27.7.24

Astrology: பாமர யோகம் Pamara Yogam

Astrology: பாமர யோகம் 
Pamara Yogam

ஐந்தாம் வீட்டுக்காரன், 6 அல்லது 8 அல்லது 12ஆம் வீடுகளில் போய் அமர்ந்திருந்தால் அதற்கு, அந்த அமைப்பிற்குப் பாமர யோகம் என்று பெயர். அது ஒரு மோசமான யோகம். அவ யோகம்.

அந்த அமைப்பு உள்ளவர்கள் தங்களைச் சுற்றியுள்ள பலருக்கும் கேடாக இருப்பார்கள். தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் தேவையில்லாததைச் செய்து கொண்டிருப்பார்கள்.  செய்பவற்றை அலட்சியமாகவும், நல்ல வழியில் அல்லாமலும் செய்து கொண்டிருப்பார்கள். அது பலரையும் பாதிக்கும் வண்ணம், பாதிப்பு ஏற்படுத்தும் வண்ணம் இருக்கும். (affecting or harming many people) அவர்களிலும் சிலர் ஏமாற்றுப் பேர்வழிகளாகவும், பொய்யர்களாகவும் இருப்பார்கள். இறைநம்பிக்கை குறைந்தவர்களாகவும் இருப்பார்கள்.

தெரிந்தால், தெரிந்த பிறகு, அப்பாடா, தப்பித்தோம் என்று பலரையும் நினைக்க வைக்கும் அவயோகம் இது!

அன்புடன்
வாத்தியார்
===============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.7.24

AStrology: துஷ்கிரிதி யோகம் Dushkriti Yogam

Astrology: துஷ்கிரிதி யோகம் 
Dushkriti Yogam

களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டின் அதிபதி, லக்கினத்தில் இருந்து 6 அல்லது 8 அல்லது 12ஆம் வீட்டில் இருக்கும் அமைப்பிற்கு துஷ்கிரிதி யோகம் என்று பெயர். அதாவது 7ஆம் வீட்டுக்காரன் 6 அல்லது 8 அல்லது 12ஆம் வீட்டில் இருக்கும் நிலைமை என்று எடுத்துக்கொள்ளுங்கள்!

இந்த யோகம் மோசமான யோகம். அவ யோகம். இந்த யோகம் இல்லாமல் இருப்பது நல்லது.

பலன்:

ஜாதகனின் நடத்தையால், ஜாதகனின் மனைவிக்கு, ஜாதகனிடம் சுமூகமான, அன்பான உறவு இருக்காது!. அதைப் பற்றிக் கவலைப்படாமல் ஜாதகன், பிறன் மனைகளின் மேல் கண்ணாக இருப்பான். அதாவது சட்டத்திற்குப் புறம்பான பெண் உறவுகளூக்காக அலைந்து திரிந்து கொண்டிருப்பான்.
ஊர் சுற்றியாக இருப்பான். அவனுக்குப் பால்வினை நோய்கள் இருக்கும். உறவினர்களால் வெறுக்கப்பட்டவனாக இருப்பான். எப்போதும் மகிழ்ச்சியற்றவனாக இருப்பான்.

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.7.24

Astrology ஸ்திரமான வாழ்க்கை Stable Life Key point

Astrology: ஸ்திரமான வாழ்க்கை Stable Life Key points 

லக்கின அதிபதி திரிகோணம் ஏறி இருக்க வேண்டும். திரிகோணங்களில் அமர்ந்திருக்க வேண்டும். திரிகோணம் என்பது 1, 5, 9ஆம் வீடுகள். அம்மூன்றில் வீடு பாக்கியஸ்தானமான ஒன்பதாம் வீடு மிகவும் சிறப்பான திரிகோண வீடாகும். லக்கினாதிபதி ஒன்பதில் இருந்தால், ஜாதகன் மிகவும் அதிர்ஷ்டமானவன். பாக்கியசாலி. உங்கள் மொழியில் சொன்னால் கொடுத்துவைத்தவன். என் மொழியில் சொன்னால் வரத்துடன் வந்தவன்.

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.7.24

Astrology ஆதி யோகம்! Adhi Yoga

Astrology: ஆதி யோகம்! Adhi Yoga 

புதன், குரு, சுக்கிரன் ஆகிய மூன்று சுபக் கிரகங்களும், ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து 6, 7, 8 ஆம் வீடுகளில் இருந்தால், தனித்தனியாகவோ அல்லது சேர்ந்து இருந்தாலோ, அது ஆதியோகம் எனப்படும். அந்த வீடுகள் ஒன்றில் அல்லது இரண்டில் அல்லது மூன்றிலுமே அவைகள் இருந்தாலும் அது இந்த யோகத்தைக் கொடுக்கும்!

பலன்: ஜாதகன் செல்வாக்குடன் இருப்பான். ஆரோக்கியத்துடனும், செல்வங்களுடனும் இருப்பான். நோய், எதிரிகள், பயம் என்று எந்த அவலமும் அவனை அனுகாது!

Adhi Yoga : This is caused if the benefic planets - Mercury, Jupiter and Venus - are situated in the 6th, 7th and 8th houses from the Moon. These planets should be present in any one, two or in all the above-mentioned houses. A native with this Yoga will be very influential, healthy and wealthy. He will possess no fear, disease or enemy.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
”சார், அவற்றில் எனக்கு இரண்டு இருக்கிறது. பாதி யோகம் கிடக்குமா?” என்று யாரும் கேட்க வேண்டாம்! கிடைக்காது.

யானை என்று எழுதுவதற்குப் பதிலாகப் பூனை என்று எழுதிவிட்டேன். இரண்டிலுமே ”னை” என்று இருப்பதால் பாதி மார்க் போடுங்கள் என்று சொல்வதைப் போன்றது அது!

அன்புடன்,
வாத்தியார்
---------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.7.24

Astrology: அமலா யோகம்! Amala Yoga

Astrology: அமலா யோகம்! Amala Yoga 

கோவையில் இருந்து சென்னைக்குப் பயணிக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். கோவையிலிருந்து சேலம் வரை ஒரு பேருந்திலும், பிறகு சேலத்திலிருந்து கள்ளக்குறிச்சிவரை ஒரு பேருந்திலும், பிறகு கள்ளக்குறிச்சியிலிருந்து விழுப்புரம்வரை ஒரு பேருந்திலும், பிறகு விழுப்புரத்திலிருந்து செங்கல்பட்டுவரை ஒரு பேருந்திலும், அதற்குப்பிறகு அங்கேயிருந்து சென்னைவரை வேறு ஒரு பேருந்திலும் பயணித்தால் பயணம் எப்படியிருக்கும்? அலுத்துவிடாதா?

முறையான பயணம் எப்படி இருக்க வேண்டும்? ஒரு நவீன குளிரூட்டப்பெற்ற வோல்வோ பேருந்தில், இரவு ஒன்பது மணிக்குக் கோவையில் ஏறி, காலை 6 மணிக்குச் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குச் சென்று இறங்கினால் பயணம் சுகமாக இருக்கும்.

அதைப்போல ஏகப்பட்ட நிபந்தனைகளுடன் உள்ள யோகங்களைவிட, சுருக்கமாக ஒரு வரியில் உள்ள யோகங்கள், ஜோதிடத்தைக் கற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

இன்று, உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதற்காக ஒரு வரி விளக்கத்துடன் உள்ள யோகம் ஒன்றைக் கொடுத்துள்ளேன்.

அந்த யோகம் இருப்பவர்களுக்கு, இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கும்
---------------------------------------------------------------------
யோகத்தின் பெயர்: அமலா யோகம். அமலா எனும் வடமொழிச்சொல்லிற்கு சுத்தமானது (pure) என்று பொருள்.

யோகத்தின் அமைப்பு: லக்கினத்திலிருந்து பத்தாம் வீட்டில் சுபக்கிரகம் இருக்க வேண்டும். சந்திரராசிக்குப் பத்தாம் வீட்டில் சுபக்கிரகம் இருந்தாலும் இந்த யோகம் உண்டு

பலன்: ஜாதகனின் வாழ்க்கை வளமாக இருக்கும். ஜாதகன் பெயர், புகழுடன் இருப்பான். நிறைய பொருள் ஈட்டுவான். நல்ல ஆண் வாரிசுகளை உடையவனாக இருப்பான்.

அன்புடன்
வாத்தியார்
==========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.7.24

Astrology: அமரக் யோகம்! Amarak Yoga

Astrology அமரக் யோகம்! Amarak Yoga 
 
அமரக் என்றால் பானி பூரி, பேல் பூரி போல ஏதோ தின்பொருள் - சாட் அயிட்டம் என்று நினைக்கவேண்டாம். அமரக் என்னும் வடமொழிச்சொல் ஒரு வித அணிகலனைக் குறிக்கும். மயில்பதக்கம் போன்ற தோற்றமுடைய அணிகலனாம்.

பதிவை முழுதாகப் படித்தால், அதை நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஏழாம் வீட்டதிபதி ஒன்பதாம் வீட்டிலும், ஒன்பதாம் வீட்டதிபதி ஏழாம் வீட்டிலும், இடம் மாறி அமர்ந்திக்கும் நிலைமையே இந்த அமரக் யோகத்தைக் குறிக்கும். மாறி அமர்ந்ததோடு அல்லாமல் வலுவாக வேறு இருக்க வேண்டுமாம். அதாவது ஆட்சி, அல்லது உச்சம் அல்லது அஷடகவர்க் கத்தில் 5ம் அல்லது மேற்பட்ட பரல்களையும் பெற்றிருக்க வேண்டும்

பலன்: ஏழாம் வீட்டோடும் பாக்கிய ஸ்தானத்தோடும் சம்பந்தப்பட்ட யோகம் இது. இந்த யோகம் உள்ள ஜாதகனுக்கு, டக்கராக மனைவி கிடைப்பாள். சினிமாவை வைத்து உதாரணம் சொல்ல விருப்பமில்லை. இதற்கு உதாரணம் சொன்னால், ராமனுக்கு ஒரு சீதை கிடைத்ததைப்போல அல்லது லெட்சுமணனுக்கு ஒரு ஊர்மிளா கிடைத்ததைப் போல அற்புதமான மனைவி கிடைப்பாள்.

அவளைப் பார்த்துப் பார்த்து ஜாதகன் மகிழலாம். வயதானா பிறகும் அருகில் வைத்துக் கொஞ்சலாம். ’உனக்காக நான், எனக்காக நீ’ என்று வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். Made for each other என்று போடுகிறார்களே அப்படியொரு அம்சம் வாழ்க்கையில் இருக்கும்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சார், எனக்கு இந்த அமைப்பு இருக்கிறது. ஆனால் ஒரு கிரகம் ஊற்றிக்கொண்டு விட்டது அதாவது, நீசமாகிவிட்டது - வக்கிரமாகிவிட்டது - அஸ்தனமாகிவிட்டது - கிரகயுத்ததில் உள்ளது - ஆகவே இதில் பாதி அம்சத்தோடாவது ஒரு மனையாள் கிடைப்பாளா? என்று யாரும் கேட்க வேண்டாம். ஜோதிட விதிகளை நமக்காக நாம் மாற்றிக்கொள்ள முடியாது. அதை மனதில் வையுங்கள். இருந்தாலும் சந்தோஷம். இல்லையென்றாலும் சந்தோஷம். நம் முகத்தை ஒரு முறை கண்ணாடியில் பார்த்து மனதைத் தேர்த்திக்கொள்ள வேண்டியதுதான்.

அன்புடன்
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.7.24

Astrology : அரிஷ்ட யோகம் (படுக்கவைக்கும் யோகம்)

அரிஷ்ட யோகம்
(படுக்கவைக்கும் யோகம்)
Arishta Yoga

நாமாகப் படுத்தால் அதற்கு அர்த்தம் வேறு. வேறு யாராவது அல்லது வேறு ஏதாவது சூழ்நிலையில் நாம் படுக்க நேர்ந்தால் அதன் பொருள் வேறு.

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நம்மைப் படுக்க வைக்கும் யோகங்கள் உள்ளன. அவற்றைப் பற்றிய பாடம் கீழே உள்ளது.

இவைகள் பொது விதிகள். தனிப்பட்டவர்களின் ஜாதகங்களுக்கு, சுபக்கிரகங்களின் அமைப்பை வைத்துப் பலன்கள் மாறுபடும். ஆகவே அவசரப்பட்டு முடிவிற்கு வராதீர்கள். அதேபோல ஹோம் ஒர்க் நோட்டு புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு வந்து, என்னுடைய ஜாதகத்தை வைத்து இதற்கு விளக்கத்தை எழுதிக்கொடுங்கள் சார் என்று யாரும் கேட்காதீர்கள். உங்களுக்கு நீங்களே
பாருங்கள். இவை எல்லாம் மேல் நிலைப் பாடங்கள். அதை நினைவில் வையுங்கள்!
----------------------------------------------------------
அரிஷ்ட என்பது வடமொழிச்சொல். அது தீங்கு (evil) என்று பொருள்படும்.

அரிஷ்டயோகம் என்பது தீங்கை விளைவிக்கக்கூடிய தன்மையையுடைய யோகம் என்று பொருள்படும். அதேபோல ஆபத்தானது என்றும் பொருள் படும்.

உதாரணத்திற்குப் ‘பாலஅரிஷ்டம்’ என்பது பால + அரிஷ்ட = குழந்தைக்கு ஆபத்தை விளவிக்கக்கூடிய என்று பொருள்படும்
+++++++++++++++++++++++++++++++++++++++++
அரிஷ்ட யோகம் 1
(அவயோகம்தான்)
தீங்கை விளைவிக்கக்கூடிய கிரக அமைப்பு!

1
லக்கின அதிபதி, 6, 8, அல்லது 12ஆம் அதிபதிகள் எவரேனும் ஒருவருடன் கூட்டணி போட்டிருந்தாலும் அல்லது பார்வையில் இருக்க நேர்ந்தாலும், ஜாதகனுக்கு இந்த யோகம் உண்டு.

பலன்: ஜாதகன் தன்னுடைய உடல் ஆரோக்கியம் கெட்டு அவதிப்படுவான்.

Arishta Yoga:
The Lagna lord is in conjunction or mutual aspect with the 6th, or the 8th, or the 12th house lords (If the lords of the 2nd and 7th houses are involved the effects are more severe).

Result : The person will suffer from bad health (the planets that constitute this Yoga will give more specific information)
-----------------------------------------------------------------
2.
எட்டாம் வீட்டு அதிபதி 12ஆம் வீட்டுக்காரனுடன் கூட்டணி போட்டிருந்தாலும் அல்லது அவனுடைய பார்வையைப் பெற்றிருந்தாலும், ஜாதகனுக்கு இந்த யோகம் உண்டு.

பலன்: ஜாதகன் தன்னுடைய உடல் ஆரோக்கியம் கெட்டு அவதிப்படுவான்.

Arishta Yoga The 8th house lord is conjunct or in mutual aspect with the lord of the 12th house lord (If the lords of the 2nd and 7th houses are involved the effects are more severe).

Result : The person will suffer from bad health (the planets that constitute this Yoga will give more specific information).
--------------------------------------------------
அன்புடன்,
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.7.24

Astrology: அஷ்டலெட்சுமி யோகம்! Ashtalakshmi Yoga


அஷ்டலெட்சுமி யோகம்!
Ashtalakshmi Yoga

அஷ்டலெட்சுமி யோகம் என்பது குரு கேந்திர வீடுகள் ஒன்றில் இருந்து (அதாவது 1, 4, 7, 10ஆம் வீடுகள் ஒன்றில்), அத்துடன் ஆறாம் வீட்டில் ராகுவும் இருந்தால் இந்த யோகம் உண்டாகும்.

பலன்: ஜாதகனுக்கு தனிப்பட்ட பெயர், புகழ், வளர்ச்சி, உயர்ச்சி, அமைதி, மகிழ்ச்சி, எதையும் அனுபவிக்கும் பாக்கியம் அனைத்தும் கிடைக்கும்

Ashtalakshmi yoga is formed when Jupiter is in 1st,, 4th, 7th and 10th house and Rahu in 6th house. Ashtalakshmi yoga will give the individual name,fame, prosperity, and peaceful, enjoyment in life.

எட்டு மடங்கு யோகம் என்பார்கள் Yoga for the Eightfold Prosperity (Ashta Laksmi Yoga )

If the North Node ( Rahu ) is in the 6th And if Jupiter is angular Then this Yoga is formed. This combination for Eightfold Prosperity!

இதைக்குறிப்பிடும் ஜோதிட ஸ்லோகம் This is the sloka for Ashtalakshmi Yoga

சஷ்ட ஸ்தான கதே ராகு
லக்ன கேந்த்ர கதே குரு
அஷ்டலக்ஷ்மி சமயுக்தம்
மத்யவான் கீர்த்திமான் நர!

Shashta Sthana Gathe Rahu ( Rahu in the 6th )
Lagna Kendra Gathe Guru ( Jup angular )
Ashtalakshmee Samayuktham
Madhyavan Keerthiman Nara.
+++++++++++++++++++++++++++++++++++++
எட்டு மடங்கு யோகம் என்பது அஷ்ட லெட்சுமிகளைக் குறிக்கும் அவைகளைப் பற்றிய விவரம்:

தனலெட்சுமி - செல்வத்திற்கு
(Dhana Lakshmi - Wealth as prosperity)

தான்யலெட்சுமி - விளைச்சலுக்கு, விவசாயத்தின் மூலம் வளர்ச்சிக்கு!
(Dhanya Lakshmi - Agriculture as prosperity

தைரியலெட்சுமி - துணிச்சலுக்கு, தைரியத்திற்கு
Dhairya Lakshmi - Courage)

விஜயலெட்சுமி - வெற்றிக்கு
(Vijaya Laksmi - Victory)

ஆதி லெட்சுமி - சக்திக்கு
(Adi Laksmi - Power)

வித்யா லெட்சுமி - கல்விக்கு, கற்றலுக்கு
(Vidya Laksmi - Learning)

கஜலெட்சுமி - ஊக்கத்திற்கு, மன உறுதிக்கு
(Gaja Lakshmi Will Power)

சந்தானலெட்சுமி - குழந்தைச் செல்வத்திற்கு
(Santhana Lakshmi Children as prosperity)

The native born under this yoga, enjoys the Eightfold Prosperity. Rahu and Jupiter should be powerful, however, to confer the full benefits of this yoga.
---------------------------
அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.7.24

Astrology: சொந்தத் தொழிலுக்கு எதிரான மேட்டர்!!

Astrology: சொந்தத் தொழிலுக்கு எதிரான மேட்டர்!

2ம் அதிபதியும் தொழில்காரகனும் சேர்ந்திருக்கும் அமைப்பு சொந்தத் தொழிலுக்கோ அல்லது வியாபாரத்திற்கோ ஏற்றதல்ல. ஜாதகர் வேலையில் தொடர்வதே உத்தமம். வேலையில் பெரிய வாய்ப்புக்களைப் பத்தில் இருக்கும் சனீஷ்வரன் உண்டாக்கித் தருவார்.

12ம் அதிபதி  (house of Loss)  10ம் அதிபதியுடன் சேர்ந்து 2ம் வீட்டில் (House of wealth) இருப்பது, சொந்தத் தொழில் செய்தால் பெரும் பொருள் நஷ்டத்தை உண்டாக்கும். அதை மனதில் வையுங்கள்.

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.7.24

Astrology ஆர்யபட்டா



Astrology ஆர்யபட்டா

மைக்ரோசாஃப்ட், நோக்கியா, சாம்சங், பெப்சி எல்லாம் இல்லாத காலம்!

இடம். நாளந்தா பல்கலைகழகம்.

தெரியாத பெயராக இருக்கிறதா?

ஆண்டைச் சொன்னால் நினைவிற்கு வரும்.

ஆமாம், அது கி.பி.499 ஆம் ஆண்டு.

அம்மாடியோவ்...இன்றைக்கு 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமா?

ஆமாம், மைக்ரோசாஃப்ட், நோக்கியா, சாம்சங், பெப்சி, பானிபூரி, பேல்பூரி, ஏ.கே 47கள் எல்லாம் இல்லாத காலம்

இயேசு கிறிஸ்துவின் பிறப்பிற்குப் பிறகு சுமார் 500 ஆண்டுகள் முடிந்துவிட்ட காலம். பாட்னா அருகே குசுமபுரா என்னும் ஊரில் இருந்த நளந்தா பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான கோளரங்கம். அங்கேதான் அந்த அரிய நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்த ஆண்டில் மார்ச் மாதம் 21ஆம் தேதி மதியம் சரியாகப் பன்னிரெண்டு மணி.

பல்கலைகழகத்தின் மணி ஒலிக்கிறது. மாணவர்களின் வேத பாடல்கள் ஓங்கி ஒலித்து காற்றை நிரப்புகின்றன. சாஸ்திர விற்பன்னர்களின் பிரார்த்தனை துவங்கி சற்று நேரத்தில் முடிவடைகின்றன.

23 வயது இளைஞன் மேடையில் ஏறுகிறான், அவன்தான் அன்றைய நாயகன். அவன் பலகலைக்கழகத்தில் வானவியல் துறையில் பயின்று படிப்பை முடித்துவிட்ட மாணவன். கணிதத் துறையிலும் மேதை அவன்!

எங்கும் அமைதி நிலவுகிறது. அங்கே மேடையின் மேல் இருக்கும் மேஜையின் மீதும், ஓலைகள், எழுத்தாணிகள் மீதும் கும்ப நீரைத் தெளிக்கிறான். தன் தலையை உயர்த்தி வானத்தில் இருக்கும் சூரியனையும் அவன் வணங்குகிறான். பிறகு தான் எழுதவிருக்கும் தொடர் ஆராய்ச்சிக் கட்டுரையின் முதல் சொல்லை ஒரு ஓலையின் மீது பக்தியுடன் எழுதுகிறான். அருகில் இருக்கும் அந்த பல்கலைக்கழகத்தின் பேராசான்கள் அவன் மீது மலர்களைச் சொறிகின்றார்கள்.

அந்த வானவியல் வல்லுனன், இளைஞன் வேறு யாருமில்லை. அவன்தான் ஆர்யபட்டா! அவன் அன்று துவங்கி எழுதிய நூலின் பெயர் ஆர்யபட்டியா!

ஆர்யபட்டா கி.பி 476 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர். துவக்கத்தில் தனது மாநிலத்தில் படித்தவர், மேல் படிப்பிற்காக நளந்தா பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்தார். அன்றைய காலகட்டத்தில் அதுதான் நாட்டின் உயர்ந்த கல்விக்கூடம். அவன் எழுதிய அந்த ஒப்பற்ற நூலை, அனைவரும் பாராட்டினார்கள். அதன் அருமை, பெருமைகளை உணர்ந்த புத்தகுப்தா என்னும் அன்றைய மன்னன், அவனை, அப்பல்கலைகழகத்தின் தலைமைப் பதவியில் அமர வைத்தான்.

உலகம் உருண்டை. அது தன்னுடைய சொந்த அச்சிலேயே, ஒரு ஒழுங்கு முறையிலேயே சுழல்கிறது என்று உலகிற்கு முதன் முதலில் சொன்னவர் ஆர்யபட்டா! சுழலும் பூமியினால்தான் இரவு, பகல் உண்டாகிறது என்றும் முதன் முதலில் சொன்னவரும் அவர்தான். சந்திரன் இருளானது. சூரிய ஒளியால்தான் அது ஒளிர்கிறது என்று சொன்னவரும் அவர்தான்.

வானவியலிலும், கணிதத்ததிலும் எண்ணற்ற சாதனைகளைச் செய்து அனைத்திற்கும் முன்னோடியாக இருந்தவர் அவர்

ஆர்யபாட்டவின் வானவியல் குறிப்புக்களையும், கணக்குகளையும், சூத்திரங்களையும் வைத்துத்தான் பஞ்சாங்கங்கள் எழுதப்பெறுகின்றன. இந்துக்களின் நாட்காட்டிக்கும் (Hindu calendars) அவர்தான் தந்தை!

அன்புடன்,
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.7.24

Astrology: பழமையான ஜோதிட நூல்கள் Ancient Books on Astrology

Astrology: பழமையான ஜோதிட நூல்கள்
Ancient Books on Astrology

காத்திருந்த அனைவருக்கும் வாத்தியாரின் கனிவான வணக்கம். நன்றி!
மீண்டும் பாடங்களைத் துவங்குவோம்!
----------------------------------------------------
நான் பள்ளியில் படிக்கின்ற காலத்தில் சில ஆசிரியர்கள்  பாடநூலை (Text Book) வைத்துப் பாடம் நடத்துவார்கள். பாடங்களுக்கு மற்றும் செய்யுள்களுக்கு அவர்கள் சொல்கின்ற விளக்கங்களைக் குறித்துக் கொள்ளச் சொல்வார்கள். உரை நூல்களை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.
ஆனால் சில ஆசிரியர்கள் உரைநூல்களைப் படிக்கச் சொல்லி  விடுவார்கள். அப்போதெல்லாம் கோனார் நோட்ஸ் என்னும் உரைநூல்கள் மிகவும் பிரசித்தம்.

ஆனால் என்னதான் அல்லது எதைத்தான் படித்தாலும், திறமையுள்ள ஆசிரியர் சிறப்பாக விளக்கம் சொல்லி நடத்தும் பாடங்கள் அப்படியே மண்டைக்குள் போய் நாற்காலி போட்டு அமர்ந்து கொண்டுவிடும். அதற்கு ஈடு இணை கிடையவே கிடையாது.

காலம் காலமாக பல உரையாசிரியர்கள் எழுதி வைத்த ஜோதிட நூல்கள்தான் நமக்குக் கிடைத்துள்ளன. அவர்களின் பணி போற்றுதலுக்கு உரியது.
பனை ஓலை ஏடுகளில் இருந்தவை அச்சுத் தொழில் வந்த பிறகுதான் புத்தகங்களாக வெளிவந்து பரவலாகப் பலருக்கும் கிடைக்கத் துவங்கியது.
அதிலும் குமாரசுவாமியம், கேரள மணிகண்ட ஜோதிடம், புலிப்பாணி ஜோதிடம் போன்ற நூல்களை அப்படியே அவற்றில் உள்ள செய்யுள் வடிவிலேயே வெளியிட்டார்கள். படிப்பவனுக்குப் பைத்தியம் பிடிக்காத குறையாகிவிடும். அத்தனை கடினமான தமிழ்

இருந்தாலும் தமிழில் பாண்டித்யம் உள்ளவர்கள் அவற்றைத் தேடிப் பிடித்துப் படிக்கலாம்.

உங்கள் பயன்பாட்டிற்காக சில முக்கிய ஜோதிட நூல்களின் பெயர்களைத் தொகுத்துக் கீழே கொடுத்துள்ளேன்.
----------------------------------------------------------------------------
ஜோதிட மூல நூல்கள் சிலவற்றின் பெயர்கள் - எழுதியவருடைய பெயருடன் உள்ளது!

நூலின் பெயர் - ஆசிரியர்
1.பிருஹத் பராசர ஹோரா - பராசர மகரிஷி
2.பிருஹத் ஜாதகம் - வராஹமிஹிரர்
3.உத்தர காலமிர்தம் - மகாகவி காளிதாசர்
4.சாராவளி - கல்யாண வர்மர்
5.பலதீபிகை - மந்திரேஸ்வரர்
6.ஸ்ரீபதி பத்ததி - ஸ்ரீபதி
7.ஜாதகலங்க்காரம் - கீரணூர் நடராஜர்
8.குமாரசுவாமியம் - குமாரசுவாமி தேசிகர்
9.கெளசிக சிந்தாமணி - கெளசிக மகரிஷி
10.ஜாதக கர்க ஹோரை - கர்க மகரிஷி
11.ஜாதக பாரிஜாதம் - வேதாந்த தேசிகர் சர்வார்த்த சிந்தாமணி - வெங்கடேச தெய்வக்ஞர்
12.சுகர் பெருநாடி - டி.எஸ்.நாராயணஸ்வாமி
13.சுந்தர சேகரம் - அய்யாசாமி பிள்ளை
14.சூடாமணி உள்ளமுடையன் - திருக்கோட்டி நம்பி
15.ஜோதிட ஆசான் - மா. தெய்வசிகாமணி
16.ஜோதிட கடலகராதி - நா. அரங்கசாமி பிள்ளை
17.ஜோதிட பேரகராதி - எஸ்.கூடலிங்கம் பிள்ளை
18.வீமேசுவர உள்ளமுடையான் - இராமலிங்க குருக்கள்
19.பெரிய வருசாதி நூல் - மார்க்கலிங்க ஜோதிடர்
20.ஹோரா சாரம் - ஸ்ரீ பிருதுயஸ்
21.மங்களேசுவரியம் - .வைத்தியலிங்க ஆசாரியார்
22.ஜீனேந்திர மாலை - உபேந்திராச்சரியார்
23.காலச்சக்கரம் - தில்லை நாயகப் புலவர்

இவைகளில் சில இணையத்தில் கிடைக்கும். அதே பெயரில் ஆங்கிலத்திலும் கிடைக்கும். ஆங்கிலத்தில் படிக்கும்போது கடின ஆங்கிலம் இலகுவான ஆங்கிலம் என்கின்ற பேதம் இருக்காது. அதை மனதில் கொள்ளுங்கள்1

அன்புடன்
வாத்தியார்
=====================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.7.24

எது நிலைத்து இருக்கும்?



எது நிலைத்து இருக்கும்?
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.7.24

சுவாரசியமான தகவல்கள்: அந்த காலத்தில் முட்டை விலை அதிமாவும் கறி விலை குறைவாகவும் இருந்திருக்கு.




சுவாரசியமான தகவல்கள்: அந்த காலத்தில் முட்டை விலை அதிமாவும் கறி விலை குறைவாகவும் இருந்திருக்கு.

அந்த காலத்திலேயே பரோட்டா சால்னா இருந்திருக்கு..!

சர்க்கரை பொங்கலை மக்கள் விரும்பி வாங்கி சாப்பிட்டுருக்காங்க..!

எந்தக் காலம் என்கிறீர்களா?

கீழே உள்ள பட்டியலைப் பாருங்கள்

வேறன்ன  சார் தோனுது..? 

அன்புடன் 
வாத்தியார்
---------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.7.24

Astrology: விவாகரத்து வராமல் முதல் திருமணமே மனப் பொருத்தம் பார்த்து செய்வது நல்லது.*

Astrology: விவாகரத்து வராமல் முதல் திருமணமே மனப் பொருத்தம் பார்த்து செய்வது நல்லது.*

செவ்வாய் ராகு கேது ஜாதகம் என்றால் குறைந்த பட்சமாக மாப்பிள்ளைக்கு 30 வயதை தாண்டியிருக்க வேண்டும் குறைந்த பட்சம் மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் எட்டு வயது இடைவெளி இருக்க வேண்டும் அப்போதுதான் தசா புத்திகள் மாறி இல்லற வாழ்க்கை நன்றாக இருக்கும் 

முக்கியமாக இதையெல்லாம் புரிந்து செயல்படுங்கள் 

குறைந்த பட்சமாக ஏழுவயது வித்தியாசத்தில் மாப்பிள்ளை தேடுங்கள் ஒருவயது இரண்டு வயது வித்தியாசத்தில் திருமண‌ம் செய்வது நன்றாக இருக்காது நன்றாக சிந்தித்து முடிவெடுங்கள் பிறகு விவகாரத்தில் (Divorce)போய் நிற்காமல்  முதல் திருமணமெ நல்லபடியாக சிந்தித்து செயல்படுங்கள் 

இது என்னுடைய தாழ்மையான கருத்து நாங்கள் திருந்தவே மாட்டோம் என்றால் விவகாரத்துக்கள்தான் அதிகமாகும் 

ஒரு பெண்ணுக்கோ ஆண்களுக்கோ ஒருதடவைதான் திருமணம் செய்யவேண்டும்.  ஒருவர் திருமண சம்பந்தமாக சேவை செய்யக்கூடிய ஒருவர் நான்கு கோப்பு (Files) வைத்திருக்கிறார் அதில் ஒன்றுமட்டும்தான் முதல் திருமணம் மற்றும் மூன்று கோப்புகள் முதல்   டைவர்ஸ், இரண்டாம் டைவர்ஸ்,மற்றும் மூன்றாவது டைவர்ஸ் என்று தனித்தனியாக போட்டு வைத்துள்ளார் 

திருமணம் பொருத்தம் பார்க்கும் போது ரஜ்ஜூம் யோனியும் நன்றாக இருந்தால் போதுமானது ரெம்பவும் ஜாதகங்களை போட்டு ஆராய்ச்சி பண்ண வேண்டாம். 

வளர்ப்பு நன்றாக இருந்தால் எல்லாம் ந‌ன்றாக இருக்கும் அவ்வளவு தான் திருமண விஷயத்தில் மாப்பிள்ளை பையன் எந்த வித கெட்ட பழக்கங்கள் இல்லாதவனாக பார்த்து உங்கள் பெண்ணை கொடுங்கள் 

காசு பணத்தை பார்த்து பெண் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம் உங்கள் பெண் மாப்பிள்ளை வீட்டில் அடியெடுத்து வைக்கும் போது அந்த வீடு லெட்சுமி கடாக்ஷம் வந்து விடும் கிளிப்பிள்ளைக்கு சொல்கிறது போல் சொல்லியிருக்கின்றேன் 

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.7.24

Life Lessons: ரிடையர் ஆகி வீட்டில் இருக்கும் ஆசாமிகளின் "routine" என்ன?


Life Lessons:  ரிடையர் ஆகி வீட்டில் இருக்கும் ஆசாமிகளின் "routine" என்ன?

1) பேரன்/ பேத்திகளை ஸ்கூலுக்கு அனுப்புவது, அழைத்து வருவது.

2) TV/mobile ல்ல பாலிடிக்ஸ், sports, வம்பு.

3) கிச்சன்ல எடுபிடி வேலை.

4) துணி உலர்த்துவது/காய்ந்த பின் எடுத்து வருவது.சில சமயம் மடித்து வைப்பது.

5) வீட்டுல repair செய்யும் ஆட்கள்,Gas, courier வரும்போது வீட்டில் இருப்பது.

6)தான் உண்டு.தன் வேலை உண்டு என்று இருப்பது.

7) என்ன செஞ்சாலும் பொண்டாட்டியிடம் திட்டு வாங்குறது.

8) அத்தனை பேர் வீட்டில் இருந்தாலும் கால்பெல் அடித்தால் நாம் தான் போய் திறந்து விடுவது.

9) வாக்கிங் போகிறேன் என்ற பெயர் வழியில் நைசாக பஜ்ஜி போண்டா சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு ஏதாவது சாமான் வாங்கி வருவது.

10) பாத்ரூம் போனால் லைட் மற்றும் ஃபேன் உபயோகித்தால் அணைக்காமல் வந்து மனைவியிடம் திட்டு வாங்குவது.

11) பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது,

12) மனைவியிடம் மற்றும் குழந்தைகளிடமும் நல்லபடியாக வைத்துக் கொள்ள இறைவனிடம் பூஜை செய்வது.

13) பேங்க், போஸ்ட் ஆபீஸ் தபால் கரணை போல் வேலை பார்ப்பது.

14) அம்மாவுக்கும் மனைவிக்கும் இடையில் அம்பயரின் வேலை பார்ப்பது.

உங்களுக்குத் தெரிந்து வேறு ஏதாவது இருந்ந்தால் கமென்டில் எழுதுங்கள்

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.7.24

ஆன்மிகம்: எல்லாம் அவன் செயல்!


ஆன்மிகம்: எல்லாம் அவன் செயல்!

தன் மகன் அபிமன்யு தன் கண் முன்னே இறப்பதை பார்த்து கேவி கேவி கண்ணீர் விட்டு அழுதான் அர்ஜுனன் அதை பார்த்து சாரதியாக இருந்த கண்ணனும் கேவி கேவி கண்ணீர் விட்டு அழுதான்

கண்ணன் அழுவதை பார்த்த அர்ஜுனன் கண்ணனை இறுக பற்றி  கொண்டு "கண்ணா!! அபிமன்யு உனக்கு மருமகன் அல்லவா அதனால் தான்  நீயும் துக்கம் தாள முடியாமல்  அழுகிறாயோ ?" என்று கேட்டான் .

"இல்லை அர்ஜுனா,  நான் துக்கம் தாளாமல் அழவில்லை.உனக்கு கீதையை உபதேசம் செய்ததற்காக வெட்கம்  தாளாமல் அழுகிறேன்" என்றான் கண்ணன்.

"கண்ணா நீ கடவுள். உனக்கு உறவு, பற்று, பாசம், பந்தம், எதுவும் கிடையாது ஆனால் என்னால் அப்படி இருக்க முடியாது."

"உறவு, பற்று ,பாசம் எல்லாம் உடலில் உயிர் இருக்கும் வரைதான் அர்ஜுனா"

"அப்படி சொல்லாதே கண்ணா மானிடர்கள் மறைந்தாலும் பாச  பந்தம் அவர்களை விட்டு போகாது ".

"அப்படியா இப்பொழுதே வா என்னோடு சொர்க்கலோகம்  செல்லலாம். அங்கேதான் இறந்த உன் மகன் அபிமன்யுவின் ஆன்மா அலைந்து கொண்டிருக்கிறது" என்று கூறி அர்ஜுனனை சொர்க்கலோகம் அழைத்து சென்றான் கண்ணன்.

ஒளிப்பிழம்பு வடிவுடன் சொர்கலோகத்தில் இருந்தான் அபிமன்யு. அவனை அடையாளம் கண்டுகொண்ட  அர்ஜுனன் "என் மகனே அபிமன்யு" என்று பாசத்தோடு கட்டி அணைக்க போனான் .

அணைக்க போன அர்ஜுனனை தடுத்த அபிமன்யுவின் ஆன்மா "அய்யா, யார் நீங்கள்?  என் போன்ற ஆன்மாவுக்கு உறவு ஏதும் கிடையாது. தயவு கூர்ந்து என்னை விட்டு விலகி செல்லுங்கள்" என்றது.

அதை கேட்டு அதிர்ச்சியாக நின்ற அர்ஜுனனிடம், "பார்த்திபா பார்த்தாயா, உறவு பாசம் பந்தம்  உணர்வு  கோபம் அன்பு காமம் யாவும் உடலில் உயிர் இருக்கும் வரைதான்.  உடலை விட்டு உயிர் போய் விட்டால் ஏதும் அற்ற உடலுக்கும்  உணர்வு இல்லை. அதை விட்டு போன ஆன்மாவுக்கும் உணர்வில்லை  நீ அழ வேண்டும் என்றால் அதோ பூவுலகில் போர்க்களத்தில் உன் மகன் அபிமன்யுவின் உடல் கட்டை இருக்கிறதே அதை கட்டி பிடித்து அழு—உன் உணர்ச்சியெல்லாம் அதில் கொட்டி அழு ஒரு உயிர் பிறப்பிற்கும் நீ காரணம் அல்ல பிறந்த  உயிர் இறப்பிற்கும் நீ காரணம் அல்ல என்பதை நன்கு உணர்ந்து கொள் .

படைத்தவன் எவனோ அவனே தான் படைத்ததை ஒரு நாள் அழிக்கிறான். நடக்கும் யாவிற்கும் நீ ஒரு கருவியே. செயல் யாவும் படைத்தவன் செயலே என்பதை உணர்ந்து செயல்படு அதுவே வாழ்வின் அர்த்தமாகும்" என்று கூறி கண்ணன் புன்னகைத்தான்.

ஸர்வம் ஸ்ரீ
கிருஷ்ணார்ப்பணம் 🙏
--------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4.7.24

நாட்டு நடப்பு: காலம் கடந்தும் திருமணம் ஆகாமல் இருக்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணங்கள் என்ன?


நாட்டு நடப்பு:  காலம் கடந்தும் திருமணம் ஆகாமல் இருக்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிக்க காரணங்கள் என்ன?

 தற்போதைய நடைமுறையில் பெண்ணை விட மணமகன் அதிகமாக படித்திருக்க வேண்டும் என்பது முதல் அடியாக வைக்கப்படுகிறது. படித்து முடித்ததும் பெண் வேலைக்கு சென்று விட்டால் நல்லது தான். ஆனால் அந்த இடத்தில் ஒப்பீடு என்பது ஆரம்பம் ஆகிறது.

பெண் BE முடித்து இருந்தால் பையன் ME முடித்திருக்க வேண்டும்.

பெண் ஒரு லட்சம் சம்பளம் வாங்கினால் பையன் அதைவிட 20000 ரூபாயாவது அதிகமாக வாங்கவேண்டும்.

பெண் வேலை பார்க்கும் இடத்திற்கு பையன் மாறி வரவேண்டும்.

திருமணத்திற்கு பின்னர் பெண் வேலையை விடமாட்டாள் என்றெல்லாம் பெண்ணைப்பெற்றவர்களின் எதிர்பார்ப்புகளும்,நிபந்தனைகளும் கூடிக்கொண்டு செல்கின்றன.

நல்லவிதமாக குணமாக,ஒழுக்கமாக இருக்கும் பையன் கூட ஏதேனும் ஒரு காரணத்தால் இரண்டு அல்லது மூன்று கம்பெனிகள் மாறி சீனியாரிட்டி இழந்து 80,000 வாங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில் கூட அவனை நிராகரித்த பெண்களை எனக்கு தெரியும்.

பெண்களின் படிப்பு முடிந்து வேலைக்கு வந்ததுமே பெண்களின் பெற்றோருக்கும் சம்பாதிக்கும் போது சிறிது ஆணவம் வந்துவிடுகிறது என்பதில் யாராலும் மறக்க முடியாத உண்மை.

என் பொண்ணு சம்பாதிக்கிறா.

என் பொண்ணு வேலைக்கு போறா.

என் பொண்ணு இவ்வளவு வாங்குறா.

என் பொண்ணு இந்த கம்பெனியில் இன்ன போஸ்டிங்! என்றெல்லாம் முன்னைப்போல இல்லாமல் இப்போது பெண்ணை பெற்றவர்தான் மாப்பிள்ளையின் பெற்றோர்களிடம் கெத்து காண்பிக்கும் நிலை வந்துவிடுகிறது .இங்கேயே அமரலாமா? தொடரலாமா?என்ற மணமகனை பெற்றவர்களுக்கு எண்ணம் எழுவது தவிர்க்க இயலாததாகி விடுகிறது.

இதில் சராசரியாக பெண்ணின் திருமண வயது 22 இல் ஆரம்பித்து 25 /27 என்று உயர்ந்து இன்றைக்கு 29 இல் வந்து நிற்கின்றது. 29 வயது பெண்ணுக்கு நான்கு வயது வித்தியாசத்தில் மாப்பிள்ளை பார்த்தால் கூட மணமகனுக்கு 33 வயதாயிருக்கும். அந்த நேரம் வாலிபன்தோற்றத்திலிருந்து அடுத்த நிலைக்கு மாறும் சமயம் உடல், முகம், முடி போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும் காலம்.

இன்னொருபக்கம் பெண் வயதுகூடினால் கருவுறுதல் முதற்கொண்டு சிரமங்கள் அதிகரிக்கும்.இன்றைக்கெல்லாம் பல் மருத்துவமனைகளும் ,செயற்கைகருத்தரிப்பு மருத்துவமனைகளும் ,அதிகரிப்பது இங்கேதான் ஆரம்பம்.

மனது வலிக்கும் விஷயம் தான் இருந்தாலும் சொல்வது தவறில்லை.தெரிந்த பெண்மணி ஒருவருக்கு வரனுக்காக பேசிய சமயம்என்னுடைய மைத்துனி ஒருமுறை சொன்னார் வயது என்ன? என்று கேட்டார். 31 என்று பதிலுக்கு மாமா !எக்ஸ்பயர்ட் என்று பொட்டிலடித்தாற்போல கூறினார். அந்த வார்த்தை உண்மையாகவே இப்போதும் மனதில் சுடுகின்றது.

செல்லக்கிளியின் சொந்தங்களிலேயே திருமண வயது அதிகரித்தநிலையில் பெண்கள் இருக்கவே செய்கின்றார்கள். ஆனால் அதே சமயம் பத்தாம் வகுப்பு முடித்த பெண்களும், பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பெண்கள் மிகச் சரியாக 19லிருந்து 21 வயதுக்குள் திருமணம் ஆகி விடுகிறது. இன்னும் சொல்லப்போனால் 18 வயது நிரம்பாமல் கோவிலில் ரிஜிஸ்டர் செய்ய முடியாமல் நடந்த திருமணமும் எனக்கு தெரியும்.

எனவே இவற்றில் பெண்ணை பெற்றவர்கள் விட்டுக் கொடுக்க வேண்டுமா? பையனைப் பெற்றவர்கள் விட்டுக் கொடுக்க வேண்டுமா? என்பது அவர் அவர்தான் தீர்மானிக்க வேண்டும்.

ஆனால் இவர்கள் இருவருக்கும் செல்லக்கிகிளியின் தினசரி பிரார்த்தனை ஒன்று உண்டு. திருமணம் ஆகாமல் இருக்கும் வரன்களுக்கு திருமணம் விரைவில் நடக்க வேண்டும். அப்படியும் திருமணம் ஆகி குழந்தைப்பேறு தாமதிப்பவர்களுக்கு விரைவில் குழந்தை கிடைக்க வேண்டும்.

சட்டுபுட்டுன்னு பேசி காலகாலத்துல கல்யாணத்த முடிச்சு வைங்கப்பா!!!

காலத்தே பயிர் செய்!

கல்யாணமும் செய்து கொள்!

பருவத்தில் பயிர் செய்!

பிள்ளையும் பெற்றுக்கொள்!

இது வேண்டுகோள்
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.7.24

Astrology: யோக பலன்கள் கிடைக்காமல் போவதற்கான காரணங்கள்

Astrology: யோக பலன்கள் கிடைக்காமல் போவதற்கான காரணங்கள் 

ஜோதிடம் கடலைவிட ஆழமானது. கற்பவர்களுக்குப் பல சிரமங்களை
அல்லது சிக்கல்களைக் கொடுக்ககூடியது. 
Astrology is a deep and complicated science.  
(difficult to analyze or understand)

ஜாதகத்தைப் பார்க்கும்போது நிறைய யோகங்கள் இருப்பதைப் போன்று 
தோன்றும். ஆனால் ஜாதகனைப் பார்த்தால், களை இழந்து காணப்படுவான். 
அவன் ஜாதகத்தில் உள்ள முக்கியமான யோகங்கள் செல்லாமல் அதாவது
பயன் தராமல் போயிருக்கும்.

இருந்தால் பலன் தரவேண்டும்! ஏன் தரவில்லை?

இருப்பதால், தரவேண்டும் என்பதில்லை. அதைத் தரவிடாமல் பல தடைகள் 
ஜாதகத்திலேயே இருக்கலாம்.

ஆளைப் பார்த்தால் ஜம்மென்று ஜவான் போல இருப்பான். ஆனால் அவனை 
மருத்துவ சோதனைக்கு உள்ளாக்கினால் தெரியும். அவன் உடம்பில் எத்தனை 
ஓட்டைகள் இருக்கின்றன - எத்தனை வியாதிகள் இருக்கின்றன என்று 
தெரியவரும்.

அதுபோல ஜாதகத்தையும் அலசினால், உள்ள குறைகள் தெரியும். அந்தக் 
குறைகளை வைத்து, ஜாதகத்தில் முடங்கிப்போன கிரகங்களைத் தெரிந்து 
கொள்ளலாம்.

முடங்கிப் போன அவைகளால் உரிய பலனை எப்படித் தரமுடியும்?

ஆகவே சிலருக்கு ஜாதகத்தில் யோகங்கள் இருந்தும் கிடைக்காமல் போய்விடும்!

அன்புடன்
வாத்தியார்

வளமுடன்! வளர்க நலமுடன்!

2.7.24

Health Tips: அசத்தலான வால்போஸ்டர்


Health Tips: அசத்தலான வால்போஸ்டர்

அவசியம் ஜூம் செய்து பாருங்கள்!




வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்




1.7.24

மனவளம்: வாழ்க்கையைப் பற்றி லதா மங்கேஷ்கரின் வார்த்தைகள்


மனவளம்:  வாழ்க்கையைப் பற்றி  லதா மங்கேஷ்கரின் வார்த்தைகள்

 இந்த உலகில் மரணத்தை விட உண்மை எதுவுமில்லை. 
 
 உலகின் மிக விலையுயர்ந்த பிராண்டட் கார் எனது கேரேஜில் நிறுத்தப்பட்டுள்ளது.  ஆனால், நான் சக்கர நாற்காலியில் அமர்த்தப்பட்டேன்!  

 இந்த உலகில் உள்ள அனைத்து விதமான டிசைன்கள் மற்றும் வண்ணங்கள், 
விலையுயர்ந்த ஆடைகள், விலையுயர்ந்த காலணிகள், விலையுயர்ந்த அணிகலன்கள்  அனைத்தும் என் வீட்டில் உள்ளன.   ஆனால் நான் மருத்துவமனை வழங்கிய 
குட்டை கவுனில் இருக்கிறேன்!  

 எனது வங்கிக் கணக்கில் நிறைய பணம் இருந்தாலும் அதனால் எனக்கு எந்தப் 
பயனும் இல்லை.   என் வீடு எனக்கு அரண்மனை போன்றது, ஆனால் நான் 
ஒரு மருத்துவமனையில் ஒரு சிறிய படுக்கையில் படுத்திருக்கிறேன்.  

 நான் இந்த உலகில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு நகர்ந்து கொண்டே இருந்தேன்.  ஆனால் இப்போது நான் மருத்துவமனையில் ஒரு ஆய்வகத்திலிருந்து மற்றொரு ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகிறேன்!  

 ஒரு காலத்தில் 7 சிகையலங்கார நிபுணர்கள் தினமும் என் தலைமுடியை செய்வார்கள்.   ஆனால், இன்று என் தலையில் முடி இல்லை.  

 நான் உலகெங்கிலும் உள்ள பல்வேறு 5 நட்சத்திர ஹோட்டல்களில் சாப்பிட்டேன்.   ஆனால் இன்று என் உணவு ஒரு நாளைக்கு இரண்டு மாத்திரைகள் மற்றும் இரவில் ஒரு துளி உப்பு.   

நான் வெவ்வேறு விமானங்களில் உலகம் முழுவதும் பயணம் செய்து கொண்டிருந்தேன்.   ஆனால், இன்று இரண்டு பேர் எனக்கு மருத்துவமனை வராண்டாவிற்கு உதவுகிறார்கள்.  

 எந்த வசதியும் எனக்கு உதவவில்லை. 

அதற்காக நான் எந்த வகையிலும் தளரவில்லை.  

 ஆனால், சில அன்பர்களின் முகங்கள், அவர்களின் பிரார்த்தனைகள் என்னை 
வாழ வைக்கின்றன.
  
 இதுதான் வாழ்க்கை.  
 
 எவ்வளவு செல்வம் இருந்தாலும், கடைசியில் வெறுங்கையுடன் சென்று விடுவீர்கள்.  

எனவே அன்பாக இருங்கள், உங்களால் முடிந்தவர்களுக்கு உதவுங்கள்.   
பணத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் மக்களை மதிப்பிடுவதை தவிர்க்கவும்.  

 நல்லவர்களை நேசியுங்கள், உங்களுக்காக இருப்பவர்களை நேசியுங்கள், 
யாரையும் புண்படுத்தாதீர்கள், நல்லவர்களாக இருங்கள், நல்லவர்களாகவே இருங்கள், ஏனென்றால் அதுதான் உங்களுடன் செல்லும்.😌 

-லதா  மங்கேஷ்கர்,,,

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!