13.8.19

ஆறுதல் பாடல்களுக்கு கவியரசர் கண்ணதாசன்!!!!!


ஆறுதல் பாடல்களுக்கு கவியரசர் கண்ணதாசன்!!!!!

ஆறுதல்_பாடல்களுக்கு_அமரகவி #கண்ணதாசன் .

"சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ"

என்ற பாட்டு மூலமாக எத்தனை பேர் மாற்றுத்திறனாளிகள் ஆறுதல் அடைந்திருப்பார்கள்.

பிறருக்கு ஆறுதல் சொல்வதற்காகவே தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக் கொண்டு படவுலகில் நுழைந்தவர் கவியரசு அவர்கள்.கன்னியின் காதலி படத்தில்

"கலங்காதே மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே "

என்ற பாடலின் மூலம் அடி எடுத்து வைத்தார் கவியரசு அவர்கள்.
காதல், வீரம், சோகம், தத்துவம், தாலாட்டு, நகைச்சுவை என ஐயாயிரத்திற்கு மேல் பாடல்கள் இயற்றி மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் உணர்ச்சிகளை பாடலாக வடித்தவர்.

"மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா?
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை"

இந்த பாட்டு வாழ்க்கையில் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்த எத்தனயோ கோடி பேரை ஆறுதலடையச் செய்திருக்கும் என்பதே உண்மை.

 வாழ்க்கைச் சிக்கலின் குழப்பத்தில் மயங்கி கிடந்த போது இந்தப் பாடல்தான் என் உயிரை மீட்டுத் தந்தது என்கிறார் இவர் சமகாலத்து கவிஞர் வாலி .

விஸ்வநாதன் - ராமமூர்த்தி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ராமமூர்த்தி பிரிந்த போது, விஸ்வநாதனால் அந்தப் பிரிவைத் தாங்க முடியவில்லை.

அன்று ஒரு பாடல் எழுதுவதற்காக கவியரசரும் விஸ்வநாதனும் அமர்கிறார்கள். காதல் பிரிவை தாங்க முடியாத காதலி பாடும் பாடல், இது தான் சூழல்.

" தம்பி, நீ ட்யூன் போடுகிறாயா? நான் வார்த்தை தரட்டுமா?"

கவியரசர் கேட்கிறார்.

"நீங்க வார்த்தை கொடுங்கண்ணே"

சிறிது யோசனைக்குப் பின் கவியரசர் சொல்கிறார்.

"நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு
மறக்கத் தெரியாதா?"

வார்த்தைகளை கேட்டதும் விசுவநாதன் கவிஞரை நிமிர்ந்து பார்க்கிறார். தனக்கென்றே சொல்லப்பட்டது போல அவர் பார்வையை உணர்ந்து கொண்ட கவிஞர் மெளனமாக சிரித்தபடியே தலையசைத்து மேலே தொடர்கிறார்.

 ராமமூர்த்தி பிரிந்த துயருக்கு அது ஆறுதலாக இருந்தது. கவியரசர் எதையும் திட்டமிட்டுப் பாடுவதில்லை. சூழலைப் பொருத்து அந்தப் பாத்திரமாகவே மாறி உணர்ச்சிகளைப் பாடலாகக் கொண்டு வருகிறார்.

 "மனைவி அமைவதெல்லாம்
  இறைவன் கொடுத்த வரம்"

என்ற பாடலைக் கேட்டு கண் கலங்காதவர்களே இல்லை. ஏன், கவியரசரே ஒரு கணம் கண்களைத் துடைத்துக் கொண்டார். நல்ல மனைவியைப் பெற்றவர்கள் ஆனந்தமும், வாய்க்கப் பெறாதவர்கள் இந்தப் பாடலைக் கேட்டு ஆறுதலும் அடைந்தனர்.

ஆயிரக்கணக்கானவர்கள் கவிஞருக்கு கடிதம் எழுதி வாழ்த்தியது மட்டுமின்றி நன்றியும் தெரிவித்தனர்.

மகனைக் கஷ்டப்பட்டு படிக்க வைக்கும் ஏழை ஒருவர் , மகன் அவ்வாறில்லாமல் தீய வழியில் செல்கிறான் என்றறிந்து அந்த ஏழை தந்தை படும் வேதனையை சூழலாகக் கொண்டு பாடல் பாடுகிறார்

"வளர்த்த கடா முட்ட வந்தால்
வச்ச செடி முள்ளானால்
போன ஜென்மப்பாவமடி அம்மாளு "

இதைப் பாடும் போது திரு.டி.எம்.எஸ் அவர்களால் பாட முடியாமல் தொண்டை அடைத்துக் கொண்டது. இப்படி ஒரு சூழல் டி.எம்.எஸ் வாழ்விலேயே அப்போது சம்பவித்திருந்தது.

1962 தேர்தலில் தனது நண்பரின் வெற்றிக்காக கவிஞர் பெரும் முயற்சி செய்தார். இதில் நண்பர் தோற்றதை கவிஞரால் தாங்க முடியவில்லை.

 அப்போது பலே பாண்டியா படத்திற்கு ஒரு தத்துவப் பாடல் எழுத வேண்டி வந்தது. வார்த்தைகளில் இந்த நிகழ்ச்சியைப் பிரதிபலித்தார் கவிஞர்.

"யாரை எங்கே வைப்பது என்று
யாருக்கும் தெரியலே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும்
பேதம் புரியலை "

என்று தனக்குத் தானே சமாதானம் செய்து கொண்டார். சென்ற நூற்றாண்டில் பாரதிக்குப் பிறகு கண்ணதாசனே புகழைக் குவித்தவர். பாரதியாரைப் படித்தவர்கள் மட்டுமே பயின்றார்கள்.

கவியரசர் கண்ணதாசனையோ படித்தவர்கள் மட்டுமின்றி பாமரர்களும் பயின்றார்கள்.இந்த நூற்றாண்டிலும் அது தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை.
---------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
=========================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9 comments:

  1. Good morning sir its true what an amazing skill thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. வணக்கம் குருவே,
    கவியரசர் எனும் மஹாகாவியம் வாழ்ந்த காலத்தில் நாமும் இருந்தோம்/வாழ்ந்தோம் என்பதில்
    பெருமையுடன் கூடிய மகிழ்ச்சியில் திளைக்கிறேன் ஆசானே!
    பதிவின் வார்த்தைகளை இங்கு பெருமகழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்:
    சென்ற நூற்றாண்டில் பாரதிக்குப் பிறகு கண்ணதாசனே புகழைக் குவித்தவர். பாரதியாரைப் படித்தவர்கள் மட்டுமே பயின்றார்கள்.

    கவியரசர் கண்ணதாசனையோ படித்தவர்கள் மட்டுமின்றி பாமரர்களும் பயின்றார்கள்.இந்த நூற்றாண்டிலும் அது தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை!💐💐

    ReplyDelete
  3. Sir, explain sathisai Saibaba example jatjatham

    ReplyDelete
  4. ////Blogger kmr.krishnan said...
    Very good Sit////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!!

    ReplyDelete
  5. /////Blogger Shanmugasundaram said...
    Good morning sir its true what an amazing skill thanks sir vazhga valamudan//////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!

    ReplyDelete
  6. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே,
    கவியரசர் எனும் மஹாகாவியம் வாழ்ந்த காலத்தில் நாமும் இருந்தோம்/வாழ்ந்தோம் என்பதில்
    பெருமையுடன் கூடிய மகிழ்ச்சியில் திளைக்கிறேன் ஆசானே!
    பதிவின் வார்த்தைகளை இங்கு பெருமகழ்வுடன் பகிர்ந்து கொள்கிறேன்:
    சென்ற நூற்றாண்டில் பாரதிக்குப் பிறகு கண்ணதாசனே புகழைக் குவித்தவர். பாரதியாரைப் படித்தவர்கள் மட்டுமே பயின்றார்கள்.
    கவியரசர் கண்ணதாசனையோ படித்தவர்கள் மட்டுமின்றி பாமரர்களும் பயின்றார்கள்.இந்த நூற்றாண்டிலும் அது தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை!💐💐//////

    நல்லது. நன்றி வரதராஜன்!!!!!

    ReplyDelete
  7. ////Blogger Babu said...
    Super//////

    நல்லது. நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com