8.4.22

நமக்குள்ளே இருக்கும் அச்சம்


நமக்குள்ளே இருக்கும் அச்சம்

எனக்கும் அடிக்கடி தோன்றும் அச்சம்* .

#கணவன் 😢😢😢

கணவன் இறந்த பின் பெண்கள் எப்படியோ தான் பெற்ற மக்களை
அனுசரித்து வாழ்ந்து விடுகின்றனர்.

ஆனால் மனைவி போன பின் கணவன் படும் துயர் இருக்கிறதே

* 😴😴😴கொடுமை 😴😴😴*

தானாகவே காப்பி கூட போடத் தெரியாத கணவன், தண்ணீரைக்
கூடத் தானே மொண்டு குடிக்காத கணவன் மனைவியின் மறைவுக்குப்
பின் ஏனென்று கேட்க ஆளில்லாமல் போகிறான்.

ஒரு ஆணுக்கு நன்றாகவே சமைக்கத் தெரிந்தாலும் கூட மருமகளோ, 
மகளோ சமைலறையில் ஆளும் போது அங்கே இந்த ஆணால் 
தன்னிச்சையாக நுழைய முடியாது.

வேண்டுவனவற்றை தானே சமைத்துக் கொள்ளவோ எடுத்துக் கொள்ளவோ
கூசுகிறார்கள்.

என்ன கொடுத்தார்களோ எப்போது கொடுத்தார்களோ கொடுத்ததை
கொடுத்த போது சாப்பிட்டுக் கொள்ளணும்.

ரெண்டாவது காபி கூட கேட்க முடியாது.

தலைவலியில் ஆரம்பித்து எப்பேர்ப்பப்ட்ட சுகக்கேடு வந்தாலும் ஆதரவாகப்
பேசக் கூட ஆளிருக்காது.

இதெல்லாம் என் உறவுக்குள்ளே, நட்பு வட்டத்திற்குள்ளே கண்ட உண்மை.
துளியும் அதிகப்படியில்லை.

என் கணவர் காலை எட்டரை மணிப் போலசும்மா கிச்சனில் வந்து எதானும் பேச ஆரம்பித்தால் காபி வேணும்னு அர்த்தம். காபி குடித்தால் காலை உணவின் அளவு அவருக்குக் குறைவதால் கொடுக்க யோசிப்பார்கள்.

இப்போதெல்லாம் காலையில் என் கணவர் கேட்காமலேயே ரெண்டாவது
காபி கொடுத்துடுவேன்.

எனக்குப் பின் அவருக்கு யார் கொடுப்பாங்க?

இந்த நினைவு வந்தால் மனசு ரொம்ப பாரமாகிடுது.

மனைவி இல்லாத கணவன் உயிரற்ற உடல் போலே!!

சகோதரிகளே!!
யாருக்கு விதி எப்போன்னு தெரியாது!
உங்கள் கணவர் உங்களுக்குப் பின் வாயில்லாப் பூச்சிதான்!

முடிந்தவரை கணவனிடம் அனுசரணையாக இருங்கள்!!

ஒரு குடும்பத்தலைவியின் ஆதங்கம்.
-------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com