5.10.20

எங்கள் ஊர் காரைக்குடி.


எங்கள் ஊர் காரைக்குடி.
காரைக்குடி
மிகநல்ல ஊர்.
வாழ்வின் தேவைகள்
அனைத்தும்
ஒரே இடத்தில்!
கல்லுக்கட்டியைச் சுற்றி!
கொப்புடைய அம்மனை
ஒரு பெரிய
பிரகாரம்வந்தால் போதும்!

செட்டிநாட்டிலுள்ள 75 நகரத்தார் ஊர்களுக்கும் 
இணைப்புக் கொடுக்கும் ஊர் காரைக்குடி!

ரொம்பதூரத்திலிருந்து
வருபவர்களுக்கு
உபயோகமான
செய்திகள்சில.

உங்கள் வயிற்றுக்கு
தொந்தரவில்லாத
பலகாரம் சாப்பாட்டுக்கு
ஆலங்குடியார் வீதியில்
ஒருஆச்சிவீடு,
காலை பலகாரம் மட்டுமென்றால்
அரு.அ.வீதியில்
காந்தி நெய்ஸ்டோர் அருகில்
மல்லிகை உணவகம்.

உங்கள்வீட்டு விருந்துகளுக்கு
முன்கூட்டியே சொல்லி
செட்டிநாட்டு உணவுவகைகள்
ஏற்பாடு செய்துகொள்ள
செந்தில் மெஸ்
கீழ்வரும் எண்ணில்
கூப்பிட்டு விவரம் அறியலாம்
9444816708.

தங்கும் இடத்துக்கு
செக்காலை ரோட்டில்
உதயம் லாட்ஜ்.

பெரியார்சிலை அருகில்
வசதியான தங்கும் இடத்துக்கு
கோல்டன் சிங்கார்.

அதன் அருகில்
அன்னலெட்சுமி உணவகம்
விலையைப்பற்றி யோசிக்கக்கூடாது.
தரமானதும்,அலையாமல்
உங்களுக்கு
மிக அருகிலும்உள்ளது!

சுதந்திரப் போராட்ட வீரர்
கம்பன் அடிப்பொடி
சா.கணேசன் அவர்கள் பிறந்தஊர்
காரைக்குடி!

கண்ணதாசன் பிறந்தது
சிறுகூடல்பட்டி என்றாலும்
பிள்ளை வளரவந்த ஊர்
காரைக்குடி!

வள்ளல்அழகப்பரின் பிறந்தஊர்
கோட்டையூர் என்றாலும்
அவர்வாழ்வின் மிகஉயர்ந்த
நிலையை அடையக்காரணமான
அழகப்பா கல்விநிறுவனங்கள்
அமைத்த ஊர்
காரைக்குடி!

திரப்படத்துறையில் மிகப்புகழ்பெற்ற
ஏ.வி.எம் மெய்யப்பசெட்டியார்

இயக்குனர்கள்
எஸ்பி.முத்துராமன்
பஞ்சு அருணாசலம்
இராம.நாராயணன்

குடிநீர்க்காவலர் பழ.கருப்பையா
மெட்டிஒலி திருமுருகன்
போன்றவர்களின் சொந்தஊர்
காரைக்குடி!

ஆயிரம்ஜன்னல் வீடுமுதல்
அரண்மனைபோன்ற வீடுகள்
அமைந்த ஊர்
காரைக்குடி!

செட்டிநாட்டுக்குப் பெருமைசேர்க்கும்
நூல் சேலைகளுக்கு
புகழ்பெற்ற ஆர்.எம்.ஆர்
சேலைக்கடை மெ.மெ. வீதியில்
அமைந்த ஊர்
காரைக்குடி!

நகரத்தார் குருபீடம்
கோவிலூரில் அமைந்த ஊர்
காரைக்குடி!

குன்றக்குடி பிள்ளையார்பட்டிக்கு
மிக அருகில் [சுமார் பத்து கி.மி] உள்ள ஊர்
காரைக்குடி!

ஆலமர் கடவுள்
மால[அ]யன் கோவில் முன்னே
அமர்ந்து அருள்பாலிக்கும் ஊர்
காரைக்குடி!

நூற்றிநாற்பது ஆண்டுகள்
பழமைவாய்ந்த நகரச்சிவன்கோவில்
அமைந்த ஊர்
காரைக்குடி!

நகரச் சிவன்கோவில் அருகில்
நூற்றி எட்டுப்பிள்ளையார்
அமர்ந்து அருள்பாலிக்கும் ஊர்
காரைக்குடி!

எடுக்க எடுக்கக் குறையாத
குடிநீர்ச் செம்பை ஊற்றுஉள்ள ஊர்
காரைக்குடி!

முத்துமாரி அம்மனுக்கு
தாவிவரும் வேல்போட்டு
காவடியும் பால்குடமும்
முளைப்பாரி மதுக்குடமும்
தீச்சட்டி பூமிதியும்
காணக்கிடைக்காத காட்சியில்
பங்குனியில் பொங்கிவழியும் ஊர்
காரைக்குடி!

ஏ.வி.எம்மிற்குப்பிறகு
இப்போது புதிதாக
திரப்படத் துறையினர்
முற்றுகையிடும் ஊர்
காரைக்குடி!

படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=================================
எனது முதல் 3 செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் தொகுப்பு நூற்கள் வெளியான ஊர்  காரைக்குடி. அதுவும் 6 மாதங்களில் 3 புத்தகங்கள்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com