷ்டங்களை ஏற்று எதிர் நோக்கி செல்லுங்கள். நீங்கள் எதிர்பாராத சந்தோசம் உங்களை தேடி வரும்.

6. உங்களை வெறுப்பவர்களிடம் இருந்து விலகியே இருங்கள். வெறுப்பின் வலியை வேறு யார் மூலமோ அவர்களுக்கு புரிய வரும்.

7. கோபத்தில் உதிர்க்கும் வார்த்தைகள் அனைத்தும் உறவிற்குள் பிரிதலை ஏற்படுத்துபவை. ஆதலால் சற்று நிதானமாக சிந்தித்து வார்த்தைகளை உபயோகிப்பது சிறந்தது.

8. நம் மீது அக்கறை உள்ளவர்கள் என்றாலும், அவர்கள் நம்மைப் பற்றி கூறும் விமர்சனங்கள் மனதிற்குப் பிடிப்பதில்லை.

9. சில சமயம் நேரமே போக மாட்டேங்குது, சில சமயம் நேரம் எங்க போச்சுன்னே தெரியல. ஆனா வாழ்க்கை அசராம அதே இடத்துல தான் இருக்கு.

10. கடவுளுக்கும், உண்மைக்கும் முக்கியத்துவம் தராமல், மனம் போன போக்கில் வாழ்ந்தால் வாழ்வில் வீழ்ச்சி அடையப் போகிறாய் என்பது பொருள்.

11. உங்கள் வாழ்க்கை நீங்கள் எதிர் பார்த்தது போல் இல்லை என்றால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதை நீங்கள் நினைத்தது போல் மாற்ற உங்களால் மட்டுமே முடியும். அதுவும் நீங்கள் முயற்சி செய்தால் மட்டுமே நடக்கும்.

12. அவருக்கு என்ன நிம்மதியான வாழ்க்கை என்பது பணம் சார்ந்தது அல்ல நல்ல குடும்ப உறுப்பினர்கள் சார்ந்தது.

13. பார்த்தவுடன் பழகாதே. பழகியவுடன் இணையாதே. இணைந்தவுடன் பிரியாதே. பிரிந்தவுடன் வருந்தாதே. வருந்தியவுடன் தேடாதே.

14. ஒரு உறவை முறித்துக் கொள்ள பொய்களை விடவும் உண்மைகளே அதிகக் காரணம் ஆகின்றன.

15. முன்னெல்லாம் பிரச்சினையைத் தீர்க்கப் பலர் இருந்தார்கள். இப்போதெல்லாம் தூண்டி விட பலர் விரும்புகிறார்கள்.

16. நமது பிரச்சனைகளை பிறர் உதவியுடன் தீர்த்துக்கலாம் என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தால், பிரச்சனைகள் அதிகரிக்குமே தவிர அது கொஞ்சம் கூட குறையாது.

17. தன் மகள், மகன் கேட்கும் எந்தப் பொருளும் வீண் செலவாய்த் தெரிவதில்லை பெற்றோருக்கு.

18. மெட்சூரிட்டி என்பது புரிஞ்சுக்குறதோ புரிய வைக்கிறதோ இல்லை. சூழ்நிலையைப் பொருத்து நடந்து கொள்வது.

19. காயப்படுத்துகிற மாதிரி எல்லாருக்குமே பேசத் தெரியும். சிலருக்கு மட்டும் தான் எதைப் பேசக் கூடாதுனு தெரிஞ்சிருக்கு.

20. வாழ்க்கையில நல்லது கெட்டதை புத்தகத்தை விட தெளிவா புரிய வைக்கறது நாம் பழகும் சக மனிதர்கள் தான். எனவே 'ஆகச் சிறந்த புத்தகம் மனிதன்'

21. எல்லா விதத்திலும் ஒத்துப் போவது நல்ல நட்பு, ஆனால் கருத்து மோதல் ஏற்படும் போதிலும் அதைத் தாங்கிக் கொள்வது தான் உண்மையான நட்பு.

22. மகிழ்ச்சி  நம்மைத் தேடி வருவதில்லை!  நாம் தான் அதை தேடிச் செல்ல வேண்டும்!

23. வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களை செய்வதில்லை.  அவர்கள் செய்வதை வித்தியாசமாய் செய்கிறார்கள்.

24. ஓரு சிலர் மனசு கஷ்டமா இருந்தா யாருடனும் பேசாமல் அமைதியாக இருப்பார்கள், இதைப் புரிந்து கொண்டால் பிரச்சனை வராது.

25. உடனடி சந்தோஷத்தை மட்டும் பார்க்காதீர்கள், பின்விளைவுகளை யோசித்து மனசைக் கட்டுப்படுத்தி முடிவு செய்யுங்கள்.

26. சென்றதை சிந்திப்பவனை விட, இனி மேல் நடக்க இருப்பதைச் சிந்திப்பவனே புத்திசாலி.

27. எல்லாவற்றிலும் திறந்த புத்தகமாக இல்லாமல் கொஞ்சம் புரிந்தும் புரியாமலும் இருந்து விடுங்கள். இவ்வளவு தானா இவர் என்று இல்லாமல் கொஞ்சம் புதிர் சுவாரஸ்யமாக இருக்க உதவும்.

28. சிலர் யாரைப் பார்த்தாலும் வெறுப்பாக பேசுவார்கள். மற்றவர்களிடம் சாதாரணமாகப் பேச யார் பழக்குவது.

29. முடியாத விஷயங்களை மறுத்துச் சொல்லுங்கள். எல்லோரையும் திருப்திப் படுத்தும் எண்ணம் வேண்டாத விஷயம். செய்ய முடியாதவற்றையும், செய்ய விரும்பாதவற்றையும் நாசூக்காய் மறுத்துச் சொல்வதே நல்லது.

30. மற்றவர்கள் பிரச்சனைகளை, கவலையை பகிர்ந்து கொள்ளும் போது முழுமையான அக்கறையுடன் கேட்டு ஆறுதல் கூறுவது தான் மனிதாபிமானம்.

31. எதையும் எதிர் பார்த்து செல்லாதீர்கள். சூழ்நிலை எவ்வாறு இருப்பினும் அதை அவ்வாறே ஏற்றுக் கொள்ளுங்கள்.

32. உரிமையோடு உரையாடுவதாக எண்ணி உண்மையான உறவுகளுக்குள் விரிசலை ஏற்படுத்தி விடாதீர்கள்.

33. இன்னொருத்தரோட இக்கட்டனா சூழ்நிலைய தனக்கு சாதகமா மாத்தி மத்தவங்களை கஷ்டப் படுத்துவது தவறு.

34. தகுதியும் வயதும் இருந்தும், வேலைக்கு முயற்ச்சி செய்யாதவர்கள் வாழ்வதே வீண்.

35. நம்மிடம் வசதி இருக்கும் போது உதவிகள் கேட்க ஆயிரம் உறவுகள் வந்து விடும். நம்மிடம் வசதி இல்லை என்றால் நமக்கு ஆறுதல் சொல்லக் கூட உறவினர்கள் வருவதில்லை.

36. எமோஷனலா சிந்திக்கும் போது நியாமான விஷயங்களைக் கூட நமது மனது ஏற்றுக் கொள்ளத் தடுக்கிறது.

37. கடைசி வரை கிடைக்காத விஷயஙுகளுக்கு, முதலில் இருந்தே போராட வைக்கிறது வாழ்க்கை.

38. பெரிய பிரச்சனைகள் எல்லாம் அதுவாக சரியாகி நகரும் வாழ்க்கையில் சிறு பிரச்சனை எல்லாம் நினைத்துப் பார்க்காத கஷ்டத்தை தருவது தான் வாழ்க்கையின் இயல்பு.

39. தேவை என்றால் சந்தர்ப்பத்தை உருவாக்கி பேசி விடுவார்கள். தேவை இல்லை என்றால் பிஸி என்ற வார்த்தையோடு நிறுத்தி விடுவார்கள்.

40. மன குழப்பமில்லாத தருணங்களில்தான் பிறருக்கு உதவிகள் கூட செய்ய முடியும்.

41. உங்களைப் புரிந்து கொண்டு உங்கள் மீது வரும் சிலரின் அக்கறை உங்களை கஷ்டப் படுத்தாது உங்கள் மீதுள்ள பொறாமையால் அக்கறை உள்ளது போல் நடிப்பவர் காட்டும் அக்கறை உங்களைக் கஷ்டப் படுத்தும்.

42. தோல்வியை சந்திக்கும் ஒவ்வொரு பொழுதும் நினைக்க வேண்டிய ஒரு விஷயம் வாழ்க்கை இன்னும் இருக்கிறது என்று.

43. யாராலும் உங்கள் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க முடியாது. ஆனால் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஆலோசனைகளை முன் வைக்க முடியும்.

44. ஒவ்வொரு மனிதனது வாழ்விலும் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள்.

45. கஷ்டப் பட்டு சம்பாதிக்கும் பணத்தை தனக்கு மட்டும் செலவு செய்ய யோசிக்கும் குடும்பஸ்தன் பெற்ற பிள்ளைகளின் செலவுகளில் அதிகம் யோசிப்பதில்லை.�
----------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!