17.12.20

Humour நகைச்சுவை: 400 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடுவது எப்படி?

400 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடுவது எப்படி?

இதப்படிங்க முதல்ல..

ஊர் முழுவதும் ஓர் அறிவிப்பு!

400 ரூபாய் இருந்தால் காலம் முழுவதும் உட்கார்ந்து சாப்பிடலாம்.

இதைக் கண்டுப் பலர் வியந்தனர்.  இதைப்பற்றி மேலும் விசாரித்தபோது, 400 ரூபாய் பணத்துடன் வந்து சந்திக்க வேண்டிய இடத்தின் முகவரி கிடைத்தது.

ஊரே திரண்டு அந்த இடத்திற்கு வந்தது. வெறும் 400 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் தின்பதென்றால் சும்மாவா.😊

இடத்தை அடைந்த ஒருவன் சக நபரிடம் 400 ரூபாயா? அல்லது 4000, 40,000 ... அப்படி ஏதாவதா? என்று...🤭

400 ரூபாய் மட்டுமே என்றான்.😜

வரிசையில் உள்ள ஒவ்வொருவரும் உள்ளே சென்றனர்..
.
.சார் நீங்க, 

நானும் காலம் புரா உக்கார்ந்து சாப்பிட போரேன். 
.
.நானும் வரேன். .
.
.சார் நானும் .
.
.ஐயா வாங்க .
.
.அம்மா வாங்க .
.
.அக்கா நீயுமா.
'
'வா வா, உக்கார்ந்து.  ..400, ரூவா, 
.
.வாவா 

அங்கே ஒருவன் நாற்காலி விற்றுக் கொண்டு இருந்தான்.🤣

"வாங்க சார்... வாங்க சார்...ஸ்டராங்கான நாற்காலி சார்...இது சீக்கிரத்துல உடையாது சார்...


400 ரூபாய் கொடுத்து வாங்கிட்டு போய் காலம் முழுவதும் இதில் உட்கார்ந்து சாப்பிடலாம் சார்"🤪 என்று கூவினான்.

நீதி :
வாக்குறுதிகளை உடனே நம்பிவிடக் கூடாது. 

நல்லா யோசிக்கணும்.

சாத்தியமான்னு பார்க்கணும்.

ரொம்ப அநியாயத்துக்கு ஆசைப்படக் கூடாது.

 இனி வருவது தேர்தல் காலம் 

கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் இவ்வாறுதான் இருக்கும்

 சிந்தித்து செயல்படுங்கள் தமிழக மக்களே👍

===========================================================
2 .பொழைக்கத் தெரிஞ்சவன்

*இஞ்சினியரிங் படிச்சிட்டு ரொம்ப நாள் வேலை கிடைக்காத இஞ்சினியர் ஒருத்தர் டாக்டர் ஆகிடலாம் என்று  கிளினிக் ஒன்றைத் திறந்தார்.*

வாசலில் ஒரு போர்டு எழுதினார்.

*"எந்த வியாதியாக  இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும். உங்கள் வியாதி குணமாகவில்லை எனில்  1000 ரூபாயாக திருப்பி தரப்படும்!"*

இதைக் கவனித்த வேலையில்லா மருத்துவர் ஒருவர் இந்த போலி இஞ்சினீர் டாக்டரிடம் இருந்து ஆயிரம் ரூபாயை பறிக்க உள்ளே சென்றார்.

*"டாக்டர், என் நாக்குல எந்த சுவையும் உணர முடில .."*

"நர்ஸ் அந்த 23 ம் நம்பர் பாட்டில்ல இருக்குற மருந்தை இவர் வாயில மூனு சொட்டு விடுங்க!" என்றார் இஞ்சினீர் டாக்டர்.

நர்ஸ் அவர் வாயில் மருந்தை விட்ட பிறகு "அய்யோ டாக்டர் இது  பெட்ரோல் ஆச்சே!" என்று அலறினார் இவர்.

"வெரி குட். இப்ப உங்க taste buds நல்லா வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு. உங்களுக்கு எல்லா சுவையையும் உணர முடிகிறது. 500 ரூபாய் ஃபீசை எடுங்க!"

உண்மையான டாக்டர் வேற வழி இல்லாமல் 500 ரூபாயைத் தந்து விட்டு வெளியேறினார்.

ஆனாலும் ஆயிரம் ரூபாயை பெறும் முயற்சியைக் கைவிட வில்லை. சில நாட்கள் கழித்து மீண்டும் அந்த கிளினிக்கிற்கு சென்றார்.

*"டாக்டர் எனக்கு மறதி ரொம்ப ஜாஸ்தியாருக்கு குணப்படுத்துங்க!" என்றார்.*

"நர்ஸ் அந்த 23 ம் பாட்டிலைத் திறந்து இவர் வாயில மூன்று சொட்டுக்கள் விடுங்க!" என்றார் இஞ்சினீர் டாக்டர்.

"அய்யோ டாக்டர் அது பெட்ரோல் ஆச்சே!" என்று அலறினார் இவர்..

"வெரி குட் உங்க மெமரி பவர் நல்லாய்டுச்சு 500 ரூபா எடுங்க!"

இந்த முறையும் ஏமாந்து போன மருத்துவர் சில நாட்கள் கழித்து மீண்டும் வந்தார்.

*"எனக்கு கண் பார்வை சரி இல்லை. மருந்து தாங்க டாக்டர்"*

"சாரி இதுக்கு என்கிட்ட மருந்து இல்லை. இந்தாங்க ஆயிரம் ரூபாய்!" என்று ரூபாய் நோட்டை நீட்டினார் இஞ்சினீர் டாக்டர் 

"இது 500 ரூபாய் நோட்டாச்சே " என்று பதறினார் இவர்.

"வெரிகுட் உங்க பார்வையும் நல்லாய்டுச்சு எடுங்க 500 ரூபாய்!" 

*பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான். படிப்பாவது கிடிப்பாவது! :)*

படித்ததில் ரசித்தது!
அன்புடன்
வாத்தியார்
=====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com