19.12.19

*இசை ரசிகர்களுக்கு உன்னத விருந்து .*


*இசை ரசிகர்களுக்கு உன்னத விருந்து .*

*காலத்தை வென்று இன்றும் இனிமை தரும் பாடல் .*

 *M.G.R. B.சரோஜாதேவி  உடல்மொழியால் வெளிப்படுத்திய காதல் சுவை அற்புதம் .*
 *கவிஞரின் கற்பனை வரிகள் , K.V.மஹாதேவனின் துடிப்பான இசையில் உயிர்பெற்று துள்ளி குதிக்கிறது .*
 *காட்சி அமைப்பு உள்ளிட்ட அனைத்தும் அருமை*
 *கலைஞர்களின் கூட்டு முயற்சியில் உருவான பாடல்*

படம் : *தாய் சொல்லைத் தட்டாதே*
தீபாவளி வெளியீடு :  *7.நவம்பர் 1961*
நடிப்பு : *M.G.R*    *B.சரோஜாதேவி* 

பாடல் : *பட்டுச் சேலை காத்தாட*
பாடலாசிரியர் : *கவியரசு* *கண்ணதாசன்*
பாடியவர் : *டி.எம்.சௌந்தர்ராஜன்* *P.சுசீலா*
இசை : *K.V.மஹாதேவன்*
ஒளிப்பதிவு : C.V.மூர்த்தி
இயக்கம் :  M.A .திருமுகம்
தயாரிப்பு : தேவர்பில்ம்ஸ்

*பாடல் :*
பட்டுச் சேலை காத்தாட
பருவ மேனி கூத்தாட
கட்டுக் கூந்தல் முடித்தவளே - என்னை
காதல் வலையில் அடைத்தவளே!

 *அரும்பு மீசை துள்ளி வர*
 *அழகுப் புன்னகை அள்ளி வர*
 *குறும்புப் பார்வை பார்த்தவரே* *- என்னைக்*
 *கூட்டுக் கிளியாய் அடைத்தவரே!*

கையில் எடுத்தால் துவண்டு விடும்!
கன்னம் இரண்டும் சிவந்து விடும்!
சின்ன இடையே சித்திரமே!
*சிரிக்கும் காதல் நித்திலமே!*

 *நிமிர்ந்து நடக்கும் நடையழகு...!*
 *நெருங்கிப் பழகும் கலையழகு...!*
 *அமைதி நிறையும் முகத்தழகு...!*
 *யாவும் உங்கள் தனியழகு...!*

உறங்கினாலும் விழித்தாலும்
ஊர்கள்தோறும் அலைந்தாலும்
மயங்க வைத்தது ஒரு முகமே!
*மங்கை உந்தன் திருமுகமே!*

 *காசு பணங்கள் கேட்கவில்லை!*
 *ஜாதி மதங்கள் பார்க்கவில்லை!*
 *தாவி வந்தது என் மனமே - இனி*
 *தாழ்வும் வாழ்வும் உன் வசமே!*

பட்டுச் சேலை காத்தாட
பருவ மேனி கூத்தாட
கட்டுக் கூந்தல் முடித்தவளே - என்னை
காதல் வலையில் அடைத்தவளே!

 🌈 *பாடலும் காட்சியும்* 👇



===========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

2 comments:

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com