5.3.21

Astrology: ஜோதிடம் : காலமகள் ஏன் கண் திறக்கவில்லை?


Astrology: ஜோதிடம் : காலமகள் ஏன் கண் திறக்கவில்லை? 

கீழே ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். அன்பருக்கு அவருடைய நாற்பதுவயது வரை திருமணம் ஆகவில்லை. அதற்குப்பிறகும் ஆகவில்லை. பெண் துணையின்றி வாழ்க்கையைக் கழிக்கும்படியாகிவிட்டது  ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்.? 

வாருங்கள் ஜாதகத்தை அலசுவோம்!!! 

ஏழாம் வீட்டுக்காரனான செவ்வாய் தன் சொந்த வீட்டில் வலுவாக இருந்தாலும், பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார். ஒரு பக்கம் சூரியன் மற்றும் சனி மறு பக்கம் ராகு. ஜாதகருடைய 23வது வயதில் ராகு திசை துவங்கி விட்டது. ராகு 8ம் வீட்டில் இருப்பதோடு, சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை நட்சத்திரத்தில் இருக்கிறார். துலா லக்கினத்திற்கு சூரியன் பாதகாதிபதி. ஆகவே அந்த திசை முழுவதும் ஜாதகருக்கு சாதகமாக இல்லாமல் போய்விட்டது

அத்துடன் ராகுவின் மேல் சனியின் பார்வை விழுவதைக் கவனியுங்கள். ராகுவை சனி கட்டிப்போட்டுவிட்டார். (சனியின் பார்வை திருமணத்தைத் தாமதப் படுத்தும்

சந்திர லக்கினத்தில் இருந்து 7ம் வீட்டில் இருக்கும் குரு பகவான் பாவ சந்திப்பில் அமர்ந்து வலிமையின்றி இருக்கிறார். மேலும் அந்த வீட்டுக்குரிய புதன் ராசி மற்றும் நவாம்சத்தில் சனியுட.ன் கூட்டாக உள்ளார். அதனால் அவரும் பிரயோஜனப் படாமல் போய்விட்டார் அடுத்து வந்த குரு மகாதிசையும் ஜாதருக்கு அனுசரணையாக இல்லாமல் போய்விட்டது. இந்த அமைப்புக்களால் ஜாதகருக்கு கடைசிவரை திருமணமே நடக்கவில்லை!!!!

கேள்விக்குரிய ஜாதகம் கீழே உள்ளது:

 


அன்புடன்

வாத்தியார்

------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2 comments:

  1. Intha kusumbu thaan unkitta pudichathu...

    ReplyDelete
    Replies
    1. எதைக் குசும்பு என்கிறீர்கள்?

      Delete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com