23.1.20

சினிமா: வஞ்சத்தில் வீழ்ந்த கர்ணன்!!


சினிமா: வஞ்சத்தில் வீழ்ந்த கர்ணன்!!

செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் விழுந்தாயாடா கர்ணா; "

பாடல் முழுக்க மரண அவஸ்தையில் கிடக்கும் கர்ணன். உண்மையிலே நடிகர் திலகமும் அதை அனுபவித்தார். பாடல் படமாக்கப்பட்ட இடம் ராஜஸ்தான் பாலைவனம்

கொதிக்கும் சூட்டிலே அனைத்து ஆடை, ஆபரணங்கள், போர் கவசங்கள் அணிந்துக் கொண்டு கிழே கிடப்பார்

கர்ணன் மரண தருவாயில் தண்ணீர் தாகத்திற்கு தவிப்பதை போல் நடிகர் திலகம் அந்த பாலைவன வெயிலில் உண்மையில் தாகத்தினால் தவித்தார்√

அது மட்டுமல்ல அம்பு துளைத்து வரும் ரத்தத்திற்காக சாஸ்-ஐ அவர் மேல் ஊற்றி விட்டார்களாம். அந்த இனிப்பான சாஸ்-ற்காக ஈக்கள் அவர் உடலை மொய்க்க ஆரம்பித்து விட்டனவாம்.

சுட்டெரிக்கும் வெயில், உடலை மொய்க்கும் ஈக்கள் இவை அனைத்தையும் தாங்கிக் கொண்டு அந்த பாடல் படமாக்கப்பட்டு முடிக்கும் வரை அப்படியே இருந்தாராம்.

என்ன ஒரு மனிதன்! என்ன ஒரு தொழில் அர்ப்பணிப்பு! அதனால்தான் கிட்டத் தட்ட 55 வருடங்கள் ஆன பிறகும் இன்றும் அந்த காட்சி நம் கண்ணில் நீரை வரவழைக்கின்றது.✍🏼🌹
---------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3 comments:

  1. Good morning sir really amazing acting of nadigar thillagam sivaji, sweet memories thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. ஆமாம் ஐயா! நன்றி

    ReplyDelete
  3. எத்துனை பிரபலங்கள் வகுப்பரையில் இத்தோடு... ஒரு காலத்தில் காஞ்சி பெரியவாப்பற்றி வந்தது. இன்று நடிகர் திலகம் - ஸெவாலெ‍ - ‍சிவாஜி - கணேசன் அவர்கள்..

    ஆமாம் கொதிக்கும் பாலைவனத்தில் ஈக்கள் மொய்த்ததா?.. இம்சையாக இருந்திருக்கும்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com