24.8.21

Astrology: ஜோதிடம்: தனது முப்பதாவது வயது வரை பொறுப்பில்லாமல் ஊர் சுற்றிக்கொண்டிருந்த அன்பரின் ஜாதகம்!!!!!

Astrology: ஜோதிடம்: தனது முப்பதாவது வயது வரை பொறுப்பில்லாமல் ஊர் சுற்றிக்கொண்டிருந்த அன்பரின் ஜாதகம்!!!!!

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. திருவோண நட்சத்திரக்காரர். படிக்கிறகாலத்தில் ஒழுங்காகப் படிக்கவுமில்லை, வேலையில் சேர்ந்தால் ஒரு இடத்திலும் ஒழுங்காக வேலை பார்க்கவுமில்லை. நண்பர்களுடன் சேர்ந்து ஊரைச் சுற்றிக்கொண்டிருந்தார். அத்துடன் தன்னுடைய பெற்றோர்களுக்கு பாரமாக இருந்தார்.

அவரின் இந்த நிலைப்பாட்டிற்கு ஜாதகப்படி என்ன காரணம்? அவருடைய எதிர்காலம் எப்படி இருக்கும்?

ஜாதகத்தை அலசுவோம் வாருங்கள்!!!!

14 வயதில் ராகு திசை ஆரம்பித்தது. லக்கினமும் ஏழாம் வீடும் கேது மற்றும் ராகுவின் பிடியில் உள்ளது,

அந்த அமைப்பு சின்ன வயதில் நிலையில்லாத வாழ்க்கையைத்தான் கொடுக்கும். ராகு திசை முடியும்போது - அதாவது ஜாதகரின் 31வது வயது வரை நிலைமை அப்படித்தான் நீடித்தது.

அதற்குப் பிறகு குரு மகா திசை துவங்கியவுடன் நிலைமை தலை கீழாக மாறிவிட்டது.3 & 10ம் வீட்டு அதிபதி சுக்கிரனுடன் குரு பகவானின் சேர்க்கை நல்ல மாற்றங்களை உண்டாக்கியது. அத்துடன் 2ல் இருக்கும் லக்கினாதிபதி சூரியனுடன் கூட்டாக உள்ள 2 & 11ம் அதிபதி புதன் ஜாதகனுக்கு நல்ல பணவரவையும் உண்டாக்கினார். ஜாதகன் மேன்மையுற்றான். அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன், 

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:
==============================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com