20.7.21

ஆன்மிகம்: நம் துன்பங்கள் நீங்க நாம் என்ன செய்ய வேண்டும்?


ஆன்மிகம்: நம் துன்பங்கள் நீங்க நாம் என்ன செய்ய வேண்டும்?

இன்று செவ்வாய்க் கிழமை ஆன்மிகப் பதிவு.

துன்பங்கள் நீங்க தேவராய சுவாமிகள் என்ன செய்தாரோ, அதைத்தான் நாமும் செய்ய வேண்டும்.

யார் இந்ததேவராய சுவாமி? கநத சஷ்டிக் கவசத்தைப் பாடி நனக்கு அருளினாரே, அவர்தான் தேவராய சுவாமி!

தீராத வயிற்று வலியினால் அவதிப்பட்ட அவர், திருச்செந்தூர் சென்று, அங்கே தங்கியதோடு, அங்கே உறையும் முருகப்பெருமானை மனமுருக வேண்டினார். தனக்கு ஏற்பட்டிருக்கும் துன்பத்தைப் போக்கும்படி. அத்துடன் சஹ்டிக் கவசத்தையும் பாடினார். அந்தக் கவசம் கேட்பதற்கும், இசைப்பதற்கும் அருமையாக இருக்கும்

இணையத்தில் சூலமங்கலம் சகோதரிகள் பாடிய கவசம் இல்வசமாகக் கிடைக்கும் ஆடியோகவாகவும் கிடைக்கும். வீடியோகவாகவும் கிடைக்கும். கணினியிலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கை பேசியிலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கேட்டுப் பாருங்கள். தினமும் ஒருமுறை பாராயணம் செய்யுங்கள். 
20 நிமிடங்கள்தான் ஆகும்.

தொடர்ந்து செய்யுங்க்ள். குறைந்தது ஒரு மண்டலம் செய்யுங்கள். அதாவது 48 நாட்கள்.

பிறகு ஏற்படும் பலனைப் பாருங்கள்.
அசந்து போவீர்கள்.
உங்கள் துன்பம் எல்லாம் பறந்துபோயிருக்கும்!!!!

அன்புடன்
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2 comments:

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com