27.8.20

இறையாற்றல் மீது நம்பிக்கை வையுங்கள்!!!


இறையாற்றல் மீது நம்பிக்கை வையுங்கள்!!!

இரண்டு அணில்கள் மரத்தில் ஏறி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. அதில் ஒரு அணிலுக்குக் இறை நம்பிக்கை அதிகம். எந்தக் காரியத்தைச் செய்தாலும் இறைவனை வழிபட்டு விட்டு செய்வதும், ஒவ்வொரு நன்மையிலும் நன்றி செலுத்துவதும் அதன் வழக்கம். அதன் தோழனான மற்ற அணிலுக்கோ இறை நம்பிக்கை கிடையாது.

"திட்டமிட்டு செயல் புரியும் புத்திசாலிக்கு கடவுளே தேவையில்லை" என்று அடிக்கடி சொல்லும். அத்துடன் மற்ற அணிலையும் கேலி செய்து சிரிக்கும். இறை நம்பிக்கையுள்ள அணில் இதையெல்லாம் கண்டு கொள்வதேயில்லை. விளையாட்டு மிகவும் சுவாரஸ்யமாகத் தொடர்ந்தது. நேரம் போவதே தெரியவில்லை . உற்சாகத்துடன் ஓடிக் கொண்டிருக்கும் போது இறை நம்பிக்கையுள்ள அணில் பிடி வழுக்கி மரத்திலிருந்து கீழே விழுந்து விட்டது. காயம் எதுவும் பட வில்லையென்ற போதிலும் , கொஞ்சம் வயிற்றில் அடிபட்டு வலித்தது.

"பெரிய ஆபத்திலேர்ந்து என்னைக் காப்பாத்திட்டீங்க கடவுளே. உங்களுக்கு நன்றி" என்றது. இதைக் கேட்டதும் மரத்தில் இருந்த அணில் சிரி சிரியென்று சிரித்தது.

"கீழே விழுந்து மண்ணைக் கவ்வினாலும் உனக்கெல்லாம் அறிவே வராது. உன் கடவுள் எதுக்காக உன்னைத் தள்ளி விட்டாருன்னு கொஞ்சம் அவர்க்கிட்டேயே கேட்டு சொல்லேன்" என்று சொல்லி மீண்டும் கிண்டலாய் சிரித்தது.  பக்தியுள்ள அணில் சொன்னது,

"கடவுளை நம்புற நாங்கள்லாம் துன்பப்பட்டாலும் கைவிடப் படுகிறதில்லை. கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை. அதனால கடவுள் எங்கள கீழே தள்ளி விடப்பட அனுமதித்தால் அதுலயும் காரணம் இருக்கும் " என்றது. ஆமாமாம் . கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டுறதில்லை " மீண்டும் விழுந்து விழுந்து சிரிக்கும் தன் நண்பனை வேதனையோடு பார்த்தது,
கண்களை மூடி விண்ணை நோக்கி,

"கடவுளே, இந்த அவமானத்துக்கும், வலிக்கும் ஏதுவாய் நான் ஏதேனும் தவறு செய்திருந்தா மன்னிச்சிடுங்க" என்றது. அது கண்களைத் திறக்கும் போது  கண்ட  காட்சியைக் கண்டு நடுங்கி விட்டது. மரத்தில் இருந்த அணில் இன்னும் குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தது. அதற்குப் பக்கவாட்டிலிருந்து ஒரு பாம்பு அதை நெருங்கி வந்து கொண்டிருந்தது.

"டேய், உன் பக்கத்துல பாம்புடா" என்று மரத்தின் கீழிருந்து கதறுகிற சத்தம் அதன் காதில் மெதுவாய் கேட்டது! கண்ணிமைக்கும் நேரத்தில் பாம்பிடமிருந்து தப்பிக்க மரத்தில் இருந்து கீழே விழுந்தது! தப்பித்தது!! தன் தோழன் மரத்திலிருந்து தவறி விழுந்ததற்கும் கூட ஒரு காரணம் இருந்திருக்கிறது என்று உணர்ந்த்து !

*சில வேளையில் நாம் விழும் போது உலகம் கேலியாய்ச் சிரிக்கலாம். அது நம்மை காப்பதற்காகவே..!*

*நமக்கு எது நிகழ்ந்தாலும் இறைவன் அதை நன்மைக்கு தான் செய்கிறார் என்பதை உணர்ந்து கொண்டால் வேதனைக்கு இடமில்லை..!!* *💗சிந்தனை கதை...*
-------------------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2 comments:

  1. வாத்தியார் அவர்களுக்கு அடியேனின் வணக்கங்கள்.
    கதை அருமை.
    சில சமயங்களில் நானும் 2-வது அணில் போல நினைத்தது உண்டு. ஆனால் முடிவில் (இறைவனின் தீர்மானத்தில்) அது நன்மையாகவே நடந்தது கண்டு வியந்த நாட்கள் அநேகம்.
    வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.
    (குறிப்பு: கதை இருமுறை repeat ஆகியுள்ளது)
    நன்றி.

    ReplyDelete
  2. அருமை சார் .. இந்த நேரத்தில் தேவையான பதிவு

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com