17.7.19

எதற்காகச் சேர்த்தார்கள்?


எதற்காகச் சேர்த்தார்கள்?

காரில் சென்றுகொண்டிருந்த சங்கர்ராமன் வண்டியின் முன் சக்கரம் ஒரு பக்கமாக இழுப்பதை உணர்ந்து, தன்னுடைய காரைத் தார் ரோட்டைவிட்டு இறக்கி ஒட்டியிருந்த மண் பகுதியில் நிறுத்தினான்.

இறங்கிவந்து பார்த்தால் - நினைத்தது சரிதான் இடது பக்கத்து டயர் பங்ச்சராகியிருந்தது.

அது புறநகர்ப் பகுதி. நகர எல்லை நான்கு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.

காரை நிறுத்திய இடம் ஒரு மன நோய் மருத்துவ மனையின் ஸைட் கேட் பகுதி.. எதிரில் பெரிய தொழிற்சாலையின் நீண்ட வளாகம்.

சங்கர்ராமன் யோசித்தான்.வேறு வழியில்லை நாமே ஸ்டெப்பினியை மாற்றி விடுவோம் என்று முடிவு செய்தான். டிக்கியில் இருந்து ஜாக்கி, வீல் ஸ்பானர், ஸ்பேர் டயர் என்று எல்லாவற்றையும் இறக்கிக்கீழே கொண்டுவந்தான்.

பங்ச்சரான டயரைக் கழற்ற ஆரம்பித்தான்.

முதலில் சக்கரத்தில் இருந்த நான்கு நட்டுக்களையும் கழற்றிக்கீழே வைத்தான். பிறகு வலுவாக அசைத்துச் சக்கரத்தை வெளியே எடுக்க முயன்றான்.

அப்போதுதான் அது நடந்தது. மருத்துவனனை வளாகத்திலிருந்து குதித்த மன நோயாளி ஒருவன், ஓடி வந்து கீழேயிருந்த நான்கு நட்டுக்களையும் தன் கையில் எடுத்துக் கொண்டு ஓட அரம்பித்தான்.. அப்படி ஓடியவன் சுவர் ஏறி மருத்துவ மனையின் உட்புறம் குதித்து மறைந்து விட்டான்.

எல்லாம் மின்னல் வேகத்தில் நடந்து விட்டது.

சங்கர்ராமன் நொந்துபோய் விட்டான்.

"நேரம்டா சாமி" என்று சோர்ந்துபோய் அந்த மருத்துவ மனையின் ஸைட் கேட்டையும், ரோட்டையும் இணைக்கும் சிறிய பாலத்தின் கைப்பிடிச் சுவற்றின் மேல் உட்கார்ந்தான்.

ஒரு நிமிடம்கூட ஆகியிருக்காது. யாரோ தன்னை அழைப்பதை உணர்ந்து திரும்பிப் பார்த்தான். ஒரு இருபது வயது மதிக்கத்தக்க இளைஞன் மருத்துவ மனையின் உட்புறம் இருந்து, கேட்டின் கம்பிகளுக்கிடையே கையை நீட்டி இவனை அழைத்தான்.

சங்கர்ராமனும் அருகே சென்று "என்ன?" என்று கேட்டான்.

" ஸ்டெப்பினியை மாற்றும் வேலையை ஏன் பாதியிலேயே நிறுத்திவிட்டாய்?" என்று அவன் கேட்க, சங்கர்ராமன் இப்படிப் பதில் சொன்னான்.

"நட்டுக்கள் இல்லாமல் எப்படி மாற்றுவது?"

"ஏன் முடியாது? மற்ற மூன்று சக்கரங்களிலிருந்தும் தலா ஒரு நட்டைக் கழற்றி இதை மாற்று. டவுனுக்குப் போனவுடன் புதிதாக நான்கு நட்டுக்கள் வாங்கி எல்லாச்சக்கரங்களையும் சரி செய்து விடு."

வியப்பின் எல்லைக்கே போய்விட்டான் சங்கர்ராமன். ஆமாம், இப்படியும் செய்யலாமே! இது ஏன் நமக்குத் தோன்றாமல் போய் விட்டது என்று நினைத்தான்.

உடனே அவனைப் பார்த்துக்கேட்டான்," இவ்வளவு தெளிவாக இருக்கிறாயே - இங்கே எப்படி வந்து சேர்ந்தாய்?"

அதற்கு அவன் சொன்னான்.

"மனநோய் சிகிச்சைக்காகத்தன் என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்தார்கள் - அறிவு இல்லை என்பதற்காக அல்ல!"
-----------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

  1. Good morning sir excellent story thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. Respected Sir,

    Happy morning... Excellent post... Last line touching line...

    Thanks for sharing...

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  3. அன்பின் ஐயா,

    ஆஹா அருமை.......அருமை.....உருகிவிட்டேன் ஐயா...........


    நல்ல படிப்பினை மிகுந்த வரிகள்.

    என்றும் அன்பும் நன்றியும் உரித்தாகுக.

    அன்புடன்
    விக்னசாயி.

    ReplyDelete
  4. //////Blogger Shanmugasundaram said...
    Good morning sir excellent story thanks sir vazhga valamudan//////

    உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete
  5. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Excellent post... Last line touching line...
    Thanks for sharing...
    With regards,
    Ravi-avn//////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசி ரவி!!!!!

    ReplyDelete
  6. ////Blogger vicknasai said..
    அன்பின் ஐயா,
    ஆஹா அருமை.......அருமை.....உருகிவிட்டேன் ஐயா...........
    நல்ல படிப்பினை மிகுந்த வரிகள்.
    என்றும் அன்பும் நன்றியும் உரித்தாகுக.
    அன்புடன்
    விக்னசாயி.///////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விக்னசாயி!

    ReplyDelete
  7. /////Blogger Selvaraj said...
    Spr story/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி செல்வராஜ்!

    ReplyDelete
  8. எந்த நேரத்தில என்ன வந்து விழுகப்போகுதோ?
    எல்லாம் நம்ம நேரம் டா சாமி...

    ReplyDelete
  9. /////Blogger S.Shanmuganandam M.A.B.Ed., said...
    எந்த நேரத்தில என்ன வந்து விழுகப்போகுதோ?
    எல்லாம் நம்ம நேரம் டா சாமி...//////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com