மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

25.10.24

Astrology - தோஷம் எத்தனை தோஷமடா?

Astrology - தோஷம் எத்தனை தோஷமடா?

சென்றவாரம் மின்னஞ்சலில் எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் அன்பர் ஒருவர் தன் ஜாதகத்தில் லக்கினத்தில் ராகுவும், ஏழில் கேதுவும் இருப்பதை வைத்து தனக்குக் காலசர்ப்ப தோஷம் இருக்கிறதா என்று கேட்டிருந்தார். அத்துடன் தனக்கு நாக தோஷம் இருக்கிறதா என்றும் கேட்டிருந்தார்.

காலசர்ப்ப தோஷத்தைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். அதை மீண்டும் எழுதி, பல பேர்களுடைய சாபத்தை வாங்கிக்கொள்ள விரும்பவில்லை. இப்போது அந்த அன்பர் புதிதாகக் குறிப்பிட்டுள்ள நாக தோஷத்தை மட்டும் பார்ப்போம்!
--------------------------------------------------------------------------
நாக தோஷம் என்பது லக்கினம், சந்திரன், ராகு ஆகிய மூன்றும் ஒன்றாக இருந்தால் ஏற்படக்கூடியது. அத்தோடு லக்கினம், சுக்கிரன், ராகு ஆகிய மூன்றும் ஒன்றாக இருந்தாலும் ஏற்படக்கூடியது. அது எல்லா லக்கினத்திற்கும் பொருந்தும். ராகுவிற்குப் பதிலாக கேது அந்த இடத்தில் இருந்தாலும் அத்தோஷம் உண்டு.

அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பு என்ன?

உடல் உபாதைகள், நோய்கள்
எல்லாச் செயல்களிலும் ஒரு மந்தமான நிலைமை, தாமதம்
திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள்.
இம்மூன்றில் ஒன்று உண்டாகும். அது ஜாதகத்தில் அததற்கு உரிய காரகர்களின் நிலையைப் பொறுத்து உண்டாகும்

பரிகாரம் உண்டா?
உண்டு!
கசை வைத்துச் செய்யும் பரிகாரங்கள் அல்ல!
உங்கள் காசு யாருக்கு வேண்டும்? அதுவும் கிரகங்களுக்கு எதற்காக?
மந்திரம், யந்திரம், பரிகாரத் தகடுகள் என்று காசையும் நேரத்தையும் வீணாக்குவதை விட, பிரார்த்தனை செய்யுங்கள்.
கடுமையாகப் பிரார்த்தனை செய்யுங்கள்.
பாதிப்புக்கள் குறைந்துவிடும். நீங்கிவிடும். உங்கள் வாழ்க்கை ஒளிரும்!

யாரை வணங்க வேண்டும்?
ராகு, கேதுக்களை வணங்குங்கள். அவர்களுடைய ஸ்தலத்திற்குச் சென்று வணங்குங்கள்
அல்லது அதைவிட மேலாக உங்கள் நட்சத்திரத்தன்று உபவாசம் இருந்து சிவபெருமானை வணங்குங்கள். ஒன்பது மதங்கள் அவ்வாறு தொடர்ந்து செய்யுங்கள். அவர் கருணை வைப்பார். அவர் கருணை வைத்தால் என்னதான் நடக்காது?

அன்புடன்,
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com