30.6.20

எது உனக்குச் சொந்தம் ?


எது உனக்குச் சொந்தம் ?

கடல் மீது கொண்ட நீலம்
தனக்கே சொந்தமென
கடல் கொந்தளித்தால்
வானம் தான் கோபம் கொள்ளாதோ?

வான் மீது கொண்ட மேகம்
தனக்கே சொந்தமென
வான் வழக்கிழுத்தால்
கடல் தான் கோபம் கொள்ளாதோ?

உடல் மீது கொண்ட ஆன்மா
தனக்கே சொந்தமென
உடல் கூக்குரலிட்டால்
இயற்கை தான் கோபம் கொள்ளாதோ?

உன் மீது கொண்ட காற்று
தனக்கே சொந்தமென
உன் உள்ளமுரைத்தால்
பஞ்சபூதங்கள் தான் கோபம் கொள்ளாதோ?

எதுவும் சொந்தமில்லா உலகில்
எல்லாம் சொந்தமென மானிடன்
மாயையை மெய்யாக்கி வாழ்வது
மட்டும் ஏனோ?.
--------------------------------------
படித்து ரசித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com