20.4.22

வாருங்கள் அச்சமின்றி பயணிப்போம்!!


வாருங்கள் அச்சமின்றி பயணிப்போம்!!

விமான பைலட் யாரென்று தெரியாவிட்டாலும் கூட நாம் கவலையின்றி பயணிக்கிறோம்.*

*அவ்வாறே கப்பலின் மாலுமி இன்னாரென்று அறியாதிருந்தும் நாம் அச்சமின்றி பயணிக்கிறோம்.*

*அப்படியே இரயிலையும் , பேருந்தையும் முன்பின் தெரியாத ஒருவர் இயக்கினாலும் நாம் நிம்மதியாய் உறங்கிக்கொண்டு பயணிக்கிறோம்...*

*பிறகு ஏனோ, சர்வ வல்லமை படைத்தவன் நம்மோடு பயணித்துக் கொண்டிருந்தும் எல்லாவற்றுக்காகவும் நாம் கவலைப்பட்டு கலங்கிக் கொண்டிருக்கிறோம்!?.*

ஆகவே எதற்கும் கவலைப் படாதீர்கள்: கலங்காதீர்கள்!

எல்லாவற்றையும் அவர் - நம்மோடு பயணிக்கும் இறைவன் பார்த்துக்கொள்வார்
---------------------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com