10.3.22

கிரகப்பிரவேசத்தின் போது பசுமாட்டை வீட்டிற்குள் அழைத்து வருவது ஏன்?


கிரகப்பிரவேசத்தின் போது பசுமாட்டை வீட்டிற்குள் அழைத்து 
வருவது ஏன்?

க்ருஹம் என்றால் வீடு அல்லது வசிப்பிடம். கிரகம் என்றால் வானில் சுற்றும் கோள். க்ருஹப்ரவேசம் என்பதே சரியான வார்த்தை. புதுமனைப் புகுவிழாவின்போது வாசலில் கன்றுடன் கூடிய பசுமாட்டிற்கு பூஜை செய்து அதனை வீட்டிற்குள் அழைத்து வருவதை சம்பிரதாயமாகக் கொண்டிருக்கிறோம். பசுமாட்டிற்குள் முப்பத்து முக்கோடி தேவர்களும் வசிப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. கோமாதா என்றழைக்கப்படும் பசு மகாலட்சுமியின் அம்சம். அக்காலத்தில் ஒருவருடைய சொத்து மதிப்பீடு செய்யும்போது எத்தனை பசுமாடுகள் வைத்திருக்கிறார் என்பதை கணக்கில் கொள்வார்கள். போரில் வெற்றி பெறும் அரசர்கள் கூட அண்டை நாட்டில் இருந்து பசுமாடுகளை தனது நாட்டிற்கு வெற்றிப் பரிசாகக் கொண்டுவருவர். 

ஆக பசுமாடு என்பது செல்வத்தைத் தர வல்லது என்பது வரலாற்று உண்மை. அது மட்டுமல்லாது பசு என்பது சுத்தத்தின் அடையாளம். குறிப்பாக, கோமயம் என்றழைக்கப்படும் பசுவின் சிறுநீர் கிருமிகளை அழிக்கும் வல்லமை படைத்தது என்பதை அறிவியலும் ஒப்புக் கொள்கிறது.  தீயசக்திகளை விரட்டும் வலிமை பசுமாட்டிற்கு உண்டு. அதனால்தான் புதுமனைப் புகுவிழாவின்போது முதலில் பசுமாட்டினை வீட்டிற்குள் அழைத்துச் செல்கிறோம். 
--------------------------------------------
படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com