17.5.22

நானும் நீங்களும் கடவுள் நம்பிக்கையும்!!!!


நானும் நீங்களும் கடவுள் நம்பிக்கையும்!!!!

ஒருவன் பாலத்தில் தொங்கி கொண்டு கடவுளே காப்பாற்று என்கிறான். 

கடவுளோ 

"கீழே குதி. நான் காக்கிறேன் என்கிறார்". 

அவனுக்கோ நம்பிக்கை இல்லை. 

"வேறு யாரவது இருக்கீங்களா " என்று கேட்கிறான்.

மேலும் கடவுள்,

கிருஷ்ணா : 

என்னிடம் சரணடை. 

நான் உனக்கு தேவையானதை செய்கிறேன்

நாம் : 

நீ முதலில் செய். 

அப்புறம் சரணடைகிறோம்.

இதற்கு காரணம் நாம் அவனை நம்பவில்லை என்று அர்த்தம். 

கீழே உள்ள கதையை படியுங்கள். 

அவன் மீது நம்பிக்கை வரும்

பிரசாத் மும்பையில் ஒரு பெரிய டாக்டர். 

ஒரு நாள் கொல்கத்தாவில் ஒரு conference மீட்டிங் என்று அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. 

flight ல கிளம்பினார். 

ஆனால் திடிரென்று flight கோளாறானது. 

அதனால் அவருக்கு கொல்கத்தாவில் இறங்க delay ஆனது. 

உடனடியாக ஒரு டாக்ஸி பிடித்தார். 

ஆனால் 

அந்த நேரத்தில் புயல் காற்று வீசியது. 

எனவே டாக்ஸி delay ஆனது. 

மேலும் இரண்டு மணி நேரம் கழித்து டாக்ஸி கோளாறானது. 

டாக்ஸி டிரைவர் இதற்கு மேல் வண்டி ஓடாது என்று கூறிவிட்டார். 

வேறு வழியின்று டாக்ஸி விட்டு இறங்கினார். 

சுற்றும் முற்றும் பார்த்தார். 

ஒரு குடிசை நோக்கி சென்றார். 

குடிசையின் கதவை தட்டினார். 

அந்த குடிசையில் இருந்து ஒரு அம்மா வந்தார். 

பிரசாத் அவரிடம் டெலிபோன் இருக்கிறதா என்று கேட்டார். 

அதற்கு அந்த அம்மா தான் ஏழை என்றும் டெலிபோன் வைக்கும் அளவுக்கு வசதி இல்லை என்றும் கூறினார். 

ஆனால் 

அந்தம்மா அவரை உள்ளே அழைத்து டீ பிஸ்கட் கொடுத்தார். 

சற்று நேரம் கழித்து அவரை பஜனைக்கு அழைத்தார். 

அதற்கு பிரசாத் தான் கடவுளை நம்புவது இல்லை என்று கூறினார். 

உடனே அந்த அம்மா பசு பால் கொடுக்கிறது. 

மேகம் மழை பொழிகிறது. 

இதற்கெல்லாம் கடவுள்தான் காரணம் என்று விளக்கினார். 

உடனே பிரசாத் இதெல்லாம் அறிவியல் என்று பதிலளித்தார். 

அந்த நேரத்தில் ஒரு சிறுவன் உள்ளே வந்தான். 

வித்தியாசமாக நடந்து கொண்டான். 

பிரசாத் அவனை பற்றி கேட்டார். 

அதற்கு அந்தம்மா அவனுக்கு மூளை கோளாறு என்றாள். 

பிரசாத் அவனை டாக்டரிடம் காட்டவில்லையா என்று கேட்டார். 

அந்தம்மா தான் அவனை காட்டியதாகவும் அதற்கு டாக்டர் இவனை ஒருவரால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்றார். 

அவர் மும்பையில் இருக்கிறார் என்றும் அவர் பெயர் டாக்டர் பிரசாத் என்றும் கூறினார். 

பிரசாத்தின் கண்கள் விரிந்தன. 

அந்தம்மா மேலும் தங்களிடம் மும்பைக்கு செல்ல போதிய பணம் இல்லை என்றும் அதனால் அவரின் கணவர் இந்த பிரச்னையை கோவிந்தனின் திருவடியில் விட்டு விடுவோம் என்றும் இதற்கான தீர்வு அவனது கருணையால் கதவை தட்டும் என்றும் கூறினார். 

பிரசாத்துக்கு தன்னையே தன்னால் நம்ப முடியவில்லை. 

தான் இங்கே வர வேண்டும் என்றுதான் flight மற்றும் டாக்ஸி delay ஆனதா என்று சிந்திக்க ஆரம்பித்தார். 

முதல் முறையாக கடவுள் நம்பிக்கை வந்தது டாக்டர் பிரசாத்துக்கு.
-------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com