19.4.22

பயனற்ற வார்த்தைகளையும் வேண்டாத செயல்களையும் நீக்குவோம் வாருங்க்ள்!!!!



பயனற்ற வார்த்தைகளையும் வேண்டாத செயல்களையும் நீக்குவோம் வாருங்க்ள்!!!!

18/03/2022, 07:56 - +91 73959 85927: சிற்பி ஒருவர் தான் சென்ற வழியில் ஒரு கடையருகே, பெரிய பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார். அதன் அமைப்பைக் கண்டதும் மகிழ்ந்த அவர், அந்தக் கடைக்காரரிடம் ஐயா, இந்தப் பாறாங்கல்லை நான் எடுத்துக் கொள்ளலாமா? என்று கேட்டார். 

தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இருப்பதால்தான் போவோர் வருவோரெல்லாம் தடுக்கி விழுகின்றனர்! என்றார்
கடைக்காரர். 

சந்தோஷமாக அதை எடுத்துச்சென்ற சிற்பி அதனை ஒரு கடவுள் சிலையாகச் செதுக்கினர். அதன் அழகில் மயங்கி பலரும் அதனை வாங்கப் போட்டியிட்டனர். அவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் இருக்கவே, சிற்பி அவருக்கே சிலையைக் கொடுத்தார்.

சிலையை வாங்கிய கடைக்காரர். இந்த அழகான சிலையை வடிக்க, எந்த மலையிலிருந்து கல் எடுத்து வந்தீர்கள்? என வினவினார். 

சிற்பி அமைதியாகச் சொன்னார். ஐயா, தங்கள் கடை வாசலில் இடையூறாக இருப்பதாகச் சொல்லி எனக்குத் தந்தீர்களே, அந்தக் கல்தான் இது!

உங்களுக்குத் தடைக் கல்லாய்த் தெரிந்த அது. என் பார்வையில் கடவுளாகத் தெரிந்தது. அதில் இருந்த வேண்டாத பகுதிகளைச் செதுக்கித் தன்ளினேன். உள்ளே இருந்து தெய்வத்தின் உருவம் வெளிப்பட்டது!

நாமும் நம் வாழ்வில் பயனற்ற வார்த்தைகளையும் வேண்டாத செயல்களையும் நீக்கினால், பலர் விரும்பும் வகையில் எல்லோரும் போற்றும் வண்ணம் வாழலாம்

-------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com