2.7.20

சர்தார் பட்டேல் செய்த அற்புதமான காரியம்!!!!


Born: 31 October 1875, Nadiad
Died: 15 December 1950, Mumbai

சர்தார் பட்டேல் செய்த அற்புதமான காரியம்!!!!

👉 சுதந்திரப் போராட்டக் காலம்.

கலகம் செய்ததாகக் கைது செய்யப்பட்ட 46 விடுதலைப் போராட்ட வீரர்களின் சார்பாக வெள்ளைக்கார நீதிபதி முன்பாக வாதம் செய்கிறார் அவர்.

👉 நடுவில் வழக்கறிஞரின் உதவியாளர் வந்து ரகசியமாக ஒரு காகிதத்தைக் கொடுக்கிறார்.

👉 அதைப் பார்த்துவிட்டு கோட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வாதத்தைத் தொடர்கிறார்.

👉 உணவு இடைவேளையில் நீதிபதி அவரை அழைத்து "அதென்ன காகிதம்?'' என்றுக் கேட்க..

👉 "என் மனவி இறந்துவிட்டதாகச் செய்தி சொன்ன தந்தி'' என்றார் அவர்.

👉 பதறிய நீதிபதி,"அப்படியே நிறுத்திவிட்டுச் சென்றிருக்கலாமே?'' என்று கேட்ட போது அவர் சொன்னார்,

👉 "உடனே நான் போவதனால் பிரிந்த உயிரை மீட்டு வர சாத்தியமில்லை. ஆனால் என் வாதத்தால் 46 உயிர்களை தூக்கு மேடைக்கு அனுப்பாமல் மீ்ட்க சாத்தியமிருக்கிறதே..''

👉 வியந்துபோன நிதிபதி 46 பேரையும் விடுதலை செய்தார்.

🙏 அந்த வழக்கறிஞர்:

🙏 சர்தார் வல்லபாய் பட்டேல்.

பாரத தேசத்தில் தற்போது  நாட்டை காட்டியும் கூட்டியும் கொடுக்கும் அரசியல்வாதிகள் மலிந்து கிடக்கின்றனர் அவர்களைக் களை எடுப்பதே தற்போதைய காலத்தின் கட்டாயமாக உள்ளது

👉தெய்வங்களாக வழிபடக்கூடிய இப்படியான  அருமையான மனிதர்கள் வாழ்ந்து சென்ற பூமி: 🙏 இந்தியா.

Born: 31 October 1875, Nadiad
Died: 15 December 1950, Mumbai
--------------------------------------------------
படித்து, வியந்து, பகிர்ந்தது!
அன்புடன்
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2 comments:

  1. ஐயா வணக்கம்
    அருமையான பதிவு மற்றும் புதியது.
    நன்றி
    கண்ணன்

    ReplyDelete
  2. வணக்கம் குருவே 👍!
    இப்படியும் ஒரு மாமனிதரா!🙏
    வார்த்தைக்கு அப்பார்ப்பட்ட சாமர்த்தியம் துணிச்சலுடன் சேர்ந்த தேசப்பற்று மிகுந்த தியாகச் செயல்
    என்பது உயன்தரம்!🙏

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com