18.1.07

எங்கே நிம்மதி? புது பிளாக்கரில் உள்ளது அது!

எங்கே நிம்மதி? புது பிளாக்கரில் உள்ளது அது!

என்ன கவியரசரின் பாடல் வரி போல இருக்கிறதா?

இல்லை ந்ண்பரே! மேலே படியுங்கள்!

இரண்டு நாட்களாக பழைய பிளாக்கர் 'இடக்கு' செய்ததால்
அதை 'முடக்கி' வைத்து விட்டு புது பிளாக்கருக்குத்
துணிவுடன் மாறிவிட்டேன்.

சகோதரி 'பொன்ஸ்' அவர்களுடைய, மற்றும் சகோதரர்
சிங்கைக் கண்ணன் அவர்களுடைய செயல்முறை
விளக்கங்கள் கை கொடுக்க, அடியேனும் புது பிளாக்கருக்கு
மாறிவிட்டேன்!

புது பிளாக்கர் நான்கு வழித் தங்கரத சாலை போல
மிக அற்புதமாக இருக்கிறது!

எனக்கு மாறுவதற்குப் பிடித்தநேரம் 30 நிமிடங்கள்தான்

அதோடு எனது 'தோண்டிப பார்க்கும்" முயற்சியால்
Web Counter' ஐ வலைபூவில் சேர்ப்பதற்கும் கற்றுக்கொண்டேன்

முன்புபோல டெம்பிளேட்டில் நீங்கள் எதையும் நுழைப்பதற்கு
புது பிளாக்கர் உங்களை அனுமதிக்காது .

அதற்கென்று 'Page elements' என்ற பகுதி உள்ளது

அதைச் சொடுக்கினால்

Add a page element - HTML/ Java Script - Add a third party
functionality or other code to your blog

என்ற பகுதில் நீங்கள் அதைச் சேர்த்துவிடலாம்

Please change to new blog and enjoy all the facilities
available in it!

My sincere thanks to Google, Ponns Ammaiyaar & Mr.Koviyaar

அன்புடன்,
SP.VR. சுப்பையா

11 comments:

  1. எனக்கு இன்னும் தைரியம் வரல.

    :)

    ReplyDelete
  2. வாத்தியாருக்கு வரலாறு, தமிழ் பாடம், கணக்கு தான் எடுப்பார் என்று நினைத்திருந்தேன்... தகவல் தொழில் நுட்பமும் பிச்சி உதறுகிறீர்கள் !

    page element வழி RSS FEED கூட சேர்த்து தமிழ்மணத்தில் உள்ள புதிய இடுகைகளை நம் வலையில் பார்க்க முடியும் !


    என்ற என் பதிவில் தமிழ்மணத்தில் இந்த நிமிடம் இருக்கும் !

    ReplyDelete
  3. ஐயா,
    வாழ்த்துக்கள்.

    மற்றும் படி, எதையும் கடைசி நிமிடத்தில் செய்து பழக்கப்பட்டவன் நான். இவ் விடயத்தில் மட்டும் என்ன மாறிவிடவா போகிறேன்?!!!

    ReplyDelete
  4. //சிறில் அலெக்ஸ் அவர்கள் சொல்லியது: எனக்கு இன்னும் தைரியம் வரல.:)//

    அதெல்லாம் ஒன்றும் ஆகாது!
    புது பிளாக்கரில் தமிழ்மணம் கொடுத்துள்ள நிரல்களை மட்டும் உரிய இடத்தில் சேர்த்து விட்டால்போதும்
    செயல்முறைக்கு பொன்ஸ் அம்மையாரின் கட்டுரையைப் பிரதி எடுத்துக்கொண்டு செயல் படுத்துங்கள்!
    மாறிய பிறகு அமர்க்களமாக இருக்கும்!

    ReplyDelete
  5. // கோவியார் சொல்லியது: வாத்தியாருக்கு வரலாறு, தமிழ் பாடம், கணக்கு தான் எடுப்பார் என்று நினைத்திருந்தேன்... தகவல் தொழில் நுட்பமும் பிச்சி உதறுகிறீர்கள் !//

    முறைப்படி கணினி கற்றுக் கொண்டிருந்தால் பல இளைஞர்களைப்போல பிய்க்காமல் உதறலாம். அப்படிக் கற்றுக் கொள்ளாததால் பிச்சித்தான் உதறவேண்டியதாயுள்ளது!:-)))

    ReplyDelete
  6. புளொக்கர் காரங்கள் கலைக்கு மட்டும் பழசிலையே தொத்திக்கொண்டு நிக்கப் போறன்.

    ReplyDelete
  7. //Mr.Kanags Said:புளொக்கர் காரங்கள் கலைக்கு மட்டும் பழசிலையே தொத்திக்கொண்டு நிக்கப் போறன்.//

    அப்படி நிற்க விட்டுவிடுவோமா?
    ஒரு வார்த்தை சொல்லுங்கள்.
    உடனே வந்துவிடுவோம்!

    ReplyDelete
  8. //எனக்கு இன்னும் தைரியம் வரல.//
    எனக்கும்.

    அதுசரி! மாறினால் என்னன்ன செய்ய வேண்டும்?

    ReplyDelete
  9. //சிந்தாநதி அவ்ர்கள் சொல்லியது: புத்தி கொள்முதல் :)))//

    நஷ்டமடையும்போதுதான் புத்திக்கொள்முதல் என்று சொல்வார்கள்.
    நீங்கள் எதைப் புத்திக்கொள்முதல்
    என்கிறீர்கள்?

    ReplyDelete
  10. // சீனு அவர்கள் கேட்டது: அதுசரி! மாறினால் என்னன்ன செய்ய வேண்டும்?//

    New Blogger is user friendly and It will guide you after switch over to it!
    மாறுவதற்கு நான் சொல்லியபடி, தமிழ் மணத்தில் கொடுக்கப்பெற்றுள்ள வழிமுறைகளைப் பின்பற்றினால் போதும்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com