22.7.23

Astrology எங்கே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

Astrology 

எங்கே எச்சரிக்கையாக இருக்க வேண்டும்?

ராகுவும், கேதுவும் சொந்த வீடில்லாத கிரகங்கள். சாயா கிரகங்கள்.அவைகளுக்கு சில வினோதமான குணம் உண்டு.

ஜாதகனின் வாழ்க்கையில் பெரும்பாலும் கேடு (தீங்கு) விளைவிக்கக்கூடிய கிரகங்கள் அவைகள். சாபக் கேடான கிரகங்கள். 
இயற்கையான தீய கிரகங்கள் (Natural malefic planets) ஜாதகத்தில் இரண்டு விதமான தீய யோகங்களை  (Harmful yogas) 
கொடுக்கக்கூடியவைகள் அவைகள்.

1, காலசர்ப்ப யோகம்.
2. சண்டாள யோகம்.

சண்டாளன் என்பது சமூகத்தில் மதிப்பில்லாத மனிதனைக் குறிக்கும் சொல்லாகும்.

ராகு அல்லது கேதுவுடன் வேறு ஒரு கிரகம் சேரும்போது, அந்தக் கிரகம் இருக்கும் வீட்டின் பலாபலன்கள் கெட்டுப்போகும். 
உடன் சேரும் கிரகம் தன்னுடைய உண்மையான தன்மையை இழந்து விடும். அதுபோல ராகுவும், கேதுவும் 
தாங்கள் குடியிருக்கும் வீட்டின் தன்மையையும் கெடுத்துவிடக்கூடிய வல்லமை பெற்றவை.

ஆகவே அவர்களின் இருப்பு (presence)  வரவேற்கக்கூடியதல்ல. அது எந்த வீடாக இருந்தாலும் சரி! அதுதான் பலன்.

மேலும் அவைகள் தங்கள் சேர்க்கையாலும், பார்வையாலும் அழிவை ஏற்படுத்தக்கூடியவை. அதுபோல தாங்கள் குடியிருக்கும் 
வீட்டையும், தாக்கி அழிக்கக்கூடியவை.

சமயங்களில் அவைகள் சேரும் கிரகங்களின் இயற்கைத் தன்மையைப் பொறுத்து அது நன்மையாகவும் அல்லது தீமையாகவும் 
முடியலாம். மாறுபடலாம். வேறு படலாம். எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள்.

In short, these 2 planets (nodes) exhibit their own qualities modified  for good or bad depending upon the planets
 which they associate.

இந்த இரண்டு கிரகங்களும், ஜாதகத்தில் 6ம் வீடு, 8ம் வீடு அல்லது 12ம் வீடு போன்ற தீய இடங்களில் (மறைவு ஸ்தானங்களில்)
 இருக்கும் என்றால்

தீய பலன்கள் அதிகரித்தே காணப்படும்.

1. சூரிய சண்டாள யோகம்.

சூரியனோடு ராகு அல்லது கேது சேரும்போது, ஜாதகனின் தந்தைக்கு உடல் உபாதைகள் மற்றும் உடற்கோளாறுகளை 
ஏற்படுத்தும். ஜாதகனை முன் கோபக்காரனாக்கும். மகிழ்ச்சியில்லாத வாழ்க்கை அமையும்.

2. சந்திர சண்டாள யோகம்.

சந்திரனோடு, ராகு அல்லது கேது சேரும்போது, அவர்களுடைய சந்திர ஆதிக்கம் கேடானது ஆகும். எப்போதுமே 
விரும்பத்தகாதது ஆகும்.

ஜாதகனின் தாயாரின் உடல் நலத்திற்து கேடானது ஆகும். அத்துடன் ஜாதகனின் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும்  
கேடானது ஆகும்.”உடலும் உள்ளமும் நலம்தானா?” என்று கேட்கும் நிலையில் ஜாதகன் இருப்பான்.

ஜாதகனை ஏழையாக்கும். மற்றவர்களுக்கு கீழே ஜாதகன் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படும் (அடிமைத் தொழில்)
தகாத காரியங்களை ஜாதகன் செய்வான். அவைகள் செய்ய வைக்கும்.

இவைகள் பொதுப் பலன்கள். ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது 
கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்

அன்புடன்,
வாத்தியார்
----------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com