22.1.20

வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழிப்பது எப்படி?


வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழிப்பது எப்படி?

இது தான் வாழ்க்கை ✅
👉🏾 தனது குடும்பம் என்ற ஒரு பத்து பேர்,
👉🏾 தனது நண்பனும், பகைவனும் என்ற பத்து பேர்,
👉🏾 தனது தொழிலில் ஒரு பத்து பேர்,         
👉🏾 தனது வீதியில் ஒரு பத்து பேர், 
👉🏾 தனது ஜாதியில் ஒரு அறுபது பேர்..!!
👉🏾இந்த நூறு பேரின் நடுவில்
😇 தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்வதும்,.      👩❤💋👩 பாசமாக,        🐕 நட்பாக,            💘அன்பாக,         😠 வீரனாக,         😎 நல்லவனாக  காட்டிக் கொள்வதுமே மனித வாழ்வின் குறிக்கோள் என்று இந்த  சமுதாயம் மனிதர்களுக்கு போதிக்கிறது.

எல்லாவற்றையும் அவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து  👉🏾 அதை விட ஒரு படியேனும் அதிகமாக இருக்க வேண்டும் அப்போது தான் மதிப்பு என்று போலியான வாழ்க்கை வாழ கட்டாயப்படுத்துகிறது.

👉🏾 அவன் அப்படி, 👉🏾 இவன் இப்படி என்று பிறரை விமர்சனம் செய்யச் சொல்கிறது. 🎟🎫பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடைந்ததும் 🤓 பிறரை ஏளனமாக, கேவலமாக நினைக்கச் சொல்கிறது.1⃣0⃣0⃣
இந்த நூறு பேரின் நடுவில் ஏற்படும் அவமானமும், கோபமும், கௌரவமும் மட்டுமே ஒருவனைப் பாதிக்கின்றன. 👉🏾 இதற்காக தன்னுடைய அத்தனை ஆசாபாசங்களையும் அடக்கி வைத்து, மனித ஜடமாக  வாழும் பலருக்கு இந்த பூமிப் பந்து எழுநூறு கோடி மக்களால் ஆனது என்பது தெரிவதில்லை.

👉🏾 என்னுடைய தாத்தாவின் தாத்தா எப்படி இருந்தார் என்பது எனக்குத் தெரியாது!
👉🏾 எப்படி வாழ்ந்தார் என்பது எனக்குத் தெரியாது!!
👉🏾 அவர் நல்லவரா கெட்டவரா எனக்குத் தெரியாது!!
👉🏾 அவர் பெயர் கூட எங்கள் தெருவில் பலருக்குத் தெரியாது,
👉🏾 எங்கள் ஊரில் யாருக்கும்  தெரியாது!!
👉🏾 இதே நிலை எனக்கும் ஒரு நாள் வரும்!
👉🏾 நான் இந்த பூமியில் வாழ்ந்ததற்கான அடையாளம் அத்தனையும் கால ஓட்டத்தில் மறையும்!!
ஆக எதற்காக இந்த நூறு பேரின் அங்கீகாரக்தை நான் கண்டு கொள்ள வேண்டும் ????
👉🏾 யார் இவர்கள் ????
என்னுடைய வாழ்க்கையில் யாரெல்லாம் வர வேண்டும், வரக்கூடாது என்பதை தீர்மானிக்க இவர்கள் யார் ????
✍ நான் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு வாழப் போவதில்லை!
✅அதிகபட்சம் இன்னும் சில ஆண்டுகள்!
👉🏾 அதுவும் வெகு தொலைவில் இல்லை!

❌சர்வமும் ஒருநாள் அழியும்❌ 
👉🏾 👌🏽✅😇🙏🏽💘மனித வாழ்க்கை அற்புதமானது. அழகானது! 🙏🏽🙏🏽🙏🏽
தத்தமது வாழ்க்கையை யாரும் போலியாக வீணடித்து விடாதீர்கள்🙏🏽
✅ வாழ்க்கை ஒரே ஒரு முறைதான்!
தோற்றால் பரவாயில்லை, ஆனால் பங்கெடுக்காமலேயே அழிந்து விடாதீர்கள்.
நம் தாத்தாவின் தாத்தாவை நாம் பார்த்ததில்லை. அதே போல் நம் பேரனின் பேரனை நாம் பார்க்க இருக்கப் போவதில்லை. இது தான் வாழ்க்கை.
👉🏾 பிறரை வஞ்சிக்காமல் தொந்தரவு செய்யாமல் எவ்வளவு இயலுமோ அவ்வளவு மகிழ்ச்சியாய் வாழ்ந்து விட்டுச் செல்லுங்கள் .
--------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

1 comment:

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com