18.3.22

சினிமா: இரட்டை இயக்குனர்களின் கதை!!!!


சினிமா: இரட்டை இயக்குனர்களின் கதை!!!!

90 களில் நடிகர் சிவக்குமாரை வைத்து பல வெற்றிப் படங்களை இயக்கியவர்கள் தேவராஜ் & மோகன் .

இருவரும் இயக்குநர் பி.மாதவனிடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றியவர்கள்.

பி.மாதவன் தயாரித்த பொண்ணுக்குத் தங்க மனசு படத்தில் இயக்குநர்களாக அறிமுகமாயினர்..

தேவராஜ் முன்பே  இறந்து விட்டார். இயக்குநர் மோகன் சில வருடங்களுக்கு முன்னால் 2012 இல் அவரது வீட்டுக் குளியலறையில் வழுக்கி விழுந்து காலமானார்.

0
  
தேவராஜ் & மோகன் இயக்கிய படங்கள் அன்னக்கிளி , ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது , சிட்டுக்குருவி , ரோசாப்பூரவிக்கைக் காரி  , இசை பாடும் தென்றல், கண்ணில் தெரியும் கதைகள் ,கவிக்குயில் , சக்களத்தி , அன்பு ரோஜா , பாலூட்டி வளர்த்த கிளி, பூந்தளிர் , சாய்ந்தடம்மா சாய்ந்தாடு , உறவாடும் நெஞ்சம், வாழ நினைத்தால் வாழலாம் , உங்களில் ஒருத்தி , உறவு சொல்ல ஒருவன் , கண்மணி ராஜா 

0

தேவராஜ் & மோகன் இயக்கிய படங்களின் வெற்றிக்குப் பாடல்களின் பங்களிப்பு அதிகமிருக்கும்.

மோகனப் புன்னகை ஊர்வலமே - உறவு சொல்ல ஒருவன்

பால் நிலவு நேரம்  - அன்பு ரோஜா

ஒரு காதல் தேவதை - சாய்ந்தடம்மா சாய்ந்தாடு

ஒரு நாள் உன்னோடு ஒரு நாள் - உறவாடும் நெஞ்சம்

சாமத்தில் பூத்த - உங்களில் ஒருத்தி

காதல் விளையாட  - கண்மணி ராஜா

வாட வாட்டுது போர்வை கேட்குது - சக்களத்தி

எந்தன் கைக்குட்டையை - இசை பாடும் தென்றல்

நான் பேச வந்தேண் - பாலூட்டி வளர்த்த கிளி

இயற்கை ரதங்களே- வாழ நினைத்தால் வாழலாம்

0

பொண்ணுக்குத் தங்க மனசு படத்தில் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் இளையராஜா உதவியாளராகப் பணிபுரிந்தார்.

இப்படத்திற்காக கண்ணதாசன் ஒரு பாடல் எழுதியதை அருகிலிருந்து பார்த்த இளையராஜா விளக்குகிறார்..

நான் ஜி.கே வெங்கடேஷிடம் பணியாற்றிக் கொண்டிருந்த போது முதன் முதலாக கண்ணதாசனைச்
சந்தித்தேன்.ஜி.கே.வி கன்னடத்தில் இசையமைத்த ஒரு மெட்டைத் தமிழில் இசையமைக்கத் தீர்மானித்துப் பாடலை எழுத கண்ணதாசனை அழைத்தார். கன்னடத்தில் அந்தப் பாடல் எழுதிய பாடலாசிரியருக்கு ஒரு வாரம் பிடித்தது, ஓரளவு கடினமான மெட்டுதான்.

கண்ணதாசன் வந்தார், நான் கிடார் வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறேன். டைரக்டர் சூழலைச் சொல்லச் சொல்ல கவிஞர் கவனிக்கவே இல்லை..

புகை பிடிக்கிறார், பிடிக்கிறார் 
பிடித்து கொண்டே இருக்கார் .. 
எனக்கோ எரிச்சல் வந்தது..

டைரக்டர் சொல்லி முடிச்சதும், ஜி.கே.வெங்கடேஷைப்
பார்த்து, " சரி டியூன் என்ன ? " என்றார்.

ஜி.கே.வி: தானானனே னா னா
டியூன் கேப் விடாம போய்ட்டே இருந்தது , இன்னொரு வாட்டி கேட்டுக் கொண்டார்

தானானனே னா னா

தேன் சிந்துதே வானம்..

அப்புறம் என்ன ?

தனா தனா தானானனா

உனை எனை தாலாட்டுதே

இப்படியே தொடர்ச்சி இல்லாமல்..
மேகங்களே தரும் ராகங்களே
என்று கூறிக் கொண்டே இருந்தார்.. கடைசியா எல்லா வரிகளையும் ஒன்று சேர்த்துப் பாடிப் பார்த்தால், அந்த மெட்டுக்கு அந்தப் பாடல் அவ்வளவு அற்புதமாகப் பொருந்தியது, மெய் சிலிர்த்துப் போனேன் …
09/03/2022, 11:26 - +91 98412 76254: இயக்குனர் தேவராஜ் ஆராவயலில் தெ. நா. சி. நா. சோம. வீட்டில் பிறந்தவர். மாத்தூர் உறையூர் பிரிவை சார்ந்தவர். இயக்குனர் மாதவனிடம் 15 படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். 
20 படங்கள் இயக்கியுள்ளார். 
அவரது மகன் வீட்டில் சௌகரியமாக வாழ்ந்து வந்தார். மகன் சீனியர்  டெக்னீசியனாக ராஜன் ஐ காரில் பணியாற்றினார். தேவராஜ் மாரடைப்பால் காலமானார். அவரது பிள்ளைகள் அனைவரும் சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர்.
------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com