22.2.21

Astrology: தொடாமல் அவள் உதிர்ந்தாள்!!!!!


Astrology: தொடாமல் அவள் உதிர்ந்தாள்!!!!! 

அம்மணி  ஒருவரின் ஜாதகத்தைக் கீழே கொடுத்துள்ளேன். பெண்மணிக்கு திருமணம் நடந்தது. ஒரு நாள் கூட கணவன் வீட்டில் வாழவில்லை. தாய் வீட்டிற்குத் திரும்பி வந்துவிட்டாள். கணவன் குடும்பத்தார் தங்கமானவர்கள். யாருடைய சிபாரிசும் எடுபடவில்லை. எனக்குத் திருமண வாழ்வே வேண்டாம் என்று கூறி திரும்பிச் செல்ல மறுத்துவிட்டாள்.  

தொட்டால் பூ மலரும். கை படாமல் அவள் உதிர்ந்தாள்!!!!

ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்.?

வாருங்கள் ஜாதகத்தை அலசுவோம்!!!! 

குடும்ப வாழ்க்கையே இல்லாத ஜாதகம் அது. குடும்ப ஸ்தானமாகிய 2ம் வீடு மொத்தமாகக் கெட்டுள்ளது. குடும்ப ஸ்தானத்தில் 12ம் வீட்டு அதிபதி சந்திரன் உடன் ராகுவின் கூட்டணி. அந்த வீட்டுக்காரன் புதன் நீசமானதோடு லக்கினத்திற்கு எட்டில். உடன் கேது. மற்றும் மாந்தி 

4 மற்றும் 9ம் வீட்டுக்குரியவனும் யோககாரகனுமான செவ்வாய் நீசமானதோடு மட்டுமல்லாமல் 12ல் மறைவு (விரைய ஸ்தானம்)

பெண்களின் ஜாதகத்தில் பாக்கியாதிபதி நீசமாகி கெட்டிருந்தால் அவயோகம்.

சிம்ம லக்கினம். லக்கினாதிபதி சூரியன் 8ல் மேலும் லக்கினாதிபதி பாப கர்த்தாரி யோகத்தில்

 மேற்கூரிய காரணங்களால் ஜாதகிக்கு குடும்ப வாழ்க்கை இல்லாமல் போய் விட்டது.

 கேள்விக்குரிய ஜாதகம் கீழே உள்ளது:

அன்புடன்

வாத்தியார்

------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4 comments:

  1. வணக்கம் குருவே,
    அட்டகாசமான அலசல்.
    இப்படியும் கூட ஜாதகங்கள் அமையுமா!

    ReplyDelete
    Replies
    1. அமைந்துள்ளதே சாமி. நன்றி!

      Delete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com