17.11.21

Astrology: Jothidam: 15-11-2021 புதிருக்கான விடை!!!!

Astrology: Jothidam: 15-11-2021 புதிருக்கான விடை!!!!

ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து, மனிதருக்கு அவருடைய 36வது வயதில் சொந்த வீடு கட்டும் ஆசை வந்தது. ஆசை அதிகமாகி அனுதினமும் வீட்டைப் பற்றிய கனவே அவரைச் சுற்றிவரத் துவங்கியது. தசா, புத்திகள் தானே பலனைத் தரும். சில ஆண்டுகள் காத்திருப்பிற்குப் பின் அதற்குரிய தசா, புத்தி (Major Dasa and Sub period) வந்த போது அவருடைய கனவு நனவாகியது. ஆசை நிறைவேறியது. அவருடைய ஜாதகத்தை அலசி அவருடைய எந்த வயதில் கனவு நிறைவேறியது  அல்லது எந்த தசா, புத்தியில் நிறைவேறியது என்பதைச் சொல்லுங்கள்'' என்று கேட்டிருந்தேன்

சரியான பதில்: ஜாதகருக்கு அவருடைய 36 வது வயதில் குரு மகா திசை ஆரம்பம். குரு திசை சுய புத்தி வழக்கம்போல வேலை செய்யவில்லை. அடுத்து வந்த சனி புத்தியில் தசா நாதனும் புத்தி நாதனும் அஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 Position) அதற்கு அடுத்த புதன் புத்தியில், புதன்  குரு பகவானின் பார்வையைப் பெற்றிருப்பதால் அந்த திசா புத்தியில் ஜாதகரின் கனவுன் நிறைவேறியது. அதாவது ஜாதகரின் 41வது வயதில் அவரது கனவு நனவாகியது. ஆசை நிறைவேறியது!!!!

அடுத்த வாரம் மீண்டும் வேறு ஒரு புதிருடன் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com