18.7.19

வாத்தியாருக்கு வால் உண்டா?


வாத்தியாருக்கு வால் உண்டா?

அதை ஏஞ்சாமிகளா கேக்கிறீக! இன்னிக்குக் காலைல ஹெல் மாஸ்டரு - அதுதான் தலைமை வாத்தியார் (நம்ம பசங்க வச்ச பேரு சாமி - நம்மள மாட்டவிட்ராதிங்க ராசாக்களா) என்னையப் புடிச்சு காச்சு காச்சுன்னு காச்சிப்புட்டாரா - அதே வேகத்தோட வந்து பசங்களுக்கெல்லாம் பாடம் நடத்த ஆரம்பிச்சேன்.

எல்லாப் பயபிள்ளைகளும் என்னைக் கெடுத்ததுமில்லாம நாங்களும் தேன்கூடு போட்டிக்குப் போயி எழுதிட்டு வர்றோம் அய்யான்னுட்டுப் பொட்டாய்ங்ய. அதுக்குத்தான் காலையில எனக்கு ஹெல் மாஸ்ட்டருகிட்ட அந்த டோசு!

வாரத்தில ஒரு நாளாவது பாடம் நடத்த வேண்டாமா சாமி?

சரின்னு புத்தகத்தைத் தொறந்து வச்சு இன்னைக்கு என்ன பாடம்டா நடத்தலாம்னு யோசிச்சேன். போனவாரம் எந்த இடத்தில முடிச்சோம்னு எனக்கே ஞாபகம் இல்லை

கண்ணில பட்டது ANIMALS ங்கிற பாடம். சரி இந்த வானரங்களுக்கு அந்த வானரங்களை பத்தி நடத்தினாத் தான் சரியா வரும்னு அதையே நடத்த ஆரம்பிச்சேன். 

என் போதாத நேரம் சும்மா பாடத்தை நடத்தியிருக்கக் கூடாதா? பொது அறிவுல ஒரு கேள்வியைக் கேட்டுப் பிட்டே பாடத்தை ஆரம்பிப்போம்டா சாமின்னு ஒரு கேள்வியைக் கேட்டேன். அதுவும் தெரியாத்தனமா நம்ம பார்த்திபன் சாயல்ல இருக்கிற ஒரு பையனாப் பார்த்துக் கேட்டுப்பிட்டேன்

அவன் பண்ணின கூத்தைக்கேளுங்க. வகுப்பே சிரிப்பா சிரிச்சுப் போச்சு. சிரிப்பு அடங்கெறதுக்கு அஞ்சு நிமிஷம் ஆச்சுன்னா பார்த்துக்குங்களேன்

அப்படி என்ன சிரிப்புங்கிறீங்களா"

நீங்களே பாருங்கள்:

"டேய் எங்க கரெக்டா சொல்லு - மனிதக் குரங்குக்கு வால் இருக்கா - இல்லையா?"

அவன் கணீர்ன்னு குரல் கொடுத்துச் சொன்னான்

"சார், திரும்பி நில்லுங்க பார்த்திட்டுச் சொல்றேன்!"

எப்பிடியிருக்குப் பாருங்க - எல்லாம் கலி காலம்!

"Good Jokeடா சாமி" ந்னு சொல்லி அவன் உக்காரச் சொல்லிட்டேன்

வேறென்ன செய்யமுடியும்?

அடிக்கவா முடியும்?

பொம்பிளப்பிள்ளங்களை அடிச்சா - ஸ்கூல் முடிஞ்சவுடனே சாயங்காலம் 'மகளிர் காவல்' நிலையத்தில போய் உக்கார்ர மாதிரி ஆயிடும். பசங்கள அடிச்சா சாயங்காலம் ஏதாவது கட்சி ஆபீஸ்ல போயி உக்கார்ர மாதிரி ஆயிடும். எல்லாப் பயல்களுக்கும் ஏதாவது கட்சித் தொடர்பு இருக்கய்யா, கட்சித் தொடர்பு இருக்கு!

அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு யோசிச்சுப் பார்த்தேன்.

நம்ம வகுப்பில சார்ஜாவிலேயிருந்து இங்கவந்து தங்கிப் படிக்குதே ஒரு தம்பி - அந்தத்தம்பிகிட்ட இதே கேள்வியைக் கேட்டிருந்தா என்ன பதில் வந்திருக்கும்?

"டேய் கண்ணா, கரெக்டா சொல்லு - மனிதக் குரங்குக்கு வால் இருக்கா - இல்லையா?"

"சார் நீங்க எந்தக் குரங்கைக் கேக்கிறீங்க? உங்களையும், ஹெட் மாஸ்டரையும் சேர்த்து நம்ம ஸ்கூல்ல மொத்தம் 25 குரங்குகள் இருக்கு - நீங்க எந்தக்குரங்குன்னு சொன்னாத்தான் நான் கரெக்டா பதில் சொல்லமுடியும்!"

"எங்களுக்குள்ள அப்படியேன்னடா ராசா வித்தியாசம்?"

" இல்ல சார், சில பேருக்கு வெட்டிட்டோம். இன்னும் சில பேருக்கு வெட்டாம இருக்கு!"

அந்தத் தம்பி பெரிய இடத்துப் பிள்ளை - இப்படித்தான் சொல்லியிருக்கும். நல்ல வேளை, அந்தத் தம்பி இன்னிக்கு பள்ளிக்கூடத்துக்கு வரவில்லைடா சாமி!

சரி, சரி சொல்லவந்த மேட்டெருக்கு வாரேன்

வாத்தியாருக்கு வால் உண்டா?

வாத்தியாருக்கு மட்டுமில்ல சாமி, மனுசனாப் பொறந்த எல்லோருக்குமே வால் உண்டு - ஆனா அந்த வால் உடம்பில கெடையாது - மனசுல இருக்கு!

சமயம் வரும்போது எல்லாரும் அதைக் காட்டிருவாங்க!

நாங்க அதான் வாத்தியாருங்க எப்ப காட்டுவோம்னா - மனசுக்குள்ளேயே வச்சிரிந்து மார்க் போடும்போது காட்டிருவோம்!

என்ன நான் சொல்றது சரிதானே?
--------------------------------------------------------------------------
அன்புடன்

வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
========================================================

10 comments:

  1. சொன்னது சரிதான்!

    "மனம் ஒரு குரங்கு... மனித மனம் ஒருகுரங்கு... அதைத் தாவ விட்டால் தப்பி ஓடவிட்டால் நம்மைப் பாசத்தில் வென்று விடும்..."

    கவிஞர் பாடியிருக்கிறாரே...

    ReplyDelete
  2. Respected Sir,

    Happy morning... Nice post..

    Have a great day.

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  3. நம் வழி தனிவழி அல்லவே! நம் முன்னோர்கள் எவ்வழியோ..... அவ்வழியே நம் வழி.... ஹா....ஹா... சும்மா தீட்டிருவோம் அல்ல..... எப்படி?

    ReplyDelete
  4. GOOD AFTERNOON SIR,

    NOW DAYS I HEARING BALAJI HASSAN AT YOUTUBE.
    HE IS A GOOD ASTROLOGER.. TELL ME SIR YOUR OPINION

    ReplyDelete
  5. வணக்கம் சார், இது எதற்காக முன்னோட்டம் சார், அப்படினா வகுப்பறை ஐோதிடம் பாகம்2 வரவிருக்கிறது!!!!!

    ReplyDelete
  6. //////Blogger ஸ்ரீராம். said...
    சொன்னது சரிதான்!
    "மனம் ஒரு குரங்கு... மனித மனம் ஒருகுரங்கு... அதைத் தாவ விட்டால் தப்பி ஓடவிட்டால் நம்மைப் பாசத்தில் வென்று விடும்..."
    கவிஞர் பாடியிருக்கிறாரே.../////

    நல்லது. நன்றி ஸ்ரீராம்!!!!!!

    ReplyDelete
  7. /////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Nice post..
    Have a great day.
    With regards,
    Ravi-avn//////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!!

    ReplyDelete
  8. //////Blogger S.Shanmuganandam M.A.B.Ed., said...
    நம் வழி தனிவழி அல்லவே! நம் முன்னோர்கள் எவ்வழியோ..... அவ்வழியே நம் வழி.... ஹா....ஹா... சும்மா தீட்டிருவோம் அல்ல..... எப்படி?//////

    உண்மைதான். நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete
  9. //////Blogger dhanasekar said...
    GOOD AFTERNOON SIR,
    NOW DAYS I HEARING BALAJI HASSAN AT YOUTUBE.
    HE IS A GOOD ASTROLOGER.. TELL ME SIR YOUR OPINION/////

    ஆமாம். நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  10. /////Blogger Sivakumar.aks@gmail.com said...
    வணக்கம் சார், இது எதற்காக முன்னோட்டம் சார், அப்படினா வகுப்பறை ஐோதிடம் பாகம்2 வரவிருக்கிறது!!!!!/////

    ஆமாம். ஜோதிட நூல்கள் அடுத்தடுத்து 2 தொகுதிகள் வரவிருக்கின்றன!!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com