8.4.21

Astrology: ஜாதகரின் ஆசை நிறைவேறாமல் போனதற்கு என்ன காரணம் ?


Astrology: ஜாதகரின் ஆசை நிறைவேறாமல் போனதற்கு என்ன காரணம் ? 

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. கார்த்திகை நட்சத்திரக்காரர். அவருக்கு 44 வயது நடக்கும்போது தொடர்ந்து 2 ஆண்டு காலம் சொந்த வீடு வாங்குவதற்காக பாடுபட்டார். ஆனால் ஒரு வீட்டை வாங்க முடியவில்லை. ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்? க்ளூ வேண்டுமா? அவருக்கு அப்போது குரு மகா திசையில் சுக்கிரபுத்தி நடந்து கொண்டிருந்தது 

ஜாதகத்தை அலசுவோம் வாருங்கள்! 

ஜாதகர் மிதுன லக்கினக்காரர். தசா நாதன் குரு பகவானும், புத்தி நாதன் சுக்கிரனும் ஒருவருக்கொருவர் 6/8 நிலைப்பாட்டில் (அஷ்டம சஷ்டம நிலைப்பாட்டில்) இருப்பதைப் பாருங்கள், அவ்வாறு இருக்கும்போது நன்மையானது எதுவும் நடக்காது. அந்த தசா புத்தியில் ஜாதகரின் ஆசை நிறைவேறாமல் போனதற்கு அதுதான் காரணம்

ஆனால் அதற்கு அடுத்து வந்த குரு மகா திசை சூரிய புத்தியில் ஜாதகரின் ஆசி நிறைவேறியது. ஒரு வீட்டை வாங்கினார் குரு பகவானின் பார்வை சூரியனின் மேல் விழுவதைப் பாருங்கள் 

அன்புடன்

வாத்தியார்

---------------------------------------------

கேள்விக்கு உரிய ஜாதகம்:


========================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com